CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 4


நாளைக்கு என்ன வேலை உனக்கு? அடுத்த நாள் இரவு, சாப்பிடும் போது அவளிடம் கேட்டேன்!
ஒரு வேலையும் இல்லை! சொல்லு!
நாளைக்கு காலைல 8 மணிக்கு ரெடியா இரு. ஒரு இடத்துக்கு போகலாம். 
கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னேன். பிரச்சினையை என்கிட்ட சொல்லிட்ட, அதுனால அதை மறந்துடு, இன்னமும் நீ அதை நினைச்சு ஏதும் குழம்பிகிட்டு இருக்காத. நாளைக்கு உன்னைப் பாக்குறப்ப, உன்கிட்ட அதே பழைய தைரியம், தன்னம்பிக்கை இருக்கனும்னு எதிர்பாக்குறேன். இது என் ஆசை! 
அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் புன்னகை செய்தாள். சரி!
அடுத்தா நாள் காலை. நானே அவளை காரில் அழைத்துச் சென்றேன். சொன்ன படியே பழைய கம்பீரத்தை அடைந்திருந்தாள். நல்ல ஒரு காட்டன் சாரியில், கட்டப்பட்டிருந்த நேர்த்தியில், மரியாதையூட்டும் அலங்காரத்தில், கொஞ்சம் ஸ்டைலாகவும் அவளைப் பார்க்கும் போது, எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. புடவையைப் போல், ஒரு பெண்ணை செக்சியாகவும், மிகுந்த கம்பீரமாகவும் காட்டக் கூடிய உடை ஏதேனும் உண்டோ?
எங்க போறோம்?
நீயே தெரிஞ்சிக்குவ!
அவள் முறைத்தாள், நான் புன்னகைத்தேன்.
கொஞ்ச நேரப் பயணத்தில், கார் எங்களது அலுவலக ஹெட் ஆஃபிசை அடைந்தது. அவள் முகத்தில் குழப்பம் இருந்தாலும், அமைதியாக என்னுடன் வந்தாள். எனது அறையில் அவளை அமர வைத்து காத்திருக்கச் சொன்னேன்.
பின் சிறிது நேரம் கழித்து, அவளை மீண்டும் அழைத்துக் கொண்டு ஒரு கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு பெரிய குழுவே இருந்தது. அவர்களிடம் அறிவித்தேன்.
ஜெண்டில்மென், நான் சொன்ன மாதிரி, மீட் மிஸ் _______. நம்ம க்ரூப்போட புது போர்டு மெம்பர், எனக்கு அடுத்த பெரிய ஷேர்ஹோல்டர், அண்ட் மை சிஸ்டர்!
ப்ளீஸ் கிவ் அ பிக் ஹேண்ட்!
கான்ஃபரன்ஸ் அறையில் பெரிய கரகோஷம்! அவள் முகத்தில் பல உணர்ச்சிகள். யாருக்கும் தெரியாமல் என்னை முறைத்தாள். எதை வெளிக் காட்டினாலும், அது என்னை அவமானப்படுத்தும் என்பதால் அமைதியாக எல்லாருக்கும் நன்றி சொன்னாள். இருந்தாலும், தான் கம்பெனி நிர்வாகத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், நான் எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தாள். அவள் அதைச் சொன்ன போது, என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள்.
அதில் மறைமுக செய்தி இருந்தது. நீ கொடுத்தா நான், வாங்கிக்கனுமா?
சிறிது நேரம் கழித்து, என் அறையில்!
நான் உன்கிட்ட என்ன கேட்டேன், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் சொத்தா கேட்டேன்? இல்ல இதுக்கு ஆசைப்பட்டுதான் நான் வந்தேன்னு நீயா நினைச்சுகிட்டியா? 
