அங்கு சென்ற கார்த்திக் சக்தியிடம் சென்று ஹலோ. என்ன காலேஜூக்குலாம் போறது இல்ல.ஒரே ஊரை சுத்துதுறதுதான் வேலை போல.
அவன் சொல்லியதை கேட்ட பெண்கள் அனைவரும் அவனை பார்த்து திரும்ப அப்போது தான் சக்தி கார்த்திக்கை பார்த்தாள்.
ஹேய் கார்த்திக்.நீ எங்க இங்க.
அதை நான் கேட்கணும்.என்ன ட்ரீட்டா.
ஆமா.என் பிரெண்டுக்கு இன்னைக்கு பெர்த் டே.அதான் இந்த ட்ரீட்.நீ எங்க இங்க.
ஹ்ம்ம்.என் லவ்வெறும் நானும் வந்தோம்.அப்படியே உன்னை பாத்தேன்.வந்துட்டேன்.ப்ச் என்று உதட்டை பிதுக்கினான்.
ஐயோ முடியலப்பா சாமி.எங்க உன் லவ்வேரை காட்டு பாப்போம்.
அது உன்னை பார்த்த உடனே அவளை போக சொல்லிட்டேன்.
ஏன் கார்த்திக்.உனக்கே இது ஓவெரா தெரியல.
இல்லையே.சரி எங்களுக்குலாம் ட்ரீட் கிடையாதா.
ம்ம்ம் கண்டிப்பா.உனக்கு இல்லாததா.பட் நீ ட்ரீட் கேட்டா வேற ஒண்ணுலா கேப்ப.அதுக்கு இங்க பார் இல்லையே.
சரி சரி கம்பெனி சீக்கிரட்ட வெளிய சொல்லாத.
அப்போது சக்தியின் பிரெண்ட்ஸ் அனைவரும் இவர்களையே வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.
அதை கவனித்த சக்தி ஓஹ்.சாரி.இவுங்கல்லாம் என் பிரெண்ட்ஸ்.கௌரி,சுஜி,ரம்யா,கௌசல்யா,மான்வி,அப்புறம் நான் சக்தி.
அதான் தெரியுமே.நீ சக்தின்னு.பொதுவாக எல்லோரையும் பார்த்து ஹை னு சொல்லிவிட்டு தனது அக்மார்க் சிரிப்பை உதிர்த்தான் கார்த்திக்.
எல்லாரும் பதிலுக்கு சிரித்துவிட்டு ஹாய் என்றனர்.
அப்புறம் பிரெண்ட்ஸ் இவரு என்று சொல்லும் முன் அனைவரும் கார்த்திக் என்றனர் கோரஸாக.
கார்த்திக் பதிலுக்கு சிரித்துவிட்டு சரி சக்தி.நீங்க கன்டினியூ பண்ணுங்க.நான் கிளம்புறேன்.பாய்.என்று சொல்லிவிட்டு திரும்ப.
ஹலோ ஒரு நிமிஷம்.ட்ரீட் கேட்டுட்டு எங்க ஓடுறிங்க.வாங்க நீங்களும் ஜாயின் பண்ணிக்கங்க என்றாள் மான்வி.
திரும்பிய கார்த்திக் மான்வியை பார்த்து உங்க நேம் ம்ம்ம்ம்ம்ம்ம் எஸ் மான்வி.விஷ் யு எ ஹாப்பி பார்த் டே.அண்ட் தாங்ஸ் பார் யுவர் கன்செர்ன்.
ஹே கார்த்திக்.அதான் சொல்ராள்ள.இரேன்.ப்ளீஸ்.
ஹே இல்ல.எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.சோ இன்னொரு நாள் பாக்கலாம்.பட் அணைக்கு என்னோட ட்ரீட்.ஓகேவா.
ம்ம்ம்ம் ஓகே என்றனர் அனைவரும்.
ஓகே டேக் கேர்.பாய்.என்று சொல்லிவிட்டு கார்த்திக் பில் செட்டில் செய்துவிட்டு நண்பனுடன் சென்றுவிட்டான்.
கார்த்திக் சென்ற உடன் ஹே கார்த்திக் யாருடி அவன்.ட்ரீட்க்கு வாங்கன்னு தான சொன்னேன் அதுக்கு போய் இப்படி சொல்லிட்டு போறான்.
