CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 3



ஒரு வழியாக அவன் நண்பனின் உதவியுடன் ரமேஷை கண்டுபிடித்துவிட்டான்.அவனை பார்த்ததும் கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.ஆனால் கட்டுப்படுத்தி கொண்டான்.
அவனை பற்றி ராஜியிடம் தெரிந்து கொள்ள அவளுக்கு கால் செய்தான்.போனை எடுத்த ராஜி சொல்லு கார்த்திக் என்றாள்.நான் ரமேஷை பார்த்தேன்.அவன் நம்பர் கூட என்கிட்ட இருக்குன்னு சொன்னான்.நீ பொய் சொல்றன்னு சொன்னால் ராஜி.
உடனே அவனுடைய நம்பரை சொன்னான் கார்த்திக்.இப்ப நம்புறியான்னு கேட்டான்.உடனே பதறிய ராஜி நீ எதுக்கு அவனை பார்த்த.அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்குதுன்னு கேட்டாள் ராஜி.
பயப்படாத ராஜி நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்.ஆக்ச்சுவலா அவன் ரொம்ப லக்கி ராஜி.அவனை நீ லவ் பண்றல்ல.உலகத்துல ரொம்ப அழகான விஷயம் ஒரு பொண்ணால விரும்பப்படுறது தான்.அது உன்னை மாதிரி ஒருத்தி விரும்புனா அவன் எவ்ளோ பெரிய அதிர்ஷ்டசாலி.இதை சொல்ல தான் அவனை தேடி போனேன்.ஆனால் அவன்கிட்ட பேச எனக்கு தோணலை.அதான் வந்துட்டேன்னு சொன்னான்.
இப்பவாவது நம்புறியா கார்த்திக்.தயவுசெஞ்சி என் பின்னாடி சுத்தாம வேலையை பாருன்னு சொன்னாள் ராஜி.
ஓகே ராஜி பாய்ன்னு சொல்லி போனை வைத்தான் கார்த்திக்.அன்றில் இருந்து அவளுடன் அதிகமாக பேசுவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.அப்போது ராஜியின் அக்கா ப்ரியாவும் படிப்பு முடிந்து வீட்டிலேயே இருந்தததால் அவளுடன் பேசுவதை தவிர்த்தான்.
ராஜி வேறு ஒருவனை காதலித்தாலும் அவளை கார்த்திக்கும் காதலித்தான்.அவனுடைய மனம் அவள் மேல் உள்ள காதலை அதிகபடுத்தியதே தவிர அவளை வெறுக்க தோன்றவில்லை.
இப்படியாக 1 வருடம் சென்றது.ஒரு நாள் கார்த்திக்கின் வீட்டிற்கு ப்ரியா வந்திருந்தாள்.இரண்டு நாட்கள் அவள் அங்குதான் தங்குவதாக இருந்தது.முதல் நாள் இரவு அவளுடன் கார்த்திக் பேசிகொண்டிருக்கும் போது அவள் ராஜியின் லவ் மேட்டரை பற்றி கார்த்திக்கிடம் சொன்னாள்.
ரமேஷ் பிரியாவிற்கு கால் செய்து தங்கள் காதலுக்கு சப்போர்ட் செய்யுமாறு தொல்லை செய்வதாகவும்,அவனை எப்படி ஹாண்டில் பண்ணுவதுனே தெரியலன்னு சொன்னாள்.நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும் கார்த்திக்ன்னு சொன்னாள் ப்ரியா.
அவங்க ரெண்டு பேரையும் பிரித்தால் ராஜிக்கு செய்யும் துரோகம்.ப்ரியாவிடம் எல்லாத்தையும் சொல்லாவிடில் பிரியாவிற்கு செய்யும் துரோகம் என்று நினைத்த கார்த்திக் உன்கிட்ட அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் பேசணும்.நானும் ராஜியை லவ் பண்ணேன்.இந்த விஷயமெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்.நீதான் அவுங்க ரெண்டு பேரும் சேருவதற்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னான் கார்த்திக்.
நினைச்சேன் கார்த்திக்.நீ இதை உன் வாயால சொல்லணும்னு தான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.ச்சீ நீ இவ்ளோ சீப்பா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல.எப்படி கார்த்திக் என் தங்கச்சிய லவ் பண்ண முடிஞ்சுது.நாம ரெண்டு பாமிலிக்கும் இருக்குற பிரச்சனைலா உனக்கு தெரியும் தான.அப்ப எப்படி உன்னால லவ் பண்ண முடிஞ்சுது.எங்க அம்மா உன்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தாங்க.அவ்ளோத்தையும் கெடுத்திட்டியேன்னு சொல்லிட்டு கோவமாக சென்று விட்டாள்.
