நான் அமைதியாக ஹரீசையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன், வீடியோவை பார்த்து விட்டு இன்னமும் கோபத்தில் இருந்தான்.
சொல்லுடா! இப்ப சொல்லுறீயா இல்லையா? உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா தெரியுமா? கூட பொறந்த தம்பிக்கும் மேல நினைச்சிருந்தாடா உன்னை! ஆனா நீ…
எப்டிடா, இப்படி ஒரு துரோகத்தை, அவளுக்கு செய்ய மனசு வந்தது? அவ, ரொம்ப நல்லவடா! வாழ்கைல, பாசத்துக்காக எவ்ளோ ஏங்குனா தெரியுமா? எனக்கு நீங்க இருக்கீங்க, மதனுக்கு யாரும் இல்லையேன்னு எத்தனை தடவை ஃபீல் பண்ணியிருக்கா தெரியுமா?
அவளுக்கு எதிராவே இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணியிருக்கியே? ச்சே!
அவளுக்கு எதிராவே இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணியிருக்கியே? ச்சே!
ஹாலோ, கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்னைக் கேக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு?
எ.. என்ன சொல்ற?
ம்ம்ம்! வீடியோல நான் பேசுனதை மட்டுந்தான் பாத்தீங்களா? உங்க அப்பா மாதிரின்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தீங்களே, அந்தாளு இல்லை? அந்தாளு பேசுனதை கவனிக்கலை?
ஹரீசின் முகத்தில் அதிர்ச்சி! இப்பதான் உறைக்குதா இவனுக்கு?
அப்படிப்பட்ட ஆளு பண்ண துரோகத்தை கேக்கத் துப்பில்லை! நான் பண்ண துரோகம்தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சிதா?
நான், அவ மேல் என்னிக்கும் பாசத்தை காமிச்சது கிடையாது. அவதான் என் மேல பாசத்தை காமிச்சிருக்கா. ஆனா, உங்க விஷயம் எப்படி? அப்பா மாதிரி, அம்மா மாதிரின்னு உருகுனீங்களே, அவிங்க பண்ண துரோகத்துக்கு என்ன பதில்?
ஹரீஸ் அமைதியாகவே இருந்தான்.
அந்தாளு மேல, உங்க மனைவி கம்ப்ளெயிண்ட் சொல்லவேயில்லையா? எத்தனையோ தடவை சொல்லியிருப்பாங்களே? அப்பல்லாம், நீங்க என்ன கிழிச்சிங்க? இப்ப கோபப்படுறதுக்கு?
ஹரீசின் முகம் பேயறைந்தது போல் ஆயிற்று. உண்மைதானே! அவள் உள்ளுக்குள் எவ்வளவு சித்ரவதை அனுபவித்திருப்பாள்.
புருஷன், பொண்டாட்டியை நம்ப மாட்டாரு. மாமனாரு, தப்பா பாப்பாரு. மாமியாரு, சீர் கொண்டு வரலைன்னு அசிங்கமா பேசுவாங்க. இதெல்லாம் துரோகம் இல்லை, நான் செஞ்சதுதான் துரோகம், இல்லை?
----
அவ என்னை நம்புனதை விட, உங்க மேலதான் முழு நம்பிக்கையும் வெச்சிருந்திருப்பா? நீங்க நம்புனீங்களா? அப்புறம் என்ன தகுதி இருக்கு, என்னைக் கேள்வி கேட்க! ம்ம்?
ஹரீஸ் அதிர்ந்து, அப்படியே அமர்ந்தான். அவன் கண் கூட கலங்கிவிட்டது.
எனக்கும் அவனைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. இருந்தும் சொன்னேன். இப்பியும், இந்த வீடியோவைப் பாக்காட்டி, நம்பியிருப்பீங்களா என் பேச்சை? நீங்கல்லாம் கட்டின பொண்டாட்டி பேச்சையே நம்பாத ஆளு! என் பேச்சுக்கெல்லாம் என்ன முக்கியம் கொடுத்திருப்பீங்க?
இப்படியுமா ஒரு மனுஷன் கண்மூடித்தனமான முட்டாளா இருப்பாங்க?
