அவளது அன்றைய பேச்சு, எனக்கு மட்டுமல்ல, என் தாத்தாவிற்கும் அவள் மேல் ஒரு சின்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னும் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆனால், தாத்தா, அவளுடனும் பாசம் காட்ட ஆரம்பித்தார். நாங்கள் கவனித்த வரை, அவளும் பாசத்துக்காக ஏங்குவதும், அவளது பெற்றோர்களின் மேல் வெறுப்பாய் இருப்பதும், சுயமாக படிப்பு, இன்ன பிற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும், மிக முக்கியமாக, முடிந்தவரை அந்த வீட்டின் பணத்தையும், வசதிகளையும் அனுபவிக்காமல் இருப்பதும் புரிந்தது.
இவை யாவும், அவள் மேலுள்ள என் நல்ல அபிப்ராயத்தை அதிகப்படுத்தியது என்றால், தாத்தாவிற்கு அவள் மேல் மிகுந்த பாசத்தை ஏற்படுத்தியது. ஒரு வகையில், தாத்தாவும் பாசத்திற்கு ஏங்குபவரே. மனைவியும் சரியில்லை, பெற்ற பெண்ணும் சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டாள். நானோ, உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை. இந்த நிலையில், இவள் காட்டிய அன்பு, என் தாத்தாவிற்க்கும் மிகுந்த தேவையாய் இருந்தது.
அவள் எவ்வளவு பாசம் தாத்தாவிடம் காட்டினாலும், தாத்தாவிடம் இருந்து கூட, எந்த பணத்தையும், நகையையும், வசதியையும் பெற மறுத்து விட்டாள். வற்புறுத்திய தாத்தாவையும், இதை வாங்கினால், எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள்.
போகப் போக, அவளிடம் நான் பேசா விட்டாலும், அவள் உண்மையானவள், மிக நல்லவள் என்பது இயல்பாகி விட்டது. பல சமயம், அவள் தாத்தாவிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பேன். அவள் என்னைக் கூடச் சீண்டுவாள். ஆனாலும் நான் அமைதியாக இருந்தாலும், அதை ரசிப்பேன். நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாமலே, ஒருவர் மேல் ஒருவர் அன்பும், அக்கறையும், புரிதலும் கொண்டிருந்தோம்.
எப்போதாவது ஏதாவது எனக்கு ஆலோசனை சொல்ல வேண்டியிருப்பின், அவள் தாத்தாவுடன் இருக்கும் போது ஜாடையாக சொல்லிவிடுவாள்.
தாத்தா, ஹாஃப் இயர்லி எக்சாம்ல மார்க் குறைஞ்சிருக்கு, என்னான்னு கேக்க மாட்டீங்களா?
+2 பாடத்தையும் இப்பியே படிக்கச் சொல்லுங்க! சார், இஞ்சினியர் ஆகனும்னா, நல்ல மார்க் வேணும். சாதா காலேஜ்லல்லாம் படிக்கக் கூடாது. இஞ்சினியரிங்னா ஐ ஐ டி லதான் படிக்கனும். அவ்ளோ மார்க் வாங்கனும். சொல்லுங்க தாத்தா!
ஐஐடி க்கு இங்க கோர்ஸ் நடக்குது. பெஸ்ட் இன்ஸ்டியூட், போய் சேரச் சொல்லுங்க.
அவளுடைய ஆலோசனைகள் பெரும்பாலும், நன்மைக்காகவும், என் முன்னேற்றத்திற்க்காகவும்தான் இருக்கும். அவளது அக்கறை தாத்தாவிற்கும் நிம்மதியைத் தந்தது. நானும், அதில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டேன்.
+2விலும், மிக அதிக மதிப்பெண்கள் வங்கினேன். இந்த முறை அவள் கொடுத்த கிஃப்ட்டை தாங்க்ஸ் என்று சொல்லி அமைதியாக வாங்கிக் கொண்டேன். என் மார்க்கிற்கு அண்ணா யுனிவர்சிட்டியில் பொறியியல் கிடைத்தாலும், நான், அவள் படித்த கல்லூரியிலேயே பொறியியல் தேர்ந்தெடுத்தேன். அதற்கும் அவள் பயங்கரக் கோபமானாள். என்னை, என் தாத்தாவின் மூலமாக பயங்கரமாக திட்டினாள்.