இதை கார்த்திக் எதிர்பார்த்தது தான்.சரி அவளை சமாதானபடுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டான்.அங்கு இருந்த இரண்டு நாட்களும் அவனுடன் ப்ரியா பேசவில்லை.
அவள் அங்கு அவளுடைய ஊருக்கு சென்ற இரண்டு மணி நேரத்தில் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.உன்மேல செம கோவத்துல இருக்கேன் கார்த்திக்.அங்க இருக்கும் போது கோவத்துல ஏதாவது கத்திடுவேனோனு பயத்துல தான் நான் பேசாம இருந்தேன்.என் தங்கச்சி லவ்வ்க்கு என்னையே ஹெல்ப் பண்ண சொல்லுவியா.அதெப்படி நீ லவ் பண்ண பொண்ண இன்னொருத்தன் கூட சேத்துவைக்க எப்படி முடியுது.சரியான மெண்டல் நீ.
என் தங்கச்சி லவ்வ சேர்த்து வைக்க நீ யாரு.உன் தங்கச்சிக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் சேர்த்து வைப்பேன்னு சொல்லவியான்னு கேட்டாள் ப்ரியா.
அவளது இந்த பேச்சை கேட்டு சூடான கார்த்திக் பதிலுக்கு அவனும் கோவமாக பேசிவிட்டான்.ஒருகட்டத்தில் சமாதானமான ப்ரியா அவனுடன் இனி பேச மாட்டேன்னு கூறி முடித்தால்.
கடைசியாக அவள் போனை வைக்கும் முன்பு கார்த்திக் சொன்னான் நாளைக்கு என் தங்கைக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் கண்டிப்பா நான் குறுக்க நிக்கமாட்டேன்.ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசி உண்மையா லவ் பண்றங்கன்னு தெரிஞ்சா எங்க அப்பா,அம்மாவை கன்வின்ஸ் செய்து நானே அவங்களை சேர்த்து வைப்பேன்னு சொன்னான் கார்த்திக்.
நீ வேணும்னா அப்படி இருப்ப.நான் அப்படி இல்லை.இனி நான் உன்கூட பேசமாட்டேன்னு சொல்லிவிட்டு சென்றாள் ப்ரியா.
அதற்கு பின் ரமேஷ் விஷம் குடிக்க,பிரச்சனை பெரிதாக,கார்த்திக் ப்ரியாவிடம் சேர்த்து வைக்க சொல்லி போராட,அவள் மறுக்க,ரமேஷிற்கு அவனுடைய அத்தை பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது.
டிங் டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்க நினைவில் இருந்து களைந்து கடிகாரத்தை பார்க்க மணி இரண்டாகி இருந்தது.எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு போர்வையை இழுத்து போர்த்தி தூங்கினான் கார்த்திக்.
மறுநாள் காலை கார்த்திக் அவள் படுக்கையில் இல்லை.அவன் எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு கீழே சென்ற போது அவள் சமையல் செய்து கொண்டிருந்தாள்.
நெற்றியில் அழகாக குங்குமம் வைத்து சேலை கட்டி,துண்டை தலையில் சுற்றி வைத்து இருந்தாள்.அவன் நியூஸ் பேப்பர் எடுத்து கொண்டு சோபாவில் இருந்தான்.ராஜி காபி எடுத்து கொண்டு டீபாயில் வைத்தாள்.
அவள் முகத்தை பார்க்காமல் அதை எடுத்து குடிக்க தொடங்கினான்.பின் வேலைக்கு செல்ல கிளம்பினான்.அவனுக்கு டிபன் பாக்ஸில் சாப்பாடை எடுத்து வைத்து அவனுடைய பேக்கை தயார் செய்தால் ராஜி.
அவன் ரூமிற்கு சென்று குளித்து விட்டு வந்து ட்ரெஸ் எடுத்து போட்டு கொண்டு சாப்பிட வந்தான்.டைனிங் டேபிளில் இருந்து சாப்பிட அவனுக்கு பரிமாறினாள் ராஜி.