ப்ளீஸ் மதன். நான் பண்ணது எல்லாம் தப்புதான். அதுக்கு என்ன தண்டனை வேணா நான் ஏத்துக்குறேன். ஆனா, அவளை ஒரு தடவை நான் பாக்கனும். அ… அவ உ… உயிரோட இருக்கால்ல?
நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியும், அவள் சூசைட் செய்து கொண்டாள் என்ற செய்தியும் அவனை பயங்கரமாகத் தாக்கியிருந்தது. அவன் குரல் நடுங்கியது!
நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியும், அவள் சூசைட் செய்து கொண்டாள் என்ற செய்தியும் அவனை பயங்கரமாகத் தாக்கியிருந்தது. அவன் குரல் நடுங்கியது!
எதுக்கு? இருந்தா கொன்னுடலாம்னா?
போதும் மதன்! என்னை என்ன வேணா பண்ணிக்கோ. அப்படி அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் மட்டும் உயிரோடவா இருக்கப் போறேன். உன் கையாலேயே என்னைக் கொன்னாக் கூட நான் தடுக்க மாட்டேன். அவ, நல்லாயிருக்கான்னு தெரிஞ்சா மட்டும் போதும். பாவம் அவ! எந்தளவு சித்ரவதை அனுபவிச்சாளோ? அந்தாளு பண்ணதை விட, நான் நம்பலைன்னு தெரிஞ்சதுக்குதான் துடிச்சிருப்பா. நானே காரணமாயிட்டேனே! எவ்ளோ நல்லவ தெரியுமா? ப்ச்…
ஹரீஸ் ஏறக்குறைய தனக்குத் தானே உளற ஆரம்பித்தான்.
என் அக்கா சொன்னது உண்மைதான். ஹரீஸ் உண்மையாலுமே, நல்லவனே. அவளது முழு அன்பிற்கும் தகுதியானவனே. தெரிந்து எந்தத் தப்பும் செய்யவில்லை.
ஹரீஸை நெருங்கி, தோளில் கையை வைத்தேன்.
அவ, நல்லாத்தான் இருக்கா. டோண்ட் வொர்ரி!
டக்கென்று நிமிர்ந்தான். ஈசிட்?! தாங்க்ஸ் மதன், தாங்க்ஸ்! தாங்க் யூ சோ மச்!
திடீரென்று உணர்ந்தார் போல் கேட்டான். நீ… நீதான் சித்தப்பா கூட சேந்து ஏதோ ப்ளான்லாம் பண்ணீல்ல? இப்ப எப்புடி? என்ன ஆச்சு? அவ நல்லாதானே இருக்கா? நீ உண்மையைத்தானே சொல்ற?
நடந்த விஷயங்களின் தாக்கம் அவனை யோசிக்க விட வில்லை என்பதும் கூட, அவன் எந்தளவிற்கு என் அக்காவிற்காக யோசிக்கிறான் என்ற முக்கியத்துவம் அதில் தெரிந்தது.
நான் புன்னகைத்தேன். நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.
நான் சொல்லச் சொல்ல, அவன் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகள். பெரும்பாலும் வேதனை, இரக்கம், தன் மேலேயே கோபம், என் மேல் நன்றியுணர்வு இப்படி பல…
அதிலும் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள், சரியான சமயத்தில் நான் தடுத்தேன் என்பதும், அவன் மேலேயே அவனுக்கு கோபமும், என் மேல் மிகப் பெரிய நன்றியுணர்வும் வந்தது. என் கையை, இறுகப் பற்றிக் கொண்டான்.
எல்லாம் சொல்லி முடித்த பின், கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தான். பின் என்னை நிமிர்ந்து பார்த்தவன்,
ரொம்ப தாங்க்ஸ் மதன். என் வாழ்க்கையையே நீ மீட்டு கொடுத்திருக்க. உனக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன். ரொம்ப தாங்க்ஸ்! அவன் குரல் மிகவும் நெகிழந்து இருந்து.
எனக்கே, ரொம்ப ஃபீல் ஆனது. ஆனால், மனதுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.
இட்ஸ் ஓகே மாமா! விடுங்க.