எல்லாம் நீங்க கொடுக்குற இடம். கேக்க யாரும் இல்லைல்ல, அதான்!
ஊருல அவனவன், அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடைக்காதான்னு தவிக்கிறான், இவரு அங்கப் போக மாட்டாராம். இந்தக் காசெல்லாம் கடைசி வரைக்கும் வராது. சொந்த அறிவுதான், எப்பியுமே நம்மளை காப்பத்தும்… என்று ரொம்ப நேரம் திட்டினாள். தாத்தாவிற்கும், அவள் காட்டிய அக்கறையால் மகிழ்ச்சியும், நான் எடுத்த முடிவால் வருத்தமும் ஏற்பட்டது.
ஏன் ராசா இப்பிடி பண்ற என்று கேட்டார்.
ரொம்ப நேரம் அவள் திட்டிய போது ஏதும் சொல்லாவன், மெதுவாய் சொன்னேன்.
அவ, சொல்றது எல்லாம் சரிதான். ஆனா, என் எய்ம், இஞ்சினியரிங் மட்டுமில்லை. MBA வும்தான். அதுவும் ஐஐஎம் மாதிரியான காலேஜ்ல நான் MBA படிக்கனும். அதுக்கு என்னை நான் ப்ரிப்பேர் பண்ணனும்னா, இஞ்சினியரிங்ல எனக்கு பயங்கர சவால் இருக்கக் கூடாது. நான் இஞ்சினியரிங் நல்லா படிக்கனும், ஆனா நான் இஞ்சினியர் ஆக மாட்டேன், ஐ யம் கோயிங் டூ பி அ பிசினஸ் மேன்!
அது மட்டுமில்லை, அடுத்த வாரத்துல இருந்து நான், நம்ம கம்பெனிக்கு வரப் போறேன். பிசினஸ் கத்துக்கப் போறேன். இப்பல்லாம், நீங்க ரொம்ப டயர்டா தெரியறீங்க. நான் அண்ணா யுனிவர்சிட்டில படிச்சா, இதெல்லாம் செய்ய முடியாது. இதுக்கெல்லாம், ஒரு நல்ல காலேஜா இருந்தா மட்டும் போதும். இப்பியும் ஏதோ ஒரு காலேஜ்ல சேரலியே? அதான், அவ படிக்கிற காலேஜ்லியே சேர்றேன்னு சொன்னேன்.
நான் சொல்லி முடித்ததும் அங்கு பலத்த அமைதி. என் தாத்தாவிற்க்கோ, இந்த வயதில் எனக்கு இருந்த தீர்க்கமான அறிவையும், தன்னம்பிக்கையையும் கண்டு பெருத்த ஆனந்தம்.
அவ்வளவு நேரம் என்னைத் திட்டிய, என் அக்காவோ, என் முடியை கோதி கொடுத்து, ஆல் தி பெஸ்ட் டா, நீ நல்லா வருவடா என்றூ மனமாரச் சொன்னாள்.
அவள் என்னிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும், நான் அவளிடம் என்றுமே பாசம் காட்டியதில்லை. அதற்காக அவளும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.
அவள் என்னிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும், நான் அவளிடம் என்றுமே பாசம் காட்டியதில்லை. அதற்காக அவளும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.
அதே சமயம், அவளை எனக்கு பிடிக்கும் என்பது, அவளுக்கும் தெரியும். தாத்தா கூட சில சமயம் மனமுருகிச் சொல்லியிருக்கிறார், எனக்கப்புறம், இவனுக்குன்னு யாரிருப்பாங்கன்னு ஃபீல் பண்ணியிருக்கேன், நீ வந்ததுக்கப்புறம் எனக்கு நிம்மதியா இருக்கு, இனி நான் செத்தாலும் கவலையில்லை என்று.
அவளோ தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு, சும்மா கண்டதையும் போட்டு கொழப்பிக்காதீங்க. அதெல்லாம், சார் நல்ல படியா இருப்பாரு. அவருதான், என்னை மட்டுமில்லாம, இன்னும் எத்தனை பேர் இருந்தாலும் பாத்துக்குவாரு என்று நம்பிக்கையூட்டினாள்.