தாத்தா என்கிட்ட பணம் கொடுத்ததுக்கே, இங்கியே வேலை செய்யச் சொன்னதுக்கே ஒத்துக்காதவ இப்ப நீ சொன்னா நான் கேட்கனுமா? அவிங்க முன்னாடி சொன்னா, உனக்கு கஷ்டமா இருக்கும்னுதான் நான் கம்முனு இருந்தேன். என்னுடைய முடிவுகளை எடுக்க நீ யாரு? நான் உன்கிட்ட எதிர்பாக்குறது பாசம்தான், ஆனா நீ அதையும் விலை போட்டுட்டீல்ல? அவள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்டிருந்தாள்! கோபத்தில் சிறிது கண் கலங்கியும் இருந்தது. 
நான் அவளையேப் பார்த்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினேன்!
அவள் குடித்து முடித்த பின், அவள் முன் சில டாக்குமெண்ட்களையும், பாஸ்புக்கையும் நீட்டினேன். டாக்குமெண்ட், கம்பெனி ஷேர்களில் 20% அவளது பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. அவளது அக்கவுண்ட்டில், சில கோடிகள் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அவள் இன்னும் கடுப்பானாள்.
முதல்ல டாக்குமெண்ட்ல இருக்குற தேதியைப் பாரு.
பார்த்தவள் அதிர்ந்தாள். ஷேர்களை அவள் பெயருக்கு மாற்றியது, தாத்தா இறந்து ஒரு மாதத்தில் நடந்திருந்தது. அதே போல், அக்கவுண்டில் இருக்கும் பணமும், ஒரேடியாக இல்லாமல், ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை என்று இரண்டு முறை போடப்பட்டு இருந்தது. நான் இன்னொரு லெட்டரையும் அவளிடம் நீட்டினேன். அது தாத்தா, எனக்கு உயிலுடன் சேர்த்து எழுதியிருந்த கடிதம். 
அதில், நான், அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அவளுக்கு தேவைப்படும் சமயத்திலோ அல்லது எப்போது கொடுத்தால் ஏற்றுக் கொள்வாளோ, அப்போது ஒப்படைக்கச் சொல்லியும் இருந்தது. அது அவரது கடைசி ஆசை என்றும் இருந்தது.
அவளுக்கு தாத்தாவின் அன்பைப் பார்த்ததும் மீண்டும் கண் கலங்கியது. பின் என்னைப் பார்த்தாள்.
நான் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தேன். ஆனா, தாத்தாவே, என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு எல்லாமே சொல்லிட்டாரு. இந்தப் பணம், உன்னோட ஷேர் படி, உனக்கு வர வேண்டிய க்வாட்டர்லி ப்ராஃபிட். இன்னிக்கு இதை உனக்கு கொடுக்கனும்னு தோணுச்சு!
ஆனா, எனக்கு பணம் முக்கியமில்லைன்னு உனக்கு தெரியாதா?! இப்போதும் அவள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதில் வேகம் குறைந்திருந்தது.
நீ நல்லவ. பணம் முக்கியமில்லைன்னு நினைக்கிறவ. 
ஆனா, நீ இருக்கிற உலகம் அப்படி கிடையாது. அதிலும் பணம் அதிகம் இருக்கிர இடத்துல, வக்கிரம் பிடித்த ஆட்களும் அதிகம். நீ உன்னைக் காப்பாதிக்கனும்னா, இது இருக்குறது நல்லது. 
ஆக, திறமை மேல நம்பிக்கை வைக்காத, பணத்து மேல வைன்னு சொல்லுற இல்ல?
பைத்தியம் மாதிரி பேசாத? வெறும் திறமையோ, பணமோ யாரையும் காப்பாத்தாது. எல்லாமே, எப்படி உபயோகப்படுத்துரதுங்கிறதுலதான் இருக்கு. கராத்தே கத்துக்கோன்னு சொல்ற மாதிரிதான் இதுவும்! இல்லாதவங்கன்னா ஓகே. உனக்கு இருக்குங்கிறப்ப எதுக்கு இந்த பிடிவாதம்? 
