மறுநாள் காலை கார்த்திக் வேளைக்கு கிளம்பி செல்ல தயார் ஆனான்.காலை எழுந்து குளித்து கிளம்பும் வரை ராஜி கார்த்திக்கின் முகத்தை பார்க்கவே இல்லை.இருவரும் பேசி கொள்ளவும் இல்லை.வார்த்தைகள் குறைந்து மௌனமே வார்த்தைகளாக இருவருக்கும் ஆனது.
இயந்திரம் போல இருவரும் தனது வேலைகளை செய்தனர்.முன்பெல்லாம் இருவரும் சண்டை போட்டு எதிரெதிராக இருக்கும்போது கூட அவர்களின் செய்கைகளில் ஒரு உயிர்ப்பு இருந்தது.ஆனால் இப்போது கடமையாகவே சென்றது.
கார்த்திக் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பும் வரை ராஜி எதுவும் பேசவில்லை.கார்த்திக் சென்றவுடன் ராஜிக்கு தனிமை வாட்ட தொடங்கியது.அதை சமாளிக்கும் விதமாக அத்தையுடன் சென்று பேசி கொண்டு மற்ற வீட்டு வேளைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாள்.
பைக்கில் செல்லும் போது கார்த்திக்கிற்கு நேற்று நடந்த நிகழ்வுகளே நியாபகத்தில் உழன்றுகொண்டிருந்தது.விடை தெரியா கேள்விகளாய் தனக்கு தானே மனதிற்குள் கேட்டு கொண்டான்.
ஆபிஸிற்கு சென்றும் அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.மீட்டிங்கில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க இவன் மட்டும் அதை பற்றியே யோசித்து கொண்டிருந்தான்.
அதை கவனித்த அவனுடைய ஆபிசர் கார்த்திக் கார்த்திக் என்று அவனை தட்டிய போதுதான் சுய நினைவிற்கே வந்தான்.
ஆங் சொல்லுங்க சார்.அது பண்ணிடலாம் சார்.பண்ணிடலாம்.
கார்த்திக் நானும் வந்ததில் இருந்து பாக்குறேன்.எதை பத்தியோ யோசிச்சிட்டே இருக்க.எதாவது பிரச்சனையா.
அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்.நல்லாத்தான் இருக்கேன்.சொல்லுங்க சார்.
உன்ன பார்த்தா ஏதோ பிரச்சனை போல தான் தெரியுது.புதுசா கல்யாணம் ஆன எல்லாத்துக்கும் வர பிரச்சனை தான் உனக்கும்னு கெஸ் பண்ண முடியுது.
இல்ல சார்.அப்படிலாம் ஒன்னும் இல்லை சார்.
புரியுது கார்த்திக்.உங்கிட்ட ஒன்னு சொல்லட்டுமா.
சொல்லுங்க சார்.
புதுசா கல்யாணம் முடிஞ்ச எல்லாத்துக்கும் ஆரம்பத்துல நல்ல ஜாலியா சந்தோசமாதான் இருக்கும்.ஒரு மூணு மாசம் கழிச்சி அவங்களுக்குள்ள ஒரு வெற்று இடம் உருவாகும்.அந்த வெற்று இடத்தை தாண்டி போகுறவன் தான் கல்யாண வாழ்க்கைல ஜெயிப்பான்.
அதுக்கு ரெண்டு விஷயம் பண்ணினா போதும்.ஒன்னு மனசு விட்டு அவுங்க கிட்ட பேசிடனும்.உன் மனசுல என்ன இருக்கோ அதை அவுங்க கிட்ட பேசிடனும்.அதை தப்ப எடுத்துக்கிட்டாலும் அவுங்களை தாஜா பண்ணி சமாளிக்கணும்.அதுல கிடைக்கிற சந்தோசம் வேற எதுலயும் கிடைக்காது.
ரெண்டாவது விட்டு கொடுத்து போகணும்.நல்லா யோசிச்சி பாரு.உனக்கு புரியும் நான் என்ன சொல்ல வரேன்னு.சரியா.மீட்டிங் முடிஞ்சுது வா போகலாம் என்று சொல்லி விட்டு சென்றார்.
கார்த்திக் தனியாக இருந்து யோசிக்க தொடங்கினான்.ராஜியை தப்பா புரிஞ்சிகிட்டேனோ.அவ ஒரு பொண்ணு.அப்போ இருந்த சூழ்நிலையில அவ இந்த விஷயத்தை யாருகிட்டையாவது சொல்லணும்னு நினைச்சிருப்பா.அவ பிரென்ட் கிட்ட சொல்லிட்டா.