சாப்பாடு வைக்கும் போது அதிகமாக வைத்து விட அவளிடம் பேசாமல் சைகையாலே போதும் என்று சொன்னான்.ராஜிக்கு அவன் அப்படி பேசாமல் சொன்னது ஒரு மாதிரியாக இருந்தது.சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென்று அவனுக்கு விக்கல் வர ராஜி தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவன் எழுந்து சென்று கை கழுவ சென்றான்.
இலையில் பாதி சாப்பாடு அப்படியே இருந்தது.நாம் நேற்று அவனிடம் அவ்வாறு பேசி இருக்க கூடாது.ரொம்ப கோவமா பேசிட்டோம்னு நினைத்து வருந்தினாள்.அதனுடைய வெளிப்பாடு தான் அவனின் இந்த மாற்றம் என்று உணர்ந்து கொண்டாள்.
கார்த்திக் ஓபிஸ் சென்ற போது அனைவரும் அவனை கிண்டலும் கேலியுமாக கலாய்த்து எடுத்தார்கள்.பின்னர் சைட்டிற்கு சென்று வேலைகளை பார்த்தான்.
அதிக வேலைகள் பெண்டிங்கில் இருந்தது.ஒரு வழியாக அனைத்தையும் நெருக்கி விட்டான்.அப்போது அவனுடைய A.D அழைக்க அவருடைய ரூமிற்கு சென்றான்.சொல்லுங்க சார் கூப்பிட்டீங்களாமேன்னு சொன்னான் கார்த்திக்.
முதல்ல உக்காருப்பா.அப்புறம் கல்யாணம்லா சிறப்பா முடிஞ்சுதா.எப்படி போகுது மேரேஜ் லைப் என்றார்.நல்லா போகுது சார்.ரெண்டு நாள் தான சார் ஆகுது போக போகத்தான் தெரியும் என்றான் கார்த்திக்.
அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும்.சரி ஒரு நாள் நீயும் உன் ஒய்ப்பும் சேர்ந்து என் வீட்டுக்கு வாங்க விருந்ததுக்கு அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்னு சொன்னார்.
சரி சார்.கண்டிப்பா கூட்டிட்டு வரேன் சார்.நான் வேலையை பார்க்கிறேன் சார்ன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அன்று அதிகமாக வேலை இருந்ததால் ராஜியை பற்றி மறந்து போயிருந்தான்.பின் ஈவினிங் வீட்டிற்கு சென்ற போது அவனுக்கு தலை வலிப்பது போல் இருந்தது.ரூமிர்க்கு சென்று பிரெஷ்அப் ஆகி விட்டு கீழே வந்தான்.ராஜி டிவி பார்த்து கொண்டிருந்தாள்.
அவளிடம் காபி கேட்கலாம் என்று யோசித்தான்.ஆனால் அவளுடன் இனி பேசகூடாது என்று முடிவெடுத்திருந்தான்.அதனால் அவன் நேராக கிட்சன் சென்று காபி எடுக்க சென்றான்.,
அவன் கிட்சன் செல்வதை கண்ட ராஜி எழுந்து கிட்சன் சென்று காபி தானக்.நீ போ.நான் போட்டு தரேன்னு சொன்னால்.ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத கார்த்திக் காபி ரெடி பண்ணினான்.
ராஜிக்கு அவனுடைய இந்த செய்கை கஷ்டமாக இருந்தது.என்னதான் இருந்தாலும் நாம் நேற்று அப்படி பேசியிருக்க கூடாதுன்னு வருந்தினாள்.அந்த நேரம் கோவிலுக்கு சென்றிருந்த சாந்தா வந்துவிட என்னப்பா ஏன் நீ காபி போட்டுட்டு இருக்க.என் மருமக எங்கன்னு கேட்டாள்.
கார்த்திக் அவன் பின்னால் நின்று கொண்டிருந்த ராஜியை பார்த்தான்.பார்த்துவிட்டு ஏன் நான் போட்டு குடிச்சா என்ன.என் பொண்டாட்டி போட்டு தரேன்னு தான் சொன்னா.நான்தான் அவளை போட வேண்டாம்னு சொல்லிட்டு அவளுக்கும் எனக்கும் சேர்த்து நானே போட்றேன்னு சொல்லி அவளை இருக்க வச்சேன்னு சொன்னான்.
அதுக்குள்ள பொண்டாட்டி வந்த உடனே மாறிட்டயடா.கல்யாணத்துக்கு முன்னாடி காபி குடிச்ச டம்ளர கூட எடுத்துட்டு வர மாட்டியேடா.இப்ப காபியே போட்டு குடிக்கிற.சூப்பர்டா என்று சொல்லிக்கொண்டு சென்றால் சாந்தா.
