என்னைத் தாங்கியபடியே பெட்டுக்கு கொண்டு வந்தவன், என்னை அலுங்காமல் மெத்தையில் சாய்த்தான்! இதுவரை எனக்காக என்னை ஆவேசமாகக் கையாண்டவன், இப்பொழுது உறவு முடிந்த பின், பூ போல் கையாளுகின்றான்!
இப்படிப்பட்டவனை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்! நான், அவனை இழுத்து என் மேல் சாய்த்துக் கொண்டேன்! எல்லாம் இவன் செய்து விட்டு, என்னை இளைப்பாற வைக்கிறான்!
பெருமூச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சம் சம நிலைக்குத் திரும்பியது!
சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து என்னைப் பார்த்தவன், என் நெற்றியில் முத்தமிட்டான்! பின் கண்களிலும்!
லவ் யூ டி செல்லக்குட்டி!
லவ் யூ ஹரீஸ்! லவ் யூ சோ மச்!
பின், அவனைச் சாய்த்து விட்டு, எப்போதும் போல், அவன் மார்பில் ஒண்டிக் கொண்டேன். என் மன்னவனின் மார்பினைப் போல், என்னை தாங்கிக் கொள்ளும் அமைதிப்படுத்தும் இடம் வேறேனும் இருக்கிறதா என்ன?
மெல்லிய புன்னகையுடன், அவனது அணைப்புக்குள் ஒன்றினேன்!
காமத்தை விட, காமம் முடிந்த பின்னும், பெண்ணைக் கொஞ்சும், அவளை ஆசுவாசப்படுத்தும் ஆண்தான் உண்மையில் வல்லவன்!
காமத்தை விட, காமம் முடிந்த பின்னும், பெண்ணைக் கொஞ்சும், அவளை ஆசுவாசப்படுத்தும் ஆண்தான் உண்மையில் வல்லவன்!
உடல் பலத்தை காட்டி வெல்வது ஆண்மையல்ல. மனதை வெல்லுவதே ஆண்மை!
அந்த வகையில், என் ஹரீஸ் மிகச் சிறந்த ஆண்! ஆண்மை ததும்பும் ஆண்! என் மனதை வென்ற ஆண்!

பெரும் ஊடல் அல்லது சண்டைக்குப் பின், மனமொத்து ஈடுபடும் காமத்தின் சுவையை அறிந்திருக்கிறீர்களா? அதற்கு இணை எதுவும் இல்லை!
தங்கள் சண்டைக்கான சமாதானத்தை, அனுபவித்த வலிக்கான மருந்தை, அதன் பின் எழும் வெறி கொண்ட அன்பை, தன் துணையின் மீதான அழுத்தமானக் காதலை என எல்லாவற்றையும் அந்தக் கலவியில் கண்டெடுக்க முயல்வர் இருவரும்!
அந்த இன்பத்தைத்தான் நானும், என் ஹரீசும் இப்பொழுது கண்டெடுத்தோம்! மனமார்ந்த மகிழ்ச்சியில், ஒருவரது அணைப்பில் இன்னொருவர் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்தோம். பெரு மகிழ்ச்சி கண்டிருந்தோம்.
எனது கைகள், என் ஹரீசின் உடலெங்கும் அலைந்து கொண்டிருந்தன. அவனது வலிமையான உடலின் திண்மை, என் மனதுக்கு எப்பொழுதும் கொஞ்சம் சாந்தமளிக்கும். எங்கிருந்தோ வந்து என்னை காக்கும் ஒரு தேவதூதன் போல் எனக்குத் தோன்றும்.
பெருமூச்சு விட்டபடி, மெல்லத் தலையைத் தூக்கி கண் திறந்த போது, என்னையே பார்த்துக் கொண்டிருந்தன, அவனது கண்கள்.
அவன் என்னையே பார்ப்பதை உணர்ந்ததும், என்னுள் ஒரு மெல்லிய வெட்கப் புன்னகை தோன்றியது.