இந்த விசயத்துல தப்பு அவ மேல கிடையாது.அவ பிரென்ட் மேலதான் தப்பு.நான் ஏன் சம்பந்தமே இல்லாம அவ மேல கோவப்பட்டேன்.ச்ச.என்றது அவனுடைய நல்ல மனம்.
இல்ல கார்த்திக்.அவ செஞ்சது தப்பு தான்.அப்ப உங்களுக்குள்ள பெர்சனல்னு எதுவுமே கிடையாதா.என்றது கெட்ட மனம்.
இரு மனங்களும் மாறி மாறி அவனை குழப்பி கொண்டிருந்தது.இந்த மாதிரியான தருணத்தில் நடப்பது மட்டுமே சரியான முடிவுகளை கொடுக்கும் என்று எங்கோ படித்தது நியாபகத்திற்கு வர போனை மட்டும் எடுத்து கொண்டு ஆபிஸை விட்டு வெளியே சென்றான்.
கால் போன போக்கில் நடக்க தொடங்கினான்.ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் போது ஆபிசில் அவனுடைய அதிகாரி சொல்லியது காதுகளில் ஒலித்தது.அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ராஜி காதலை சொல்லியது ஒலித்தது.
அப்போது மான்வி ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க கார்த்திக் சிந்தனையில் அதை கவனிக்கவே இல்லை.
கார்த்திக்கை பார்த்த மான்வி ஹலோ கார்த்திக்.கார்த்திக் என்று பைக்கில் சென்று கொண்டே கூப்பிட அதை கவனிக்காத கார்த்திக் அவன் ரோட்டில் நடந்து கொண்டிருந்தான்.
ஸ்கூட்டியை திருப்பி அவன் அருகில் சென்று பைக்கை நிறுத்தி ஹலோ ப்ரோ எங்க போறீங்க என்றாள்.
அவள் பேசுவதை பார்த்த கார்த்திக் நடப்பதை நிறுத்தி குரல் வந்த திசையில் பார்க்க ஹை என்ன இந்த பக்கம்.சொல்லு என்றான்.
அதை நான் உங்களை பார்த்து கேக்கணும்.நீங்க தான் ஆபிஸை விட்டுட்டு இங்க வந்து நிக்குறீங்க.என்ன ஆச்சு.நடந்து போறீங்க.வாங்க நான் ட்ராப் பண்றேன்.
இல்ல பரவா இல்லை.நீ போ.நான் சும்மா ஒரு வாக் வந்தேன்.அவ்ளோதான்.
யாரு நீங்க.இந்த நேரத்துல.அதுவும் மொட்டை வெயில்ல 3 மணிக்கு.
இல்ல அது வந்து.
பொய் சொல்ற வேலை எல்லாம் இங்க வேண்டாம்.மொதல்ல வாங்க என்றாள் மான்வி.
கார்த்திக்கும் வேறு வழி இல்லாமல் அவளுடன் பைக்கில் ஏறினான்.
இடம் காபி ஷாப்.
மான்வியும் கார்த்திக்கும் எதிர் எதிர் டேபிளில் அமர்ந்து இருக்க இருவருக்கும் நடுவில் இரண்டு காபி கப்களில் காபி ஆவி பறந்து கொண்டிருந்தது.கார்த்திக் கப்பின் கைப்பிடியை தடவி கொண்டிருந்தான்.
ஆக உங்களுக்குள்ள இவ்ளோ பிரச்சனை நடந்துருக்கு.அப்படித்தான.
ஆமா மான்வி.எனக்கு கோவம் அவ மேலயா இல்ல என் மேலயா.எதுவும் புரியலை மான்வி.ஒரு பையன் ஒரு பொண்ண ஒன் சைடா லவ் பண்ணகூடாதா.அப்படி பண்ணினா அவன் லவ் ஒர்த் இல்லையா.
நான் ராஜியை அவ விருப்பம் இல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.ஆனா அதுக்கு இப்போவரைக்கும் அவ விருப்பத்துக்கு மாறா நான் எதுவும் செஞ்சது இல்லை.
என்னைக்காச்சும் ஒரு நாள் என்ன அவ புரிஞ்சிக்கிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.இப்போ.எல்லாம் முடிஞ்சுது.நானே அதை கெடுத்துகிட்டேன்.
இல்ல கார்த்திக் அக்காவும் உங்களை லவ் என்று சொல்லி விட்டு பாதியில் நிறுத்தினாள் மான்வி.
பின் அக்காவும் உங்களை லவ் பண்ணுவாங்க கார்த்திக்.நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.இப்போ என்ன ஆகி போச்சு.கோவத்துல ஏதோ பேசிட்டிங்க.அதுக்கு போய் இவ்ளோ பீல் பண்றீங்க.