தயார் செய்த காபியை எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றான் கார்த்திக்.இங்கு ராஜி அத்தையிடம் சென்று அதை நைட் சாப்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்னு கேட்டாள்.
சப்பாத்திக்கு மாவு ரெடி பண்ணிவச்சிருக்கேன்மா.அதை செஞ்சுக்கிடலாம்.சட்னி மட்டும் செய்யணும்.அதை நான் பாத்துகின்றேன்.நீ மேல போமான்னு சொன்னால் சாந்தா.
ரூமில் கார்த்திக் தலை வலிக்கு தைலம் தேய்த்து விட்டு தான் வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்கு சென்றான்.அவனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைப்பதற்கு முன் அவன் தனியாக ஆஃபீஸ் வைத்து ஒரு சின்ன கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருந்தான்.இப்போது அதை தன் சித்தப்பா பையன் மகேஷிடம் ஒப்படைத்து அதை கார்த்திக் கவனித்து கொண்டான்.
அங்கு மகேஷ் கிளைண்ட்ஸ் இடம் பேசி கொண்டிருக்க இவன் உள்ளே சென்றான்.பின் அவர்களிடம் பேசி கணக்குகளை சரி பார்த்தான்.இவ்வாறாக இரவாகி விட வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு தூங்கினான்.ராஜிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நாம் இவனை நிம்மதியாக இருக்க விடகூடாதுன்னு நினைச்சோம்.ஆனால் இவன் நம்மகூட பேசாம நம்மள அவைட் பன்றான்.எது எப்படியோ நம்மை அவன் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டாள்.
இப்படியாக நாட்கள் செல்ல அன்று வெள்ளிக்கிழமை.வழக்கம் போல கார்த்திக் வேலைக்கு சென்றுவிட்டான்.மதியம் போல ராஜியிடம் இருந்து போன் வந்தது.என்னங்க இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடுறிங்களா.ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போய்ட்டு வரலாம்.சரின்னு சொல்லுங்கன்னு சொன்னாள் ராஜி.
அவனுக்கு குழப்பமாக இருந்தது.திடீர்னு ராஜியின் இந்த மனமாற்றம் எப்படின்னு.என்ன நடந்ததுன்னு தெரியலையே.சரி நல்லது நடந்தா சரிதான்னு சரி வரேன்.சீக்கிரமா வந்துடுறேன்னு சொன்னான் கார்த்திக்.
இங்கு ராஜியோ கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அத்தையிடம் அத்தை சொல்லிட்டேன் அத்தை.சாயங்காலம் வரேன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னாள் ராஜி.சரிம்மா அவன் வந்தவுடன் நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க.மறக்காம சேலை கட்டிட்டு போம்மான்னு சொன்னாங்க.
இதை எதையும் அறியாத கார்திக்கிற்கோ நிமிடங்கள் வருடங்களை கழிய எப்போது நேரத்தை கழிக்க என்று யோசித்து கொண்டிருந்தான்.சரியாக 4 மணிக்கு கடிகாரம் ஒலிக்க ஆபிஸில் சொல்லிவிட்டு கிளம்பினான் கார்த்திக்.
வரும்போது பூக்கடை பார்க்க அங்கு சென்று இரண்டு முழம் மல்லிகை பூ வாங்கிக்கொண்டான்.அவன் பைக்கில் கடந்த ஒவ்வொரு கிலோமீட்டர் தூரமும் ஒவ்வொரு மைலாக கடக்க ஒருவழியாக வீடு வந்தான்.அவன் வந்ததும் ராஜியை பார்க்க அவள் சாந்தாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.ராஜியிடம் வந்து பூவை கொடுக்க பூவை வாங்கிக்கொண்ட ராஜி சீக்கிரம் கிளம்புங்க நேரம் ஆகுது.நான்.காபி கலந்து எடுத்துட்டு வரேன்.நீங்க மேல போங்கன்னு சொன்னாள்.
ம்ம்ம்ம் சரின்னு சொல்லிட்டு சென்றான் கார்த்திக்.அவனுக்கு காபி கலந்து எடுத்துட்டு ரூமிற்க்கு சென்றால் ராஜி.அங்கு கார்த்திக் ட்ரெஸ் மாற்றிவிட்டு தலை சீவிக்கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று ம்ம்ம்க்கும் என்று செருமினால் ராஜி.