ஓ, காசு கேட்ட ஆளுங்க மூஞ்சில, இந்தப் பணத்தைக் காமிச்சு, என் வாழ்க்கையை காப்பாத்திக்கச் சொல்ற? அப்படித்தானே?!
அவளையே பார்த்தேன். கோபத்தில் அவள் பெருமூச்சு வாங்கினாள்!
கோபத்துல வார்த்தையை விடாத! அமைதியா இரு! அவிங்க சாதாரண மாமனார், மாமியார் மாதிரி கொஞ்சம் சீர் எதிர்பார்த்திருந்தா, நானே இதைக் கொடுக்கச் சொல்லியிருந்திருப்பேன். ஆனா, அவிங்க நடந்துகிட்ட விதம், நீ அனுபவிச்ச கொடுமையை, நான் அவ்வளவு சாதாரணமா விட்டுட மாட்டேன்! இதை சொன்ன போது என் கண்களில் தெரிந்த கோப வெறியைப் பார்த்து அவளே தடுமாறினாள்.
மெல்ல என் கையைப் பிடித்தாள், சாரி என்றாள்!
நான் மெதுவாகச் சொன்னேன், இதை யூஸ் பண்ணி உன் ஆபத்துல இருந்து தப்பிச்சிக்கோன்னு சொல்லலை. இது இருக்குறதே, எதிர்காலத்துல உனக்கு பல ஆபத்துகளை தடுக்கும்னு சொல்லுறேன். சீறுனாத்தான் பாம்புக்கு கூட மரியாதை! இல்லாட்டி, அதுக்கும், மண்புழுவுக்கும் வித்தியாசம் காமிக்க மாட்டாங்க மனுஷங்க. 
தாத்தாவோட ஆசை, எனக்கும் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தது, இனி உன் கையில கொஞ்சம் பணமும், துணைக்கு நானும், நீ பொறுப்பெடுத்துக்க சில கடமைகளும் இருந்துச்சுன்னா, அதுவே உன்னை கொஞ்சம் வழிநடத்தும். 
அன்னிக்கு ஹரீஸ்க்காக அவ்ளோ ஃபீல் பண்ணி பேசுன! ஒரு வேளை நீ அன்னிக்கு சூசைட் பண்ணியிருந்தா, பொய்யான கூட்டத்துல அவரை தனியா விட்டுட்டு போயிருந்தா, அது அவருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? இல்ல நீ சூசைட் பண்ணதுக்கு காரணம் அவிங்க சித்தப்பா, சித்திதான், அதை அவர்கிட்ட சொல்ல வந்தப்ப, அவர் காது கொடுத்து கேக்கலைன்னு தெரிய வந்திருந்தா குற்ற உணர்ச்சிலியே செத்துட மாட்டாரு?
அவளுக்கு, அது வரை இது தோணவில்லை என்பதை அதிர்ந்த, விரிந்த அவள் கண்கள் சொல்லியது!
அதுவும் இல்லாம…சிறிது இடைவெளி விட்டவன் சொன்னேன், என்னால, நீ தற்கொலை வரை போனதை இன்னும் ஜீரணிக்க முடியலை. ஒரு வகையில, அதுக்கு நானும்தானே காரணம்! நான் உன் மேல இன்னும் கொஞ்சம் அன்பா இருந்திருந்தா, நீ நேரடியா என்கிட்ட வந்து சொல்லியிருப்ப, இப்பிடி தற்கொலைக்கு போயிருக்க மாட்ட! இதை என் தப்புக்கான பிராயிச்சத்தம்னு எடுத்துகிட்டாலும் சரி, உனக்கு உரிமையுள்ள பங்குன்னு நினைச்சாலும் சரி, இல்ல தாத்தாவோட கடைசி ஆசைன்னாலும் சரி, நீ இதை ஒத்துகிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! ப்ளீஸ்!