ஹே கார்த்திக் என்னோட மாமா பையன்.அவன் இப்படிலா ஒதுங்கி போகுற ஆளே கிடையாது.முன்னாடிலா எங்க அக்கா பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் இன்ட்ரோ பண்ணி வைன்னு எங்க அக்காகிட்ட எவ்ளோ கெஞ்சுவான் தெரியுமா.அவன் ஏன் இப்படி மாறிட்டான்னு தெரியல.
ம்ம்ம்ம் சரி.சாரு பாக்க சூப்பரா இருக்காரே.சிங்கிளா.
ஏன் நீ ட்ரை பண்ண போறியாக்கும்.
ஏன் ட்ரை பண்ணாதான் என்ன.
ட்ரை பண்ணு.ஆனா எங்க அக்காகிட்டையும் ஒருவார்த்தை கேட்டுக்கோ.
ஏன் அதான் நீயே சொல்லிட்டல்ல.அப்புறம் ஏன் உங்க அக்காகிட்ட கேட்கணும் என்றாள் சுஜி.
ஹலோ ஓவரா கனவு காணாதீங்க.எங்க அக்கவைத்தான் அவன் கல்யாணம் பண்ணிருக்கான்.
ஏய் அப்ப நீ முன்னாடி எங்ககிட்ட சொன்னதெல்லாம் என்று மான்வி கேட்க.
ஆமா.இவனேதான்.

உங்க அக்கா கண்டிப்பா அன்லக்கிடி.ஆனா நீ சொன்னதை வச்சி பாக்கும்போது இன்னும் ரெண்டுபேத்துக்கும் நடுவுல பிரச்சனை இருக்கும் போலையே.
ஆமாடி.எங்க அக்காகிட்ட அதை பத்தி இன்னைக்கு பேசணும்னு நினைச்சேன்.சரி அவளாவே சொல்லட்டும்னு விட்டுட்டேன்.
இடையில் கௌசல்யா சக்தி அவரு நம்பர் கொடேன் என்று தயங்கிக்கொண்டே போனை எடுக்க அவளை பார்த்த மற்ற அனைவரும் சிரித்துவிட்டனர்.
அடிப்பாவி கொஞ்ச விட்டா எங்க அக்காவுக்கே சக்களத்தியா வந்துடுங்க போல.கொன்னுடுவேன்.
உங்களுக்குத்தான் எத்தனை பேரு ட்ரை பன்றாங்க.அப்புறம் என்னடி.
உங்களுக்குத்தான் எத்தனை பேரு ட்ரை பன்றாங்க.அப்புறம் என்னடி.
ஏய் அவுங்கல்லாம் சும்மா டைம் பாஸ் பண்றவங்க.அழகை மட்டும் பார்த்து மச்சான் எப்படி இருக்கா பாரு,செம கட்டைடா அப்படின்னு மத்த பொண்ணுங்களை சொல்லிட்டு,நம்மள சின்சியரா லவ் பண்றதா சொல்லுவாங்க.உங்க மச்சி மாதிரி ஒருத்தன் கிடைப்பானா. என்றால் மான்வி.
அம்மா தாயே இத்தோட இதை விட்டுடுங்க.அதையும் இதையும் சொல்லி எங்க அக்கா லைஃப்ல கும்மி அடிச்சிடாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டாள் சக்தி.
சரி சரி சேன்ஜ் த டாப்பிக் அனைவரும் சொல்லிவிட்டு ட்ரீட்டை முடித்துவிட்டு பில் செட்டில் செய்ய சென்றனர்.
தனது கார்டை எடுத்து மான்வி கொடுக்க.உங்க பில் ஆல்ரெடி செட்டில் பண்ணிட்டாங்க மேம் என்றான் கேஷியர்.
யாரு என்று அவள் கேட்க இப்போ ஒருத்தர் உங்க கிட்ட நின்னு பேசிட்டு இருந்தாரே அவருதான்.
சரி என்று சொல்லிவிட்டு சக்தியிடம் வந்த மான்வி ஹே சக்தி உங்க மச்சி பில் செட்டில் பண்ணிட்டாராம்டி. என்றாள்.
அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம்.
அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம்.
இல்லடி இது என்னோட ட்ரீட்.இதுக்கு அவர் பே பண்ணினா இது அவரோட ட்ரீட் மாதிரி ஆகிடாது.