அவன் திரும்பி காபி எடுத்துவிட்டு தாங்க்ஸ் என்று சொல்ல வரும் முன் கார்த்திக் இன்னைக்கு பேசுனது.நீ எதுவும் பீல் பண்ணிக்காத.அத்தைதான் கோவிலுக்கு போக சொன்னாங்க.நானும் சரின்னு சொன்னேன்.அப்ப உடனே கார்த்திக்க்கு போன் பண்ணி சொல்லுன்னு பக்கத்துலையே இருந்தாங்க.அதான் நான் அப்படி பேசினேன்.மத்தபடி நான் அன்னைக்கு சொன்னது தான்னு சொன்னாள் ராஜி.
ச்ச நம்மள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்குறதுல என்னதான் சந்தோஷமோ.இதை கோவிலுக்கு போய்ட்டு வந்து சொல்லலாம்ல என்று நினைத்து கொண்டு அவள் முகத்தை பார்க்காமல் ரூமை விட்டு வெளியே வந்தான்.
கீழே அவளுக்காக வெயிட் செய்து கொண்டிருந்தான் அப்போது அங்கு வந்த சாந்தா டேய் கோவிலுக்கு போர இப்படி ஜீன்ஸ் போட்டுட்டா போவ போய் மாத்திட்டு போடான்னு சொன்னாள்.என்னம்மா நீ என்று சலித்துக்கொண்டு வேகமாக ரூம் சென்றான்.அப்போது தான் சாரி மாற்றிவிட்டு ராஜியும் வெளியே வர இருவரும் மோதிக்கொண்டார்கள்.டக்கென்று சுதாரித்து கொண்ட இருவரும் சாரி சாரின்னு ஒரே நேரத்தில் சொன்னார்கள்.பின் ராஜி அத்தையிடம் சென்று பூஜைகூடையை வாங்கிகொண்டாள்.
கார்த்திக் வேஷ்டியும் பிளைன் ஷர்ட்டும் மாற்றிக்கொண்டு கிளம்பினான்.அவனை கண்ட ராஜி ஒருநிமிடம் திக்கித்து போனாள்.ஆறடி உயரத்தில்,அடர்த்தியான மீசையும்,ட்ரிம் செய்த தாடியுடன்,நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் அவனை பார்த்த போது ஆண்மைக்குரிய அத்தனை அம்சங்களும் அவனிடம் இருப்பதை உணர்ந்தாள்.
இதுநாள் வரை அவனை பேண்ட்,ஷர்ட்டில் மட்டுமே பார்த்த ராஜி,இன்று வேஷ்டி சட்டையில் பார்த்த போது மேன்லியாக தெரிந்தான்.அதை அவனிடம் சொல்லலாம் என்று வாயெடுத்த போது வேண்டாம் அவன் இதனால் அட்வான்டேஜ் எடுத்து கொள்வான் என்றது அவளது மனம்.
பின் இருவரும் பைக்கில் கோவிலுக்கு செல்ல அவன் மீது அவள் கை படாதவாறு சற்று விலகியே இருந்தால் ராஜி.அதற்கு வேறொரு காரணமும் இருந்தது.ஸ்பீட் பிரேக்கில் வேண்டும் என்றே பிரேக் அடித்தால் இடிக்க நேரிடும் என்று சற்று கேப் விட்டே இருந்தாள் ராஜீ.
அவளின் பயத்தை உணர்ந்தவனாக ஸ்பீட் பிரெக்,பள்ளங்களில் செல்லாமல் சைடு வழியாக வண்டியை ஓட்டினான்.கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு பூஜைக்கு கொடுத்தனர்.வழக்கம் போல கார்த்திக் இருவர் பெயருக்கும் அர்ச்சனை கொடுக்க பூஜை முடிந்து பிரகாரத்தை சுற்றி வந்தனர்.பி
பின் கோவில் பிரகாரத்தில் சிறிது நேரம் இருவரும் உக்கார்ந்து கொண்டிருந்தனர்.இருவரும் ஒன்றும் பேசவில்லை.அமைதியாக இருந்த நேரத்தில் திடீரென்று ஒரு ஆறு வயது குழந்தை கார்த்திக்கின் அருகில் விளையாடி கொண்டிருந்தது.அதை ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்.
அந்த குழந்தையை பார்த்து அவன் கண்ணடிக்க அதுவும் பதிலுக்கு கண்ணடித்தது.பின் ராஜியின் பின்னால் மறைந்து கொண்டு மீண்டும் அந்த குழந்தையை பார்க்க அதுவும் அதே மாதிரி மறைந்து வெளியே வந்தது.