அவள் என் கையைப் பிடித்தாள். டேய், ரொம்ப ஃபீல் பண்ணாத, அப்பிடில்லாம் நான் உன் மேல நம்பிக்கை இல்லாம, உடனே அந்த முடிவுக்குப் போகலை. நான் ஒரு நாள் இதுக்காக ஃபோன் பண்ணேன். நீ எடுத்தவுடனே, என்னனு கேக்காம திட்டி வெச்சுட்ட. அப்புறம் நான் வீட்டுக்கு வந்தப்பயும், உன்கிட்ட பேச முயற்சி பண்ணதுக்கு, நீதான், உனக்கு டைம் இல்லை, ஏகப்பட்ட வேலை இருக்குன்னு பேசுன… அதுலதான் கொஞ்சம் மனசு நொந்து இப்படி நடந்துகிட்டேன்! நீ ஏன் அப்படி பண்ண?
அது…. அன்னிக்குதான் உன் ஃபிரண்டு கூட சண்டை அதான்…என்று கொஞ்சம் தடுமாறினேன். ப்ச்.. அது ஏதோ மூட் அவுட். விடு. தப்புதான்! இப்ப இதை ஒத்துக்கப் போறியா இல்லையா???
அவள் என்னையே ஏதோ நம்பாமல் பார்த்தாள். பின் கேட்டாள், காசு கொடுத்துதான் அன்பை நிரூபிக்கனுமா என்ன?
சும்மா லூசு மாதிரி பேசாத? நான் நல்ல மார்க் வாங்குனப்ப உன்னால முடிஞ்ச கிஃப்ட்டை நீ கொடுக்கலை? வெறுமனே அன்பை மட்டும் காமிச்சிருக்க வேண்டியதுதானே? உன் அனிவர்சரிக்கு ஹரீஸ் கிஃப்ட் தராம இருந்திருந்தா சண்டை போட்டிருக்க மாட்ட? நீ என் மேல காட்டுரது உண்மையான பாசம்ன்னா, என்கிட்டயும் சண்டை போடனும்ல? 
இப்ப சொல்றதுதான், நான் இனி பழைய மாதிரி நடந்துக்க மாட்டேன். உன்கிட்ட உண்மையான அன்போட இருப்பேன். திட்டுவேன், சண்டை போடுவேன், ஆனா உனக்கு ஒண்ணுன்னா, முன்ன இருப்பேன். நீயும் அப்படி இருப்பன்னா, இதை ஒத்துக்கோ!
அவள் என்னையே பார்த்தாள். பின் புன்னகை செய்தாள். பிசினஸ் மேன் இல்ல, அதான் பேச முடியாம மடக்குற?! சரி ஓகே! உனக்காக இதை நான் ஒத்துக்குறேன். 
ஆனா, நீ அவங்களை என்னப் பண்ணப் போற? இதுல ஹரீசுக்கு எந்த வருத்தமோ, சங்கடமோ வரக் கூடாது. என்கிட்டயே அவிங்களுக்காக சண்டை போடுரவர், நீ ஏதாவது பண்ணப் போயி, எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ? என்னால, உங்க ரெண்டு பேருக்கு நடுவுல பிரச்சினை வந்தா, அதைத் தாங்க முடியாது!
கவலைப்படாத, அப்படி ஒரு சிச்சுவேஷன் வராது! நான் அவிங்களுக்கு திட்டம் ரெடி பண்ணிட்டேன்!
அப்பிடியா? என்ன ப்ளான்?
ம்ம், பகைவனை உறவாடிக் கெடு! 
மூன்று மாதங்கள் கழித்து…
ஹரீஸீன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது! என் சட்டையை பிடித்திருந்தான். ராஸ்க்கல், எங்கடா உங்க அக்கா? எதுக்குடா, அவ சூசைட் செஞ்சுட்டான்னு சொல்லி, இங்க வர வெச்சிருக்க?
நான் செய்திருந்த செயல் அப்படி!
இன்று அவர்கள் கல்யாண நாள். அவளை செல்ஃபோனை ஆஃப் பண்ணி வைக்கச் சொல்லிவிட்டு, நான் ஹரீசை வெளியூரிலிருந்து, அழைத்து இப்படி ஒரு நாடகம் ஆடியிருந்தேன்.