விடுப்பா.இப்போ என்ன உன் சார்பா நான் கொடுத்ததா நினைச்சுக்கோ.
நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேக்கலை.சரி வா கிளம்பலாம்.
ஐயோ இப்படி தெரிஞ்சிருந்தா கூட அஞ்சு ஆறு பார்சல் வாங்கிருக்கலாமே. என்று ரம்யா சொல்ல அனைவரும் ஹோ என்றனர்.
ஏய் அலையாதீங்கடி.கிளம்பலாம் வாங்க என்று தங்களது ஸ்கூட்டியில் கிளம்பினர்.
புத்தகத்தை படித்து கொண்டிருந்த ராஜி மதியம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வாசிக்க அதில் அத்தை மற்றும் முறைப்பெண் என்ற உறவில் அதிக இண்ட்டர்ஸ்ட் எடுத்து கார்த்திக் படித்தது தெரிந்தது.
அந்த பக்கத்தில் மட்டும் ரெட் கலர் பெண்ணினால் அதிகமா கோடிட்டு இருந்தான்.
பையன் ரொம்ப ரசனைக்காரனாதான் இருக்கான் என்று நினைத்து சிரித்துக்கொண்டாள்.
பின் ராஜி அப்படியே தூங்கியும் போனாள்.ஈவினிங் வந்தது.
வீட்டிற்கு வந்த கார்த்திக் காலிங் பெல்லை அடித்தான்.
கதவை திறந்த ராஜி என்ன இன்னைக்கு சீக்கிரமாவே வந்தாச்சு என்றாள்.
இன்னைக்கு வேலை சீக்கிரமா முடிஞ்சிட்டு.அதான் வந்துட்டேன்.இந்தா என்று வாங்கி வந்த மல்லிகை பூவை அவளிடம் கொடுத்தான்.
என்னது.
மல்லிகை பூ.சாமிக்கு போட்டுடு.
சாமிக்கு மட்டும்தானா.
ஆமா.நீதான் நான் வாங்கிட்டு வந்தா வைக்க மாட்டியே.
அது போன மாசம்.இது இந்த மாசம்.நானும் வைப்பேன்.
சிரித்துக்கொண்டே சரி வச்சுக்கோ.யப்பா இதை உனக்கு கொடுக்கிறதுக்குள்ள முடியலடா சாமி.சரியான பிசாசு ராஜி நீ.
அது அப்படித்தான்.நான் பிசாசாவே இருந்துட்டு போறேன்.சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு வா.காபி கலந்து தரேன்.
ம்ம் சரி.இன்றும் ராஜி இரண்டு ஸ்பூன் சீனியைஎ அதிகமாக கலந்தாள் ராஜி.
பிரெஷ் ஆகிவிட்டு வந்த கார்த்திக் காபியை வாங்கி குடித்தவன் சுகர் அதிகமாக இருப்பதை அறிந்தவன்
ராஜி.பொண்ணுக ரொம்ப சந்தோசமா இருந்தா அதை சாப்பாட்டுல தான் காட்டுவாங்க.நீ ரொம்ப சந்தோசமா தானே இருக்க.
ஏன் இப்படி கேக்குற.
இல்ல.இன்னைக்கும் காபில சுகர் அதிகமாக இருக்கு.அதான் கேட்டேன்.
எப்படி இவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்கிறான்.கடவுளே இவன் சொன்ன மாதிரியே லவ் பண்ணிடுவோமோ.ம்ம்ஹ்ம்வ மாட்டேன்.கண்டிப்பா அப்படி எதுவும் நடக்காது.
அப்படிலா ஒன்னும் இல்லை.தேவை இல்லாம கண்டதையும் கற்பனை பண்ணிக்காத.
ம்ம்ம்ம் சரி.சரி.
இல்ல நீ நினைக்கிற எதுவும் நடக்காது.
நான் என்ன நினைச்சேன்.
இல்ல நீ சரி சரின்னு ஏதோ நினைச்ச அதை சொன்னேன்.
நான் என்ன நினைச்சேன் தெரியுமா.
வேண்டாம் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்.
இல்ல நான் சொல்லுவேன்.
நான் கேக்க மாட்டேன் என்று அவன் எதிரில் கேட்பது போல நின்றாள்.
கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு கேக்குறதுக்கு நிக்குற.
