CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 13



தோக்குறதுக்கு அவ்ளோ ஆர்வமா? சொல்றேன். முக்கிய ஆளே மோகன்தானே? அவருதான் ஃப்ளாட் ஆகி இருக்காரே. அவரு முழு நினைவுக்கு வரட்டும். நாளைக்கு காலைல வெச்சுக்கலாம், அந்த பெட்டை!
இப்பொழுது இன்னும் அலட்சியமாக ஒலித்தது அவள் குரல். 
ஹா ஹா… ஒரு வேளை இப்பியே நடந்தானாச்சும், அவர் குடிச்சிருக்காருன்னு நீ, எஸ்கேப் ஆகியிருக்கலாம். ஆனா, நீயே உன் சான்சை குறைச்சிக்குற! சரி நாளைக்கு தோக்கத் தயாரா இரு!
அடுத்த நாள் காலை! 
சாப்பிடும் போது, நானும், மோகனும் மட்டும் இருந்தோம். நான் மோகனிடம் கேட்டேன். 
என்ன மாமா, நம்ம மேட்டர் முழுக்க, அத்தைகிட்ட சொல்லிட்டீங்களா? நாந்தான் வேணாம்னு சொன்னேனே?
இல்லையே மதன்! நீ சொல்லி நான் எப்டி கேக்காம இருப்பேன்.
அப்ப, ஏன் நேத்து அவிங்க, நான் இங்க இருக்கிறதைப் பத்தி, என் சொத்து விஷயம், எனக்கும் எங்க அப்பாவுக்கும் இருக்கிற பிரச்சினையைப் பத்தில்லாம் திரும்பத் திரும்ப கேட்டாங்க?
இது எப்ப நடந்துது?
நேத்து நீங்க ட்ரிங்ஸ் சாப்டுட்டு ரூமுக்கு போனதுக்கப்புறம். ஏகப்பட்ட கேள்விகள். அதுவும், நான் இன்னும் எத்தனை நாள் தங்கனும்னுல்லாம் கேட்டாங்க. எனக்கே கடுப்பாயிடுச்சி. அதான், நான் கெஸ்ட் ஹவுசுக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன்.
அய்யய்யோ, மதன். ஏன் இப்டிச் சொல்ற. அவளுக்கு அறிவே கிடையாது. உனக்குதான் தெரியுமே? இதுக்குல்லாம் கோவிச்சுகிட்டு. நான் பாத்துக்குறேன். நீ இங்கியே இரு. ஓகே!
சரி! இதுதான் லாஸ்ட் டைம். இதுக்கு மேல இது மாதிரி நடந்தா, நான் கெளம்பிகிட்டே இருப்பேன். என் ஸ்டேட்டஸூக்கு இதுவே ஜாஸ்தி. தவிர, நம்மத் திட்டம் எவ்வளவுக்கெவ்ளோ ரகசியமா இருக்கோ அதுதான் உங்களுக்கு சேஃப். இல்லாட்டி நட்டம் உங்களுக்குத்தான்!
விடு மதன், நான் பாத்துக்குறேன்.
சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற பின், சீதா என்னிடம் வந்தாள்.
என்ன, என்னமோ, அவரு இருக்கிறப்போ, பெட்டைப் பத்திச் சொல்றேன்னு சொன்ன? பயந்துட்டியா?
ஹா ஹா! நீங்க தைரியமா பேசுறதைப் பாக்க நல்லாதான் இருக்கு. ஆனா, எவ்ளோ நேத்துக்குன்னு பாக்குறேன். வெளிய போயிருக்கிற, உங்க புருஷன் வரட்டும்.
ம்ம்ம்..
மோகன் வந்த பின், சீதா மீண்டும் என் ரூமுக்கு வந்தாள். 
அவர் வந்துட்டாரு. இப்பச் சொல்லு உன் பெட்டை. இப்பியும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நீ வேணாம்னு சொல்லு, உன்னை மன்னிச்சு விட்டுடறேன்.
ஹா ஹா என்று சிரித்த படியே வெளியே வந்தேன். பின்னாடியே அவளும் வந்தாள்.
