CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 41


ஃப்ளாஸ்பேக் முடிந்து, மீண்டும் இன்று!
லாவண்யாவும், அக்காவும், அடுத்த நாள் முழுதும் மனம் விட்டு பேசியிருக்கிறார்கள். அன்று மாலை, நான் லாவண்யாவைப் பார்த்த பொழுது அவள் முகம் கொஞ்சம் தெளிவாய் இருந்தது.
என்னைக் கடுப்பேற்றிய விஷயம் என்னவென்றால், என் முன்பே, ஹரீசிடம், நான் பெங்களுர் வர்றேன். எனக்கு ஏதாச்சும் வேலை வாங்கித் தர முடியுமாண்ணா என்று கேட்டதுதான். அன்று, அவள் செல்லும் போதும், என்னிடம் பேசவேயில்லை.
அதன் பின் அக்காவிடம் கேட்டேன்.
ஏன், முன்ன பாத்துட்டு இருந்த வேலை என்னாச்சு?
நடந்த பிரச்சினைல, அவிங்க சித்தி, ஆஃபிஸ்க்கே போய் ஏதோ அசிங்கமா பேசியிருக்காங்க. பெர்சனல் விஷயத்தை ஆஃபிஸுக்கு கொண்டு வராதீங்கன்னு, ஆஃபிஸ்ல வேலைக்கு வர வேணாம்னு சொல்லியிருக்காங்க. இப்பியும் அப்பப்ப, ஹாஸ்டல்ல லைட்டா பிரச்சினை பண்றாங்க போல!
அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுக்கப்புறம், இவ கேசை வாபஸ் வாங்கிட்டா. அதான்… புடிச்சு ஜெயில்ல போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் அவிங்களுக்கு. 
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற கோபமும், அதை அனுமதிக்காத அவள் மேல் கோபமும் வந்தது.
அதன் பின் அடுத்த 3 நாட்களில் அக்கா, நான் ஹரீஸ் கூட, அவர் வீட்டுக்கு போறேன் என்று என்னிடம் சொன்னாள்.
                                            
என்னால், லாவண்யா விஷயமாக என்ன முடிவெடுத்துருக்க, அவளும் வராளா என்று கேட்க முடியவில்லை. 
அதனால் அமைதியாக, சரி, நான் சொன்ன மாதிரியே அங்க நடந்துக்க. அந்த வீட்டுக்கு நீதான் ராணி. நீ எவ்வளவுக்கெவ்ளோ கம்பீரமா நடந்துக்கறியோ, அவ்ளோ நல்லது. அந்தாள் எங்கியாவுது வெளிய கெளம்புறேன்னு சொன்னா விட்டுடு என்று மட்டும் சொன்னேன். அவளும் சென்று விட்டாள்.
அடுத்த வாரம் திங்கட் கிழமை காலை, அலுவலகத்தில் இருக்கும் பொழுது அக்கா கூப்பிட்டாள்!
சொல்லு, எப்டி இருக்க?
அதெல்லாம் இருக்கட்டும், உனக்குத் தெரிஞ்சு, ஏதாச்சும் நல்ல லேடீஸ் ஹாஸ்டல் பெங்களூர்ல தெரியுமா?
எனக்கு, அவள் லாவண்யாவிற்காகத்தான் கேட்கிறாள் என்று புரிந்தது. கடுப்பானேன்.
எனக்கு எப்டி தெரியும்? மாமாவுக்கு தெரியாதா?
இல்லை அவரை விட, உன் லாவண்யாவுக்கு எப்டி இருந்தா நல்லதுன்னு, உனக்குதானே தெரியும்?
நான் கடுப்பில், இதுக்குதான் காலைல கூப்பிட்டியா என்று திட்டினேன்.
பேசாத? அன்னிக்கு உன் முன்னாடியே ஹாரீஸ்கிட்ட பெங்களூர் வர்றேன்னு சொல்றா? நீ வாய் மூடிட்டு இருக்க? நாங்க, ஊருக்கு போறோம்னு சொல்றேன், அப்பியும் லாவண்யா விஷயம் என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டியா? இல்ல நீயா, ஏதாச்சும் ஸ்டெப் எடுத்தியா? அதான், பேசாம நானே அவளுக்கு ஹெல்ப் பண்ணி, நல்ல வேலை வாங்கிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்…
முன்னதான் மனசுல இருக்குறதை சொல்ல மாட்ட? இப்ப என்ன வந்தது? அவதான் உன் கூட பேசலை! ஆனா, என்கிட்ட, நீ ஏதாவது பேசுனியா? இன்னும் மாற மாட்டியா நீ?
