லாவண்யாவின் கேள்விகளில் இருந்த தர்க்கம், எல்லாரையும் யோசிக்க வைத்தது. சிறிது நேர யோசனைக்குப் பின், தாத்தாதான் சொன்னார்.
நீ சொல்றது சரிதான்மா! நானே கொஞ்சம் ஏமாந்துட்டேன். ச்சே! அவிங்களைக் கூப்பிட்டு, கட் அண்ட் ரைட்டா, இது ஒத்து வராதுன்னு சொல்லிடுறேன்!
அதற்கும் பதில், லாவண்யாவே சொன்னாள்.
அவசரப்படாதீங்க தாத்தா! நான் சொன்னது எல்லாமே என் டவுட்டுதான். எதுவும் கன்ஃபர்ம் கிடையாது. அப்படியிருக்கிறப்ப, சந்தேகத்தின் பலனை அவிங்களுக்கும் கொடுக்கனுமில்லையா? ஒரு வேளை அவிங்க உண்மையாலுமே மனசு மாறியிருந்தா?
தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார். சரி, நான் என்ன பண்ணனும்ன்னும் நீயே சொல்லும்மா!
இதையேச் சொல்லுங்க தாத்தா. முதல்ல, பையன்கிட்டயும், பொண்ணுகிட்டயும் பாசம் காட்டச் சொல்லுங்க. அவங்க, அப்பா, அம்மாவா எத்துக்குற வரைக்கும் பொறுமையா நடந்துக்கச் சொல்லுங்க. அவிங்க ஏத்துகிட்டா, நீங்க ஏத்துக்குறதுல எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு சொல்லுங்க என்று சொல்லி நிறுத்தியவள்… பின் தயங்கிச் சொன்னாள்.
அதுனால, இப்போதைக்கு மதன் இங்கியேதான் படிப்பான். ஹைதராபாத்லாம் போகலைன்னு சொல்லுங்க என்றாள்.
தாத்தா சரி என்று சொன்னார். ஆனால், அக்காவோ, அவளையே யோசனையாகப் பார்த்தாள்.
என்னடி அப்படி பாக்குற? நான் சொன்னது தப்பா?
நீ சொன்னது எல்லாம் சரிதான். ஆனா, நீ இன்னும் முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலைன்னு தோணுது!
ஏய்… அப்படில்லாம் இல்லை என்று பதறினாள் லாவண்யா!
உண்மையைச் சொல்லு, அவிங்க இது மாதிரி ஒரு ப்ளானோட தாத்தாவை அப்ரோச் பண்ணதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு நீ நம்புற! அப்படித்தானே? அது என்னான்னு சொல்லு!
இ… இல்லடி… அது வ… வந்து.
சரி இப்பச் சொல்ல வேணாம். ஒருவேளை, நீ சொன்னது மாதிரி, தாத்தா நடந்ததுக்கப்புறம், அவிங்க ஏமாத்ததான் நினைச்சாங்கன்னு தெரிஞ்சா, அதுக்கப்புறம் நீ சொல்லு! ஓகே?!
ஓகேடி!
அப்ப, நான் நினைச்ச மாதிரியே, உண்மையாலுமே, முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலை, அப்படித்தானே?!
அக்காவின் கிடுக்கிப்புடி கேள்வியில் லாவண்யா திணறினாள்…

அக்காவோ புன்னகையுடன் சொன்னாள். சரி, நான் நினைச்சது சரியான்னு தெரிஞ்சிக்கதான் அப்படி கேட்டேன். நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். அப்புறமாச் சொல்லு.
அவர்களுக்கிடையேயான புரிதல், எனக்கும், தாத்தாவுக்கும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இப்படி ஒரு நட்பிற்காக, அக்கா ஆரம்பத்தில் இருந்து, அவள் துணை நிற்பது, மிகவும் சரியே என்று தோன்றியது.
திட்டப்படியே, அவர்கள் ஊரில் இருந்து வந்தவுடன், தாத்தா கொஞ்சம் பிடி கொடுக்காமல் இருந்து, ஒரு 5 நாட்கள் கழித்து, அவர்களிடம் லாவண்யா சொன்ன படியே சொன்னார்.