நான் ஒன்னும் கேக்குறதுக்கு நிக்கலை.கப்பை கொடு வாஷ் பண்ணனும்.அதான் நிக்குறேன்.
சரி அதுக்குத்தான் நிக்குறன்னு எனக்கு தெரியும்.இருந்தாலும் நான் சொல்லிடுறேன்.நாளைக்கு அப்பாவும் அம்மாவும் வராங்க.அதான் சொல்ல வந்தேன்.
சரி என்று மட்டும் சொன்னவள் அதன் பின் என்னது அதையும் மாமாவும் வரங்காளா.
ஆமா.அதான நானும் சொன்னேன்.
இல்ல ஏதோ ஞாபகத்துல.சரி எப்ப வராங்க.
நாளைக்கு காலைல.என்னையும் லீவ் போட சொன்னாங்க.
எதுக்கு.
நாளைக்கு ஏதோ விரதமாம்.அதான் இருக்க சொன்னாங்க.
சரி.நான் அப்போ நாளைக்கு வீட்டை கிளீன் பண்ணி வச்சிடுறேன்.இன்னைக்கு மளிகை சாமான் எல்லாம் தீர்ந்து போச்சு. வாங்கணும் கார்த்திக்.
ஓகே.ஒன்னு பண்ணு எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு வை.அப்றமா நான் வாங்கிட்டு வந்துடுறேன்.
ஓகே.
பின் இருவரும் சேர்ந்து லிஸ்ட் போட்டு கார்த்திக் வாங்குவதற்கு சென்றான்.
அதன் பின் அன்றைய இரவு அதிக பேச்சுகளுடனும் சின்ன சின்ன சண்டைகளுடனும் முடிந்தது.
மறுநாள் காலை கார்த்திக்கின் அப்பாவும்,அம்மாவும் யாத்திரை முடிந்து வந்துவிட கார்த்திக்கும் ராஜியும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டனர்.

பின் பயணம் பற்றி ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.பின்னர் குளித்துவிட்டு காலை உணவு முடிந்தது.
பின் சாந்தா மருமகளிடம் வந்து என்னமா ரெண்டுபேரும் சந்தோசமா இருந்திங்களா.என்றாள்.
ம்ம்ம் சந்தோசமா இருந்தோம் அத்தை என்று வராத வெட்கத்தை வரவைத்துக்கொண்டு சொன்னாள்.
சரிம்மா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது.எதாவது நல்ல செய்தி உண்டாம்மா.
ராஜிக்கு திடுக்கென்றானது.இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிந்தது.இப்போ புது பிரச்சனையா என்று நினைத்துக்கொண்டாள்.
இல்லத்தை.நாங்களும் அதுக்குத்தான் காத்துகிட்டு இருக்கோம்.என்று ஒரு பொய்யை சொல்லி வைத்தாள்.
நாங்களும் அங்க ஒவ்வொரு தெய்வத்துக்கிட்டையும் அதான்மா வேண்டிக்கிட்டோம்.அதுக்கு ஒரு சாமியார் சொன்னாரு அந்த முருகனை நினைச்சிட்டு தினமும் அவருக்கு தினமும் தீபம் போட சொன்னாரும்மா.நீயும் கொஞ்சம் சிரமம் பாக்காம செய்யுமா.
கண்டிப்பா செய்யுறேன் அத்தை.எனக்கும் அதான் வேணும்.
பின் இருவரும் யாத்திரையில் நடந்த விஷயங்கள்,அங்கு சென்ற கோவில்களின் சிறப்புகள் என்று பேசிக்கொண்டேஎ மதிய சாப்பாட்டை தயார் செய்தனர்.
கார்த்திக்கும் அப்பாவிடம் இதையே பேசிக்கொண்டிருந்தான்.அப்படியாக அவர்கள் பேசிக்கொண்டது நேரம் போனதே தெரியவில்லை.
பின் ஆண்கள் இருவருக்கும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது.ராஜியையும் சாப்பிட சொல்ல இல்லத்தை நான் அப்புறமா சாப்பிட்டுக்கிடுறேன் என்றாள்.
ஓஹ் புருஷன் சாப்பிட்டதை சாப்பிடணும்னு ஆசை படுறியா.சரி படிச்ச பொண்ணு இதெல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சுட்டேன்.சரிம்மா கொஞ்சம் பொறு.நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் சாந்தா.