இப்படியே எங்களுடைய உறவு தொடர்ந்தது. இடையே நான் பிஈ முடித்து, சொன்ன படியே ஐஐஎம் மில் MBA முடித்தேன். எங்கள் பிசினசையும் முழுக்க என் கையில் கொண்டு வந்தேன். அது இப்போது பன்மடங்கு விரிந்து நின்றது. என் தந்தையின் அதிகாரம் முழுக்க பிடுங்கப் பட்டது. அவர் ஒரு பொம்மை எம் டி யாக மட்டுமே இருந்தார். அவரையோ, அவரது முதல் மனைவியையோ நான் கண்டு கொள்வது கிடையாது.
பணத்திற்க்காக, என் தந்தை என் மேல் காட்ட முயன்ற போலி பாசத்தை, என் பார்வையிலேயே கிள்ளி எறிந்தேன்.
இடையே அவளும் இஞ்சினியரிங் முடித்து, ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தாத்தா எவ்வளவு வற்புறுத்தியும், எங்கள் நிறுவனத்தில் ஒரு பொறூப்பை எடுத்துக் கொள்ள அவள் சம்மதிக்கவில்லை. அதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தாள். இது எனக்கு அவள் மேலிருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.
அவளுக்கு கல்யாண வயது வருகையில், தாத்தாதான் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். என் தாத்தாவிற்கும், அவளுக்கும் இருந்த பாசத்தை உணர்ந்த அவள் பெற்றோர்களும், தாத்தாவே செய்தாலே மிகச் சிறப்பாகச் செய்வார் என்று அவர் போக்கில் விட்டனர்.
ஆனால் அவளோ, தன்னைப் போன்றே, ஏதாவது ஒரு வேலையில் இருக்கும், நல்ல குண நலன்கள் கொண்ட, ஓரளவு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த வரனைப் பார்த்தால் மட்டுமே ஓகே சொல்லுவேன் என்று கடும் பிடிவாதம் பிடித்தாள். நானே கடுப்பில், இன்னும் கொஞ்சம் பெட்டரா பாத்தா என்ன என்று கேட்டதற்கு, என் கூட சகஜமாக பேசுறீயா என்று கேட்டு என் வாயை அடைத்தாள்.

அப்படிப் பார்த்த வரன்தான் இந்த ஹரீஸ். ஹரீஸ் என் தாத்தாவின், நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நன்கு தெரிந்தவர், மிகவும் நல்ல பையன் என்று தெரிய வருகையில், அவருக்கு அப்பா, அம்மா இல்லை, சித்தி, சித்தப்பாதான் என்றூ தெரிந்தும் சரி என்று அதற்கு ஓகே சொன்னார். அதற்கு முக்கிய காரணம், ஹரீஸூம் ஓரளவு பணக்காரர் என்பதும் மிக நல்ல கேரக்டர் என்பதும்தான். முதலில் இவளும், இந்த வரனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மிடில் கிளாசில்தானே பார்க்கச் சொன்னேன் என்றூ அடம்பிடித்தாள். ஆனால், தாத்தாவோ, பையன் நல்ல பையன், அவிங்க சைடு அப்பா அம்மா இல்லை, அதுனாலத்தான் அது இது என்று சொல்லி அவளை ஓகே சொல்ல வைத்தாள்.
ஹரீஸூடன் அவளுக்கு திருமணம் என்று முடிவு செய்த இரண்டு நாளில், என் தாத்தா மரணமடைந்தார். தாத்தாவின் இறப்பு என்னை பாதித்தடை விட, அவளை பாதித்ததுதான் மிக அதிகம். இறக்கும் தருவாயிலும், என்னிடமும், அவளிடமும், நீங்க ரெண்டு பேருந்தான் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கனும் என்று சொல்லி விட்டு இறந்தார். தாத்தாவின் மரணத்தில்தான், அவள் எவ்வளவு தாத்தாவின் மேல் அன்பு வைத்திருந்தாள், எவ்வளவு பாசத்திற்க்காக ஏங்கினாள் என்பது அவள் கதறலில் தெரிந்தது. அப்பொழுதும், அவளிடம் இருந்து தள்ளி நின்றேனே ஒழிய, அவளை சமாதானப் படுத்தக் கூட இல்லை.
