CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 39


அதன் பின், அவள் மீண்டும் எப்பொழுதும் போல் வர ஆரம்பித்தாள். ஆனால், அவள் என்னிடமோ, நான் அவளிடமோ எதுவும் பேசுவதில்லை. ஆனால், ஒருவரைப் பற்றி இன்னொருவர், இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.
என் மனதில் வந்த காதலைச் சொன்ன எனக்கு, அவள் மனதில் காதல் வந்திருக்குமா என்று யோசித்துப் பார்க்கத் தோணவில்லை. அவள் பிடிக்கவில்லை என்று சொல்லாவிட்டாலும், அவள் சொன்ன காரணங்கள் எனக்கு மொக்கையாக இருந்தாலும், அவள் மனதில் நான் இன்னும் முழுதாக வரவில்லை என்ற உண்மை எனக்கு உறைத்தது. 
இப்போதைக்கு இதைப் பற்றி அதிகம் பேசாமல், எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது என்று எனக்குப் பட்டது. தவிர என்ன இருந்தாலும், என்னை வேண்டாம் என்று சொன்னது, எனது ஈகோவை கொஞ்சம் சீண்டியிருந்தது. நான் அறியாத ஒரு விஷயம் இருந்தது. அது,
இதுவரை, காதலைப் பற்றிய சிந்தனையே இல்லாதிருந்த லாவண்யாவிற்கு, என்னுடைய காதல் ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது. அவள் காதலை மறுத்தாலும், இவன் ஏன் ரெண்டு வயசு சின்னவனாப் போனான் என்ற எண்ணத்தை அவள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு கொடுத்த பதில் உண்மையாகவுமே சரிதானா என்ற குழப்பத்தையும் சலனத்தையும் அவள் மனதில் ஏற்படுத்தியிருந்ததுதான்.
மதனின் கெட்ட நேரம், வேறு யாராவதாக இருந்திருந்தால், லாவண்யா உடனே அவள் தன்னுடைய ஃபிரண்டிடம், மனம் விட்டுப் பேசியிருப்பாள். ஆனால், சொன்னது மதன் என்பதால், அவளால், தன் உயிர் தோழியுடனும் மனதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
இந்தக் குழப்பங்களும், சலனங்களும், அவள் கண்களில் அலைபாய்தலை கொண்டு வந்தது. மதனும், லாவண்யாவும் அவர்களையறியாமல், மற்றவரை ஆராயத் தொடங்கினர். கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். சமயங்களில் ஒருவர் செயலை இன்னொருவர் ரசிக்கவும் தொடங்கினர். ஆனால் இவை எல்லாவற்றையும், இந்த இருவர் மீதும் ஆழமான அன்பை வைத்திருக்கும், அந்த மூன்றாவது ஜீவன் மட்டும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தது. 
மாதங்கள் இப்படியே ஓடின. இடையில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மதன் கல்லூரியில் சேர்ந்தான். சொன்ன படி நிறுவனத்தில் தாத்தாவிற்கு உதவி செய்ய ஆரம்பித்தான். சமயங்களில், அவனுடைய புத்திசாலித்தனத்தை அவன் இல்லாத சமயத்தில் தாத்தா சிலாகித்து பேசும் போது, லாவண்யா, ஏனோ தானே சாதித்தது போல் பெருமிதம் கொள்வாள். 
                                 
மதன் கல்லூரியில் சேர்ந்து முதல் வருடம் முடியப் போகிறது. கல்லூரியில் அவன் எந்த இடத்திலும் அவனது பணத்தைக் காட்டியதில்லை. அவனுடைய படிப்பு, விளையாட்டில் திறமை, தெளிவான சிந்தனை போன்றவற்றால் அதற்குள்ளாகவே, ஆசிரியர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும், பெரிய பெயரை வாங்கியிருந்தான். அது அவனுக்கென்று பல பெண் ரசிகைகளை உருவாக்கியிருந்தது. அவனுடைய முதிர்ச்சியான பேச்சும், அப்ரோச்சும், வாட்ட சாட்டமான ஆத்லடிக் உடம்பும், அவன் அக்காவின் வகுப்பில் கூட, சில பெண் ரசிகைகளை உருவாக்கியிருந்தது. 
