இந்த இடைப்பட்ட நாட்களில் ராஜியும் ரமேஷிடம் பேச தொடங்கினாள்.இருவரும் தனது பழைய கால நண்பர்கள்,ரமேஷின் பேமிலி இப்படி பேசி கொண்டனர்.ஆனால் எந்த நேரத்திலும் தங்களது பழைய காதலை பற்றி மறந்தும் பேசாமல் இருந்தனர்.அது அவர்களுக்குள் ஒரு நட்பை உருவாக்கி இருந்தது.ராஜிக்கு அது ஆறுதலாகவும் இருந்தது.
சீக்கிரமாக வேலை முடித்துவிட்டு வந்த கார்த்திக் ரூமில் டிவி பார்த்துக்கொண்டிருக்க ராஜியின் போன் அடித்து கொண்டிருந்தது.தனது போனை பார்க்க அதில் எந்த காலும் வரவில்லை.மீண்டும் போன் அடிக்க ராஜியின் போன்தான் ஒலித்தது.ராஜியை தேட அவள் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தாள்.ராஜி போன் என்றான்.
யாருன்னு பாரு கார்த்திக்.நான் வரேன் என்றாள்.
டிஸ்பிளே பார்த்தவன் அம்மா என்று இருக்க அத்தை தான் ராஜி. என்றான்.
அட்டென்ட் பண்ணி பேசு.குளிச்சிட்டு இருக்கேன்னு சொல்லு.நான் வந்து பேசிக்கிடுறேன்.
போனை அட்டென்ட் செய்துவிட்டு சம்பிரதாய நலம் விசாரிப்புக்கு பின் ராஜி குளிச்சிட்டு இருக்கா.வந்த உடனே பேச சொல்றேன்னு சொல்லிட்டு சிறிது நேரம் குடும்ப விஷயங்களை பேசிவிட்டு வைத்துவிட்டான்.
அப்போது
டிஸ்பிலேவில் இரண்டு வாட்ஸ்அப் மெசேஜுகள் காட்ட எதேச்சையாக அதை ஓபன் செய்ய ரமேஷ் என்று நேம் காட்ட DP ல் ரமேஷ் சிரித்து கொண்டிருந்தான்.
அதை பார்த்த கார்த்திக் இதயமே நின்று விட்டது போல இருந்தது.அப்போ ராஜி இன்னும் ரமேஷை மறக்கலையை என்று அவன் மனம் குமைந்தது.
அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.ராஜி டிவோர்ஸ் கேட்டது மனசுல ரமேஷை வச்சிட்டு தானா.அப்ப ஒருதடவை கூட இங்க இருந்த நாட்களில் என் மனசு அவளுக்கு புரியலையா.அவன் மனம் எரிமலையாய் எரிந்து கொண்டிருந்தது.
இனி ராஜியுடன் பேசி பிரயோஜனம் இல்லை.அவள் வாழ்க்கையை விட்டு ஒதுங்குவது தான் நல்லது என்று அவன் மனம் சொல்லியது.


இதை பற்றி ராஜியிடம் பேசி மரியாதையை கெடுத்து கொள்ளவும் அவன் மனம் இடம் தரவில்லை.முடிந்த அளவு ஒதுங்கியே இருப்பது நல்லது என்று முடிவு செய்தான்.
அப்போது ராஜி கதவை திறக்கும் சத்தம்கேட்க போனை பெட்டில் வைத்துவிட்டு டிவியில் கவனத்தை செலுத்தினான்.
என்ன சொன்னாங்க அம்மா.என்றால் ராஜி.
இல்ல சும்மாதான் பேசினாங்க.உன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சாம் அதான் பேசணும்னு சொன்னாங்க.நீ திரும்ப பேசிடு என்று அவள் முகத்தை பார்க்காமல் பேசினான் கார்த்திக்
பின் வந்த நாட்களில் கார்த்திக் ராஜியிடம் பேசுவதை தவிர்த்தான்.தனது துணிகளை ராஜி அயன் செய்ய போனால் தானே அயன் பண்ணுவதாக சொன்னான்.
ஏன் என்று கேட்டதற்கு. வேண்டாம்.இப்போ நீ செய்வ.நீ போனதுக்கு அப்புறம் நான்தானே இதெல்லாம் செய்யணும்.அதுக்கு நானே இதெல்லாம் பதுக்கிடுறேன்.எனக்கான வேலைகளை இனி நீ செய்ய வேண்டாம்.இது வரைக்கும் செஞ்சதுக்கு தேங்ஸ் என்றான்.