உங்களுக்குள்ள சண்டைன்னா ஒரு நாள் பேசாம இருங்க.இல்ல அதிக பட்சம் ரெண்டு நாள்.அதுக்கு மேல பேசாம இருக்காதிங்க.ஏன்னா அதுக்கு மேல போச்சுன்னா பிரிவை தாங்குகிற சக்தி மனசுக்கு வந்துடும்.அப்புறம் அதுவே பிரிவுக்கு கொண்டு போய்டும்.
அதனால நிறைய சண்டை போடுங்க.நிறைய கோவப்படுங்க.ஆனால் அடுத்த நிமிஷமே சமாதானம் ஆகிடுங்க.என்ன கேட்டால் உங்க மேல தான் தப்பு.நீங்க அக்கா கிட்ட கோவப்படமா பேசிருந்தா அவுங்களே எல்லாத்தையும் சொல்லிருப்பாங்க.
கரெக்ட்டு தான்.இப்போ என்ன பண்ண.
ஒன்னும் பண்ண வேண்டாம்.நீங்களே போய் அக்கா கிட்ட பேசுங்க.முதல்ல கோவப்படுவாங்க.இருந்தாலும் பேசுங்க.கண்டிப்பா சமாதானம் ஆகுவாங்க.சரியா.
சரி.
காபி ஆறிட போகுது.குடிங்க.
ம்ம்ம்.ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்ட.அட்வைஸ்லா பண்ற.
நாங்களும் பண்ணுவோம்ல.
தேங்க்ஸ்.
பரவா இல்லை.கே
பின் இருவரும் காபி ஷாப்பை விட்டு வெளியே வரும்போது கார்த்திக்கிற்கு ஓரளவு மனம் தெளிவடைந்து இருந்தது.ராஜியிடம் எப்படியாவது பேசி சமாதானம் செய்ய வேண்டும்பி என்று.
வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினான் கார்த்திக்.பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ராஜியை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்து கொண்டே போகும் போது எதிரில் மாடு ஒன்று குறுக்கே சென்றது.
அதை கவனிக்காத கார்த்திக் வேகமாக பிரேக் அடித்து பைக்கை திருப்ப நேராக சறுக்கி க்ரீச் என்ற சத்தத்துடன் கீழே விழுந்தான் கார்த்திக்.
மணி இரவு 8 ஐ நெருங்கி கொண்டிருந்தது.கார்த்திக் வராததை கண்டு அவளுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது.அவனுக்கு போன் செய்யலாம் என்று போன் எடுத்தவள் அவன் நம்பேரை டையல் செய்தாள்.உடனே கட் செய்து விட்டாள்.
இப்படியாக சில முறை தயங்கி தயங்கி செய்தவள் பின் அதனை கை விட்டாள்.அவனுக்கா கால் பண்ணி சொல்லணும்னு தெரியலை.நாம எதுக்கு பண்ணனும்.அவனே பேசட்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
கதவை திறந்த ராஜிக்கு தூக்கி வாரி போட்டது.அங்கு கார்த்திக்கை மகேஷ் கைதாங்களாக பிடித்திருக்க கார்த்திக்கின் கை கால்களில் வெள்ளை துணியால் கட்டு போட்டு இருக்க கை கால்களில் ஆங்காங்கு சிராய்ப்புகள் உடன் நின்று கொண்டிருந்தான்.
ஹெல்மெட் அணிந்து இருந்ததால் தலையில் அடி படாமல் கை கால்களில் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்திருந்தான் கார்த்திக்.
அய்யயோ என்னாச்சு.ஏன் கை கால்ல கட்டு போட்ருக்கீங்க.
ஒன்னும் இல்ல ராஜி.சின்னதா ஒரு ஆக்சிடன்ட்.பயப்படாத.
என்னது ஆக்சிடன்ட்டா.
உள்ள போய் பேசிக்கலாம் ராஜி.வா.
பின் மூவரும் உள்ளே செல்ல சாந்தா மற்றும் கார்த்திக்கின் அப்பாவும் வர அனைவரும் அழுது விட்டனர்.அவர்களை சமாதானம் செய்யவே கார்த்திக் மஹேஷிற்கு போதும் போதும் என்று ஆனது.
ஒரு வழியாக சமாதானம் செய்துவிட்டு,மாத்திரை மருந்துகளை கொடுத்து விட்டு மகேஷ் சென்று விட ராஜியும் கார்த்திக்கும் ஹாலில் இருந்தனர்.
ராஜியும் கார்த்திக்கும் ஹாலில் இருந்தனர்.இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.அப்போது கார்த்திக் ரூமிற்கு செல்வதற்கு எழுந்திருக்க ராஜியும் கூடவே எழுந்தாள்.