பெண்களை அதிகம் பிடிக்காத அவனுக்கு, பெண்கள் வலிய வந்து பேசும் போது, அவர்களிடம் வழியாமல், விஷயத்திற்காக மட்டும் பேசும், அவன் பழக்க வழக்கம் வேறு, இன்னும் அவனுடைய புகழை கூட்டியிருந்தது. 
மதனின் அக்காவின் நண்பர்கள் சிலருக்கு மட்டும், அவளுடைய தம்பி மதன் என்பது தெரியும். அதனால் அவளிடம் வேண்டுமென்றே சிலர், உன் தம்பியை நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன் என்பார்கள். லாவண்யாவைச் சீண்டுவதற்காகவே, அவன் வயசுல ரெண்டு வயசு சின்னவனாச்சே பரவாயில்லையா என்று அவனது அக்காவும் வம்பு வளர்ப்பாள்.
மூணு வயசு வித்தியாசம் வரனுமே? அவன் 1st இயர் தானே?
1st இயர்தான். ஆனா, அவன் ஸ்கூல் சேந்ததே கொஞ்சம் லேட்டு. அதுனால ரெண்டு வயசுதான் சின்னவன்.
அவன் 5 வயசு சின்னவன்னாலும் கவலை இல்லை. எங்களுக்கு ஓகே! தவிர ஆளு அப்படி ஒண்ணும் சின்னப் பையன் மாதிரில்லாம் இல்லை!
ஏய், இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு கவலை இல்லையா உங்களுக்கு? அக்கா வேண்டுமென்றே சீண்டினாள்.
அது என்ன கருமத்தையோ சொல்லிட்டு போகுது! அது எதுக்கு எங்களுக்கு? நீ பேசிப் பாரேன், உன் தம்பிகிட்ட!
சனியனுங்களா, தம்பி மூலமா அக்காவுக்கு லெட்டர் கொடுத்த கதையைக் கேட்டிருக்கேன். இந்த உலகத்துலியே, அக்கா மூலமா, தம்பிக்கு லவ் ப்ரபோஸ் பண்ற பொண்ணுங்க நீங்கதாண்டி! அதுவும் கூட்டமா வேற வந்து சொல்லுறீங்க. வெக்கமே இல்லீயா உங்களுக்கு? 
ஆம்பிளைகிட்டதாண்டி பொண்ணுங்க வெக்கப்படனும். நீ எதுக்குடி பொண்ணுகிட்டயே வெக்கப்படச் சொல்லுற? அவளா நீயி?
ஏய் ச்சீ! என்னைக் கட்டிக்கிறவரைத்தான், என் தம்பி மாமான்னு கூப்பிடனும். நீங்க என்னான்னா, என்னையே, என் தம்பிக்கு மாமாவாக்குறீங்க?
ஏய் ஓவர் சீன் போடாத? எங்களுக்காக உன் தம்பிகிட்ட பேசப் போறியா இல்லையா?
ஏய் போங்கடி! என்னதான், நான், என் தம்பிகிட்ட அதிகம் பேச மாட்டேன்னாலும், தெரிஞ்சே அவன் வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன். உங்கள்ல ஒருத்தியை என் தம்பிக்கு கட்டி வெச்சு, அவன் வாழ்க்கையை நான் நாசமாக்கனுமா? அதுக்கு அவனை காலத்துக்கும் பிரம்மச்சாரியாவே இருக்கச் சொல்லிடுவேன்…
ஏய்… ஓவரா பேசாதடி! எங்கள்ல ஒருத்தர் கூடவா உன் தம்பிக்கு மேட்ச் இல்லை. சும்மா ரொம்பத்தான்…
ஏய், அப்படி நம்ம கிளாஸ்ல இருந்துதான் ஒருத்தரை கட்டி வெக்கனும்னா…… என்று சொன்னவள் ஓரக்கண்ணால் லாவண்யாவைப் பார்த்தாள்.
இது வரை தன் தோழிகள் மதனைப் பற்றி சொல்லியதால் பொறாமை கொண்டிருந்த, அதற்கு பதிலளித்த அவன் அக்காவின் பேச்சுக்களால் கோபம் கொண்டிருந்த லாவண்யா, இப்போது அவளது சீண்டல் பார்வையில் படபடத்துப் போனாள்.
