அடுத்த நாள் வேளை இருக்கிரது என்று நான் சீக்கிரம் ஆஃபிஸ் போய்விட்டு, டின்னருக்குதான் வீட்டுக்கு வந்தேன். டின்னரின் போது, மோகன் பார்க்காத சமயத்தில், அவளிடம் சொன்னேன்.
நைட்டு உன் புருஷன் தூங்குனதுக்கப்புறம், என் ரூமுக்கு வா!
ஏறக்குறைய 12 மணிக்கு உள்ளே வந்து வேகமாய் கதவைச் சாத்தினாள்.
என்ன மதன் இப்டி பண்ற?
என்ன பண்ணேன்?
நைட்டு அவர் தூங்கினதுக்கப்புறம் வரச் சொல்ற?
ஆமா, நேத்து உன்கிட்ட ஒண்ணு சொல்லியிருந்தேன். நான் நைட்டுதான் வந்தேன். சரி, உனக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன். இதுல என்ன?
இதுல என்னவா? இந்த நேரத்துல, நான் உன் ரூமுக்கு வந்தா, பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?
என்ன நினைப்பாங்க?
ஐயோ, இதை எப்டி உனக்கு புரிய வைக்கிறது?
இப்ப உன் பிரச்சினை என்ன? இங்க வர்றதா இல்லை? நீ வர்றதை யாரும் பாக்கக் கூடாதா?
அமைதியாக இருந்தாள்.
யாரைப் பாத்து புரியாமப் பேசுறேன்னு சொன்ன? எல்லாம் புரிஞ்ச நீ, உன் புருஷனை ஒழுங்கா புரிஞ்சுகிட்டியா?
அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த உடன், அவளுக்கு அவமானமாய் இருந்தது.
இங்க பாரு, என் ரேஞ்சு தெரியாம நீ திரும்பத் திரும்ப பேசிட்டிருக்க. ஏதோ ஹெல்ப் கேட்டதுனால செய்ய வந்தேன். அவ்ளோ கஷ்டமா இருந்தா, நீ போகலாம். எனக்கும் டைம் மிச்சம்.
என்னுடைய அலட்சியம் அவளை பாதித்தது. மெல்லிய குரலில் சொன்னாள். சாரி, மதன். நீ திடீர்னு இப்படிச் சொன்னதுனால தப்பா நினைச்சிட்டேன்… சாரி.
இட்ஸ் ஓகே! இப்பச் சொல்லு. நேத்து அப்ரோச் பண்ணியா? என்ன பண்ணான் உன் புருஷன் உன்னை? ம்ம்?
அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நள்ளிரவு. தன்னை விட வயதில் குறைந்த ஒரு ஆண், அவளிடம், அவளுக்கும், அவள் கணவனுக்கும் மட்டுமேயான ஒரு அந்தரங்கத்தைக் கேட்பது, அதுவும் மிக அதிகாரமாகக் கேட்பது அவளுக்கு கூசியது போலும்!
ம்ம்ம்… என்ன ஆச்சு?
ஒ… ஒன்னும் நடக்கலை.
எப்படி நடக்கும்? என்று கேட்டவன், நேற்று நானும், மோகனும் பேசியதை ஆடியோ ரெகார்ட் பண்ணியதை அவளிடம் போட்டுக் காட்டினேன். பின் சொன்னேன், பிராஸ்டியூட் கூட படுக்குறதுக்கு அவன் ஆர்வமா இருக்கான். ஆனா நீ தேடி வந்தும் உன்னைத் தொடுரதுக்கு அவனுக்கு கசக்குதாமாமா? ஹா ஹா ஹா!
ஏன் மதன் இப்டி சிரிக்கிற? நீ சிரிக்கிரது எவ்ளோ அவமானப்படுத்துறா மாதிரி இருக்கு தெரியுமா?
யாரு நான் அவமானப்படுத்துறேனா? தொடர்ந்து உனக்கு ஹெல்ப் பண்ண வந்த என்னை நீதான் தேவையில்லாத கேள்வி கேட்டு, உனக்கான அசிங்கத்தை நீயே தேடிக்கிற. நான் என்ன பண்ணட்டும்?