அவன் என்னையே பார்ப்பதை உணர்ந்ததும், என்னுள் ஒரு மெல்லிய வெட்கப் புன்னகை தோன்றியது.
மெல்ல அவனைச் சீண்டினேன். ராட்சசா, சரியான காட்டு மிராண்டி!
அவன் புன்னகை விரிந்தது. என்னை அப்படியே இறுக்கி அணைத்தான். நான் ராட்சசனா இருந்தாத்தான், இந்த ராட்சசிக்கு புடிக்குது. நான் என்ன செய்ய?
என் விருப்பத்தைச் சொல்லி அவன் சீண்டியதில் என் வெட்கம் அதிகமாகியது. மெல்லச் சிணுங்கி, அவன் மார்பில் குத்தினேன்.
ச்சீ… போடா!
போடான்னு சொல்லாத. வேணுன்னா வாடான்னு சொல்லு.
போடா ராஸ்க்கல்!
போடா ராஸ்க்கல்!
என் மேல இவ்ளோ மரியாதை வெச்சிருக்கேன்னு எனக்குத் தெரியாதுடா செல்லம். வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுக்கிற என்று சொல்லி கண்ணடித்தான் ஹரீஸ்!
நான் மேலும் சிணுங்கிக் கொண்டே அவனுடன் இன்னும் ஒன்றினேன்.
அவன் கைகள் என் தலை முடியைக் கோதிக் கொடுத்தன. என் கன்னங்களை வருடிக் கொடுத்தன. பின் மெதுவாகக் கேட்டான்.
அவன் கைகள் என் தலை முடியைக் கோதிக் கொடுத்தன. என் கன்னங்களை வருடிக் கொடுத்தன. பின் மெதுவாகக் கேட்டான்.
நாம எப்பம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்?
நான் நிமிர்ந்து ஹரீசைப் பார்த்தேன். போலாம்பா. ஆனா…
ஆனா, என்னடா? திரும்ப ஏதாச்சும் பிரச்சினை வரும்னு யோசிக்கிறியா?
ஹரீஸின் முகத்தில் இன்னமும் கொஞ்சம் தவிப்பு இருந்தது. அதை புரிந்து கொண்டதால், அவனது தவிப்பினை போக்கும் வகையில் மென் புன்னகை செய்தேன்.
நீங்க இருக்கிறப்ப, எனக்கென்ன சங்கடம். ஆனா நான் சொல்ல வந்தது வேற. எனக்கு ரெண்டு விஷயம் நெருடலா இருக்குங்க
என்ன அது?
ஒண்ணு, என்னதான் மதன் பிரச்சினையை சரி பண்ணிட்டேன், உங்க சித்தப்பா, சித்தியை பழிவாங்கிட்டேன்னு சொன்னாலும், அவிங்க இன்னமும் உங்க வீட்லத்தான் இருக்காங்க. அவன் என்ன பண்ணான்னு தெரியாட்டியும், அங்க போனா நாம எப்டி நடந்துக்கனும், அவிங்க எப்டி நடந்துக்குவாங்கன்னு தெரியனும் இல்லையா?
கரெக்டுதான்… வேண்ணா, நாளைக்கு மதனையே கேட்டுடலாம்! என்னச் சொல்ற?
ம்ம்…
ரெண்டாவது என்ன?
இல்ல, பிரச்சினை சீரியசா போனப்ப, வேற வழியில்லாம, ஒரு தடவை அவனுக்கு கால் பண்ணேன். அப்ப என்கிட்ட கோவமா பேசுனான். நான் வீட்டுக்கு வந்தப்பவும் ஒரு மாதிரி சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்துகிட்டான். பேசுறதைக் கூட அவாய்ட் பண்ணான்.