நீங்க, அவிங்ககிட்ட அன்பா முதல்ல நடந்துக்கோங்க என்று சொன்ன போது கூட லேசாக கடுப்படைந்தாலும், அமைதியாக இருந்தவர்கள், மதன் இங்கதான் படிப்பான், ஹைதராபாத் போக மாட்டான் என்று சொன்னவுடன் வெளிப்படையாக கோபமடைந்தார்கள்.
கோபத்துடன், நீங்கதான் அவிங்களைக் கெடுக்குறீங்க. உங்க காலத்துக்கப்புறம் அவிங்களுக்கு யாரும் துணை வேணாமா? இப்படியே இருங்க என்று கத்தி விட்டுச் சென்றனர்.
முன்பாயிருந்திருந்தால், தாத்தா அதிர்ச்சியடைந்திருப்பாரோ என்னமோ, லாவண்யாவின் பேச்சிலேயே ஓரளவு சுதாரித்திருந்தவர், இவர்களின் கோபத்தால் அதிர்ச்சியடையவில்லை.
நான் கூட நீங்க திருந்தியிருப்பீங்களோன்னு நினைச்சேன். ஆனா, அப்படியில்லைன்னு என்கிட்ட காமிச்சதுக்காக தேங்க்ஸ் என்று புன்னகையுடன் அவர்களைப் பார்த்துச் சொன்னார். தங்கள் குட்டு வெளிப்பட்ட அதிர்ச்சியில், அவர்கள் கோவத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.
தாத்தா வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் சொன்னார். சொல்லி விட்டு, லாவண்யாவிடம்,
தாங்க்ஸ் மா! நீ மட்டும் சொல்லாட்டி, நாங்க ஏமாந்துதான் போயிருப்போம். உனக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.
என்ன தாத்தா பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு என்று அவரை ஆறுதல் படுத்தினாள் லாவண்யா!
அக்கா அவளையே பார்த்தாள். சரி, இப்பச் சொல்லு, நீ சொல்லாம விட்ட கதையை? அவிங்க ஏன் இப்படி நடந்துகிட்டாங்க?
ஒரு பெருமூச்சை வெளியிட்ட லாவண்யா அமைதியாகச் சொன்னாள். மதன் தான் காரணம்!
எனக்கே அதிர்ச்சியாய் இருந்தது!
நானா?
ஆமா! மதனுக்கு 18 வயசு முடியப் போகுது. இனி ஆஃபிஸ் வரப் போறேன்னு சொன்னது அவங்களுக்குப் பயத்தை கொடுத்திருக்கும். மதனுக்கு, அவிங்க ரெண்டு பேர் மேலியும் பயங்கரக் கோபம்னு எல்லாருக்கும் தெரியும்.
அப்படியிருக்கிறப்ப. ஆஃபிஸ் முழுக்க அவன் கண்ட்ரோலுக்கு போயிட்டா, அப்புறம் அவிங்களால எதையும் அனுபவிக்க முடியாதில்ல? அதான்!
அவிங்க ப்ளான் ஒர்க் அவுட் ஆகியிருந்தா, மதனால டெய்லி ஆஃபிஸ் வர முடியாது. இன்னும் 6 வருஷத்துக்கு அவிங்க கண்ட்ரோல். அதுக்குள்ள எல்லார்கிட்டயும் கொஞ்சம் நல்ல பேரு எடுத்துட்டா, அப்புறம் ஆயுசுக்கும் பிரச்சினையில்லைல்ல? அதான்!
இது என் டவுட்டாத்தான் இருந்தது. முழுக்கத் தெரியாம சொல்ல வேணாமேன்னு நினைச்சேன். ப்ச்.. என் சந்தேகம் உண்மையாகிடுச்சி!
அதுக்கு ஏம்மா இவ்ளோ ஃபீல் பண்ற? விடும்மா!
இல்ல தாத்தா, எனக்குதான் அப்பா அம்மா இருந்தும் பாசம் கிடக்கலை. அவிங்க மேல டவுட்டா இருந்தாலும், ஒரு வேளை உண்மையாலுமே திருந்தியிருந்தா, இனி உங்களுக்கு அந்தப் பாசம் கிடைக்குமில்லன்னு ஆசையா இருந்தேன். அது நடக்கலைன்னு வருத்தம் அதான்!
