அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். இரண்டு நாட்களாக, அவன் என்னிடம் விளையாடிய காம விளையாட்டுகளும், எல்லாச் சமயத்திலும் அவன் என் மீது காட்டிய காதலும் சேர்ந்து, எனக்கு உள்ளுக்குள் புயலைக் கிளப்பியிருந்தது.
அவனுடைய கைகளை என்னோடு கோர்த்துக் கொண்டேன். அருகருகே அமரும் போது, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டேன். எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, அவனது அருகாமையை, அவன் காதலை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தேன்.
எனது அருகாமையை அவனும் ரசித்தாலும், ஏனோ, என்னைத் தொட தயங்கி நின்றான். ஒரு கட்டத்தில், தாங்க முடியாமல், நானே அவனது கையை எடுத்து என் தோள் மேல் போட்டுக் கொண்டேன்.

எனது செய்கைகளை, மகிழ்ச்சியை அவன் கவனித்துக் கொண்டே இருந்தான். அந்த நாள் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தாலும், சமயங்களில் என்னையே ஆழமாகப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்படியே சுற்றிவிட்டு ரிசார்ட்டுக்கு வந்த போது இரவு ஆரம்பித்திருந்தது...
இரவில் மீண்டும், படுக்கையில் அவனது அணைப்புகுள் வந்த பொழுது அவன் கேட்டான்.
ஏன் லாவி, ஒரு வேளை உங்க அப்பாவும், சித்தியும் வந்து மன்னிப்பு கேட்டா நீ ஏத்துக்குவியா?
அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். பின் கேட்டாள்.
உங்க அப்பாவையும், சித்தியையும் நீ மன்னிச்சிடுவியா?

நான் மாட்டேன் என்று தலையாட்டினேன்.
நானும் அப்படித்தான். அவிங்க என் மேல அன்பு காட்டாததைக் கூட என்னால மன்னிக்க முடியும். ஆனா, என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி வெச்சதை என்னால மன்னிக்கவே முடியாது! இனி என் வாழ்க்கைல, என் சைடுல இருந்து உறவுன்னு யாரும் கிடையாது.
அவள் அப்படிச் சொன்னவுடன் எனது அணைப்பு இறுகியது.
ப்ச்… அவிங்களைப் பத்தி எதுக்கு இப்ப பேசனும்? நீ வேறெதாவது கேளேன்.
கொஞ்சம் தயங்கியவன், என்னைப் பார்த்துச் சொன்னான். உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் லாவண்யா!
என்ன… சொல்லு!
இல்லை… வந்து… அக்கா, அவ பிரச்சினையைச் சொன்னதுக்கப்புறம், எனக்கு பயங்கர கோவம் வந்துடுச்சி. அதுவும் அந்த மோகன் மேல செம கோபம். அவிங்களை எப்படி பழிவாங்குனேன்னு….
மதன் சொல்லச் சொல்ல, அவனது வாயை, என் கையால் மூடினேன்.
நீ ஒண்ணும் சொல்ல வேணாம்!
இல்ல லாவண்யா… வந்து, அது நீ தெரிஞ்சு…
என்ன தெரிஞ்சிக்கனும்? கண்டிப்பா நீ அவங்களை சாதாரணமா அடிச்சிருக்க மாட்ட. வாழ்க்கைல இனி அவன் யார்கிட்டயும், இது மாதிரி நடந்துக்க முடியாத மாதிரிதான் அடிச்சிருப்ப.
எப்ப என் ஃபிரண்டு, நீ இதுக்காக வேலையை விட்டுட்டு, அங்க ரெண்டு மாசத்துக்கும் மேல போயி தங்குனன்னு சொன்னாளோ, அப்பியே தெரிஞ்சிடுச்சி. நீ அவனை மட்டுமில்லை, அவன் ஒய்ஃபையும் எதையோ பண்ணியிருக்கன்னு! அவளும்தான தப்பு பண்ணா?
அப்படி ஒரு அடியைக் கொடுக்கனும்ன்னா, சில நியாய தர்மம்லாம் பாத்துட்டிருக்க முடியாது. அதுனால, அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரிய வேணாம். சொல்லப் போனா, நீ இவ்ளோ பெரிய அடியை, அவளுக்காக, அவிங்களுக்கு கொடுத்தது, எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.