அவளது கோபம் நியாயம் என்று எனக்கும் தெரிந்தது. இன்னும் சொல்லப் போனால், இப்படி இவள் திட்டுவது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது!
என்ன பண்ணச் சொல்ற? என்னைப் பாக்குற பார்வையிலியே எரிக்கிறா? பக்கத்துல போயி பேசவே விட மாட்டேங்குறா? சரி கோபம் கொறையட்டும்னு வெயிட் பன்றேன். அதுக்காக சும்மாலாம் இல்லை. இனி அவங்க சித்தி, அவகிட்ட பிரச்சினை பண்ண மாட்டாங்க. அவ எந்த ஹாஸ்டல்ல இருக்கா, இப்ப சப்போர்ட்க்கு யாரு இருக்க, எங்க வேலைக்கு ட்ரை பண்றாங்கிற வரைக்கும் தெரியும். போதுமா? 
ம்ம்… பராவாயில்லை. இதைனாச்சும் தெரிஞ்சு வெச்சிருக்கியே. அப்புறம், உங்கிட்ட இன்னொரு விஷயம் கேட்கனும்.
என்ன சொல்லு?
இல்ல, நீ எனக்கு, உங்க கம்பெனி க்ரூப்ல ஷேர் கொடுத்தீங்களே, அது உண்மைதானே, ஜோக் இல்லியே?
ஏய், விளையாடாமச் சொல்லு! அதுவா முக்கியம் இப்ப?!
ஆமா! என்னா, இன்னிக்கு உன்னைத் தேடி ஒருத்தர் வருவாங்க! அவிங்களுக்கு நீ, உன் செக்ரட்டரி போஸ்ட் தரணும்! அதுக்கு, அவிங்களே ஒத்துக்காட்டாலும், நீ அதைச் செய்யனும்! நீ எனக்கு ப்ராஃபிட்ல ஷேர் கொடுக்காட்டியும் பராவாயில்லை. இவிங்களுக்கு வேலை மட்டும் கொடு.
ஏய் என்ன விளையாடுற? யாரு அது? எனக்கு ஏற்கனவே செக்ரட்டரி இருக்குல்ல! இவிங்களுக்கு ஏன்? அதுவும் ஒத்துக்காதவங்களை எதுக்கு வற்புறுத்தனும்?
டேய், சொல்றதைச் செய்! இப்ப ஃபோனை வை!!
அப்ப்பொழுதுதான் லாவண்யா என் நிறுவனத்திற்கு வந்தாள்!
அவளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை! அன்று என்னிடம் சண்டை போட்டவள், வீட்டில் என்னைக் கண்டு கொள்ளாதவள், இன்று என்னைத் தேடி வந்திருக்கிறாள்!
இப்பொழுது என் அக்காவின் பேச்சு புரிந்தது! அவள் ஏதோ செய்திருக்கிறாள், பேசியிருக்கிறாள்.
எனக்கு இன்னொரு விஷயமும் தெரியும். அவளுக்கு, இப்பொழுது வேலை மிகவும் அவசியம்!
எனக்கு அவளைப் பார்க்கப் பார்க்க கோவமாகவும் இருந்தது, பாவமாகவும் இருந்தது! எப்படி இருக்க வேண்டியவ?!
மெல்ல பெரு மூச்சு விட்டவன், உட்காரு என்றேன்!
உட்கார்ந்தவள், என்னையே பார்த்தாள்! எனக்கு வேலை வேணும்! அவ, உன்கிட்ட பேசிட்டேன்னு சொன்னா!
ஏன் பெங்களூர் போல?
ப்ச்… அவதான் வர விட மாட்டேங்குறாளே? இப்ப நீ வேலை கொடுக்குறியா இல்லையா?
நீ இண்டர்வியூவுக்கு வந்திருக்கியா இல்ல இண்டர்வியூ பண்ண வந்திருக்கியா?
அவள் முறைத்தாள். பின் கேட்டாள், அவ உன்கிட்ட பேசுனாளா இல்லையா?