எனக்கு நல்லா தெரியும், அவனுக்கு என் மேல நல்ல பாசம் இருக்குன்னு. எனக்காக இன்னிக்கு இவ்ளோ ஃபீல் பண்றவன், ஏன் அப்படி நடந்துக்கனும். முன்ன ஒரு தடவை கேட்டப்பவும் ஒரு மாதிரி தடுமாறுனான். அதான் யோசிக்கிறேன்…
அதையும் அவனையே கேக்கலாமே?
கேட்கனும். என்னமோ இருக்கு! ஆனா, அழுத்தக்காரன், வாயைத் தொறக்க மாட்டான். ஆனா, நானும் விடப் போறதில்லை. அதுனால, இது ரெண்டையும் தெரிஞ்சிகிட்டு நாம நம்ம வீட்டுக்குப் போயிடலாம். என்ன சொல்றீங்க?
ம்ம்.. ஓகே. அப்டியே பண்ணிடலாம். அப்ப நாளைக்கு மதியம், இதை அவன்கிட்ட கேட்டுரலாம்.
என் முகத்தில் குழப்பம் வந்தது. அது ஏன், நாளைக்கு மதியம்? காலையிலியே கேட்டுடலாமே?
காலையில கேட்கலாம்! ஆனா, கொஞ்சம் லேட்டாகுமே?! அதான் யோசிக்கறேன்.
எதுக்கு லேட்டாகும்? எனக்கு இன்னமும் குழப்பமாக இருந்தது.
நாம, எந்திரிச்சு, ரெடியாகத்தான்…
எதுக்குங்க லேட்டாகுது? எனக்கு புரியலை.
இல்லை, இப்பதான் ஒரு ரவுண்டு முடிஞ்சிருக்கு, இன்னும் ஒரு ரவுண்டு போயிட்டு படுத்தா, லேட் ஆகிடும். கொஞ்சம் டயர்டும் ஆகிடும்! அதான், காலையில எந்திரிக்க லேட் ஆகும்னு சொன்னேன் என்று சொல்லி கண்ணடித்தான்.
அவன் எதைச் சொல்கிறான் எனப் புரிந்ததும் என் கண்கள் விரிந்தது. அவனையே வெட்கத்துடன் பார்த்தேன். அவனைச் செல்லமாக ஒரு அடி அடித்தேன்.
உங்களை… ஏதோ சீரியசா சொல்றீங்கன்னு கேட்டா…
ஏய், நான், இதை சீரியசாதான் சொல்லிட்டிருக்கேன்.
ச்சீ போடா! ராட்சசா!
சரி, இந்த ரவுண்டு, செல்லக் குட்டிக்கு எப்டி வேணும்? போன ரவுண்டு மாதிரியேவா, இல்ல, புதுசா ஏதாவது ட்ரை பண்ணனும்னு ஆசை இருக்கா…? கொஞ்சம் வெளிப்படையாச் சொல்லு பாக்கலாம்!
எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது, ஐய்யோ, போதும், உங்க இஷ்டப்படி என்னமோ பண்ணுங்க. இப்ப ஆளை விடுங்க. நான் போய் க்ளீன் பண்ணிட்டு வந்துடுறேன் என்று எழுந்து ஓடியவள், பாத்ரூம் கதவை சாத்தும் முன், ஹரீசின் கரம், வலிமையாக அதைத் தடுத்தது.
என்னங்க?
நானும் க்ளீன் பண்ணனும்.
சரி இருங்க டூ மினிட்ஸ். சீக்கிரம் வந்துடுறேன்.
இல்லையில்ல, ஒன் அவர்னாச்சும் ஆக்கும். கொஞ்சம் லேட்டாவே வந்துடலாம். தப்பில்லை. என்று சொல்லி கண்ணடித்தான்.
என்ன சொல்றீங்க?
ம்ம்… சேந்தே க்ளீன் பண்ணிக்கலாம் என்று சொல்லி, என்னை உள்ளே, தள்ளிக் கொண்டு சென்றான்.