கார்த்திக் மெல்ல மெல்ல நடந்து ரூமிற்கு சென்றான்.அவன் விழாதவாறு ராஜியும் அவன் பின்னாலே சென்றாள்.
ரூமிற்கு சென்ற பின் கார்த்திக் சோபாவில் இருந்து உடை கூட மாற்றாமல் தூக்கம் வருவதாக சொல்லி படுக்க சென்றான்.
அதை பார்த்த ராஜி எங்க படுக்க போற சோபாவுலையை.நீ பெட்லையே படுத்துக்கோ.இந்த உடம்போட நீ சோபால படுக்க வேணாம்.நா ஒன்னும் அந்த அளவுக்கு கல் நெஞ்சம் கிடையாது.
இல்ல ராஜி நான் என்ன சொல்ல வாரென்னா.
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.பேசாம வந்து பெட்ல படு.அதுக்கு முன்னாடி சாப்பாடு எடுத்துட்டு வரேன் சாப்பிட்டுட்டு தூங்கு.
இல்ல எனக்கு வேண்டாம்.
உனக்கு சாப்பாடு மேல கோவமா.இல்ல அதை கொண்டு வர ஆள் மேல கோவமா.
ஏன் ராஜி இப்படி பேசுற.
ப்ளீஸ் கார்த்திக்.வேற எதை பத்தியும் பேசி உன்னை நான் கஷ்டப்படுத்த விரும்பலை.இப்போ நீ இருக்குற நிலமைல நாம அதை பத்தி பேசவும் வேணாம்.சாப்பாடு எடுத்துட்டு வரேன்.சாப்பிட்டுட்டு டேப்லெட் போட்டு தூங்கு.வெயிட் பண்ணு நான் வரேன். என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் ராஜி.
கார்த்திக் கோவத்தில் அருகில் இருந்த டீபாயை உதைக்க அது அடிபட்ட இடத்தில லேசாக பட்டு ஆஆஹ் என்று கத்தினான்.
ராஜி சாப்பாட்டுடன் வந்து கார்த்திக் அருகில் வைத்தாள்.
ம்ம்ம்ம் சாப்பிடு.நான் டேப்லெட் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு டேப்லெட் எடுக்க சென்றாள்.
கார்த்திக் சாப்பாடை எடுக்க கைகளை அசைக்க கை முட்டியில் வலியை உண்டாக்கியது.அவனால் கைகளை உயர்த்த முடியவில்லை.சாப்பாடை வைத்து கொண்டு அதையே வெறித்து கொண்டிருந்தான்.
ராஜி டேப்லெட் எடுத்து வந்தவுடன் கார்த்திக்கை பார்க்க அவன் சாப்பாட்டை வெறித்து கொண்டிருந்தான்.
இன்னுமா சாப்பிடாம இருக்க.என்ன ஆச்சு.
ஒன்னும் இல்ல ராஜி.கை ரொம்ப வலிக்குது.அதான்.
இதை சொல்லவா இவ்ளோ தயங்குற.இரு என்று சொல்லி விட்டு சேலையை எடுத்து இடுப்பில் சொருகி விட்டு,வளையலை கைகளில் நன்கு இழுத்துவிட்டு சாப்பாடு தட்டை எடுத்தாள்.
பின் அதில் கொஞ்சம் எடுத்து கார்த்திக் வாய் அருகில் எடுத்து சென்று இந்தா என்றாள்.
வேண்டாம் ராஜி.உனக்கு எதுக்கு தேவை இல்லாத கஷ்டம்.
இப்போ சாப்பிட போறியா இல்லையா என்று ராஜி சற்று முறைப்பாக பார்க்க கார்த்திக் வாயை திறந்து வாங்கி கொண்டான்.கொஞ்சம் கொஞ்சமாக ராஜி அவனுக்கு கொடுக்க ஒருவழியாக கார்த்திக் சாப்பிட்டு முடித்தான்.
பின் மாத்திரையை எடுத்து கொடுத்தாள் ராஜி.அதை மொத்தமாக வாங்கி விழுங்கியவன் தண்ணீரை குடித்து முடித்தான்.
பின் எழுந்து பெட்டில் சென்று படுத்து கொண்டான்.ராஜி கிச்சன் சென்று பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு தானும் சாப்பிட்டு விட்டு ரூமிற்கு வந்தாள்.
அங்கு கார்த்திக் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்றவள் காயங்களை ஒவ்வொன்றாக பார்த்தாள்.கட்டு போட்டிருந்த இடங்களை கைகளால் தடவி கொண்டாள்.அவளையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
கார்த்திக்கின் கை மேல் கட்டு போட்டிருந்த இடத்தில முத்தமிட்டாள் ராஜி.கட்டிலின் கீழ் அமர்ந்து கார்த்திக்கின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.அப்படியே தூங்கியும் போனாள்.