ஆமா! பேசுனா, ஆனா, என் செக்ரட்டரி வேலைதான் காலியா இருக்கு! அது ஓகேயா?
அவளுக்கு வேறு வழி தெரியவில்லை! ஓகே என்றாள்!
நாளையிலருந்து ஜாயின் பண்ணிக்கோ!
ஏன் இன்னைக்கே வேணா கூட…
நான் அவளைக் கூர்ந்து கவனித்தேன்! அவள் முகத்தில்ஒரு விதத் தவிப்பு தெரிந்தது! 
இன்னிக்கு ஜாயிண் பண்ணிக்கிறதுல பிரச்சினையில்லை! ஆனா, இது என் செக்ரட்டரி போஸ்ட்! உன் திறமையைப் பத்தி எனக்கு தெரியும்! ஆனா, நீ மேக்சிமம் என் கூட பல மீட்டிங்க்கு வர வேண்டியிருக்கும்! பல அவுட்சைட் ட்ரிப்புக்கு கூடத்தான்! 
இங்கியும் என்னைப் பாக்குறதுக்கு முன்னாடி, உன்னைதான் எல்லாரும் பாக்க வேண்டியிருக்கும்! அதுனால, நீ, இப்படி டல்லா, சோகமா, வந்தா அது நல்லாயிருக்காது! அது உனக்கு மரியாதையாவும் இருக்காது!
                                                 
சோ, போயிட்டு நாளைக்கு வா! ஆனா, எனக்குத் தெரிஞ்ச லாவண்யாவா வா! இப்படி வராத! என் லாவண்யாவுக்கு, எவ்ளோ கஷ்டமான விஷயத்துலியும், எப்படி தன்னை மீட்டெடுத்துக்கனும்னு தெரியும். நான் வேண்டுமென்றே, என் லாவண்யா என்று சொன்னேன். 
அவள் முறைத்தாலும், வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டாள்! 
அவள் செல்லும் போது சொன்னேன். நேரத்தைப் பாத்தியா, என் மூஞ்சிலியே முழிக்கக் கூடாதுன்னு சொன்ன, ஆனா, இப்ப டெய்லி, என் மூஞ்சிலதான் முழிக்கனும் நீ! இல்ல?!
அவள் கடுப்பானாள். எல்லாம் என் நேரம் என்ன பண்றது என்றாள். அவள் என்னிடம் சண்டைக்கு நிற்கும் போதும், உரிமையுள்ளவனிடம் எடுத்துக் கொள்ளும் சலுகை போல்தான் இருந்ததே ஒழிய, வெறுப்பின் சாயல் எங்கும் இல்லை. எல்லாரும் ரொமான்ஸ் பண்ணி லவ் பண்ண வைக்கனும்ன்னா, நம்மாளை சீண்டி விட்டுதான் லவ பண்ண வைக்கனும் போல என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்
முறைத்தவளை அமைதியாக நெருங்கினேன். நான் நெருங்க நெருங்க, அவள் ஒரு வித தவிப்புக்கு உள்ளானாள். ஆனாலும், அசையாமல் அப்படியே நின்றாள். எவ்வளவு கோபமாகக் காட்டிக்கொண்டாலும், என்னுடனே இருக்கும் வேலை என்பது அவளுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்தது என்பது தெரிந்தது.
பின் அவள் கண்களையேப் பார்த்துச் சொன்னேன். உனக்கு வேணா, என் முகத்துல முழிக்கிறது கஷ்டமா இருக்கலாம்! ஆனா, எனக்கு, இனி உன் முகத்துலதான் நான் முழிப்பேங்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு! போய், நான் சொன்ன மாதிரி நாளைக்கு வா என்று சொல்லிவிட்டு விலகினேன்.
டுத்த நாள் வந்தாள்! எதிர்பார்த்த மாதிரியே மாறியிருந்தாள்!
நான் அவளை ரசித்து விட்டு, முன்னிருந்த செக்ரட்டரியைப் போய் பார்க்கச் சொல்லி, அவளுக்கான வேலைகளை சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். நேற்று பழைய செக்ரட்டரி வந்திருக்கவில்லை.
அவள் ரூமை விட்டு விலகும் போது, கூப்பிட்டேன்!
லாவண்யா!
திரும்பிப் பார்த்தாள்! மெல்ல எழுந்து அவளருகில் சென்றேன். அவளையேப் பார்த்தேன்! 