அய்யோ, வேணாங்க…
ஏய், நீதானே, என் இஷ்டம் போல பண்ணிக்கச் சொன்ன? நான் உன் இஷ்டத்தை நிறைவேத்துனேன்ல? இப்ப நீ, நிறைவேத்து!
ஏய் திருடா. ஜெகஜ்ஜாலக் கில்லாடிடா நீ!
மெதுவாக… அங்கே ஒரு ஜலக் கிரீடை நடந்தேற ஆரம்பித்தது!
மதனின் பார்வையில்…
அடுத்த நாள் காலை, அக்கா என்னிடம் கேட்டாள்
மதன் பிசியா? சாப்டதுக்கப்புறம், கொஞ்சம் பேசனும் உன் கூட.
ஓகே. பிசில்லாம் ஒண்ணுமில்லை. பேசலாம்.
ம்ம்ம்… இப்பச் சொல்லுங்க.
வா, உன் ரூமுக்கு போயிடலாம்.
ஹரீஸ்தான் பேசினார்.
இல்ல மதன், நாங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கோம். நீ, எங்களுக்காக மிகப் பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க. இருந்தாலும் ஒரு விஷயம்…
சொல்லுங்க மாமா!
இல்ல, நீ எங்க வீட்ல என்ன பண்ணன்னு எதுவும் எங்களுக்கு தெரிய வேண்டாம். ஆனா, அவிங்க இன்னமும் என் வீட்டுலதான் இருக்காங்க. சோ, எனக்கும், உன் அக்காவுக்கும் குழப்பமா இருக்கு. அவிங்ககிட்ட நாங்க எப்டி ரியாக்ட் பண்ணனும், அவிங்களை ஏன் இன்னும் அங்க வெச்சிருக்கனும் எதுவும் புரியலை. அதான் யோசிக்கிறோம்.
நான் புன்னகைத்தேன்.
மாமா, நீங்க கேட்டது நல்லதுதான். நானே சொல்லனும்னுதான் இருந்தேன். நீங்க சொன்ன மாதிரி, அங்க என்ன நடந்ததுன்னு நான் யார்கிட்டயும் சொல்ல விரும்பலை. ஆனா, கண்டிப்பா, அவங்க பண்ண தப்புக்கு ஒரு தண்டனை கிடைச்சிருக்கு.
நீங்க ரெண்டு பேருமே, அங்க எதையும் வெளிக்காட்டிக்க வேணாம். அவரு அக்காகிட்ட நடந்த விதம் உங்களுக்கு தெரிஞ்ச மாதிரியோ, உங்ககிட்ட ஏமாத்துனது உங்களுக்கு புரிஞ்ச மாதிரியோ எதையும் காட்டிக்க வேணாம்.
பழைய அளவு நெருக்கம் காட்ட வேண்டாம். என்னன்னா என்ன என்ற அளவுலியே இருங்க. அதே சமயம், உங்க கோபமோ, வெறுப்போ அவருங்களுக்குத் தெரியுற மாதிரி காட்டாதீங்க.
அதே சமயம், இனி உங்க கம்பெனில அவரை கண்டினியூ பண்ண விடாதீங்க. கேசூவலா, எந்தக் காரணமும் இல்லாம, ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, அக்காவை ஆஃபிஸ்க்குள்ள கொண்டு வந்திடுங்க.
அதாவது, மறைமுகமா வீட்டுலியும், ஆஃபிஸ்லியும், அவிங்களுக்கு பவர் இல்லைன்னு நீங்க காமிக்கனும். எல்லா இடங்கள்லீயும் முடிவுகளை நீங்க மட்டுமே எடுக்குறதா இருக்கனும். ஆனா, வார்த்தைகள்ல எந்த இடத்துலியும், கோவம், வெறுப்பு இருக்கக் கூடாது.