மறுநாள் பொழுது விடிந்து கார்த்திக் கண் விழித்த போது ராஜி அவன் அருகில் இல்லை.அடித்து போட்டது போல் நல்ல உறங்கி இருந்தான் கார்த்திக்.
அவன் மனம் ஏனோ அன்று உற்சாகமாக இருந்தது.உடம்பில் இருந்த வலி அனைத்தும் எங்கோ பறந்து சென்றது போன்ற உணர்வு.
காரணம் நேற்று ராஜி அவனுக்கு ஊட்டி விட்டது.கார்த்திக் என்னவெல்லாம் ராஜியிடம் ஆசைபட்டனோ அது எல்லாமே அவனது வாழ்வில் நடந்து விட்டது.முத்தம்,சாப்பாடு ஊட்டி விடுவது,பைக் ரைடிங்னு எல்லாமே நடந்தது.ஆனால் அவை எல்லாமே சந்தர்ப்ப வசத்தால் நடந்ததே தவிர இருவரும் விருப்பத்துடன் நடந்தது இல்லாமல் இயல்பாக அமைந்தது.
ஆனால் அதுவே அவனுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தந்தது.மெதுவாக நடந்து சென்று பாத்ரூம் சென்று வந்தவன் ட்ரெஸ்ஸையும் மாற்றினான்.பல் தேய்த்து விட்டு முகத்தை துடைக்கும் போது ராஜி கையில் பாலுடன் வந்தாள்.
குட் மார்னிங் ராஜி.
குட் மார்னிங்.இப்போ வலி பரவா இல்லையா.இப்போ எப்படி இருக்கு.
இப்போ பரவா இல்லை ராஜி.மச் பெட்டர்.
சரி காயம் ஆறுகிற வரைக்கும் வெளிய எங்கையும் போக வேண்டாம்.வீட்லையே இருக்க சொல்லிருக்காங்க.
ராஜி அதெல்லாம் ஒன்னும் இல்லை.சின்ன காயம் தான்.ரெண்டு நாளில் சரி ஆகிடும்.
காயம் ஆரூர வரைக்கும் வெளிய போக கூடாது.ஆஃபீஸ்ல உங்க பிரென்ட் கிட்ட சொல்லிட்டேன்.அதனால வீட்ல இரு ஒழுங்கா.
சரி ராஜி அட்லீஸ்ட் நான் மகேஷ் கூடவாச்சும் போய்க்கிடுறேனே.
வேண்டாம்ன்னு சொன்னா கேளு.நா மகேஷ் கிட்டையும் சொல்லிட்டேன்.பேசாம ரெஸ்ட் எடுங்க.
என்று சொல்லி விட்டு ராஜி சென்று விட்டாள்.
வீட்டில் இருந்த கார்த்திக்கிற்கு நேரம் போகவில்லை.பேஸ்புக் வாட்சப் என்று கொஞ்ச நேரம் கடத்தினான்.காலை உணவு முடிந்திருக்க மீண்டும் அதில் உலவ ஒருவழியாக மணி 12ஐ நெருங்கி இருந்தது.
அப்போது கார்த்திக்கிற்கு ஏதோ இனம் புரியாத ஒரு ஆவல் உண்டாகி இருந்தது.
அவன் மணியை பார்க்கன் 12 ஆகி இருந்தது.பெட்டில் இருந்து எழுந்தவன் கைகளை அசைத்து பார்த்தான்.நேற்று இருந்ததற்கு இப்போது அவன் கை வலி குறைந்து இருந்தது.
கைகளை சாப்பிடுவது போல செய்து பார்க்க இப்பொது வலி சற்று குறைவாக இருந்தது.ஆனால் அவனால் சுயமாக சாப்பிட முடியும்.
பின் அப்படியே சோபாவில் சென்று அமர்ந்தான்.அப்போது ராஜி சமையல் வேலைகளை முடித்து ரூமிற்கு வர கார்த்திக் கைகளை அசைக்க முடியாமல் வலிப்பது போல அருகில் இருந்த நியூஸ் பேப்பரை எடுக்க முயற்சி செய்தான்.அதை பார்த்த ராஜி ஓடி சென்று அதை அவனுக்கு எடுத்து கொடுத்தாள்.
கார்த்திக் அதை பிரித்து படிப்பது போல அவ்வவ்போது ராஜியை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் பார்ப்பதை பார்த்த ராஜி என்ன என்பது போல பார்க்க கார்த்திக் டக்கென்று தன் பார்வையை மாற்றுவான்.இப்படியாக ஒரு 10 நிமிடம் செல்ல ராஜி பசிக்குது ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்றான் கார்த்திக்.