மேக் அப் இல்லாத முகமே, அழகாய் இருந்தது! உணர்வுகளைச் சொட்டும் அவள் கண்களும், முகமும், இன்று எந்தச் சலனமும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. அது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது! எந்த ஒப்பனையும் இல்லாத இயற்கையாகச் சிவந்திருந்த அவளது உதடுகள், கொஞ்சச் சொல்லி என்னைத் தூண்டின! அவளை இழுத்து அணைக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
பின் சொன்னேன். குட்! இதான் நல்லாயிருக்கு! இப்படியே டெய்லி வா!
அவள் முறைத்தாலும், உள்ளுக்குள், நான் அவளை ரசிப்பதைக் கண்டு, வெட்கமடைந்திருந்தாள்.
ஏனோ தெரியவில்லை. காலையில் மிக நன்றாக இருந்தவள், மதியத்தில் ஒரு மாதிரி இருந்தாள். மிகவும் டிஸ்டர்ப்டாக, தவிப்புடன் இருந்தாள். 
என்ன ஆச்சு என்று கேட்ட என்னையும் வெறித்துப் பார்த்தாள். அவள் கண் கலங்கியிருந்தது. எனக்கே மிகவும் வருத்தமாயிருந்தது.
தலைவலியா? ஏன் இப்டி இருக்க? வந்த முதல் நாளே நீ இப்டி இருந்தா, எல்லாம் என்ன நினைப்பாங்க? ம்ம்ம்?
நான் ஹாஃப் டே லீவ் எடுத்துக்கட்டுமா? ஒரு வித தவிப்புடன் கேட்டாள்.
அவ்ளோதான? போயிட்டு வா!
கதவருகே சென்றவளை, மனசு கேட்காமல் கூப்பிட்டு, அவளருகே சென்றேன். 
ஏய்... என்ன பிரச்சினைன்னாலும் சரி, சமாளிக்க முடியாதுன்னு ஒண்ணும் இல்லை! ஓகே?! நீ, என்னை நம்பாட்டியும் பராவாயில்லை. ஆனா, இனி என் அக்கா, ஹரீஸ் உனக்காக இருப்பாங்க! சரியா?! இப்டி ஃபீல் பண்ணாத! என்னால, உன்னை இப்படி பாக்க முடியலை! சின்ன வயசுலியே எதையெதையோ சமாளிச்சு வந்தவ நீ! புரியுதா? தைரியமா இரு!
என்னுடைய ஆறுதல், அவளது கண்ணீரை அதிகப்படுத்தியிருந்தது. என்னையே வெறித்துப் பார்த்தாள்.
அடுத்த நாள் வந்தவள், முழுக்க பழைய லாவண்யாவாக மாறியிருந்தாள். மிகுந்த ஆர்வமாக, நிறுவனத்தின் உயர்வுக்காக கற்றுக் கொள்ளவும், உழைக்கவும் ஆரம்பித்தாள். 
என்னிடமே ஒரு நாள் சொன்னாள். சான்சே இல்லை மதன். கடைசி ஒரு வருஷத்துல ஏகப்பட்ட சேஞ்சஸ். நல்ல இம்ப்ரூவ்மெண்ட்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!
நான் அவளைப் பார்த்து புன்னகைத்தேன். ஒரு வருஷம் கூட இல்லை லாவண்யா! இதுல ரொம்ப முக்கியம் அந்த 8 மாசந்தான். வீட்டுக்கு கூட பல சமயம் போனதில்லை. போனாலும், அங்க எனக்குன்னு யாரும் இல்லை! அதுவும் கடைசி 4 மாசம், எங்கப்பா எப்படி எப்பிடியோ தொந்தரவு பண்ணார். ஒரு கட்டத்துல, சித்தியை அனுப்பி, அழுது எமோஷனல் டிராமால்லாம் போட ட்ரை பண்ணார். ப்ச்ச்… ரொம்ப கடுப்பான பீரியட் அது!
பழைய லாவண்யாவை வெளிக் கொண்டுவர, நான் வேண்டுமென்றே ஒன்று சொன்னேன்.