அந்தச் சமயத்திலும் கூட, தாத்தாவின் இறுதிச் சடங்குகளை தான் செய்வதாகவும், தான் அவருக்கு மகன் போல என்று என் தந்தை நாடகமாடுகையில், அவள்தான் என்னை தனியாக இழுத்து, அவரு டிராமா போட்டுட்டிருக்காரு, நீ வேடிக்கை பாத்துட்டிருக்க? அவரை மட்டும் இதுக்கு அலவ் பண்ண, உன் தாத்தா மட்டுமல்ல, நானும் இந்த ஜென்மத்துல உன்னை மன்னிக்க மாட்டேன். உனக்கு வேணா, உணர்ச்சி இல்லாம இருக்கலாம். ஆனா, மத்தவிங்க உணர்ச்சியை மதிக்கக் கத்துக்கோ என்று திட்டினாள்.
அதன் பின் நான் எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக என் தந்தையை ஓரம் கட்டினேன். தாத்தாவின் உயில் படி, அனைத்துச் சொத்துக்களும் எனது பெயருக்கு மாறியது. தாத்தாவின் ஆசைப்படி, அவளுக்கும் ஹரீசுக்கும் கல்யாணம் நடந்தது!
ஹரீஸை பார்க்கும் போது மிக நல்லவராய்தான் தோன்றினார். ஏனோ, எனக்கு அவரது சித்தப்பா, சித்தியைதான் பிடிக்கவில்லை. அவர்கள் ஹாரீஸிடம் பேசுவது, என் தந்தை, என் அம்மாவிடம் நடித்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. இருந்தும் நான் அமைதியாக இருந்து விட்டேன். ஹரீஸும் நல்ல புத்திசாலியாகத்தான் இருந்தார். ஆகையால், அவர்கள் விஷயம் என்று ஒதுங்கி இருந்து விட்டேன்.
அதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறி நிற்கிறது!
அவள் இன்னும் என்னைத் திட்டிக் கொண்டு இருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க, என் மனதுள் குற்ற உணர்ச்சி பெருகியது. ஆரம்பத்திலிருந்து, அவள் என்னிடம் அன்பாகத்தான் இருக்கிறாள். நான் திருப்பி எந்த விதமான உணர்வையும் காட்டாவிட்டாலும், என் மேல் அவளுக்கிருந்த பாசம் அப்படியே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் கூடப் பிறந்தவள் கூட இல்லை!
இவளுக்கென்ன தலையெழுத்து? தாத்தாவே இவள் பங்கிற்கு கொஞ்சம் சொத்து எழுதி வைக்கிறேன் என்று சொன்னதற்கு வலுக்கட்டாயமாய் மறுத்தவள், இன்று தனக்கு யாரும் இல்லை என்று தற்கொலை வரை போயிருக்கிறாள். அப்படி, இவளிடம் கூட அன்பைக் காட்டாமல், என்ன ஒரு வாழ்க்கை வாழ்கிறேன் நான்???
எந்த சம்பந்தமும் இல்லாமல், என் மேல் உருகி உருகி அன்பினைக் கொட்டும், இவளிடம் கூடத் திருப்பி அன்பினைக் காமிக்காமல், என் அம்மாவையும், அப்பாவையும் குறை சொல்ல என்னத் தகுதி இருக்கிறது?
எதற்க்கு அப்படி வாழனும்? அப்படி வாழ்ந்து என்ன சாதித்து விடப்போகிறேன். நான், என்னை மாற்றிக் கொண்டேயாக வேண்டும் என்கிற எண்ணம், என் மனதில் வலுப் பெற்றது.
மெல்ல வாய் விட்டுச் சொன்னேன். சாரி!
திட்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். அதான் ஏற்கனவே சொல்லிட்டியே, இப்ப எதுக்கு சொல்ற?
அப்ப சொன்னது, நான் உன்கிட்ட பேசுன முறைக்கு. இப்ப சொல்றது, நீ எவ்ளோ என் மேல பாசமா நடந்துகிட்டாலும், உன்னை புரிஞ்சிக்காம இருந்ததுக்கு.
எனக்கு, அம்மா போனதுக்கப்புறம், யார் மேலயும் நம்பிக்கையே வரலை. ஒரு மாதிரி, மனசு கல்லா மாறிடுச்சி. அப்படியே, என்னைச் சுத்தி, நானே ஒரு வேலி போட்டுகிட்டேன்.
