அடுத்த நாள் யதேச்சையாக அவளும், என் அக்காவும் பேசியதைக் கேட்டேன்.
என்னடி, என்கிட்ட கூட எரிஞ்சு விழுந்தான். நீ கூப்பிட்டவுடனே கம்முனு வந்துட்டான்.
ரொம்பத்தாண்டி அவனை தலைக்கு மேல தூக்கி வெச்சுகிட்டு ஆடுறிங்க! நீங்கல்லாம் அவனைக் கெஞ்சி கூப்புட்டீங்க. ஒர்க் ஆகலை. சரின்னு, நான் போய் திட்டிக் கூப்பிட்டேன். ஒர்க் ஆகிடுச்சி! அவ்ளோதான்.
நீ திட்டுனியா? என்னை விட நீ பயந்த சுபாவம். நானே, சில சமயம் அவன் கோவமா இருந்தா பேச மாட்டேன். நீ எப்பிடிடீ திட்டுன?
தெரில்ல… நான் அதிகம் பழகாதவங்கன்னாதான் அமைதியா இருப்பேன். மதன்கிட்ட எனக்கு அப்படித் தோணலை!
ஓ… டெய்லி ரெண்டு மணி நேரம் பேசிக்கறீங்களோ?
பேசிதான் புரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை. இப்ப நீ மட்டும் என்ன, அவன் கூட டெய்லி ரொம்ப பேசுறியா? ஆனா, அவனை நீ புரிஞ்சிகிட்டதில்லை? அதே மாதிரிதான். நான் வந்ததுல இருந்து பாக்குறேன். நீ சொல்லிக் கேட்டிருக்கேன். அதை வெச்சு, நான் அவனை புரிஞ்சிகிட்டேன். நீயும் கூட, கொஞ்சம் தைரியமா, தாத்தாக்காக வந்து சாப்டுன்னு அதட்டிக் கூப்ட்டிருந்தா, அவனே வந்திருப்பான்.
எனக்கென்னமோ, தாத்தா மதியானமே சாப்பிடலியேன்னு அவனே ஃபீல் பண்ணிட்டு இருந்துருப்பான்னு தோணுது. அதே சமயம் கொஞ்சம் ஈகோ. அவ்ளோதான். நல்லவந்தான். இல்லாட்டி, என் விஷயத்துல தலையிட்டா, வீட்டுக்கு வர விட மாட்டேன்னு சொன்னதுக்கு, உன் சொத்தில்லை, உன் தாத்தா சொத்துன்னு திருப்பி திமிரா நான் பேசியும், அமைதியா சாப்பிட வந்திருப்பானா?
என்னடி சொல்ற? இப்படியில்லாமா பேசுன? உனக்குள்ள ஒரு ஜான்சி ராணி ஒளிஞ்சிருக்கிறதை இப்பதாண்டி பாக்குறேன்! ஹா ஹா!
ஏய் போடி!

அதைக் கேட்டு, எனக்கு அந்த இருவரின் மேலும் நம்பிக்கையும், அன்பும் கூடியது. என்னைச் சரியாக லாவண்யா கணித்திருந்ததும், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், என்னிடம் அப்படி பேசியதும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. ஏனோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதிற்குள் எழுந்தது.
வேண்டுமென்றே அன்று அவள் கிளம்பும் சமயத்தில் அவளைச் சீண்டினேன்.
நேத்து நான் சாப்ட்டுட்டேன். இப்ப, இது என் சொத்துதான? இப்ப நான் நினைச்சா உன்னை வர வேண்டாம்னு சொல்ல முடியுமில்ல என்று நக்கலாகக் கேட்டேன்…
இதுவரை தானாக பேசாத நான், அன்று பேசியது, அதுவும் வெறுமனே சீண்டலுக்காகத்தான் நான் பேசுகிறேன் என்று தெரிந்த என் அக்காவும், மிகவும் ஆச்சரியமாகி நின்றாள்.
சில நொடிகள் திகைத்த லாவண்யாவும், பின் சொன்னாள்.
