CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 12


சொல்லுறேன்! அதுக்கு முதல்ல, நீங்க என்னை நம்பனும்? ஒழுங்கா நடந்துக்கனும்? காலையில மாதிரி திமிரா நடந்துக்கக் கூடாது. சரியா?
அவன் தயங்கித் தயங்கி ஒத்துக் கொண்டான். நம்புறேன், ஆனா, உன்னை எப்படி நம்புறது? என்ன இருந்தாலும், அவ உன் அக்கா? அக்கா கணவர் ஹரீஸ்! அவிங்களுக்கு எதிரா நீ எதுக்கு இருக்கனும்???
ஹா ஹா! நல்ல கேள்விதான். சொல்றேன். 
இங்க பாருங்க, எனக்கு அக்கான்னு யாரும் கிடையாது. ஏன், எனக்கு அப்பா, அம்மா கூட கிடையாது. எங்க அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டவர் எங்க அப்பா. அதுக்கு என் சித்தியும் உடந்தை. அதுனால அவிங்களை பழிவாங்குறதுக்கான சான்சை பாத்திட்டு இருந்தேன். எப்படி எங்க அம்மா வாழ்க்கையை கெடுத்தாங்களோ, அதே மாதிரி அவங்க கண்ணு முன்னாடி அவங்க பொண்ணு வாழ்க்கையை சிதைக்கப் போறேன். அதுதான் அவங்களுக்கான என் தண்டனை. அதுனாலத்தான் இந்த விஷயத்துல உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். இல்லாட்டி, உங்களைப் பத்தி நான் ஏன் கவலைப் படணும்?
யதேச்சையா, அவங்க மூணு பேரும் உங்களைப் பத்தி பேசிட்டிருந்ததை கேட்டேன். எப்படியாவது ஹரீஸ்கிட்ட சொல்லி, உங்களோட வண்டவாளத்தை எல்லாம் புரிய வெச்சதுக்கப்புறம், உங்களை தொரத்திட்டு, அவிங்களும் இங்க வர்ற மாதிரி ப்ளான் பண்ணியிருக்காங்க! 
இப்பச் சொல்லுங்க, என்னை நம்புறீங்களா?
நான் சொல்லுவதில் பல விஷயம் அவன் ஏற்கனவே அறிந்திருந்ததுதான். தவிர, கல்யாணத்திற்குப் பின், நான், என் அப்பா அம்மாவை பிசினசில் இருந்து ஒதுக்கியதும் தெரியும். இவை எல்லாம் சேர்ந்து, அவனுக்கு என் மேல் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
இது ஒருவகையான டெக்னிக். எதிரியையும், துரோகியையும் வெல்ல, அவனை முதலில் நம்ப வைக்க வேண்டும். அவன் புத்திசாலி, தனக்கு அதிகம் லாபம் என்று எண்ணிக் கொள்ளும் தோற்றத்தைத் தர வேண்டும்! அதற்கு வெறும் பொய்கள் சொல்லக் கூடாது. உண்மையும், பொய்யையும் கலந்து சொல்ல வேண்டும். கொஞ்சம் குழப்பத்திலும், பதட்டத்திலும் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டிற்குள் வந்த பின், திருப்பி அடிக்க வேண்டும்! அப்படித்தான், மோகனும் என் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்தான்.
ஒரு விதத்தில் இந்த சூழ்நிலையை நான் விரும்பினேன். எவ்வளவு திறமையானவனாக, சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேனாக நான் இருந்தாலும், பெற்ற தாய், தந்தை என முக்கிய உறவுகள் என்னை ஏமாற்றியதும், ஒரு பெண்ணாக இருந்தும் என் தாயை ஏமாற்ற என் சித்தி திட்டம் போட்டதும் என எல்லாம் சேர்ந்து எனக்கு உறவு சார்ந்த விஷயத்தில் ஒரு சில உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வேளை நான் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், கொஞ்சம் யாரிடமாவது ஷேர் பண்ணியிருந்தால், எனக்குள் இந்த உளவியல் சிக்கல் வராமல் இருந்திருக்குமோ என்னமோ?!