தாத்தாவோட இறப்புல நீ ஃபீல் பண்ணது, என்கிட்ட பேசுனது எல்லாமே, நீயும் பாசத்துக்காக எவ்ளோ ஏங்குற, எனக்காக எவ்ளோ யோசிக்கிற எல்லாமே தெரியும். ஆனா, அப்ப உனக்கு ஆறுதலா இருந்திருந்தா, நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருப்பியா, சொல்லியிருந்தாலும், அங்க போயும் என்னைப் பத்தி, நான் தனியா இருக்கேனேன்னு யோசிச்சிட்டு இருந்திருப்பன்னு எனக்கு தோணுச்சு, அதான், அப்பவும் சரி, கல்யாணத்துலியும் சரி, உன்னை விட்டு தள்ளியே நின்னேன். குறைந்த பட்சம், நீ உனக்கு கிடைச்சிருக்கிர புது குடும்பத்தோட சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, அது உனக்கு இப்படி ஒரு சிக்கலை கொண்டு வரும்னு நினைக்கலை.
இப்படியே தள்ளி நின்னதாலத்தான் உன்கிட்டயோ, உன் ஃபிரண்டு லாவண்யாகிட்டயோ கூட பெருசா உணர்ச்சியை காமிச்சுகிட்டதில்லை.ப்ச்…
இப்படியே தள்ளி நின்னதாலத்தான் உன்கிட்டயோ, உன் ஃபிரண்டு லாவண்யாகிட்டயோ கூட பெருசா உணர்ச்சியை காமிச்சுகிட்டதில்லை.ப்ச்…
பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டேன். இனி உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்லாத. யாரிருந்தாலும், இல்லாட்டியும் நான் இருப்பேன் உனக்கு!
அதான் சொல்றேன், சாரி! என்று தலை குனிந்தேன்
அவள் உணர்ச்சிவயப்பட்டிருந்தாள் என்பதை கலங்கிய கண்களே சொல்லியது. வேகமாக என்னை இழுத்து அவள் மார்போடு அணைத்துக் கொண்டாள். என் முடியை கோதிக் கொடுத்தாள்.

இப்பொழுதும் என்னைத்தான் அவள் ஆறுதல் படுத்துகிறாள்!
அப்படியே கொஞ்ச நேரம் இருந்தோம். மனதுக்கு நெருக்கமான சில பெண்களிடம் இருந்து மட்டுமே வரும் ஒரு பிரத்யோக வாசனை, அவள் உடலில் இருந்து வந்தது. இது நாள் வரை இதனை நான் கவனித்திருக்க வில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. இது கண்டிப்பாக காமத்தின் வாசனை இல்லை. அன்பின் வாசனை. அதில் கொஞ்சம் தாய்மையின் வாசமும் இருந்தது.
காதலியின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும், அன்னையின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவர்கள், இதை உணர்வார்கள்! நான் மெல்ல அவளை விட்டு பிரிந்தேன்.
அது மட்டுமில்லை, உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்துன, அந்த ரெண்டு பேரையும் நான் சும்மா விடப் போறதில்லை.
அப்பொழுதுதான் அவளுக்கு அவர்களைப் பற்றிய ஞாபகம் வந்தது. நான் இருக்கிறேன் என்ற தைரியம், அவளுக்கும் தெம்பினைத் தந்தது.
என்னடா பண்ணப் போற? நீ தனியா என்ன பண்ணுவ?
அவள் இன்னும் என்னை அதே சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் போலும்.
ஹா ஹா, நான் தனியாவாவா? நீ என்ன நினைச்சிட்டிருக்க என்னப் பத்தி? நான் சொசைட்டில எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா??? பிசினஸ்ல, என்னைப் பாத்து அவனவன் பயப்படுவான். உன் மாமானார்லாம் எனக்கு சுண்டைக்கா! அவனை அழிக்கறதுக்கு எனக்கு அரை மணி நேரம் போதும். ஆனா, அவனையெல்லாம் அவ்ளோ சுலபமா அடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமா அடிக்கனும். அவன் உன் கால்ல விழுந்து கெஞ்சனும். அப்படி ஒரு அடியா இருக்கனும்.
அப்படி என்னடா பண்ணப் போற?
தெரியலை, இனிமேதான் யோசிக்கனும். அது என்னான்னு யோசிச்சிட்டு சொல்றேன்.
இப்ப நீ எதைப் பத்தியும் போட்டு குழப்பிக்காம நல்லா ரெஸ்ட் எடு! முடிஞ்சா, அவங்களை என்னா பண்றதுன்னு யோசி. ஓகே?