கார்த்திக்கின் இந்த பேச்சு ராஜிக்கு புதிதாக இருந்தது.சமீப காலமாக அவனது இந்த ஒதுக்கத்தையும் அவள் கவனிக்க தவறவில்லை.
அவனுடைய இந்த ஒதுக்கம் ராஜிக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.அன்று தெரியாமல் கோவத்தில் செய்த செயல் அவனை இப்படி மாற்றிவிட்டதே என்று வருந்தினாள்.
அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திக்கின் பக்கம் சாய ஆரம்பித்தது.ஆனாலும் அதை காதல் என்று உணர அவள் மனம் தடுத்தது.
இதெல்லாம் ரமேஷிடம் சொல்லுவாள்.அவன் கார்த்திக்கிடம் அதை பற்றி பேச சொல்லுவான்.ஆனாலும் அவள் அதை தவிர்த்துவிடுவாள்.
ஒரு நாள் ஈவினிங் மஹேஷுடன் தனது ஆபிசில் இருந்து கணக்குகளை பார்த்து கொண்டிருந்த போது
கார்த்திக்கை தேடி ஒருவர் அவனுடைய ஆபிஸிற்கு வந்திருந்தார்.
கார்த்திக்கை தேடி ஒருவர் அவனுடைய ஆபிஸிற்கு வந்திருந்தார்.
காரில் வந்த நபர் ஆபிஸிற்குள் வந்து கார்த்திக்கை பார்த்தார்.
உட்காருங்க சார்.என்றான்.
வணக்கம் தம்பி.என்னோட பேரு மூர்த்தி.வீடு கட்டுறது விஷயமா உங்க கிட்டபேசணும் என்றார் மூர்த்தி.
சொல்லுங்க சார்.
தம்பி எனக்கு 10 சென்ட்ல ஒரு பிளாட் இருக்கு.அதுல மாடியோட ஒரு வீடு எடுக்கணும்.
பண்ணிடலாம் சார்.எங்களை எப்படி உங்களுக்கு தெரியும்.உங்களை நான்பார்த்ததே இல்லையே.
என்னோட பிரென்ட் இங்க இருக்கார்.அவருதான் உங்களை பார்க்க சொன்னார்.உங்களோட வேலைகளையும் பாத்திருக்கேன்.எனக்கும் திருப்தியா இருந்துச்சு.உங்க கிட்ட தான் கொடுக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.
பின் சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு அவரது முழு பின் புலத்தையும் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டான் கார்த்திக்.
அவர் சொன்னதில் இருந்து அவர் MV group of companies ஓட MD என்றும்.அந்த மாவட்டத்திலையே பெரும் புள்ளி என்பதையும் தெரிந்துகொண்டான்.கார்த்திக்கும் அவரை பற்றி கேள்வி பட்டிருக்கிறான்.ஆனால் நேரில் சந்திப்பது இன்றுதான் முதல் முறை.
அவன் கேள்வி பட்டது வரை மூர்த்தி மிகவும் நல்ல மனிதர்.கடின உழைப்பால் பெரிய இடத்துக்கு வந்திருப்பவர்.நகை கடை,ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்,ரெடிமேட் ஷோரூம்னு அதிகமான வியாபாரம் செய்பவர்.அதனால் இந்த வேலையை கண்டிப்பாக செய்து கொடுக்கணும்னு முடிவு செய்தான்.
அவரிடம் வேலை விபரங்கள் அனைத்தையும் பேசிவிட்டு பேமெண்ட் விஷயங்கள் அனைத்தையும் பேசிக்கொண்டான்.
இருவருக்கும் நன்றாக ஒத்து போனதால் அக்ரீமெண்ட் எழுதுவது உறுதியானது.வீட்டிற்கான பிளானை தயார் செய்து இரண்டு நாட்களில் தயார் செய்து தருவதாக சொன்னான்.
மூர்த்தி தனது கார்டை எடுத்து கொடுக்க அதை வாங்கிக்கொண்டு இருவரது போன் நம்பெரும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
மூர்த்தி அட்வான்ஸாக 10000 ரூபாய் கொடுக்க
வேண்டாம் சார்.நான் வேலையை இன்னும்.ஆரம்பிக்கவே இல்லை.எப்போதுமே நம்பிக்கை தான் முக்கியம்.நான் என்னோட கிளெய்ன்ட்ஸை நம்புறேன்.அக்ரீமெண்ட் கையெழுத்து ஆனதும் நீங்க கொடுத்த போதும் என்று மறுத்துவிட்டான்.