அரக்க பரக்க ஓடி வந்தவனை, கெஸ்ட் ஹவுசில் வைத்து அந்த க்ளிப்பிங்கை காட்டியிருந்தேன்.
அது நானும், ஹரீசின் சித்தப்பாவும், தண்ணியடிக்கும் போது பேசிய பேச்சின் ஒரு பகுதி!
*******************
ஏங்க மாமா, எப்ப, ஹரீசோட சொத்தையெல்லாம் எடுத்துக்கப் போறீங்க?
நீ சொன்ன மாதிரிதானே மதன் நடந்துட்டிருக்கு. நான் ஒரு ரூட்டு போட்டிருந்தேன். திடீர்னு, நீ வந்து புது ரூட்டு சொன்ன. நீ சொல்ற படிதானே போயிட்டிருக்கு?
அது சரிதான்! இப்பதான் ஹரீஸ் ஊர்லியே இல்லையே, இப்பியே டாகுமெண்ட்ல கை வெக்கலாம்ல?
அது வெக்கலாம். ஆனா…
ஆனா, என்ன மாம்ஸ்?
மாம்ஸா?
அதான் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம்ல?
அதுக்குன்னு வயசு…
வயசு வித்தியாசம் பாக்கனுங்கிறீங்களா? சரி பாத்துடலாம். அப்படியே, ஸ்டேட்டஸ் வித்தியாசம் பாக்கலாமா?
என்ன மதன் இப்டி பேசுற?
பின்ன என்ன மாமா, இந்தத் திட்டத்துனால எனக்கு ஏதாவது லாபம் இருக்கா? சொத்துல நான் பங்கு கேட்டேனா? எல்லாச் சொத்தும் உங்களுக்குதானே? எனக்கு இது மாதிரி ஆயிரம் மடங்கு சொத்து இருக்கு! நான் யாரைவது தூக்கனும்னு நினைச்சா, எனக்கு யார் உதவியும் தேவையில்ல!
பைசா பெறாத இந்த சொத்துக்கு, அதுவும் உங்க கைக்கு போற சொத்துக்கு, நான் ஏன் இவ்ளோ மெனக்கெடனும்? இந்தத் திட்டம் போடனும்? எனக்கு லாபமேயில்லாத ஒரு விஷயத்துக்கு இவ்ளோ நாள் நான் இங்க தங்கனும்? ம்ம்ம்?
நீங்கல்லாம் இப்ப காசு பாத்த ஆளு! நான் பரம்பரை கோடீஸ்வரன். என் ஒரு கம்பெனிக்கு ஈடாகாது, உங்க சொத்து.
இப்ப உங்க கூட அடிக்கிற தண்ணியையும், நேரத்தையும் இன்னொரு மீட்டிங்ல ஸ்பெண்ட் பண்ணியிருந்தா, ரெண்டு காண்ட்ராக்ட் சைன் பண்ணியிருந்திருப்பேன் தெரியுமா?
ஏன் மதன் கோவிச்சிக்கிற?
பின்ன, நான் உங்களைத் தேடி வந்ததுக்கு ஒரே காரணம், எனக்கும் சில நம்பிக்கையான ஆட்கள் தேவை. இந்த விஷயத்துல மட்டும் இல்லை, இது முடிஞ்சதுக்கப்புறம், என் கம்பெனி ஆபரேஷன்ஸ் சிலதை கவனிச்சிக்க. எப்டி பாத்தாலும் உங்களுக்குதான் லாபம். 
எனக்கு, நீங்க இல்லாட்டி எத்தனையோ பேரு. ஆனா, உங்களுக்கு, நான் பொன் முட்டையிடுற வாத்து!
வேறா யாராவதா இருந்தா, நான் கொடுக்கிற ஆபர்சூனிட்டிக்கு, இந்நேரம் என் காலை அமுக்கி விடக் கூட ரெடியா இருப்பாங்க. நீங்க, என்னான்னா, மாம்ஸ்னு சொன்னதுக்கு, ஓவரா பேசுறீங்க?