அடுத்த நாள் காலை!
சாப்பிடும் போது கேட்டாள், ஏதாவது யோசிச்சியா?
இன்னும் இல்லை. நேத்து நைட்டுதானே பேசுனோம். அதுக்குள்ள என்ன அவசரம்?
இல்ல, நான் ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லிட்டு வந்தேன். திரும்பி வரவா போறோம்னு நினைச்சு, ஆனா, இப்ப அவிங்க என்னை எதிர்பாப்பாங்க இல்ல? ஹரீஸ் இன்னிக்கு ஃபோன் பண்ணுவாரு! அவள் குரலில் கொஞ்சம் பயம் தென்பட்டது!
ஏய், நீ எவ்ளோ தைரியமான ஆளு? இதுக்கு ஏன் இப்புடி அப்செட் ஆகுற?
அவன் ரொம்ப வக்கிரம் புடிச்சவண்டா! அவன் வயசு என்ன, என் வயசு என்ன? என்ன உறவு? எப்புடி இப்புடில்லாம் பேச முடியுது?! அவன்கிட்ட என்னத்தை சண்டை போட முடியும்? தவிர, இதுக்கு என்ன பண்ணனுனும்னு தெரியாம, அங்க போகனும்னு நினைச்சாலே நடுங்குதுடா!
அவள் குரலே, அவன் எந்தளவு அவளை சித்ரவதை பண்ணியிருக்கான் என்று தெரிந்தது. அது என்னுள் இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது!
அவள் கையைப் பிடித்தேன். ஏதாவது காரணம் சொல்லி எப்புடியாவுது ஒரு வாரம் இருக்கப் பாரு! அதுக்குள்ள நான் வழி சொல்றேன். அவனை அடிக்கனும்னா, நிமிஷம் போதும், ஆனா, அவன் உனக்கு பண்ணதுக்கு, அவன் பொண்டாட்டி பண்ணதுக்கு ரெண்டு பேரும் அனுபவிக்கனும்! அப்படி ஒரு திட்டத்தோட வர்றேன்! ஓகே???
ம்ம்ம், ஓகே டா! இப்பதான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு!
எல்லாம் சரி, இப்புடியே எத்தனை நாள் இருக்கப் போற? எங்க போச்சு உன் கான்ஃபிடண்ட்லாம், வேலைக்குப் போறப்ப எப்புடி இருப்ப?
பேசிக்கலாவே, நீ இண்டலிஜெண்ட் ஆச்சே? ஏன் அங்கப் போனதுக்கப்புறம், வேலைக்குப் போறதில்லை? ஹரீஸ் கூட உன்னை, அவர் கம்பெனிக்கே வரச் சொன்னாருன்னு சொன்ன? ஏன் இப்பல்லாம் போறதில்லை?
ஹரீஸுக்கும், நான் படிச்சிச்சு வீட்டுல இருக்குறது புடிக்கலைதான்! ஆனா, ஆஃபிஸ்லியும் அந்தாளு இருக்கான்ல? அவன் அங்கேயும் அசிங்கமா பேசுனான், அதான் போறதில்லை!
நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத? ஹரீஸ் பத்தி நீ என்ன நினைக்குற? இவ்ளோ நடந்ததுக்கப்புறமும் நீ அவர் கூட… அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்தினேன்.
அவள் மெதுவாகச் சொன்னாள்.
அவர் ரொம்ப நல்லவருடா! தாத்தா ஏன் அவரை கல்யாணம் பண்னனும்னு சொன்னாருன்னு, அவரோட கேரக்டரைப் பாத்தா புரியுது! எவ்ளோ காசு இருந்தும், கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது.
கண்மூடித்தனமான நம்பிக்கை, அதுவும் தகுதியில்லாதவிங்க மேல வெச்சிருக்காருங்கிறதைத் தாண்டி வேறெந்த பிரச்சினையும் இல்லை. அவிங்க சித்தப்பா பேச்சைக் கேட்டுத் திட்டுனா கூட, என்கிட்ட தனியா சாரி சொல்லுவாரு. சொன்னாலும், ‘நீ எப்பிடி இப்படியெல்லாம் நடந்துக்குற’ன்னு என்கிட்டயே வருத்தப்படுவாரு!