இரு எடுத்துட்டு வரேன் என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றால் ராஜி.
என்னடா இவளை புரிஞ்சிக்கவே முடியலை.லவ் பன்றேன்னு சொல்றா.ஆனா முகத்தை பாத்து பேச கூட மாட்டேங்குறா.என்னதான் நினைச்சிட்டு இருக்கானே தெரியலையே.சரி எப்படியும் இப்ப ஊட்டி விடுவா.சந்தோசமா சாப்பிடலாம் என்று நினைத்து கொண்டான் கார்த்திக்.
ரூமிற்கு வந்த ராஜி பிளேட்டில் சூடு கஞ்சியை வைத்து ஒரு ஸ்பூன் ஒன்று வைத்து கார்த்திக்கிடம் கொடுத்து இந்தா சாப்பிடு என்றாள்.
அதை பார்த்த கார்த்திக்கிற்கு ஏமாற்றமாக இருந்தது.என்னடா இப்படி ஆகிடுச்சே என்று வருத்தப்பட்டான்.இருந்தாலும் முயற்சியை தளர விடக்கூடாது என்பது போல தனது நடிப்பு திறமையை வெளிகொண்டுவந்தான்.
ஸ்பூனை எடுத்து கஞ்சியை எடுத்து வாய் அருகே கொண்டு சென்று ஆஹ்.கைய தூக்க முடியலையே.வலிக்குது.என்றான்.
அதெல்லாம் ஒன்னும் செய்யாது.எல்லா நேரமும் என்னால தர முடியாது.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடு.அப்பதான் உனக்கும் கொஞ்சம் பழகும்.கை வலி தெரியாது.
இல்ல ராஜி முடியலை.கொஞ்சம் சாதம் ஆச்சும் போடேன்.
இன்னைக்கு ஒருஇ நேரம் மட்டும் இதை சாப்பிடு.நைட் வேற எதாவது செய்யுறேன்.
அடிப்பாவி இப்படி சாவடிப்பான்னு தெரிஞ்சிருந்தா கேட்டுருக்கவே மாட்டேனே.சரி தின்னு தொலைப்போம் என்று நினைத்து கொண்டு கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தான் கார்த்திக்.
இரண்டு ஸ்பூனுக்கு மேல் அவனால் அதை சாப்பிட முடியவில்லை.ம்ஹ்ம் வேண்டாம் என்று அதை துப்ப எழும்ப ராஜி கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
வாயில் இருப்பதை துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கார்த்திக் ராஜியை பார்க்க ராஜி அப்படியே அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
ராஜியை பார்த்து கொண்டே மடக் என்று முழுங்கினான் கார்த்திக்.கண்ணை மூடிக்கொண்டு வேகம் வேகமாக ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டான் கார்த்திக்.
அவன் சாப்பிட்டு எலும்பும் வரை ஒன்றும் பேசாமல் அவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள் ராஜி.பின் தண்ணீர் எடுத்து கொடுத்து டேப்லெட் சாப்பிட வைத்தால் ராஜி.
சரி கார்த்திக் நீ படுத்து ரெஸ்ட் எடு நான் அத்தை கூட பேசிட்டு இருக்கேன் என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் ராஜி.
கார்த்திக்கிற்கு ஏமாற்றமாக இருந்தது.இவளை கரெக்ட் பண்ண என்னடா வழி.இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ரூம் அரெஸ்ட் பண்ணி வைக்க போறாளோ என்று யோசித்து கொண்டிருந்தான்.
அப்போது ராஜியின் போன் அடிக்க அதை எடுத்து பார்த்தான் கார்த்திக்.அதில் ரமேஷ் வாட்ஸாப்பில் மெசஜ் செய்திருக்க கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.
உன்னாலதான்டா நாயே எனக்கு இந்த நிலைமை.நான் எப்போதுலா ராஜிகிட்ட நெருங்குறேனோ அப்போதுலா இந்த நாய்க்கு மூக்குல வேத்துறது.முதல்ல இவனுக்கு ஒரு முடிவு கட்டணும்.உனக்கு இருக்குடா ஒரு நாளைக்கு என்று நினைத்து கொண்டு நெட்டை ஆப் செய்து போனை தூக்கி பெட்டில் எறிந்தான்.
ச்ச எல்லாம் என் கிரஹம்.ராஜி உன் மனசுல என்னதான் இருக்குன்னு சொல்லி தொலையேண்டி என்று நெத்தியில் அடித்து கொண்டான்.
