CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 15


ஹலோ ஹலோ என்று அவன் கண் முன் கைகளை ராஜி அசைத்த பின் தான் சுய நினைவுக்கு வந்தான்.
ஒன்னும் இல்ல.அது வந்து.நான்.இல்ல நீ.
என்ன உளறுறீங்க.என்னாச்சு.ஏதோ சிந்தனைல இருக்கீங்க போல இருக்கு.
இல்ல.நீ.அது வந்து.
ஐயோ கொல்லுறியே ராஜி.இப்படி இருந்துட்டு இப்படி முட்டை கண்ணை வச்சிக்கிட்டு என்ன பார்த்தாள் நா எப்படி உன்கிட்ட பேசுறது.என்று மனசுக்குள் பேசினான்.
ஹெலோ மறுபடியும் என்ன என்று அவன் முன் ராஜி கை அசைக்க.
இரு ராஜி.இதோ வந்துடுறேன் என்று பெட் ரூமிற்கு சென்றான் கார்த்திக்.
சரி.நான் காபி எடுத்துட்டு வரேன்.நீங்க போங்க.
சரி என்று சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றான்.அங்கு சென்றவன் கண்ணாடியை பார்த்து என்ன பொண்ணுடா அவ.இத்தனை நாளா அவளை எப்படி பார்க்கணும்னு ஆசைபட்டேனோ அந்த கோலத்துல இருக்கா.இவ்ளோ நாள் நான் காத்து கிடந்தது இந்த ஒரு நாளைக்குத்தானா.
அவ கண்னுக்கு மை வச்சு என் கண்ணை பார்த்து பேசும்போது என் உடம்புல இருக்க மொத்த ஜீவனையும் உறிஞ்சு எடுத்துடுறாளே.என்று சொல்லிவிட்டு தலைக்கு இரு பக்கமும் கையை வைத்து முடியை கோதி விட்டுக்கொண்டு வேகமாக மூச்சு வாங்கினான்.
அவளை பார்த்த அந்த ஒரு செகண்டுக்கே இப்படி மூச்சு வாங்குதே இன்னைக்கு நைட் புல்லா எப்படி சமாளிக்க போறேனோ.கடவுளே இந்த நாள் இப்படியே இருக்கனும்.சீக்கிரம் முடிஞ்சிட கூடாது என்று வேண்டிக்கொண்டு பிரெஷ்அப் ஆகிவிட்டு வெளியே வந்தான்.
அங்கு ராஜி கார்த்திக் சென்ற பின் எஸ்ஸ்ஸ்ஸ் என்று கைகளை உயர்த்தி சொல்லிவிட்டு மவனே இன்னைக்கு செத்தடா என்று மனதில் நினைத்துக்கொண்டு காபி தயார் செய்தாள்.
பின் காபி கார்த்திக்குக்கும் தனக்கும் கப்பை எடுத்து கொண்டு அவனிடம் சென்றாள்.
இந்தாங்க காபி என்று அவனிடம் கொடுத்துவிட்டு அவனுக்கு அருகில் அமர்ந்தாள் ராஜி.
கார்த்திக் ராஜியை பார்க்காமல் காபி குடித்து கொண்டிருக்க ராஜி கார்த்திக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
உதட்டை சுளித்து சிரித்தவள் கார்த்திக்கிடம் போன் அடிக்கிற மாதிரி இருக்கு.உங்களுக்கு கேட்கல என்றாள்.
இல்ல எனக்கு கேக்கலை.உனக்கு கேக்குதா.
ஆமா உங்க போன்தான் அடிக்குது.போய் பாருங்க.
ராஜியை பார்த்தவன் மறுபடியும் உறைந்து போய் நின்றான்.
ஹலோ உங்க போன்தான் அடிக்குது.போங்க.
தலையை மட்டும் அசைத்துவிட்டு பாதி குடித்த காபி கப்பை வைத்துவிட்டு சென்றான்.
ரூமில் சென்று போனை பார்த்தவன் ஒன்றும் இல்லாமல் இருக்கே.போன் அடிக்கிறதா சொன்னா.போனும் வரலை.ஒன்னும் வரலை.என்ன கலாய்க்கிறாளா.
இன்னைக்கு அவகிட்ட நிறைய மாற்றம் தெரியுதே.மதியம் போன் பண்ணி சாப்பிட்டீங்களானு கேக்குறா.மேக் அப் பன்னி கிற்ங்கடிக்கிறா.திடீர்னு நீங்க,போங்கன்னு சொல்றா.புரியலையே.