சட்டம் தெரியாதா உனக்கு! சட்டப்படி, நீ இன்னும் மைனர். அதுனால டெசிஷன்லாம் நீ எடுக்க முடியாது தெரிஞ்சுதா. மேஜர் ஆன பின்னாடி, சொல்லு பாத்துக்கலாம்… என்று அவளும் சீண்டி விட்டுச் சென்றதைப் பார்த்து, என் அக்காவிற்கு இன்னும் ஆச்சரியமானது.
ஆனால், அவள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்த என் உதடுகளில் பல நாட்கள் கழித்து ஒரு புன்னகை குடி வந்தது!
அதன் பின், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அவளது செயல்களை அவளையறியாமல் கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவள் என்னுள் நிரம்ப ஆரம்பித்தாள். அடுத்து வந்த சின்னச் சின்ன நிகழ்ச்சிகளிலெல்லாம், அவளுடைய செயல்கள் எனக்குள் சின்னச் சின்ன சலனங்களை ஏற்படுத்தின. தினமும் அவளுடைய வருகையை நான் எதிர் நோக்க ஆரம்பித்திருந்தேன்.
நான் +2வில் எடுத்த மார்க்குக்கு வாழ்த்து சொன்னாள். அவளும், என் அக்காவும் படிக்கும் கல்லூரியில் சேரும் என் முடிவுக்கு மகிழ்ச்சியடைந்தாள். நான் அவளுடைய கல்லூரியை தேர்வு செய்ததற்கு அவளும் ஒரு காரணம்.
அவள் மேலான என் காதல் வலுப் பெறுவதற்கு மிக முக்கிய சம்பவம் அப்பொழுது மீண்டும் நிகழ்ந்தது.
நான் +2 முடித்து விட்டு என்னச் செய்யப் போகிறேன் என்று சொல்லி, இரண்டு நாட்கள் கழித்து…
அன்று தாத்தா ஏனோ மகிழ்ச்சியாக இருந்தார். என் அப்பாவும், அம்மாவும் ஏதோ அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்கள். அடுத்த இரு நாட்கள், வார இறுதி.
தாத்தா, என்னையும், என் அக்காவையும் கூப்பிட்டார். லாவண்யா சமயங்களில், அக்காவுடன் தங்கி விடுவாள். அன்று அவளும் இருந்தாள்.
தாத்தா கொஞ்சம் பீடிகையுடன் ஆரம்பித்தார். எனக்கு இத்தனை நாளா கவலையா இருந்துச்சு. எனக்கு அப்புறம், உங்களுக்குன்னு யாரு இருக்கான்னு! ஆனா, உன் அக்கா வந்தப்பவே பாதி கவலை தீந்துருச்சு. ரெண்டு பேரும், ஒருத்தருக்கொருத்தர் இருக்கீங்கன்னு. மீதி கவலையும் கூட நேத்து தீந்துடுச்சு!
அக்காதான் கேட்டாள். என்ன தாத்தா சொல்லுறீங்க? அப்படி என்ன நடந்தது?
நேத்து உங்க அப்பாவும், அம்மாவும் வந்து என்னை பார்த்தாங்கம்மா! அவன் ரொம்ப மனசு நொந்து பேசுனான். முன்னல்லாம், காசுன்னு பேசுனவரு, இப்ப அடியோட மாறிட்டாரு. பெத்த புள்ளைங்களே வெறுத்து ஒதுக்குற வாழ்க்கை என்ன மாதிரியான வாழ்க்கை. நாங்களே ஒரு விதத்துல அனாதைங்கதான்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க!
உங்க அப்பாவும் சின்ன வயசுல இருந்து பணத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. இந்த உலகமும் காசில்லாதவங்களை என்னிக்குமா மதிச்சிருக்கு? அதான் காசு வேணும்ங்கிறதுக்காக சில தப்புகளை செய்ய வெச்சிருச்சு. அதனால தயவு செஞ்சு மன்னிச்சிருங்க, என்னையும் ஏத்துக்கோங்கன்னு கெஞ்சி கேட்டுகிட்டாரும்மா!