அவளைச் அதிகம் சீண்ட விரும்பாதவள், என் தம்பி யாரையாவது லவ் பண்ணி, அந்தப் பொண்ணும் திரும்ப லவ் பண்ணா, எனக்கு வயசு எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லைப்பா என்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
அதன் பின் சில நாட்கள் கழித்து, லாவண்யாவிற்கு வேறொரு பிரச்சினை வந்தது. அது, அவளுடைய வகுப்புத் தோழன் விஜய், லாவண்யாவிடம் ப்ரபோஸ் பண்ணியதுதான். வெறும் ப்ரபோஸ் அல்ல அது. தன்னை கண்டிப்பாக திரும்பி லவ் பண்ணியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதுதான், அவளுடைய பிரச்சினை.
ஏற்கனவே, அவன் தொடர்ந்து ஃபாலோ செய்வதும், அவளிடம் வழிவதும் என்று இருக்கும் போதே, அவன் எண்ணம் லாவண்யாவிற்கும், மதனின் அக்காவிற்கும் நன்கு தெரிந்தது. அதனாலேயே கொஞ்ச நாட்களாக அவனை அவாய்ட் செய்து வந்தாள் லாவண்யா. 
அவனாக புரிந்து விலகிக் கொள்வான் என்று நினைக்கையில், திடீரென வந்து லவ்வைச் சொன்னதும், திரும்ப லவ் பண்ண வேண்டும் என்றதும் அவளுக்கு கடுப்பானது. 
அவனை மீண்டும் அவாய்ட் செய்கையில், இரண்டு நாட்கள் கழித்து, அவன் நண்பன் ரமேஷூடன் வந்தவன், ஒழுங்கா லவ் பண்ணு, இல்லை ஆசிட் அடிக்கவும் தயங்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்றான்.
அதில் மிகவும் பயந்து போனாள் லாவண்யா! அதை அப்படியே மதனிடம், அவனுடைய அக்கா, லாவண்யா சொல்லக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல், அவள் இல்லாத போது சொல்லிவிட்டாள். 
இதுக்கு எதுக்கு பயப்படுறா அவ? அவன் வீடு தெரியுமில்ல? நேரா, அவிங்க அம்மாகிட்ட போயி, உங்க புள்ளை இப்படி சொல்றாரு ஆண்ட்டி, நான் அவரை லவ் பண்ணட்டுமா, இல்ல ஆசிட் அடிக்க மூஞ்சியைக் காமிக்கட்டுமான்னு கேக்கச் சொல்லு. அவன் ஒரு ஆளுன்னு, பயப்படுறா இவ, என்கிட்ட மட்டும்தான் வீராப்பெல்லாம்… என்று முணுமுணுத்து விட்டு சென்றான் மதன். 
அதே சமயம், இந்தச் சந்தர்ப்பத்தை விடக் கூடாது என்று நினைத்த அவன் அக்காவோ, லாவண்யாவிடம்,
ஏண்டி அந்த விஜய் ஒன்னும் சின்னப் பையன் இல்லீல்ல? ஓரளவு நல்லாதானே இருக்கான். என்னா அரியர் வெச்சிருக்கான் அவ்ளோதானே? எப்டியும் உங்க வீட்ல, ஒரு நல்ல மாப்பிள்ளையை பாக்க மாட்டாங்க. அப்ப, பேசாம இந்த விஜய்யை லவ் பண்ண வேண்டியதுதானே என்று சீண்டினாள்.
ஏய் போடி! நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு பாத்தா, அவனுக்கு பேசுற? 
உனக்காகத்தாண்டி பேசுறேன். அவனுக்கென்ன குறை? உன்னை விட வயசு கம்மியா? இல்லை கல்யாணம் பண்ணா, இந்த சொசைட்டிதான் ஏதாவது சொல்லுமா? அப்புறம் என்ன? அதுதானே உன் கவலை எப்பவுமே?
லாவண்யா முறைத்தாள். 
ம்க்கும்.. எங்ககிட்டதான் இந்த முறைப்பெல்லாம். அந்த விஜய்கிட்டன்னா பம்முவ! உனக்கெல்லாம், விஜய்தான் கரெக்ட்டு. புடிச்சா லவ் பண்ணு, புடிக்கலைன்னா, புடிக்கிற வரைக்கும் காத்திருப்பேன்னு சொல்றவனை எல்லாம் கண்டுக்க மாட்டீங்க! என்னமோ பண்ணு போ! என்று சென்று விட்டாள்.