ராஜி டிசைன் டிசைனா குழப்புரியே.கார்த்திக் உஷாருடா உஷார்.என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு சென்றான்.
அவன் வருவதற்குள் அவன் குடித்த காபி கப்பை எடுத்து வைத்துக்கொண்டு தான் குடித்த காபி கப்பை அவன் வைத்திருந்த இடத்தில் வைத்தாள் ராஜி.
கார்த்திக் வந்து போனே வரலை.எதுக்கு பொய் சொன்ன.
இல்ல எனக்கு சத்தம் கேட்டுச்சு.உங்க போனா இருக்கும்னு நினைச்சு சொன்னேன்.காபி குடி ஆறிட போகுது.
கார்த்திக் குடித்த காபியை குடித்த ராஜிக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது.வழக்கமாக காபி குடிப்பதை விட அமிர்தமாக தெரிந்தது.
ஏதோ சொல்ற.ஆமா இன்னைக்கு என்ன ஆளே கலக்குற.என்ன விஷேசம்.கோவிலுக்கு எங்காவது போறியா.
மயிறு உனக்காக தாண்டா இது எல்லாம்.புரிஞ்சுக்கோடா டியூப் லைட்டு. என்று மனதில் திட்டி விட்டு
அப்படிலாம் இல்ல சும்மா தான்.ஏன் நல்லா இல்லையா.
எப்படி ராஜி என் வாயால சொல்லுவேன்.நல்லா இல்லைனு.அவ்ளோ அழகா இருக்க.இத்தனை வருஷமா உன்னை இப்படி பாக்கணும்னுதானே ஆசைப்பட்டேன் என்று நினைத்துக்கொண்டு
நல்லா இருக்கு.பட் ப்ளூ சாரினை இன்னும் சூப்பரா இருக்கும்.
அவனை சிறிது நேரம் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் கிச்சனுக்குள் சென்று விட்டாள்.
உனக்காக ஆசை ஆசையாய் சேலை கெட்டி உங்கிட்ட பேச வந்தா இன்சல்ட் பண்ணுறியா.உனக்கு பச்சை கலர் பிடிக்கும்னு தான நான் கட்டிட்டு வந்தேன்.நல்லா இருக்குன்னு சொல்லிருந்தாகூட சந்தோசபட்டிருப்பேனே.இதை கூட புரிஞ்சிக்க முடியலையேடா உன்னால.உன்ன எப்படி வழிக்கு கொண்டுவரதுனு எனக்கு தெரியும் என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள் ராஜி.
இரவு வந்தது.கார்த்திக் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க ராஜி தூங்காமல் கார்த்திக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் லேப்டாப்பில் தீவிரமாக இருக்க ராஜி அவன் கவனத்தை திருப்ப சூழ்நிலைக்கு ஏற்ற பாடலை பாடினாள்.
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா.
கார்த்திக் லேப்டாப்பில் இருந்து ராஜியை நோக்கி பார்த்தான்.கார்த்திக் ராஜியை பார்ப்பதை உணர்ந்த ராஜி பார்வையை சுவற்றின் பக்கம் திருப்பினால்.
மீண்டும் கார்த்திக் லேப்டாப்பில் கவனத்தை திருப்பகே மீண்டும் கார்த்திக்கை பார்த்து அடுத்த வரிகளை பாடினாள்.
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
இப்பொத்து கார்த்திக் லேப்டாப்பை ஆப் செய்துவிட்டு ஹேஹே என்று கை தட்டினான்.
சூப்பெரா பாடுற ராஜி.இந்த பாட்டை பாடின சைந்தவி கூட இவ்ளோ பெர்பெக்டா பாடிருப்பாங்களான்னு சந்தேகம் தான்.
கைகளை வைத்து ஸலாம் செய்துவிட்டு தேங்க்ஸ். என்றாள்.
ஏதோ சொல்லணும்னு விரும்புற.சொல்லு என்ன விஷயம்.
அப்பாட இப்பவாச்சும் புரிஞ்சுதே மரமண்டைக்கு என்று நினைத்துக்கொண்டு ஒன்னும் இல்லை.தூக்கம் வரல.உங்க கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு பார்த்தேன்.
பேசலாமே சொல்லு.
லேப்டாப்ல என்ன ரொம்ப நேரமா பாத்துட்டு இருந்திங்க.ரொம்ப முக்கியமான விஷயமா.
அப்படிலா ஒன்னும் இல்ல.சும்மா பேஸ்புக் பாத்துட்டு இருந்தேன்.
எத்தனை கேர்ள் பிரெண்ட்ஸ் இருகாங்க.