உங்க அம்மாவும் கூட, நான் வந்ததுல இருந்து மதன் என்னை நெருங்கவே விடலை. என்னை எதிரியாவே பாக்குறான். சின்ன பையன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னுதான் நான் தள்ளி நின்னேன். மத்த படி நான், மதன்கிட்ட கோபமாவோ, வெறுப்பாவோ பேசி நீங்க பாத்திருக்கீங்களா?
பெத்த புள்ளை, வளர்க்க வேண்டிய புள்ளை ரெண்டு பேரையும் தள்ளி நின்னே பாக்க வேண்டிய கொடுமை யாருக்கும் வரக் கூடாதுன்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க. யோசிச்சு பாத்தா, அவிங்க சொன்னது எல்லாம் உண்மைதான்னு தோணுது!
இப்பிடியே எத்தனை நாள், எல்லார் மேலியும் வெறுப்பை காட்டிகிட்டு இருக்க முடியும்? அதுனால, யாருக்கு என்ன பலன்?
அதான் உங்ககிட்ட பேசுறேன். இப்ப எனக்கும் நிம்மதியா இருக்கு. உங்க அப்பா அம்மாவும் திருந்திட்டாங்க. உங்களுக்கும், நீங்க இழந்த அன்பு, பாசம்லாம் இனி கிடைக்கும். எல்லாரும் சந்தோஷமா இருக்கிறதைத் தவிர வேற என்ன எனக்கு வேணும்? என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
எனக்கு, என் அக்காவிற்கும் கூட மனம் கொஞ்சம் நெகிழ்ந்திருந்தது. அதே சமயம் உள்ளுக்குள் கோபமும் இருந்தது. செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு, இப்ப மன்னிப்பு கேட்டா ஆச்சா? அது மன்னிப்பு கேட்ட உடனே கொடுத்துடக் கூடிய தப்பா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தது.
அதே சமயம், இந்த நிகழ்ச்சி தாத்தாவிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்திருக்கிறது என்ற உண்மையும் புரிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களுக்குள்ளேயே, இனி வழக்கம் போல, ஒரு இயல்பான குடும்பமாக நாங்கள் இருக்க முடியும், எல்லா மகிழ்ச்சிகளும் எங்களுக்கும் கிடைக்கும் என்ற செய்தி ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
என்ன இருந்தாலும் பெண் என்பதோடு மட்டுமல்லாமல், இயல்பிலேயே கருணை கொண்டவள் என்பதால், அக்காவும் மிக இளகி இருக்கிறாள், உள்ளுக்குள் இது நல்லது என்ற மனநிலையில் இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.

அப்பொதுதான் லாவண்யா பேசத் தொடங்கினாள்!
இது உங்க குடும்ப விஷயம். நான் தலையிடக் கூடாது. இருந்தாலும், என் ஒபீனியனைச் சொல்லலாமா தாத்தா?
என்னமா இப்படி கேக்குற? நீயும் எனக்கு பேத்தி மாதிரிதாண்டா! அதுனாலதான் உன் முன்னாடி இந்த விஷயத்தை பேசுறேன்.
இது உங்க குடும்ப விஷயம். நான் தலையிடக் கூடாது. இருந்தாலும், என் ஒபீனியனைச் சொல்லலாமா தாத்தா?
என்னமா இப்படி கேக்குற? நீயும் எனக்கு பேத்தி மாதிரிதாண்டா! அதுனாலதான் உன் முன்னாடி இந்த விஷயத்தை பேசுறேன்.
இல்ல, இவளுக்கும், மதனுக்கும் திரும்ப, அவிங்க அப்பா அம்மாவோட பாசம் கிடைக்குதுங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, நான் விரும்புறதெல்லாம், அது உண்மையா இருக்கனும்னுதான், இன்னொரு பெரிய ஏமாற்றம் அவங்களுக்கு கிடைச்சிடக் கூடாதுன்னுதான் பயப்படுறேன்.
அக்கா அவளையே ஆழமாகப் பார்த்தாள். தாத்தாவோ குழப்பமாகப் பார்த்தார். நான் அமைதியாக வேடிக்கை பார்த்தேன், வழக்கம் போல!