அவள் முன்னாடி, சிரித்த படி, சோஃபாவில் கால் மேல் கால் போட்டு திமிராக உட்கார்ந்தேன். பின் சொன்னேன்.
நீ சொன்னியே, இது உன் வீடுன்னு. அப்டின்னா, உன் புருஷன்கிட்ட போய், நான் வீட்டை விட்டு எப்ப வெளிய போகப்போறேன். இன்னும் எத்தனை நாள் இருக்கனும்னு கேட்டுட்டு வா. 
நல்லா கேட்டுக்கோங்க. என்னை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லி கூட கேக்கலை. என்னைப் பத்திய ஒரு விஷயத்தைதான் தெரிஞ்சிட்டு வரச் சொல்றேன். ஒரே கண்டிஷன், நம்ம பெட்டு பத்தி சொல்லக் கூடாது. உங்களுக்கு இன்னொரு இன்ஃபர்மேஷன். உங்க மருமக, ஹரீஸ் இவிங்க ட்ரிப்பு எல்லாமே என் முடிவு. உங்களுதோ, உங்க புருஷனோடதோ கிடையாது. அதையும் கூட உண்மையான்னு கேட்டுக்கோங்க. ஆனா, நான் சொன்னதா சொல்லக் கூடாது. 
இதான் பெட். இதை ஏத்துக்குற தைரியம் இருக்கா?
ஹா! இதெல்லாம் ஒரு பெட்டா? எப்ப போறன்னு கேக்குறதென்ன. நான் போயி, அவரை விட்டே, உன்னை உடனே வெளிய போகச் சொல்ல வைக்கிறேன். பாத்துட்டே இரு என்று அலட்சியமாய், அவள் ரூமுக்குள் சென்றாள்.
கொஞ்ச நேரம் கழித்து கோபமாய், மோகன் வெளியே வந்தான். திரும்ப வெளியே சென்று விட்டான். பின் சிறிது நேரம் கழித்து, அமைதியாய், கொஞ்சம் வருத்தத்துடன் சீதா வந்து ஒரு சோஃபாவில் அமர்ந்தாள். அவள் தலை குனிந்திருநாள்.
அவளது நம்பிக்கையை சுக்கு நூறாக உடைக்க, வேண்டுமென்றே கேட்டேன்.
என்னத்தை, அவரு என்னை வெளியப் போகச் சொல்லுவருன்னு பாத்தா, அவரே வெளிய கெளம்பி போயிட்டாரு? ஓ, ஈவ்னிங் வந்து சொல்லுவாரா? நான் வேணா போயி பாக் பண்ணி வெக்கட்டுமா?
அவள் அமைதியாக இருந்தாலும், என் பேச்சு அவளைக் காயப்படுத்துவதை உணர முடிந்தது.
சரி, நீங்க தெரிஞ்சிட்டு வரேன்னு போனீங்களே, என்ன தெரிஞ்சுது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னமோ, என் வீடு, எல்லா முடிவும் என்னுதுன்னு சொன்னீங்க. இப்ப எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க. 
இப்போது கோபமாக அவள் பேசினாள். 
நீ பேசாத. நீ எதையோ சொல்லி அவரை ப்ளாக்மெய்ல் பண்ற. இல்லாட்டி, என் பேச்சுக்கு பதில் பேச்சே கிடையாது. என்ன பண்ண அவரை? உனக்கு என்ன வேணும்?
இப்போது எனக்கு கோபம் வந்துது. லூசாடி நீ?
டி யா?
ஆமாண்டி! உனக்கு என்னடி மரியாதை? தன்மானம் இல்லாதவன்னு நினைச்சேன். அறிவும் இல்லாதவன்னு இப்பதான் புரியுது. 
ஏய் மரியாதையா பேசு? இல்ல…
இல்லாட்டி என்னடி பண்ணுவ? என்னை வீட்டை விட்டு வெளிய அனுப்புவியா? எங்க போயி, உன் புருஷன்கிட்ட சொல்லி செஞ்சு காமி பாக்கலாம்?
