இப்போது நிமிர்ந்தாள். ஆனா என்ன மதன்?
அந்தக் க்ளிப்புல பாத்தீல்ல… நாந்தான் உனக்காக பேசுனேன். நீ, மேக்கப் பண்ணா அழகா இருப்பன்னு சொன்னேன். ஆனா, உன் புருஷன் என்ன சொன்னான்னு பாத்தீல்ல?

கண்களில் கண்ணீருடன், ம்ம்ம் என்று தலையசைத்தாள்.
இப்பியும் ரூமுக்கு கூட்டியாந்து, வேற யார் காதுலியும் விழாத மாதிரி பேசிட்டிருக்கேன். என்னைத்தான் மரியாதை கொடுக்கலைன்னு சொல்ற இல்ல? ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?
இ… இல்லைச் சொல்லு!
உன் புருஷன் உன்னை எப்பத் தொடுவான்?
ஆ… எ… என்ன இப்டி பேசுற மதன்.
திரும்பத் தேவையில்லாம கோபப் படாத. நீ பதில் சொல்லு நான் சொல்லுறேன். உன் புருஷன் உன்னை எவ்ளோ ஏமாத்தியிருக்கான்னு தெரிஞ்சிக்கனும்ல???
எ… எப்பாயாச்சும்! மிக மெல்லியதாய் வந்தது குரல்.
எப்பியாச்சும்னா?
பதிலில்லை!
வாரம் ஒரு வாட்டி இருக்குமா?
இதற்கும் பதிலில்லை!
இங்க பாரு, உனக்கு ஹெல்ப் பண்ணதான் இதைச் செய்யுறேன். பதில் சொல்ல இஷ்டமில்லாட்டி போயிட்டே இரு. காலம் பூரா முட்டாளாவே இரு. எனக்கென்ன வந்தது!
என் கோபமும் அவளுக்கு வேதனையைத் தந்தது. அதே வேதனையுடன் சொன்னாள்.
ரெண்டு, மூணு வாரத்துக்கு ஒரு வாட்டி!
ஹா ஹா என்று ஏளனமாகச் சிரித்தேன். பின் சொன்னேன். மத்தவிங்ககிட்ட அடிக்கடி போற, உன் புருஷன், உன்னை எப்பியாச்சும் தொடுறானா? உனக்கு உறைக்கவே இல்லியாடி?
இதுவரை நடந்த உரையாடல்களே அவளை ஆட்டியிருக்க, என்னுடைய கடைசி அஸ்திரம், இவளை சாய்த்து விடப்போகிறது என்று தெரியாமலேயே கேட்டாள்.
எ…என்ன உறைக்கவே இல்லை?
கேட்ட அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் பார்வையைத் தாங்க முடியாமல், தலையைக் கீழே போட்டாள்.

பின் அவளிடம் மெதுவாகச் சொன்னேன், கேவலம் ப்ராஸ்டியூட்டுகிட்ட போனா கூட, காசு கொடுத்தாதான் அவளைத் தொட முடியும். அதுக்கும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு காசு கொடுக்கனும். அதிலியும் அவளுக்கு இஷ்டமில்லாததை செய்யக் கூடாது.
உன் புருஷன், உன் கூடயும் சந்தோஷமா இருந்துட்டு, வெளிலயும் கனெக்ஷன் வெச்சிருந்தாக் கூட, அட்லீஸ்ட் வேற மாதிரி நினைச்சிக்கலாம். ஆனா…
இந்த மாதிரியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. இதைத் தாங்கவும் முடியவில்லை. ஆனால், இன்னும் இருக்கிறது என்பது போல் இழுத்ததில் முழுதாக தெரிந்து கொள்ள நினைத்தாள்.
ஆனா? இன்னும் என்ன பாக்கியிருக்கு? மெல்லிய கண்ணீரோடு கேட்டாள்!
ஆனா, உன் புருஷன், உன்னைத் தொடாம இருக்குறதுக்கு உனக்கு காசு கொடுத்திட்டுருக்கான்னா, என்ன அர்த்தம்? நீ, ப்ராஸ்ட்டியூட் அளவுக்கு கூட ஒர்த் இல்லைன்னு அர்த்தம். அந்த மரியாதைதான் உனக்கு!
அவ்ளோதான். அவளை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து செருப்பால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு. கண்களில் மட மடவென கண்ணீர். இவ்வளவு உச்ச கட்ட அவமரியாதையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்படியே சிலை போல் அழுகையுடன் அமர்ந்திருந்தாள்.
