CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 28


சர்ச்சில் இனிதே இரண்டாவது முறை கார்த்திக்கும் ராஜியும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து விட்டு ரெஸ்டாரெண்டுக்கு அனைவரும் சென்று சாப்பிட சென்றனர்.
அங்கு வைத்து அனைவர்க்கும் பார்ட்டி கொடுக்கப்பட்டது.அங்கும் ராஜி கார்திக்கையே பார்த்து கொண்டிருந்தாள்.
ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றாக ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
ராஜி சாப்பாடை ஏனோவென்று கொறித்து கொண்டிருந்தாள்.அதை கவனித்த கார்த்திக் என்ன ராஜி அமைதியா இருக்க.சாப்பாடு பிடிக்கலையா என்றான்.
பிடிச்சிருக்கு.ரொம்ப.உன்னை.இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தேன்.உன்னாலதான் எல்லாம் என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ம்ஹ்ம் சின்னதாக சிரித்து விட்டு சாப்பிடு என்றான் கார்த்திக்.
அதன் பின் எல்லாம் முடிந்து விட ராஜி கிப்ட்களை பெற்று கொண்டு கார்த்திக்,ராஜி,மகேஷ் மூவரும் வீட்டை நோக்கி காரில் புறப்பட்டனர்.
வீட்டில் காரை நிறுத்திவிட்டு மகேஷ் தன் வீட்டிற்கு சென்று விட ராஜியும் கார்த்திக்கும் சாந்தாவிடம் சொல்லி விட்டு ரூமிற்கு சென்றனர்.
கார்த்திக் முதலில் ரூமிற்கு செல்ல அவன் பின்னால் ராஜி சென்றாள்.
கதவை சாத்தி லாக் செய்த ராஜி டக்கென கார்த்திக்கை கட்டி பிடித்து அவன் உதட்டில் தன் உதட்டை பொருத்தி அவன் தலையை அசைய விடாமல் பிடித்து கொண்டாள்.
நீண்ட நேர முத்தத்திற்கு பிறகு இருவரும் பிரிந்து மூச்சு வாங்கினர்.
ஹே ராஜி என்னாச்சு.உனக்கு.ராஆஅ.
மீண்டும் அவன் உதட்டை கவ்வியவள் அவனை மேற்கொண்டு பேச விடாமல் மெத்தையில் அவனை தள்ளி விட்டாள்.
அவன் விழுந்த வேகத்தில் டிவி ரிமோட்டின் மீது விழுந்து அது டிவி ஆண் பட்டனை அழுத்தியது.
அப்போது டிவி யில் வல்லவன் படத்தில் இருந்து வல்லவா என்னை கொள்ளவா பாடல் ஓடி கொண்டிருந்தது.
கார்த்திக் மீது படர்ந்தவள் அவனை அணைத்து மீண்டும் அவன் உதட்டை கவ்வினாள்.
கார்த்திக் எதுவும் பேசவும் முடியாமல்,ராஜி என்ன செய்கிறாள்,எதற்காக இப்படி நடந்து கொள்கிறாள் என்று தெரியாமல் அவள் கொடுத்த முத்தத்தை கண்கள் மூடி அனுபவித்தான்.
மெல்ல மெல்ல அவனுக்குள் காமம் கிளர்ந்தெழ கொஞ்சம் கொஞ்சமாக ராஜியின் பிடியில் தான் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான்.
இறுதியில் இருவரின் உடைகளும் கட்டிலின் கீழ் விழ கார்த்திக் ராஜியின் மீது படர்ந்திருந்தான்.
அங்கு ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலின் வெளிப்பாடாக கூடல் அரங்கேற ராஜி முழுமையாக கார்த்திக்கை தன்னுள் இணைத்து கொண்டாள்.
முதல் முறையாக அவள் கன்னித்திரை விலக அவள்வ விழிகள் ஓரம் கோடாக கண்ணீர் வடிந்து அவள் காது மடல்களை நோக்கி சென்றது.
