அப்போது கார்த்திக்கு வயது 6,அவனுடைய அப்பா அம்மாவிற்குள் அடிக்கடி சண்டை வரும்.இவனும் பயங்கர சேட்டை செய்வான்.அதனால மொத்த கோவமும் இவன் மேல திரும்பும்.அடிவிழகூடிய நேரத்துல கரெக்டா பாட்டி வீட்டுக்கு ஓடி வந்துடுவான்.அவனுடைய பாட்டிக்கு கடைசி பையன் ஒருத்தன் பிறந்த உடனே இறந்துட்டான்.அதனால கடைசி பையன் தான் தனக்கு பேரனா பிறந்துருக்கன்னு இவன பாசமா வளத்தாங்க.அதுவும் இல்லாம அவுங்க குடும்பத்துல முதல் ஆண் வாரிசு.அதனால கார்த்திக் மேல தனி பாசம் எல்லாத்துக்கும்.அப்ப ராஜிக்கு மூணு வயசு.ஒவ்வொரு வருடமும் மே மாதம் பள்ளி விடுமுறைக்கு கார்த்திக்கின் குடும்பத்துடன் செலவிடுவது லக்ஷ்மியின் வழக்கம்.அப்போதெல்லாம் தாயம் விளையாடுவது,ஆற்றில் சென்று குளிப்பது, ஒன்றாக இருந்து கார்ட்ஸ் விளையடுவதுன்னு சந்தோசமாக இருப்பார்கள்.அப்போதெல்லாம் கார்த்திக்கு ராஜின்னா தனி பிரியம்.அவளோட அக்கா கூட சண்டை போட்டுடே இருப்பான்.எல்லா நேரமும் ராஜி கார்த்திக் பக்கம் தான் இருப்பாள்.ஒவ்வொரு வருட விடுமுரை முடிந்த பின்பும் அடுத்த விடுமுறைக்கு காத்திருப்பான்.அவன் 10த் படிக்கும் போது அவள் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்திருந்தாள்.அப்போது ஒரு நாள் ராஜியை சைக்கிளில் வைத்து கடைக்கு கூட்டி சென்றான்.அதை பார்த்த அவனது நண்பர்கள் அவனை கூப்பிட்டு சைகையில் கிண்டல் செய்ய அவன் அதை கண்டு கொள்ளாத மாதிரி சென்று விட்டான்.அதை கவனித்த ராஜி ஏன் உன் பிரெண்ட்ஸ் அப்படி சொல்றாங்கன்னு கேட்டாள்.அதற்கு கார்த்திக் அவுங்க சும்மா கிண்டல் பண்ணுவாங்க நீ கண்டுகிடாதன்னு சொன்னான்.
அதன் பின்பு அவனுடைய நண்பர்களிடம் சென்று ஏன் மானத்த வாங்குரிங்கடா.அவ இருக்கும் போது எதுக்குடா கிண்டல் பண்றீங்க.அவ என்னனு கேக்குரான்னு சொன்னான்.அதற்கு அவனுடைய நண்பன் டேய் அக்காவ விட்டுட்டு தங்கச்சிய கரெக்ட் பண்ற போலன்னு கிண்டல் செய்தார்கள்.பதின் வயதை தொட்ட அவனுக்கு அப்போது தான் உரைத்தது.தான் இவ்வளவு நாளும் அவளுடன் சிறுபிள்ளைதனமாக பழகியிருக்கிறோம் என்று.உடனே சுதாரித்து கொண்டவன் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.நாங்க பிரெண்ட்ஸ் அவ்வளவுதான் வரட்டுமா என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.அவனுக்கு ராஜியின் மேலான முதல் நேச விதை அன்றில் இருந்து துளிர் விட ஆரம்பித்தது.அதன் பிறகு ராஜி அவன் அருகில் வரும் போதெல்லாம் அவள் மேல் உரசாதவாரு தள்ளி இருந்து கொள்வான்.அவளிடம் பேசும் போதெல்லாம் அவள் முகம் அவனை பேச விடாமல் செய்தது.இதை எதுவுமே புரிந்து கொள்ள முடியாத ராஜியோ அவனிடம் இயல்பாக பழகினால்.இவ்வாறாக நாட்கள் செல்ல அவன் 12th முடித்துவிட்டு டிப்ளோமா சேர்ந்தான்.அவனுடைய அம்மா வழி பாட்டி வீட்டில் இருந்து தங்கி படிக்க வீட்டில் முடிவானது.