என்னுடைய பதிலில் இருந்த உண்மையும், வயதில் பல வருடம் சின்னவனான் நான் ‘டி’ என்று அழைப்பதும், என்னை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையும் அவளது கண்ணில் கண்ணீரைக் கொண்டு வந்திருந்தது. 
டக்கென்று ஞாபகம் வந்தவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள். 
என்ன பாக்குற? வேலைக்காரங்க இருக்காங்களான்னா? கவலைப்படாத. உனக்கே சொரணை இல்லைன்னாலும், எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. உனக்காக இல்லாட்டியும், எனக்காக, நான் உன்னை அவ்ளோ மரியாதைக் குறைவா மத்தவிங்க முன்னாடி நடத்த மாட்டேன்.
அந்த நேரத்தில், இடத்தில் நான் காட்டிய கருணை, அவளை இன்னும் அடித்தது. மெல்லிய விம்மலுடன் கேட்டாள்.
ஏன் மதன் இப்டில்லாம் பேசுற? ஏன் இப்டி நடந்துக்குற? நான் உன்னை என்ன பண்ணேன்?
அழுகையை நிறுத்துடி. நானா உன்கிட்ட ஏதாவாது சொன்னேனா? நான் உன்னைக் கண்டுக்காமதான் இருந்தேன். நீயா வந்து ஏன் கண்டுக்கலை, என்ன காரணம்னு கேட்ட. நான் உண்மையைச் சொன்னேன். இப்ப என் மேல பழியைப் போடுற?
எனது பதிலில் இருந்த உண்மை அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் கேட்டாள், ஆனா, நீ வந்ததுக்கப்புறம்தானே, என் புருஷன் என் பேச்சைக் கேக்க மாட்டேங்குறாரு?
ஹா ஹா! ஏது, நான் வந்த பின்னாடியா? உன் புருஷன் ஆரம்பத்துல இருந்தே உன்னை மதிச்சதில்லை. அது நான் சொன்ன பின்னாடிதான் உனக்கு தெரிய வந்திருக்கு. இல்லாட்டி, இன்னமும் நீ முட்டாளாத்தான் இருந்திருப்பே.
நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டேன். ஆவேசமாய் வந்தது அவள் குரல்.
அவள் கையை பிடித்து வேகமாய் இழுத்துக் கொண்டு அவள் அறைக்குள் இழுத்து வந்து கதவைச் சாத்தினேன்!
ச்சீ கையை விடு! என்னை நினைச்சுகிட்ட என்னைப் பத்தி? அறைஞ்சிருவேன் ஜாக்கிரதை!
ஏய்… என்று கையை நீட்டி எச்சரித்தேன்.
இந்த முறை என் கோபத்தைக் கண்டு அவளுக்கு பயமே வந்திருந்தது.
நீ என்னடி நினைச்சிட்டிருக்க என்னைப் பத்தி? கையைப் புடிச்சி ரூமுக்கு கூட்டியாந்தா தப்பா?
அவள் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன்.
நான் சொன்ன மாதிரி உனக்கு அறிவும் கிடையாது, தன்மானமும் கிடையாது.
உன்னைத் திட்டுற நான், சுத்தி யாரும் இல்லாதப்ப, யாருக்கும் கேட்காதப்ப திட்டுறேன். ஆனா, என்கிட்ட தோக்குற, திட்டு வாங்குற நீ, மத்தவங்களுக்கு கேக்குமான்னு அறிவு கூடத் இல்லாம கத்துற? இது தெரிஞ்சா வேலைக்காரங்க முன்னாடி, அசிங்கம் உனக்கா, இல்லை எனக்கா? தப்பு பண்ண நினைக்கிரவன் எதுக்குடி உன் ரூமுக்கு இழுத்து வரணும்? ம்ம்ம்?
இந்தக் கருணையாலும் அவளுக்கு கொஞ்சம் கண்ணீர் வந்தது. அவள் ஆடிப் போயிருந்தாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்று, பெட்டில் அமர வைத்தேன். பின் அமைதியாகச் சொன்னேன். இது ஏசி ரூம். எந்த சவுண்டும் வெளியப் போகாது. அதான், இங்க வெச்சு பேசலாம்னு கூட்டி வந்தேன்.