சரி விடுடி. தப்பு பண்ணவிங்க கூட ஃபீல் பண்ணலை. நீ என்னமோ இவ்ளோ ஃபீல் பண்ணிகிட்டு இருக்க? அது சரி, எப்ப இருந்துடி இவ்ளோ புத்திசாலித்தனமா யோசிக்க ஆரம்பிச்ச? உண்மையாலுமே புத்திசாலி ஆயிட்டியா என்ன என்று கிண்டல் செய்தாள் அக்கா!
ஏய், பேசிக்காவே நான் புத்திசாலிதாண்டி! உன் கூட சேந்ததுக்கப்புறம்தான், கொஞ்சம் மழுங்கிடுச்சி என்று பதிலுக்கு கிண்டல் செய்தாலும், பின் சீரியசாகச் சொன்னாள்.

நீங்க பிரச்சினைக்கு உள்ள இருந்து யோசிச்சீங்கடி! நான் வெளிய இருந்து யோசிச்சேன். அவ்ளோதான் வித்தியாசம். எனக்கு எத்தனையோ குழப்பமான சமயத்துல, நீ கரெக்ட்டான ஐடியா கொடுத்ததில்லையா? அது மாதிரிதான் என்றாள்!
லாவண்யா பேச்சு, அவள் மேலிருந்த அன்பு, மதிப்பு, மரியாதை எல்லாவ்ற்றையும் அனைவரிடத்திலும் கூட்டியிருந்தது.
லாவண்யா பேச்சு, அவள் மேலிருந்த அன்பு, மதிப்பு, மரியாதை எல்லாவ்ற்றையும் அனைவரிடத்திலும் கூட்டியிருந்தது.
தாத்தாதான் கேட்டார், எப்பிடியும் எங்களுக்கு இந்த விஷயம் தோணலைல்ல?! அதுவும், நீ, உன் ஃபிரண்டைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருக்குறது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. உங்களுக்குள்ள இத்தனை வருஷப் பழக்கம் இருந்திருக்கு.
ஆனா, என்னைப் பத்தியும், மதனைப் பத்தியும் கூட சரியா தெரிஞ்சி வெச்சிருக்கியே. அது பெரிய விஷயம்தாம்மா என்று பாராட்டினார்.
அப்படில்லாம் இல்ல தாத்தா. யாருன்னு தெரியாமியே என் மேல பாசம் காமிச்ச ஆளு நீங்க. எனக்காக மதன் கிட்ட கூட சண்டைக்கு போனிங்க. அவ்ளோ நல்லவரு தாத்தா நீங்க. அதுனால உங்களைப் புரிஞ்சிக்கிறது ஈசி தாத்தா என்று சிரித்தாள் லாவண்யா!
அக்காதான் சீண்டினாள். சரி, தாத்தாவை ஈசியா புரிஞ்சிக்கலாம். மதனை எப்படி புரிஞ்சிகிட்ட? ஆரம்பத்துல என்கிட்ட எவ்ளோ கோபமா பேசியிருக்கான் தெரியுமா? ஆனா, நீ அவன்கிட்ட அதிகம் பேசுனதே இல்லையே? அப்புறம் எப்படி….?
லாவண்யா படு அலட்சியாமாய் சொன்னாள்.


யாரு அவன் கோபப்படுவானா? அதெல்லாம் சும்மா! தாத்தாவைப் புரிஞ்சிக்கிறது கூட கொஞ்சம் சிரமமா இருந்தது. மதன்லாம் ஒண்ணுமே இல்லை. அவன் கோபம் வர்ற மாதிரி நடிப்பான். அவ்ளோதான். ஆனா, உள்ளுக்குள்ள கோவமே இருக்காது.
உங்க எல்லார் மேலியும் அவனுக்கு பாசம் அதிகம். ஆனா வெளிக்காட்டிக்க மாட்டான். இவன் கோபம் எல்லாம், மத்தவிங்க தன்னை சாதாரணமா நினைச்சிடக் கூடாது, யாரும் ஏமாத்த முயற்சி பண்ணக் கூடாதுன்னு போட்டுகிட்ட முகமூடி என்றாள்.
அவளுடைய கணிப்பு அனைவருக்கும் வியப்பாய் இருந்தது. இவள் இந்தளவு கணிப்பாளா என்று!