ஆனால் நான் எல்லாவற்றையும் என்னுள்ளேயே வைத்துக் கொண்டதால், வெளியே திறமையானவனாக, தைரியமானவனாக இருந்தாலும், உள்ளுக்குள் முக்கிய உறவுகளிடத்தில் ஒரு தயக்கத்தை கொடுத்திருந்தது. அதுதான், என் அக்காவையே நான் நம்புவதற்கு அதிக காலத்தை எடுத்துக் கொண்டது! எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தத் தயக்கம்தான், அந்தத் தோல்வி பயம் தான், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் என்னைத் தோற்கடித்தது. 
இந்த உளவியல் பிரச்சினையைத் தீர்க்க எனக்கு ஒரு அவுட்லெட் வேண்டும். அதற்கு என் மனதுள் குடைந்து கொண்டிருக்கும், என்னை, என் தந்தையும், சித்தியும் ஏமாற்றி விட்டார்களே என்கிற கோபம் தணிய வேண்டும்! என்னுடைய கோபத்தையும், அது கொடுத்துக் கொண்டிருக்கும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்திருக்கும் டார்கெட்டுகள்தான் ஹரீசின் சித்தப்பாவும், சித்தியும். இது ஒரு வகையில் என் அக்காவுக்கான சொல்யூஷன் மட்டுமல்ல. எனக்கான ட்ரீட்மெண்ட்டும் கூட.
ஆரம்பத்திலிருந்தே, ஹரீசின் சித்தப்பாவும் சித்தியும் ஏனோ, என் அப்பாவையும், சித்தியையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதுவும் முழுக் கதையையும் கேட்ட பின், அந்தத் துரோகமும், பெண்களை ஏமாற்றும் பேக்கிரவுண்டும், அதற்கு அமைதியாக ஒத்துழைக்கும் எனது சித்தியைப் போன்ற, ஹரீசின் சித்தியும், எல்லாம் சேர்ந்து முழுக்க அவர்களாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டனர். 
ஆகவே, இவர்களைப் பழிவாங்குவது ஒரு வகையில், எனக்கு மட்டுமே தெரிந்த, எனது உளவியல் சிக்கலுக்கான தீர்வாக இருக்கும் என்று தீர்மானமாக நம்பினேன். அதனால்தான், அவர்களுடைய பாதையிலேயே சென்று அவர்களை வேட்டையாட விரும்பினேன். 
என்னுடைய யோசனைகளை மோகனது குரல் இடைமறித்தது. 
இப்ப கண்டிப்பா நம்புறேன் மதன். நீயும் நம்ம க்ரூப்புன்னு தெரிஞ்ச பின்னாடி எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்பதான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!
சந்தோஷத்தில் பேசிய அவனது குரல் சொல்லியது, அவன் முழுதாக என்னை நம்ப ஆரம்பித்து விட்டதை!
அதை அதிகப்படுத்த, எனது தூண்டிலைப் போட்டேன்.
அதுக்குள்ள சந்தோஷப்படாதீங்க! சீக்கிரம் ஹரீஸ்கிட்ட விஷயத்தை சொல்ல டைம் பாக்குற அவங்ககிட்ட இருந்து எப்டி எஸ்கேப் ஆகப் போறீங்க? ம்ம்ம்?
எனது கேள்வியில் இருந்த உண்மை அவனுக்குப் புரிந்தது. ஆனால், அவனிடம் எந்த தீர்வும் இல்லாததால், குழம்புவது முகத்திலேயே தெரிந்தது. பின் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.
நான் அவனைப் பார்த்து சிரித்தேன். அதன் அர்த்தம், தூண்டிலில், மீன் சிக்க ஆரம்பித்து விட்டது!