ஏன் இப்டி பேசுற? இப்ப நான் சொன்னதுல என்ன அசிங்கம்? என் புருஷன் என்னை ஏமாத்துறது தெரிஞ்சதுதானே?
அது தெரிஞ்சதுதான். ஆனா, நீ என்கிட்ட பேசின விதம்? நல்லா யோசிச்சு பாருடி! கட்டின புருஷனே, நீயே வாலண்டியரா போயும், ஒண்ணைக் கண்டுக்கவே இல்லியாம். தொடவே இல்லியாம். இதுல நான் உன்னை நைட்டு ஹெல்ப் பண்ணக் கூப்பிட்டா, நீ தப்பா நினைப்ப இல்ல?
என்னுடைய சுரீர் கேள்வி அவளுக்கு இன்னும் அவமானப்படுத்தியது. கண்களில் கண்ணீர் கூட வந்தது.
ஆக்சுவலி நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு எனக்கு தெரியவே இல்லை. உன் மேலயும், உன் புருஷன் மேலயும் கோவமாத்தான் இந்த வீட்டுக்கு வந்தேன். ஆனா பாரு, உனக்கே ஹெல்ப் பண்ணிட்டிருக்கேன்!
ஏன், எங்க மேல என்ன கோபம்?
என்ன கோபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு. உன் மேல கோபப்பட காரணமேயில்லை??
வந்து…
சரி நானே சொல்றேன். நீயும், உன் புருஷனும் என் அக்காகிட்ட நடந்துகிட்ட முறைக்கு வேற யாராவதா இருந்தா என்ன பண்ணியிருப்பான் உங்களை?
அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி! உனக்குத் தெரியுமா?
என் அக்கா, என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா. நான், கொலை வெறிலத்தான் இந்த வீட்டுக்கே வந்தேன்.
நா…நான் காசு மட்டும்தானே கேட்டேன். அது அவ்ளோ பெரிய குத்தமா?
நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பார்வையின் வீச்சை அவளால் தாங்க முடியவில்லை. தலை குனிந்தாள்.
ஒன் புருஷன் யோக்கியதை வந்தவுடனே தெரிஞ்சிருச்சி. அதுனால, அந்த வக்கிரம் புடிச்சவன் நடந்துகிட்டதில் எனக்கு ஆச்சரியம் வர்லை. ஆனா, நீ பொம்பளைத்தானே? நீயே கேவலம் காசுக்காக எப்டியெல்லாம் நடந்துகிட்ட? அசிங்கமாயில்ல உனக்கு?
நீ பண்ண பாவம்தாண்டி, உன்னை வாட்டுது. எந்தப் பணத்துக்காக எல்லா அநியாயத்தையும் கண்டுக்காம இருந்தியோ, அதே பணத்தை வெச்சுதான் நீயும் ஏமாந்திருக்க. அதுவும் யாரோட தப்பை கண்டுக்காம இருந்தியோ, அவனே உன்னை ஏமாத்திருக்கான்.
ஆவேசத்தில் வந்த என்னுடைய வார்த்தைகளும், அது கொடுத்த வலியும், எனக்கு உண்மை தெரியும் என்பதும் அவளுக்கு மிகப்பெரிய மனச்சோர்வையும், அவமானத்தையும் கொடுத்தது. அவள் சிலை போல் இருந்தாள். சிறிது நேரம் கழித்து கேட்டாள்.
எல்லாம் உண்மையும் தெரிஞ்சும் ஏன் என்கிட்ட உண்மையைச் சொன்ன? என்னை வெச்சு ஏதாச்சும் ப்ளான் பன்றியா?
ஹா ஹா ஹா! ஏண்டி, என் ரேஞ்சு என்னான்னு நினைச்சிட்டிருக்க? உன் புருஷனை விட 100 மடங்கு பணத்துலியும், செல்வாக்குலியும் பெரிய ஆளு. உக்காந்த இடத்தில இருந்து ஒரு ஃபோன் பண்ணியிருந்தா, நீயும், உன் புருஷனும் அட்ரஸே இல்லாம போயிடுவீங்க. இதுல உன்னை வெச்சு ப்ளான் பண்ணனுமா? நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? உனக்குன்னு ஏதாவது ஒர்த்து இருக்கா?
