திருமண மண்டபம்.காலை நேரத்தில் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது.
முகூர்த்த நேரம் நெருங்குகிறது.அப்பாவின் வற்புறுத்தலுக்காக கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டாலும் ராஜியின் மீதான காதலை அப்பாவிடம் சொல்ல எனக்கு தைரியம் இல்லை.
தாலி கட்டும் நேரம் நெருங்க எனக்குள் ஒரு பதட்டம்.எங்கிருந்து வந்ததோ அவ்வளவு தைரியம் மேடையில் இருந்து எழுந்துவிட்டேன்.
சுற்றி இருந்த அப்பா,அம்மா,அத்தை,மாமா,சித்தி,சித்தப்பா,ராஜி,பிரியா,சக்தி, என் தங்கை எல்லாரும் அதிர்ச்சியாக பார்க்க நான் அப்பாவிடம் சென்றேன்.
அப்பா நான் ராஜியை ரொம்ப லவ் பன்ரென்ப்பா.அவளை என்னால மறக்க முடியலை.அவளை மனசுல நினைச்சுகிட்டு என்னால போலியா ஒரு வாழ்க்கை வாழ முடியாதுப்பா.எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.என்றேன்.
என்னடா சொல்ற.இப்ப போய் இப்படி சொல்ற.இதை முதல்லயே சொல்லிருக்கலாம்ல.அந்த பொண்ணு உன்னை விரும்புதா.அப்படியே விரும்பினாலும் இந்த பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்ல என்றார் அப்பா.
இந்த பொண்ணுகிட்ட பேசுறது என் பொறுப்புப்பா.நீங்க அதைக்கிட்டையும்,ராஜிட்டையும் பேசுங்கப்பா.ப்ளீஸ் என்று கெஞ்சினேன்.
பின் பெண்வீட்டாரிடம் என் நிலைமையை எடுத்து சொல்ல ஒருவழியாக சமாதானம் ஆனார்கள்.

அப்பா அத்தையிடமும் மாமாவிடமும் சென்று பெண் கேட்க இருவரும் பெண் கேட்க எங்களுக்கும் சந்தோசம்தான்.ஆனால் எதுவாக இருந்தாலும் ராஜியின் முடிவுதான் என்று முடிவை ராஜியின் கையில் கொடுத்தனர்.
நான் ராஜியிடம் சென்று சொல்லு ராஜி நீயும் என்னை லவ் பண்றதான.சொல்லு ராஜி என்றேன்.
ராஜி அழுதுகொண்டே இல்ல.நான் உன்னை லவ் பண்ணல.என்று கையெடுத்து கும்பிட்டு அழதொடங்கினாள்.
ராஜி இப்பவாவது மனசுல உள்ளதை சொல்லு ராஜி.ப்ளீஸ்.மறைக்காம சொல்லு.என்றேன்.
அப்போது அத்தை வந்து அவளிடம் நீயும் கார்த்திக்கை லவ் பண்றியா.எதுவா இருந்தாலும் சொல்லுமா.அழாதன்னு சொன்னாங்க.
அம்மா.என்று அத்தையை கட்டி பிடித்து கொண்டு மார்பில் விழுந்து அழுதாள்.பின் அம்மா எனக்குகே கார்த்திக்கை ரொம்ப பிடிக்கும்மா.நானும் அவனை லவ் பண்றேன்.ஆனால் வேற ஒரு பொண்ணோட கல்யாணம் வரைக்கும் வந்த பின்னாடி நான் இப்போ சொன்னா அது பெரிய தப்பும்மா.என்ன மன்னிச்சிடும்மா என்றால் ராஜி.
பின் என்னை பார்த்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் கார்த்திக்.ஐ லவ் யூ கார்த்திக்.என்னை கல்யாணம் பண்ணிக்கோ கார்த்திக் என்று சொல்லிவிட்டு என்னை கட்டி பிடித்துக்கொண்டு என் முகம் கன்னம் நெற்றி என மாறி மாறி முத்தமிட்டாள் ராஜி.