தெரிஞ்சா, நீங்க எவ்ளோ ஃபீல் பண்ணுவீங்கன்னு சொன்னா, அவ சொன்னது கரெக்ட்டாதான் இருக்கு!
ஹரீஸ் விரக்தியாய் சிரித்தான். அவ, எப்பவுமே கரெக்ட்டாதான் சொல்லுவா. சரியாத்தான் பண்ணுவா! நாந்தான், புரிஞ்சிக்கலை. யோசிக்க, யோசிக்க, அவ, எந்தளவு எனக்கு அறிவை கொண்டு வர போராடியிருக்கான்னு, புரியுது! நாந்தான் முட்டாளாவே இருந்திருக்கேன்.
சரி விடுங்க! இப்டியே ஏன் பேசிட்டிருக்கீங்க?
அவ, இப்ப எப்டி இருக்கா மதன்? நல்லாயிருக்கால்ல? எங்க இருக்கா?
அவ, வீட்லதான் இருக்கா. நீங்க வர்றது அவளுக்கு தெரியாது. ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்னு. இன்னிக்கு வெட்டிங் டே இல்லியா, காலையிலியே ஃபோன் ஸ்விட் ஆஃப் பண்ணி வெக்கச் சொன்னதுல, மூஞ்சி உம்முனு இருந்துது. உங்களைப் பாத்துட்டா, ப்ரைட் ஆகிடும்!
இப்பொழுது, ஹரீசின் முகம் கொஞ்சம் மாறியது.
எ… என்னை மன்னிச்சிடுவால்ல? அவ, ரொம்ப கஷ்டப்பட்டிருக்காளே, நானே காரணமாயிட்டேனே?
ஹரீசைப் பார்க்க பார்க்க, தெரியாமல் தவறு செய்து விட்டு, வருந்தும் குழந்தையைப் போல் இருந்தது. எனக்கே, பாவமாய் இருந்தது. அதே சமயம், உண்மையையும் சொல்ல நினைத்தேன்.
நீங்களே அவகிட்ட பேசுங்க! ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். நீங்க சொன்ன மாதிரி, நீங்களே நம்பலைங்கிறதுதான், அவளை ரொம்பவே பாதிச்சது.
அதே சமயம், உங்களை பயங்கரமா லவ் பண்ரா! ஒரு முறை, நான் செத்துடுவேன், ஆனா, இந்தத் துரோகிங்கிட்ட அவரை தனியா விட்டுட்டு போறதை நினைச்சாதான்னு புலம்புனா!
நீங்க மன்னிக்க முடியாத தப்பு பண்ணதா எனக்கு தோனலை. அவளாலியும், உங்க மேல ரொம்ப நேரம் கோபமா இருக்க முடியாது. நீங்க புரிஞ்சுகிட்டீங்கன்னாலே, அவ ரொம்ப சந்தோஷமாகிடுவா.
என்னதான் அவ, என்னுடைய அன்புக்காக என்னென்னாலோமோ செஞ்சிருந்தாலும், இன்னிக்கு, நான் அவ மேல, எவ்ளோ அன்பு செலுத்துனாலும், அவ மனசு என்னமோ உங்களைத்தான் தேடுது.
போங்க, போய் பேசுங்க, முதல்ல கோவப்படுவா. அப்புறம், சமாதானமாகிடுவா!
போலாமா?
ம்.. போலாம் மதன். தாங்க்ஸ்!
அப்புறம் வீட்டிற்குச் சென்றோம்.
ஹரீஸை வெளியேயே இருக்க வைத்து விட்டு, நான் மட்டும் அவள் அறைக்குள் சென்றேன். அவள் கொஞ்சம் சோகமாய் இருந்தாள்.
ஹாய்! ஹாப்பி வெட்டிங் டே!
தாங்க்ஸ்டா!
என்ன ரொம்ப சோகமா இருக்க?
இருக்காதா, அவரு ஃபோன் பண்ணுவாருடா! நீ, காலைலியே ஸ்விட்ச் ஆஃப் பண்ண சொல்லிட்டு, ஃபோனையும் புடுங்கிட்டு போயிட்ட. எனக்கு அவர்கிட்ட பேசனும்டா!
