CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 12


ராஜி தான் அம்மாவை பாக்கணும் போல இருக்குனு சொன்னா.நான் தான் போயிட்டு வர சொன்னேன்.இந்த மாதிரி ஆகும்னு எதிர் பார்க்கலை.ரொம்ப நன்றி சார்.
பரவா இல்லப்பா.பாத்து போங்க வீட்டுக்கு போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.பத்திரம் என்றார் மூர்த்தி.
அப்பா அவருக்கு அடி பட்டிருக்கு பாருங்க என்று மான்வி சொல்ல அப்போதுதான் ராஜி உட்பட அனைவரும் அதை பார்த்தனர்.
மான்வி ஓடிச்சென்று காரில் இருந்த பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்துவர ராஜி கார்த்திக் அருகில் சென்று கார்த்திக்கின் நெத்தியை தொட்டு காயத்தை பார்க்க சிவந்து வீங்கி இருந்தது.
கொஞ்சம் தள்ளுங்க அக்கா என்று கூறிய மான்வி டிஞ்சர் எடுத்து காயத்தை துடைத்துவிட்டு மருந்து தடவி காயத்தை பிளாஸ்திரி போட்டு விட்டாள்.
கார்த்திக் அவள் செய்யும் வரை அமைதியாக ஒத்துழைத்தான்.இதை கண்ட ராஜி கண்களாலே மான்வியை எரித்தாள்.இவள் யாரு இவனுக்கு பிளாஸ்திரி போட்டு விட.இந்த தடிமாடும் கொடுத்துட்டு இருக்கு.அவகிட்ட வாங்கி என்கிட்டே கொடுத்து போட சொல்லலாம்ல.என்று மனதுக்குள் கருவினால்.
பின் ராஜியும் கார்த்திக்கும் காரில் வீட்டிற்கு புறப்பட்டனர்.இருவரும் அமைதியாக வர கார்த்திக் ஸ்டேரிங்கை குத்தி கொண்டே வந்தான்.அதை பார்த்தே கார்த்திக் இன்னும் கோவமாக இருக்கிறான் என்று புரிந்துகொண்டாள் ராஜி.
அடிக்கடி ஹாரனை அடித்துகொண்டு இருந்தான்.கார் வேகமாக சென்று கொண்டிருக்க,அப்போது காருக்கு வழி விடாமல் ஒரு பைக் சென்று கொண்டிருக்க கார்த்திக் ஹரனை அடித்துவிட்டு டேய் முட்டா பு....... அறிவு இல்லை.வழிய விட்டு போக வேண்டியது தான என்று கத்தினான்.
கார்த்திக் வண்டிய நிறுத்து.எனக்கு பயமா இருக்கு.என்றால் ராஜி.
ஒன்னும் இல்ல.நீ அமைதியாஓ இரு.எல்லாம் உன்னாலதான்.பேசாம வா.
நான் என்ன பண்ணேன் கார்த்திக்.
நீ என்ன பண்ணல ராஜி.எல்லாம் உன்ன சொல்லணும்.என்று ஸ்டேரிங்கில் குத்திவிட்டு அந்த தேவி..... மகன் தான் இடிக்கிறான்னு தெரியுதுல.செருப்பை கழட்டி சப்பு சப்புன்னு நாலு இழுப்பு இழுக்க வேண்டியது தான அங்கையே வச்சு.
கார்த்திக் என் நிலமைல இருந்து யோசிச்சு பாரு.ஒரு பொண்ணா தனியா அந்த இடத்துல இருந்து நான் என்ன பண்ண முடியும் சொல்லு.
என்னடி பொண்ணு.இப்படி போறதுனாலதான் அந்த நாய்களுக்கு திமிரா போகுது.அவனுகள சும்மா விட்டிருக்க கூடாது.சாவடிச்சிருக்கணும்.என்று மீண்டும் ஸ்டேரிங்கில் குத்திவிட்டு காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
கார்த்திக் ப்ளீஸ் கொஞ்சம் ஸ்லோவா போயேன்.உன்ன இப்படி பாக்கவே எனக்கு பயமா இருக்கு.ப்ளீஸ் என்று ராஜி அழத்தொடங்கினாள்.