அவ, அன்னிக்கு சொன்னதைக் கேட்டு எனக்கே பயங்கரக் கோபம் வந்துச்சு. உனக்கு எப்படியிருந்திருக்கும்னு எனக்கு தெரியாதா? அந்த மோகன் மட்டும் என் கைல கிடைச்சான்….
அவ எவ்ளோ ஃபீல் பண்ணா தெரியுமா? உனக்குத் தெரியுமா, என் பிரச்சினை காரணமா, நான் அவளுக்கு ஃபோன் பண்ணப்ப, அந்தாளு என்னையும் ஏதோ சொல்லியிருக்கான்.
நக்கலா, உன் ஃபிரண்டையும் வரச் சொல்லுன்னு ஏதோ சொல்லியிருக்கான். அதைக் கேட்டுட்டுதான், இவ என் கூட பேசுறதை கூட நிறுத்திட்டா.
ஆனா, அதுனால எனக்கு நடந்ததைக் கேட்டவ, இன்னிக்கும் உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணிட்டிருக்கா. தான் ஹெல்ப் பண்ண முடியாததாலத்தான், எனக்கு இந்தப் நிலைமைன்னு நொந்துக்குறா! ஹரீஸ்ஸண்ணா வேற, தனியா, நாந்தான் காரணம்னு ஃபீல் பண்ணாரு.
இப்படி நம்ம எல்லாத்தையும் கஷ்டப்படுத்துன அந்த ஆளை, சாதாரணமால்லாம் நீ விட்டிருந்தா, நானே உன்கிட்ட சண்டை போட்டிருப்பேன். பட், அவ முகத்தைக் கூட மோகனால நிமிர்ந்து பாக்க முடியல, இவளைக் கண்டாலே பயந்துகிட்டு ஓடுறான்னு அவ சொன்னதுல இருந்து, நீ, என்ன பண்ணியிருந்தாலும், அது ரொம்ப கரெக்ட்டுன்னுதான் எனக்கு தோணுது!
என்னுடைய விளக்கத்தைக் கேட்டு அவனுக்கு மனசு கொஞ்சம் இளகியிருந்தது. இருந்தும் கேட்டான்.
சரி, நான் கரெக்ட்டாதான் பண்ணேன்னா, என்ன பண்ணேன்னு தெரிஞ்சிக்கோயேன். எனக்கு, உன்கிட்ட மறைக்கிறது கொஞ்சம் சங்கடமா இருக்கு என்று தயங்கித் தயங்கி சொன்னான்…
அவன் உள்ளுக்குள் எதையோ நினைத்து மிகவும் சங்கடப்படுகின்றான் என்று தெளிவாகப் புரிந்ததால் நிமிர்ந்து அவன் கண்களையே பார்த்துச் சொன்னேன்.

இங்க பாரு, இப்பியும் சொல்றேன். எனக்கு அது தெரிய வேணாம்.
எப்ப இந்த மாதிரி விஷயத்துல நியாய தர்மம் பாக்க முடியாதுன்னு சொன்னேனோ, அப்பியே எனக்கு இன்னொன்னும் தெரியும். நீ, உன் மனசாட்சியை மீறி சில விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருப்பன்னு. அதுனாலதான் சொல்றேன் எனக்கு தெரிய வேணாம்ன்னு!
இடையில் பேச வந்தவனை அவள் தடுத்து சொன்னாள்.
என்னை முழுசா பேச விடு. ஒரு விஷயத்தை நீ என்கிட்ட சொல்லாம மறைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கும். ஆனா, நீ மறைக்கனும்னு நினைக்கலியே? நாந்தானே சொல்ல வேணாம்னு சொல்றேன்?!
உனக்கு இவ்ளோ சங்கடத்தைத் தர்ற, உன் மனசாட்சியை உருத்துற ஒரு விஷயத்தை, எப்டிடா சொல்றதுன்னு நீ தவிக்கிற ஒரு விஷயத்தை, நீ என்கிட்ட சொல்ல வேண்டிய கஷ்டத்தை, என்னால உனக்கு தர முடியாது!