நீ என்னம்மா சொல்ற? எனக்குப் புரியலை.
தாத்தா, என்னைத் தப்பா நினைச்சிக்காதீங்க. நான் இப்பவும் யாரையும் குற்றம் சாட்டலை. எனக்குள்ள சில சந்தேகங்கள். அதுனாலத்தான் இப்படிச் சொன்னேன்.
சரிம்மா, உனக்கு என்ன சந்தேகம்னு சொல்லு. எங்களுக்கும் புரியுமில்ல?!!
ஏன் தாத்தா, அவிங்க சொன்னது உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷமா இருந்திருக்கும். அவிங்க, இதை மட்டும்தான் சொன்னாங்களா? இல்ல வேறெதாவது சொன்னாங்களா?

வேற! என்று யோசித்தவர், மெயின் விஷயம் இதுதான்மா. அப்புறம், தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், இப்பருந்து பாக்க ஆரம்பிச்சா, காலேஜ் முடிச்சிட்டு பண்ணிடலாம். இதுவரை நீங்க எங்களுக்கு செஞ்சதுக்காக, நீங்களே உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாருங்க, என்ன வேலை செய்யனும்னு மட்டும் எங்களுக்குச் சொல்லுங்கன்னாங்க! அதுல எதுவும் தப்பு இருக்குறதா எனக்கு தெரியலையேம்மா…
வேற ஏதாச்சும்?
வேற….. என்று யோசித்தவர், ஆங்… நம்ம மதனை, அவன் ஆசைப்பட்ட படி, IIM ல MBA படிக்க வைக்கனும். ஹைதராபாத்ல, IIM க்கு பெஸ்ட் ட்ரெய்னிங் இன்ஸ்டியூட் இருக்கு. அங்க இருக்குற IIT ல சேத்துட்டு, அப்படியே அந்த ட்ரெயினிங் இன்ஸ்டியூட்ல சேக்கலாம், அங்க வேலை செய்யுறவரை எனக்கு நல்லா தெரியும். நான் அவர்கிட்ட உடனே பேசுறேன்ன்னு சூப்பர் ஐடியா சொன்னாரும்மா? இது ரெண்டுதான் சொன்னாரு!
அடுத்து லாவண்யா கேட்ட கேள்வி, எல்லாரையும் அதிர வைத்தது!
மதன் IIM ல படிக்க ஆசைப்பட்டது, அவிங்களுக்கு எப்படி தெரியும்?
தாத்தாவும் யோசிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் என் அக்கா கோபமாக கேட்டாள்.
இப்ப உன் பிரச்சினை என்னடி? என்னத்தை எங்ககிட்ட இருந்து மறைக்கிற?
அக்காவின் கேள்வியில் எனக்கே வருத்தமாயிருந்தது. என் அக்கா, லாவண்யாவை சந்தேகப்படுகிறாளா? எனக்கே, அவள் கேள்வியில் ஒரு லாஜிக் இருப்பது தெரியும் போது, அக்கா எப்படி அவளைச் சந்தேகப்படுகின்றாள்?!
அடிபட்ட பார்வையுடன், சற்றே கலங்கிய விழிகளுடன், லாவண்யாவும் கேட்டாள்.
நான், உனக்கு கெட்டது நினைப்பேனாடி?
லூசு மாதிரி பேசாத! எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ கண்டிப்பா, எனக்கோ, இல்லை வேற யாருக்குமோ கூட கெட்டது நினைக்க மாட்ட! ஆனா, நீ ஏதையோ மனசுல வெச்சுகிட்டு குழம்புற. எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனாலத்தான் இப்படி பேசுற. அது என்னான்னு தெளிவாச் சொன்னாதான், தாத்தாவுக்கும், மதனுக்கும் முழுசா புரியும். ஏன்னா, அவிங்களுக்கு உன்னை ஒன்றரை வருஷமாத்தான் தெரியும். அதான் கேக்குறேன், நீ ஏதாச்சும் மறைக்கிறியா?