ஐயோ இது வேறயா.இந்த கண்ராவி வேரைய.என்று நினைத்துக்கொண்டு கார்த்திக்கை பார்க்க அவன் ராஜியை பார்த்துவிட்டு கண்ணடித்துவிட்டு மாட்டினடி இன்னைக்கு என்று கண்ணாலையே சொன்னான்.
அத்தையிடம் வேண்டாம் என்று சொன்னால் ரெண்டு பேருக்கும் நடுவில் உள்ள பிரச்சனை தெரியதுக்கு காரணமாகிவிடும்.எல்லாம் என் தலை விதி என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் ராஜி.
கார்த்திக் இப்போது தேவைக்கு அதிகமாக சாதத்தை வைத்து பிசைந்துகொண்டிருந்தான்.
கறிகளும் அதிகமாக வைத்துவிட்டு வேண்டும் என்றே வாயில் வைத்துவிட்டு இலையில் வைத்தான்.பின் புறை ஏறுவதுபோல் செய்ய வாயில் இருந்து சோற்று பருக்குகள் இலையில் விழுந்தது.பின் தண்ணீரை எடுத்து குடித்தான்.
இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு ஆத்திரத்தில் அழுகையாக வந்தது.கார்த்திக் வேண்டும் என்றே தன்னை பழிவாங்குகிறான் என்று அவன்மேல் ஆத்திரமாக வந்தது.
தண்ணீர் எடுக்க செல்வது போல் கிச்சன் சென்று கண்ணீரை துடைத்துவிட்டு வந்தான்.
அப்போதும் கார்த்திக் வேண்டும் என்றே அதுபோல் செய்ய ராஜி என்ன செய்வது என்பதுபோல் சேலை முந்தியை கைகளால் சுருட்டி கொண்டே பதற்றத்துடன் நின்றாள்.
ராஜியை பார்த்த கார்த்திக் அவளுடைய இந்த நிலையை பார்க்க அவனுக்குள் ஏதோ செய்தது.ராஜியும் முகம் அருவருப்பாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
ராஜியை பார்த்துக்கொண்டே மீண்டும் தண்ணீர் எடுத்து குடித்தவன் தெரியாமல் கை தவறி விடுவது போல் கிளாசை இலையில் விட்டான்.தண்ணீர் முழுவதும் இலையில் கொட்ட சட்டென்று எழுந்துகொண்டான்.
ச்ச தெரியாம கொட்டிட்டு.சாரி சாரி என்றான்.
என்னடா அந்த பொண்ணு எவ்ளோ ஆசையா இருந்துச்சு.இப்படி பண்ணிட்ட என்றார் கார்த்திக்கின் அப்பா.
சாந்தாவும் தன் பங்கிற்கு அதையே சொல்ல
தெரியாம கை தவறிட்டு.விடுங்க வேற இலையில சாப்பிட்டா என்ன.இன்னொருநாள் பாத்துக்கலாம். என்றான் கார்த்திக்.
இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு இப்போதுதான் உயிரே வந்தது.உதட்டில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு பரவா இல்லை மாமா.இன்னொருநாள் சாப்பிட்டுகிடுறேன் என்று அந்த இலையை எடுத்து குப்பையில் போட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு சாந்தாவுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
ராஜிக்கு தெரியும் கார்த்திக் இதை தனக்காகத்தான் செய்தான் என்று.உடனடியாக அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது ராஜிக்கு.
அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு வேகமாக பெட்ரூமை நோக்கி ஓடினாள் ராஜி.
அங்கு நின்று கொண்டிருந்த ராஜி ஓடிச்சென்று கார்த்திக் மார்பின் மேல் முகம் புதைத்து தேங்ஸ்.கார்த்திக்.நீ எனக்காகத்தான் இதெல்லாம் செஞ்சன்னு எனக்கு தெரியும்.உன்ன தப்பா நினைச்சிட்டேன்.சாரி என்று அழத்தொடங்கினாள்.
கார்த்திக் எதுவும் செய்யாமல் சிலையாக நின்றுகொண்டிருந்தான்.ராஜி இப்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள்.இந்த நேரம் அவளை தொட்டால்கூட விபரீதம் ஆகிவிடும்.அவளாக அடங்கும் வரை அசையமல் நின்றிருந்தான்.