அதெல்லாம் ஒருத்தியும் கிடையாது.எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க மட்டும்தான்.
இந்த சீன் தான வேண்டாம்ங்கிறது.சும்மா சொல்லுங்க.
நிஜமாத்தான்.எனக்கு முகம் தெரியா நட்பு மேல நம்பிக்கை கிடையாது.
அப்ப உங்களுக்கு கேர்ள் பிரெண்ட்ஸ் கிடையாது.
இருகாங்க.பட் எல்லாரும் அக்கா தங்கச்சி மாதிரி.அவுங்க கிட்ட எந்த தப்பான நோக்கத்திலையும் பேசினது கிடையாது.
அப்ப இந்த மான்வி யாரு.
அவ என்னோட பிரென்ட்.அவ்ளோதான்.ஏன் திடீர்னு அவளை பத்தி கேக்க.
சும்மா தெரிஞ்சிக்கிடலாம்னு தான்.
இல்லையே.
என்ன இல்லை.
உனக்கு அவளை பிடிக்காது தான.
எனக்கு ஏன் அவளை பிடிக்காது.எனக்கு பிடிக்கும்.உங்க பிரெண்டு.நான் என்ன சொல்ல போறேன்.
ம்ம்ம்ம்ம்.கரெட்டு கரெட்டு மெர்ட்டு மெர்ட்டு.
ஹலோ என்ன நக்கலா.
Just kidding. கோவப்படாத.
அது.நாளைக்கு வெளில எங்கையாவது போகலாமா.ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லாதீங்க.
ம்ம்ம்ம்.ஓகே போகலாம்.
பட் பைக்ல தான் கூட்டிட்டு போகணும்.
பைக்லையா.ஏன் கார்ல போகலாமே.
ப்ளீஸ் ப்ளீஸ்.பைக்ல போகலாம்.எனக்கு பைக்ல போகணும்னு ரொம்ப நாள் ஆசை.ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லாதீங்க.
சரி சரி போகலாம்.ஏன் இது வரைக்கும் நீ பைக்ல போனது இல்லையா.
இல்லையே.நாளைக்கு தான் உங்ககூட தூரமா வரப்போறேன்.
ஏன் ரமேஷ் கூட நீ இந்த மாதிரி தூரமா போனது இல்லையா.
சட்டென்று கார்த்திக்கிடம் இருந்து வந்த வார்த்தைகள் ராஜியை ரணமாக்கியது.
வார்த்தையை சொல்லிய பின்தான் யோசிக்காமல் பேசியது தவறு என்பது கார்த்திக்கிற்கு புரிந்தது.
கண்களில் துளிர்த்த கண்ணீரை வெளிக்காட்டி கொள்ளாமல் இல்லை.என்று மட்டும் சொல்லிவிட்டு பெட் ஷீட்டை இழுத்து மூடி கொண்டாள் ராஜி.
ராஜி i am so sorry ராஜி.நான் ஏதோ.யோசிக்காம ப்ளீஸ் சாரி.
இல்ல.பரவா இல்லை.தூங்கலாம் குட் நைட்.
பின் இருவரும் அவரவர் இடத்தில் படுத்துக்கொள்ள இருவரும் தூங்காமல் சிந்தனையில் ஆழ்ந்தனர்.
நீ இன்னும் என்னை பழைய ராஜியாவே பாக்குற கார்த்திக்.நான் உங்கிட்ட நடந்துக்குற விதத்துல இருந்து கூடவா உன்னால புரிஞ்சிக்க முடியல.நானும் உன்னை விரும்புறேன்னு.கொஞ்சம் கூட யோசிக்காம பேசுற.இந்த விஷயத்துல எனக்கு குரு நீதான் கார்த்திக்.அன்னைக்கு நான் உன்னை புரிஞ்சிக்காம இருந்தப்போ நீ என் பின்னாடியே வந்து உன்னை புரியவைக்க ட்ரை பண்ணின.இப்போ நான் உன்னை புரிஞ்சிக்கிட்டேன்.அதே மாதிரி நீயும் என்னை ஒரு நாள் புரிஞ்சிப்ப.அது வரைக்கும் நான் உன் பின்னாடி வருவேன்.அதே காதலோடு.என்று நினைத்து கொண்டிருந்தாள்.
சாரி ராஜி.நான் பேசினது தப்பு தான்.உனக்கு எந்த விதத்துலையும் நான் சரியானவன் கிடையாது.உனக்கு ரமேஷ் தான் சரியான ஆளு.உங்கிட்ட தெரியுற இந்த மாற்றம் கூட ஒரு பிரெண்டா சாதாரணமா நீ பழகினாலும் என்னால அதுல காதலைத்தான் உணர முடியுது.இனி நீ என்கூட இருக்க போற இந்த கொஞ்ச நாலாவது உன்ன ஹர்ட் பண்ணாம சந்தோசமா வச்சிருப்பேன் என்று நினைத்து கொண்டான்.