லூசு மாதிரி பேசாத! எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ கண்டிப்பா, எனக்கோ, இல்லை வேற யாருக்குமோ கூட கெட்டது நினைக்க மாட்ட! ஆனா, நீ ஏதையோ மனசுல வெச்சுகிட்டு குழம்புற. எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனாலத்தான் இப்படி பேசுற. அது என்னான்னு தெளிவாச் சொன்னாதான், தாத்தாவுக்கும், மதனுக்கும் முழுசா புரியும். ஏன்னா, அவிங்களுக்கு உன்னை ஒன்றரை வருஷமாத்தான் தெரியும். அதான் கேக்குறேன், நீ ஏதாச்சும் மறைக்கிறியா?
லாவண்யா, ஆமாம் என்று தலையாட்டினாள்.
எனக்கு மட்டுமல்ல தாத்தாவிற்கும் அவர்கள் நட்பு, ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, புரிதல் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. பெற்ற அம்மா அப்பாவைப் பற்றி அவள் குற்றம் சொல்லுகிறாள். ஆனால், இவளோ, நீ ஏதையோ மறைக்கிற என்று சரியாகக் கண்டு பிடிக்கிறாள்!
என்னன்னு சொல்லு.
வந்து, மதன் ரெண்டு நாள் முன்னாடி, நான் +2 முடிச்சு என்ன செய்யப் போறேன், IIM ல சேரப்போறேன்னு சொன்னது எல்லாத்தையும், உங்க அம்மா மறைஞ்சு நின்னு கேட்டுகிட்டு இருந்தாங்க.
அது எல்லாத்துக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், தாத்தாதான் கேள்வி கேட்டார்.
சரிம்மா, யதேச்சையாக் கூட கேட்டிருக்கலாம். கேட்டதுக்கு அப்புறமும் கூட மதனோட ஆசையை நிறைவேத்த தானே இப்பியும் ஸ்டெப்ஸ் எடுக்குறாங்க?! இதுல என்ன தப்பு?
மேலோட்டமா பாத்தா சரிதான் தாத்தா. சரி நான் சில கேள்விகள் கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லுங்க.
அன்பு, பாசம்ங்கிறது என்ன அக்ரிமெண்ட்டா? திடீர்ன்னு, இன்ன தேதியில இருந்து இது செல்லும், இது செல்லாதுன்னு பேசுறதுக்கு? மதனுக்கும், பெத்த பொண்ணுக்கும் தப்பு பண்ணதை ஒத்துக்குறவிங்க, அந்தத் தப்பை மறக்கடிக்க என்ன செஞ்சிருக்காங்க? ஏன் இது நாள் வரைக்கும், இது சம்பந்தம்மா இவிங்ககிட்ட பேசவே இல்லை.
ஏம்மா, இவிங்க சின்னப் புள்ளைங்கம்மா! இவிங்ககிட்ட என்னத்தைப் பேசச் சொல்லுற?
தாத்தா, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. இவிங்களா சின்னவங்க? வயசுல வேணா சின்னவங்களா இருக்கலாம். மெச்சூரிட்டில, சின்னவிங்களா?
என் ஃபிரண்டு மேல, எனக்கு இவ்ளோ அன்பு வந்ததே, பெத்த அப்பா, அம்மா தப்பு பண்ணாங்கன்னு தெரிஞ்சவுடனே அவிங்ககிட்ட சண்டை போட்டு, திருத்த முயற்சி பண்ணி, கடைசில எதுக்கும் அவிங்க கேட்கலைன்னு தெரிஞ்ச பின்னாடி, அப்படிப்பட்ட உறவே வேணாம்னு தள்ளி நிக்குறா பாத்தீங்களா, அப்ப இருந்துதான்.
அவ ஒண்ணும் இந்த வீட்டுக்கு வந்த பின்னாடி, ஏன் என்கிட்ட சொல்லலைன்னு சண்டை போடலை.
அவ ஒண்ணும் இந்த வீட்டுக்கு வந்த பின்னாடி, ஏன் என்கிட்ட சொல்லலைன்னு சண்டை போடலை.