அதே சமயம், இனி உங்க கம்பெனில அவரை கண்டினியூ பண்ண விடாதீங்க. கேசூவலா, எந்தக் காரணமும் இல்லாம, ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, அக்காவை ஆஃபிஸ்க்குள்ள கொண்டு வந்திடுங்க.
அதாவது, மறைமுகமா வீட்டுலியும், ஆஃபிஸ்லியும், அவிங்களுக்கு பவர் இல்லைன்னு நீங்க காமிக்கனும். எல்லா இடங்கள்லீயும் முடிவுகளை நீங்க மட்டுமே எடுக்குறதா இருக்கனும். ஆனா, வார்த்தைகள்ல எந்த இடத்துலியும், கோவம், வெறுப்பு இருக்கக் கூடாது.
உங்க நடவடிக்கை கண்டிப்பா அவருக்கு குழப்பம் கொடுக்கும். அதே சமயம் அவரால உங்ககிட்ட விளக்கம் கேட்கவும் முடியாது!
ரொம்ப முக்கியமா ஒரு விஷயம், ஒரு வேளை, அவிங்க யாராவது, வேற ஊருக்கு போறோம்னோ, சொந்த ஊருக்கு போறோம்ன்னோ சொன்னா, நீங்க அதுக்கு ஓகே சொல்லிட்டு, அமைதியா விலகிடனும்.
ஹரீஸ் கொஞ்சம் குழப்பத்துடன் சொன்னார். நீ சொல்றதுல பாதி புரியலை. கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. இருந்தாலும் நீ சொன்ன மாதிரியே செய்யுறேன்.
ரொம்ப முக்கியமா ஒரு விஷயம், ஒரு வேளை, அவிங்க யாராவது, வேற ஊருக்கு போறோம்னோ, சொந்த ஊருக்கு போறோம்ன்னோ சொன்னா, நீங்க அதுக்கு ஓகே சொல்லிட்டு, அமைதியா விலகிடனும்.
ஹரீஸ் கொஞ்சம் குழப்பத்துடன் சொன்னார். நீ சொல்றதுல பாதி புரியலை. கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. இருந்தாலும் நீ சொன்ன மாதிரியே செய்யுறேன்.
பின் நான், என் அக்காவிடம் சொன்னான். உனக்கும் அதேதான். எந்த இடத்துலியும், நீ அவரை ஒரு பொருட்டா மதிக்காத. ஆனா, அவர் முன்னாடி, நீ இன்னமும் கம்பீரமா, தைரியமா நடந்துக்கனும். ஓகேவா? சொல்லப் போனா, உன் கம்பீரமும், தைரியமும்தான் அவருக்கு முக்கிய, கடைசி தண்டனையா இருக்கனும்!
எனக்கும் முழுசா புரியலை. இருந்தாலும் ஓகே.
சரி, நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடுறேன்.
இந்த முறை அழுத்தமாக அக்காவின் குரல் வந்தது.
இல்ல கொஞ்சம் உட்காரு, உன்கிட்ட இன்னொரு முக்கிய விஷயம் பேசனும்.
எனக்கு குழப்பம் வந்தது! இன்னும் என்ன சொல்லு?
பின் ஆழமாக என் கண்ணைப் பார்த்து கேட்டாள். நான் கால் பண்ணப்பவும், திரும்ப இங்க வீட்டுக்கு வந்தப்பவும் ஒரு மாதிரி நடந்துகிட்டியே, அது ஏன்?
சரியான பாயிண்ட்டை பிடித்து விட்டாள்!

இந்த முறை நான் தடுமாறினேன். அது ஒண்ணுமில்லை… ஏதோ பிசினஸ் டென்ஷன் அதான்…
பொய் சொல்லாத! உனக்கு அது வரலை.
ஏய் ஒண்ணுமில்லை… இன்னமும், என்னால் அவள் கண்களைப் பார்க்க முடியவில்லை.