வேண்டாம் சார்.நான் வேலையை இன்னும்.ஆரம்பிக்கவே இல்லை.எப்போதுமே நம்பிக்கை தான் முக்கியம்.நான் என்னோட கிளெய்ன்ட்ஸை நம்புறேன்.அக்ரீமெண்ட் கையெழுத்து ஆனதும் நீங்க கொடுத்த போதும் என்று மறுத்துவிட்டான்.
நீ இன்னும் ரொம்ப பெரிய ஆளா வருவப்பா.நானும் உன்ன மாதிரிதான்.சின்ன இடத்துல இருந்து ஆரம்பிச்சேன்.இப்போதான் இந்த பணம் புகழ் எல்லாம்.உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா.அப்புறம் எனக்கு ஒரு உதவி பண்ணணுமே.
சொல்லுங்க சார்.
பிளான் ரெடி பண்ணி எங்க வீட்டுல கொண்டுவந்து கொடுக்க முடியுமா.என் வீட்லயும் எல்லாரும் பாத்துடுவாங்க.
கண்டிப்பா சார்.நான் உங்களுக்கு கால் பண்ணிட்டு வரேன் என்றான் கார்த்திக்.
நல்லதுப்பா.அப்ப நான் கிளம்பட்டுமா.
நல்லது சார் என்று கார்எ வரை சென்று அவரை வழி அனுப்பி வைத்தான் கார்த்திக்.
அன்று இரவு முழுவதும் இருந்து மூளையை கசக்கி ஒரு அழகான பிளானை தயார் செய்தான் கார்த்திக்.
வேலையின் இடையில் ராஜி வந்து சாப்பிட அழைத்தும் நீ போய் சாப்பிட்டுவிட்டு தூங்கு எனக்கு வேலை இருக்கு என்று சொல்லிவிட்டான்.
ராஜிக்கு அவனை பார்த்து மனசு வலித்தது.ஏன் இப்படி ஒதுக்குகிறான் என்று தெரியாமல் மனதுக்குள் அழுதாள்.
அடுத்த நாள் சண்டே என்பதால் லேட் ஆக எழுந்த கார்த்திக் தயார் செய்த பிளானை பிரிண்ட் அவுட் எடுத்து கவரில் போட்டு வைத்தான்.பின் மூர்த்திக்கு கால் செய்து காலை வருவதாக கூறினான்.
மூர்த்தியும் கார்த்திக் காத்திருப்பதாகவும் இன்று தனது ப்ரோக்ராம் அனைத்தையும் கேன்செல் செய்து விடுவதாகவும் கூறினார்.
கார்த்திக் குளித்துவிட்டு வந்து டிரஸ் மாற்றி கொண்டிருக்க காபியுடன் வந்தாள் ராஜி.
காபி என்று ராஜி சொல்ல அதை கவனிக்காது போல சட்டையை அணிந்து கொண்டிருந்தான்.
மீண்டும் காபி என்று ராஜி சொல்ல அங்க வச்சிட்டு போ என்று அவள் முகத்தை பார்க்காமல் சொன்னான்.
காபியை வைத்துவிட்டு வெளிய எங்கையாவது போறியா கார்த்திக் என்றாள் ராஜி.
அப்போதும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.மீண்டும் உன்கிட்டதான் கார்த்திக் என்றாள் ராஜி.
எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை ராஜி.உன்னோட வேலையை மட்டும் பாரு.எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.நான் மதியம் சாப்பிட வரமாட்டேன்.அம்மாகிட்ட சொல்லிடு.இப்போ எனக்கு சாப்பாடு வேண்டாம்.என்று சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் கார்த்திக்.
கார்த்திக் இப்படி சொன்னதும் ராஜிக்கு அழுகையாக வந்தது.நான் அப்படி என்ன பன்னேனு இப்படி நடந்துக்கிடுறான்.எதுனாலும் என்கிட்டே பேசி தெரிஞ்சிக்கிடலாம்ல.வரவர நான் உனக்கு வேண்டாதவளா போய்ட்டேன்ல கார்த்திக்.ஆனா எனக்கு இப்போ உன்கூட பேசணும்போல இருக்கு கார்த்திக்.என்று சொல்லிக்கொண்டே அழுதாள் ராஜி.