தூக்கம் இருவரையும் அணைத்து கொள்ள அன்றைய பொழுது விடிந்தது.
அரை தூக்கத்தில் இருந்த கார்த்திக்கிற்கு பியர்ஸ் சோப்பின் மனம் மூக்கிற்கு அருகில் மணந்தது.
அதோடு ஒரு இனிய நறுமணமும் வீச அந்த மோன நிலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதை இழக்க மனம் இல்லாமல் அப்படியே கண்மூடி படுத்திருந்தான்.அப்போது முகத்தில் ஏதோ உரசுவது போல இருக்க கண் விழித்து பார்த்தான்.
ராஜியின் முகம் வெகு அருகாமையில் இருக்க பூக்களில் இருந்து வடியும் பனித்துளி போல் முகத்தில் வியர்வை பூத்திருக்க கூந்தலில் துண்டை சுற்றி இருந்தாள்.
அவள் கழுத்தில் இருந்த தாலிகொடி கார்த்திக்கின் முகத்தில் உரசி கொண்டிருந்தது.
அவளிடம் இருந்து வந்த சோப்பு வாசம் கார்த்திக்கின் நாசியை நிறைத்தது.தான் இருக்கும் சூழல் அவனுக்கு அப்போதுதான் புரிந்தது.
ராஜி இதை கவனிக்காது போல் ஜன்னல் கதவின் லாக்கை எடுக்க போராடி கொண்டிருந்தாள்.
இப்போது கண் விழித்து எழுந்தாள் கண்டிப்பாக ராஜியின் மார்பின் மீது முகத்தை மோத வேண்டி இருக்கும்.மறுபடியும் டச்சிங்கா.வேண்டாம்டா கார்த்திக்.பத்ரகாளியா மாறிடுவா.மூடிட்டு அவ போற வரைக்கும் தூங்குற மாதிரி நடி.என்று மனதில் நினைத்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
இப்போது முன்பை விட அதிகமாக தாலிக்கொடி முகத்தில் உரச கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருந்தான் கார்த்திக்.
அவனுக்குள் ரத்த ஓட்டம் அதிகமாக ஓட கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.அவனது மூடிய விழிகளின் மேல் கரு விழி அசைய அப்படியே படுத்து கிடந்தான்.
இரண்டு நிமிடங்களுக்கு பின் ஜன்னல் கதவை திறந்துவிட்டு ராஜி விலக கார்த்திக்கிற்கு பயங்கரமாக மூச்சு வாங்க கண்ணை மூடிக்கொண்டு மூச்சு வாங்கினான்.
இப்போ எந்திரிச்சா கண்டிப்பா மாட்டிக்கிடுவோம்.அதனால ராஜி ரூமை விட்டு போனதுக்கு அப்புறமா எந்திரிக்கலாம்.அவன் மைண்ட் வாய்ஸ் சொல்லியது.
கதவு சடாரென்று அடைக்கும் சத்தம் கேட்க உடனே எழுந்த கார்த்திக் ப்ப்ப்ப்பா.ஆஆஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.என்று மூச்சு வாங்கிவிட்டு இன்னைக்கு என்ன விதமா யோசிச்சு வச்சுருக்கானு தெரியலையேன்னு சொல்லி விட்டு பாத்ரூமிற்குள் சென்றான்.
அதிகாலை எழுந்தர் ராஜி கார்த்திக்கின் முகத்தில் விழிக்க வேண்டும் என்று கண்களை திறக்காமல் கார்த்திக் படுத்திருந்த கார்த்திக் முன் சென்று அவனை பார்த்தாள்.
பின் நேற்று இரவு அவன் பேசியது நியாபகத்திற்கு வர இருடா.தம்பி.இன்னைக்கு நீ செத்த.நேத்து என்ன வார்த்தை சொன்ன.உன்ன இன்னைக்கு என்ன பண்றேன் பாருன்னு சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே பாத்ரூம் சென்றாள்.
அன்றாட வேலைகளை முடித்துவிட்டு தலையில் ஈர துண்டுடன் ரூமிற்கு வந்தவள் தாலிகொடியை வெளியே எடுத்து போட்டாள்.