எ… என்ன பண்றது மதன்?
நான் சொல்றதை கேட்குறீங்களா?
ம்ம்.. கண்டிப்பா!
முதல்ல, ஏதாவது காரணத்தைச் சொல்லி உங்க மருமகளை ரெண்டு மூணு மாசத்துக்கு, அவங்க பொறந்த வீட்டுல இருக்க வைங்க. ஹரீஸ் இங்க இருந்து, மனைவி வேற இடத்துல தொடர்ந்து இருந்தா, சந்தேகம் வரும். அதுனால, ஹரீஸ் தொடர்ந்து ஒரு ரெண்டு மாசத்துக்கு, பிசினஸ் ட்ரிப்புல இருக்குறா மாதிரி ப்ளான் பண்ணுங்க. 
அவன் குழப்பமாக கேட்டார். ஏன் இப்படி?
ஹரீஸும், உங்க மருமகளும் ஒண்ணா இருந்தா, ஏதாவது சமயத்துல உங்க ரகசியத்தைச் சொல்லிடலாம். அதுனால அதை முதல்ல உடைக்கனும். நீங்க ஆஃபிஸ்ல, மத்த இடங்கள்ல்ல இருக்கிற லூப் ஹோல்சை எல்லாம் அடைக்கப் பாருங்க. ஏன்னா, அவிங்க டிடக்டிவ் வெச்சாலும் வெக்கலாம். அதுலியும் கவனம் செலுத்தி, இங்கயும் கவனம் செலுத்துறது ஆகாத காரியம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டாக்குமெண்ட்ல கை வெக்கலாம். என்ன சொல்றீங்க?
ம்ம்ம்.. சூப்பர் ஐடியா மதன்! நானே கொஞ்சம் தடுமாறிட்டேன். ஆனா, நீ, செம ஸ்ட்ராங்க்தான். அதுனாலத்தான் நீ இவ்ளோ பெரிய பிசினஸ்மேனா இருக்க!
நான் சிரித்தேன். சரி, முதல்ல நான் சொல்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அடுத்த ஸ்டெப்ஸ் நான் அப்பப்ப சொல்றேன். 
அப்புறம் இன்னொரு விஷயம். இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. முக்கியமா அத்தைக்கு கூடத் தெரியக் கூடாது. ஓகே?
கண்டிப்பா மதன். நீ என்னை நம்பலாம்!
குட்.
சொன்ன படி, அடுத்த இரண்டு நாளில் அவன் அந்த முடிவைச் சொன்னான். பிசினஸ் ட்ரிப்பையும், ஜோசியத்தையும் கலந்து பொய் சொல்லி ஹரீசிடம் என் அக்கா பிறந்த வீட்டுக்கு செல்வது, அதாவது கொஞ்சம் பிரிந்திருப்பது ஜாதகப்படி நல்லது என்றும், அதே சமயம், மிக முக்கிய பிசினஸ் ட்ரிப்புகளில் இருப்பது கம்பெனிக்கும் நல்லது என்றும் சொன்னார். 
ஹரீஸ் அமைதியாக ஓகே சொன்னார். எனது கண்ணசைவில், அக்காவும், இந்தத் திட்டத்திற்கு ஓகே சொன்னாள். 
அடுத்த சில நாட்களில் அக்கா கிளம்பினாள். பின், ஹரீசின் ட்ரிப்பும் ஆரம்பமாகியது. 
அடுத்து வந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை, மோகன் என்னைத் தேடி ரூமுக்கு வந்தான். 
அப்புறம் மதன் ஃப்ரீயா?
ஃப்ரீதான் சொல்லுங்க?
நீ, ட்ரிங்ஸ் சாப்பிடுவியா?
எப்பியாவுதுதான். அதுவும் சோஷியல் ட்ரிங்கிங்தான்! ஏன் கேக்குறீங்க?