நான் வந்ததே உன்னையும், உன் புருஷனையும் எச்சரிச்சுட்டு போலாம்னுதான். ஆனா வந்து பாத்தா, உன் பொழைப்பு ரொம்பக் கேவலமா இருந்தது. அதுனாலத்தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். இல்லாட்டி, இந்நேரம் சீனே வேற.
என் நேரம் பாத்தியா, ஹெல்ப் பண்ண வந்த என்னை, நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க. பழிவாங்க வேண்டிய உன்கிட்ட, நானும் பதில் சொல்லிட்டிருக்கேன். காமெடியா இல்ல? வேற யாராவதா இருந்த, இந்நேரம் என் கால்ல உழுந்து என்கிட்ட நன்றி சொல்லியிருந்திருப்பாங்க. ஆனா நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க…
என் பேச்சு சரியாக அவளைத் தாக்கியிருந்தது. கையறுநிலையின் உச்சத்தில் அவள். காப்பாற்ற வேண்டிய கணவன், அவளை ஏமாற்றுகின்றான். உறவுகளை, அவள் ஏமாற்றியிருக்கிறாள். பழிவாங்க வந்தவன் பாவம் பார்க்கிறான். எவ்வளவு பெரிய அவமானம்?
அவள் கண்களில் தொடர் கண்ணீர்…
ஏன் அழுற? எத்தனையோ பொண்ணுங்களை, உன் புருஷன் அழ வெச்சப்ப வராத கண்ணீர் உனக்குன்னா வருதோ?
அவள் ஏறக்குறைய செத்த பாம்பினைப் போலிருந்தாள். என்னுடைய தொடர் கேள்விகளுக்கும், அடிகளுக்கும் அவள் பழகியிருந்தாள்.
ஆக்சுவலா, எனக்கு உன்னைப் பாத்தா பாவமா இருக்குது. உன் புருஷன், ஒரு வேளை என் அக்காவை பலாத்காரம் பண்ணியிருந்தாக் கூட, ஹரீஸ் மாதிரி ஒரு கணவன், கண்டிப்பா என் அக்காவை ஏத்துக்குவான். சொல்லப்போனா, அதை முழுக்க, தன்னோட தப்புன்னுதான் ஃபீல் பண்ணுவான். ஆனா, உன் நிலை என்னன்னு யோசிச்சியாடி?
இந்தளவு கேடு கெட்ட உன் புருஷனைப் பழி வாங்க, உன்னை மாதிரி முட்டாளை வெச்சு நான் பழிவாங்கனுமா? ஆனாலும், உனக்கு ரொம்பதான் நெனப்புடி!
அவமானத்தின் உச்சியில், கண்களில் கண்ணீருடன், உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் நின்றாள்.
சரி. போ, போயி, தூங்கி நல்லா ரெஸ்ட் எடு முதல்ல. இனியும் என் ஹெல்ப் வேணும்னா, நாளைக்கு நைட்டு இதே மாதிரி வா. அப்புறம் பேசிக்கலாம்.
ஆனா ஒண்ணூ, நீ நினைக்கிற அளவுக்கெல்லாம், நீ ஒர்த்தே இல்லை. அந்த நெனைப்பை மனசுல இருந்து தூக்கிட்டு, அப்புறமா என் ரூமுக்கு வா!

அவள் அமைதியாக எழுந்து சென்றாள். என் வார்த்தைகள் அவளுக்கு பெரிய அடியை கொடுத்திருப்பது நிச்சயம்.
அடுத்த நாள் இரவு.
இந்த முறை அவளாக என்னைத் தேடி வந்தாள். அவளே கதவை தாழிட்டாள். நேராக விஷயத்துக்கு வந்தாள்.
நான் பேசாம அவரை டைவர்ஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்.
பண்ணிட்டு?
அவள் அமைதியாக இருந்தாள்.
சினிமா, சீரியல் நிறைய பாப்பியா?
நீயும் என்னை அசிங்கப்படுத்துறல்ல?