இதை யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல இருந்தது ராஜிக்கு.அப்போது ரமேஷுக்கு கால் செய்து அவனிடம் பேசலாம் என்று தோன்றியது.உடனே அவனுக்கு கால் செய்தாள்.
அவனிடம் நடந்தவற்றை சொல்லி அழுதாள்.அவளை சமாதானம் செய்த ரமேஷ் எல்லாம் சரி ஆகிடும் ராஜி.அழாத.இப்போ என்ன பேசாம இருந்தால் நீ போய் பேசு.எத்தனை நாளைக்கு இப்படி பேசாம போக முடியும்.நீ அவாய்ட் பண்ணும்போது அவனுக்கு இப்படித்தான இருந்துருக்கும்.அதே மாதிரிதான் ராஜி.கண்டிப்பா உன்னை அவனால வெறுக்க முடியாது.எதையும் யோசிக்காம
நடக்கபோறதை மட்டும் பாரு ராஜி.அழாத.என்றான் ரமேஷ்.
நடக்கபோறதை மட்டும் பாரு ராஜி.அழாத.என்றான் ரமேஷ்.
சரி ரமேஷ்.அனால் கார்த்திக்கோட இந்த ஒதுக்கம் என்ன இந்த அளவுக்கு பதிக்கிதுன்னா அதுக்கு லவ் தான் காரணமா.நீ என்ன விட்டு போனப்ப கூட எனக்கு இவ்ளோ வலிக்களையே.
அதுக்கு பதில் உங்கிட்ட தான் ராஜி இருக்கு.
எனக்கு தெரியலை ரமேஷ்.அவன் மேல இருக்குறது லவ்வா இல்ல அபெக்ட்ஸனா.எதுவும் தெரியலை.
தெரியலைன்னுஸ் சொல்றதும் ஆமான்னு சொல்றதும் ஒன்னு தான் ராஜி.உன் மனசுகிட்ட கேளு.அது என்ன சொல்லுதோ அதுபடி கேளு.
சரி ரமேஷ்.தேங்ஸ்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராஜி.பீல் பண்ணாம சந்தோசமா இரு.வைக்கிறேன்.
போன் பேசி முடித்த பின் ராஜிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.யோசித்தால் யோசித்தாள் இறுதியில் அவள் மனம் ஒப்புக்கொண்டதுன்.நான் கார்த்திக்கை விரும்புகிறேன்.
மூர்த்தி வீட்டிற்கு செல்லும்போது மணி 12 ஆகி இருந்தது.தான் வந்த விஷயத்தை மகேஷிடம் போன் செய்து முன்னமே சொல்லி விட்டான் கார்த்திக்.கண்டிப்பாக இந்த வேலை கிடைக்கும்.ஆல் தி பெஸ்ட் அண்ணா என்று சொன்னான் மகேஷ்.
மூர்த்தி வீட்டுக்கு சென்று வாசலில் நின்று வாட்ச் மேனிடம் வந்த விஷயத்தை சொன்னான் கார்த்திக்.கார்த்திக் வருவதை முன்னமே மூர்த்தி சொல்லி இருந்ததால் விசாரணை இன்றி உள்ளே அனுப்பினான் கார்த்திக்.
அவருடைய வீடு பெரிய அரண்மனை போல இருந்தது.பார்த்ததுமே பிரமிப்பாக இருந்தது கார்த்திக்குக்கு.வீட்டின் உள்ளே சென்றவன் மூர்த்தியை பார்த்ததும் வணக்கம் சொல்லிவிட்டு அவர் அருகில் சென்றான்.
அவனை பார்த்த மூர்த்தி வாப்பா.அதுக்குள்ள ரெடி பண்ணிட்டியே.உட்காரு என்று ஸோபாவில் இருக்க சொன்னார்.
சோபாவில் அவரும் அமர்ந்து கொண்டு பிளானை பார்த்த மூர்த்தி ரொம்ப நல்லா இருக்கு தம்பி.இருங்க என் வீட்டம்மா கிட்ட காட்டிடுறேன்.
என்று சொல்லிவிட்டு பார்வதி என்று அழைத்தார்.வீட்டில் இருந்து எந்த விதமான பகட்டும் இல்லாமல் எளிமையாக வந்தார் பார்வதி.
பார்வதியிடம் காட்டிய மூர்த்தி அவளுக்கும் அது பிடித்து போக இருவருக்கும் பரம சந்தோசம்.
