CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 49


பின், ரூமிற்கு வந்த பொழுது மணி 1.
அங்கேயே லஞ்ச்சினை முடித்தவுடன், அவன் சொன்னான்.
நீ தூங்கி ரெஸ்ட் எடு லாவி! நான் போய் மீட்டிங் எப்பிடி போகுதுன்னு பாத்துட்டு வந்துடுறேன். இப்ப போயிட்டு வந்தா, நாளைக்கு வேண்டியதில்லை. நாளைக்கும் எங்கியாச்சும் வெளிய போலாம்.
அவன் என்னுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்பும் ஆசை, எனக்கு புரிந்தது. எனக்கும் அதுதான் விருப்பம் எனும் போது, என்ன பிரச்சினை?!
சரி… அப்ப நானும் வர்றேன். நீ போயி, நான் வர்றாம இருந்தா நல்லாயிருக்காது.
ஏன், யாராச்சும், ஏதாச்சும் சொல்லுவாங்களோன்னு ஃபீல் பண்றியா என்ன? அவன் குரலில் லேசான கோபம் இருந்தது.
எனக்கு சிரிப்பு வந்தது. அவனையேப் பார்த்து சொன்னேன். ரெஸ்ட் எடுக்க வேண்டிய நீயே, ரெஸ்ட் எடுக்காம போறப்ப எனக்கென்ன வந்தது? தவிர, நீயும் இல்லாம, எனக்கு இங்க போரடிக்கும் அதான் சொன்னேன்! ஓகேயா?
என் பதில் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
பரவாயில்லை. அவகிட்ட ஃபோன் பேசனும்னு ரெண்டு நாளா சொல்லிட்டிருந்தியே. அதைச் செய். கொஞ்சம் தூங்கி எந்திரி. நானும் ரொம்ப நேரம் இருக்கப் போறதில்லை. சீக்கிரம் வந்துடுவேன். சும்மா எட்டிப் பாக்கத்தான் போறேன்.
அப்புறம் நாம கண்டுக்கலைன்னு ஒரு எண்ணம் வந்துடக்கூடாது பாரு! அதான்.
சரி ஓகே!
அவன் சென்றவுடன், தனிமையில், அவனுடனான காதலை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன்.
என் மனம் தாங்க முடியா மகிழ்ச்சியில் இருந்தது. சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அப்படியே உல்லாசமாக புல்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தேன்.
இன்று மாலை எப்படியும் அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று உள்ளுக்குள் முடிவெடுத்திருந்தேன்.
5 மணிக்கு மேலாகியும் அவன் வரவில்லை.
இதான் போனவுடனே வர்றதா? இதான் லவ் பண்ர லட்சணமா? உன் லவ்வர் வெயிட் பண்ணிட்டிருக்கான்னு அறிவு வேணாம்? என்று உள்ளுக்குள் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தேன்.
அவனுக்காக நான் தயாராகி இருந்த பின்பும் அவன் இன்னும் வரவில்லை!
போனவன் திரும்பி வரும் போது ஏறக்குறைய இரவு 8 ஆகியிருந்தது. உள்ளே வந்தவனைப் பார்த்து, நானே அதிர்ந்தேன்.
கண்கள் சிவந்து, உடை கொஞ்சம் கலைந்து, முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளுடன் அவனைப் பார்த்தவுடன் தெரிந்தது, ஏதோ சரியில்லை என்று.
என்ன ஆச்சு மதன்?
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் மெதுவாகக் கேட்டான்.
ஏன் லாவண்யா, இப்டி பண்ண?
அவன் குரலும், அதிலிருந்த வருத்தமும், அவனது நிலையும் எனக்குச் சொல்லிவிட்டது. அவன் எதைக் கேட்கிறான் என்று! எந்தச் சூழ்நிலையை நான் எதிர்கொள்ள தயங்கினேனோ, அதைப் பற்றிதான் கேட்கிறான் என்று! இருந்தும் தயங்கித் தயங்கி கேட்டேன்.
எ… என்ன சொல்ற மதன்?
நிஜமா உனக்கு புரியலை?
நான் பதில் பேச முடியாமல் தலை குனிந்தேன். தயங்கித் தயங்கி கேட்டேன்.
எ… எப்டி தெரியும்?
இப்பதான் பழைய செக்ரட்டரிகிட்ட பேசிட்டு வர்றேன். இன்ஃபாக்ட் இன்னிக்கு போனதே, அவகிட்ட இது பத்தி கேட்கத்தான். அப்புறம் அக்காகிட்ட பேசிட்டு வர்றேன்.
என்னால் நிற்க முடியவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவரக் காத்திருந்தது.
நான், உன்னைப்பத்தி, அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லைன்னு ஒரு தடவை கூட தோணலையா??? அவ்ளோ சுலபமா விட்டுட்டியா? ம்ம்? அவன் குரலில் கோபத்தை விட வருத்தம்தான் அதிகம் இருந்தது.
அவனது கோபம் என்னை பெரிதாக பாதித்தது இல்லை. ஆனல், அவன் வருத்தங்கள்…?!அவனது வருத்தத்தைக் கண்டு என் கண்களில், என்னை மீறி மெல்லிய கண்ணீர் எட்டிப் பார்த்தது!
அப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தும் அந்த ஃப்ளாஸ்பேக்தான் என்ன???