அந்த ஊர் ராஜியின் வீட்டிற்கு மிக அருகில் உள்ள ஊர்.அப்போது தான் இருவரின் கைகளிலும் போன் இருக்க தினமும் சாட்டிங்கில் பல மணிநேரம் உரையாடுவார்கள்.சனி,ஞாயிறுகளில் அவளுடைய அக்கா போனை எடுத்து கொள்வாள்.அப்போது அவளுடைய அக்கா அவனிடம் பேசி கொண்டிருப்பாள்.சரியாக ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு ஆரம்பிப்பார்கள்.இரவு 10 மணி வரை நீளும். 10 மணிக்கு பின்பு அவளுடன் அன்றைய நாளின் நிகழ்வுகளை வார்த்தைகளாக டைரியில் எழுதுவான்.இப்படியாக கார்த்திக்கிற்கு காலேஜ் முதல் வருடம் முடிய ராஜி 11 படித்து கொண்டிருந்தாள். அப்போது அவனுடைய காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கார்த்திக்கை ப்ரொபோஸ் செய்ய சொல்ல இவனுக்கோ அவள் 11 படிக்கிற பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்.தேவை இல்லாம அவள் மனசை கெடுக்க வேண்டாம்னு நினைத்தான்.கடைசியாக அந்த வருட நியூ இயர் அன்று அவளிடம் ப்ரொபோஸ் செய்தான்.
அதை கேட்ட அவள் சிறிது நேர அமைதியாக இருந்தாள்.அந்த சிறிது நேர அமைதி வாழ்வின் பல யூகங்களாய் இருந்தது கார்த்திக்கிற்கு.அவனுடைய இதயம் துடிப்பது உலகிற்கே கேட்டிருக்கும்.பின்னர் ராஜி சொன்னால் எனக்கு இண்டரெஸ்ட் இல்ல கார்த்திக்.உன்ன எப்பவுமே ஒரு நல்ல ப்ரெண்டாதான் நினைக்கிறேன்.ப்ளீஸ் உன் மனச மாத்திக்கோ.இனிமே இத பத்தி பேச வேண்டாம்னு சொன்னால்.கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.குத்து பாட்டிற்கு டான்ஸ் ஆட வேண்டும் போல இருந்தது.சரி ராஜி இனிமே என்கிட்டே பேசமட்ட அப்படித்தான என்றான்.இல்ல ஏன் பேசாம இருக்கணும்.கண்டிப்பா பேசுவேன்.பிரெண்டா.ஓகே எனக்கு தூக்கம் வருது பாய்.குட் நைட் னு சொல்லி போனை வைத்தாள்.கார்த்திக்கிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.அவள் இவ்வளவு தெளிவாக பேசுவாள் என்று அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.அவள் இண்டரெஸ்ட் இல்லன்னு தான சொல்லிருக்கா.அடுத்த நிமிஷம் என்ன நடக்குனே தெரியாதது தான் வாழ்க்கை.பின்னாடி என்மேல அவளுக்கு லவ் வராமலா போகிடும்.கண்டிப்பா பண்ணுவா.அவனுக்கு அவனுடைய காதலின் மீது அசைக்க முடியா நம்பிக்கை இருந்தது.இவ்வளவு நாள் அவளிடம் தன் காதலை சொல்லாமல் இருந்ததற்கு இப்போது சொல்லி விட்டான்.அதுவே அவன் தன் காதலின் முதல் வெற்றியாக எண்ணினான்.
அதுவும் இல்லாமல் அவள் உடனே ஓகே சொல்லிருந்தால் கூட அவன் இவ்வளவு சந்தொசபட்டிருக்க மாட்டான்.உடனே ரூமிற்கு சென்று ஒத்த சொல்லல என் உசுர எடுத்து வச்சிகிட்டா பாடலுக்கு சென்று டான்ஸ் ஆடினான்.அவள் இவ்வாறு பேசியது அவள் மீதான காதலை இன்னும் அதிகமாக்கியது.அவள் என்ன செய்தாலும் அதை ரசிக்க ஆரம்பித்தான்.சில விசயங்களில் இருவரும் வேறு வேறாக முரண்படுவர்.ஆனாலும் கார்த்திக் அதை ரசித்தான்.காந்தத்தின் வெவ்வேறு துருவங்கள் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும்.அதை போல ராஜியின் ஒவ்வொரு பேச்சிலும் ஈர்க்கப்பட்டான்.கார்த்திக்கிற்கு புத்தகம் வாசிப்பது ரொம்ப பிடிக்கும்.தினமும் காலேஜ் முடிந்து வந்து லைப்ரரி சென்று புத்தகம் எடுத்து வருவான்.உமா பாலகுமார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
ராஜியையும் புத்தகம் படிக்க வற்புறுத்துவான்.ஆனால் அவள் படிக்க நேரமில்லை என்று சொல்லி விடுவாள்.ஒருநாள் அவளுடைய பிறந்த நாள் வர நைட் 12 மணிக்கு எழுந்து தன்னுடைய வாழ்த்து தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்று காத்திருந்து வாழ்த்தினான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது.ஏனோ அவளுக்காக அன்று சாமி கும்பிட்டு வேண்டிகொண்டான்.இவ்வாறாக அவன் காலேஜ் முடிய அந்த வருடம் அவன் சென்னைக்கு வேலைக்கு சென்றான்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அவன் அவளிடம் தனது காதலை நியூ இயர் அன்று சொல்லிவிடுவான்.அவளும் வழக்கம் போல அதே டைலாகை சொல்லுவாள்.அன்று தான் அவள் தனது காதல் ரகசியத்தை அவனிடம் சொன்னாள்.அதை கேட்ட கார்த்திக் மிகவும் உடைந்து போனான்.ரூமில் இருந்து அழகூட செய்தான்.அவனுக்கு வாழ்கையே பிடிக்கவில்லை.அவளும் ரமேஷும் காதலிப்பதை அவள் தினமும் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சி செய்தால் ராஜி.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அவன் அவளிடம் தனது காதலை நியூ இயர் அன்று சொல்லிவிடுவான்.அவளும் வழக்கம் போல அதே டைலாகை சொல்லுவாள்.அன்று தான் அவள் தனது காதல் ரகசியத்தை அவனிடம் சொன்னாள்.அதை கேட்ட கார்த்திக் மிகவும் உடைந்து போனான்.ரூமில் இருந்து அழகூட செய்தான்.அவனுக்கு வாழ்கையே பிடிக்கவில்லை.அவளும் ரமேஷும் காதலிப்பதை அவள் தினமும் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சி செய்தால் ராஜி.