இங்க வர்றதுக்கு முன்னாடியே, நீங்க பண்ணது தப்பு, அதுக்கு பரிகாரமா, அந்த காசு பணம் வேணாம்னு சொல்லிட்டு, மதனை மட்டும் நல்ல படியா வளர்த்துக் கொடுக்கனும், அதான் நியாயம்னு அவிங்க அம்மாகிட்டயே சண்டைக்குப் போயிருக்கா. அப்படிப்பட்டவ இவ! இவளா, சின்னப் பொண்ணு?
என் அக்கா, அவள் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டது, இந்த வீட்டுக்கும் வருவதற்க்கு முன்பிருந்தே என்ற விஷயம் எனக்கு புதிதாக இருந்தது. அதே சமயம், அவள் மேலான நம்பிக்கை அதிகரிக்கவும் செய்தது. என் யோசனைகளை, அவளுடைய பேச்சு கலைத்தது.
மதன் இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும், இதே மாதிரி நடந்திருப்பாங்களான்னு எனக்கு தெரியலை. அவன் வயசுக்கு, அவன் ஃபேஸ் பண்ண அதிர்ச்சிகளும் சரி, அதை அவன் எதிர் கொண்ட விதமும் சரி, ஒண்ணும் சாதாரணமானது இல்ல. அப்படிப்பட்ட மதன், தான் அடுத்து MBA எங்க படிக்கனும், எப்படி படிக்கனும், ஏன் படிக்கனும்னு இப்பவே இவ்ளோ தெளிவா இருக்குற மதன் மட்டுன் சின்னப் பையனா என்ன?
சரி இதைப் பத்தி பேச வேணாம். ஆனா, அன்பு காட்டுற மாதிரி ஒரு இடத்துல கூட நடந்துக்கலியே?! முத வருஷம், மதன் அம்மாவுக்கு நீங்க திதி கொடுக்க நினைச்சப்ப கூட, கட்டின கணவரா, அவரு ஒண்ணும் செய்யாமத்தானே இருந்தாரு?! இன்னிக்கு இவ்ளோ முக்கியமான விஷயத்தை நீங்க பேசுறப்ப கூட, அவிங்க உங்க கூட இல்லியே?
எனக்கு என்னமோ, இவிங்க சின்னப்பசங்கன்னு நினைச்சு இவிங்ககிட்ட பேசாம இருக்கலை. அவிங்க காரணமாத்தான், உங்ககிட்ட பேசியிருப்பாங்கன்னு தோணுது!
எனக்கு என்னமோ, இவிங்க சின்னப்பசங்கன்னு நினைச்சு இவிங்ககிட்ட பேசாம இருக்கலை. அவிங்க காரணமாத்தான், உங்ககிட்ட பேசியிருப்பாங்கன்னு தோணுது!
அப்படி என்னம்மா காரணம்?
அவள் சொன்ன பதில் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அது,
ஏன்னா உங்க கிட்டதான், பாசம்னு சொல்லி ஏமாத்த முடியும். தவிர, நீங்கதான், உங்களுக்கு அப்புறம் இவிங்களுக்கு என்ன வழின்னு ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருக்குறீங்க! ஒருவேளை அவிங்க எமாத்தனும்னு நினைச்சா, உங்களைத்தான், அவிங்களால ஈசியா ஏமாத்த முடியும்! அதான்!
லாவண்யாவின் கேள்விகளில் இருந்த தர்க்கம், எல்லாரையும் யோசிக்க வைத்தது. சிறிது நேர யோசனைக்குப் பின், தாத்தாதான் சொன்னார்.
நீ சொல்றது சரிதான்மா! நானே கொஞ்சம் ஏமாந்துட்டேன். ச்சே! அவிங்களைக் கூப்பிட்டு, கட் அண்ட் ரைட்டா, இது ஒத்து வராதுன்னு சொல்லிடுறேன்!
அதற்கும் பதில், லாவண்யாவே சொன்னாள்.
No comments:
Post a Comment