பேசலாம், பேசலாம். அவரும் கொஞ்சம் தவிக்கட்டும். நீ சொன்னப்ப எல்லாம் கேட்டிருந்தா, இன்னிக்கு இந்த நிலைமை இல்லீல்ல. கொஞ்சம் அவரும் தவிக்கட்டும்.
ப்ச்… இப்ப நீ ஃபோனைத் தரப் போறியா இல்லியா?
மாட்டேன்!
டேய், ப்ளீஸ் டா!
சும்மா அந்தாளுக்காக ஓவரா…

ஏய், நீ ஃபோனைக் கொடுக்காம கூட இரு. ஆனா, அதுக்காக, அவரை மரியாதையில்லாம, அதுவும் என் முன்னாடியே பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காத!
அவள் கோபத்தில் பட படத்தாள்!
எனக்கும் கஷ்டமா இருந்தது. ரொம்ப விளையாடுறோமோ?
பார்றா, அவரைச் சொன்னா வர்ற கோபத்தை?
ஆமா, நீ என் மேல எவ்ளோ பாசமா வேணா இருக்கலாம். என்னை எவ்ளோ வேணா திட்டலாம். ஆனா, அவரைத் திட்டறதுக்கு உனக்கு அனுமதி கிடையாது. எனக்கு ஃபோனே வேணாம்…
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன், நான் ஃபோன்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, அதுக்குப் பதிலா ஆளையேக் கூட்டிட்டு வந்திருக்கேன். நேர்லியே பேசிக்கோ!
எ… என்னடா சொல்ற!
ஹாரீஸ், உள்ள வாங்க! நான் கிளம்பறேன்!
அக்காவின் பார்வையில்!
அக்காவின் பார்வையில்!
உள்ளே நுழைந்த ஹரீசையே விழியகலப் பார்த்திருந்தேன்! கலைந்த தலையும், வருத்தமும், குற்றவுணர்ச்சியும் தோய்ந்த முகமும், தளர்ந்த நடையும் சொல்லியது, அவனுக்கு முழு விஷயமும் தெரிந்து விட்டது என்று!
அருகில் வந்த அவன், மிகப் பாவமாக என்னைப் பார்த்தான். அவன் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
எ… என்னை மன்னிச்சிரும்மா!
அவனையே வெறித்துப் பார்த்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது! ஒற்றை வார்த்தை எல்லாவற்றையும் மாற்றிவிடுமா என்ன? உதட்டைக் கடித்துக் கொண்டேன்!
உ… உன்கிட்ட மன்னிப்பு கேக்குற தகுதி இருக்கான்னு கூடத் தெரியலை. ஆனா…
அவனுக்கு அதற்க்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை! மெல்ல, நடுக்கத்துடன் என் கைகளைத் பிடித்தான்.

அவன் பிடித்தவுடன் என் கண்களிலிருந்து கண்ணீர் அதிகமானது. மெல்லிய விம்மல் வந்தது! அழுகையினூடே சொன்னேன்.
நான் சொன்னப்ப என்னை நம்பலீல்ல??
என் வார்த்தை அவனை அடித்தது. அவனால், என் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
நா… நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? அவன் பண்ணதை விட, நீங்க என்னை நம்பாதது, எனக்கு எப்புடி இருந்தது தெரியுமா?
அவன் உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டு நின்றான். கண்களை அழுந்த மூடித் திறந்தான். கையை இறுக்க மூடிக் கொண்டான். அவனால், என் சொற்களின் வீரியத்தை தாங்க முடியவில்லை.
எ… என்னை மன்னிச்சிரும்மா! என்னையே பாவமாகப் பார்த்தான்.
நா… நான் சூசைட் வரைக்கும் போயிட்டேன் தெரியுமா? மதன் மட்டும் இல்லாட்டி… இதைச் சொல்லும் போது என் உடலும், வார்த்தைகளும் கூட நடுங்கியது!
இந்த வார்த்தையை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை இழுத்து அணைத்துக் கொண்டான். இன்னொரு முறை இ... இப்பிடிச் சொல்லாதம்மா! ப்ளீஸ்!