அதுவும் இல்லாம அந்த நாய் முன்னாடியே நான் தான் ஒன்னும் சொல்லலலா.விடு கார்த்திக்னு என்னடீ தடுக்குற.அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா ராஜி.புரிஞ்சுதான் பேசுறியா நீ.
ஐயோ கார்த்திக் அந்த நேரத்துல எப்படி உன்ன சமாளிக்கண்ணு தெரியல.அதான் அப்படி சொன்னேன்.எனக்கு வேற வழி தெரியல கார்த்திக்.
விடு ராஜி.இதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது.இதெல்லாம் பாத்துட்டு ரமேஷ் வேணா சும்மா இருப்பான்.என்னால அப்படி எல்லாம் போக முடியாது.உன் மேல இப்படி அசிங்கமா நடந்துக்கிட்டாலும் அவனுக்கு என் கையாள தான் சாவு.
சந்தேகப்படுறியா கார்த்திக்.
இல்ல ராஜி நீ நல்லா இருக்கணும்னு சொல்றேன்.
கார்த்திக் ப்ளீஸ் முதல்ல வண்டிய நிறுத்து.வண்டிய நிறுத்துதுதுதுது.என்று ராஜி இரண்டு கைகளாலும் காதை பொத்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு சொன்னாள்.
கார்த்திக் ஸ்டேரிங்கை வேகமாக வளைத்து பிரேக்கை மிதிக்க க்ரீச் என்ற சத்தத்துடன் கார் ஓரமாக நின்றது.
கார் கதவை திறந்து விட்டு வேகமாக கதவை சாத்திவிட்டு இறங்கிய கார்த்திக் காரின் பிரெண்டில் சென்று காலால் ஓங்கி மிதித்தான்.பின் அதில் சாய்ந்து நின்றான்.இன்னும் அவன் கோவம் குறையவில்லை.
கீழே இறங்கிய ராஜி தண்ணீர் பாட்டிலை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்து இந்தா குடி.என்றாள்.
வேண்டாம் என்றான் கார்த்திக்.
இதை குடி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.
வேண்டாம்னு சொல்றேன்ல என்று சொல்லும் முன் கார்த்திக் முகத்தை பிடித்து அவன் இதழ்களை கவ்வி கொண்டாள் ராஜி.
எதிர் பாராத இந்த முத்தத்தில் நிலை குலைந்து போனான் கார்த்திக்.ராஜியின் இதழ் சுவையில் தனது கோவம் எல்லாம் எங்கோ ஆற்றில் கரைவது போல இருந்தது கார்த்திக்குக்கு.
இதழ் சண்டை சிறிது நேரம் நடக்க அப்போது கார்த்திக் சுதாரித்து அவளை விட்டு விலகினான்.அவனது மூலையில் ராஜி உன்னை சமாளிக்க தான் இப்படி செய்தாள்.அவள் மனதில் நீ இல்லை.தள்ளிப்போ என்று அவன் மூலையில் எச்சரிக்கை மணி அடிக்க அவளை விட்டு விலகி தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என்று குடித்தான்.
தன்னுடைய முதல் முத்தம் இப்படி ஒரு சூழ்நிலையிலா அமைந்திருக்க வேண்டும் என்று நினைத்த ராஜி கண்கள் ஓரம் துளிர்த்த கண்ணீரை துடைத்து விட்டு அவனையே பார்த்து கொண்டிடுந்தாள் ராஜி.
பின் கார்த்திக்கிடம் சாரி.உன்னை எப்படி சமாதான படுத்தன்னு தெரியலை.அதான் இப்படி செஞ்சேன்.என்றாள்.
கார்த்திக் ஒன்றும் பேசாமல் போகலாம் என்றான்.
காரில் ஏறிய கார்த்திக் ஸ்டார்ட் செய்ய முன்னாள் வந்து இருந்தாள் ராஜி.இப்போது கார் மெதுவாக செல்ல அவனது பார்க்க திராணி அற்று ஜன்னலை பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜி.