இல்ல, நம்ம வெற்றியை இன்னிக்கு செலிப்ரேட் பண்ணலாம்னுதான்! இன்னிக்கு பார்ட்டி நம்ம வீட்லியே! நானும், நீயும்தான். என்ன சொல்ற?
ஓகே! உங்களுக்கு கம்பெனி வேணா கொடுக்கறேன். பட், இதெல்லாம் வெற்றியா என்ன? இன்னும் செய்ய வேண்டியது எவ்ளவோ இருக்கு?!
உண்மைதான். ஆனாலும், ஒரு பெரிய பிரச்சினையை தடுத்தாச்சுல்ல? அதுக்காகவும், நம்மளுடைய பார்ட்னர்ஷிப்புக்காகவும்தான்.
அதுவும் சரிதான். சரி, நீங்க ஏற்பாடு பண்ணுங்க, நான் வர்றேன். 
இந்த ட்ரிங்ஸ் பார்ட்டியில், நடந்த உரையாடலைத்தான் நான் ஹரீசிடம் காட்டியிருந்தேன். (அதை நீங்களும் படித்திருப்பீர்கள்). இந்த வீடியோவை வைத்துதான் ஹரீசுக்கு உண்மையை புரிய வைத்திருந்தேன். 
இதே வீடியோவை வைத்துதான், இன்னொரு ஆளுக்கும், ஒரு உண்மையை புரிய வைத்திருந்தேன். அது மட்டுமில்லை. என்னுடைய ட்ரீட்மெண்ட்டையும் ஆரம்பித்திருந்தேன். 
அது யாரிடம் என்றால்…
வேறு யாருமல்ல, ஹரீசின் சித்தி சீதா!
                                   
என்னுடைய திட்டங்களின் முக்கிய கருவி மட்டுமல்ல. என்னுடைய வன்மங்களுக்கு வடிகாலாகப் போகும், பலி கொடுக்கக் கொஞ்சமும் யோசிக்கத் தேவையில்லாத என்னுடைய பலி(ழி)யாடு!
ஏற்கனவே சொன்னது போல், எனக்கு பெண்களின் மேல் ஒரு படு பயங்கர வெறுப்பு இருக்கிறது. அதை தணிக்க, ஒரு கருவி வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்த ஆள்தான் சீதா! 
சீதாவின் வயதும், உருவமும் ஒரு வகையில் என் சித்தியை ஞாபகப் படுத்தும். எல்லாவற்றுக்கும் மேல் சீதா, என் சித்தி இருவருக்கும் இடையே இருக்கும் இன்னொரு பெரியஒற்றுமை, காசிற்க்காக எந்த ஈனத்தனத்தையும் சகித்துக் கொள்வது. அதற்காக தன் புருஷன் இன்னொரு பெண்ணிடம் வைத்துக் கொள்ளும் உறவைக் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது. 
அதனாலேயே சீதாவை நான் என்னுடைய ஆட்டத்திற்குத் தேர்ந்தெடுத்திருந்தேன். தவிர என்னுடைய பழி வாங்கும் முறைக்கு ஏற்ற படி இருக்க அது பெண்ணாகவும், கொஞ்சம் முட்டாளாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் சீதா சரியான தேர்வு!
என்னுடைய திட்டப்படி, நான் வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே ஹரீசின் சித்தி, சீதாவிடம் கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஆரம்பத்தில் அவளும் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கக் கண்டு, அவளும் அதனால் கோபப்பட ஆரம்பித்திருந்தாள். இதில் மேட்டர் என்னவென்றால், மற்றவர்கள் முன்னிலையில் அமைதியாகவும், நானும், அவளும் இருக்கும் போது வேறு மாதிரியாகவும் நடந்து கொண்டிருந்தேன். 
மோகனும் நான் ட்ரிங்க்ஸ் சாப்பிட்ட அன்று, பலியாடு தானாக வலையில் வந்து விழுந்தது!