பின் ராஜியின் அழுகை அடங்கியபின் தான் இருக்கும் நிலை உணர்ந்து கார்த்திக்கை விளக்கி இரண்டடி பின்னால் சென்றாள் ராஜி.
சாரி சாரி கார்த்திக்.கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.சாரி.
பரவா இல்லை.நீ எமோஷனலா இருக்கன்னு தெரியும்.விடு.
தாங்ஸ் கார்த்திக்.
தாங்க்ஸ்லா வேண்டாம் ராஜி.நான் ஒன்னும் இதை உனக்காக பண்ணல.ஸோ தேங்க்ஸ்லா வேண்டாம்.
எனக்காக பண்ணலையா.ஏன்.
சொல்றேன். ரிலாக்ஸா இருக்கியா.
ம்ம்ம்ம் சொல்லு
எனக்கு இந்த ஒருத்தர் சாப்பிட்ட இலையில இன்னொருத்தர் சாப்பிடுறது எனக்கு சுத்தமா பிடிக்காது.எங்க அம்மா சாப்பிட்டாலே நான் திட்டுவேன்.அதனாலதான் நான் அப்படி பண்ணேன்.மத்தபடி உன்ன இம்ப்ரெஸ் பன்னதுக்காக பண்ணலை.
என்னை இம்ப்ரெஸ் பண்ணதுக்கு பண்ணிருந்தாலும் நான் ஒன்னும் சொல்லலை.போதுமா.
ம்ம்ம்ம் சரி.
அப்புறம்.
அப்புறம்ம்ம்ம்ம் தூங்க வேண்டியதுதான்.
அப்ப தூங்கு.
தூங்கலாம்.பட் நீ இன்னும் தூங்கலையே.சோ உனக்கு கம்பெனி கொடுக்கலாம்னு இருக்கேன்.
சரி அப்ப கம்பெனி கொடு.
ம்ம்ம் சரி.அப்புறம்.
அப்புறம்ம்ம்ம்ம்.
ராஜி உனக்கு அது வந்துடுச்சுல்ல.
எது.
அதான்.
அதான்னா எது.
அதான் ராஜி.சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லிடு.
சொல்லிடவா.
ம்ம்ம் சொல்லு ராஜி.
அது வந்து கார்த்திக்
ம்ம்ம்ம்ம் சொல்லு
இல்ல நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.
அதெல்லாம் ஒன்னும் இல்லை.நீ சொல்லு.
உனக்கு தூக்கம் வருதா.இல்லல.
ஐயோ ராஜி.அதெல்லாம் ஒரு மண்ணும் வரலை.நீ
சொல்லு.
சொல்லு.
இல்ல எனக்கு தூக்கம் வந்துடுச்சு.தூங்கலாமா.
ப்ச் மயிறு.இதை சொல்லதானா இவ்ளோ இழுத்த.தூக்கம் வந்தா போய் தூங்கி தொலைக்க வேண்டியது தான அவன் மனசாட்சி ராஜியை திட்டியது.
அம்ம்ம்ம்ம்.தூங்கலாமே.நல்லா தூங்கலாம்.படு.இதோ பெட் இருக்கு நல்லா படுத்து தூங்கு.படு.
கார்த்திக் நீஈஈஈஈ.
அஹ்ன் நானா நானேதான்.நான் வழக்கம் போல சோபாவில் படுத்துக்கிடுறேன்.
ம்ம்ம் சரி கார்த்திக்.குட் நைட்.
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லைன்னு மனசில் நினைத்துக்கொண்டு
குட் நைட்.குட் நைட்.
வேற ஒன்னும் இல்லையே.
இல்லையே.ஒன்னும் இல்ல.நீ தூங்கு.
இல்ல நீ ஏதோ சொல்லணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.சும்மா சொல்லு.
நான் என்ன சொல்ல.ஆமா சொல்லணும்.மறக்காம பெட் சீட் எடுத்து போத்திக்கோ.
ம்ம்ம் சரி.
ராஜிக்கு கார்த்திக்கை பார்த்து சிரிப்பாக வந்தது.அவன் எதை பற்றி கேட்டான் என்று நன்றாகவே தெரியும்.ஆனால் அவளுக்கு இப்போது கார்த்திக்கின் மேல் இருப்பது ஒரு நல்ல இம்ப்ரெஸ்ஸன்.அதை வெளிக்காட்ட அவளது ஈகோ தடுத்தது.