பின் நான் அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தேன். கதவைத் திறக்கும் முன், சிறிது நின்று திரும்பி சொன்னேன்.
எனக்கு உன் மேல ஓரளவு மரியாதை இருந்துது. அதை கெடுத்துகிட்டதுக்கு காரணம் உன் முட்டாள்தனமும், உன் புருஷனை கண்ணை மூடிகிட்டு நம்புனதும்தான். இல்லாட்டி, இதெல்லாம் எனக்கு எப்டி தெரிஞ்சிருக்கும். இதெல்லாம் நான் சொல்ல ஆரம்பிச்சப்ப, நீ என்னை நம்பலை. உன் புருஷனுக்காக பேசுன. ஆனா, அந்தாளு, எடுத்த எடுப்புலியே, நீ எதுக்கும் தகுதி இல்லைன்னு என்கிட்ட பேசுறான்.
நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் இருக்கும். என்கிட்டயே, உன்னப் பத்தி இவ்ளோ மோசமா சொல்லியிருக்கிற ஆளு, வெளில எப்டி சொல்லி இருப்பான்? என்னென்னால்லாம் சொல்லியிருப்பான்? ம்ம்ம்?
உன் புருஷன் வந்தவுடனே, இப்பிடிச் சொன்னானா, ஏன் அப்படிச் சொன்னான்னுல்லாம் கேட்டு திரும்ப இன்னொரு முட்டாள் தனத்தை செய்ய மாட்டேன்னு நான் நம்புறேன். ஏன்னா, சண்டை போட்டாலும், இல்லன்னு மறுக்க அவனுக்கு நேரம் ஆகாது. ஏன் புதுசா ஏதோ உளற்றன்னுதான் கேப்பான்!
இல்ல, நான் சொன்னது எதுவுமே உண்மையில்லை, உன் புருஷன் ரொம்ப நல்லவன்னு நினைச்சாலும், இதே வாழ்க்கையை கண்டினியு பண்ணு. உன் இஷ்டம்தான்!
என்ன பண்ணனும்னு பொறுமையா யோசி. அப்புறமா முடிவெடு. புத்திசாலியா இருக்குறதும், முட்டாளா இருக்குறதும் உன் கையில இருக்கு,
சொல்லி விட்டு அவள் ரூமை விட்டு வெளியேறி விட்டேன்.
எனக்கு மிகவும் திருப்தியாயிருந்தது. எனது திட்டத்தில், அடுத்த படி தாண்டியாயிற்று.
கணவன், மனைவி இருவருமே இப்போது என் வலைக்குள். எதிர்பார்த்ததை விட, சீதாவை என் வலைக்குள் விழ வைப்பது மிக எளிதாய் இருந்தது.
மேனிபுலேஷன் என்று ஒன்று இருக்கிறது. மோகனிடம்னாச்சும் சில பல பொய்களைச் சொன்னேன். வாக்குறுதிகளைக் கொடுத்தேன். ஆனால் சீதாவிடம் இவை எதுவும் இல்லை.
அவளிடம் புதிதாய் எதுவும் சொல்லவில்லை. எல்லாமே அவளுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், பார்க்கும் பார்வையை மேனிபுலேட் செய்வதன் மூலம்தான் எவ்வளவு பெரிய சூழ்ச்சியையும் செய்து விட முடிகிறது?!
நேற்று வரை அவளை பாதிக்காத விஷயங்கள், இப்பொழுது முழுக்க குடைய ஆரம்பித்து விட்டனவே? இனி, கொஞ்சம் கொஞ்சமாக அவள் துருவ ஆரம்பிப்பாள். மிக முக்கியமாக, எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்க ஆரம்பிப்பாள். அதுதான் எனக்கும் வேண்டும்!
மகிழ்ச்சியுடன் எனது ரூமுக்கு சென்றேன்.
அடுத்த இரண்டு நாட்களும், அவளைக் கண்டு கொள்ளவேவில்லை. அதே சமயம், முன்பு போல் அலட்சியமாகவும் நடத்தவில்லை.
நான் எதிர்பார்த்தது போல், அவளும் மோகனிடம் சண்டை எதுவும் போடவில்லை. மிகவும் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தாள். முகத்தில் குழப்பம் இருந்தது.