லாவண்யாவின் வீட்டில், திடீரென, அவளது சித்தி, தன்னுடைய ஒன்று விட்ட தம்பிக்கு அவளைக் கட்டி வைத்துவிடலாம் என்று திட்டம் போட, அவள் மேல் பாசம் இல்லாத தந்தையும், செலவில்லாமல் அவளுக்கு கல்யாணம் செய்ய நினைத்து, ஓகே சொல்லியிருந்திருக்கிறார்.
விஷயம் கேட்ட நொடியிலேயே, முடியாது என்று லாவண்யா மறுக்க, மற்றவர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர். போகும் போக்கு சரியில்லாததால், அவள் முதலில் உதவிக்கு, அவள் ஃபிரண்டான, மதனின் அக்காவை அழைத்து, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். நேர்ல பேசணும். பெங்களூர் வரட்டுமா என்று கேட்டிருக்கிறாள்.
மோகனின் டார்ச்சரில் மாட்டி இருந்த அவனது அக்காவோ, எப்படி உதவுவது என்று யோசிக்கையில்,
மோகனோ, சும்மா அந்தப் பொண்ணையும் கூப்பிடு, வீட்லியே தங்க வை. ஒருத்தருக்கு ரெண்டு பேரா இருந்தா எனக்கும் நல்லா இருக்குமில்ல என்று அசிங்கமாகச் சொல்லியிருக்கிறான்.
இந்த நிலையில் அவள் வரக் கூடாது என்று நினைத்தவள், அடுத்த முறை ஃபோன் செய்யும் போது, சும்மா சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணாத, ஏதாவதுன்னா மதன்கிட்ட போயி கேளு என்று வேண்டுமென்றே முகத்திலடித்தாற் போல் பேசியிருந்திருக்கிறாள்.
அவள் அவசரப்பட்டு இங்கு கிளம்பி வந்து மாட்டிக் கொள்ள கூடாதே, என்று வேண்டுமென்றே அப்படி பேசியிருந்திருக்கிறாள்.
காதலை வேண்டாம் என்று சொன்னவனிடம், இதற்காக போய் நிற்க வேண்டாம் என்று நினைத்திருந்த லாவண்யா, இப்பொழுது வேறு வழியில்லாமல், அவனுடைய நம்பருக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்படிருந்தது.
ஏனெனில், அதுதான், மதன், தன் கம்பெனியில் மிகவும் பிசியாக இருந்த நேரம். அஃபிசியல் கால்ஸ் அதுவும், அவனுடைய செக்ரட்டரி வழியாக அனுமதிக்கப்பட்ட கால்கள் மட்டுமே அவன் பேசினான். தேவையில்லாமல், யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருந்தான்.
லாவண்யா முதலில் அவன் செக்ரட்டரிக்கு பேசியிருந்திருக்கிறாள்.
இல்லை, தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று பாஸ் சொல்லியிருக்கிறார் என்று சொன்னவளிடம்,
நான் லாவண்யான்னு சொல்லுங்க, என் பேரைக் கேட்டா, அவர் மாட்டேன்னு சொல்லமாட்டாரு! என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறாள்.
அவளது நம்பிக்கையைக் கேட்ட செக்ரட்டரியும், மதனிடம் சொல்லப் போனாள்.
இங்குதான் விதி வேலை செய்தது!
அது, லாவண்யா என்ற பெயரை, செக்ரட்டரி, அந்த நேரத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக, சரண்யா என்று காதில் வாங்கிக் கொண்டாள்.
மதனோ, செக்ரட்டரியிடம், அவிங்ககிட்ட, பேச தனக்கு ஒன்றுமில்லை என்று சொல்லியிருக்கிறான்.
லாவண்யாவால், அதை நம்பமுடியவில்லை.
அப்போது ஃபோனை வைத்தாலும், மீண்டும் அடுத்த நாள் அழைத்து, நீங்கத் திரும்ப அவர்கிட்ட பேசுங்க, ரொம்ப முக்கியமான விஷயம்னு சொன்னதாச் சொல்லுங்க என்று அடித்துப் பேச, அப்பொழுதும், அவன், எவ்ளோ முக்கியம்னாலும், அவிங்களைப் பார்க்கவோ, பேசவோ விருப்பமில்லை என்று சொல்லியிருக்கிறான்.
லாவண்யாவால் அப்பொழுதும் நம்ப முடியவில்லை. அடுத்த நாள், நேராக அலுவலகம் சென்றிருக்கிறாள்.
அதே செக்ரட்டரியிடம், நான் ஃபோன்ல பேசினேனே! ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு நினைக்கிறேன். நான்னு சொன்னா, கண்டிப்பா மதன், என்னை பாக்க முடியாதுன்னு சொல்ல மாட்டான். நான் அவனைக் கண்டிப்பா பாத்துட்டுதான் போவேன் என்று சொல்லியிருக்கிறாள்.
தன்னுடைய பாஸை, அதுவும் அனைவரும் கண்டு பயப்படும் ஒருவரை, இவள் மிக கேஷூவலாக, அவன், இவன் என்று சொல்வதைக் கண்ட மதனின் செக்ரட்டரி,
மேடம், நீங்க சொல்றது புரியுது. பட், பாஸ் வந்து, இந்த 6 மாசமா கம்பெனியை கண்ட்ரோலுக்கு கொண்டுவர, டே அண்ட் நைட் ஒர்க் பண்றார். அதுனால, சமயத்துல பயங்கர டென்ஷனா இருக்காரு. சில சமயம் அவர்கிட்ட பேசவே எனக்குல்லாம் டென்ஷனா இருக்கும். அப்டி இருந்தும் போன தடவைச் சொன்னப்பவே, காய்ச்சி எடுத்துட்டாரு. இப்ப போயி சொன்னா…
ப்ளீஸ் எனக்காக, இந்த ஒரு தடவை ட்ரை பண்ணுங்களேன். இனி நான் வர மாட்டேன் என்று லாவண்யா சொல்ல, வேறுவழியில்லாமல், அவளது செக்ரட்டரி அவளை சோஃபாவில் உட்காரவைத்து விட்டு, மதன் ரூமூக்குச் சென்று சொல்லியிருக்கிறாள்.