பின் கார்த்திக் படுத்திருந்த சோபா அருகில் சென்றவள் குனிந்து தாலி கொடியை எடுத்து கார்த்திக்கின் முகத்தின்ம் மீது போட்டு விட்டு ஜன்னல் கதவின் லாக்கை சரி செய்வது போல நடித்தாள்.
கார்த்திக்கிடம் அசைவு எதுவும் இல்லாது போக மீண்டும் நன்றாக தாலிசெயினை முகத்தில் உரசிக்கொண்டே ஜன்னலை பார்ப்பது போல அவன் முகத்தை பார்த்தாள்.
இப்போது கார்த்திக்கிடம் அசைவு தெரிய அதே நிலையிலையே சிறிது நேரம் லாக்கை எடுப்பது போல நின்றாள்.
கார்திக்கின் விழிகளின் மேல் கருவிழி அசைவது தெரிய அதை கவனித்த ராஜி சிரித்துக்கொண்டே
தூங்குற மாதிரி நடிக்கிறியா.நானும் எவ்ளோ நேரம் நடிக்கிறேன்னு பாக்குறேன்.என்று மனதில் நினைத்துக்கொண்டு அதே போல செய்து கொண்டிருந்தாள்.
நேரம் ஆக ஆக கார்த்திக் கண் முழிக்கிற மாதிரி தெரியவில்லை.அவன் மூச்சின் வேகம் அதிகரிக்க அதை கவனித்த ராஜி
இதுக்கு மேல போனா பய மூச்சு முட்டியே செத்துடுவான் பொழச்சி போகட்டும்.இன்னொரு நாள் பாத்துக்கிடலாம்.இன்னைக்கு இது போதும்.இங்கையே இருந்தோம் இன்னைக்கு புல்லா எழுந்திருக்க மாட்டான்.இப்போ கிளம்புவோம் என்று மனதில் நினைத்து கொண்டு சிரித்துகொண்டே ஜன்னலை திறந்து விட்டு ரூம் கதவை சடாரென்று சாத்திவிட்டு சென்றாள் ராஜி.
இந்தாங்க காபி.
தேங்க்ஸ் ராஜி.
ராஜியை பார்க்காமல் கார்த்திக் எதிர் பக்கமாக நின்று கொண்டான்.
அதை கவனித்த ராஜி என் முகத்தை பார்க்காம திரும்பிக்கிடுரியா.இரு இரு உன்ன எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் என்று நினைத்து கொண்டு
என்ன நல்ல தூக்கமா
ஆமா.ராரரரரா.
ஐயோ ராஜி அப்படி பாக்காத.செத்துடுவேன் போல இருக்கு.மனதுக்குள் சொன்னான்.
ஹலோ என்ன பேயரஞ்ச மாதிரி நிக்கிறீங்க.உங்களதான்.
இல்ல அது வந்து.நான் இல்ல நீ.ப்ச்.
என்ன ஆச்சு.எதாவது வேலை இருக்கா.இல்ல உடம்புக்கு எதுவும் சரி இல்லையா.என்று கேட்டு விட்டு கார்த்திக்கின் நெற்றியில் கையை வைத்து பார்த்தாள் ராஜி.
அதெல்லாம் ஒன்னும் இல்லை.என்றான் கார்த்திக்.
அப்போது ராஜியின் உடலில் இருந்து வந்த பெண் வாசம் கார்த்திக்கை ஏதோ செய்தது.அப்படியே கண்களை மூடிக்கொண்டான்.
ஒன்னும் இல்லையே.நல்லாத்தான் இருக்கு .
கண்களை மூடிக்கொண்டு அசையாமல் இருந்தான் கார்த்திக்.
சரி நான் டிபன் ரெடி பண்றேன். நீங்க ரெடி ஆகுங்க. நாம ஷாப்பிங் போகலாம்.போகலம்தானே.
ஆங்.ம்ம்ம்ம் கண்டிப்பா.போகலாம்.
அறையை விட்டு வெளியே வந்த ராஜிக்கு மனதுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அடித்து கொண்டது.
அவளுடைய நீண்ட நாள் ஆசை.பைக் ரைடிங் போவது இப்போது நனவாக போகிறது.
பின் இருவரும் சாப்பிட்டுவிட்டு சாந்தாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
கார்த்திக் வழக்கம் போல் பார்மல் சட்டை அணிந்து இருந்தான்.ராஜி ப்ளூ கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.
பைக்கில் செல்லும் போது ராஜி ஒரு பக்கமாக அமர்ந்து கார்த்திகை மேல் படாதவாறு சைடு ஹண்டிலை பிடித்து இருந்தாள்.