ஆனால், அவனுடைய அக்காவிற்கு தெரியும். மதனின் காதல் லாவண்யாவின் மனதில் வேரூன்றுவதற்கான வாய்ப்பை அவள் ஏற்படுத்தி விட்டாள் என்று!
ஹாய், உங்கள்ல விஜய் யாரு? எனக்கு யார் விஜய் என்று தெரியும், இருந்தும் கேட்டேன்!
டேய், நீ மதன் தானே? ஃபர்ஸ்ட் இயர், ஜூனியர் இல்ல? அவனுடைய நண்பன் ரமேஷ், என்னை பதில் கேள்வி கேட்டான்!
ஆமா, ஃபர்ஸ்ட் இயர் தான்! நீங்கதான் விஜய்யா?
இல்லை, இவந்தான் விஜய். என்ன விஷயம்?
ஓ இவரா? ஹாய்!
எஸ், நான்தான் விஜய்! என்ன விஷயம்?
உங்க சிஸ்டர், ஹேமா, ____ காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் BSc படிக்கிறாங்கல்ல?
ஆமா, உனக்கு எப்படி அது தெரியும்?
இல்ல, நான் அவிங்களை லவ் பண்றேன்! அவிங்ககிட்ட போய் லவ்வைச் சொன்னா, எப்பிடியும் உங்ககிட்ட சொல்லலாம் இல்லையா? அதான் நேரா உங்ககிட்டயே சொல்லிடலாம்னு! நீங்க வேணா உங்க சிஸ்டர்கிட்ட பேசுறீங்களா?
விஜய் மட்டுமல்ல, அவன் நண்பர்கள் இருவரும் கூட கோபம் அடைந்திருந்தனர்! விஜய் என்னைப் பிடித்து கீழே தள்ளினான்!
டேய், என்ன திமிரா? யார்கிட்ட விளையாடுற?
மெல்ல எழுந்தேன். அவனைப் பார்த்து சிரித்தேன்!
என்ன சீனியர், அமைதியா லவ்வைச் சொன்னதுக்கே இவ்ளோ கோவப்படுறீங்க?
அவன் நண்பன், ரமேஷ் சொன்னான், டேய், இன்னிக்கு சாவப் போற நீ? அடி வாங்கி செத்துடாத, ஓடிடு!
நான் விஜய் தங்கச்சியை லவ் பண்றேன்! அதை அவருகிட்ட சொல்றேன். இடையில நீங்க யாரு? ஓ, மாமன் மச்சான்னு, விளையாட்டுக்குப் பேசிக்கறீங்கன்னு நினைச்சேன்! இல்லையா? உண்மையாலுமேவா?
இப்போது ரமேஷ் கோபம் அடைந்திருந்தான்!
டேய், என்று என் சட்டையை இறுகப் பற்றினான்!
உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்ன்னா, ஒழுங்கா தள்ளி நில்லுங்க, இல்லாட்டி கேள்வி வரத்தான் செய்யும்!
இப்போது அவன் அடிக்க கை ஓங்கியிருந்தான்! 
நான் அவன் கையைப் பிடித்து நிறுத்தினேன்! இதுவரையிலான எனது உடற்பயிற்சிகளும், நான் சென்றிருந்த கராத்தே கிளாஸ்களும், இதைப் பற்றி எதுவுமே தெரியாத இவர்களை, என் முன் தூசு போல் காட்டியது!
இருந்தும் சொன்னேன், நீங்க என்னை 10 அடி அடிச்சாலும் எனக்கு அசிங்கமில்லை! ஆனா, நான் திருப்பி ரெண்டு அடி அடிச்சாலும், காலேஜ்ல உங்களுக்குதான் அசிங்கம்! ஏன்னா, நீங்க சீனியர், நான் ஜீனியர்! 
தவிர, நான் கராத்தே, மார்ஷல் ஆர்ட்ஸ்லாம் போயிருக்கேன், நிமிஷத்துல உங்களை என்னால அடிச்சிட முடியும். அதுனால கொஞ்சம் யோசிச்சி கை வைங்க!