மோகன் ஏறக்குறைய குடித்து மட்டையாகியிருந்தான். டின்னார் சாப்பிடாமலேயே அவன் ரூமுக்கு போய்விட்டான். மாலை வரைதான் வீட்டில் வேலையாட்கள் உண்டு. ஒரு வயதான டிரைவரும், மனைவியும் பங்களாவை ஒட்டி இருக்கும் ஒரு சின்ன வீட்டில் தங்கியிருப்பார்கள். கூப்பிட்டால் மட்டுமே வர வேண்டும். 
மோகன் சீதாவின் ஒரே மகன் ஏதோ போர்டிங் ஸ்கூலில் 10வதோ என்னமோ படிக்கிறான். அவர்களுக்கு மிகத் தாமதமாகத்தான் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும், 10 சிறு வயதிலிருந்தே போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பி விட்டார்கள். எப்போதாவதுதான் அந்த வீட்டுக்கு வருவான். ஆக, அவனும் வீட்டிலில்லை.
ஆகவே இன்றைய டின்னர் நானும், சீதாவும் மட்டும்தான். என்னுடைய அடுத்த மூவ்க்கான நேரம்.
மீண்டும் வழக்கம் போல கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொண்டேன். இந்த முறை அவளுக்கு இன்னும் பயங்கர கோபம்!
மதன்! அவள் கோபத்துடன் கூப்பிட்டாள்.
நான் அலட்சியமாக பார்த்தேன்.
நீ ஏன் இப்படி பண்ற?
என்ன பண்றேன்?
அது உனக்கே தெரியும்.
அது தெரியலைன்னுதானே உங்ககிட்ட கேக்குறேன்.
நீ என்னை விட வயசுல சின்னவன். பத்தாதக்கு உன் அக்கா இந்த வீட்டுக்கு வாழ வந்தவ. என்கிட்ட நீ மரியாதையா நடந்துக்க வேணாம்?
எதுக்கு நடந்துக்கனும்?
மதன்…
பாருடா கோபம் கூட வருது! இதெல்லாம் உங்களுக்கு வருமா?
அவளுக்கு கோபம் அதிகமாகியது. கூடவே கொஞ்சம் குழப்பமும். 
நான் இன்னமும் சொன்னேன். என் மேல இருக்கிற கோவத்தை, என் அக்கா மேல காமிக்கப் போறீங்களா? காட்டிக்கோங்க, எனக்கென்ன வந்தது?
மோகன் என் விஷயம் முழுமையாகச் சொல்லாவிட்டாலும், ஏற்கனவே, நான் அவர்களுடன் அதிக டச்சில் இல்லாததும், என் அக்காவிடம் எனக்கு பெரிய நெருக்கம் இல்லாததும் சொல்லியிருந்தான். ஆகவே, இதைச் சொன்னதும், அவளுக்கு கடுப்பானது! அதனால் சொன்னாள்.
உன் அக்காவைப் பத்தி நீ கவலைப் பட மாட்ட. ஆனா, நீ இருக்கிறது எங்க வீட்ல. நீ பணக்காரனா இருந்தா எனக்கென்ன வந்தது? என் வீட்லியே தங்கி என்னை மதிக்காம நடந்தா என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது!
ஹா ஹா ஹா!
அவளின் கோபத்தையும், பேச்சையும் கண்டு, ஏதாவது விளக்கம் கொடுப்பேன் என்று நினைத்திருந்தால், என்னுடைய சிரிப்பு பொய்யாக்கியது, அது இன்னமும் கடுப்பேற்றியது!
எதுக்கு சிரிக்கிற?
ஹா ஹா ஹா… நான் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தேன்.
மதன்… சொல்லிட்டு சிரி.
இல்ல, பணக்காரன்னா கவலையில்லை. ஆனா எனக்கு மரியாதைதான் முக்கியம்னு அடிச்சு விட்டீங்களே. அதைக் கேட்டுதான் சிரிச்சேன்.