பின் கார்த்திக்குக்கு காபி கொடுக்கப்பட்டது.அப்போது இன்னும் என் பொண்ணு மட்டும் பார்க்கணும்.அவ பாத்து ஓகே சொல்லிட்டா அக்ரீமெண்ட் போட்டு வேலையை ஆரம்பிச்சிடலாம் என்றார் மூர்த்தி.
சரிங்க சார்.உங்க பொண்ணு எங்க இருக்காங்கனு சொல்லுங்க.இல்லனா அவுங்க மெயில் ஐடி கொடுங்க.மெயில் பண்ணி விடுறேன்.என்றான் கார்த்திக்.
அதுக்கு அவசியம் இல்லை தம்பி.என் பொண்ணு உள்ள தான் இருக்கா.இருங்க கூப்பிடுறேன்.குட்டிம்மா என்றார்.
இதோ வரேன்ப்பா என்று உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
5 நிமிடம் கழித்து அப்பா என்று அந்த குரல் மிக அருகில் கேக்க அந்த பெண்ணை பார்த்து ஷாக் ஆகிவிட்டான் கார்த்திக்.
அங்கு மான்வி நின்று கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததும் கார்த்திக்குக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
மூர்த்தி தான் ஆரம்பித்தார்.என்ன தம்பி அதிர்ச்சி ஆகிட்டீங்களா.இவ தான் என் பொண்ணு மான்வி.இந்த வீடு கட்டின அது உங்க கிட்டதான் கொடுக்கணும்னு ஒரே அடம்.அதான் உங்களுக்கே தெரியாம ஒரு சின்ன சர்ப்ரைஸ்.என் பொண்ணு ஒரு பக்கம் இருந்தாலும் உன்னோட வேலையும்,உன்ன பத்தியும் விசாரிச்சுதான் உங்கிட்ட இதை கொடுக்கிறேன்.
நன்றி சார்.ஆனா ஒரு சின்ன சந்தேகம்.
சொல்லுப்பா.
இல்ல சார்.கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.இவ்ளோவ வசதி இருந்தும் நீங்க மூணு பேறும் ரொம்ப எளிமையா இருக்கீங்க.அதான் எப்படின்னு.
நான் ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துருக்கேன்.எனக்கு எப்போதுமே எளிமையா இருந்துதான் பழக்கம்.என் வீட்டம்மாவும் என்ன மாதிரிதான்.அதனாலதான் என் பொன்னும் எங்களை மாதிரி இருக்கிறா.

சார் ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க சார்.உங்க பொண்ணு இன்னும் ஒன்னும் சொல்லவே இல்லையே.
எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்குபா.என்றாள் மான்வி.
பின் வேலை பற்றிய விபரங்களை பேசி விட்டு கார்த்திக் ஓகே சார் சொன்ன மாதிரி அன்னைக்கே வேலையை ஆரம்பிக்கலாம் நான் வரேன் சார்ஏ. என்று கிளம்ப எத்தனிக்க
அதெல்லாம் முடியாது இன்னைக்கு மதிய லன்ச் எங்க வீட்டுலதான்.அப்பா சொல்லுங்கப்பா என்றாள் மான்வி.
ஆமாப்பா.வந்ததும் உடனே கிளம்புற.இருந்து லன்ச் சாப்பிட்டுட்டு தான் போகணும்.உனக்காக என் பொன்னும் வீட்டம்மாவும் நிறைய செஞ்சு வச்சிருக்காங்க.சாப்பிட்டுட்டு தான் போகணும்.வா என்றார் மூர்த்தி.
சார் வீட்ல என் வீட்டம்மா வேற தேடுவாங்க.நான் இன்னொரு நாள் வரேன்.என்றான் கார்த்திக்.
அதெல்லாம் முடியாது.இப்போ நீங்க வரீங்க பிரதர் என்று அவன் கையை பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்தாள் மான்வி.
பின்னர் அவளுடைய லேப்டாப்பை எடுத்து வந்து அவளுடைய சிறுவயது போட்டோ,ஸ்கூல் போட்டோ,காலேஜ் போட்டோ என ஒவ்வொன்றாக காட்டினாள் மான்வி.
அங்கு இருப்பது என்னவோ தன வீட்டில் இருப்பது போல இருந்தது கார்த்திக்குக்கு.பின் ராஜி பற்றி,அன்று பார்த்த மெசேஜ் பற்றி,தன்னுடைய காதல் இப்படி எல்லாம்பேசினார்கள்.
பின் சாப்பிடுவதற்கு பார்வதி அழைக்க சாப்பிட சென்றனர்.