எனது தைரியமும், தெனாவெட்டான பேச்சும் அவனை கொஞ்சம் யோசிக்க வைத்தது! தவிர தூரத்தில் இருந்து சிலர் இதை கவனிப்பது போலும் இருந்தது! இது தன்மானப் பிரச்சினையாச்சே?
ஆனாலும், விஜய் கொலை வெறியில் இருந்தான்! என்னா மிரட்டுறியா? அடிச்சிட்டு போயிடுவியா? எங்கன்னாலும், இங்கதான் வந்தாகனும்! சீனியர்ஸ் மேல கை வெச்சிட்டு தைரியமா இருந்துடுவியா?
ஹலோ, நான் அடிக்கல்லாம் வரலை. லவ்வைச் சொல்லத்தான் வந்தேன். நீங்கதான் சண்டைக்கு வர்றீங்க! என்னை அடிக்க வந்தா, நான் ஒண்ணும் வேடிக்கை பாத்துட்டிருக்க மாட்டேன்! பிரிச்சு மேஞ்சுடுவேன்!
இப்போதுதான், அவனுடைய இன்னொரு நண்பன் ப்ரேம் வாய் திறந்தான்? டேய், நானும் பாக்குறேன், ஓவரா போயிட்டிருக்க! என்ன நினைச்சிட்டிருக்க? உனக்கு கராத்தே தெரியும்னு திமிரா? பாத்துரலாமா?
அந்தக் கூட்டத்திலேயே நல்லவன் ப்ரேம்தான்! அதனால், அவனுக்குரிய மரியாதையை கொடுக்க நினைத்தேன்! 
ஏன் சீனியர், இவிங்க சிஸ்டர்ன்னா, லவ் பண்றேன்னு சொல்றது கூட கொலைக் குத்தம்! ஆனா, இன்னொரு பொண்ணுன்னா, லவ் பண்ணாட்டி, ஆசிட் அடிச்சிருவேன்னு கூட இவிங்க மிரட்டலாம் இல்லை?
இப்போதுதான் அவர்களுக்கு ஏதோ விஷயம் புரிவது போல் இருந்தது! ஏற்கனவே, ப்ரேம், அதற்காக விஜய்யை திட்டியிருந்தான்.
இருந்தும் இப்போதும், ரமேஷ் திமிறினான்! டேய், லாவண்யாகிட்ட லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது?
ப்ரேமை பார்த்துக் கொண்டிருந்தவன், அவனை முறைத்தேன். விஜய் தங்கச்சிகிட்ட, நான் லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது? ப்ரண்டு தங்கச்சிக்காக நீ வரலாம், அக்காவோட ஃப்ரண்டுக்காக நான் வரக் கூடாதா?
நான் இவன் தங்கச்சியை லவ் பண்றேன்னு சொன்னாலே உங்களுக்குல்லாம் கோவம் வரும்? ஆனா, இன்னொரு பொண்ணுகிட்ட, லவ் பண்ணாட்டி, ஆசிட் அடிப்பேன்னு சொல்றதுக்கு, உங்களுக்குல்லாம் நாக்கு கூசலை இல்லை?
ப்ரெண்டு லவ் பண்றேன்னு சொன்னா, அதுக்கு ஹெல்ப் பண்ணு! அவன் ஆசிட் அடிப்பேன்னு சொன்னப்ப, நீயும் வேடிக்கை பாத்துட்டுதானே நின்னிட்டிருந்த? அசிங்கமா இல்ல? இதுக்கு பேருதான் ஃப்ரண்ட்ஷிப்பா?
என் கேள்வி அவர்களை அமைதியாக்கியிருந்தது! ப்ரேமுக்கும் அது சரியென்று தோன்றியதால், என்னைத் தடுக்கவில்லை! இருந்தும் நான் தொடர்ந்து திட்டுவதால், என்னை தடுக்கக் கேட்டான்!
அப்படின்னா, இவன் லவ் பண்ணக் கூடாதா மதன்?
நான் ப்ரேமை பார்த்தேன். என்ன சீனியர் பேசுறீங்க? நான் என்ன, லவ் பண்ண வேணாம்னு சொன்னேனா? போய் லவ்வைச் சொல்லட்டும்! அவ ஒத்துகிட்டா, லவ் பண்ணட்டும், இல்லாட்டி மூடிட்டு இருக்கனும்! 