நான் அவரு கம்பெனிக்கு வரலைன்னு சொன்னப்ப கூட, இதுக்கு எதுக்கு இஞ்சினியரிங் படிச்ச, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுனால, உன் திறமை அதிகமானா, இன்னும் வெளிய வந்தாதான் எனக்கு பெருமையே ஒழிய, இப்படி வீட்டோட இருக்கிறது எனக்கு அசிங்கம்னு ரொம்ப பேசுனாரு!
என்னை ரொம்ப விரும்புறாருடா. என்னைப் பத்தி தெரிஞ்சவுடனே, அவரு சொன்னது, உனக்கு நான் எல்லாவுமா இருப்பேன், இனிமே நீ ரொம்ப சந்தோஷமா இருக்கனும்னு சொன்னாரு. உனக்காக நான் ஃபீல் பண்ணப்ப கூட, உனக்கும் நாம் சொந்தமா இருப்போம்னு உண்மையாச் சொன்னாருடா. என்னைத் திட்டுனா கூட, பாசத்தோட அருமை புரிஞ்ச நானே எப்படி இப்படி நடக்கலாம்னுதான் வருத்தப்படுவாரு! அவர் ரொம்ப நல்லவர். அதுதான் அவரோட மிகப் பெரிய ப்ளஸ். ஆனா அவர் சித்தப்பாவுக்கும் அது ப்ளஸ்ஸா போயிடுச்சி!
பேசிக்காவே அவரு பாசத்துக்காக ஏங்குறவருடா! ஒரு விதத்துல அவரும் நம்மளை மாதிரிதாண்டா! நமக்கு பெத்தவிங்க இருந்தும் இல்லாத மாதிரி. அவருக்கோ, உண்மையாவுமே இல்ல. நமக்குனாச்சும் தாத்தா இருந்தாங்க, ஆனா அவருக்கு? இவிங்க சித்தப்பா, சித்தி முதல்ல அவிங்க அப்பா, அம்மாவோட பணத்துக்காக வந்தாங்க. அப்புறம் போலியா நடிச்சு, அப்படியே இருந்துட்டாங்க!
அவர் கதையை என்கிட்ட சொல்லியிருக்காரு. ஆரம்பத்துல அதுல எனக்கு பெரிய தப்பு தெரியலை. ஆனா, அவிங்க சித்தப்பா, சித்தி சுயரூபம் தெரிஞ்சதுக்கப்புறம், எனக்கு அது வேற அர்த்தங்களைக் கொடுக்குது. அவங்க சித்தப்பா, அவரை பார்ட்டிக்கு அழைச்சிட்டு போயிருக்காரு, மறைமுகமா எல்லா வித கெட்ட பழக்கங்களுக்கும் பழக்க நினைச்சிருக்கார். ஆனா, இவரு எதுலியும் மாட்டிக்கலை. சுயமா, நல்ல பழக்க வழக்கங்களோட வளந்தாரு. அதையே, அவரு எங்க சித்தப்பா, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளத்தாரு, அவ்ளோ நம்பிக்கை என் மேலன்னு புரிஞ்சு வெஞ்சிருக்கார். மனுஷனுக்கு இவ்ளோ பாசிட்டிவான எண்ணம் இருக்கக்கூடாது.

கல்யாணம் ஆகி இந்தக் காலத்துல, அவரை நான் ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்! இப்பியும், இந்த உண்மைல்லாம் தெரிஞ்சுதுன்னா, அவர் தாங்க மாட்டாருடா!
கெட்டவனா இருந்தா, செஞ்ச தப்புக்கு ஃபீல் பண்ணத் தேவையில்லை! ஆனா, நல்லவனாச்சே, நம்மளையே நம்பி வந்தவளுக்கு இந்த நிலை வரக் காரணமாயிட்டோமே, அவ சொன்னதை கேக்கலியேங்கிற குற்ற உணர்ச்சிலியே செத்துடுவாரு! எனக்கு அதுதான் பயமா இருக்கு! எனக்கு அவர் கூட சந்தோஷமா வாழனும்டா! அவ்ளோ நல்லவருடா! அவள் கண்கள் கலங்கியிருந்தது.
அவள் பேசப் பேச, எனக்கு, அவள் ஹரீஸ் மேல் வைத்திருந்த காதலைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூட வந்தது. அதே சமயம், உறுதியும் பூண்டேன், அவள் வாழ்வில், மகிழ்ச்சியை கொண்டு வருவது என்று!
No comments:
Post a Comment