கெட்டி மேளம் முழங்க ராஜியின் கழுத்தில் தாளி கட்டினேன்.இருவர் முகத்திலும் அளவில்லா சந்தோசம்.
நிமிர்ந்து நில் துளைத்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு நினைப்பு தான் உன் பலம
தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு.
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு நினைப்பு தான் உன் பலம
தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு.
பாடல் ஒழிக்க செல்லை எடுத்து பார்க்க மணி 7 ஆகி இருந்தது.என்னுடைய அலாரம் டோன் அது.
ச்ச என்ன கனவு.அதுக்குள்ள எலுப்பி விட்டுடுச்சே.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம்.என்று இருந்தது.
இன்றோடு வேளையில் சேர்ந்து ஆறு மாதம் ஆகிறது.இப்போதெல்லாம் அவளிடம் பேசும்போதெல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் டா,டி போட்டு பேசும் அளவுக்கு எங்களது பேச்சு வளர்ந்திருந்தது.
தினமும் பேசிவிடுவாள்.இப்போது அவள் +2 படிக்கிறாள்.அவளுக்கு ப்ரபோஸ் செய்து ஒருவருடம் நெருங்குகிறது.
அதே நாள் அதே நேரம் அவளிடம் மீண்டும் என் காதலை மீண்டும் அவளிடம் சொன்னேன்.இந்த முறையும் என் காதல் நிராகரிக்கப்பட்டது.
இந்த முறை நிராகரிப்பின் வலி எனக்கு அதிகமாக இருந்தது.அது என் முகத்திலும் தெரிந்தது.அதை யாரிடமாவது சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அப்போது சென்னையில் இருந்த நாட்கள்.என் அக்கா ரேவதியும் அங்குதான் ஒரு சாப்ட்வெர் கம்பெனியில் வேலை செய்தாள்.அவளிடம் பேசவேண்டும் போல இருந்தது.அவளுக்கு கால் செய்து மெரீனாவிற்கு அழைத்தேன்.
அவளிடம் நடந்தவற்றை எல்லாம் சொன்னேன்.எனக்கு அந்த நேரம் ஆறுதலாய் இருந்தது ரேவதி மட்டும் தான்.
தோழியாய்,அக்காவாய் எனக்கு எல்லாமுமாய் இருந்தது ரேவதி மட்டும் தான்.
Most valuable days in my life.
இப்படி போய்க்கொண்டிருந்த வேளையில் அப்பாவிடம் இருந்து போன் வந்தது.தாத்தா இறந்துவிட்டார்.உடனடியாக கிளம்பி வா என்று.
அப்பாவை ஆறுதல் படுத்தி விட்டு ஆபிசில் பெர்மிசன் போட்டுவிட்டு ஊருக்கு கிளம்பினேன்.தாத்தா இறந்த துக்கம் எனக்கு துளி அளவும் இல்லை.மாறாக எனக்கு ராஜியை பார்க்க சந்தர்ப்பம் அமைந்தது சந்தோசமாக இருந்தது.
அவளுடன் இருக்கும் அந்த நாட்களை எண்ணி மகிழ்ந்தேன்.ட்ரைனில் டிக்கெட் கிடைக்காததால் அன்ரிசெர்வேசன் கோச்சில் சென்றேன்.
ட்ரைனில் செல்லும்போது ராஜியுடன் பேசிக்கொண்டே சென்றேன்.
மறுநாள் காலை வீட்டிற்கு சென்றபோது மணி 10 ஆகி இருந்தது.வீட்டில் பேக்கை வைத்துவிட்டு தாத்தாவை கும்பிட்டுவிட்டு பாட்டிக்கு ஆறுதல் சொன்னேன்.
வெளியே வந்த நான் முதலில் தேடியது ராஜியைத்தான்.ஆனால் அவளை காணவில்லை.தங்கையிடம் அவளை பற்றி விசாரித்தேன்.தோட்டத்தில் தண்ணீர் எடுத்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னாள்.