தவிர இந்த மனசு, ஒரு குரங்கு மாதிரி. நான் இன்னிக்கு சாதாரணமா எடுத்துக்குற ஒரு விஷயம், நாளைக்கு அது உறுத்துச்சுன்னாலோ, இல்லை என்னிக்காவது பேச்சு வழக்குல நான் அதைச் சொல்லிக் காமிச்சிட்டாலோ, அது நம்ம ரெண்டு பேருக்குமே பெரிய வலியைக் கொடுக்கும். அதை என்னாலியே தாங்க முடியாது. அதுனாலத்தான் சொல்றேன் என்று நிறுத்தியவள், என் கண்களையே பார்த்தவள், இன்னும் அருகில் வந்தாள்…
நீ அந்தாளைப் பழிவாங்க, என்ன பண்ணியிருந்தாலும், அது எவ்ளோ பெரிய தப்பாயிருந்தாலும், அது என்னைப் பொறுத்தவரை தப்புமில்லை. அது எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை! ஓகேயா?
நீ எப்பயும், என் மனசுல, உயரத்துலதான் இருக்கனும். நீ ஃப்ரியா இரு! இட்ஸ் நத்திங்! ஓகே?
அவன் என்னையே பார்த்தான். உணர்ச்சி வேகத்தில் அவன் என்னை இழுத்து என் முகமெங்கும் முத்தமிட்டவன், பின் என்னை இறுக்கி அணைத்து, என் முன் நெற்றியில் முத்தமிட்டு, பின் நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
தேங்க்ஸ் டி!
அவனது உணர்ச்சிவசப்பட்ட நிலையே சொன்னது, அவன் அதை நினைத்து ரொம்ப யோசித்திருக்கிறான் உள்ளுக்குள் என்று. நான் சொன்னது அவனுக்கு மிகப் பெரிய ரிலீஃப் என்று!
இது ஒரு பெரிய ட்ரிக். இது போன்ற சில விஷயங்களின் மூலம், எந்த ஆணையும் ஒட்டு மொத்தமாக, பெண்ணிடம் சரண் அடைய வைக்க முடியும். எல்லாப் பெண்களுக்கும் அந்த ட்ரிக் சரியாகத் தெரியாது என்றாலும், லாவண்யாவிற்கு அது மிகச் சரியாக தெரிந்திருக்கிறது. அது, ஏற்கனவே மனதால் முழுதும் சாய்ந்திருந்த மதனை, லாவண்யாவின் பக்கம் முழுமையாக சரணடைய வைத்தது.
மறந்தும் அவன், எனது திருமண விஷயத்தை அன்று பேசவில்லை. நானும் கூட, நாளை பேசிக் கொள்லலாம் என்றுதான் யோசித்து வைத்திருந்தேன். இந்த இரு நாட்கள், அவனுடைய காதலியாக இருக்க வேண்டும். அதன் பின் என்னை ஏற்றுக் கொள்வதும், வேண்டாம் என்பதும் அவன் முடிவு!
அடுத்த நாள், எழுந்த போது மணி 8. அன்றும் மீட்டிங் போக பிடிக்கவில்லை எனக்கு. ஏனோ, அவன் அணைப்பில், அவன் அன்பிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இந்த உணர்வுகளைக் கண்டு எனக்கே வியப்பாய் இருந்தது.
அடுத்த நாள், எழுந்த போது மணி 8. அன்றும் மீட்டிங் போக பிடிக்கவில்லை எனக்கு. ஏனோ, அவன் அணைப்பில், அவன் அன்பிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இந்த உணர்வுகளைக் கண்டு எனக்கே வியப்பாய் இருந்தது.
என்னுடைய வெளிப்படையான உணர்வுகளைக் கண்டு, அவனுக்கும் கூட ஆச்சரியம் தான்!
எளிதில் அவனிடம் உணர்வை வெளிப்படுத்தாத நான், இன்று மீட்டிங் கூட போகவேண்டாம் என்று இருப்பது, என் அன்பை, அவனுக்குத் தெளிவாக உணர்த்தியது.