மதன் நீ என்னை இன்சல்ட் பண்ற. கோபத்தில் கொஞ்சம் கத்தினாள்.
சேச்சே… இன்சல்ட்லாம் பண்ணலை. ஆக்சுவலா கொஞ்சம் தன்மானம், சுரணை இருக்கிறவங்களுக்குதான் இன்சல்ட், கோபம்லாம் ஒத்து வரும். நீங்க ஏன் அதைப் பத்தி கவலைப் படுறீங்க?
மதன்… கோபத்தில் கத்தினாள்.
ஸ்ஸ்ஸ்… சும்மா கத்தாதீங்க! ஒருவேளை என்கிட்ட காசு இல்லைன்னா கூட நீங்க கோபப்படுறதுல ஒரு அர்த்தம் இருக்கு. நாந்தான் உங்க புருஷன் மோகனை விட பணக்காரனாச்சே. அப்புறமும் ஏன் கோவப்படுறீங்க.
மதன், நீ ஓவராப் போற. இதுக்கு மேல உனக்கு மரியாதை கிடையாது.
ஹா ஹா ஹா… திரும்பத் திரும்ப நீங்கள்லாம் மரியாதையப் பத்தி பேசி நான் கேக்க வேண்டிய தேவை இருக்கு பாத்தீங்களா? அதான் கொடுமை!
மதன்… அவளது கோபத்தை நான் மதிக்காததும், தொடர்ந்து அவளை அவமானப்படுத்துவதும் அவளை ஆட்டம் காண வைத்தது. கண்களில் கொஞ்சம் கண்ணீர் கூட வந்தது.
எதுக்கு ஃபீல் பண்றீங்க? ஆக்சுவலா, இந்த வீட்லியே உங்க மேலதான் எனக்கு ஒரு மரியாதை இருந்தது. ஆனா, அதைக் கெடுத்துக்குட்டது முழுக்க நீங்கதான்.
நான் கொஞ்சம் தன்மையாகச் சொன்னதும், புதிராகப் பேசியதும் அவளைக் குழப்பியது.
நான் கெடுத்துகிட்டேனா? என்ன சொல்ற?
ஆமா, ஒரு வாரமா மோகன் தன்னுடைய வீர தீர பிரதாபங்களைச் சொல்லிட்டிருந்தார். அதைக் கேட்டா, எவனுக்காவது உங்க மேல மரியாதை வருமா?
அவர் என்னைப் பத்தி தப்பா சொல்லியிருக்க மாட்டாரே? அவருக்கு எல்லா சுதந்திரத்தையும் நான் கொடுத்துருக்கேனே! இன்னும் சொல்லனும்னா, என்கிட்ட அதுக்காக என்னை எவ்ளோ புகழுவாரு தெரியுமா? மிகவும் நம்பிக்கையாக வந்தது அவள் பதில். அதை உடைப்பதுதான் முதல் திட்டமே!
ஹா ஹா ஹா. அதுக்குப் பேரு சுதந்திரமா? சரி, நீங்க அவருக்கு முழு சுதந்திரமும் கொடுத்துருக்கீங்கன்னே வெச்சுக்கோங்க. அதே சுதந்திரத்தை, அவரு உங்களுக்கு கொடுத்திருக்காரா?
இதென்ன கேள்வி. இந்த வீட்ல என் ராஜாங்கம்தான். எல்லா முடிவும் நான் எடுக்கிறதுதான். ஓகேவா???
ஹா ஹா ஹா! குட் ஜோக். சரி, நான் இல்லைன்னு சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க. அதுனால, ஒரு பெட் வெச்சுக்கலாமா? நீங்க ஜெயிச்சா, நீங்கச் சொல்றதை நான் கேட்குறேன். நான் ஜெயிச்சா, நான் சொல்றதை நீங்க கேட்கனும்!
இப்பொழுது நம்பிக்கையுடன் வந்தது அவள் குரல். ஓகே, என்ன பெட்?

No comments:

Post a Comment