அவள் அமைதியாகியிருந்தாள்.
என்னமோ நான் பொய் சொல்றேன், உன் புருஷன் ஆரம்பத்துல இருந்தே இப்படித்தாங்கிறதை நம்ப மாட்டேன்னு சொன்னீல்ல? அதையும் ப்ரூவ் பண்ணட்டுமா, இப்பவே? ப்ரூவ் பண்ணா என்ன தருவ? போன பெட்டுக்கே, நான் சொன்னதைக் கேக்குறேன்னு சொன்ன. இப்ப இது வேற?
இந்த முறை கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுடன் சொன்னாள். முன்பிருந்த திமிர், நம்பிக்கை எல்லாம் காணாமல் போயிருந்தது.
சரி, ப்ரூவ் பண்ணு. ஒட்டு மொத்தமா, நீ, என்ன சொன்னாலும், எத்தனை தடவை சொன்னாலும் கேக்குறேன்.
நான் அலட்சியமாய் சிரித்தேன். பின் அலட்சியமாய், நான் எடிட் செய்திருந்த, தண்ணி அடிக்கும் போது, எனக்கும் மோகனுக்குமான உரையாடலின் கடைசிப் பகுதியை காட்டினேன். அது,
ஏன் மாம்ஸ், அதான் ஏற்கனவே உங்க ஆஃபிஸ்ல, அங்க இங்கன்னு ரெண்டு மூணு செட் பண்ணியிருக்கீங்களே, அது போதாதா?
உ… உனக்கு எப்டி தெரியும்?
என் பவர் என்னான்னு உங்களுக்குத் தெரியாது மாம்ஸ். எனக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும்! சும்மா சொல்லுங்க.
அது என்னாதான், வெளிய இருந்தாலும், வீட்டுக்குள்ள இப்டி இருந்தா, தனி கிக்குதான் மாப்ளை!
ம்ம்… செம கேடி மாம்ஸ் நீங்க! ஆமா, இதெல்லாம் அத்தை எப்டி அலவ் பண்றாங்க?
அவ கிடக்குறா! நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா அடங்கிடுவா. அவல்லாம், எனக்கு ஒரு பொருட்டே இல்லை!
ஆனா, அத்தைக்கு என்ன குறைச்சல் மாமா, பார்க்க அழகாத்தானே இருக்காங்க!
ம்க்கும்! அவ, அழகா? நீங்க வேற மாப்ளை காமெடி பண்ணிகிட்டு!
ஏன் மாம்ஸ் இப்டி சொல்றீங்க? மேக்கப் பண்ணிக்கிரதில்லை அவ்ளோதானே? அவிங்க கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிகிட்டா நல்லாதானே இருப்பாங்க? அப்பிடி ஒண்ணும் வயசான மதிரி தெரியலியே?
சும்மா காமெடி பண்ணாதீங்க மாப்ளை! அவ, அப்டியே அழகாயிட்டாலும். நீங்க வேற ஏன் அவளைப் பத்தி பேசிகிட்டு.
பார்த்து முடித்தவள் குழப்பத்துடன் கேட்டாள். இது எனக்குத் தெரிஞ்ச விஷயம்தானே? இதுல என்ன புதுசா? இந்த முறை திமிர் இல்லை. வெறும் குழப்பமே!
                                    
நான் சிரித்தேன். இப்ப புரியுதா நான் ஏன் உன்னை முட்டாள்னு சொல்றேன்னு?
அவள் கோபமானாள். 
மதன்…
பின்ன, உன் பேச்சு திரும்பத் திரும்ப அதைத்தானே ப்ரூவ் பண்ணுது?
சரி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு!
நீ பழகுற எல்லாரும் உன் ஸ்டேட்டஸ் ஆளுங்கதானே?
ஆமா?
அதுல, எவளுக்காவுது தெரிஞ்சு, அவ புருஷன், இன்னொருத்தர் கூட தொடர்புல இருக்கானா?
இல்ல!
ஒரு வேளை, அவிங்களுக்குத் தெரியாம, கனெக்ஷன்ல இருக்காங்களோ?