பின் சைகையால் அதை பார்த்து வா என்று அசைக்க அந்த குழந்தையும் பதிலுக்கு நீ இங்க வான்னு கை நீட்டி ஒரு விரலை அசைத்து கூப்பிட்டது.ஓடி சென்று குழந்தையை தூக்கி முத்தமிட்டான்.
அங்கிளுக்கு ஒரு கிஸ் கொடுங்க என்றான்.பதிலுக்கு அதுவும் கன்னத்தில் முத்தம் கொடுத்தது.இங்க என்று இன்னொரு கன்னத்தையும் காட்ட அங்கும் தன் பிஞ்சு உதடுகளால் ஒத்தி எடுத்தது.
நீங்க என்ன படிக்கிறிங்க செல்லம்ன்னு கேட்டான் கார்த்திக்.அதற்கு எல்கேஜி என்று மழலை குரலில் சொன்னது அந்த குழந்தை.அப்படியா சரி அப்பா,அம்மா எங்கடா இருக்காங்க குட்டின்னு கேட்டான் கார்த்திக்.அங்க என்று கை நீட்டிய திசையில் இருவர் சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர்.
சரி உங்களுக்கு எத்தனை பிரெண்ட்ஸ்டா குட்டின்னு கேட்டான் கார்த்திக்.எனக்கு 4 பிரெண்ட்ஸ் என்று 5 விரல்களை காட்டியது.சரி அப்ப என்னையும் உன் பிரெண்டா சேர்த்துக்கிடுறிங்களா என்றான் கார்த்திக்.சரி சேர்த்துக்கிடறேன்.உன் என்ன என்றது குழந்தை.கார்த்திக்ன்னு சொன்னான்.உங்க பேரு என்னடா குட்டின்னு கேட்டான் கார்த்திக்.ராஜி என்றது குழந்தை.உடனே ராஜியை பார்த்தான் கார்த்திக்.
இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த ராஜி குழந்தை பெயர் சொன்ன உடன் அதை கவனிக்காதது போல இருந்து கொண்டாள்.குழந்தையை பார்த்து ராஜின்னு பேரு வச்ச எல்லாரும் ரொம்ப அழகை இருக்கிங்கடா குட்டின்னு சொல்லிவிட்டு மீண்டும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.
அப்போது ராஜி,ராஜி என்று ஒருவர் தேடிக்கொண்டு வர அப்பா என்று கூப்பிட்டது குழந்தை.நீ இங்க இருக்கியா.எங்க எல்லாம் உன்னை தேடுறதுன்னு சொல்லிக்கொண்டு அருகில் வந்தார் குழந்தையின் அப்பா.
அப்பா இது என்னோட புது பிரென்ட்.கார்த்திக் என்று அப்பாவிடம் அவனை அறிமுகப்படுத்தியது குழந்தை.சாரி சார்.குழந்தை கொஞ்சம் வாலு. அதான்பி கொஞ்சம் ஓவெரா பேசுவான்னு சொன்னார் குழந்தையின் அப்பா.
ஏன் சார் வாலுன்னு சொல்றிங்க சுட்டின்னு சொல்லுங்க என்று சிரித்து கொண்டே சொன்னான் கார்த்திக்.சரி சார் அப்ப நாங்க கிளம்புறோம் போலாமா ராஜி.அங்கிளுக்கு பாய் சொல்லுன்னு சொன்னார் குழந்தையின் அப்பா.
ஓகே கார்த்திக்.பாய் என்று டாட்டா காட்ட கார்த்திக்கும் பதிலுக்கு பாய் ராஜி டேக் கேர்.என்று டாட்டா காட்டினான்.பின் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.அப்போது பக்கத்துவ வீட்டில் இருப்பவர்கள் இவர்கள் பைக்கில் சென்றுவருவதை பார்த்தனர்.
அப்போது கார்த்திக்கிடம் எப்போதும் வேடிக்கையாக பேசும் நண்பனின் அம்மா ஒருவர் அவனிடம் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு.சொன்ன மாதிரியே அத்தை பொண்ண தூக்கிட்டு வந்துட்டியே.மகாலட்ச்சிமியட்டும் இருக்கா.வீட்டிக்கு போனதும் சுத்தி போட சொல்லுன்னு சொல்லிட்டு போனாங்க.
அவங்க கிட்ட ஒன்னும் பேசாமல் சிறிது கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்......