சரியாக இரண்டு நாள் கழித்து, மோகன் இல்லாத சமயத்தில் என்னைத் தேடி என் ரூமுக்கு வந்தாள். அவள் முகத்தில் இன்னமும் குழப்பம்.
நான் அமரச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தேன். அவளே பேசட்டும் என்று.
அவளுக்கும் தயக்கம் போலும், எப்படி பேசுவது என்று!
பின் கேட்டாள்.
ஏன் ரெண்டு நாளா, என்கிட்ட சரியா பேச மாட்டேங்குற? ம்ம்?
இதென்ன வம்பா போச்சு. முன்னனாச்சும் மரியாதை கொடுக்கலைன்னு கோபிச்சுகிட்ட. இப்ப அப்படியெல்லாம் கூட நான் நடந்துக்கலியே? அப்புறம் என்ன?
இல்ல நீ மரியாதை கொடுக்கலைன்னு சொல்லவேயில்லை. ஏன் பேச மாட்டேங்குறன்னுதான் கேக்குறேன்.

என்னான்னு பேசுறது. உன் கணவரைப் பத்தி உன்கிட்டயே தப்பா சொல்லியிருக்கேன். அதை நீ நம்பறீயான்னு எனக்குத் தெரியாது. நான் இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி. எனக்கெதுக்கு தேவையில்லாத வேலையெல்லாம்? அதான் அமைதியாகிட்டேன்.
பின் மீண்டும் அவள் அமைதியானாள். நானும் அமைதியாகவே இருந்தேன்.
பின் திடீரென்று நிமிர்ந்து சொன்னாள், நீ சொன்னதை எல்லாம் நம்புறேன். யோசிச்சு பாத்தா, எவ்ளோ பெரிய முட்டாளா இருக்கேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. எதுக்கு இந்த வாழ்க்கைன்னு கூட ஆத்திரம் வருது. நீயும் பேசலைன்னுதான் வருத்தமாச்சு. அதான் கேட்டேன்.
நான் அமைதியாகச் சொன்னேன். ஐயாம் சாரி. நானும் கவனிச்சிட்டுதான் இருந்தேன் ரெண்டு நாள பயங்கர யோசனைல இருந்த. அதை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னுதான் சும்மா இருந்துட்டேன். மோகன் ஏதாச்சும் கேட்டாரா, ஏன் இப்டி இருக்கன்னு? நான் வேண்டுமென்றேதான் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன்.
அவள் இல்லை என்றாள்.
ம்ம்… நான் உட்பட, பாக்குற எல்லாரும், ஏன் நீ இப்டி இருக்கன்னு யோசிச்சிட்டிருக்காங்க. வேலைக்காரங்க கூட, என்கிட்ட உன்னைப் பத்தி கேட்டாங்க. ஆனா, மோகன் இதைப் பத்தி எதுவும் கேக்கலியா?
என்னுடைய பில்டப் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், முட்டாளிடம், அது சரியாகத் தன் வேலையைச் செய்தது.
ம்க்கும்… அவரு எங்க இதெல்லாம் கவனிக்கப் போறாரு?! கடுப்பாய் வெளி வந்தது அவள் குரல். ஒரு மண்ணும் கேக்கலை…
ம்ம்…
சரி, என்ன முடிவு எடுத்திருக்கீங்க?
அதுக்குத்தான் உன்கிட்ட வந்தேன்.
என்கிட்டயா?
ஆமா, என்கிட்ட உணமையை புரிய வெச்சது நீதானே. நீ சொல்லாட்டி நான் முட்டாளாத்தான் இருந்திருப்பேன். அதான் உன்கிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு…
நான் என்ன சொல்ல முடியும்? யுவர் லைஃப். யுவர் ஹஸ்பண்ட். இதுல நான் என்னத்தைச் சொல்ல? நான் மூணாவது மனுஷன் இல்லையா?
என்னைப் பொறுத்த வரை நீ மூணாவது ஆளெல்லாம் கிடையாது. இந்த நிமிஷம் நான் உன்னை நம்புறேன்னா, நான் உன்னை மட்டும்தான்.
ம்ம்… அப்ப என்னை முழுசா நம்புற? என்ன சொன்னாலும் கேட்ப?
கண்டிப்பா கேக்குறேன். என்ன பண்ணட்டும்?
அவசரப்படாத? இப்பதான என்கிட்ட சொல்லியிருக்க. நான் யோசிக்க வேண்டாமா?