சார், ரெண்டு நாளா ஃபோன் பண்ணியிருந்தாங்கன்னு சொல்லியிருந்தேனே, அந்த லேடி, உங்களைப் பார்த்தே ஆகனும்னு வெளிய வெயிட் பண்றாங்க சார். உங்களை நல்லாத் தெரியும், முக்கியமான விஷயம்னு சொல்றாங்க சார் என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்!
கதவு கொஞ்சம் திறந்திருந்ததால், செக்ரட்டரி சொன்னது வெளியே இருந்த என் காதிலும் விழுந்தது.
வாட்… நாந்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, அவிங்களை நான் பார்க்க விரும்பலைன்னு? பின்ன என்ன?
இல்ல சார், அவிங்களுக்கு உங்களை நல்லா தெரிஞ்சிருக்கும் போல. அவங்க கான்ஃபிடண்ட்டா சொல்லுறாங்க, நீங்க பாக்க அலவ் பண்ணுவீங்கன்னு. வா, போன்னு சொல்ற அளவுக்கு பழக்கம் மாதிரி தெரியுது. அதான்…
லுக், என் காசுக்காக, என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க, ஆயிரம் பேரு வருவாங்க. அவிங்களை ஃபில்டர் பண்ணத்தான் உங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். இந்த உறவே வேணாம்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் எதுக்கு இங்க வர்றாங்களாம்? உங்க பாசை மரியாதை இல்லாம பேசுறவிங்களை, நீங்களே திட்டியிருக்க வேணாம்? என்கிட்ட வந்து அதையேச் சொல்றீங்க?
இனி அவிங்க பாக்கனும்னு சொல்லி நீங்க வந்து நின்னா, உங்களை வேலையை விட்டு தூக்கிடுவேன். ஓகே?
அவிங்களா போறாங்களா, இல்லை வாட்ச்மேனைக் கூப்பிடனுமான்னு கேளுங்க என்று கத்தியிருக்கிறான்.
இது எல்லாமே, அறைக்கு வெளியே இருந்த லாவண்யாவின் காதிலும் விழுந்தது. அவளால், அந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. கிடுகிடுவென்று வெளியே வந்துவிட்டாள்.
ஆனால், அத்தனைப் பிரச்சினைக்கும் மூல காரணம் ஒன்றுதான்.
அது, லாவண்யா என்ற பெயரை, அவனது செக்ரட்டரி, சரண்யா என்று உள் வாங்கிக் கொண்டதுதான். அது லாவண்யாவிற்கும் தெரியாது! தெரிந்திருந்தால், அவளுக்குப் புரிந்திருக்கும்.
ஏனெனில், சரண்யா என்பது, அவனுடைய சித்தியின் அதாவது, அவன் அப்பாவின் இரண்டாம் மனைவியின் பெயர்.
அது சரியாக, மதன் அவன் தந்தையுடன் போராடிக் கொண்டிருந்த தருணம்!
கொஞ்ச சொத்தேனும் தனக்காக வைத்துக் கொள்ள, நேரடியாகப் போராடி, மிரட்டி, பின் கெஞ்சி, எதுவும் வேலைக்காகாமல், பின் தன் மனைவியை விட்டு அழ வைத்து, செண்டிமெண்ட்டலாக ஏதேனும் வாங்க எல்லா வழிகளையும் அவர் முயற்சி செய்த நேரம்.
அந்த சில்லறைத்தன முயற்சிகளைக் கண்டு கடுப்பான மதன், வீட்டிற்கு அதிகம் செல்லாமல், தெரியாதவர்களை உள்ளே விடாமல், தன் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த நேரம்.
அந்த நேரத்தில், லாவண்யா என்று சொன்னதை, அவன் செக்ரட்டரி சரண்யா என்று எடுத்துக் கொள்ள, மதன் அதை, தன் சித்தியின் முயற்சி என்று எடுத்துக் கொண்டான்.
அன்று, லாவண்யாவால், மதனின் அந்தப் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை. அவமானம் தாங்காமல், உடனே அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
என்னதான் மனம், உறுதியாக தன் மணாளனை நம்பினாலும், குழப்பத்திலும், நடக்கும் முயற்சிகளாலும், ஏற்கனவே மதனின் அக்காவின் பேச்சாலும், மனதளவில் மிகவும் தளர்ந்திருந்த லாவண்யாவிற்கு, இது பேரிடியாய் அமைந்தது.
அதே சமயம், இப்பொழுதும் அவள் நினைத்து வருத்தப்படும் ஒன்று, அவ்வளவு தூரம் சென்றவள், அவன் பேச்சைக் கேட்டவுடன், கோபமாக, ஏன் அவனது அறைக்குள் நுழையவில்லை என்பதுதான்!
குறைந்த பட்சம், அவனை திட்டவாவது உள்ளே நுழைந்திருந்தால்…. நிலையே வேறு!