வீட்டுக்கு வந்த பின் கார்த்திக் சாப்பிட்டு விட்டு லேப்டாப்பில் பேஸ்புக் பார்த்து கொண்டிருக்க ராஜி பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டு டம்ளரில் பால் எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றாள்.
கொண்டு வந்த பாலை டேபிளில் வைக்க கார்த்திக் அதை எடுத்துக்கொண்டு லேப்டாப்பில் மூழ்கினான்.லைட்டை ஆப் செய்துவிட்டு பெட்டில் படுக்க சென்றாள்.
கார்த்திக் லேப்டாப்பில் குறைந்த சத்தத்தில் பாடல் ஓடவிட்டு இருந்தான்.கூடவே அவனும் பாடிக்கொண்டிருந்தான்.அதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.கோவிலில் கார்த்திக் அந்த குழந்தையுடன் விளையாடியதை பார்த்த போது அவனும் குழந்தையுடன் குழந்தையாக மாறிப்போனதை உணர்ந்தாள்.எப்படி இவன் எல்லோரிடமும் எளிதில் ஒட்டிக்கொள்கிறான் என்று வியப்பாக இருந்தது.
ரமேஷிற்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது.அதை ராஜியிடமே கூறி இருக்கின்றான்.ஆனால் ராஜிக்கு குழந்தைகள் என்றால் அவ்ளோ பிடிக்கும்.
அவளுடைய வீட்டிற்கு அருகில் நிறைய குழந்தைகள் உண்டு.லீவ் நாட்களில் அவர்களை வைத்து விளையாடுவது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.கார்த்திக் இன்று விளையாடியதை பார்த்த போது அவளுக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது.
ஏன் கார்த்திக் எனக்கு மட்டும் இப்படி செஞ்ச.நாம ரெண்டு பேரும் நல்லாத்தானே பழகினோம்.உன்மேல ஏன் நீயே வெறுப்பை உண்டாக்கி கொண்டாய்ன்னு அவளுடைய மனம் அவளுக்காக பேசியது.
பின் அப்படியே அவள் தூங்கிவிட கார்த்திக்கும் அவள் தூங்கியவுடன் உறங்கி போனான்.மறுநாள் லீவ் என்பதால் லேட்டாக எழுந்தான் கார்த்திக். அன்று சைட்டிற்கு சென்று வேலைகள் எந்த அளவில் உள்ளது என்று தன் தம்பியுடன் சென்று பார்க்க சென்றான்.
வருடத்திற்கு 12 வீடுகள் அவர்கள் கம்பெனி மூலம் கட்டி கொடுக்கின்றனர்.வருடாவருடம் அதன் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாமல் பார்த்துக்கொள்வான்.அவன் கஷ்டப்பட்டு உருவாக்கிய கம்பெனி அது.அதனால் தான் அவனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்த பின்னும் அதை மூடாமல் டிப்ளோமா முடித்த தன் தம்பியிடம் ஒப்படைத்து அதை கவனித்து கொண்டிருந்தான்.அ
புதுப்புது ஐடியா,மற்றும் இன்டீரியர் டிசைன்களிலும் நன்றாக பண்ணிகொடுப்பதால் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது.பெரும்பாலும் பாங்கில் வேலை செய்பவர்கள்.கவர்மெண்ட் ஸ்டாப்ஸ்,வசதி படைத்தவர்கள் இவர்களே பெரும்பாலும் அவனுடைய கிளைன்ட் லிஸ்டில் இருந்தனர்.
அன்று சைட் விசிட்டிங் சென்று பார்த்த போது எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.அன்று முழுவதும் வீட்டிற்கு செல்வதை தவிர்த்திருந்தான் கார்த்திக்.சாப்பிட மட்டும் சென்று வந்தான்.
அன்று ஈவினிங் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு ஆபிஸில் இருந்தான் கார்த்திக்.கூடவே அவனுடைய தம்பியும் இருக்க அப்போது அவனுடைய நண்பர்களும் வந்திருந்தனர்.
வாங்கடா எப்படி இருக்கீங்க இப்போதான் தான் எங்கள உங்க கண்ணுக்கு தெரியுதா.கல்யாணத்துக்கு கூட வராம போய்ட்டீங்கன்னு கேட்டான் கார்த்திக்.
அப்படி இல்லடா.உனக்கென்ன உள்ளூர்ளையே இருந்து கஷ்டப்பட்டு செட்டில் ஆகிட்ட.நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்டேட்ல இருக்கோம்.அதாண்டா வர முடியல.சரி எப்படி இருக்கா எங்க தங்கச்சின்னு கேட்டார்கள்.