ம்ம்… ஓகே!
குட்! ஏற்கனவே ரெண்டு பெட்ல ஜெயிச்சிருக்கேன். இப்ப, உனக்கு ஹெல்ப்பும் பண்ணப் போறேன். இதையெல்லாம் எப்டி கழிக்கப் போற?
அவள் குழப்பமாகக் கேட்டாள். என்ன பண்ணட்டும்னு சொல்லு செய்யுறேன்.
அதை அப்புறமா சொல்லுறேன். ஆனா, அப்பச் சொல்லுறதை செய்யனும். ஓகே?
ம்ம்ம்…
சரி உன் ரூமூக்கு போ.
தாங்க்ஸ்.
என்னுடைய பிளான் படி, இப்போது அவள் இன்னும் என் கண்ட்ரோலுக்குள் வர ஆரம்பித்திருந்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து, ஒரு நாள் இரவு, மோகனிடம் யதேச்சையாக கேட்டேன்.
என்ன மாம்ஸ், ஆளு ரெண்டு நாளா பிசி போல? இன்னிக்கு ரொம்ப டயர்டா தெரியுறீங்க? செம வேலையோ?
வேலைல்லாம் இல்ல மதன். ஆனா, இன்னிக்கு செம மஜா. மதியானத்துக்கு மேல ஒரு புரோக்கர் ஃபோன் பண்ணான், செமத்தியான் அயிட்டம் வந்திருக்குன்னு. அதான் டயர்டு. செம அயிட்டம்தான்… என்று சொல்லி கண்ணடித்தான்.
ஆனாலும், உன் காட்டுல மழைதான் மாமா! ஊட்டுல பொண்டாடியை வெச்சுகிட்டு, இப்டி ஆட்டம் போட்டுட்டு வர்ற?
மதன், யார் கூட யாரை கம்பேர் பண்ற? அந்த அயிட்டத்தைப் பாத்தா நீயே அசந்துடுவ? நீயும் வயசுப் பையன். கல்யாணம் வேற ஆகலை. உனக்கு எதாவது தேவைன்னா சொல்லு. செமத்தியான் ரேஞ்சுல இருக்கும். எதுவும் லோக்கல் கிடையாது. செம குவாலிட்டி ஆளுங்க.
யோவ்… நீ ஆளை விடு என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.
மோகன் பார்க்காத ஒரு சமயத்தில், சீதாவிடம் கண்ணசைத்து, ரூமுக்கு வரும்படி சைகை செய்துவிட்டு சென்றேன்.
சிறிது நேரம் கழித்து வந்தாள். வேகமாகக் கேட்டாள்.
என்ன மதன்? சீக்கிரம் சொல்லு. அவரு இருக்காரு.
நான் அமைதியாகச் சொன்னேன்.
இன்னிக்கு நைட்டு உன் புருஷனை, நீயா அப்ரோச் பண்ணு. எப்டி ரெஸ்பான்ஸ் பண்றான்னு சொல்லு!
என்ன மதன் இதெல்லாம்? இப்படி பேசிகிட்டு இருக்க?
நான் கடுப்பாய் சொன்னேன். நீதான்டி என்கிட்ட வந்து ஹெல்ப் கேட்ட. நான் சொல்லறதை எல்லாம் செய்யுறேன். கண்ணை மூடிட்டு நம்புவேன்னு நீதான் சொன்ன. அதான் அப்பவே கேட்டேன், உன்னை நம்பலாமான்னு? இப்ப புத்தியை காமிச்சிட்ட பாத்தியா?
அய்யோ, சாரி மதன். நீ திடீர்னு சொன்னதும் எனக்கு வேற மாதிரி ஆகிடுச்சி. அதான். சாரி. நீ சொல்ற மாதிரியே ட்ரை பண்றேன். ஆனா எதுக்குன்னு…
கண்டிப்பா சொல்றேன். ஆனா இப்ப இல்ல. நாளைக்கு ரிசல்ட்டை சொன்னதுக்கப்புறம்.
அவளுக்கு கொஞ்சம் கூசியது. தன்னை விட வயதில் சின்னவன், தன்னுடன் பேசும் விஷயத்திலும், அவளை கண்ட்ரோல் செய்வதிலும். அதுவும் செக்ஸ் சார்ந்த விஷயத்தில்…
பின் சரி என்று தலையாட்டிவிட்டு சென்றாள்.
No comments:
Post a Comment