சின்சியர் சிகாமணியா இருந்த ஒரு பொண்ணைக் காணோமே, பாத்தியா லாவி என்று என்னிடமே சீண்டி விளையாடிக் கொண்டிருந்தான்.
அவனுடைய சீண்டல்களுக்கு, நான் சிணுங்கும் சமயங்கலிள் எல்லாம், அவனது பார்வை, மிகவும் ரசனையாய் மாறியது. அவன் பார்வை மாறும் சமயங்களில், எனக்குள் வெட்கப் பூக்கள் பூத்தன.
அவனை விடப் பெரியவள்! பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றாகவே வளர்ந்திருக்கிறோம். என்னை அவனும், அவனை நானும் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம்.
ஆனாலும், மனம் கவர்ந்த கள்வனின் ரசனையான பார்வை, ஒரு பெண்ணுக்குள் இந்தளவு வெட்கத்தை பூக்க வைக்குமா என்ன? இதுதான் காதலின் சக்தியா?
காலை, புல்வெளியில் ஏகாந்தமாய் அமர்ந்து டீ குடிக்கும் போது திடீரெனக் கேட்டான்.
ஏய் லாவி, ஸ்விம்மிங் பூல் போலாமா?
ப்ப்ச்… வேணாம் மதன்!
ஏய், உனக்குதான் ஸ்விம்மிங்ன்னா பிடிக்குமில்லை. கம்முன்னு வா!
இல்ல மதன், வேணாம்!
ஏன்?
நான் தயங்கியவாறே சொன்னேன். அந்த டிரஸ் போட்டுகிட்டு, எல்லார் முன்னாடியும் அரைகுறையா இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் பா! வேணாமே!
இதான் மேட்டரா? உனக்கு ஸ்விம்மிங் பிடிக்கும்னு தெரிஞ்ச எனக்கு, இது தெரியாதா? இது ப்ரைவேட் ஸ்விம்மிங். இங்க இருக்கப் போறது, நாம ரெண்டு பேருதான். வா!
எனக்காக அவன் செய்யும் செயல்கள், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. சிறீது தயக்கத்திற்குப் பின், ஒத்துக் கொண்டேன். அந்த உடையில், அவன் முன் நிற்பதே எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது.
இது என்ன உணர்வு! முழுக்க நிர்வாணமாக, இரு இரவுகள் அவனுடன் கழித்திருக்கிறேன்! என்னை அணு அணுவாக ரசித்திருக்கிறான். இருந்தும், இந்த வெட்கம் படுத்தும் பாடு இருக்கிறதே?!
தயங்கியவாறே, ஸ்விம்மிங் பூலில் இறங்கிவிளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென என்னைப் பார்த்து கேட்டான்!
ஏன் லாவி, அப்ப மத்தவிங்க முன்னாடி இருக்குறதுதான் உனக்கு பிடிக்காது. என் முன்னாடி இருக்கிறது உனக்கு பிரச்சினை இல்லை! அப்டித்தானே?
திருடன்! எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேக்குறான் பாரு? என்னைச் சீண்டுறதுல உனக்கு அவ்ளோ சுகமாடா?
தவிப்போடும், வெட்கத்தோடும் பார்த்த என்னை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பீரியட்ஸ், இனி உண்மை தெரிந்த பின் தான் அவனுடன் சேருவது என்ற என் முடிவுகளையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு, அவனை ஆசையாகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது!

மதனுக்கும் கூட உள்ளுக்குள் அப்படித்தான் உணர்ந்தான். வாய் விட்டு பேசாதவள், இப்பொழுது கண்களாலேயே பேசும் அளவிற்கு மாறியிருக்கிறாள்.
சிணுங்கி, வெட்கப்படும் போதுதான் இவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள்?! சில நாட்களுக்கு முன்பு, அருகில் வந்தாளே முறைத்தவள், இப்பொழுது கண்களாலேயே தூண்டில் போடுவதென்ன? என்னை அழைப்பதென்ன?