துண்டை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றேன்.கண்டேன் என் தேவதையை.
இடுப்பில் குடத்துடன் சுடிதார் சாலை இடது புற கழுத்தில் இருந்து வலது பக்க இடுப்பில் விட்டு அதில் முடிச்சி போட்டு இருந்தாள்.
எனக்கு அவளிடம் பிடித்த விஷயமே அதுதான்.ரொம்ப கியூட்டா இருந்தது.அவளிடம் பேச முயற்சி செய்தேன்.என்னை பார்த்து சிரித்து கொண்டே சென்றுவிட்டாள்.
அவளிடம் பேச வரும்போதெல்லாம் யாராவது ஒருவர் அவள் கூடவே இருந்தனர்.கடுப்பாக இருந்தது.
தாத்தாவை பாடையில் கிடத்தி அனைவரும் கிடத்தி இருக்க.நான் ராஜியை பார்த்துக்கொண்டிருந்தேன்.நான் அவளை பார்ப்பதை கவனித்த ராஜி என்னை பார்த்தாள்.
என் பார்வை ஒரு மைக்ரோ வினாடி கூட அவளை விட்டு விலகவில்லை.என் பார்வை ராஜியை ஏதோ செய்திருக்க வேண்டும்.என்னை அடிக்கடி பார்த்துவிட்டு பார்வையை விளக்கி விட்டாள்.
எல்லாம் முடிந்து இரவு அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம்.அப்போது அவள் போனில் யாருடனோ தீவிரமாக மெசேஜ் செய்து கொண்டிருந்தாள்.
எனக்கு குழப்பமாக இருந்தது.இந்நேரம் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று.எதுவும் லவ்வா இருக்குமோ என்று எண்ணிய மனதை இல்லை அவள் பிரென்ட் யாருகிட்டையாவது பேசி கொண்டிருப்பாள்.என் ராஜியாவது யாரையும் லவ் பண்றதாவதுன்னு சொல்லி சமாதானப்படுத்தினேன்.
அன்று இரவு என் ரூமில் ராஜி,தங்கை,குட்டி பசங்கன்னு தூங்கி விட தூக்கம் வராமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு 1மணி அளவில் மொட்டை மாடியில் சென்று தூங்கினேன்.
அவளை காதலித்த பின் அவளுடன் 16 நாட்கள் ஒன்றாக இருந்தேன்.அந்த 16 நாட்களும் என்னால் மறக்க முடியாத நாட்கள்.கடவுளிடம் இருந்து திருடிய 16 நாட்கள்.
தினமும் அவளுடன் பேசி அந்த பழைய குழந்தை பருவ நாட்களை அசைபோட்ட நாட்கள்.
நான் வேளைக்கு சென்றதால் என்னிடம் ட்ரீட் கேட்டாள்.காதலிக்கு வாங்கி கொடுக்க கசக்குமா என்ன.என்ன வேணும் என்று கேட்டேன்.
எனக்கு சரக்கு வேணும்.வாங்கி கொடு என்றாள்.
அடிப்பாவி நீ சரக்குலாம் அடிப்பியா.
ஏன் பசங்க தான் அடிக்கணுமா.நானும் அடிப்பேன் வாங்கி தருவியா மாட்டியா.
வேற எதாவது கேளு தரேன்.அதெல்லாம் வேண்டாம்.
எனக்கு டின் பீர் வேணும்.இல்லனா ட்ரீட் வேண்டாம்.
கடைசியில் எவ்ளோ சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக இருக்க வாங்கி தருவதாக ஒத்துக்கொண்டேன்.
முதல் முதலாக என்னிடம் கேட்பதால் என்னால் மறுக்க முடியவில்லை.யாருக்கும் தெரியாமல் அவளிடம் கொடுத்துவிடலாம் என்று வாங்கி கொண்டு வர அங்கு ஒரு படையையே திரட்டி வைத்திருந்தால் ராஜி.