சரி கோவிச்சுக்காத மதன்! உன் இஷ்டம் போல கூப்பிடு!
இப்ப, நீங்க தனியா இருக்கிரப்பல்லாம், என்னை பேர் சொல்லிதானே கூப்பிடுறீங்க. ஆஃபிஸ்ல, என் கம்பெனி டைரக்டர்சே என்னைக் கண்டு பயப்படுவாங்க. எனக்கு மரியாதை கொடுக்காட்டி அவன் நிலைமை என்னான்னு தெரியுமா? நான், உங்களை ஏதாவது சொன்னேனா? என்னை ஆஃபிஸ்ல பாத்துருக்கீங்கல்ல?
ம்ம்.. பாத்துருக்கேன்!
எல்லாம் தெரிஞ்சும், நீங்க இவ்ளோ பேசுனா எப்டி?
சரி விடு மதன்.
இப்ப சொல்றதுதான், நான், இந்த வீட்ல இருக்கிரப்ப, என் இஷடத்துக்குதான் இருப்பேன். இது உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க. இல்லாட்டி, நான் போயிட்டே இருக்கேன். என்னச் சொல்றீங்க?
அட எதுக்கு மதன் இவ்ளோ சீரியசா பேசிகிட்டு. நான் சும்மா சொன்னேன். நீ உன் இஷ்டம் போல இருக்கலாம். நீ எப்டி வேணா கூப்டு! வேணும்னா, நீயும் வா போன்னே கூப்பிடேன்.
நான் சொன்னதில், என்னுடைய அசாத்திய சக்தியும், அவனுக்கு தொடர்ந்து என் மூலம் ஆதாயம் கிடைக்கும் என்பதும் அவனது பேராசையைத் தூண்டியிருந்தது. 
ஹா ஹா… வா, போன்னா? குட்! ஐ லைக் இட்!
சரி, இப்பச் சொல்லுங்க மாம்ஸ், ஏன், இன்னும் டாகுமெண்ட்ல கை வெக்கல?
அது வந்து மதன்…
சும்மா சொல்லுங்க!
இல்ல… எனக்கு ஒரு ஆசை.
என்ன ஆசை?
எனக்கு…
ம்ம்.. சொல்லுங்க!
எனக்கு உங்க அக்கா மேல… 
என் அக்காவா? எனக்குதான் சொந்தமே கிடையாதுன்னு சொன்னேன்ல?
சரி, ஹரீஸ் பொண்டாட்டி மேல! ஒரு கண்ணு. அதான், அவளை ஒரு கை பாத்துட்டு…
ஹா ஹா… யோவ்!
யோவா?
பின்ன? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வயசுக்கு மரியாதை கொடுக்கச் சொன்ன! இப்ப என்னான்னா, உன் மருமக மேல கண்ணுன்னு சொல்ற? வயசுக்கு ஏத்த வேலையா அது? அப்புறம் என்னய்யா உனக்குல்லாம் மரியாதை?
சும்மா இரு மதன். உனக்கு எப்படி அவ அக்கா இல்லியோ, அப்பிடிதான், ஹரீசும் எனக்கு மகன் கிடையாது. எல்லாம் வேஷம். எனக்கு, என் அண்ணனையே பிடிக்காது. எப்பப் பார்த்தாலும், நீதி, நியாயம்னு பேசுவான். அதுக்காக, என் கூட உறவையே நிறுத்திட்டான்.
அவன் பையன் ஹரீசை மட்டும் பிடிக்குமா? அவனே பையன் இல்லாட்டி, இவ எப்டி மருமக ஆவா? ஆனா, ஆளு செம குட்டி! இவளை மாதிரி ஒருத்தியைத்தான் ட்ரை பண்ணனும். அதான், அவளை கரெக்ட் பண்ணிட்டு, டாகுமெண்ட்ல கை வெக்கலாம்னு…
ஹரீஸ் கிட்ட, அவ சொல்லிட்டா?