மீண்டும் ராஜியின் போனில் மெசஜ் டோன் அடிக்க மவனே நீ இன்னைக்கு செத்தடா என்று நினைத்து கொண்டு போனை எடுக்க அதில் நெட் பேலன்ஸ் காட்டி கொண்டிருக்க இது வேற நேரங்கெட்ட நேரத்துல போய் தொலை என்று அதை கேன்செல் செய்தான்.
அப்போது போனின் வால் பேப்பரில் கார்த்திக் ராஜி இருவரும் மணக்கோலத்தில் நின்று இருப்பதை போன்று வால்பேப்பர் இருக்க கார்த்திக் அதை உடனே எடுத்து இது இது.ஓஹ்.என்று பெரு மூச்சு வாங்கி கொண்டு அப்ப அப்ப ராஜியும் என்ன.ஐயோ.அஅங்ங்ங்.என்று தனக்கு தானே சிரித்து கொண்டான் கார்த்திக்.
பின் கேலரி ஓபன் செய்து அதில் போட்டோக்களை ஓபன் செய்தான் கார்த்திக்
அதில் அவர்களுடைய கல்யாண போட்டோ ஒவ்வொன்றும் இருந்தது.
மேலும் கார்த்திக் போட்டோக்கள் எல்லாம் அவனுக்கே தெரியாமல் நிறைய போட்டோக்கள் ராஜி எடுத்து வைத்திருந்தாள்.
பைக்கில் அன்று ஷாப்பிங் செல்லும் போது எடுத்த செல்பிக்கள்,போன் எடுத்து கொடுத்த புதிதில் இருவரும் எடுத்த போட்டோக்கள் என்று எல்லாம் அதில் இருந்தது.
அதை பார்த்த கார்த்திக் இது.இது நான்.நானும் ராஜியும்.அப்ப ராஜியும் லவ் பண்ணுறா.அப்படித்தானா என்று வாயில் விரலை வைத்து ஆச்சர்யம் தாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக்.
கார்த்திக்கிற்கு நடப்பது எதுவும் நம்ப முடியாமல் இல்லை.நயாகரா அருவியில் இருந்து தலை கீழாக குதிப்பது போல் இருந்தது அவனுக்கு.அந்த நேரம் அவன் ராஜியுடன் தனி உலகில் பறந்து கொண்டிருந்தான்.
இந்த நிமிடத்துக்கு தான நான் இத்தனை வருடம் தவம் இருந்தேன்.ராஜீஈஈஈ.என்று போனை தன் மார்போடு அணைத்து கொண்டான்.
அப்போது தெரியாமல் அவன் நம்பருக்கு கால் டச் ஆகிவிட இப்போ யாரு.கொஞ்ச நேரம் சந்தோசமா இருந்தா பிடிக்காதே.என்று சொல்லிக்கொண்டு தனது போனை எடுக்க அதில் ராஜி என்று வர.
என்னது ராஜி போன் நம்மகிட்ட இருக்கு.அவ நம்பர்ல இருந்து கால் வர ராஜி போனை எடுத்து பார்த்தான்.அதில் அவன் நம்பருக்கு கால் சென்று கொண்டிருக்க அதை கட் செய்தான்.
அவன் நம்பருக்கு என்று ராஜி செட் செய்திருந்த போட்டோவில் ராஜியின் தோளில் கார்த்திக் கை வைத்திருப்பது போல போட்டோ இருந்தது.
சிரித்து கொண்டே அதை பார்த்தவன் அவன் நம்பருக்கு My idiot என்று இருந்தது.
ஆமா ராஜி நான் இடியட் தான் ராஜி.நீ அன்னைக்கு சொன்னதுக்கு அப்புறமும் நான் உன்னை புரிஞ்சிக்கிடாம உதாசீன படுத்துனேன்ல நான் இடியட் தான்.
அவனுக்கு மீண்டும் அந்த போட்டோவை,அந்த பெயருடன் பார்க்க வேண்டும் போல இருந்தது.
தன் நம்பரில் இருந்து ராஜிக்கு கால் செய்தான்.அப்போது
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
என்று பாடல் ஒளித்து முடிந்தது.அப்போது போட்டோ மற்றும் My idiot உடன் சேர்ந்து அந்த ரிங்க்டோனும் சேர்ந்து அவனுக்கு அளவில்லா ஆனந்தத்தை கொடுத்தது.
ஏஏஏஏ என்று குதித்தவன் சந்தோஷத்தில் கண்ணாடி அருகே சென்றான்.டேய் ராஜியும் உன்னை லவ் பண்ராடாஆஆஆஆ.உம்மாஆஆஆ என்று கண்ணாடியில் முத்தமிட்டான்.