அனைத்தும் முடிந்து ராஜியின் வெற்று மார்பின் மேல் கார்த்திக் தலை வைத்து படுத்து இருக்க ராஜி அவன் தலையை கோதி விட்டு கொண்டே கூரையை நோக்கி வெறித்து கொண்டிருந்தாள்.
அவள் கண்களின் ஓரம் இன்னும் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருந்தது.
சிறிது நேரம் கழித்து எழுந்த கார்த்திக் தலையை தூக்கி ராஜியை பார்க்க அவள் அவனை மார்பின் மேல் அணைத்து படுத்து கொண்டு விட்டத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
பதறிய கார்த்திக் வேகமாக எழுந்து சாரி ராஜி.சாரி.நீ என்ன கிஸ் பண்ணினியா.ஏதோ உணர்ச்சி வேகத்துல.சாரி ராஜி.அழாத. என்றான்.
ம்ஹ்ம்.ம்ஹ்ம்.மெல்லிதாக சிரித்தாள் ராஜி.
சந்தோசமா இருக்கு கார்த்திக்.நான் முழு மனசோடதான் என்னை உனக்கு கொடுத்தேன்.இதுக்கு எதுக்கு சாரி கேக்குற.உனக்கு உரிமை உள்ளவ தான நான்.எனக்கு முழு சந்தோசம்.
இல்ல ராஜி.எனக்கு ஆனா புரியல.நீ திடீர்னு அப்படி நடந்துக்கிட்டதும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை.
நீ சரியான டியூப் லைட் டா.ஒரு பொண்ணு சந்தோஷத்துல அழுறதுக்கும் சோகத்துல அழுறதுக்கும் கூட வித்யாசம் தெரியலை.
நிஜமாத்தான் சொல்றியா.
சத்தியமா.நீ இன்னைக்கு சர்ச்சுல நீ நடந்துகிட்ட விதம்.என்னை ரொம்ப ரொம்ப சந்தோச படுத்துச்சு.உனக்கு எப்படி நான் நிருபிப்பேன்னு தெரியலை.அதை சொல்ல வார்த்தைகளும் வரலை.அதான் நான் இந்த நாலு சுவத்துக்குள்ள,இந்த கட்டில்ல அதை வெளிப்படுத்தினேன்.இப்போ புரியுதா.
ம்ம்ம்ம் நல்லாவே.அதான் மேடம் இன்னைக்கு அமைதியா இருந்திங்களா.
தெரியல கார்த்திக்.அங்க மட்டும் யாரும் இல்லனா கண்டிப்பா உன்ன இருக்க கட்டி பிடிச்சி,நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு உனக்கு முத்தம் கொடுத்திருப்பேன்.ஆனா என்ன பண்ண.பொது இடமா போச்சு.இங்க வீட்டுக்கு வர வரைக்கும் எவ்ளோ கண்ட்ரோல் பண்ணினேன் தெரியுமா.
இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.இப்போ கொடுக்கணும்னாலும் கொடுக்கலாம்.
கொடுத்துட்டா போச்சி.நேத்து கொடுத்த மாதிரி.
அய்யயோ அப்ப வேண்டாம்.
கார்த்திக்.
ம்ம்ம்ம்.
கார்த்தி.
ம்ம்ம்.
ஐ லவ் யூ.
நானும்.
நீயும் ஐ லவ் யூ சொல்லு.
நானும் ஐ லவ் யூ.
பிடிச்சிருந்துதா.
ரொம்ப ராஜி.நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா என்று கலைந்த அவள் முடிகளை ஒதுக்கி கொண்டே கேட்டான்.
கஷ்டம் இல்ல கார்த்திக்.சந்தோச படுத்தின.இவ்ளோ நாள் நான் யாருக்காக பாதுகாத்தேனோ அதை உன்கிட்டயே கொடுத்துட்டேன்ங்கிற சந்தோசம்.எனக்குள்ள நீ வந்த அந்த நிமிஷம் இருக்கு பாத்தியா,யாருமே இல்லாத உலகத்துல முதல்ல பிறந்த மனுஷங்களா நாம இருந்ததா தோணுச்சு.அதை எப்படி சொல்ரதுன்னும் எனக்கு தெரியல.இது தான் காதலா.