அவன் பேச்சிலேயே மனம் உடைந்து, குழப்பத்தில் வெளியே வந்தவளை, அவளது அப்பாவே அழைத்து, நீ கல்யாணம் பண்ணிக்கல்லாம் வேணாம். இப்ப ஒரு பூஜைக்காக, குலதெய்வம் கோயிலுக்கு மட்டும் வந்துட்டு போ என்று அழைக்க, அவள் கோயிலுக்குச் சென்று, பூஜைக்கு அமர்ந்து, அமைதி தேடி, கண் மூடி, சாமி கும்பிடும் தருணத்தில், அவள் கழுத்தில் தாலி கட்டப்பட்டது.
இந்த உலகில், எல்லாரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல் உணர்ந்த லாவண்யா, வெகுண்டெழுந்து, நேரடியாக போலீசில் கம்ப்ளையிண்ட் செய்து விட்டாள். அவளது இந்த ஆக்ரோஷத்தை அவனது அப்பா மற்றும் சித்தியே எதிர்பார்க்கவில்லை.
இத்தனை நாட்கள் அமைதியாக, எதற்கும் எதிர்த்துப் பேசாதவள், இவ்வளவு கோபம் அடைவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவளை ஏமாற்றி தாலி கட்டியவனுக்கு கடும் பயம் வந்திருந்தது.
ஆனால், அவளுடைய மனதிலோ, இது எல்லாவற்றுக்கும் காரணம் மதன் என்று அவன் மேல் கடும் கோபம் வந்திருந்தது. காதலைச் சொன்னால் மட்டும் போதுமா? காதலியைக் காப்பாற்ற வேண்டாமா?
ஆனால் அவள் யோசிக்காத ஒரு விஷயம்,
தனக்கு மிக நெருக்கமான தன் தோழியிடம் கூட வராத கோபம், மதனின் மேல் ஏன் வருகிறது? இத்தனைக்கும், காதல் சொன்னவனை, வேண்டாம் என்று சொன்னவளே அவள்தானே? அப்படியிருக்கையில், காப்பாற்ற வேண்டிய தேவை அவனுக்கு என்ன இருக்கிறது?
யோசித்திருந்தால் அவளுக்குப் புரிந்திருக்கும்!
காதலை அவள் மறுத்தாலும், எப்பொழுதோ அவள் மதனை காதலிக்க மட்டுமல்ல, உள்ளுக்குள் அவனுடன் வாழவே ஆரம்பித்து விட்டாள் என்பதும், இப்போது அவள் காட்டுவதும் கோபமல்ல, உரிமையுள்ளவனிடம், அவள் காட்டும் வருத்தம், தன் சோகங்களை மறக்க, தன் காதலனிடம் தேடும் அடைக்கலம் என்றும் புரிந்திருக்கும்.
மதனின் அக்காவிடம், அவள் மனசு விட்டு பேசும் போதும், அவன் அக்காவும் அவளைத் திட்டியிருக்கிறாள்.
மதன், உன்னை அப்படி சொல்லுவானா? நீ எப்டிடீ அப்படி நினைச்ச?
எனக்கு மட்டும் ஆசையா என்ன? அவன் அப்படி சொல்ல மாட்டான்னு எனக்கும் தெரியும். ஆனா, அன்னைக்கு நாந்தானே கேட்டேன்?
ஆனா, அதுக்கப்புறமும், அடுத்த நாள், உன் மூலமா ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். அப்டி டக்குன்னு இதை நான் நம்புற ஆளா?
என்னால எத்தனை குழப்பத்தைத்தான் தாங்க முடியும்? ஆனா, அதுக்குள்ள, என்னென்னமோ நடந்துடுச்சி என்று புலம்பியிருக்கிறாள்.
அவன் அக்காவோ, நீ என்ன சொன்னாலும், கண்டிப்பா இதுல ஏதோ குழப்பம் இருக்கு! முன்னன்னா கூட, நீ என்கூட வான்னு சொல்லியிருந்திருப்பேன். ஆனா, இப்ப, அதுவும் மதன் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்குறப்ப, நான் உன்னைக் கூட்டிட்டு போக விரும்பலை. அதை முதல்ல க்ளாரிஃபை பண்ணு! வேணும்ன்னா சொல்லு, நான் இதைப் பத்தி அவன்கிட்ட கேக்குறேன்.
இல்லடி! இது, எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். அன்னிக்கு, நானா அவன் ரூமுக்குள்ள போகாதது, என் தப்புதான். அதுனால, நானே அவன்கிட்ட நேரா பேசிக்கிறேன்.
சொன்ன லாவண்யாவை இமைக்காமல் பார்த்தாள், மதனின் அக்கா!
எ… என்னடி?
                       
அவனும், இதையேதாண்டி சொன்னான். இந்த விஷயத்தை அவனே பாத்துக்குறேன்னு. நீயும் அதான் சொல்ற! இப்படி, பல விஷயங்கள்ல, நீங்க ரெண்டு பேரும் செம மேட்சுடி!
நான் அவனைப் பத்தி புரிஞ்சிக்காத விஷயங்கள் சிலதைக் கூட, நீ நல்லா புரிஞ்சிக்கிற! இனிமேனாச்சும், உங்க வாழ்க்கை நல்லா அமைஞ்சா போதும் என்று ஃபீல் பண்ணியிருந்திருக்கிறாள்.
அதன் பின், லாவண்யா செக்ரட்டரியாக வேலைக்கு வந்திருக்கிறாள். இரண்டாம் நாளே, இந்தப் பெயர் குழப்பம்தான், எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று தெரிந்து கொண்டாள். அதுவும், அதே பழைய செக்ரட்டரி மூலமாக.