எனக்கோ, அவள் என்னைச் சரியாகக் கணித்திருந்தது பெரிய வியப்பாய் இருந்தாலும், வழக்கம் போல, எனது முகமூடியாக, கோபமாக அவளை முறைத்தேன்.
வேதாளம் முருங்கைமரம் ஏறுது. நான் எஸ்கேப்பா என்று அவள், என் அக்காவை இழுத்துக் கொண்டு ஓடினாள்.
அவளுடைய செய்கை, அக்கறை, அன்பு எல்லாம் என் மனதில் இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. லாவண்யா மேல் இருந்த அந்த இனம் புரியாத உணர்வு பெருகி, காதலாக மாறி நின்றது. எந்தத் தருணத்தில், எப்படி மாறியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அது மாறியதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் செய்த ஒரே தவறு, வெண்ணை திரண்டு வரும் முன், பானையை உடைத்தது போல், அவளுக்குள் நான் முழுதும் நிரம்பும் முன், என் காதலை, அதுவும் சின்ன வயதில் சொன்னதுதான். நான் இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்.
எந்த முன் யோசனையும் இன்றி, ஜோடனையும் இன்றி, மிக கேசுவலாக நான் என் காதலைச் சொன்னேன்.
நான், அவளுடைய கல்லூரியில், இஞ்சினியரிங் சேருவதற்க்கு முதல் நாள், கிளம்பும் சமயத்தில், வீட்டுத் தோட்டத்தில் இருந்த என்னிடம், அவள் வந்து வாழ்த்துக்கள், நாளைக்கு ஃபர்ஸ்ட் டே! என்றாள்.
இதற்கு இடையிலும், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளாவிடினும், அவள் என் கோபத்தை எப்பொழுதும் பொருட்படுத்தியதே இல்லை!
அவளையேப் பார்த்தவன், இப்ப எனக்கு 18 வயசு ஆகிடுச்சு! இனி நான் சொத்து விஷயத்துலியோ, வேறெந்த விஷயத்துலியும் டெசிஷன் எடுக்கலாமில்ல?
சம்பந்தமேயில்லாமல், இப்பொழுது நான் இதை சொல்லுவதைக் கேட்டு குழம்பிய அவள், ம்ம்ம் எடுக்கலாம். என்ன, இனி நான் வீட்டுக்கு வரக் கூடாதா என்று அலட்சியமாகக் கேட்டாள்.
அவளுக்குத் தெரியும், நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என்று!
அதெல்லாம் இல்லை. இது வேற விஷயம்.
வேற என்ன விஷயம்?
ஐ லவ் யூ!
வாட்…?
ஐ லவ் யூ?
அதிர்ச்சியில், பல நொடிகள் அமைதியாக இருந்தவள், பின் கோபமாக சிறிது நேரம் கண்டபடி திட்டினாள்.
பின், உன் வயசு என்ன, என் வயசு என்ன, நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ. இந்தச் சமூகம் என்ன நினைக்கும். உன் தாத்தா என்ன நினைப்பாரு? ஏன், உன் அப்பாவே, இதுக்குதான், டெய்லி என் வீட்டுக்கு வந்தியான்னு கேப்பாரு. தவிர, உனக்கு இப்பதான் 18.
இந்த வயசுல இந்த மாதிரில்லாம் தோணத்தான் செய்யும். இது வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான். அதுனால, இதை மறந்துட்டு, ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு. என்று அட்வைஸ் வேறு செய்தாள்.
பின், உன் வயசு என்ன, என் வயசு என்ன, நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ. இந்தச் சமூகம் என்ன நினைக்கும். உன் தாத்தா என்ன நினைப்பாரு? ஏன், உன் அப்பாவே, இதுக்குதான், டெய்லி என் வீட்டுக்கு வந்தியான்னு கேப்பாரு. தவிர, உனக்கு இப்பதான் 18.
இந்த வயசுல இந்த மாதிரில்லாம் தோணத்தான் செய்யும். இது வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான். அதுனால, இதை மறந்துட்டு, ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு. என்று அட்வைஸ் வேறு செய்தாள்.