கார்த்திக்கை முத்தமிட்டதை எண்ணி அவளது முகத்தில் வெட்கம் குடி கொண்டது.கார்த்திக்கும் அவளது முகத்தை பார்க்காமல் நேராக பார்த்து வண்டி ஓட்டினான்.
ராஜிக்கு கார்த்திக் தனக்காக சண்டை போட்டது,முத்தமிட்டது என்று சந்தோசமாக இருந்தது.
அப்போது கார்த்திக் தன்னை பார்க்காமல் ஒதுக்குவதை கண்டு மியூசிக் சிஸ்டத்தில் பாடலை ஓடவிட்டால்.
தள்ளி போகாதே எனையும் தள்ளி போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
தள்ளி போகாதே எனையும் தள்ளி போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
தேகம் தடை இல்லை என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்
ஆனால் அது பொய் தான்
என நீயும் அறிவாய் என்கின்றேன்...அருகினில் வா
பாடல் ஓடிக்கொண்டிருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.இருவரது விழிகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்தது.
தூரங்கள் குறைந்து நேரம் மணித்துளிகலாய் கரைந்து இருவரும் வீட்டிற்கு வந்தனர்.ஆனால் கார்த்திக் மட்டும் ராஜியை விட்டு தள்ளி போய்க்கொண்டிருந்தான்.
வீட்டில் சாந்தா கார்த்திக்கின் காயத்தை பற்றி கேட்க நடந்ததை பற்றி சொல்லாமல் ஏதோ ஒரு பொய்யை சொல்லி சமாளித்தான்.ராஜியிடமும் அதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
பின் மூர்த்திக்கு கால் செய்து வீடு வந்து விட்டதை சொன்னான்.
மறுநாள் காலை ஆபிஸ் சென்று விட ராஜி புத்தகத்தை புரட்ட தொடங்கினாள்.அப்போது கார்த்திக்கிடம் இருந்து போன் வர அட்டென்ட் செய்த ராஜி சொல்லு கார்த்திக் என்றாள்.
ராஜி என்னோட கப்போர்டுல என் லேப்டாப் இருக்கும் அதை எடுத்து கொஞ்சம் ஆன் பண்ணு என்றான் கார்த்திக்.
ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை ஆன் செய்தாள் ராஜி.
பாஸ்வேர்ட் karthikraji னு டைப் பண்ணு என்றான் கார்த்திக்.
சிரித்துக்கொண்டே டைப் செய்தாள் ராஜி.பின் ஆபிஸ் சம்பந்தப்பட்ட பைல் ஒன்றை சொல்லி அதை தன்னுடைய மெயிலுக்கு அனுப்ப சொல்ல அதை அனுப்பி வைத்தாள் ராஜி.கார்த்திக் போனை கட் செய்த பின் கப்போர்டில் லேப்டாப்பை வைத்தாள் ராஜி.அப்போது இரண்டு டைரிகள் கீழ் வரிசையில் இருக்க அதை எடுத்தாள் ராஜி.
அதை பார்க்க 2008 என்று இருந்தது.மற்றொன்று 2008 என்று இருந்தது.
முதல் பக்கத்தை பார்த்தவள் அதில் கார்த்திக் என்று எழுதப்பட்டு அவனுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டு இருந்தது.முதல் பக்கத்தில் கார்த்திக்கின் பிறந்த தேதி,ப்ளட் க்ரூப் என்று அவன் சம்பந்தப்பட்ட தகவல்களை கார்த்திக் எழுதி இருந்தான்.
ஏனோ ராஜிக்கு அதை படிக்க வேண்டும் போல இருந்தது.லேப்டாப்பை வைத்துவிட்டு கப்போர்டை லாக் செய்துவிட்டு டைரியை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.இரண்டாவது பக்கத்தை திருப்பினாள்.அப்போது . . . . . . . . அப்போது டைரியில் இருந்து சில பல பேப்பர்கள் கீழே விழுந்தது.அதை எடுத்து பார்த்தாள் ராஜி.
ஒன்று ஏதோ அசைன்மென்ட் பேப்பர் போன்று இருந்தது. அதை பார்த்த ராஜி அதில் உள்ள கையெழுத்து அவளுடையது போன்று இருந்தது.
அது கார்த்திக் BE படிக்கும் போது ராஜி அவனுக்கு எழுதி கொடுத்தது.இதை எதுக்கு இன்னும் வைத்திருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே அடுத்ததை பார்க்க அடுத்து டைரி மில்க் சில்க் சாக்கொலேட்டின் கவர் ஒன்று இருந்தது.இது அவனுக்கு பிடித்த பிளேவர் ஆனா இது நம்ம வாங்கி கொடுத்தது தான்.ராஜியின் பிறந்தநாளுக்கு ராஜி கொடுத்த முதல் சாக்லேட்.
அடுத்து ஒரு போட்டோ இருந்தது.அதில் ராஜியும் அவள் அக்கா ப்ரியாவும் கவுன் போட்டு கொண்டு ஒன்றாக நிற்கும் புகைப்படம்.அதை பார்த்த ராஜிக்கு ஆச்சர்யமாக இருந்தது.இதெல்லாம் எப்படி இவனுக்கு கிடைத்தது என்று.அந்த போட்டோ அவளிடம் கூட கிடையாது.
அடுத்து பார்க்க அதில் பஸ் டிக்கெட்டும்,ட்ரெயின்
டிக்கெட்டும் இருந்தது.இதெல்லாம் போய் சேர்த்து வச்சிருக்கான் சின்ன பிள்ளைங்க மாதிரி என்று சிரித்து கொண்டாள்.
அடுத்து பார்க்க அதில் கர்ச்சீப் ஒன்று அழகாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது.அதை பிரித்து பார்த்தாள்.அதில் இரண்டு ஹார்ட்டின்கள் எம்ப்ராயடரி செய்யப்பட்டு அதில் கார்த்திக் லவ்ஸ் ராஜி என்று அழகாக எம்ப்ராயடரி செய்யப்பட்டு இருந்ததுமேலும் இரண்டு பறவைகள் ஒன்றாக பறப்பது போலவும் இருந்தது.
அந்த கர்ச்சீப்பை உற்று கவனித்த ராஜி அது காலேஜ் படிக்கும் போது வீட்டில் காணாமல் போன கர்ச்சீப் என்று தோன்றியது.
அதை அம்மா தொலைத்து விட்டதால் அம்மாவிடம் சண்டை போட்டு திட்டு வாங்கியதும் நினைவிற்கு வந்தது.
இதை நீதான் எடுத்து வச்சிருக்கியா.ரொமான்டிக்ஆன ஆளுதான் என்று சொன்னாள்.
அடுத்ததை பார்க்க அதில் புத்தம் புது நூறு ரூபாய் தாள்கள்,ஐந்து ரூபாய்,ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய்,பத்து ரூபாய்,ஐம்பது ரூபாய் என இருந்தது.
இதையெல்லாம் பார்த்த ராஜிக்கு கார்த்திக்கின் மனதை அறிய ஆர்வமாக இருந்தது.அதை எல்லாம் எடுத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு டைரியை விரித்து மூன்றாவது பக்கத்தை திறந்தாள்.
கார்த்திக் அதில் எழுதி இருந்தான்.
(இனி கதை கார்த்திக்கின் பார்வையில்)
இன்னைக்குத்தான் நான் டைரி எழுதுறேன்.நான் எல்லாம் டைரி எழுதுவேன்னு
நினைச்சு கூட பாக்கலை.எல்லாம் உன்னை பார்த்து தான் அக்கா.நீ என் பெரியம்மா பொண்ணு.ஆனா அதெல்லாம் பாக்காம நாம ரெண்டு பேரும் உடன் பிறந்தவர்கள் மாதிரி பழகிருக்கோம்.
நீ என்னோட அக்கா இல்லை.என்னோட பிரென்ட்.நீ இல்லாம எனக்கு ரொம்ப போர் அடிக்குது தெரியுமா.எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொல்ற நான் என்னோட லவ் மேட்டரை மட்டும் மறைச்சிட்டேன்.
அது ஏன் என்றால் நீ எங்க அதை தெரிஞ்சு எங்க அப்பா அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவியோன்னு பயந்துதான்.ஆனால் நீ எப்படியோ கண்டு பிடிச்சிட்டே.
உண்மையிலே எனக்கு நீ ஒரு நல்ல பிரென்ட் தான்.உன்ன மாதிரி ஒரு அக்கா சாரி பிரென்ட கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.ஐ மிஸ் யூ சோ மச் அக்கா.


இன்னைக்கு காலேஜ்ல ஸ்ட்ரைக் நடந்துச்சு.ஒரு ஸ்டாப் ஒரு பையனை டிபார் பண்ண வைக்கிறதுக்கு எங்க டிபார்ட்மென்ட் பொண்ண மிரட்டி அவன் மேல கம்பிளைன்ட் கொடுக்க சொல்லிட்டாரு.
அது தேர்ட் இயர் பசங்களுக்கும் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.எங்க செகண்ட் இயர் பசங்களையும் சேர்த்து கொண்டு ஸ்ட்ரைக் ஆரம்பித்தது.
எல்லா டிப்பார்ட்மெண்டும் கிளாஸ் நடந்து கொண்டிருக்க சிவில் மட்டும் ஸ்ட்ரைக்கில் இறங்கினோம்.
அந்த ஸ்டாப்பை சஸ்பெண்ட் செய்யும் வரை நாங்க இப்படிதான் இருப்போம்னு பசங்க ப்ரின்சிபாலிடம் சொல்ல அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் யாரும் கலையவில்லை.
இன்றோடு ஸ்ட்ரைக் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.
காலேஜில் அனைவரும் எங்க சிவில் டிபார்ட்மெண்ட்டையே பார்க்க இன்று முழுவதும் கெத்து தான்.
மற்ற டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் எங்களை பார்த்து ஏன் ஸ்ட்ரைக்,என்ன பிரச்சனை என்று கேட்க கெத்தாக பதில் சொல்லும் போது கர்வமாக தான் இருந்தது.
இறுதியில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட அனைவரும் களைந்து சென்றோம்.
இன்று மறக்க முடியாத நாள்.
எங்கள் குடும்பத்திற்கு அழகான குட்டி விருந்தாளி வந்துள்ளார்.அது வேற யாருமில்லை.
என் அத்தைக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.நான் பார்க்கலாம் என்று ஹாஸ்பிடலுக்கு போனேன்.
ஆனால் பாப்பாவை ப்ரெக்னன்ட் வார்டில் இருந்து மாற்றவில்லை.
நாளை காலேஜ் செல்ல வேண்டி இருப்பதால் இன்று பார்த்தாள் தான் பார்க்க முடியும்.
இல்லனா இன்னும் ஒருமாதம் ஆகும்.அடுத்த மாதம்தான் லீவ் கிடைக்கும்.
ஆனால் இன்று பார்க்க முடியவில்லை.ஐ மிஸ் யூ பாப்பா.
இந்த இடைப்பட்ட நாட்கள் ஏனோ எழுத தோனவில்லை.தனிமை,அப்பறம் புக்ஸ்னு நாட்கள் சென்றது.ஆனால் இன்று ரொம்ப சந்தோசமா இருக்கு.ஏன் என்றால் இன்று நடந்த நிகழ்ச்சிகள்.இன்னொன்னு எனக்கு சில நாட்களாவே நடந்த சில விஷயங்கள் நான் எதிர் பார்த்தது போலவே நடந்தது.
ஆனால் ஒண்ணே ஒன்னு மட்டும் எனக்கு புரியவில்லை.அது எதனாலென்னும் தெரியலை.அது என் முறைபெண் ராஜி.
அவளை மீட் பண்ணினேன்.அவகிட்ட முதல்ல பேசும்போது கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது.அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.
எப்போதுமே அவ எங்க வீட்டுக்கு வந்தாலோ இல்ல நான் அவ வீட்டுக்கு போனாளோ முதல்ல பேச கூச்சமாக தான் இருக்கும்.
அவளும் பேசமாட்டா நானும் பேசமாட்டோம்.ஆனால் அவகிட்ட பேச ஆரம்பிச்சிட்டேன்னா பேசிட்டே இருப்போம்.
அன்னைக்கும் அப்படித்தான்.பேசிட்டே இருந்தோம்.அப்போ அவ 10த் எழுதி இருந்தாள்.
அவளுடைய ஸ்டடிஸ் ஆரம்பிச்சு அப்படியே பேச்சு இழுத்து கொண்டே போனது.
அன்னைக்கு கோவில் கோடை.எனக்கு அப்போதுலா கடவுள் நம்பிக்கை இல்லாத காலம்.
எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க.அவளும் நானும் மட்டும் தனியா இருந்தோம்.
பேசினோம் பேசினோம்.பேசிட்டே இருந்தோம்.ஆனா என்ன பேசினோம்னு பார்த்தால் ஒண்ணுமே கிடையாது.
அவகிட்ட பேசும்போது ரொம்ப சந்தோசமா பீல் பண்ணினேன்.அது ஏன்னு தெரியல.
சின்ன வயசுல எங்க வீட்டுக்கு லீவுக்கு வருவா.அப்போது அவகிட்ட மட்டும் ரொம்ப நெருங்கி பழகுவேன்.
ஏன் அவகூட பேசுறதை பார்த்து என் பிரெண்ட்ஸ் கூட சொல்லுவானுக.
அவன் அவன் லவ் பண்ண பொண்ணு கிடைக்காம இருக்கான்.நீ என்னடானா லட்டு மாதிரி பொண்ணு இருந்தும் நீ ஏன்டா லவ் பண்ணாம இருக்கன்னு.
அதெல்லாம் ஒன்னும் இல்ல.அந்த பொண்ணுக எல்லாம் எங்கு பிரெண்ட்ஸ் அவ்ளோதான்.அவுங்க பேமிலிக்கும் எங்க பேமிலிக்கும் இடையில கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கு.அதெல்லாம் நடக்காத விஷயம்னு சொல்லி சமாளிச்சிடுவேன்.
ஆனால் மனதிற்குள் அவள் மீது ஒரு இனம்புரியாத ஏதோ ஒன்று எனக்குள் இருந்தது.
இப்ப நினைச்சா கூட சிரிப்பு வருது.சின்ன வயசுல அவகூட ஒரு நாள் சைக்கிளில் போய்ட்டு இருக்கும் போது என்னை விட வயதில் மூத்த நண்பர்கள் சொன்னது.
அக்காவை விட்டுட்டு தங்கச்சிய கரெக்ட் பண்றன்னு.அப்போ அதை பத்தி யோசிச்சா கோவம் வரும்.இப்போ சிரிப்புதான் வருது.
ஆனால் அவர்கள் அப்படி சொன்னதுனால தான் இன்னைக்கு அவளை பார்த்தாள் சந்தோசமாக இருக்குதா.ப்ச் தெரியலை.
அவளை லவ் பன்றேனான்னு சத்தியமா எனக்கு தெரியலை.ஆனால் அவகூட பேசினாள் சந்தோசமா இருக்கு.
அவள் என் வாழ்க்கை முழுதும் இருந்தாள் நல்ல இருக்கும்னு தோணுச்சு.போனேன் அடுத்த ரெண்டு நாள் கழிச்சி அவளை பார்க்க.
ஆனால் அன்னைக்கு அவகிட்ட பேச முடியவில்லை.அவளோட போட்டோ ஏதாவது கிடைக்குமான்னு என்னோட கெட்ட நேரம் கிடைக்கலை.நானும் அவகிட்ட எவ்லோ பிட்டை போட்டு பார்த்தேன்.ரொம்ப தெளிவா இருந்தா.
எனக்கு இன்னொரு கெட்ட பழக்கம் ஒன்னு உண்டு.சொன்னா சில்லரை தனமா கூட இருக்கும்.
ட்ரைன் டிக்கெட் பஸ் டிக்கெட்லா சேர்த்து வைப்பேன்.ஒரு டிக்கெட் கூட மிஸ் பன்னாம.அப்படி தான் அன்னைக்கும்.அவ போட்டோ சேர்க்கணும்னு.
தேடுனேன் பேமிலி போட்டோ எல்லாத்தையும் தேடினேன்.கடைசியில எங்க சித்தப்பாவோட கல்யாண ஆல்பத்துல கிடைச்சுது.
வெள்ளை கலர் கவுன் போட்டு அவளும் அவ அக்காவும் நின்னுட்டு இருந்தா.செம்ம கியுட்டா.
சிரிப்புதான் வந்துச்சு அதை பாக்கும் போது.முடி பாப் விட்டுருந்தா.பத்திரமாகே அந்த போட்டோவை மட்டும் எடுத்துக்கொண்டு ஆல்பத்தை திருப்பி கொடுத்துட்டேன்.
இந்த கொஞ்ச நாளாவே எனக்குள்ள நடந்த இந்த மாற்றம் எனக்கே புதியதாக இருந்தது.பொதுவாக love at first sight இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையது.
அவளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.அவகூட எப்போதும் பேசியிருக்கேன்.ஆனா இப்ப மட்டும் ஏன் எனக்கு சந்தோசமா இருக்குதுனு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்.
எப்போதுமே ஒரு பெண்ணை பார்த்தாள் அவளை கழுத்துக்கு கீழ் அளவிடும் என் கண்கள் அவளை கண்களை மட்டும் பார்த்து பேச சொன்னது.
நான் முதல் முதல் உணர்ந்த பெண் ஸ்பரிசம் அவளுடையது.முதல் முதல் உணர்ந்த பெண் வாசம் அவளுடையது தான்.
சின்ன வயசுல நெருங்கி அமர்ந்து தோளோடு தோள் உரசி எத்தனையோ முறை கதை பேசி இருக்கிறோம்.அப்போது அவளிடம் இருந்து வரும் பெண் வாசனையை நான் ஸ்வாசித்திருக்கிறேன்.அப்போது எனக்கு மீசை முளைக்கும் பருவம்.
நான் விலகி சென்றாள் கூட அருகில் வந்து உட்காருவாள்.
ஆனால் கண்டிப்பாக இது உடலையோ அழகையோ சார்ந்த ஈர்ப்பு அல்ல.சிறுவயதில் நம் மனதுக்கு ரொம்ப நெருக்கமாக இருந்துவிட்டு கால ஓட்டத்துல பிரிஞ்சு இப்ப மீண்டும் பாக்கும்போது என்னோட மனசு திரும்பவும் அதே நெருக்கத்தை அவகிட்ட தேடுது.
எனக்கும் காதல் வந்துச்சு.ஆனால் ஒன்னுல உறுதியா இருந்தேன்.நான் அவளை லவ் பன்றேன்னு சொல்லி அவளும் லவ் பன்றேன்னு சொல்லி அப்பறம் அதனால அவ படிப்பு கெட்டு போய்டகூடாது.
அதுல நான் உறுதியா இருந்தேன்.என்னைக்கு அவ ஸ்கூல் லைப் முடிச்சு காலேஜுக்கு போறாளோ அன்னைக்கித்தான் அவகிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.
இப்படியே கொஞ்ச நாள் போச்சு.சும்மாவா வைரமுத்து சொன்னாரு.
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்
தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்
இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்
பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?
அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்
சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்
சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்
சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்.
அதே மாதிரி எனக்கும் ஒளிவட்டம் தெரிஞ்சுது.இளையராஜாவின் பாடல்கள் இசை அரக்கனாய் என்னை ஆட்டுவித்தது.எந்த பிரச்சனையும் பாத்துக்கலாம் அப்படிங்கிற மாதிரி தைரியம் வந்தது.முகம் சந்தோஷத்தில் மிதக்க ஹார்மோன்கள் ஊற்றெடுக்க உடம்பில் புது ரத்தம் நீரூற்றாய் உற்பத்தியாகி அதில் காதல் கரைய தொடங்கியது.

No comments:

Post a Comment