இதுல இவ்ளோ சந்தோசம் இருக்குதா.இப்படி உடலாலும் மனசாலும் ஒண்ணா இருக்குறதுல இவ்ளோ சந்தோசம் இருக்குதா.எல்லாம் எனக்கு உன்னால தான் கிடைச்சுது.எனக்கு கடைசி வரைக்கும் இந்த சந்தோசம் வேணும் கார்த்திக்.
கண்டிப்பா ராஜி.நான் இருக்கேன்.
நானே உன்கிட்ட வழிய வந்து இப்படி நடந்துக்கிட்டதனால என்ன தப்பா மட்டும் நினைச்சிடாத கார்த்திக்.
ஏய் ச்சீ.ஏன் இப்படி அசிங்கமா பேசுற.இன்னைக்கு நமக்குள்ள நடந்துக்கிட்டது வெறும் செக்ஸ் மட்டும் கிடையாது.அது வேற.லவ்.நீயும் நானும் எவ்ளோ லவ் பண்றோம்னு நாம உடம்பால வெளிப்படுத்திகிட்டோம்.
எனக்கு உன்கிட்ட தேவை இந்த செக்ஸ் கிடையாது ராஜி.லைப்ல இனிமேல் உன்னால செக்ஸ் வச்சிக்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை வந்தாலும் அப்பவும் நான் இதே மாதிரி இதே காதலோடு உன்கூட இருப்பேன்.போதுமா.
அவன் சொன்னதை கேட்டு அவனை கட்டி இறுக்கி கொண்டாள் ராஜி.
ஒரு வழியாக அன்று இரவு அவர்களுக்கு சந்தோசமாக முடிந்தது.
இருவரும் தூங்கவே வெகு நேரம் ஆகி இருந்தது.திடீரென முழிப்பு வந்த கார்த்திக் கண் திறந்து பார்த்தான்.
மணி 4.30 ஐ காட்டியது.தன் வெற்று மார்பின் மீது வெறும் உடலாக தூங்கும் ராஜியை பார்த்தான் கார்த்திக்.
பாசமாக அவள் தலையை கோதி விட்டான்.முடி களைந்து அவள் தூங்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான்.
சாதித்து விட்டேன்.இதோ நான் ஆசைப்பட்ட வாழக்கை.என் தேவதை என் மார்பின் மீது தூங்கி கொண்டிருக்கிறாள்.
என்று அவன் மனம் சந்தோஷத்தில் கத்தியது.
மறுநாள் காலை கண் விழித்த கார்த்திக் அருகில் பார்த்தான் கார்த்திக்.எதிரில் ராஜி அப்போது தான் குளித்து முடித்து அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு சேலை கட்டி கொண்டிருந்தாள்.
மெல்ல பூனை நடை போட்டு அவள் பின்னால் சென்று அவளை கட்டி அணைத்தான் கார்த்திக்.
ஆஆவ்.விடு கார்த்திக்.காலங்கத்தால என்ன இது அதான் நேத்து நைட் ஆசை தீர அனுபவிச்சிட்டல்ல.
ம்ஹ்ம் எனக்கு இன்னும் வேணும்.
போ முடியாது.விடு.
மாட்டேன் என்று அவள் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டு கொண்டே சொன்னான்.
ம்ம்ம்ம்.விடு கார்த்திக்.இப்போ தான் குளிச்சிருக்கேன்.கசக்காத.மறுபடியும் குளிக்க முடியாது.போ முதல்ல குளிச்சிட்டு வா.
ம்ம்ம்ம் மாட்டேன்.
இப்படி சொன்னா நீ கேக்க மாட்ட.போ என்று அவன் பக்கம் திரும்பி அவனை பாத்ரூம் நோக்கி தள்ளினாள்.