பைக் 45 km வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
பின்னாடி லவ்வரை வச்சிக்கிட்டு இப்படி 45 ல போகுது பாரு லூசு.அவனவன் பின்னாடி பிகர வச்சிக்கிட்டு எவ்ளோ வேகமா போய்ட்டிருக்கன்.இவன் என்னடான்னா.இவனை எப்படித்தான் நான் மாத்தபோறேனோ கடவுளே.மனதில் நினைத்து கொண்டாள் ராஜி.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ராஜி
கார்த்திக்.பைக் ஓட்ட தெரியுமா தெரியாதா உங்களுக்கு.ஏன் இவ்ளோ ஸ்பீடா போறீங்க.
கார்த்திக் சிரித்து கொண்டே ஏன் ராஜி ஸ்பீடா போகனுமா.
ஆமா இத என்கிட்டவேற கேளு என்று நினைத்து கொண்டு
இல்ல கொஞ்சம் ஸ்லோவா போற மாதிரி இருக்கு அதான் சொன்னேன்.
சரி நல்லா பிடிச்சிக்கோ.
ஏன்
பிடிச்சிக்கோ சொல்றேன்.
ம்ம்ம்ம் பிடிச்சிட்டேன்.
இப்ப பாரு.
இப்போது பைக் 80 ஐ தாண்டி சென்றது.
ஊஊஊஊ சூப்பர் கார்த்திக்.சான்ஸே இல்ல.ஊஊஊஊ என்று கத்தினாள் ராஜி.
தனது தலை முடியை விரித்து பிரீ ஹேர் விட்டாள் ராஜி.
கார்த்திக் கூலஸ் இருக்குது.
ம்ம்ம் இருக்குதே.
ப்ளீஸ் ப்ளீஸ் கொடேன்.
இந்தா என்று தனது ரெபண்ட்ஸை கொடுத்தான் கார்த்திக்.
அதை வாங்கி மாட்டிக்கொண்டு
ஒரு நிமிஷம் வண்டிய நிப்பாட்டேன்.
என்னாச்சு ராஜி.
சொல்றேன் நிப்பாட்டு.
பின் ஒரு ஓரமாக பைக்கை நிறுத்தினான் கார்த்திக்.பைக்கை விட்டு இறங்கிய ராஜி இருபுறமும் காலை போட்டு இருந்து கொண்டு
ம்ம்ம்ம் இப்ப போகலாம்.
ராஜி என்ன பண்ற.
இதான் கன்போர்ட்டபூலா இருக்கு.போலாம்.
ராஜி அது வந்து.
போயா போ.என்றாள் ராஜி.
சரி உன் இஷ்டம்.எதுவும் டச் ஆச்சுன்னா என்கிட்ட சொல்லாத.
எல்லாம் எங்களுக்கு தெரியும்.போகலாம்.
மறுபடியும் பைக் 80 ஐ தாண்ட மருபடியும் ராஜி குதூகலம் ஆனாள்.
கண்ணாடி அணிந்து கொண்டு தனது ஷாலை எடுத்து தலைக்கு மேல் காற்றில் பறக்க விட்ட படி ஊஊஊஊ என்று கத்தினாள் ராஜி.
பின் தனது போனை எடுத்து
கார்த்திக் இங்க பாரு.
என்ன என்று அவளின் குழந்தை தனத்தை பார்த்து சிரித்து கொண்டே கேட்டான்.
லெட்ஸ் டேக் எ செல்பி
ஈஈஈஈஈஈ
கிளிக் என்ற சத்தத்துடன் அந்த தருணத்தை அழகாக படம் பிடித்து கொண்டது ராஜியின் போன்.
மீண்டும் அதே மாதிரி பல போட்டோக்கள் எடுத்து கொண்டாள் ராஜி.
கொஞ்ச நேரம் ராஜி கத்திக்கொண்டும் தலையை ஆட்டிக்கொண்டும் வர அதை பார்த்த கார்த்திக் உன்கூட இப்படி ஒரு பைக் ட்ராவல்க்கு தான் ராஜி இத்தனை நாள் காத்து கிடந்தேன். என் பைக்ல என் அம்மா,தங்கச்சிக்கு அப்புறம் ஏறின முதல் பொண்ணு நீதான் ராஜி.இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் இத்தனை நாளும் ஒரு பொண்ண கூட பைக்ல ஏத்தினதும் கிடையாது. என்று நினைத்து கொண்டான்.
ராஜி ரொம்ப சந்தோஷமா இருக்க போல.
ஆமா கார்த்திக்.இப்படி பைக்ல ரொம்ப தூரம்,சந்தோசமா மனசுக்கு புடிச்சவனோட ஸ்ஸ்ஸ்ஸ் என்று நாக்கை கடித்து கொண்டாள் ராஜி.