இல்ல, அவ மேல தீராத லவ்வு இருக்குன்னா, அவளை ஹர்ட் பண்ணாம, தொடர்ந்து லவ்வைச் சொல்லட்டும்! கடைசி வரைக்கும் அவ ஒத்துக்காட்டி, கம்முனு விட்டுடனும். அதை விட்டுட்டு, லவ் பண்னனும் இல்லாட்டி, ஆசிட் அடிக்கனும்னு சொல்றதுக்கு பேரு லவ்வா?
நான் கடுங்கோபத்தில் இருந்தேன். என் கோபத்தில் இருந்த நியாயம் ப்ரேமுக்கும் புரிந்தது!
நான் இன்னும் பேசினேன். இவன் என்ன பெரிய புடுங்கியா? கைல காசு பெருசா இருக்கா? இல்லை ஏதாவது கேம்ல ப்ளேயரா? இல்ல படிப்புல பெரிய ஆளா? இல்ல, ஏதாவது ஆர்ட் அது இதுன்னு திறமைசாலியா? ஃபைனல் இயர் முடிச்சிட்டு என்ன புடுங்கப் போறான்? கையில வேலை இருக்கா? இவன் லவ்வைச் சொன்ன லாவண்யா, கேம்பஸ்ல செலக்ட் ஆயிட்டா! இவன் என்ன கிழிச்சிருக்கான்? இவனுக்கே அடுத்த வேளை சோத்துக்கு, இன்னொருத்தரை நம்பியிருக்கான். இவன் வந்து சொன்னா அவ ஒத்துக்கனுமா?
அவ யாரு தெரியுமா? ஒரு கோடிஸ்வர வீட்டுப் பையன், லவ் சொன்னதுக்கே, நியாயம் பேசி, தப்பு, முடியாதுன்னு சொன்னவ! ஆனா இவன்?
எதுவுமே இல்லாத, ஒரு சாதா மிடில் கிளாஸ்ல இருக்குற, ஆவரேஜ் பையன். இவன் வந்து சொன்னவுடனே, அவ லவ்வுக்கு ஓகே சொல்லிடனுமா? லவ்வை தனியா சொல்றதுக்கு கூட திராணியில்லாம, கூட இந்த ரமேஷைக் கூட்டிட்டு போயி சொல்ற கோழைக்குல்லாம் எதுக்கு லவ்வு? கேரக்டரும் இல்லை! திறமையும் இல்லை! குறைந்த பட்சம் தைரியம் கூட இல்லை! அப்பேர்பட்ட இவன், லவ்வைச் சொன்னா அவ எதுக்கு ஒத்துக்கனும்?
விஜய், அமைதியாய் இருந்தான். இருந்தாலும் நான் திட்டுவது அவனுக்கு அசிங்கமாய் இருந்தது. 
டேய் சீனியர்னு மரியாதை இல்லை?
டேய்… கூடப் படிக்கிற பொண்ணை, ஃபிரண்டா பாக்கத் துப்பில்லை! லவ் பண்றேன்னு சொல்றியே, அந்தப் பொண்ணை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு கூடத் தோணலை. உனக்குல்லாம், எதுக்குடா சீனியர்னு மரியாதை? உன்னைப் பாத்து நானே, மரியாதை கொடுக்கனும்! சீனியர்னு கொடுத்தா, அது உனக்குதான் அசிங்கம்! மூடு வாயை!
அவன் இதற்கு மேலும், லாவண்யாவை தொந்தரவு செய்யக் கூடாது! என்னிடம் திட்டு வாங்கிய கோபத்தில், அவளிடம் மீண்டும் லூச்சுத்தனமாக நடந்து கொண்டால்? அதனாலேயே சொன்னேன்! 
நான் யார் தெரியுமா?
என்னைப் பற்றி சொன்னேன். 
நினைச்சிருந்தா, உன்னைல்லாம் ஆளே அட்ரஸ் இல்லாம பண்ணிருப்பேன். அவ்ளோ செல்வாக்கு, பவர் இருக்கு! சீனியர்ங்கிர ஒரே காரணத்துக்காக பேசிட்டிருக்கேன்! மத்தவிங்ககிட்ட இருந்து லவ்வரை காப்பத்துறவந்தான் உண்மையான லவ்வர். இப்பிடி, நானே அடிச்சிடுவேன்னு சொல்றவனுக்கு பேரு வேற!