ஒரு 5 நிமிடங்களுக்கு பின் ராஜி துண்டு எடுத்து கொடு ராஜி. என்றான்.
பொறு வரேன் என்று சொல்லி கஃபோர்டை திறந்து துண்டை எடுத்து பாத்ரூம் நோக்கி சென்றாள்.
கதவை லேசாக திறந்து கொடு ராஜி என்றான்.
இந்தா பிடி என்று கதவின் பின் பக்கம் கையை மட்டும் நீட்டி கொடுத்தாள் ராஜி.
ராஜி எட்ட மாட்டேங்கிது முன்ன வந்து கொடு ராஜி.
எதுக்கு.ஹே பிராடு.உன் கள்ளத்தனம் எனக்கு தெரியாதா.மரியாதையா வாங்கிக்கோ.இல்லனா கதவுல போட்டுட்டு போய்டுவேன்.பாத்துக்கோ.
ராஜி.ப்ளீஸ் டி.
புடி.
சரி என்று அவன் கொஞ்சம் கதவருகில் வந்து ராஜியின் கையை பிடித்து அவளை உள்ளே இழுத்து கதவை லாக் செய்தான்.
ஹே விடு.ஐயோ.ச்சீ.விடு கார்த்திக் என்று ராஜி சிணுங்கினாள்.
நான் போறேன் என்று அவனை பார்க்காமல் திரும்பி கதவருகே சென்றாள்.
கார்த்திக் அவளை விடாமல் மீண்டும் அவளை இழுத்து ஷவரை திறந்து விட்டான்.
ஹே லூசு.டிரஸ் எல்லாம் நனையுது.ஷவரை நிறுத்து.
மாட்டேன்.இன்னைக்கு என் பொண்டாட்டி என்கூடத்தான் குளிக்க போறா.
லூசு லூசு என்று அவனை அடித்தாள் ராஜி.
பின் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
இருவரும் ஒன்றாக குளித்து விட்டு ராஜி கார்த்திக்கிற்கு தலை துவட்டி விட்டாள்.
பின் அவள் தலை துவட்டி விட்டு டிரஸ் மாற்றி கொண்டாள்.
ட்ரெஸ் மாற்றி விட்டு கார்த்திக்கை பார்க்க அவளுக்கு வெட்கமாக வந்தது.
கார்த்திக் அவள் கையை பிடிக்க ராஜி வெட்கத்தால் முகத்தை திருப்பி கொண்டாள்.கூடவே முகமும் சிவந்தது.
ராஜி.
ம்ம்ம்ம்.
ஐ லவ் யூ.
ம்ம்ம்ம்.
ராஜி.
ம்ம்ம்ம்.
என்ன ராஜி ஒன்னும் பேச மாட்டேன்கிற.
. . . . .
பிடிக்கலையா.
ரொம்ப பிடிச்சிருக்கு.எனக்கு வெட்கமா வருது.உன்ன பார்த்தா.
எங்க என் பொண்டாட்டி வெட்கப்படுறதை நான் பார்க்கட்டும்.
ம்ஹ்ம்.போ என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
ஹே காட்டு.
போ கார்த்திக் நான் போறேன்.
எங்க காட்டு.என் செல்லம்ல.என் புஜ்ஜுல.என் அம்முலு இல்ல.
ம்ஹ்ம்.பேசாத கார்த்திக்.எனக்கு கூட கொஞ்சம் கூச்சமா இருக்கு.போ நான் போறேன் என்று அவனை உதறி விட்டு கிச்சனை பார்த்து ஓடினாள்.
ஹே நில்லு.ராஜி.நில்லுடி.ஒய்.
அவள் அதை சட்டை செய்யாமல் சிரித்து கொண்டே ஓடினாள்.
கார்த்திக் டிரஸ் மாற்றி விட்டு வேளைக்கு கிளம்பஸ் சாப்பிட சென்றான்.
சாந்தா டைனிங் டேபிளில் சாப்பாடை எடுத்து வைக்க ராஜி கிச்சனிலே இருந்தாள்.