ஷக்தி,தங்கை,ராஜி,மகேஷ்,சிவா,கணேஷ்ன்னு சின்ன பசங்க எல்லாரையும் சேர்த்து வைத்திருந்தாள்.
அடி பாவி இவுங்க எல்லாரையும் எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க என்றேன்.
ட்ரீட்னா எல்லாருக்கும் கொடுக்கணும்.அதான் கூட்டிட்டு வந்தேன் என்றாள்.
கடைசியில் அனைவருக்கும் சுவீட் பீர் டின் வாங்கி கொண்டு மொட்டை மாடி சென்றோம்.
டின்னை ஓபன் செய்து சந்தோசமாக குடித்தோம்.இதை போன்று பல ஆச்சர்யங்களை நடத்தினால் ராஜி.அவளுக்குள் இருந்த குழந்தை தனம் எனக்கு பிடித்திருந்தது.
எல்லா பெண்களும் புருவத்தில் மட்டும் கண் மை இடுவார்கள்.ஆனால் ராஜி விழிகளுக்கும் மை இடுவாள்.
அது அவளுடைய முட்டை கண்களுக்கு ஒரு வசீகரத்தை கொடுக்கும்.
சந்தனத்தை சிறிய கீற்றாக மூக்கும் நெற்றியும் சேரும் இடத்தில் வைப்பாள்.அதே போல அவள் நகைகள் அணிய மாட்டாள்.
அவள் கழுத்தில் ஒரு செயின் மட்டும் இருக்கும்.அவளுடைய உடைகள் கூட கச்சிதமாக இருக்கும்.செக்சி என்பதை தாண்டி திரும்பி பார்க்கவைக்கும் வசீகரம் அதில் இருக்கும்.
அவளுடைய நகம் கடிக்கும் பழக்கம்,எதாவது நம்பாத மாதிரி சொன்னால்,ஹேய் நிஜமாதான்னு ஒருமாதிரி கீச்சு குரலில் சொல்றது,அவளுடைய அந்த துப்பட்டா ஸ்டைல்,பிடிவாதம்,முன்கோபம்ன்னு எத்தனையோ விஷயம் ராஜி எனக்கு காட்டினாள்.
அவளுடைய எல்லா விஷயமும் என்னை பைத்தியக்கார தனமா அவளைகே காதலிக்க வச்சது.
இந்த 16 நாட்களும் ஒரு வரம் போல இருந்தது.
டைரியை படித்த ராஜியின் கண்கள் கலங்கி இருந்தது.கார்த்திக் என்ன இவ்ளோ லவ் பண்றியா.நான்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமா.உன்னை காயப்படுத்தினதை தவிர நான் என்ன செஞ்சேன் கார்த்திக்.என்று நினைத்துக்கொண்டு டைரியை தன் மார்போடு அணைத்துக்கொண்டு அழுதாள்.
என்னையும் ஒருத்தன் உருகி உருகி காதலிச்சிருக்கான்.அவனுக்கு நான் என்ன செஞ்சேன்.கார்த்திக் ஐ லவ் யூ கார்த்திக்.உன்கூட என் ஆசை தீர வாழனும் கார்த்திக்.என்று அவள் மனம் கார்த்திக்கின்எ அருகாமையை தேடியது.
மணியை பார்த்தாள் ராஜி.மணி 2 ஆகி இருக்க சாப்பிட்டுவிட்டு வந்தாள்.இரண்டாவது டைரியை பார்க்க அப்போது கார்த்திக்கிடம் பேசலாம் போல தோன்றியது ராஜிக்கு.
மொபைலை எடுத்து கார்த்திக்குக்கு கால் செய்தாள்.இரண்டாவது ரிங்கில் எடுத்தவன் சொல்லு ராஜி என்றான்.
இல்ல கார்த்திக் உங்கிட்ட பேசணும் போல இருந்துச்சு.இப்பலாம் ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற கார்த்திக்.