அவள் படுத்துவிட்டு கார்த்திக்கை பார்க்க கார்த்திக் போர்வையை தலைவரை இழுத்து மூடி இருந்தான்.
இப்போது மெல்லிதாக அவனை பார்த்து சிரித்தாள்.பின் சில நிமிடம் கழித்து.
கார்த்திக்
போர்வையை விலகாமலே என்ன என்றான்.
தூங்குறியா.
இல்ல சாப்பிடுறேன்.
நக்கலா.
ஆமா.தூங்குறவனை பார்த்து தூங்குறியான்னு கேட்டா என்ன சொல்ல சொல்ற.
சரி சரி.கோவப்படாத பிரெண்டு.
ஓகே பிரெண்டு சொல்லுங்க.
இல்ல பிரெண்டு புக்ஸ்லா அதிகமா படிப்பீங்களோ.
ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பிரெண்டு.ஏன் கேக்குறீங்க.
இல்ல பிரெண்டு காலைல போர் அடிக்குதுன்னு உங்க ரேக்கை பார்த்தேன்.அதான் கேட்டேன்.
அதெல்லாம் சும்மா டைம் பாஸுக்காக.அது எதுவுமே நான் படிச்சது கிடையாது.
சும்மா காமெடி பண்ணாதீங்க பிரெண்டு.
போர்வையை விளக்கி விட்டு
இப்போ என்ன வேணும் உனக்கு.
தெரிஞ்சுக்கலாம்னுதான்.சரி உனக்கு எப்படி புக்ஸ் படிக்கிற பழக்கம்லாம் வந்துச்சு.
இப்போ கண்டிப்பா அதை தெரிஞ்சுக்கிடணுமா.
சும்மா சொல்லேன்.ஜாலியா இருக்கும்.
ஜாலியாவா.இருக்கும் இருக்கும்.
சொல்லுப்பா.சீன் போடாத.
அது ஒன்னும் இல்ல பிரெண்டு.நான் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணேன்.
தெரியுமே.அந்த பொன்னுபேரு கூட ராஜி தான.
ஐயோ செம ஷார்ப்பு பிரெண்டு நீங்க.
சரி மேல சொல்லுங்க.
அவதான் இதுக்கு காரணம்.
போங்க பிரெண்டு.புக்ஸ் படிக்கிறதுக்கும் லவ் பண்றதுக்கும் என்ன பிரெண்டு சம்பந்தம்.
சம்பந்தம் இருக்கு பிரெண்டு.காதல் ஒரு கொடூரமான இரக்கம் இல்லாதவனை கூட செடியில் இருந்து பூவை பரிச்சா அழவைக்கிற சக்தி வாய்ந்தது.அந்த காதல் தான் என்ன மனுஷனாக்குச்சு.என்ன புக்ஸ் படிக்க சொல்லுச்சு.என்னோட வாழ்க்கையவே மாத்துச்சு.அவ மட்டும் அந்த காதலை வராம விட்டிருந்தானா என்னோட இந்த வேலை,புகழ்,இப்படி எதுவுமே இல்லை.எனக்கு அந்த காதல் மட்டும் இல்லன்னா இந்நேரம் நான் எங்கையோ மாசம் 6000க்கும் 7000க்கும் கையேந்துகிட்டு இருந்துருப்பேன்.ஏன் ரௌடியாக்கூட மாரி இருப்பேன்.இதான் பிரெண்டு அந்த புக்ஸ்க்கு பின்னாடி இருக்குற std.
Std னா ஓஹ் வரலாறு.சான்ஸே இல்ல பிரெண்டு.லவ்வ கூட இவ்ளோ பாஸிட்டிவா எடுத்துருக்கீங்க.ஆனா அதுக்கு உங்க ஆளு ஒர்த்தான்னு தெரியுமா.
என் ஆள பத்தி தப்பா பேசாதீங்க பிரெண்டு.எனக்கு கெட்ட கோவம் வரும்.
கோவப்படாதிங்க பிரெண்டு சும்மா கேட்டேன்.
அதுக்கு வால்
அவ 200 சதவீதம் ஒர்த்து பிரெண்டு.
அவ 200 சதவீதம் ஒர்த்து பிரெண்டு.
No comments:
Post a Comment