கார்த்திக் வரும்போது அடுப்பை பார்த்து நிற்க கார்த்திக் அவள் அருகில் சென்று அவள் இடுப்பில் கிள்ளினான்.
இதை எதிர் பார்க்காத ராஜி அஆவ் என்று கையில் இருந்த கரண்டியை கீழே போட்டாள்.
என்னமா என்ன ஆச்சு என்று சாந்தா கேட்டாள்.
கார்த்திக் சட்டென்று பிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுப்பது போல நின்று கொண்டான்.
லூசு என்று கார்த்திக்கை பார்த்து முறைத்த விட்டு அது.அது ஒன்னும் இல்ல அத்தை.தெரியாம சுட்டுகிட்டேன்.வேற ஒன்னும் இல்லை.என்று சொல்லி சமாளித்தாள்.
கார்த்திக் ராஜியை பார்த்து உதட்டை சுளித்து சிரித்தான்.
கொன்றுவேன் என்பது போல சைகை செய்தாள் கார்த்திக்.
வா என்பது போல கைகளை விரித்து காட்டினான் கார்த்திக்.
ராஜி இடுப்பை தடவிக்கொண்டே டைனிங் டேபிள் சென்றாள்.
கார்த்திக் சிரித்து கொண்டே சாப்பிட ராஜி அவனை பார்த்து கொண்டே சாப்பாடு வைத்தாள்.
கார்த்திக் சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவி கொண்டு ரூமிற்கு சென்றான்.
பின் ராஜி என்று கூப்பிட்டான்.
ராஜி வந்து என்ன என்றாள்.
வேளைக்கு போறேன்.எதாவது கொடுத்து அனுப்பலாம்.ம்ம்ம்ம் என்று வாயை குவித்து முத்தம் கேட்டான்.
போதும் கார்த்திக்.கொஞ்சம் இடம் கொடுத்தா சார் ரொம்பத்தான் போறீங்க.முதல்ல ஆபிஸ் கிளம்புங்க.
ராஜி.புருஷன் பாவம்ல.ப்ளீஸ் .
பரவா இல்லை.புருஷன் பாவம் எனக்கு பிடிக்கட்டும்.முதல்ல கிளம்பு.
ப்ளீஸ் ப்ளீஸ்.ஒண்ணே ஒன்னு டீ.
ம்ஹ்ம்.இன்னைக்கு அவ்ளோதான்.கிளம்பு கிளம்பு என்று அவனை தள்ளி கொண்டு அவனை வேளைக்கு கிளம்பினாள்.
கார்த்திக் சென்று விட ராஜிக்கு சற்று வெறுமையாக இருந்தது.இ
கார்த்திக் இன்று நடந்து கொண்ட விதம் அவளுக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது.
கூடவே வெட்கமும் வந்தது.அப்போது பின்னாள் இருந்து அவளை கட்டி பிடித்து உம்மா என்று அவள் கன்னத்தில் எச்சில் பதிய முத்தமிட்டு விட்டு ஹே பொண்டாட்டி இது போதும் ஈவினிங் வரைக்கும் தாங்கும்.பை டி என்று சொல்லி விட்டு ஓடினான் கார்த்திக்.
ராஜி கன்னத்தை தடவி கொண்டு லூசு.கெட்ட பையன் டா நீ என்று சொல்லிக்கொண்டு சிரித்தாள் ராஜி.
கார்த்திக் வேளைக்கு சென்றதும் ராஜிக்கு தனிமை அவளை வாட்டியது.
கடந்த இரண்டு நாட்களாக தன்னுடைய வாழ்க்கை இவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று அவள் கனவிலும் நினைத்தது இல்லை.
கூடவே கார்த்திக் இன்று செய்த சில்மிஷங்கள் அவளுக்கு வெட்கத்தையும் வரவைத்தது.
ஏனோ அவள் கார்த்திக்கை ரொம்பவே மிஸ் செய்வதாக எண்ணினாள்.