இப்படி புத்தம் புது மலரைப் போல், இவ்ளோ ஃப்ரெஸ்ஸா, அழகா, இப்படி என் முன்னாடி வெட்கப்பட்டா, என்னால கையை வெச்சுகிட்டு எப்டி சும்மா இருக்க முடியும்?
உண்மையில், ஒரு ஆணுக்கு பெருத்த போதையைத் தருவது, பெண்ணின் நிர்வாணம் அல்ல. எந்த ஆணைக் கண்டு மட்டும் பெண்ணின் உள்ளம் வெட்கப் பூக்களை பூக்கிறதோ, எவனிடம், அவளது கன்னங்கள் சிவக்கிறதோ, அதுவே அந்த ஆணுக்கு பெரிய போதை.
அந்தப் போதையைத்தான் லாவண்யா, மதனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்தத் தருணத்தில் மதன் முடிவு செய்தான். இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரம், முடிந்தால் இன்றே முடிவு கட்டி விட வேண்டும் என்று!

அதன் பின், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, ஸ்விம்மிங் பூலிலேயே விளையாடினோம். எந்த எதிர்பார்ப்போ, காமமோ இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து மிகவும் ஜாலியாக, அந்த இரண்டு மணி நேர விளையாட்டு இருந்தது.
அங்கு விளையாடி விட்டு, எங்கள் ரூமிற்கு வந்தவுடன் சொன்னான்.
ஊட்டி வந்ததுக்கு, உன் ஃபிரண்டுக்கு ஏதாவது வாங்கனும். இல்லாட்டி, என்னையெல்லாம் மறந்துட்டீங்களான்னு ஓட்டியே கொன்னுடுவா! அதனால, லஞ்ச்சுக்குள்ள வெளிய போயிட்டு வந்துடலாமா?
மெல்லிய தலையாட்டிய நான், சின்ன வெட்கத்துடன் அவனைக் கேட்டேன்.
எந்த டிரஸ் போடட்டும்? மாடர்ன் டிரஸ்ஸா? இல்லை சல்வாரா?
எனது கேள்வியும், வெட்கமும், அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் சொன்னான்.
சாரி கட்டு லாவி… ரொம்ப சிம்ப்பிள் சாரியா இல்லாம, கொஞ்சம் கிராண்டா கட்டுறியா? அப்டி ஏதாச்சும் எடுத்துட்டு வந்திருக்கியா? இல்லாட்டி வெளிய வாங்கிக்கலாம்!
அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு சொன்னேன்…
இல்ல, வாங்க வேணாம். இருக்கு.
அங்கிருந்து கிளம்பியவர்கள் நேராகச் சென்றது ஒரு நகைக் கடைக்கு. என் ஃபிரண்டுக்கு, என்னையே ஏதாவது செயின் எடுக்கச் சொன்னவன், ஹரீசுக்கு ஒரு ப்ரேஸ்லெட் வாங்கினான்.
மிக விரைவாகவே இரண்டையும் வாங்கி முடித்ததும், போலாமா என்று கேட்டேன்.
ஆனால், அவனோ, என் கையைப் பிடித்துக் கொண்டு, ஜூவல் செட்ஸ் இருக்கும் இடத்துக்கு சென்று நகைகளைப் பார்க்க ஆரம்பித்தான்
யாருக்கு மதன்? அவளுக்கு செயின் மட்டும் போதும்னு சொன்ன?
என்னிடம் அவன் பதில் சொல்லா விட்டாலும், அவன் செயல் எனக்கான பதிலைச் சொன்னது.
அவன் ஒரு பெரிய நகையை எடுத்து, என் கழுத்தருகே வைத்து அழகு பார்த்ததில் புரிந்தது, அவன் எனக்காக பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று!
எனக்கு வேணாம் மதன்!
அவன் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.
ஏன் நான் கொடுத்தா, வாங்கிக்க மாட்டியா?
அ… அப்டியில்லை, வேணாமே?!
என் கையைப் பிடித்து கொஞ்சம் தனியாகக் கூட்டி வந்தவன், கொஞ்சம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொன்னான்.
கொல்லாதடி! டெய்லி ஒரே ஒரு செயினை மட்டும் போட்டுகிட்டு, சிம்ப்பிளா வர்றப்ப, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?