பின்ன, நீ எதாவது யோசிச்சு பேசுனா பரவாயில்லை. டைவர்ஸ் பண்ணிட்டு என்னடி பண்ணுவ?
என் புருஷன் கையில எந்தப் பணமும் இல்லை. எல்லாம் என் கண்ட்ரோல்ல, என் பேருலதான் இருக்கு. ஹரீசோட சொத்துல எமாத்துனது கூட என் பேருலதான் சொத்தா மாறியிருக்கு. எல்லாம் ஊருல இருக்கு.
பணம் இருக்கு ஓகே. அது எத்தனை நாளுக்கு? உன் ஸ்டேட்டஸ் என்ன ஆகும்? அதே க்ரூப் கூட நீ பழக முடியுமா? டைவர்ஸ் ஆகிட்டு நீ எங்க போவ? என்ன பாதுகாப்பு, உனக்கும், உன் சொத்துக்கும்? நீ ஏறக்குறைய புதுசா ஒரு வாழ்க்கையைத் தொடங்கனும். அது முடியுமா? உன்னால ஏதாவது வேலைக்கு போக முடியுமா? எல்லாத்துக்கும் மேல என்ன காரணம் சொல்லுவ? இது தெரிஞ்சதுதானே, இப்ப என்ன புதுசான்னுதான் எல்லாரும் கேப்பாங்க? எல்லாத்துக்கும் மேல உன் பையனை எப்பிடி வளர்ப்ப? அவன்கிட்ட என்னான்னு சொல்லி விளக்குவ?
அவளுக்கு அந்தக் கேள்விகள் சரியென்று பட்டாலும், கேள்வி கேட்டாள்.
ஏன் நீ ஹெல்ப் பண்ண மாட்டியா?
நான் எவ்ளோ பண்ண முடியும்? எந்த அடிப்படையில பண்ண முடியும்? என் அக்காவுக்கே உன் மேல கோபம் இருக்கும். நீ உன் புருஷனை டைவர்ஸ் பண்ணதுக்கப்புறம், ஹரீஸே ஏத்துக்குறாரோ என்னமோ. அப்புறம் என் அக்காவும் ஏத்துக்க மாட்டா. அப்புறம் நான் என்னன்னு ஹெல்ப் பண்ரது? பண விஷயத்திலோ, வேலை விஷயத்திலோ ஏதாவது சின்ன ஹெல்ப் பண்ணலாம். அதுவும் எத்தனை நாளைக்கு?
அவளும் யோசிக்கத் தொடங்கினாள். பின் கேட்டாள், அப்ப நான் என்னதான் செய்யுறது?

சொன்னா கேப்பியா? பழைய புத்தியை காமிக்க மாட்டியே?
இல்ல சொல்லு!
இனி உன் புருஷனா, உன்கிட்ட டைவர்ஸ் கேட்டாலும், நீ கொடுக்கக் கூடாது. வெளிய நீ பழைய மாதிரியே இரு! ஆனா, இங்க, உன்னை முட்டாளாக்கினவன்கிட்ட புத்திசாலின்னு ப்ரூவ் பண்ணு. நீ பழைய சீதா இல்ல, புது சீதான்னு மெதுவா காமி.
எப்பியும் போல, சொத்துக்களையும், பணத்தையும் உன் கண்ட்ரோல்ல வை. எல்லாத்துக்கும் மேல, எந்த விஷயத்துல உன் புருஷன் உனக்கு துரோகம் செஞ்சானோ, அதுல அவனுக்கு ஏமாற்றம் கிடைக்கனும். இத்தனை நாள் அவன் செஞ்சதை, அவன் முன்னாடியே நீ செய். அப்ப தெரியும், அவன் உண்மையாலுமே மியுச்சுவல் சுதந்திரம் கொடுத்தானா இல்லையான்னு!
அவளுக்கு ஓரளவு புரிந்திருந்தாலும், கொஞ்சம் குழப்பமும் இருந்தது! அந்தக் குழப்பத்தினூடே கேட்டாள். அவரு எனக்கு துரோகம் பண்ண விஷயத்துல நான் எப்படி ஏமாற்றத்தைக் கொடுக்குறது? நான் எப்டி அதைச் செய்யுறது?