பேசாமல் கார்த்திக்கை லீவ் போட சொல்லிவிட்டு அவன்கூடவே இன்று முழுவதும் இருந்திருக்கலாம் என்று தன்னை தானே திட்டி கொண்டாள்.
அதன் பின் வந்த நாட்கள் இருவருக்கும் சந்தோசமாக சென்றது.
இருவரும் ரொம்பவே ரொமான்ஸ் செய்தனர்.கூடவே போர் அடிக்கும் போது சண்டை போட்டு கொள்வர்.
ஆனால் அவர்கள் சண்டை அதிகபட்சம் 1 நாள் தான்.அடுத்த 10வது மாதம் குட்டி கார்த்திக் வந்தான்.
காதல் அவர்கள் வாழ்க்கையை மேலும் அழகாக்கியது.
அவர்களும் காதலை அழகாக மாற்றி கொன்றனர்.
இனி எல்லாம் சுபமே. . . . . . . . . . .
ரொம்பப ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்.சும்மா இந்த சைட்ல கதை படிச்சிட்டு இருந்த எனக்கு சும்மா ஜாலியா ஒரு கதை எழுதணும்னு தோணுச்சு.
எனக்கு தோணின என்னோட ரியல் லைப்ல நடந்த இன்சிடென்ட் எல்லாம் சேர்த்து ஏதோ சுமாரா இந்த கதையை ஸ்டார்ட் பண்ணினேன்
ஆனா அதுக்கு நீங்க கொடுத்த ரெஸ்பான்ஸ் ரொம்பவே அதிகம்.சில பேர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க,சில பேர் சினிமெட்டிக்கா இருக்குன்னு சொன்னாங்க,சில பேர் கதைல செக்ஸ் இல்லனு சொன்னாங்க.
அதுக்கு எல்லாம் சேர்த்து ரொம்ப ரொம்ப நன்றி.நான் ஒன்னும் பெரிய எழுத்தாளன் கிடையாது.
ஆனா எனக்கும் நீங்க கொடுத்த ஆதரவு தான் என்னால இந்த கதையை எழுத வச்சது.
அதுக்கு தேங்க்ஸ்.
அப்பறம் ஒரு சின்ன கருத்து.யாரும் கோவப்பட வேண்டாம்.என்னடா கதை எழுதிட்டு அட்வைஸ் பண்ரான்னும் நினைக்க வேண்டாம்.
அப்றம் முக்கியமா கதை முடிஞ்சிடுச்சு.இது எதுக்கு தேவை இல்லாம நீங்க சொல்றிங்க.அப்படிலா யாரும் இருக்க மாட்டாங்கன்னு quote பண்ண வேண்டாம்.சும்மா சொல்லணும்னு தோணுச்சு.சொல்றேன்.
பசங்க ஒரு பொண்ணை லவ் பன்னுறான்னா முதல்ல உங்க லவ் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்க.
எப்படியாச்சும் அவ எனக்கு கிடைப்பான்னு நம்புங்க.அந்த நம்பிக்கை தான் நாளைக்கு அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் வரைக்கும் போனாலும் அவளை கண்டிப்பா உங்க கிட்ட வந்து சேர்க்கும்.
முடிஞ்ச வரைக்கும் உங்க லவ்வுல கொஞ்சம் சுயநலமா இருங்க.
உங்களுக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்துச்சுன்னா முதல்ல அந்த பொண்ணுகிட்ட போய் சொல்லுங்க.ஓகே ஆகுறதும் ஆகாததும் ரெண்டாவது விஷயம்.
முடிஞ்ச அளவுக்கு உங்க காதலை அவகிட்ட சொல்லிட்டோம்ங்கிற மனநிம்மதியாச்சும் உங்களுக்கு கிடைக்கும்.
ஒன் சைட் லவ்வுன்னு கேவலமா நினைக்காதீங்க.அதுவும் ரொம்ப புனிதம் தான்.

1 comment:

  1. Awesome bro. Naa padicha story la best and lovably story.

    ReplyDelete