கார்த்திக் ராஜியின் சவால் ஆரம்பித்து இன்றுடன் இரண்டு மாதம் முடிந்துவிட்டது.
இன்று ஏனோ ராஜிக்கு தனது அம்மாவை பார்க்க வேண்டும் போல இருந்தது.காலையில் கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு தனது அம்மாவை பார்க்க சென்று விட்டாள்.
கார்த்திக்குக்கு மான்வி வீட்டின் வேலைகள் அதிகமாக இருந்ததால் ராஜியை பஸ்ஸில் சென்று வருமாறு சொல்லி விட்டான்.
கார்த்திக்கும் தன்னோடு வருவான் என்று எதிர்பார்த்த ராஜிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தாய் வீட்டிற்கு வந்த ராஜி அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசிய பிறகுதான் சற்று நிம்மதியாக இருந்தது.
அப்போது டிவியில் முதல்வரின் உடல் நிலை பற்றி பிளாஷ் நியூஸ் ஓட தமிழ்நாடே பதற்றமாக இருந்தது.
ராஜிக்கும் பதற்றமாக இருந்தது.பஸ்ஸில் வேறு செல்ல வேண்டும்.என்ன செய்வது என்று முழித்துக்கொண்டிருந்தால்.
மகளை இந்த சூழ்நிலையில் அனுப்ப பெற்றவர்களுக்கும் விருப்பம் இல்லை.
ஆனால் ராஜி கண்டிப்பாக போக வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.அவளுடைய எண்ணம் எல்லாம் கார்த்திக்கும் இதே மாதிரி சூழலில் தான் இருப்பான்.அவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதிலே இருந்தது.
அதை அம்மாவிடமும் சொல்லிவிட்டாள்.இறுதியில் மகளின் பிடிவாதம் ஜெயிக்க அனுப்ப மணமில்லாமல் அனுப்பி வைத்தனர்.
கார்த்திக்குக்கு தகவல் சொல்லி அவனை கூட்டிக்கொண்டு போக சொல்லலாம் என்று லட்சுமி எடுத்து சொல்லியும் அவருக்கு வேலை அதிகம் அதனால அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்.அதுவும் இல்லாம இதை சொல்லி தேவை இல்லாம பயந்துட்டு இருப்பான்.நான் பத்திரமா போய்டுவேன்.வரேன்மா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள் ராஜி.
ராஜி சென்ற பின்பு லக்ஷ்மிக்கு பயம் அதிகரிக்க கார்த்திக்குக்கு ராஜி வருவதை போன் செய்து சொன்னாள்.
இதை கேட்ட கார்த்திக்குக்கு கோவம் வர சரி அத்தை நான் பாத்துக்கிடுறேன் என்று சொல்லிவிட்டு ராஜிக்கு கால் செய்தான்.
அவளுடைய நம்பர் நாட் ரீச்சபிள் என்று வர பதற்றம் தொற்றி கொண்டது.ச்ச என்று காலை அருகில் இருந்த சுவற்றில் உதைத்துவிட்டு மீண்டும் டையல் செய்தான்.
இப்போது ரிங் செல்ல காலை அட்டென்ட் செய்ய லூசா நீ.இப்போ எதுக்கு கிளம்பி வர.அங்க இருந்துட்டு நாளைக்கு வர வேண்டியதுதானே.இல்லனாசி கால் பண்ணி சொல்லிருந்தா நான் கிளம்பி வந்துருப்பேன்ல என்றான் கார்த்திக்.
இல்ல கார்த்திக்.நீ பிசியா இருப்ப.அதான்.நான் பஸ் ஏறிட்டேன்.கொஞ்சம் கூட்டமா இருக்கு.நான் வந்துடுவேன் என்றாள்.
அவள் பேசுவது இரைச்சலாக இருக்க.சரி நான் இப்போ கிளம்பிட்டேன்.இன்னும் அரை மணி நேரத்துல ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்ல இருப்பேன்.நீ அங்க இறங்கிடுன்.நான் வந்துடுறேன்.பத்திரமா வா என்றான்.
இல்ல கார்த்திக்.வேண்டாம் நான் பத்திரமா வீட்டுக்கு வந்துடுவேன்.நீ பார்த்து வா கார்த்திக்.நீ வரவேண்டாம்.
நான் பாத்துக்கிடுறேன்.நான் சொல்றதை மட்டும் செய்.வைக்கிறேன் பத்திரம் என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் கார்த்திக்.