நீ வீட்டை விட்டு வந்தப்ப, உன் நகை, பணம் எல்லாத்தையும், உன் அப்பாவும், சித்தியும் புடுங்கிகிட்டாங்கன்னு எனக்கு தெரியும்
நீ சிம்ப்பிளா இருந்தாலும் அழகா இருக்கிறங்கிறது உண்மைதான். ஆனா, எண்ணி 10 டிரஸ்ஸை மட்டும் வெச்சுகிட்டு, ஒத்தைச் செயினை மட்டும், திரும்பத் திரும்ப போட்டுக்கிட்டு வர்றப்ப, எனக்கு எப்டி இருக்கும்??? இப்பதான் திரும்ப சம்பாதிச்சு, கொஞ்சம் கொஞ்சமா உனக்குன்னு நீ வாங்க்கிக்குறன்னு எனக்கு நல்லாத் தெரியும்.
இப்ப கட்டியிருக்கிற காஸ்ட்லி புடவையே, என் அக்காவும், மாமாவும், நீ திரும்ப வீட்டுக்கு வந்தப்ப எடுத்துத் தந்ததுன்னு எனக்கு தெரியாதா?
டெய்லி ஆஃபிஸ்ல உன்னை இப்டி பாக்கவும் முடியாம, உனக்கு எதுவும் வாங்கியும் தரமுடியாம, எவ்ளோ ஃபீல் பண்ணேன்னு தெரியுமா?
எல்லாத்துக்கும் மேல, என் வாழ்க்கையிலியே இந்த மூணு நாள்தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள். இந்த சந்தோஷத்தோட ஞாபகர்த்தமா, இங்க உனக்கு ஏதாவது பெருசா வாங்கனும்னு தோணுது! அதனாலத்தான் சொல்றேன், ப்ளீஸ் வாங்கிக்கோ லாவி!
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் என்னை இந்தளவு கவனித்திருப்பதும், புரிந்து வைத்திருப்பதும், இந்த நாட்களை வாழ்வின் பொக்கிஷம் என்று சொன்னதும், அவன் மேல் அளப்பரியக் காதலைக் கொண்டு வந்தது.
எனக்கும் அப்படித்தானே? என் வாழ்விலும், இவைதானே பொக்கிஷமான நாட்கள்?! இந்த ஊட்டி ட்ரிப்பை என் வாழ்நாளில் மறக்க முடியுமா என்ன?
பின் அவனைப் பார்த்து புன்னகைத்த நான், அவன் கையுடன், என் கையினைக் கோர்த்துக் கொண்டு, நகை இருக்கும் இடத்திற்க்கு அவனைக் கூட்டி வந்தேன்.
நான் மிகக் குறைவான செலவில் இருந்தால் போதும், தேவையற்றச் செலவு வேண்டாம் என்றெல்லாம் பிகு செய்யவில்லை.
மாறாக எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை. ஆனால், அவன் முதன் முதலில் எனக்காக, வாங்கித் தரும் நகை, மிகவும் அழகாக, தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவன் காசு, என் காசு என்றெல்லாம் எனக்கு பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை.
அப்படி யுனிக் டிசைன்களாகப் பார்த்து, எனக்கு வைத்துப் பார்த்து, அவனுக்கும் பிடித்த வளையல், செயின், நெக்லஸ், தோடு என்று எல்லாம் இருக்கும் ஒரு ஃபுல் நகை செட்டை வாங்கினேன்.
இப்ப சந்தோஷமா? என்று அவனைப் பார்த்துக் கேட்டேன்.
என் தோள்களில் கையினைப் போட்டு, அவனருகே இழுத்தவன், ரொம்ப ஹேப்பி லாவி என்று புன்னகை செய்தான்.
என் தோள்களில் கையினைப் போட்டு, அவனருகே இழுத்தவன், ரொம்ப ஹேப்பி லாவி என்று புன்னகை செய்தான்.
அவன் அன்பில் நெகிழ்ந்த நான், அவனுடைய தோள்களில் அப்படியே சாய்ந்தேன்.
No comments:
Post a Comment