உன்னால என் கண்ணையேப் பார்க்க முடியலை. ஏற்கனவே, உன் கம்பெனிக்கு நான் வந்திருந்தப்ப, நீ கொஞ்சம் உன்னை மீறி சொன்னது எனக்கு இன்னமும் ஞாபகத்துக்கு இருக்கு. நீ ஏதோ மறைக்கிற. என்னான்னு சொல்லு!
ஏய் மறைக்கல்லாம் இல்லை… எல்லாம் உனக்குத் தெரிஞ்ச விஷயம்தான். எனக்கு அதுல ஒரு குற்ற உணர்ச்சி. அதான்…
ஏய், எனக்கு சத்தியமா புரியலை. நீ எந்த விஷயத்தைச் சொல்ற நீ?
நான் இன்னமும் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
ஏய், எனக்கு சத்தியமா புரியலை. நீ எந்த விஷயத்தைச் சொல்ற நீ?
நான் இன்னமும் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
டேய், சொல்லு ப்ளீஸ். சத்தியமா சொல்றேன். எனக்கு நீ என்ன சொல்றேன்னே புரியலை. இன்னும் சொல்லப் போனா, ஏதாச்சும் பெரிய பிரச்சினையோன்னு பயமாக் கூட இருக்கு. ப்ளீஸ் சொல்லு!
நான் அமைதியாகவே இருந்தேன்!
ஹரீஸ் நீங்க, கொஞ்சம் நம்ம ரூம்ல இருங்க ப்ளீஸ்.
எழுந்த ஹரீசை, நான் குறுக்கிட்டேன்.
இல்லை வேணாம் மாமா. நீங்களும் இருங்க. அப்படி ஒண்ணும் ஒங்களுக்கு தெரியக் கூடாத விஷயமில்லை.
மெல்ல நான் சொல்ல ஆரம்பித்தேன். நான் சொல்லும் போதே தெரிந்துவிட்டது. அதில் பல விஷயங்கள், அக்காவிற்குத் தெரியவில்லை. அவளுக்கும் பலத்த அதிர்ச்சி. அது அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் தெரிந்தது.
அருகிலிருந்த ஹரீஸின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
என்னடா சொல்றா? சத்தியமா இது எதுவும் எனக்கு தெரியாதுடா. இதுக்கு நான் என்ன விளக்கம் சொல்லப் போறேன்னு எனக்கே தெரியலையே!
கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் தொடர்ந்து கண்ணீர். எனக்கோ, ஹரீசிற்க்கோ என்னச் சொல்வது என்று தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து தெளிவடைந்தவள், கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். பின் ஹரீசைக் கூட்டிக் கொண்டு வெளியே சென்றாள்.
அவள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது. நான், சந்திக்க பயப்பட்ட ஒரு விஷயத்தை, அவள் சந்திக்கத் துணிந்துவிட்டாள். அதில் பாதிக்கும் மேல் என் நலனுக்காகவும்தான் என்று எனக்குப் புரிந்தது. இந்த விஷயத்தில் அவள் தைரியசாலிதான்.
மெல்லப் பெருமூச்சு விட்டு, சோஃபாவில் சாய்ந்தேன்.
மெல்லப் பெருமூச்சு விட்டு, சோஃபாவில் சாய்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து அக்கா மட்டும் என் அறைக்குள் வந்தாள். நான் அவளையேப் பார்த்தேன்.
ஹரீசை அனுப்பியிருக்கேன்.
நான் தலையசைத்தேன்.
அவளும் என்னருகில் அமர்ந்தாள்.
இருவரும் தனித்தனியே அமர்ந்திருந்தாலும், இருவர் மனமும் வருத்தத்தில் இருந்தாலும், நாங்கள் இருவரும் ஒரே விஷயத்தைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தோம்.
மெல்ல மெல்ல எங்கள் நினைவுகள் பின் நோக்கி நகர ஆரம்பித்தது!
No comments:
Post a Comment