எனக்காக ஸ்பெஷல் ரிங்க்டோன் வச்சிருக்காடா இடியட்.இடியட் இடியட்.நான் தான் இந்த உலகத்துலயே பெரிய இடியட்.ஐயோ கத்தனும் போல இருக்கே.என்ன பண்ண என்ன பண்ண.ஐடியா என்று பாத்ரூம் சென்று தண்ணீரை திறந்து விட்டான்.ஏதோ ஒன்னு குறையுதே ம்ம்ம்ம்ம் என்று வெளியே வந்தான்.
சவுண்ட் சிஸ்டத்தை ஆன் செய்து சத்தத்தை கொஞ்சம் கூட்டினான்.பின் பாத்ரூம் சென்று கதவை அடைத்தான்.கண்ணாடி அருகில் சென்று நான் தான் உலகத்துலயே பெரிய இடியட்ட்ட்ட்ட்.என் ராஜியும் என்ன லவ் பன்ராராராரா.ஐ லவ் யூ ராஜீஈஈஈஈ.
இன்னும் எனக்காக என்னலா செஞ்சி வச்சிருக்க ராஜி.இது புரியாம மடத்தனமா இருந்துருக்கேன்.முட்டாள் முட்டாள்.
உஉஉஉஉஉஉஉஉ.கூல் கூல்.எல்லாம் ஓகே.இன்னும் ஒண்ணே ஒன்னு தான்.ராஜி என்ன லவ் பண்ரா.அப்ப ஊடையில இந்த ரமேஷ் ஏன் வாரான்.ஒருவேளை ராஜியை அவன் பழைய மாதிரி விரும்புறானோ.இன்னும் 10 நாள் தான் இருக்கு ராஜி பர்த்டேக்கு.அதுக்குள்ள அந்த நாய்க்கு ஒரு முடிவு கட்டுறேன்.
ராஜி பர்த் டேக்கு அவளுக்கு சர்ப்ரைஸா ஏதாவது பண்ணனும்.அதுக்கு முந்தின நாள்க்கு உள்ள உனக்கு ஒரு முடிவு கட்டுறேண்டா.இருக்கு உனக்கு இருக்கு.செத்தடா மவனே.என்று கண்ணாடியை பார்த்து சொல்லி கொண்டான்.
ஐயோ இதை யாருகிட்டையாவது சொல்லணும் போல இருக்குதே.என்ன பண்ண.யாருக்கு சொல்ல என்று யோசிக்கும் போது வெளியே சவுண்ட் சிஸ்டம் ஆப் ஆகி இருந்தது.
பேசாமல் தண்ணீரை நிறுத்தி விட்டு வெளியே வந்தான் கார்த்திக் அங்கு ராஜி கையில் ரிமோட்டுடன் நின்று கொண்டிருந்தாள்.
கார்த்திக் ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு சென்றான்.
எவ்ளோ சவுண்ட் வச்சிருக்க.நீ மட்டும் தான இருக்க.கொறச்சி வச்சி கேக்க வேண்டியது தான.பாத்ரூம் போறவனுக்கு எதுக்கு இவ்ளோ சத்தமா பாட்டு.
சும்மாதான் ராஜி.
தூங்கலையா.
தூங்கணும் ராஜி.நீ சாப்பிட்டியா.
ம்ம்ம்ம் ஆச்சு.
நீ தூங்கலையா ராஜி.நீ வேணும்னா பெட்ல படுத்துக்கோ.எனக்கு தூக்கம் வரலை.
இல்ல பரவா இல்லை.இந்த போன் வேற எங்க போச்சுன்னு தெரியலை.நீ பாத்த.
இல்ல பாக்கலை ராஜி.நா வேணும்னா கால் பண்ணவா ராஜி.
இல்ல வேண்டாம்.நானே தேடி எடுத்துக்கிடுறேன்.
ம்ம்ம்ம் சரி.
ராஜி போனை தேட அது கண்ணாடிக்கு பக்கத்தில் இருந்தது.
இதோ இருக்கு.இப்போ எப்படி இருக்கு.வலி கொறஞ்சிடுச்சா.
எல்லா வலியும் பறந்துடுச்சு.இப்போதான் எல்லாம் தெளிவாச்சு.ஒரு சின்ன வலி இருக்கு.அதை நான் பாத்துக்கிடுறேன்.என்று கைகளை மேல் நோக்கி நீட்டி சோம்பல் முறித்தான் கார்த்திக்.
என்ன சொல்ற நீ.தெளிவாச்சவா.
இல்ல உடம்புக்கு இப்பதான் தெளிவா இருக்கு.பரவா இல்லனு சொன்னேன்ல்.நீ வேணும்னா தூங்கு.நான் அம்மாகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன் என்று சொல்லி விட்டு ராஜியின் பதிலை எதிர் பாராமல் வெளியே சென்றான் கார்த்திக்
No comments:
Post a Comment