என் நிலைமையைப் பாத்தியா?! ஒரு பக்கம், சின்ன வயசுன்னு கூட பாக்காம, என்னை ஏமாத்தி என் சொத்தை அடைய நினைக்கிற சொந்த அப்பா ஒரு பக்கம்! இன்னொரு பக்கம், எவ்ளோ காசு, திறமை இருந்தாலும் பரவாயில்லை, ஆனாலும், வயசுல சின்னவனா போயிட்டதுனால வேணாம்னு சொல்லி தள்ளிப் போற நீ! எல்லாருக்கும் எளக்காரமா போயிட்டேன் இல்லை?!
அவ்ளோதான், லாவண்யா கடும் கோபமடைந்தாள்.
ஏய், இனி இந்த மாதிரி லூசுத்தனமா பேசுன கொன்னுடுவேன்!
உனக்கு என்னடா குறைச்சல்? 
நானே உன்னை வேணாம்னு சொல்லியிருந்தாலும், ஏண்டா, அப்படிச் சொன்னோம்னு, என்னை நீ ஃபீல் பண்ண வைக்கனும்! அதான் உனக்கு கெத்து! நீ ஃபீல் பண்ண வைப்பன்னு எனக்கு தெரியும்… அதை விட்டுட்டு, இனி இப்படி உளறுன… என்று விரலைக் காட்டி எச்சரித்து விட்டுச் சென்றாள்.
லாவண்யா ஈஸ் பேக் டூ ஃபார்ம்! நான் பாஸாம்… இவ செக்ரட்டரியாம்! என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
இப்படியே இரண்டு வாரம் சென்றது! இப்பொழுதெல்லாம் என்னைக் கோபமாகப் பார்ப்பதில்லை. அதே சமயம், அவள் ஏன் அந்தச் சமயத்தில், என்னைத் தேடி வரவில்லை என்று தெரிந்து கொள்ள நெருங்கினால், என்னைப் பார்வையாலேயே முறைப்பாள்.
இடையே ஒரு முறை என்னைத் தேடி வந்தாள்! 
என்ன லாவண்யா?
அந்த பர்சேஸ் இஞ்சினியர், கொஞ்சம் தப்பா பேசுறான்.
யாரு, மணியா?
ம்ம்…
என்ன பண்றான்? உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா?
அப்படி இல்ல, ஆனா, நான் இருக்கிறப்ப, அவன் ஃபிரண்டுகிட்ட வேணும்னே தப்பா பேசுறான்!
என்னான்னு?
அவள் உதடுகளைக் கடித்தாள்!
சொல்லு!
நா… நான் சின்ன வயசுலியே புருஷனை உதறிட்டு வந்தவ, அதுனால என்னை ஈசியா கரெக்ட்… அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை!
எனக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும், கேட்டேன்.
உன்கிட்ட நேரடியா சொன்னானா?
இல்ல! ஆனா, நான் அவனை கிராஸ் பண்றப்ப, இல்லாட்டி என் காது பட, அவன் ஃபிரண்டுகிட்ட பேசுறான். 
இதுக்கு, நான் என்ன ஸ்டெப் எடுக்கனும்னு எதிர்பாக்குற?
இப்போது அவளுக்கு கோபம் வந்தது! 
நீ, ஒண்ணும் பன்ண வேணாம். உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு, என்னைச் சொல்லனும்!
இப்போது நானும் கோபம் அடைந்திருந்தேன். 
ஆமாண்டி, ஆசிட் அடிக்க வந்ததுக்கு, தப்பா பேசுறதுக்கு, எல்லாம் என்கிட்ட வந்து சொல்லு. வாழ்க்கைல, முக்கியமான கட்டத்துல என்கிட்ட வரனும்னு தோணலைல்ல? அப்புறம் என்னாத்துக்கு கண்ணாலியே பேசுன? என்னை ஆசையாப் பாத்த? 
அவள் என்னையே வெறிக்கப் பார்த்தாள்! அவள் கண்களில் கண்ணீர்! அவள் உதடுகள் துடித்தது! வேகமாக ரூமை விட்டுச் சென்று விட்டாள்!
அன்று மதியம்… லஞ்ச் டைம்! 
வேண்டுமென்றே, லாவண்யாவிற்கும், அந்த பர்சேஸ் மேனேஜர் மற்றும் அவனது ஃபிரண்டுக்கு கொஞ்சம் வேலை கொடுத்து, தாமதமாக லஞ்ச்க்கு செல்வது போல் ஏற்பாடு செய்திருந்தேன்!
மீன் தூண்டிலில் மாட்டியது!

No comments:

Post a Comment