ஒன்னும் இல்ல ராஜி.வேலை டென்ஷன்.நீ ஒன்னும் மனச போட்டு குழப்பிக்காத.
அது மட்டும் தான் காரணம்னா என்கிட்ட பேசாம இருக்காத.எதுவானாலும் என்கிட்ட சொல்லு.கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.
சரி ராஜி.என்ன திடீர்னு ஆபிஸ் டைம்ல கால் பண்ணிருக்க.
இல்ல.இப்பதான் சாப்பிட்டேன்.நீ சாப்பிட்டியா என்னனு தெரியலை.அதான் கால் பண்ணினேன்.
ஒரு நிமிஷம் ராஜி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.ஆஆஆஆஆ.
என்ன ஆச்சு.
இல்ல இது கனவா நனவான்னு பாத்தேன்.நிஜம் தான்.
ஹலோ என்ன கிண்டலா.
இல்ல நக்கல்ஸ்.
போ கார்த்திக்.விளையாடாத
அதே கீச்சு குரலில் சொன்னாள் ராஜி.
ரொம்ப நாள் கழித்து ராஜியிடம் தனக்கு பிடித்தமான குரல்.ஒரு நிமிடம் அவன் மனதில் பலவிதமான சிந்தனைகள்.என்ன இது என் மனம் என்னையும் அறியாமல் அவளை நோக்கி செல்கிறது.நான் என்ன அவ்வளவு பலகீனமானவனா.அவளிடம் பேச வேண்டாம் ஒதுங்கி செல்லலாம் என்று நினைத்தால் என் மனம் மீண்டும் மீண்டும் அவள் பின்னால் செல்கிறது.
இது எங்கு போய் முடிய போகிறதோ.இப்போதைக்கு இவளிடம் பேசுவோம் மற்றது நடப்பது நடக்கட்டும் என்று யோசித்து கொண்டிருந்தான் கார்த்திக்.
ஹலோ கார்த்திக் இருக்கியா.ஹலோ.
ம்ம்ம்ம் இருக்கேன்.இருக்கேன் ராஜி.
ரொம்ப பிசியா இருக்கியா கார்த்திக்.நான் வேணும்னா அப்புறமா கால் பண்ணட்டா.
சரி ராஜி.அப்புறமா பேசுறேன்.
ஓகே பாய்.என்று சொல்லிவிட்டு கட் செய்தாள் ராஜி.
பின் படித்த டைரியை எடுத்த இடத்தில வைத்துவிட்டு மற்றொன்றை தனது கப்போர்டில் சேலைக்கு அடியில் மறைத்து வைத்தாள்.
அப்போது கண்ணாடி அருகில் அன்று கார்த்திக் தனக்காக வாங்கிய செயின் இருக்க அதை எடுத்து பிரித்து பார்த்தாள்.
சிரித்து கொண்டே அதை எடுத்து தன் கழுத்தில் வைத்து பார்த்தாள்.பின் அதை எடுத்து கழுத்தில் போட்டு கொண்டாள்.
கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டே செயினை தடவி கொண்டாள்.
அவளையும் அறியாமல் முகத்தில் வெட்கம் குடி கொண்டு முகம் சிவந்தது.அப்போது அவள் மனசாட்சி பேசியது.
என்ன மேடம் புதுசா வெக்கம்லாம் படுறிங்க.கண்ணாடியை பார்த்து அழகு பாக்குறீங்க
ஆமா என் புருஷன் எனக்கு ஆசையா வாங்கி தந்திருக்கான்.நான் அதை போட்டு அழகு பார்க்குறேன்.
என்ன சொன்ன என்ன சொன்ன.புருஷனா.
ஆமா என் புருஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.
நாக்கை கடித்து கொண்டு கைகளை வைத்து முகத்தை மூடிக்கொண்டாள் ராஜி.நாணத்தால் இன்னும் அழகாக மாறியது ராஜியின் முகம்.
ச்சி.போடி என்று மனசாட்சியை அதட்டினாள்.பின் கண்ணாடியை பார்த்து
என் புருஷன்.