இப்பிடி, உன் தங்கச்சிகிட்ட ஒருத்தன் சொல்லியிருந்தா, நீ பாத்திட்டிருப்பியா?
எனது பின்புலத்தை தெரிந்தவுடன், அவர்கள் இருவருக்கும் என் பலம் புரிந்தது! ப்ரேமுக்கும் அது பெரிய ஆச்சரியம்!
சரி விடு மதன்! தெரியாம பண்ணிட்டாங்க! நானே திட்டிகிட்டு இருந்தேன். டேய், மதன்கிட்ட சாரி சொல்லுங்க!
சாரி மதன். சாரி! இருவருமே மெல்லிய குரலில் சொன்னார்கள்!
எனக்கு எதுக்கு சீனியர் சாரி! அவகிட்ட போய் சொல்லச் சொல்லுங்க! நேத்தே இருந்து அப்செட்! அவளே, எவ்ளோ கஷ்டத்துல படிக்க வர்றா தெரியுங்களா? பாவம் அவ! அதுல நீங்க வேற!
ப்ரேம் என்னையே பார்த்தான்!
என்ன சீனியர் அப்படி பாக்குறீங்க?
உன் வயசுக்கு மீறின மெச்சூரிட்டி, தைரியம், தன்னம்பிக்கை மதன்! கீப் இட் அப்!
தாங்க்ஸ் சீனியர்!
எனக்கு ஒரு டவுட் மதன்! ஒரு கோடீஸ்வர வீட்டு பையன், லாவண்யாகிட்ட லவ் சொன்னதுக்கே ரிஜக்ட் பண்ணதாச் சொன்னியே, யாரு அது? உனக்கு எப்புடி தெரியும்?
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்! என்ன சீனியர், என்னைப் பத்தி எனக்கு தெரியாதா?
நீயா? நீயா? குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன!
எஸ்!
ஏய், நீ அவளை விட ரெண்டு வயசு சின்னவண்டா!
ஆமா, அந்தக் காரணத்தைச் சொல்லித்தான் அவ என்னை வேணாம்னு சொன்னா. அது மட்டுமில்லாம, எனக்கு அட்வைஸ் வேற பண்ணிட்டு போனா! சச்சின், 5 வருஷம் மூத்த பொண்ணை கல்யாணம் பண்ணி ஒற்றுமையா இருக்கிரதை ரசிக்கிரவங்க, இதை மட்டும் கேள்வி கேக்குறாங்க?
விஜய் கொஞ்சம் கோபமாகக் கேட்டான்!
நீ லவ் பண்ற ஆளுங்கிறதுனாலத்தான் சண்டைக்கு வந்தியா?
நான் அவனையே பார்த்தேன். பின் அழுத்தமாகச் சொன்னேன்! மறுபடி தப்பு பண்றீங்க சீனியர். நான் லவ் பண்ணேன். இப்பியும் பண்றேன். அவ முடியாதுன்னு சொல்லிட்டா! ஆனா, நான் இன்னமும், அவளை லவ் பண்றது அவளுக்குத் தெரியும். இருந்தும், அவளை நான் எந்தத் தொந்தரவும் பண்ணதில்லை. 
இப்பியும், அவ சொல்லி, நான் வரலை. என் அக்கா சொல்லித்தான் வந்தேன். அதுவும் ஆசிட் அடிப்பேன்னு சொன்னதுனால! 
நாளைக்கே ஒரு வேளை, அவ உங்களை லவ் பண்ணா, நான் தள்ளி நிப்பேன்! உங்க விஷயத்துக்குள்ள தலையிட மாட்டேன்! ஆனா, அது வரைக்கும் நான் லவ் பண்ணுவேன்! அவளை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்னுவேன்!
உனக்கு இருக்குற பக்குவம் எங்களுக்கில்ல மதன். ரியல்லி சாரி! இனி அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நாளைக்கு நானே, அவகிட்ட சாரி சொல்றேன்!
ப்ரேமும், என் தோள்களில் தட்டிக் கொடுத்தான்!
நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா சாரி சீனியர்ஸ்! இதை மறந்துடலாம்! என்று சொல்லி விட்டு, நாங்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்! அதை மட்டும் லாவண்யா பார்த்தாள்!
அவள் பயங்கரக் கோபமாகச் சென்றாள்!

No comments:

Post a Comment