என்ன சொன்ன ராஜி மனசுக்கு பிடிச்சவனோடையா.
இல்ல இல்ல மனசுக்கு பிடிச்ச இடத்துக்குன்னு சொன்னேன்.
இல்ல எனக்கு வேற மாதிரி கேட்டுச்சு.
அடிக்கிற காத்துல கொஞ்சம் பேசுரதே கேக்காது.உனக்கு மாறி கேட்டுருக்கும்.
ம்ம்ம்ம் சரி சொல்லு.
மனசுக்கு பிடிச்ச இடத்துக்கு போகணும்னு எல்லா பெண்ணுக்கும் ஆசை இருக்கும்.எனக்கு இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு.அதான் இந்த சந்தோசம்.
ஹேப்பியா இருக்கல்ல அது போதும்.
குமுதா ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி .
இருவரும் கவலை மறந்து சிரித்து கொண்டார்கள் .அவ்வப்போது ராஜி சந்தோஷத்தில் கத்தும் போது கார்த்திக்கின் முதுகின் மேல் அவளின் தீண்டல்கள் நடைபெறும்.அது கார்த்திக்கை ரொம்பவே இம்சித்தது.இதை அவளிடம் சொல்லி இந்த சூழ்நிலையை கெடுத்து கொள்ள அவன் விரும்பவில்லை.
பின் மால் வந்துவிட பைக்கை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தனர்.
பர்ஸ்ட் எங்க போகனும் ராஜி.
ஜெண்ட்ஸ் செக்க்ஷன்.
அங்க யாருக்கு எடுக்க போற.
என் பிரெண்டுக்கு.வாங்க
இல்ல ராஜி யாருன்னு.சரி ஒன்னும் இல்ல வா.
அப்படி வா வழிக்கு. என்று நினைத்து கொண்டு உதட்டை சுளித்து சிரித்து கொண்டே அவன் பின்னால் சென்றாள் ராஜி.
அங்கு சென்று கேசுயல் செக்சன் சென்று சட்டைகளை பார்க்க தொடங்கினாள் ராஜி.
அதில் ஒரு ஹாப் ஹேண்ட் சர்ட் எடுத்த ராஜி கார்த்திக்கிடம் கொடுத்து
ம்ம்ம்.போங்க இதை ட்ரையல் பாருங்க.
எல்லாம் தெரியும் நீங்க போய் ட்ரையல் பாருங்க.
ராஜி எனக்கு ஹாப் ஹேண்ட் ஷர்ட் பிடிக்காது ராஜி.இதுவரைக்கும் நான் அதை போட்டதே இல்ல.ப்ளீஸ் ராஜி.
எனக்காக போட மாட்டீங்களா.ப்ளீஸ் போடுங்க.ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.
ஐயோ ராஜி.சரி கொடு.
ட்ரையல் ரூம் சென்று அதை போட்டு ராஜியிடம் காட்ட அது கார்த்திக்கிற்கு பிட்டாக மேன்லியாக இருந்தது.
சூப்பர் கார்த்திக்.செம்ம.
அஅஅ ஒரு மாதிரி இருக்கு ராஜி.
அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.இருங்க இன்னும் ரெண்டு பாக்குறேன்.
பின் மூன்று சர்ட்டுகள் எடுத்து விட்டு லேடீஸ் செக்சன் சென்றனர்.
அங்கு சென்று கர்த்திக்கிடம் இப்போ உங்க டர்ன்.எனக்கு நீங்க ஒரு சாரி செலக்ட் பண்ணுங்க என்றாள்.
அதெல்லாம் வேண்டாம் ராஜி.நான் எடுத்தா கண்டிப்பா உனக்கு பிடிக்காது.உனக்கு என்ன பிடிக்குதோ நீ எடுத்துக்கோ.
அதெல்லாம் முடியாது.நீங்க எந்த புடவை எடுத்தாலும் எனக்கு ஓகே.செலக்ட் பண்ணுங்க.
அதான் உங்க வைப் சொல்லுராங்கள்ள எடுங்க சார்.அவுங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்று சேல்ஸ் கேர்ள் சொல்ல
அட நீ வேற ஏன்மா.என்று சொல்லிவிட்டு கடவுளே என்ன நடக்க போகுதோ என்று நினைத்து கொண்டு பெரு மூச்சு விட்டு ராஜியை ஒரு முறை பார்த்தான்.
பின் ஒவ்வொரு சேலையாக பார்க்க தொடங்கினான்.