10 நிமிடத்திற்கு முன்பாகவே அவன் வந்துவிட அப்போது முதல்வர் இறந்துவிட்டதாக டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.ராஜி வராத ஒவ்வொரு நிமிடமும் கார்த்திக் அவளுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று வேண்டிக்கொண்டான்.
கூட்டம் அதிகமாக ஒரு பஸ் வர அதில் இருந்து மக்கள் இறங்கினர்.அந்த பஸ்ஸில் இருந்து இறங்கிய இரு பெண்கள் பஸ்ஸுல இடிக்கிறதுக்குனே வரானுக.அதுலயும் அந்த பச்சை சேலை கட்டிரிக்குற பொண்ணு எவ்ளோ ஓரமா நிக்கு.எப்படி இடிக்கிறானுக பாரு.எல்லாம் நேரம் என்று சொல்லிவிட்டு சென்றனர்.
அப்போது ராஜி பச்சை சேலை கட்டிக்கொண்டு இறங்க பின்னால் இருந்து ஒருவன் அவளது பின் புறத்தை கைகளால் உரசிக்கொண்டு செல்ல கார்த்திக் அதை பார்த்து விட்டான்.
கார்த்திக்கை பார்த்த ராஜி அவன் அருகில் சென்று பொறுக்கிங்க. என்று சொல்லிக்கொண்டே போகலாம் கார்த்திக் என்று சொல்லிவிட்டு பிடித்தவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
ராஜியின் கைகளை பிடித்த கார்த்திக் அவளை இழுத்துக்கொண்டு வந்து ராஜியை இடித்தவனின் சட்டையை பிடித்து திருப்பி கன்னத்தில் ஓங்கி அறைவிட்டான்.
அரை வாங்கியவன் கண்களை உருட்டி முழித்து கன்னத்தை தடவிக்கொண்டு கார்த்திக்கை பார்த்து ஓத்தா.யாருமேல கைய்ய வச்ச உன்ன என்று கையை ஒங்க அந்த கையை பிடித்து கொண்டு முகத்தில் ஒரு குத்துவிட்டான்.அவனது சில்லு மூக்கு உடைந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது.
இதை பார்த்த ராஜி கார்த்திக் வேண்டாம்.ப்ளீஸ் வா போகலாம்.வா கார்த்திக் என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.
நீ விடு ராஜி.என்று சொல்லிவிட்டு இப்ப தடவுடா.இப்ப கைய வைடா பாக்கலாம் என்று மீண்டும் கையை மடக்கி அவனை குத்தினான்.
டேய் உன்ன.மச்சான் இங்க பாருடா.அடிச்சிட்டாண்டா.இவனை உடக்கூடாதுடா.சாவடிக்கனும்டா என்று அடிவாங்கியவன் சொல்ல அவனது நண்பர்கள் நால்வர் வந்தனர்.
டேய் பஸ்ஸுன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்.அதுக்குன்னு மேல கை வைக்குற.என்று இன்னொருவன் கை முறுக்கி குத்த அவனை விட்டு விலகிய கார்த்திக் அவன் தலையை பிடித்து பஸ்ஸின் மீது மோதினான்.
பஸ் பாடி நெளிந்து அவன் மண்டையை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான்.
மூன்றாவது வந்தவன் அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து கார்த்திக்கை தாக்க விலகிய கார்த்திக்கின் நெற்றியில் சின்னதாக காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த ராஜி ஐயோ கார்த்திக் வேண்டாம்.ப்ளீஸ்.எனக்கு பயமா இருக்கு என்று அவனை பிடித்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.
ராஜியின் மீதுள்ள கோவம்,ராஜியை அவன் உரசியது என்று எல்லாம் சேர்ந்து மொத்தமாக எல்லாம் அவர்கள் மீது திரும்பியது.
நீ சும்மா இரு ராஜி என்று கத்திவிட்டு அவர்களை போட்டு துவைத்து எடுக்க ஆரம்பித்தான்.
கார்த்திக் விடுன்னு சொல்றேன்ல்ல.விடு கார்த்திக் என்று ராஜி கார்த்திக்கை தடுத்து கொண்டிருந்தாள்.