அமைதியாக எல்லாவற்றையும் கேட்டவன், பின் அவள் கிளம்பும் போது சொன்னேன். எனக்கு வயசு வித்தியாசம்? எனக்கு அது பெரிய விஷயமா தெரியலை. தாத்தா, கண்டிப்பா, என் விருப்பத்துக்கு எதிர்ப்பு சொல்ல மாட்டாரு. அதுவும் நீ அப்படிங்கிறப்ப, வாய்ப்பேயில்லை. என் அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ண, என் அப்பவோ, எனக்கு பெருசா எதுவும் செய்யாத இந்த சமூகமோ, என்ன சொல்லும்ங்கிற கவலை எனக்கு கிடையாது. எனக்கு வேண்டியது உன் விருப்பம் மட்டும்தான்.

உனக்கு வேணா, எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் கவலை இல்லாம இருக்கலாம். ஆனா, என்னால அப்டி இருக்க முடியாது. எனக்கு இந்த சமூகம் என்ன சொல்லும்ங்கிற கவலை இருக்கு. அதுனால, இனி என்கிட்ட இப்டி பேசாத! குட் பை!
அதன் பின், இரண்டு நாட்கள் அவள் என் வீட்டுக்கே வரவில்லை. அக்கா வற்புறுத்தியும், சாக்கு போக்கு சொல்லி தவிர்த்தாள்.
மூன்றாம் நாள், அவளைத் தனியாக சந்தித்த நான், வற்புறுத்தி காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
என்னையும், அவளையும் ஒன்றாகப் பார்த்த என் அக்காவுக்கோ, பெருத்த ஆச்சரியம். தாத்தாவும் வீட்டிலில்லை.
பின் அக்காவிடம் சொன்னேன். உன் ஃபிரண்டு வீட்டுக்கு வராததுக்கு காரணம் நாந்தான். ஏன்னா, ரெண்டு நாள் முன்னாடி, நான் அவகிட்ட ல… லவ் ப்ரபோஸ் பண்ணேன். அதுனாலத்தான் வர மாட்டேங்கிறா என்றேன்.
என்னுடைய தடாலடிப் பேச்சில், இருவருமே வாய் பிளந்து நின்றனர். பின் லாவண்யாவிடம் திரும்பி,
இங்க பாரு, நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணது நம்ம ரெண்டு பேரு சம்பந்தப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்த வரை, என் முடிவுல மாற்றம் இல்லை. அதை ஏத்துக்குறதும், ஏத்துக்காததும் உன் விருப்பம். நான் உன்னை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணேனா என்ன?
நான் லவ்வைச் சொன்னேன்னு, நீ, இவளோட ஃபிரண்ட்ஷிப்பை கட் பண்ணாத? ஓகே! என்று சொன்னவன், அக்காவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றேன்.
அப்பொழுதும் என் நேர்மை அவளை பாதித்தது போலும். அக்கா வேறு அவளை நன்கு திட்டினாள். ஏண்டி என்கிட்ட சொல்லலை? இதுனாலத்தான் ரெண்டு நாளா அவாய்ட் பண்ணியா? ம்ம்?
சாரிடி! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. என்னால, உங்களுக்குள்ள சண்டை வர்றதை நான் விரும்பலை. அதான்…
அதுக்காக, நீயா உன்னை பிரிச்சிக்குவியா என்று நன்கு திட்டினாள்… திட்டி முடித்த என் அக்காவோ, லாவண்யாவையே ஆழமாகப் பார்த்து சொன்னாள்…
லவ்வை சொன்னவனும், நீயும் நானும் பிரியக் கூடாதுன்னு ஃபீல் பண்ணிட்டு போறான். வேணாம்னு சொன்ன நீயும், நாங்க பிரிஞ்சிடக் கூடாதுன்னு ஃபீல் பண்ற! இப்படி பல விஷயங்கள்ல, நீங்க ரெண்டு பேரும் சரியான ஜோடிதாண்டி என்றாள்.
யதேச்சையாக இதைக் கேட்ட எனக்கும் அதிலிருந்த உண்மை மட்டுமல்ல, இன்னொன்றும் உறைத்தது. அது,
இன்னமும் அவள், எனக்கு பிடிக்கலைன்னு சொல்லவில்லை. சமூகம் என்ன சொல்லும்னு தான் பயப்படுறா என்ற உண்மைதான் அது!
No comments:
Post a Comment