நான் சொன்ன அர்த்தம் புரியலையா இல்ல நடிக்கிறியா?
எந்த இடத்திலும் அவள் மேல் நான் கருணையோ, பச்சாதாபமோ காட்டவில்லை. அது அவளைக் கூசச் செய்தது.
ந..நடிக்கலாம் இல்லை. ஆனா… கொஞ்சம் இடைவெளி விட்டவள் தொடர்ந்தாள். நீ சொன்னதோட அர்த்தம், நீ தெரிஞ்சுதான் சொல்றியா? இதெல்லாம் சாத்தியமா? இதுனால் எனக்கென்ன பலன்? நான் ஏன் இதையெல்லாம் செய்யனும்? இது ஒண்ணுதான் சொல்யூஷனா என்ன?
சாத்தியம், சாத்தியமில்லைங்கிறது வேற பிரச்சினை. இதுதான் சரியான திட்டம், இதுனால் என்ன பலன்னு வேணா சொல்றேன்.
முதல்ல, நீ மோகனை விட்டு பிரியறது நல்லதுக்கில்லை. உனக்கான எல்லா பாதுகாப்பும் இங்கதான். அதை விட்டு வெளிய போனா, யார் மூலம் வேணாம்னாலும் உனக்கு தொந்தரவு வரும். ஏன், மோகன் மூலமாவே அதிகம் தொந்தரவு வரும்.
நல்லா படிச்சு, தைரியமான, ஓரளவு பேக்கிரவுண்ட் இருக்கிற, என் அக்கா மாதிரி ஆட்கள்கிட்டயே தன் புத்தியைக் காமிக்கிற ஆளு உன் புருஷன். உன்னை சும்மா விட்டுடுவானா? அதுவும் அவன் ஏமாத்துன சொத்தை நீ எடுத்திட்டு போகும் போது? ஆக, என்னைப் பொறுத்த வரை, பிரியுறதுங்கிற முடிவு பிரச்சினைதான் உனக்கு. அதை ஒத்துக்குறியா?
அவள் மெல்ல தலையசைத்தாள்… ம்ம்ம். ஆமா!
ஆக பிரியக்கூடாது. சேந்துதான் இருக்கப் போறேங்கிறப்ப, ஒண்ணு அந்தாளு பண்ற எதையும் கண்டுக்காம அமைதியா இருக்கனும்? அப்படி உன்னால, அதே மாதிரி ஒரு முட்டளா, சொரணை இல்லாத ஒரு ஆளா இருக்கனும். அது உன்னால முடியுமா?
நான் வேண்டுமென்றேதான், அப்படிக் கேட்டேன். நான், முன்ன மாதிரி அமைதியாக இருக்கமுடியுமா என்று கேட்டிருந்தால், அவள் ஒரு வேளை யோசித்திருக்கக் கூடும். மாறாக, நான் இப்படிக் கேட்டியது அவளது தன்மானத்தை சீண்டியிருந்தது.
அவள் கோபத்துடன் சொன்னாள். இல்லை, அது இனிமே முடியாது.
ஓகே. அப்ப சேந்து இருந்தாலும், முன்ன மாதிரி இருக்க முடியாது. நீ புதுசா போயி, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சண்டை போட்டாலும் அவனால ஏத்துக்க முடியாது? உன் மேலத்தான் குத்தம் சொல்லுவான். அப்ப இதுக்கு என்னதான் வழி?
அவள் கேள்வியோடு என்னைப் பார்த்தாள்.
அவன் செஞ்சதை நீயும் செய்! அவன் கொடுக்காத சுகத்தை நீயே தேடிக் கண்டுபிடி. அதை ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் அவன் கையில இருக்கு? ஆனா அவனால உன்னைக் கேள்வி கேக்க முடியாது. இத்தனை நாளா உன்கிட்ட சுதந்திரம்னு பேசினவன், இன்னிக்கு தன்னால கொடுக்க முடியலைன்னு ஒத்துக்க முடியாது.