இ… இல்லை. அப்டியெல்லாம் இல்லை.
ஆக, உன் க்ரூப்புலியே, பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு, இன்னொருத்தரு கூட கனெக்ஷன் இருக்குறது, உன் புருஷன் தான். இல்ல?
ஆ… ஆமா!
அந்தக் காலத்துலதான், தாசி வீட்டுக்கு, பொண்டாட்டியே, புருஷனை சுமந்துட்டு போவாங்கன்னு சொல்லுவாங்க! அவ்ளோ பெரிய பத்தினியாடி நீ?
ப்ளீஸ் மதன், அப்டில்லாம் பேசாத!
வேற எப்டி டி பேசச் சொல்ற? சரி, இவ்ளோ பேசுறியே, உன் புருஷன், இப்டி இருக்குறது, உன் க்ரூப்ல இருக்குற லேடீஸ்க்கெல்லாம் தெரியுமா?
தெர்.. தெரியாது?
ஏன்? நீதான் சுதந்திரம்னு பீத்திகிட்டியே, சொல்ல வேண்டியதுதானே பெருமையா?
அமைதியாக இருந்தாள். பின் எதையோக் கண்டுபிடித்தது போல் சொன்னாள். சரி, இது சுதந்திரமில்லைதான். ஆனா, அவரு என்னை ஏமாத்துலியே! எனக்கு தெரிஞ்சுதானே பண்றாரு. பதிலுக்கு நான் கேக்குறதை கொடுத்துடுறாரு! இது எப்படி ஏமாத்துறதாகும்?
ஏண்டி இப்டி அடி முட்டாளா இருக்க?
என்னுடைய தொடர் அவமானப்படுத்துதலுக்கும், டி என்று கூப்பிடுவதற்கும் இப்போது கொஞ்சம் பழக ஆரம்பித்திருந்தாள். மெல்லிய குரலில் சொன்னாள்.
எனக்குத் தெரியலை மதன்! நீதான் சொல்லேன். இது எப்படி ஏமாத்துறது? ஒரு வேளை எனக்கு தெரியாம செஞ்சா வேணா சொல்லலாம். ம்ம்?
நான் அவளையேப் பார்த்து, அமைதியாகச் சொன்னேன்.
ஏண்டி, உன் கூட இருக்குற எல்லாரும் வெச்சிருக்குற அதே டிரஸ், அதே நகை, அதே ஸ்டேட்டஸ்ல, உன்னை வெச்சிருக்குறதுக்கு, உன் புருஷன் வெளிய தொடர்பு வெச்சிருக்கான், அதை மியுச்சுவல் சுதந்திரம்னு சொல்லி உன்னை நம்ப வெச்சிருக்கான்னு உனக்கு தோணவே இல்லையா? வெளில தொடர்பு வெச்சிருக்கிற உன் புருஷன், மத்தவங்களை விட, வேற என்ன புதுசா உனக்கு செஞ்சிட்டான்? ம்ம்ம்?
அஃக்… இப்போதுதான் அவளுக்கு அது புரிபட ஆரம்பித்தது என்று அவள் முகத்திலேயே தெரிந்தது. நான் தொடர்ந்தேன்.
இத்தனைக்கும் இது உன் புருஷன் பணமே இல்ல. ஹரீஸோட பணம். அதை எடுத்து உன்கிட்ட கொடுக்குறதுக்குதான், இவ்ளோ பொய்யும். அது புரியலை உனக்கு? மத்தவங்க புருஷனெல்லாம், சுயமா சம்பாதிச்சு, கேஷுவலா தன் பொண்டாட்டிக்கு செய்யுறதை, உன் புருஷன் இன்னொருத்தர் பணத்தை எடுத்து, தான் பண்ற அயோக்கியத்தனத்துக்கு பதிலா செய்யுறா மாதிரி காமிச்சிருக்கானே! இது சீட்டிங் இல்ல???
அவள் தலை குனிந்திருந்தாள். கண்களில் கண்ணீர்.
அதெல்லாம் கூட பரவயில்லை. ஆனா…

No comments:

Post a Comment