லாவண்யா முதல் நாள் வந்த பொழுது, பழைய செக்ரட்டரி லீவ். இரண்டாம் நாளும், கொஞ்சம் தாமதமாக வந்தவள், பின், லாவண்யாவை சந்தித்திருக்கிறாள்.
வைஷாலி மேடம், இவங்களை பாஸ் புது செக்ரட்டரியா அப்பாயிண்ட் பண்ணியிருக்கிறார். உங்களை ட்ரெய்னிங் கொடுக்கச் சொன்னார். நீங்க பாத்துக்கோங்க. பை. என்று கூட்டி வந்த ஆள் சொன்னார்.
லாவண்யாவைப் பார்த்தவுடன் பழைய செக்ரட்டரி உடனே அடையாளம் கண்டுகொண்டாள்.
                    
ஹல்லோ சரண்யா… எப்டி இருக்கீங்க? இட்ஸ் அ சர்ப்ரைஸ். ஐ யம் ரியல்லி ஹேப்பி. அன்னிக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி. சாரி! வெரி சாரி!
ஆக்சுவலி, பாஸ் கூட அந்தளவு கடுமையா யாரையும் பேசினதில்லை. இன்ஃபாக்ட், அவரு ஏன் அன்னிக்கு ஏன் அப்படி பேசினாருன்னு எனக்கே குழப்பமாயிடுச்சி. அந்தளவு நல்லவரு. சிரிக்க மாட்டாரே தவிர, ரொம்ப நல்ல டைப்.
எனி ஹவ், வெல்கம் ஆன் போர்ட். நீங்கதான் செக்ரட்டரிங்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!
பட படவென்று பேசிய, ஏறக்குறைய தன்னை விட 5 வயது கூட இருக்கிற வைஷாலியை, லாவண்யாவிற்கும் பிடித்து விட்டது. அவள் பேசியதில், ஆரம்பத்தில் அவள் சரண்யா என்று கூப்பிட்டதைக் கூட கவனிக்கவில்லை லாவண்யா!
அப்புறம், ஜாப் விஷயமாத்தான் அன்னிக்கு சாரை பாக்க ட்ரை பண்ணீங்களா? எனி வே, இப்ப அந்த ஜாப் உங்களுக்கு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! எந்த டவுட், என்ன சப்போர்ட்ன்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க. ஓகே!
இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது, லாவண்யாவிற்கு வைஷாலியை இன்னும் நன்றாகப் பிடித்து விட்டது. இயல்பில் வைஷாலியும் மிக நல்லவளே.
லாவண்யா கிளம்பும் போது, வைஷாலி மீண்டும் அவள் பெயரைச் சொன்னபோதுதான் லாவண்யா கவனித்தாள்.
ஓகே, சரண்யா, மதியம் லஞ்ச்க்கு என்ன பன்றதுன்னு யோசிக்காதீங்க. இன்னிக்கு என் ட்ரீட். நானே உங்க கேபினுக்கு வர்றேன். ஓகே?! பை சரண்யா?
சடாரென்று திரும்பினாள் லாவண்யா! நீங்க, இப்ப எ… என்னச் சொன்னீங்க?
அவளது செய்கையில் ஆச்சரியப்பட்டாலும், பதில் சொன்னாள். அதான் லஞ்ச்சுக்கு…
அதில்லை, நீங்க, என்னை என்னான்னு கூப்ட்டீங்க?
சரண்யான்னு. அதானே உங்க பேரு?
இ… இல்லை என் பேரு லாவண்யா!
ஓ… அப்டியா? நான் உங்க பேரை சரண்யான்னுதான் நினைச்சிட்டிருக்கேன். உங்க முகம் மனசுல பதிஞ்சிடுச்சா, அதுனால, பேரும் மறக்கலை. ஃபோன்ல கேட்டப்ப, ஏதோ ஃபால்ட்டுன்னு நினைக்கிறேன்.
அப்பொழுதும் வைஷாலிக்கு, அது பெரிய விஷயமாய் தெரியவில்லை!
லாவண்யா, வைஷாலியை பரிதவிப்புடன் கேட்டாள்.
நீ… நீங்க, மதன்கிட்ட அன்னிக்கு சொன்னப்ப சரண்யா கால் பண்ணியிருக்காங்க, சரண்யா பாக்க வந்திருக்காங்கன்னு தான் சொன்னீங்களா?
லாவண்யாவின் குரலும், கேள்வியும், வைஷாலிக்கும் எதையோ உணர்த்தியது. யோசித்தவள் தயங்கியவாறே சொன்னாள். வைஷாலியின் குரல் கம்மியிருந்தது.
நான் ஒரு தடவையோ, ரெண்டு தடவையோதான், சரண்யான்னு உங்க பேரைச் சொன்னேன். மீதி டைம், மோஸ்ட்லி, நேத்து கால் பண்ணவிங்க அப்படின்னுத்தான் ரெஃபர் பண்ணேன்.
அவளது பதிலைக் கேட்டவுடன் நடந்தது என்ன என்று லாவண்யாவிற்கு முழுதும் புரிந்தது. அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டவள், அப்படியே நெற்றியில் கை வைத்து, ஓய்ந்து போய் அமர்ந்தாள்.
லாவண்யாவின் செய்கை வைஷாலிக்கு தெளிவாக உணர்த்தியது. தான் பெயரை மாற்றிச் சொன்னதால்தான், பாஸ் அப்படி ரியாக்ட் செய்திருக்கிறார் என்று. வைஷாலிக்கு வருத்தம், பயம், குழப்பம் எல்லாம் ஒரே சமயத்தில் தோன்றியது.