நீ எப்பியும் கொடுக்கத் தயாரா இருந்தாலும், அதுக்காக, வெளிய ஊர் மேய போனவனால, நீ கேட்டும் கொடுக்காதப்ப, நீ வெளிய தேடிக்கிட்டதுல என்ன தப்புன்னு கேட்டா பதில் சொல்ல முடியாது! அவனால, டைவர்ஸூக்கும் போக முடியாது. போனா நஷ்டம் அவனுக்குதான். என்னச் சொல்ற?
இதுனால, உனக்கும் சுகம் கிடைக்கும், நீ ஏமாறுறங்கிற ஃபீலும் தேவையில்லை. உனக்கும் பாதுகாப்பு. சொத்தும் உன்கிட்ட. என்னச் சொல்ற?
நான் சொல்லச் சொல்ல, அவளது கண்களில் விஷயம் முழுதும் புரிய ஆரம்பிப்பதற்கான மாற்றம் தெரிந்தது. ஆனாலும் ஒரு சின்னக் கேள்வி இருந்தது!
இந்த முறை நிமிர்ந்து, மிகத் தீர்க்கமாக என் கண்களைப் பார்த்தாள். பின் என் கண்களைப் பார்த்தே கேட்டாள்.
நீ என்னை வெச்சு, அவரை பழிவாங்கப் பாக்குறியா?
நானே கொஞ்சம் அதிசியப்பட்டேன். இவளும் புத்திசாலிதான்!
பின் நான் சொன்னேன். ஆமா, ஆனா இல்லை!
அப்பிடின்னா?
உன் புருஷனுக்கு, ஒரு தண்டனை கொடுக்கனும்ங்கிரது என் எண்ணம். அதுக்கு ஆமா! ஆனா, அதுக்கு, இது மட்டும்தான் வழி இல்லை. அதுக்கு இல்லை.
இன்னும் புரியலை.
நான் சிரித்தவாறே சொன்னேன், நான் இங்க வந்ததே, உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது தண்டனை கொடுக்கனும்னு. பழி வாங்கனும்னுதான். ஆனா, உன் நிலையைப் பாத்ததுக்கப்புறம் எனக்கு உன மேல பரிதாபம் வந்துச்சு. அதுனால், உன்னை லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டேன். இப்ப உன் பிரச்சினைக்கான சொல்யூஷன் பாத்தா, அது எனக்கும் தோதா வருது! அவ்வளவுதான்.
இன்னொன்னும் சொல்றேன், நீ ஒரு வேளை இப்ப நான் சொன்ன திட்டத்துக்கு ஒத்துக்காம டைவர்ஸே பண்ணிடறேன்னு சொன்னாலும், நான் உன் புருஷனுக்கு ஒரு தண்டனை கொடுக்காம இருக்கப் போறதில்லை. அது, ஒருவேளை டைவர்சுக்கப்புறம் உன் புருஷன் மூலமா எந்தப் பிரச்சினையும் வராமக் கூடக் காப்பாத்தலாம். அது ஒரு விதத்துல நான் உனக்கு செய்யுற ஹெல்ப்பு. ஆனா, மத்தவிங்க மூலமா உனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்தா?
அதனாலத்தான் ஆமா, ஆனா இல்லைன்னு சொன்னேன். திரும்பச் சொல்றேன். உன் பிரச்சினைக்கு ஹெல்ப் பண்றதுனாலியோ, இங்க வந்து இத்தனை நாள் தங்கியிருக்கிறதுனாலியோ, என்னைச் சாதரணமா நினைச்சிட வேணாம். என் பவர் வேற! ஆனா, இந்த விஷயத்துல என் பவரை உபயோகிக்க விரும்பலை. அதுக்குல்லாம் ஒர்த்தும் இல்லை நீங்க!
என் பதிலை நான் சொல்லிட்டேன். இனி, உன் பதிலை, நீ நல்லா யோசிச்சு, ரெண்டு நாள் கழிச்சு கூடச் சொல்லு. ஆனா, ஒரு முடிவெடுத்தா, அதுல தெளிவா இருக்கனும். எதுவா இருந்தாலும், ஏதாச்சும் ஹெல்ப், என்னால முடிஞ்சதை செய்யுறேன்!
ஓகே?!
No comments:
Post a Comment