சொல்லிட்டா, அவன் நம்பிடுவானா? அவன் முட்டாள். லூசு! எவனாவுது, மாசம் ஒரு தடவைதான் உன் பொண்டாட்டியைத் தொடனும்னு பரிகாரம் சொன்னா கேப்பானா? இவன் கேட்டானே! என் ப்ளான் கரெக்ட்டா போயிட்டிருந்தது. அவளை மூணு மாசம் டைம் கொடுத்திருந்தேன். அதுக்குள்ள நீ வந்து கெடுத்துட்ட!
அதென்ன மூணு மாசம் கணக்கு?
அது சும்மா, என் சந்தோஷத்துக்கு! ரேப் பண்றதுல என்ன சுகம்? அவளுக்கு வேற வழியே இல்லாத மாதிரி செஞ்சி, அவளாவே, என்கிட்ட வர வெக்கறதுதான் த்ரில்லே! அதுல ஒரு தனி சுகம்!
ஏன் மாம்ஸ், அதான் ஏற்கனவே உங்க ஆஃபிஸ்ல, அங்க இங்கன்னு ரெண்டு மூணு செட் பண்ணியிருக்கீங்களே, அது போதாதா?
உ… உனக்கு எப்டி தெரியும்?
என் பவர் என்னான்னு உங்களுக்குத் தெரியாது மாம்ஸ். எனக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும்! சும்மா சொல்லுங்க.
அது என்னாதான், வெளிய இருந்தாலும், வீட்டுக்குள்ள இப்டி இருந்தா, தனி கிக்குதான் மாப்ளை!
ம்ம்… செம கேடி மாம்ஸ் நீங்க! ஆமா, இதெல்லாம் அத்தை எப்டி அலவ் பண்றாங்க?
அவ கிடக்குறா! நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா அடங்கிடுவா. அவல்லாம், எனக்கு ஒரு பொருட்டே இல்லை!
ஆனா, அத்தைக்கு என்ன குறைச்சல் மாமா, பார்க்க அழகாத்தானே இருக்காங்க!
ம்க்கும்! அவ, அழகா? நீங்க வேற மாப்ளை காமெடி பண்ணிகிட்டு!
ஏன் மாம்ஸ் இப்டி சொல்றீங்க? மேக்கப் பண்ணிக்கிரதில்லை அவ்ளோதானே? அவிங்க கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிகிட்டா நல்லாதானே இருப்பாங்க? அப்பிடி ஒண்ணும் வயசான மதிரி தெரியலியே?
சும்மா காமெடி பண்ணாதீங்க மாப்ளை! அவ, அப்டியே அழகாயிட்டாலும். நீங்க வேற ஏன் அவளைப் பத்தி பேசிகிட்டு.
ம்ம்.. சரி விடுங்க. அப்ப. இதான் உங்க ப்ளான், இல்ல?
ஆமா மாப்ளை!
சரி, அதுக்கும் நானே ப்ளான் பண்ணித் தர்றேன். நாம அவசரப் பட வேண்டாம். இல்லாட்டி பிரச்சினையாகிடும். நீங்கதான் மூணு மாசம் டைம் கொடுத்திருக்கேன்னு சொல்லியிருக்கீங்களே. நான் பாத்துக்குறேன் விடுங்க!
சூப்பர் மாப்ளை. 
ஆனா, ஒண்ணுய்யா! உனக்குல்லாம் மரியாதை குடுக்கனும்னு கேட்ட பார்த்தியா, அதான் செம காமெடி! அதுக்கெல்லாம் உனக்கு தகுதியே கிடையாது! ஹா ஹா ஹா!
என்னுடைய மரியாதை இன்னும் குறைந்ததில், அந்தாளின் முகம் மாறியிருந்தாலும், வேறு வழியில்லாமல், சும்மா சிரித்த படி உட்கார்ந்திருந்தான்.

No comments:

Post a Comment