அன்னிக்கு திட்டினவங்களுக்கு இன்னிக்கு பாஸ் வேலையைக் கொடுத்திருக்கார்ன்னா, இவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம். நான் பேரை தப்பா சொன்னதுதான் காரணமா? என்று யோசித்தாள் வைஷாலி.
சர… லாவண்யா, என்று அவளைத் தொட்டாள்.
நான் பேர் மாத்திச் சொன்னதுதான் பிரச்சினையா? ரொம்பப் பெரிய தப்பா? சாரி, லாவண்யா, நான் வேணும்னு எதையும் பண்ணலை. ரியல்லி சாரி.
இ.. இட்ஸ் ஓகே வைஷாலி. தெரியாம நடந்ததுக்கு, நீங்க என்ன பண்ணுவீங்க? எனக்கு இப்பதான் சில குழப்பங்கள் போச்சு. எனி வே, விடுங்க பாத்துக்கலாம்.
இருந்தாலும் மனசு கேளாத வைஷாலி, நான் வேணா பாஸ்கிட்ட போயி சொல்லிட்டு வரட்டா என்று கிளம்பினாள்.
அவளைத் தடுத்த லாவண்யா, அவளிடம் கேட்டாள்.
உங்களுக்கு இந்த வேலை வேணாமா வைஷாலி?
எ… என்னச் சொல்றீங்க லாவண்யா?
இப்ப நீங்க போய் சொன்னீங்கன்னா, மதன் கோபத்துல, வேலையை விட்டே தூக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அதுனால நீங்களா போய் சொல்லாதீங்க.
ஒரு வேளை என்னிக்காவது மதனா வந்து கேட்டா, அன்னிக்கு உண்மையைச் சொல்லுங்க. அப்பக் கோபப்பட்டு ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டாலும், நாந்தான் அப்படி நடந்துக்கச் சொன்னேன்னு சொல்லுங்க. அவன் விட்டுடுவான்.
லா… லாவண்யா!
இது நீங்க தெரியாம செஞ்ச தப்புன்னாலும், இதோட இம்பாக்ட் உங்களுக்கு தெரியாது வைஷாலி. நான் மதன்கிட்ட பேசிக்கிறேன். மதன் கேட்டா மட்டும், நீங்க என் பேரை யூஸ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
மதன் என்று கூப்பிட்ட முறையும் சரி, அவ்வப்போது அவன் இவன் என்றதும் சரி, அவளுடைய தன்னம்பிக்கையும் சரி, எல்லாமே, வைஷாலிக்கு, லாவண்யாவின் பவர் என்ன என்று சொல்லியது.
தவிர, அதன் பின் பல நேரங்களில், லாவண்யா மதனை எதிர் கொள்ளும் விதமும், மதன், லாவண்யா மேல் காட்டும் தனிப்பட்ட அக்கறையும், அவர்களுக்கிடையேயான உறவை இவளுக்கு தெளிவாகக் காட்டியது.
மனசு தாங்காமல், வைஷாலியே, என்னால, உங்களுக்குள்ள ஒரு பெரிய பிரிவு வந்திருச்சே. என்னை மன்னிச்சிருப்பா என்று புலம்பியிருந்திருக்கிறாள்.
லாவண்யாவோ, அவளை சமாதானப்படுத்தியிருக்கிறாள்.
யார் என்ன சொல்லியிருந்தாலும், அன்று, தான் அவனது அறைக்குள் சென்றிருந்தால், இந்தக் குழப்பமே இருந்திருக்காது. அவள் மேலும் தப்பு இருக்கையில், ஏற்கனவே வருத்தப்படுபவளை மீண்டும் வருத்த விரும்பவில்லை லாவண்யா! யாரென்ரு தெரியாதா போதே, மனமிரங்கி, பல முறை இவளுக்காக மதனிடம் பேசி திட்டு வாங்கியவளாயிற்றே!
அந்த வகையில், லாவண்யாவிற்க்கு இன்னொரு நல்ல நட்பு கிடைத்தது.
வைஷாலியிடம் பேசிவிட்டு வந்த அன்றுதான், லாவண்யா, மதியம் மிகவும் அப்செட்டாகக் காணப்பட்டிருக்கிறாள். மதனிடம் ஹாஃப் டே லீவ் எடுத்து விட்டுச் சென்றிருக்கிறாள்.
ஆரம்பத்தில் கடும் வருத்தத்தில் இருந்தவளுக்கு, பின் யோசிக்க யோசிக்க ஒன்று புரிந்தது. அது,
இது வருத்தப்பட வேண்டிய தருணமல்ல, உண்மையில் மிகவும் சந்தோஷப்பட வேண்டிய நேரம்!
தன்னுடைய உயிர்த் தோழி, இன்னமும் அதே அன்புடன் இருக்கிறாள் என்ற உண்மை!
இப்பொழுது கூடுதலாக, ஹாரீசின் மூலம் கிடைத்திருக்கும் அண்ணன் என்ற உறவு!
வைஷாலியின் நட்பு!
எல்லாவற்றுக்கும் மேலாக, தன் காதலன், என் மன்மதன் எந்தத் தருணத்திலும் என் மேலான காதலை நிறுத்தவில்லை!
இது எவ்வளவு பெரிய சந்தோஷம்? இதற்காக நான் பூரித்துதான் நிற்க வேண்டும்!