என் புருஷன்
என் புருஷன் என்று
திரும்ப திரும்ப சொல்லி முகத்தை மூடி கொண்டாள்.
என் புருஷன்
என் புருஷன் என்று
திரும்ப திரும்ப சொல்லி முகத்தை மூடி கொண்டாள்.
பின் சோபாவில் இருந்தவள் கார்த்திக் கல்யாணம் நடந்தது முதல் இன்றுவரை தனக்காக செய்தது கண்களில் காட்சிகளாக ஓடியது.
டேய் புருஷா எப்படா வருவ.சீக்கிரம் வாடா.என்று சொல்லி கொண்டாள்.நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தாள் ராஜி.
கார்த்திக்கை எதிர்பார்த்திருந்த ராஜிக்கு நிமிடங்கள் வருடங்களாக தெரிந்தது.அவனை இன்று எப்படியாவது அசரடிக்க வேண்டும் என்று நினைத்தாள் ராஜி.
பின் குளித்துவிட்டு கார்த்திக்கிற்கு பிடித்த பச்சை கலர் சேலையை கட்டினாள்.விழிகளுக்கு மை தீட்டி கண்ணாடி பார்த்து அழகுபடுத்தி கொண்டாள்.
கார்த்திக் வாங்கி கொடுத்த செயினை கழுத்தில் தெரியுமாறு போட்டு கொண்டாள்.சந்தனம் குழைத்து அவனுக்கு பிடித்த மாதிரி கீற்றாக வைத்து கொண்டாள்.
நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து கண்ணாடியில் பார்க்கும் போது ராஜிக்கே தன்னை பார்த்து பொறாமையாக இருந்தது.
மீண்டும் கடிகாரத்தை பார்த்தவள் ஒரு மணி நேரம் சென்றிருந்தது.கார்த்திக் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.
அப்போது அவளுக்கு தனது கல்யாண ஆல்பம் நியாபகத்திற்கு வந்தது.கல்யாணம் முடிந்து இன்று வரை அதை இருவரும் ஒரு முறை கூட பார்க்கவில்லை.
அன்று இருந்த சூழலில் ராஜி அதை பார்த்தாள் வெறுப்பாக உணர்ந்தாள்.ஆனால் இன்று அதை பார்க்க வேண்டும் போல இருந்தது.
கப்போர்டில் இருந்து அதை எடுத்தாள்.புதிதாக அப்படியே இருந்தது.முதல் பக்கத்தை பிரித்து பார்த்தாள்.
காலையில் வீட்டில் உள்ள சாமி படங்கள் அழகாக படம் பிடிக்கபட்டு இருந்தது.பின் வீட்டில் கட்டப்பட்டு இருந்த வாழை தோரணங்கள் இருந்தது.
ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தாள்.தாலி கட்டும் போட்டோ வர அதை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தாள்.
அதில் ராஜியின் முகம் உணர்வுகள் அற்று கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
கொஞ்சமாச்சும் சிரிச்சிருக்கலாம்ல.ச்ச இப்ப பார்க்கும்போது தான தெரியுது.சரியான லூசுடி நீ. என்று தன்னை தானே திட்டி கொண்டாள்.
அதில் கார்த்திக்கை பார்க்க கார்த்திக் அதில் ராஜியின் முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.
கார்த்திக் அந்த நேரம் மனசுக்குள்ள என்ன மன்னிச்சுடு ராஜின்னு சொல்லிருப்பாண்ல என்று நினைத்து கொண்டாள்.
அடுத்த போட்டோவை பார்க்க அதில் கார்த்திக் ராஜியின் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டிருந்தான்.
பின் ஒவ்வொன்றாக திருப்பி பார்த்தாள்.கடைசியாக ஒரு போட்டோவில் ராஜியின் தோளில் கார்த்திக் கை போட்டு இருக்க இருவரும் சிரித்து கொண்டிருந்தனர்.