அதில் இருந்து சிகப்பு நிற சேலை ஒன்றை எடுத்தான்.
அதை அணிந்து கொண்டு ராஜியை கற்பனை செய்து பார்த்தான்.
சிகப்பு நிற சேலையில் அடர் பச்சை நிற ஜாக்கெட் அணிந்து தலை நிறைய மல்லிகை பூ உடன் ராஜி அவன் கண்ணில் தோன்றினால்.
ம்ம்ம்ம் சூப்பர்.இது எடுத்துக்கோ ராஜி சூப்பரா இருக்கும் உனக்கு.
என்கிட்ட இல்லாத கலர்.கொடுங்க
என்று அதை வாங்கி தன் தோளில் போட்டு எப்படி இருக்கு என கேட்க
சூப்பர் என்று தலையை ஆட்டினான் கார்த்திக்.
பின் அதை பில் போட சொல்லிவிட்டு அடுத்து செக்சனிற்கு சென்றார்கள்.
அங்கு சுடிதார் எல்லாம் இருக்க இது யாருக்கு ராஜி என்றான் கார்த்திக்.
நீங்களே சொல்லுங்க பாக்கலாம் யாருக்குன்னு.
ம்ம்ம்ம் உனக்குத்தான.இல்ல இல்ல சக்திக்கு.
உன் தலை.ரெண்டு பேருக்கும் இல்லை.
அப்ப யாருக்கு.
அத்தைக்கு.
என்னது அம்மாக்கா.
ஹலோ ஷாக்க குறைங்க. அத்தைக்குத்தான்.
கண்டிப்பா அம்மா இதெல்லாம் உடுத்த மாட்டாங்க ராஜி.
அதெல்லாம் நான் பாத்துகிடுறேன்.நீங்க வாங்க.
ராஜி அத நினைச்சாலே சிரிப்புதான் வருது.வேண்டாம் ராஜி.
அத்தைக்கு இதை எடுத்து அவுங்களை போட வச்சி நானும் அவுங்களும் செல்பி எடுத்து காட்டுறேன் பாருங்க.
ஆல் தி பெஸ்ட் வா போகலாம்.
ராஜி ஒவ்வொரு சுடிதாராக பார்த்து எடுத்து விட்டு அதில் ஒன்றை செலக்ட் செய்தால்.
நெக்ஸ்ட் என்று கார்த்திக் கேட்க
மறந்துட்டேன்.நெக்ஸ்ட் மாமாவுக்கு டீ சர்ட் எடுக்கணும்.
ஒரு ப்லானோட தான் வந்துருக்க போல.இன்னைக்கு ஒரு வழி ஆக்காம விட மாட்ட. வா போகலாம்.
அங்கு சென்று மாமாவிற்கு ஒரு டீசர்ட் எடுத்து கொண்டாள்.
அடுத்து எங்க மேடம்.
ஐஸ் கிரீம்.
சரி போகலாம்.
ஐஸ் கிரீம் பார்லர் சென்று இருவரும் எதிரெதிர் சேரில் அமர்ந்தனர்.
பேரறிடம் கார்த்திக் எனக்கு ஒரு ஸ்ட்ராபெரி பிளேவர் என்றான்.
ராஜி எனக்கு ஒரு சாக்லேட்.இல்ல இல்ல எனக்கும் ஸ்ட்ராபெர்ரி.இல்ல வெண்ணிலா.
என்ன ராஜி சரக்கு எதுவும் போற்றுகியா.இப்படி ரோல் ஆகுது.
எனக்கும் ஸ்ட்ராபெரி. என்று சொல்லி பேரரை அனுப்பி விட்டு கார்த்திக் கைகளில் அடுத்த ஆள் முன்னாடி இப்படி தான் கேப்பியா அறிவு இல்ல அறிவு இல்ல என்று அடிக்க தொடங்கினாள்.
ஆஆஹ் வலிக்குது ராஜி.ஆஆஹ்
வலிக்கட்டும்.நல்லா வலிக்கட்டும் என்று அடித்தாள் ராஜி.
பின் இருவரும் சமாதானம் ஆன பின் ஒருவரை பார்த்து வாய் விட்டு சிரித்தனர்.
ஐஸ் கிரீம் வந்து விட இருவரும் சாப்பிட தொடங்கினர்.
அப்போது ராஜி கார்த்திக்கையே பார்த்து கொண்டிருக்க
கார்த்திக் அங்க ஒரு பொண்ணு உன்னையே பார்த்துட்டு இருக்கு பாரு.உனக்கு பின்னால.

No comments:

Post a Comment