மனதில் ஏற்பட்ட தெளிவு, அடுத்த நாளிலிருந்து அவளை பழைய லாவண்யாவாக மாற்றியிருந்தது.
ஒரு வகையில் நடந்த நிகழ்வுகளை, மதனுடைய காதலை சரியான சமயத்தில் ஏற்காத தன்னுடைய முட்டாள்தனத்திற்கு, மனதிற்கு வேண்டியவற்களைப் பற்றி யோசிக்காமல், குறைகள் மட்டுமே சொல்லும் சமுதாயத்தைப் பற்றி நினைத்ததற்க்கான தண்டனை என்றே நினைத்தாள்.
அதற்குப் பின்பு அவளை வருத்திய ஒரே விஷயம், இதை எப்படி மதனுக்குச் சொல்வது, சொன்ன பின் அவனுடைய கோபத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்பது மட்டும்தான்!
அந்தச் சூழ்நிலையில்தான் இப்போது லாவண்யா இருக்கிறாள்!
நீ ஏண்டி அன்னைக்கு ரூமுக்குள்ள வரலை? உண்மை தெரிஞ்சும் இத்தனை நாளா, ஏன் என்கிட்ட பேசலை?
எல்லாவற்றுக்கும் நான் அமைதியாகவே இருந்ததில் கடும் கோபமடைந்தவன், என்ன நெருங்கி, என் தோள்களை அழுத்தமாக பிடித்து உலுக்கினான்.
சொல்லு! இத்தனை நாள் ஏன் என்கிட்ட பேசலை? ம்ம்?
மெல்லிய கண்ணீருடன் சொன்னேன்.
எனக்கு பயம்!
என்ன பயம்? ம்ம்?
உ… உண்மை தெரிஞ்சு என்னை வெறுத்துட்டா?
லூசாடி நீ? என்ற மதன், தாங்க முடியாமல் என்னை அணைத்துக் கொண்டான்.
எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணிக்குவியா? ஏண்டி இப்டி பண்ற?
அவன் என்னை அணைத்ததும், என் அழுகை அதிகமாகியது. சமயங்களில் காதலில், திட்டுவதை விட, தண்டிப்பதை விட, மன்னிப்பது மிகவும் தாங்க முடியாததாய் இருக்கிறது.
அந்த வருத்தத்தில், அவன் அணைப்பினூடே சொன்னேன்.
எனக்கு இந்த தண்டனை தேவைதான் மதன். நான் அன்னைக்கு ரூமுக்குள்ள வர்லைல்ல? நீ, முதல்ல காதலைச் சொன்னப்ப முடியாதுன்னு சொன்னேன்ல?! அதுக்கு இந்த தண்டனை தேவைதான்!
போடிங்… இது உனக்கு மட்டுமா தண்டனை?! எனக்கும் தான? அப்ப நான் என்னடி தப்பு பண்ணேன்? நீயும், உன் மொக்கை லாஜிக்கும்!
அவனது கோபமான திட்டல், இப்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது!
மன்னிப்பது காயத்தை ஏற்படுத்துவதாகவும், கோபத்தில் திட்டுவது, காயங்களுக்கு மருந்தாய் இருப்பது என்பது பெரிய வேடிக்கைதான்!
சிறிது நேரம் அப்படியே இருந்த பின், அவனிடம் கேட்டேன்!
ம… மதன், என் மேல கோவமில்லையா?
ம்ம்… கொஞ்ச நஞ்ச கோவமில்லை! வெறித்தனமான கோவம் இருக்கு!
எல்லாமே, இத்தனை நாளா, இதைச் சொல்லாம, தனியாவே கஷ்டப்பட்டுருக்கியேன்னுதான். என்ன பண்ணித் தொலையறது? அப்டியே அறையலாம்னு கூடத்தான் தோணுது! மனசு கேக்கமாட்டேங்குதே! என்று சொல்லியவன் இறுக்கி அணைத்துக் கொண்டான். லூசு!
காதலன் திட்டினால் இவ்வளவு சந்தோஷமாக இருக்குமா என்ன? ஆனால், நான், அவனது கோபத்தில் தெறித்த அன்பைக் கண்டு பயங்கர மகிழ்ச்சியடைந்தேன். நானும் அவனை இறுக்கிக் கொண்டேன்.
சாரிடா… என்று அவன் மார்புக்குள் இருந்து சொன்னேன்! பதிலுக்கு மதனோ இன்னும் இறுக்கிக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து கேட்டேன். உனக்கு எப்டி வைஷாலிகிட்ட கேக்கனும்னு தோணுச்சு?
ம்… உனக்கா அறிவு வர்ற மாதிரி தெரியலை. அந்த ரெண்டு நாளுக்கப்புறம், எனக்கு மனசு கேக்கலை. நீ வாய் விட்டு சொல்லலைன்னாலும், எப்ப உன்னையே என்கிட்ட கொடுக்க நினைச்சியோ, அப்பியே எனக்கு தெரிஞ்சிடுச்சி.
அதுனால, எப்டி இந்த பிரச்சினை வந்துதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.
உன்னை, உங்க வீட்ல ஏமாத்த நினைச்சப்ப, நீ என்கிட்டயோ இல்ல, அக்காகிட்டயோ கூட ஹெல்ப் கேக்காம இருந்திருக்க மாட்டியேன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதுனால அக்காகிட்ட பேசுனேன்!
அவ சொன்னாளா? அவளை எதுவும் சொல்லாதேன்னு சொன்னேனே?