அந்த போட்டோ எடுக்கும் போது போட்டோகிராபர் இருவரையும் சிரிக்க சொல்லி வற்புறுத்த இருவரும் சிரித்து கொண்டு இருந்தனர்.
முழுவதும் பார்த்து முடித்த ராஜிக்கு தனது கல்யாணத்தன்று நடந்த நிகழ்வுகள் கண்முன்னே பார்த்தது போல இருந்தது.
தப்பு பண்ணிட்ட ராஜி.அன்னைக்கே உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருந்தா சந்தோசமா இருந்துருக்கலாம்.கார்த்திக்கை புரிஞ்சிக்கிடாமலே இருந்திட்டியே என்று அவள் மனசாட்சி சொல்லியது.
இனி வரும் நாட்கள் என் வாழ்க்கை முழுவதும் உன்னோடு தான் கார்த்திக்.நீ பார்க்காத சொர்கத்தை உன்கூட சேர்ந்து நான் பார்க்கணும்.ஐ லவ் யூ கார்த்திக்.என்று சொன்னாள் ராஜி.
கார்த்திக்கிடம் பேச வேண்டும் போல தோன்ற போனை எடுத்தாள்.ஏதோ யோசனை வந்தவளாக ஆல்பத்தை எடுத்து அதில் ராஜியின் தோளில் கார்த்திக் கை போட்டு இருப்பதை போன்று உள்ள போட்டோவை தனது செல்லில் போட்டோ எடுத்தாள்.
அது போட்டோ என்று தெரியாத அளவுக்கு அதை எடிட் செய்தாள்.பின் அதனை தன் போன் வால்பேப்பர் ஆக செட் செய்தாள்.

லேப்டாப்பில் இருந்து கார்த்திக்கின் போட்டோக்களை தனது போனில் காப்பி செய்தாள்.
கார்த்திக்கின் நம்பரை My love என்று பெயர் மாற்றினாள்.அதில் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை கான்டெக்ட் போட்டோவாக மாற்றினாள்.
கார்த்திக் நம்பருக்கு எதாவது ஸ்பெஷல் சாங் வைக்கலாம் என்று யோசித்தவள் எந்த பாடலை வைக்கலாம் என்று யோசித்தாள்.
யோசித்தவளுக்கு டக்கென்று பாடல் நினைவிற்கு வந்தது.அவளுக்கு மிகவும் பிடித்த பாடல்.மெட்ராஸ் படத்தில் வரும்
நான் நீ நாம் வாழவே
உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நம் பறவையின் வானம் பழகிடவா வா நீயும்
நம் அனலிடம் வேகம் அணைத்திட வா வா நீயும்
உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நம் பறவையின் வானம் பழகிடவா வா நீயும்
நம் அனலிடம் வேகம் அணைத்திட வா வா நீயும்
பாடலை வைத்தாள்.ஏனோ அந்த பாடல் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவது போல இருந்தது ராஜிக்கு.
கார்த்திக் வரும் சத்தம் கேட்க கண்ணாடியை பார்த்து மீண்டும் ஒரு முறை தன்னை சரி பார்த்துவிட்டு ஹாலுக்கு சென்றாள்.
அங்கு கார்த்திக் சோபாவில் இருக்க அவனை பார்த்து முகம்மலர சிரிப்புடன் அவனிடம் சென்றாள்.
என்ன சார் இப்பதான் வந்திங்களா.என்றாள் ராஜி.
ஆமா கொஞ்சம் வொர்க் இருந்துச்சு.அதன் லேட் ஆகிடுச்சு ரா. . . . . . . .
வார்த்தையை முடிக்காமல் அவளை பார்த்த கார்த்திக் உறைந்து போய் நின்றான்.
பச்சை நிற சேலையில்,முகத்தில் சந்தன கீற்று வைத்து,நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு ஒரு தேவதையை போல இருந்த ராஜியை பார்த்த கார்த்திக்குக்கு வார்த்தைகள் வரவில்லை.
கண்கள் இமைக்க மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment