CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 23


வெளியே வந்த கார்த்திக் மகேஷை பார்க்க நேராக ஆபிஸ் சென்றான்.அங்கு அவன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.கார்த்திக்எ சென்று சேரில் உட்கார்ந்தான்.
சில நிமிடம் கழித்து வந்த மகேஷ் இப்போ எப்படி இருக்கு அண்ணா என்றான்.
ம்ம்ம் பரவா இல்லடா.வலி குறஞ்சிருக்கு.உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன்.வேலைலா எப்படி போகுது.எந்த ஸ்டேஜ்ல இருக்கு.
எல்லாம் நல்லா போயிட்டு இருக்குது.அந்த மான்வி வீடு வேலை முடிய போகுது.அவுங்க இன்னும் ஒரு 10 நாள்ல பால் காய்ச்சணும்னு பிரிய படுறாங்க.அது விஷயமா உன்கிட்ட பேசுறதா சொன்னாங்க.
ஒஹ்.மறந்தே போச்சுடா.ஆமா எப்போ சொன்னாங்க.
நேத்து தான்னா.
ம்ம்ம் ஒரு நிமிஷம் அந்த கேலண்டரை எடு.
மகேஷ் கேலண்டரை எடுத்து கொடுத்தான்.அதில் அவரகள் சொன்ன தேதியை பார்த்தவன் நல்ல நாள் எல்லாம் சரி பார்த்தான்.பின் தனது போனை எடுத்து மான்வியின் அப்பாவிற்கு கால் செய்தான்.அவர்களிடம் அது விஷயமாக பேசிவிட்டு நாளை நேரில் வந்து பார்ப்பதாகவும் சொன்னான்.
மறந்தே போச்சுடா.நாளைக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டு அப்படியே சைட்டுக்கும் போய்ட்டு வந்துடலாம்.சரியா.
ம்ம் சரி அன்னே.
அதன் பின் கம்பெனி விஷயமாக சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.
பின்னர் வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தான்.அவனுக்கு ராஜியை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்து கொண்டே இருந்தான்.
அவனுக்கு எதுவும் பிடிபடவில்லை.இறுதியில் யாரிடமாவது உதவி கேக்கலாம் என்று யோசித்தான்.நம்பகமான ஆளாக இருக்கணும்,அதே சமயம் சீக்ரட்டாக இருக்க வேண்டும் யாரை கேக்கலாம் என்று யோசித்தான்.அவனுடைய மைண்டில் பல உருவங்கள் ஓடியது.அதில் சக்தியை தேர்ந்தெடுத்தான்.
வீட்டிற்கு வந்த பின் நேராக மொட்டை மாடிக்கு சென்றான்.முதலில் சக்திக்கு கால் செய்தான்.
கால் அட்டென்ட் செய்யப்பட ஆங் சக்தி.நான் தான் பேசுறேன் என்றான்.
சொல்லு அத்தான்.தெரியுது.
உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.ஆனா எப்படி ஆரம்பிக்கண்ணு தான் தெரியல.
என்ன பீடிகைலா பலமா இருக்கு.
ஆமா.கொஞ்சம் சீரியசான லைப் மேட்டர்.
ம்ம்ம் சொல்லு கேப்போம்.
இதை கேட்டுட்டு நீ கோவப்படமாட்டானு எனக்கு சத்தியம் பண்ணு.
முதல்ல நீ சொல்லு.அப்றம் கோவப்படுறதா வேண்டாமான்னு நான் பாத்துக்கிடுறேன்.
சரி சொல்றேன்.ஆனா நீ கோவப்பட கூடாது.
முதல்ல சொல்லு.
அது வந்து என்று ஆரம்பித்து ராஜிக்கும் அவனுக்கும் நடந்த பழைய சண்டைகள்,அவள் பேசியது,நடந்த பிரச்சனைகள் முதல் இன்று ராஜியும் தன்னை விரும்புவது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னான் கார்த்திக்.
இது அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த சக்தி ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அவளின் மௌனம் கார்த்திக்கிற்கு சற்று கழகத்தை ஏற்படுத்தியது.
சில நிமிடங்கள் கழித்து சக்தி சற்று பலமாக சிரிக்க தொடங்கினாள்.
ஹலோ சக்தி இருக்கியா.ஏன் சிரிக்கிற.
ஹஹஹஹஹஹஹஹா.
ஏய் சொல்லுட்டு சிரி.
அத்தான் உன்னை மாதிரி முட்டாள் இந்த உலகத்துலயே கிடையாது.
ஏன் அப்டி சொல்ற.நான் ஏன் முட்டாள்.
இல்ல கட்டின பொண்டாட்டி இவ்ளோ நாளா லவ் பண்றளா இல்லையானு தெரியாமலே இவ்ளோ நாள் இருந்துருக்கியே அதான் சொன்னேன்.
இல்ல சக்தி புரியல.
அட லூசு அத்தானே.எங்க அக்கா.அதான் உன் பொண்டாட்டி உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு.
என்னடி சொல்ற.
ஆமா.அவ எப்பவோ உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா.நீதான் அது தெரியாம இவ்ளோ நாள் வேஸ்ட் பண்ணிட்ட.
எனக்கு புரியல.
இன்னுமா புரியலை.தெளிவா சொல்றேன் கேளு.நீ சொன்ன எல்லாத்தையும் அவ என்கிட்டே சொல்லிட்டா.அதுவும் இல்லாம அவ நீயா பழைய மாதிரி அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு ஆசை பட்டா.அதான் அவளா உன்கிட்ட எதுவும் கட்டிக்கிடலை.
அப்ப இவ்ளோ விஷயம் நடந்துருக்கு.எதுக்குடி என்கிட்டே சொல்லல.
ஹலோ உன் பெண்டாட்டி தான.நீதான் தெரிஞ்சிக்கிடனும்.அதுவும் இல்லாம யார்கிட்டையும் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டா.குறிப்பா உன்கிட்ட.இந்த விஷயம் பிரியா,எனக்கு,அப்றம் மான்வி,உன் தங்கச்சின்னு எல்லாருக்கும் தெரியும்.
அடிபாவிகளா இதை முதலையை சொல்லிருந்தா இவ்ளோ தூரம் வந்துருக்காதே.அன்னைக்கு அவ பிரென்ட் வீட்டுல சண்டை நடந்த அப்பவே அவ என்கிட்ட இதை சொன்னா.நான் தான் கோவத்துல புரியாம அவகிட்ட கோவப்பட்டுட்டேன்.ச்ச.
அது உன் தப்பு.இப்போவாவது உனக்கு புரிஞ்சுதே.
எல்லாம் புரிஞ்சது.இப்போ என்ன பண்ண சக்தி.
என்கிட்டே கேக்குற.உன் ஆளு உன் லவ்வு.நீதான் முடிவு பண்ணனும்.
ஆமா சக்தி முடிவு பண்ணிட்டேன்.அவகிட்ட போய் சொல்ல போறேன்.
இப்பொவேவா.
இல்ல.அவ பிறந்த நாளைக்கு முந்தின நாள்.
ஓஹோ பிறந்த நாள் கிப்ட்டா.
ம்ம்ம் ஆமா.அப்படின்னே வச்சிக்கலாம்.அதுவரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்காக கொஞ்சம் சர்ப்ரைஸ் மெயின்டைன் பண்ணு ப்ளீஸ்.
சரி சரி பொளச்சி போ.சொல்ல மாட்டேன்.இதுலையாச்சும் சொதப்பாம இரு.
கண்டிப்பா.
ஆமா இந்த மீதி நாள் என்ன பண்ண போற.இதே மாதிரி அவகிட்ட நடந்துக்க போறியா.இல்லஅஅஅஅஅ.
ம்ம்ம்.இல்ல.இந்த நாள்ல அவளுக்கு பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் மாத்த போறேன்.
புரியல.
அது சஸ்பென்ஸ்.நடக்கும் போது பாரு.
சரி.ஆள் தி பெஸ்ட்.நீங்க ரெண்டு பேரும் எப்படா ஒன்னு சேருவீங்கன்னு ரொம்ப எக்ஸைட்டடா இருக்கு.சீக்கிரம் சேர்ந்துடுங்க.வச்சிடுறேன்.
ம்ம்ம் சரி.குட் நைட்.
பின் கார்த்திக் கீழே இறங்கி ரூமிற்கு சென்றான்.
அங்கு ராஜி மாடி படிக்கட்டுகளில் அப்போது தான் ஏறி கொண்டிருந்தாள்.
அவளை பார்த்த கார்த்திக்கிற்கு திக்கென்று இருந்தது.ஒருவேளை இவள் நாம பேசினதை கேட்டுருப்பாளோ.ராஜி வந்ததை பார்த்தாள் இப்போதான் வந்த மாதிரி இருக்கு கேட்டுருப்பாளா இல்லையா.சரி எதுவாக இருந்தாலும் நாமளா காட்டிக்க கூடாது.
என்ன ராஜி திடீர்னு இந்த பக்கம்.
ஒன்னும் இல்ல.வானத்துல ஏரோபிளான் போகுது பாக்கலாம்னு வந்தேன்.
என்ன ஜோக்கா.
தெரியுதுல்ல.அப்றம் என்ன.வழி விடு.நான் துணி எல்லாம் எடுக்கணும்.
துணி எடுக்க வந்தியா.சரி சரி.
ஆமா நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற.
அது சும்மா சும்மா.ஆபிஸ் விஷயமா ஒரு கால்.அதான் பேசிட்டு இருந்தேன்.
சஸ்பென்ஸ்னு ஏதோ கேட்ட மாதிரி இருந்துச்சு.
அப்படியா கேட்டுச்சு.(பேசினதை கேட்டுட்டாலோ),இல்லையே.சக்சஸ்னு சொல்லிருப்பேன்.ஒரு டெண்டர் சக்சஸ் ஆகிடுச்சுன்னு சொல்லிருப்பேன்.அது உன்காதுல சஸ்பென்ஸ்னு கேட்டிருக்கும்.
அதுக்கு ஏன் இப்போ உளறுற.
எப்ப பாத்தாலும் சும்மா சந்தேகமா பாக்காத ராஜி.நான் கீழ போறேன்.நீ எடுத்திட்டு வா.என்றுபி கீழே ரூமிற்கு சென்றான் கார்த்திக்.
கீழே இறங்கி வாயை குவித்து பெருமூச்சு விட்டுக்கொண்டு கேள்வி கேட்டே கண்டு பிடிச்சிடுவா போல இருக்கே என்று நினைத்த கொண்டு ரூமிற்கு சென்றான் கார்த்திக்.
மாடியில் துணியை எடுத்து கொண்டிருந்த ராஜிக்கு கார்த்திக்கின் இந்த திடீர் உளறல் சற்று வித்யாசமாக தோன்றியது.கார்த்திக் உடன் இருந்த இந்த நாட்களில் அவனின் ஒவ்வொரு அசைவு,வார்த்தைகளை அவனை நன்கு அறிந்து வைத்திருந்தாள்.
அவனிடம் நேற்று இருந்ததை விட இன்று ஏதோ மாற்றம் தெரிவதை அவளால் உணர முடிந்தது.
குழப்பத்துடன் துணிகளை எடுத்து கொண்டு ரூமிற்கு சென்றவள் அங்கு கார்த்திக் கண்ணாடியை பார்த்து ஏதோ சிரித்து கொண்டிருந்தவனை பார்த்து குழப்பத்துடன் சோபாவில் அமர்ந்து துணிகளை அடுக்கினாள்.
ராஜியை கவனித்த கார்த்திக் டக்கென்று திரும்பி ஒன்றும் நடக்காதது போல் தலையை குனிந்து கொண்டு பெட்டில் அமர்ந்தான்.
ராஜி உன்கிட்ட பேசணும்.
அவனை பார்க்காமல் சொல்லு என்றாள்.
சாரி.
எதுக்கு.
இல்ல கேக்கணும்னு தோணுச்சு.
இன்னும் பத்து நாள் தான் இருக்கு.உன் பிறந்த நாளுக்கு.நம்ம சாலஞ் முடியவும்.உனக்கு எதாவது என்மேல.
என்ன.
இல்ல நம்ம பெட் படி எதாவது உனக்கு தோணுச்சா.
.(ஆமான்னு சொல்லு ராஜி.தோணுச்சுன்னு சொல்லு.நான் உன்கூடத்தான் இருப்பேன்னு சொல்லு ராஜி.ஐ லவ் யூ கார்த்திக்னு சொல்லு) அவள் மனம் அவளிடம் பேசியது.
நான் போயி.அப்படிலாம் ஒன்னும் இல்ல.என்ன பத்தி தான் உனக்கு தெரியும்ல.(வெறும் வாய் வழியாக மட்டும் வந்தது அவளின் வார்த்தைகள்).
.(ஓத்துக்கோயேண்டி முட்ட கன்னி.ஏண்டி பொய் சொல்லுற.நான் மட்டும் சொல்லுவேன்னு நினைக்கிற.உன் வாயால அத கேக்கணும்னு தானடி இவ்ளோ நாள் ஆசைபட்டேன்.உன்ன விட்டுட்டு போக மாட்டேன்னு சொல்லு.)மனதில் நினைத்துகொண்டு
தெரியும் ராஜி.அப்ப எதுக்கு நேத்து பொய் சொன்ன.
அது அது அதுவந்து அன்னைக்கி என் பிரென்ட் கஸ்தூரி உன்ன அப்படி சொல்லிட்டாளா.அதான் நீ கஷ்டப்படக்கூடாதுன்னு.உன்ன சமாளிக்க திக்கி திக்கி வந்தது ராஜியின் வார்த்தைகள்.
அப்ப இங்க இருந்து போறது உனக்கு சந்தோசம் அப்படித்தான.
(ப்ளீஸ் கார்த்திக் வார்த்தையால என்ன கொள்ளாத.எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்.இப்பவே என்ன கட்டி பிடி கார்த்திக்.உன் மார்ல சாஞ்சி அழணும்.நீதான் முக்கியம்னு கத்தனும்.உன் முகம் பபுல்லா முத்தம் கொடுக்கணும்.என்ன மன்னிச்சுடு கார்த்திக்னு உன்கிட்ட சொல்லணும்). அப்படிலா ஒன்னும் இல்ல.நீதான் எப்படி சமாளிக்க போறியா.
ஓகே ராஜி.இனி இருக்க போற கொஞ்ச நாளாச்சும் நம்ம கோவத்தை மறந்துட்டு எதை பத்தியும் யோசிக்காம,சண்டை போடாம சந்தோசமா இருக்கலாம்.சரியா.இன்னைல இருந்து அவர் டேஸ் ஆர் கவுண்ட்டட்.
சரி எனக்கு கீழே வேலை இருக்கு நான் போறேன்.இதை சொல்லும் போது ராஜியின் விழிகள் கலங்கியது.கஷ்டப்பட்டு வந்த அழுகையை அடக்கி கொண்டு கீழே ஓடினாள்.
ராஜியை கவனித்த கார்த்திக்கிற்கு மனசு வலித்தது.இவ்ளோ நெஞ்சழுத்தகாரிய ராஜி நீ.ஆமா கார்த்திக்.லவ் பன்றேன்னு சொல்ல மாட்டேங்குற.இருக்கட்டும் ராஜி.மீதி இருக்க இந்த கொஞ்ச நாள் மட்டும் இதை பொறுத்துக்கோ.சாரி ராஜி உன்ன அழவச்சதுக்கு.என்று சொல்லிக்கொண்டான்.
கீழே சென்ற ராஜி நேராக டைனிங் ரூமில் உள்ள டாய்லெட்டிற்கு சென்று வாயை பொத்திகொண்டு அழுதாள்.
போடா நாயே.இன்னும் பத்து நாள் தான் இருக்கு.நான் என்ன பண்ணட்டும்னு சொல்லாம சொல்றியா.என்று கண்ணாடியை பார்த்து சொன்னாள்.
ஏய் அவனை ஏண்டி குறை சொல்ற.அவன்தான் கேட்டான்ல.என்மேல உனக்கு எதாவது பீலிங் வந்துச்சான்னு.ஆமான்னு சொல்ல வேண்டியாது தான என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.
என்ன எப்படி சொல்ல சொல்ற.உன் பின்னாடி எப்படிலா சுத்தினான் ராஜி.இப்போ நானா போய் சொல்லியும் நேத்து வேண்டாம்னு சொல்ரான்.இப்போ என்கிட்டையே கேள்வி கேக்குறான்.எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை.அவன் புரிஞ்சு கேக்குறானா.இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறானான்னு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.
என்று சொல்லி அழ தொடங்கினாள்.
கொஞ்சம் பாரம் குறையும் வரை அழுதவள் பின் டேப்பை திறந்து தண்ணீர் எடுத்து தன் மூஞ்சில் சப்சப் என்று அடித்தாள்.
முகத்தை துடைத்து கொண்டு எதுவும் நடக்காதது போல சாப்பாடு எடுத்து வைத்தாள்.
கார்த்திக்கை அழைத்து சாப்பாடு வைத்து தானும் பேறுக்கு சாப்பிட்டு விட்டு கார்த்திக்கிற்கான மாத்திரைகளை எடுத்து கொடுத்தாள்.
கார்த்திக்கிடம் மாத்திரைகளை கொடுத்து விட்டு இப்போ வழி பரவா இல்லையா என்றாள்.
ம்ம்ம்ம் பரவா இல்லை.ராஜி.நாளைக்கு ஆபிஸ் போகலாம்னு இருக்கேன்.காலைல இந்த பேண்ட்எயிட் மட்டும் மாத்தணும் என்றான்.
சரி நான் மாத்தி விடுறேன்.நீ தூங்கு.
ஆமா ராஜி உன் முகம் வேற ஏன் டல்லா இருக்கு.
ஒன்னும் இல்ல தூக்கம் வருது.அதான்.நீ தூங்கு.நானும் தூங்க போறேன்.
சரி குட் நைட் ராஜி.
ம்ம் குட் நைட்.
ராஜி சோபாவில் படுத்துக்கொள்ள அவளுக்கு தூக்கமே வரவில்லை.மாறாக கண்ணீர் மட்டும் வந்தது.அவளுக்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.
அப்போது கார்த்திக்கின் மொபைலிற்கு கால் வந்தது.கார்த்திக் எடுப்பான் என்று பார்த்த ராஜி அவன் மாத்திரையின் எபெக்டால் நன்கு தூங்கி கொண்டிருந்தான்.
இப்போது மீண்டும் அடிக்க போனை எடுத்து பார்க்க மான்விதான் கால் செய்திருந்தாள்.
காலை அட்டென்ட் செய்த ராஜி சொல்லு மான்வி என்றாள்.
அக்கா கார்த்திக் இல்லையா.
தூக்கிகிட்டு இருக்கான்.இப்போதான் டேப்லெட் சாப்பிட்டு தூங்கினான்.ஏன் எதாவது சொல்லனுமா.
இல்ல அக்கா.ஆக்சிடென்ட்னு கேள்வி பட்டேன்.அதான் இப்போ எப்படி இருக்குன்னு கேக்க போன் பண்ணேன்.
பரவா இல்லை.சின்ன ஆக்சிடென்ட் தான்.என்று சொல்லிவிட்டு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு மூக்கை உறிஞ்சினாள் ராஜி.
சரி அக்கா.ஏன் கொஞ்சம் டல்லா பேசுறீங்க.எதாவது பிரச்சனையா.
இல்ல மான்வி.தூக்கம் வர மாதிரி இருந்துச்சு.அதான்.
அக்கா நீங்க பொய் சொல்றிங்கன்னு மட்டும் தெரியுது.என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க.
அதெல்லாம் ஒன்னும் இல்ல.எனக்கு தூக்கம் வருது.அதான்.
இல்ல.இப்போ.கூட நீங்க மூக்கை உறிஞ்சிங்க.அழுதிங்கலா.
ஒன்னும் இல்லேண்ணு சொல்றேன்ல.
இல்ல அக்கா என்னனு சொல்லுங்க.என்னால முடிஞ்சத நான் செய்யுறேன்.
அதான் எல்லாம்.முடிஞ்சு போச்சே.இனி செய்யுறதுக்கு என்ன இருக்கு.
என்ன அக்கா சொல்றிங்க.அழாதீங்க முதல்ல.
ஆமா மான்வி.கார்த்திக் என்ன இந்த வீட்டை விட்டு போன்னு சொல்லாம சொல்லிட்டான்.
என்னக்கா சொல்றிங்க.
சற்று நேரத்திற்கு முன் கார்த்திக் சொல்லியதை மான்வி இடம் அழுதுகொண்டே சொன்னாள் ராஜி.
அக்கா இவ்ளோதானா.இதுக்கு போய் ஏன் இவ்ளோ பீல் பண்றீங்க.
வேற என்ன பண்ண சொல்ற என்னை.
அக்கா உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையே யாரு முதல்ல சொல்ல போறீங்கன்னு தான்.
இருக்கட்டும்.ஆனா இன்னைக்கு அவன் சொன்னதை பார்த்தா அவனுக்கு நான் இந்த வீட்டுல இருந்து போறது தான் விருப்பம் போல தெரியுது.
அக்கா நீங்க நல்ல குழம்பி போய் இருக்கீங்க.முதல்ல நான் சொல்றத கேளுங்க.ஒருவேளை உங்க வாயால கேக்கணும்னு கார்த்திக் உங்க கிட்ட பேசிருக்கலாம்ல.
என்ன சொல்றம் நீ.
இப்போ புரியும் உங்களுக்கு.உங்க ரெண்டு பேருக்குள்ள நீங்க தான் அவங்க கிட்ட போய் சொல்லுவீங்க.அதான் உங்களுக்குள்ள இருக்க பெட்.அதை நீங்களும் விட்டு கொடுக்க மாட்டேன்கிறீங்க.அவுங்களும் விட்டு கொடுக்க மாட்டேன்றாங்க.
இது தான் பிரச்சனையே.
கொஞ்சம் யோசிச்சு பார்த்தா அது தான் உண்மை.ஆனா இப்போ என்ன பண்ணுறது.
அத கேளுங்க முதல்ல.கார்த்திக் உங்க வாய புடுங்குற மாதிரி நீங்களும் அவுங்கள சொல்ல வைங்க.
அதைத்தான் எப்படி பண்ணணு கேக்குறேன்.
அவரு வழியிலே நீங்களும் போங்க.
இது சரியா வரும்னு நினைக்கிறியா.
கண்டிப்பா வரும்.அது வரைக்கும் எதை பத்தியும் யோசிக்காம நடக்குறத மட்டும் பாருங்க.சரியா.
ம்ம்ம் தேங்க்ஸ் மான்வி.
அதெல்லாம் வேண்டாம்.நல்லா தூங்குங்க.அப்றம் பேச வந்த விஷயத்தை மறந்துட்டேன்.இன்னும் 10 நாளுல வீட்ல பால் காய்ச்ச போறாங்க.கிராண்டா பண்ணனும்னு அப்பா பிரிய போடுறாங்க.நீங்க கண்டிப்பா வரணும்.
கண்டிப்பா நானும் கார்த்திக்கும் வரோம்.என்னைக்கு.
தெரியலை.அப்பா கார்த்திக் கிட்ட பேசிருக்காங்க.நாளைக்கு பைனல் பண்ணுவாங்க.
ஓகே மா கண்டிப்பா வரோம்.
சரி அக்கா பாய் குட் நைட்.
குட் நைட்.
மான்வி சொன்னதிலும் ராஜிக்கு அதில் ஒரு லாஜிக் இருப்பது போல தோன்றியது.நாம் ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க தவறினோம் என்று யோசிக்க தொடங்கினாள்.
பலவித யோசனைக்கு பிறகு மான்வி சொல்வதை செயல்படுத்தி பார்ப்பதென முடிவு செய்தாள்.அதை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தவளுக்கு சரியான ஐடியா தோன்றியது.
அப்படியே தூங்கியும் போனாள்.மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் ராஜி குளித்து முடித்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு முகம் மலர சிரிப்புடன் கார்த்திக்கிற்கு காபி எடுத்து சென்றாள்.
கார்த்திக் எழுந்து பிரெஷப் செய்து விட்டு ராஜியை தேட அங்கு ராஜி காபி கப்புடன் வந்தாள்.
குட் மார்னிங்.சிரித்தம் முகமாக சொன்னாள் ராஜி.
ராஜியின் முகத்தை பார்த்தவாறே ( என்ன நேத்து நாம போட்ட போடுல கவலையா இருப்பாண்ணு பார்த்தாள் சிரிச்ச முகமா இருக்கா.ஒரு வேலை சக்தி உளறிருப்பாளோ,இல்ல நேத்து பேசினதை கேட்டுருப்பாளோ.தெரியலையே) குட் மார்னிங் ராஜி.
வலி குறைஞ்சிடுச்சா.
ம்ம்ம்ஓ இதோட நீ இதை கேக்குறது 10வது தடவை.போதும் ராஜி.
பரவா இல்லை.11ஆ கூட இருக்கட்டும்.சொல்லு.
சுத்தமா இல்லை.போதுமா.
என்ன ராஜி ரொம்ப சந்தோசமா இருக்க போல.
இல்லையே எப்பவும் போல தான் இருக்கேன்.
அப்படியா.
அப்படித்தான்.
சரி ராஜி.இன்னைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.அதனால சீக்கிரம் கிளம்பனும்.நான் குளிச்சிட்டு ஆபிஸ் பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்ல கட்டு போட்டுக்கிடுறேன்.
ஹலோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.நீ சீக்கிரம் குளி.நானே மாத்திக்கிடுறேன்.
வேண்டாம் ராஜி லேட் ஆகிடும்.
அதெல்லாம் ஒன்னும் ஆகாது.போய் குளி.நான் எல்லாம் எடுத்து வைக்கிறேன்.
ம்ம்ம் சரி ஓகே.
ஒரு நிமிஷம் இங்க வா.
என்ன ராஜி.
வெயிட் பண்ணு என்று சொல்லிவிட்டு கத்தரியை எடுத்தாள் ராஜி.

No comments:

Post a Comment