என்னாலும் தாங்க முடியவில்லை! நான் எதிர்பார்க்கும் காதல் கிடைத்து விட்டது! ஆனால் அதற்கு நான் அனுபவித்த மன வலிதான் தாள முடியவில்லை! அவன் நெஞ்சிலேயே அழுதேன். அவன், நெஞ்சிலேயே குத்தினேன்! அவனையே அடித்தேன்
போடா! ஏன் என்னை புரிஞ்சிக்கலை! நீயே புரிஞ்சிக்காட்டி நான் யார்கிட்ட போவேன்?
அவன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தான்!
என்னமோ பெருசா சொன்ன, கல்யாணம் ஆன புதுசுல! இனிமே, நான் எப்பியும் சந்தோசமாத்தான் இருக்கனும்னு?! நான் இவ்ளோ வலியை, என்னிக்கும் அனுபவிச்சதில்லை தெரியுமா?
அவன் கைகள் என் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தது! அவன் உதடுகள், சாரிம்மா, ப்ளீஸ் மா என்று தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தது!
போடா! இப்ப எதுக்கு வந்த? போ! நான் அடிப்பதை நிறுத்தியிருந்தேன், என் கைகள் அவனை இறுக்கி அணைத்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பேச்சையும் நிறுத்தியிருந்தேன். எனது அழுகை, விசும்பல்களாக குறைந்திருந்தது! அவன் கைகள் இன்னமும் என் முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் இன்னும் சாரி சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.
திடீரென்றுதான் உணர்ந்தேன், எனது தோளில் விழுந்த துளி கண்ணீரை!
அவசரமாக விலகி, ஹரீசைப் பார்த்தேன். எவ்வளவு நேரம் அழுகிறானோ தெரியவில்லை, ஆனால், அவனது கண்களில் இருந்தும் கண்ணீர். நான் பயந்த மாதிரியே ஆயிற்று.
நான் அவனை மன்னித்தாலும், அவன் அவனை மன்னிக்க மாட்டான்! அவ்வளவு நல்லவன்!
ஹரீஸ்!
என்னை மன்னிச்சிடுவில்ல?
ஹரீஸ், அழாதீங்க ப்ளீஸ்! நான் பதறினேன்.
நீ…..நீ, என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு!
பெண்ணிடம், தன் தவறுக்காக, ஆண் விடும் கண்ணீருக்கு இணை எதுவும் இல்லை. அந்த அன்பு ஈடு இணையற்றது! அந்த அன்பை புரிந்து கொள்ளும் பெண் மிகுந்த புத்திசாலி.
அப்போதுதான் உணர்ந்தேன்! இது என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் ஒரு முக்கிய தருணம் என்று. இப்போது, நான் எடுக்கும் முடிவு, நான் சொல்லும் என்னுடைய வார்த்தைகள், வாழ்நாள் முழுமைக்கும் வர வாய்ப்புண்டு!
நான் முடிவெடுத்தேன்! என் கண்களைத் துடைத்துக் கொண்டேன்! ஹரீஸை இழுத்து, என் மார்போடு அணைத்துக் கொண்டேன்! ஹரீஸீன் கண்ணீரைத் துடைத்து விட்டேன். என் கன்னத்தை அவனது தலை மேல் வைத்து, என் கையை, அவனது கன்னத்தில் வைத்து, அவனை இறுக்க அணைத்துக் கொண்டேன்!
ஹரீஸும், தாயின் மடி சேரும் குழந்தை போல், என்னிடம் சரண் புகுந்தான். அவன் கைகள் மீண்டும் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டன. நான் அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தேன்.
மெல்ல, அவன் தலைமேலாகவே என் முத்தங்களை வழங்கினேன். அவனது தலையைக் கோதிக் கொடுத்தேன். எனது செய்கைகள் அவனுக்கான ஆறுதலை மட்டும் தரவில்லை! அவனுக்கான செய்தியையும் தந்தது. நான் அவனை மன்னித்து விட்டேன் என்று!
மெல்ல, அவன் தலைமேலாகவே என் முத்தங்களை வழங்கினேன். அவனது தலையைக் கோதிக் கொடுத்தேன். எனது செய்கைகள் அவனுக்கான ஆறுதலை மட்டும் தரவில்லை! அவனுக்கான செய்தியையும் தந்தது. நான் அவனை மன்னித்து விட்டேன் என்று!