அறைஞ்சேன்னா? நீயும் சொல்ல மாட்ட, சொல்ல வர்றவங்களையும் தடுத்துடுவ? அப்புறம், நான் என்னதாண்டி பண்றது?
நான் அவகிட்ட கேட்டது ஒண்ணுதான், நீ, அந்த பிரச்சினை சமயத்துல, என்கிட்ட ஹெல்ப்புக்காக வந்தியா இல்லையா, ஜஸ்ட் யெஸ் ஆர் நோ மட்டும் சொல்லுன்னு கேட்டேன்.
அவ யெஸ்னு சொன்னா.
அப்புறம்தான், நானா, அந்த டைம்ல வைஷாலிதானே, எல்லாம் பாத்துகிட்டான்னு அவளைக் கேட்டேன். இப்ப அவளைக் கேட்டதுக்கப்புறம்தான் எல்லா விஷயத்தையும் சொன்னா. அதுக்கப்புறம் சொல்ல வந்தவளை, நீ தடுத்ததும் சொன்னா.
நீ ஏன்டி, அப்பவே என்கிட்ட வந்து சொல்லலை?
-------
சொல்லுடி!
எ… எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு வர்றது?
முதல்ல லவ்வைச் சொன்னப்பவும், முடியாதுன்னு சொல்லிட்டு, இப்ப இந்தச் சமயத்துலியும், தப்பே பண்ணாத உன்னை திட்டி, என்னை பாக்க வராதன்னு பேசிட்டு, இப்ப எல்லாம் தெரிஞ்ச பின்னாடி வந்தா அது, என் காதலுக்குதானே அசிங்கம்! எப்டி வர்றது?
உசிரா காதலிக்கிறவனை, நம்பாத நான்லாம் என்ன பொண்ணு? ம்ம்?
நான் இயல்பாக, எந்தளவு அவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும், இன்னும் என்னை அழுத்தமாக இறுக்கிக் கொண்டான். பின் சொன்னான்.
உனக்கு என்னடி குறைச்சல்? என் உசிருடி நீ! அதுக்கா இவ்ளோ யோசிச்ச? இப்பியும், நானா கண்டுபிடிக்காட்டி, நீ சொல்லாம, தனியாவே ஃபீல் பண்ணியிருந்திருப்பீல்ல?
சத்தியமா இல்லை… நீ என்னை நம்பனும். இந்த ஊட்டி ட்ரிப் முடியுறதுக்குள்ள உன்கிட்ட இதை பேசிடனும்னு நினைச்சேன்.
இன்ஃபாக்ட், இன்னிக்கு, நீ ஆரம்பிக்காட்டி, நானே பேசியிருந்திருப்பேன்…. காலையில நீ எனக்கு நகை எடுத்துக் கொடுத்தப்பவே என்னால தாங்க முடியலை. அதுனால எப்புடியும் இன்னிக்கு பேசிடலாம்னுதான், உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். நீ, எ… என்னை நம்புறீல்ல?
ஏய்… ச்சீ… உன்னை நம்பாம வேற யாரைடி நம்பப் போறேன். அதான் ரெண்டு நாளா, என்னென்னமோ யோசிச்சிகிட்டு, குழப்பமா இருந்தியா?
அவன் அந்தளவு என்னைக் கவனித்திருப்பதும், அவன் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையும், என்னை மலைக்க வைத்தது.
அவனை இறுக்கி அணைத்து, ஆம், என்று, அவன் அணைப்புக்குள்ளேயே தலையசைத்தேன்.
இருவரும் காற்று கூட புகாத வண்ணம் மிகவும் இறுக்கமாக அணைத்திருந்தோம். எல்லா உண்மைகளும் தெரிந்த பின், எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, காதலுடன் கூடிய ஒரு அணைப்பு, எவ்வளவு பெரிய வரம் என்று அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.
அவனுடைய மார்பில் என்னை புதைத்துக் கொண்ட பொழுது, சிறு வயதிலிருந்து நான் மிகவும் மிஸ் செய்த என் தாயை அவனிடத்தில் உணர்ந்தேன்.
இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? இவனுக்கு நான் என்ன செய்து விடப் போகின்றேன், இவன் தரும் அன்பை பன்மடங்கு இவனுக்கு திருப்பித் தருவதை விட?
அப்படியே, அவனையும் இழுத்துக் கொண்டு அப்படியே பெட்டில் சரிந்தேன். மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து, அவனது உடலுக்குள் முழுதும் ஒன்றி, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
                     
அப்படியே சிறிது நேரம் இருந்தோம். பின் சிறிது நேரம் கழித்து விலகப் பார்த்தவனை, நான் விடாமல் இன்னும் இறுக்கிக் கொண்டேன்.
ஏய்… விடு!
ம்கூம்…
ஏன்?
இப்படியே இருக்கலாம்!
சரி, கொஞ்சம் ரெஃப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். கொஞ்சம் ஸ்வெட்டிங்கா இருந்துதுல்ல.
பரவாயில்லை. இப்படியே இருக்கலாம்!
ஏய், எங்கியும் போகலை. ரெஃப்ரெஸ் ஆயிட்டு வர்றேன். விடு!
ம்கூம்! இங்கியே இரு! இப்டியே இரு!
ஏய், என்னடி ஆச்சு? என்ன வேணும் உனக்கு?!
அவனை இறுக்கியிருந்தவள், அவன் மார்பில் புதைத்திருந்த தலையை மட்டும் உயர்த்தி, அவனைப் பார்த்துச் சொன்னேன்!
நீதான் வேணும்! தர்றியா?!

No comments:

Post a Comment