அவளுக்கென்னடா ராணி மாதிரி இருக்கான்னு .சரிடா அப்றம் என்ன பிளான் இன்னைக்குன்னு கேட்டான் கார்த்திக்.
இன்னைக்கு ஒன்னும் இல்லடா.நீதான் மேரேஜ் டிரீட் கொடுக்கணும்.எப்போ தரபோறன்னு கேட்டார்கள்.இன்னைக்கே கொடுத்துடலாம் என்னடா வேணும் மகேஷ் இங்க வான்னு கூப்பிட்டான் கார்த்திக்.
என்னடா வாங்கலாம் சொல்லுங்கன்னு கேட்டான்.டேய் என்னடா உடனே சொல்லிட்ட ம்ம்ம் சரி பட் ஒரு கண்டிஷன் நீயும் எங்களோட சேர்ந்து லைட்டா சாப்பிடணும்
ஓகேவான்னு கேட்டான் அவனுடைய நண்பன் ராம்.
டேய் அதெல்லாம் முடியாது.அவளுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.அதனால நீங்க சாப்பிடுங்க.நான் கம்பெனி கொடுக்கிறேன்னு சொன்னான் கார்த்திக்.
ம்ஹும் அட்லீஸ்ட் ஒன் பீர் இல்லனா நோ ட்ரீட் அப்படின்னு அவர்கள் சொல்ல சரி ஓகேடா என்று கார்த்திக் ஒத்துக்கொண்டான்.
மகேஷிடம் காசை கொடுத்து வாங்கிவர சொல்ல ஆஃபீஸ்க்கு வெளியே உள்ள ஸ்டோர் ரூமில் பார்ட்டி ஆரம்பம் ஆனது.ஹாப்பி மேரீட் லைப் கார்த்திக் என்று சொல்லி பீரை ஒப்பன் செய்து கார்த்திக்கிடம் கொடுக்க எல்லோரும் சேர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தனர்.
அப்போது கார்த்திக்கிற்கு போன் வர ஒரு நிமிடம் என்று சொல்லி அவன் போனை எடுத்துகொண்டு வெளியே வந்தான்.அந்த நேரம் பார்த்து பீரில் சரக்கை மிக்ஸ் செய்து வைத்து விட்டனர்.
இதை அறியாத கார்த்திக் அதை எடுத்து புல் பாட்டிலையும் காலி செய்தான்.ஒருவராக ஜாலியாக பார்ட்டி முடிந்தது.அனைவரும் கிளம்பி செல்ல கார்த்திக்கிற்கு போதை அதிகமானது.
மகேஷ் இரண்டு பீர் மட்டும் அடித்திருந்ததால் அவனுக்கு மிதமாக இருந்தது.இருவரும் சிறிது நேரம் ஜாலியாக பேசி கொண்டிருந்தனர்.மகேஷ் கார்த்திக்கின் மேல் அதிகமாக மரியாதை வைத்திருந்தான்.அதனால் அவனிடம் அதிகம் பேசமாட்டான்.
வேலை விஷயமாக ஏதாவது கேட்பான்.மற்றபடி அவனாக கார்த்திக்கிடம் எதுவும் பேசமாட்டான்.டேய் நீ யாரையாவது லவ் பன்றயாடா.அப்படி ஏதாவது இருந்தால் அண்ணன் கிட்ட சொல்லுடா.நான் ஹெல்ப் பன்றேன்ன்னு கார்த்திக் சொன்னான்.
அப்படிலாம் ஒன்னும் இல்லன்னா.நம்ம மூஞ்சிய எல்லாம் எவளும் பாப்பாளுகளா.அதுவும் இல்லாம எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா வீட்டையே ரெண்டாக்கிடுவா.அதனால எனக்கு அதில இன்டெரெஸ்ட் இல்லன்னான்னு சொன்னான் மகேஷ்.
நீயெல்லாம் வேஸ்ட்டா.முதல்ல உனக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணா பாத்து லவ் பண்ணு.அப்பதான் வாழ்க்கைல ஏதாவது முன்னேற முடியும்.உனக்காக இல்லாட்டாலும் அவளுக்காகவாச்சும் ஏதாச்சும் பண்ணனும்னு ஒரு உந்துதல் இருக்கும்னு சொன்னான் கார்த்திக்.

No comments:

Post a Comment