அப்படியே நீண்ட நேரம் இருந்தோம். பின் ஹரீஸே விலகினான்! விலகியவன், என் கண்களையே பார்த்தான்!
எ… என்னை மன்னிச்சீட்டில்ல? இன்னமும் அவனிடத்தில் குற்றவுணர்ச்சி இருந்தது! அவன் குரல் நடுங்கியது.
மெல்ல பெருமூச்சு விட்டேன்! மெல்ல அவனது கன்னத்தை தொட்டேன்! ஹரீஸை நெருங்கினேன்! மன்னிப்புல்லாம் பெரிய வார்த்தைப்பா! நீங்களா தப்பு பண்ணீங்க? ம்? போதும் விடுங்க!
நீ, சொன்னதை நான் காது கொடுத்து கேக்கலியேம்மா! எனது வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலைத் தந்தாலும், குற்றம் செய்த மனது அவனை விடவில்லை!
நீங்க கேக்காதது எனக்கு வருத்தம்தான். அதுக்காக? நீங்க தப்பு பண்ணலியே? தகுதியில்லாதவங்க மேல அன்பை வெச்சீங்க, அவ்ளோதானே? ம்ம்? விடுங்கப்பா! இப்போது என் இரு கைகளும் ஹாரீஸீன் கன்னத்தை ஏந்தியிருந்தன. அவனது கை, என் கையைப் பற்றியது!
இப்பிடிப் பட்டவங்கன்னு கனவுல கூட நினைச்சுப் பாக்கலைம்மா!
அவன் இன்னமும் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்! எனக்கு சொல்வதை விட, அவனுக்கு அவனே, சொல்லிக் கொள்கிறான் போலும்! அவனுக்கும் இது அதிர்ச்சிதானே?! என் அன்னை, தந்தை பற்றிய உண்மை தெரிய வந்த போது, எனக்கு இருந்த அதிர்ச்சி இவனுக்கும் இருக்கும்தானே? இப்பொழுது இவனை சமாதானப்படுத்துவது மிக முக்கியம்!
மெல்ல அவனை அணைத்தேன்! விட்டுத் தாள்ளுங்க! அந்தத் தகுதி இல்லாதவங்களைப் பாத்தி பேசக் கூட இனி எனக்கு விருப்பமில்லை! உங்களேயே ஏமாத்த எப்புடி மனசு வந்துச்சு? நீங்களும் இனி அதைப் பத்தி பேச மட்டுமில்லை, நினைக்கக் கூட கூடாது! ஓகே?! இனி நம்ம வாழ்க்கைல எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு! இதுவும் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோங்க! ஓகே???
ஹரீஸ் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான்! எனது வார்த்தைகள், அன்பு, மன்னிப்பு எல்லாம், அவனுக்கு பெரிய ஆறுதலைத் தந்தது!
அவன், ஆவேசமடைந்தான். என்னை இறுக்கி அணைத்து, என் முகமெங்கும் முத்தங்களை வாரியிறைத்தான். முத்தங்களுக்கு நடுவே, தாங்ஸ்டா என்று சொன்னான்! பின், மிக அழுத்தமாக, என் உதட்டில் ஒரு முத்தம் வைத்தான்.
பின் என் கண்களைப் பார்த்துச் சொன்னான்! தாங்ஸ்டா! ஐ லவ் யூ சோ மச்! இட் மீன்ஸ் அ லாட்!
என் கண்களிலேயே மெல்லிய கண்ணீர் வந்தது! கண்களில் கண்ணீரும், உதட்டில் சிரிப்புடன் அவனையே பார்த்தேன்.
மீண்டும் என் கண்களில் கண்ணீரைப் பார்த்தவன் பதறினான்!ஹேய், என்று அதை துடைக்க வந்தான்!
அவனைத் தடுத்தேன். இது சந்தோஷம்! எனக்கு இது இருக்கட்டும்! விடுங்க என்றேன்! அவன் மீண்டும் என்னை இறுக்கத் தழுவிக் கொண்டான்! நான் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உச்சத்தில் இருந்தேன்.
No comments:
Post a Comment