அப்போது ஒருவன் அதான் உன் ஆளே ஒன்னும் சொல்லல.இடிக்கும் போது சும்மாதானே இருந்தா.நீ எதுக்கு எகிறுற என்று சொல்ல
என்ன சொன்ன.ஏன்டா பொம்பளைய இடிக்கிற நாய்களா.நீங்க தப்பு செஞ்சுட்டு பொண்ணுகளை தப்பு சொல்றிங்களா.உங்களை என்று பெல்ட்டை உருவி பெல்ட்டால் அடிக்க தொடங்கினான்.
அப்போது கார்த்திக்.விடு கார்த்திக்.அவன்தான் சொல்றன்ல நானே ஒன்னும் சொல்லலைன்னு.வா கார்த்திக் போகலாம்.எல்லாரும் பாக்குராங்க.வா என்று ராஜி கத்த.
அப்ப இவனுகளை சும்மா விட சொல்றியா.உனக்கு வேணும்னா அவன் உரசுனா கோவம் வராம இருக்கலாம்.எனக்கு இந்த நாய்னு இல்ல,வேற எந்த நாயா இருந்தாலும் உன் நிழலை தொட்டால் கூட சங்கறுத்துடுவேன் என்று கர்ஜித்துவிட்டு பெல்ட்டால் அவர்களை விலாச ஆஆ,ஐயோ,அம்மா என்று அடிவ வாங்கியவர்கள் அலறினர்.
அருகில் இருந்தவர்கள் போலீசிற்கு தகவல் கொடுக்க போலீஸ் வந்துவிட்டது.கார்த்திக் அவர்களை ஓட ஓட விட்டு பெல்ட்டால் அடிக்க போலீஸ் வந்து கார்த்திக்கை பிடித்துக்கொண்டது.மற்றஐந்து பேரையும் போலீஸ் பிடித்துக்கொள்ள அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டனர்.ராஜியை
அவர்கள் கவனிக்கவில்லை.
அவர்கள் கவனிக்கவில்லை.

அரை மணி் நேரம் கழித்து அங்கு வந்த SI கார்த்திக்கிடம் வந்து நீதான் கலாட்டா பண்ணினதா.உன் பேரு என்ன என்றார்.
கார்த்திக் பெயர் மற்றும் தான் வேலை விபரங்களை சொன்னான்.மேலும் ராஜியின் பெயர் சொல்லாமல் பொதுவாக பஸ்ஸில் பெண்களை இடித்ததால் அடித்ததாகவும் சொன்னான்.
அதுக்குத்தான் நாங்க இருக்கோம்.நீங்க என்ன பெரிய ஹீரோவா என்று சொல்லிவிட்டு அடிவாங்கியவர்களின் பெயர் விபரங்களை கேட்டார்.
அப்போது வாசலில் மூர்த்தியும்,அவருடன் மான்வி,ராஜி மூவரும் காரில் வந்தனர்.மூர்த்தியை பார்த்த SI சார் வாங்க சார்.நீங்க எங்க இந்த பக்கம் சார் என்றார்.
ஒன்னும் இல்ல தம்பி நம்ம பையன் தான் கேஸ் ஒன்னும் போடலையே.
இல்ல சார்.இப்பதான் விசாரிக்கவே ஆரம்பிச்சேன்.அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க.பப்லிக் நியூசென்ஸ் கேஸ்.அதுவும் இல்லாம பஸ்வேற டேமேஜ் பண்ணிருக்கான்.இப்போ இருக்குற சூழ்நிலையில கலவரம் வந்த மாதிரி எழுதிடுவானுக.அதான் விசாரிச்சிட்டு நடவடிக்கை எடுக்கலாம்னு இருந்தேன்.
சரி தம்பி.இதான் கார்த்திக்கோட வீட்டம்மா.இப்போதான் எல்லா விஷயமும் சொல்லிச்சு.அதனால தம்பி மேல கேஸ் இல்லமா உடனே விட சொல்லுங்க.உங்க அதிகாரிகிட்ட பேசணும்னுனாலும் பேசுறேன் என்றார் மூர்த்தி.
அதெல்லாம் வேண்டாம் சார்.நான் பாத்துக்கிடுறேன்.இந்த 5 பேரு மேல கலவரம் பண்ண வந்ததா கேஸை போட்டுக்கிடுறேன்.நீங்க கூட்டு போங்க என்றார் SI.
போலீஸ் ஸ்டேஷன் விட்டு வெளியே வந்த மூர்த்தி என்னப்பா இப்டி பண்ணிட்ட.கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாம்ல.இந்தமாதிரி நேரத்துல பொண்ணுகளை வெளியே அனுப்பலாமா என்றார்.
No comments:
Post a Comment