1 வாரமாய் அவன் சரியாக தூங்கவில்லை,சாப்பிடவும் இல்லை.தினமும் அவள் கார்த்திக்கிற்கு மெசேஜ் செய்வாள்.கார்த்திக்கும் பதில் அனுப்புவான்.ஆனால் அவள் சிறிது நேரம் கழித்து பதில் ரீப்லே செய்வாள்.கார்த்திக் ஏன் இவ்ளோ நேரம் கழித்து ரீப்ளே பண்ணுறன்னு கேட்டால் என் ஆளு கூட பேசிட்டு இருந்தன்னு சொல்லுவாள்.அந்த நொடி கார்த்திக்கிற்கு பற்றி கொண்டு வரும்.ஆனால் அவளிடம் கோவப்பட மாட்டான்.சரி ஓகே நான் அப்புறமா பேசுறேன்னு சொல்லிடுவான்.அவனுடைய இந்த நிலையை பார்த்த ரூம் நண்பர்கள் டேய் அவ உன்ன அலைய விடுராட.அத புரிஞ்சிகிடாம நீ இப்படி பீல் பண்ணிட்டு இருக்க.நாம லவ் பண்ற பொண்ணு பர்ஸ்ட் நம்ம லவ்வ கொஞ்சமாவது புரிஞ்சிகிடனும்.அதகூட பண்ண மாட்டேன்றா.அவளா நீ லவ் பண்ற அளவுக்கு வொர்த்தெ கிடையாது.பேசாம ரெண்டு நாள் அவகூட பேசாம இரு.எல்லாம் சரி ஆகிடும்னு சொன்னங்க.இன்னும் சிலர் அவுங்க அவுங்க காதல் வாழ்க்கைய சொல்ல கார்த்திக்கிற்கு எரிச்சலாக வந்தது.ஆனால் அவன் எந்த நொடியிலும் ராஜியை வெறுக்கவில்லை.மாறாக அவன் இன்னும் இன்னும் அவளை காதலித்தான்.
அப்போது தான் அவன் ஒன்றை யோசித்தான்.ஏன் ராஜி நம்ம மனசை மாற்றுவதற்காக பொய் சொல்லிருக்க கூடாது.அப்படியே லவ் பண்ணினாலும் நான் ஏன் அவளை லவ் பண்ணகூடாது.அவள் ஒன்றும் அவனுக்கு பொண்டாட்டி இல்லையே.அவளுக்கு கழுத்துல தாலி ஏருகுற அந்த நொடி வரை நான் அவளை காதலிப்பேன் என்று முடிவெடுத்தான்.அன்று மீண்டும் அவள் மெசெஜ் செய்ய அவளிடம் தைரியமாக சொன்னான் ராஜி நான் உன்னை காதலிக்கிறேன்னு.நாம் காதலிப்பதை இவனிடம் சொல்லியும் இவன் இப்படி சொல்றான்.இவன் என்ன மென்டலா இருப்பனொன்னு நினைத்துகொண்டு மெண்டல் மாதிரி உளறாத.நான் ரமேஷை தான் லவ் பண்றேன்.திரும்ப திரும்ப நீ சொன்னதையே சொல்ற.தயவு செஞ்சு உன்ன மாத்திக்க பாரு.சொல்லிட்டேன்னு சொன்னால் ராஜி.
நீ யார வேணும்னாலும் லவ் பண்ணு.பட் நான் உன்ன லவ் பண்றேன் அது நிஜம்.பதிலுக்கு நீயும் என்ன லவ் பண்ணுனு நான் கேட்டேனா.இல்லல.அப்புறம் என்னனு கார்த்திக் கேட்டான்.லூச நீ.நான் இன்னொருத்தன லவ் பண்றேன்னு சொல்றேன் அப்பறம் எப்படி நா உன்ன லவ் பண்ண முடியும்.சொல்லுன்னு சொன்னால் ராஜி.முடியுமே என்றான்.எப்படி என்றால் ராஜி.சிம்பிள் அவன கழட்டி விட்டுரு என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோன்னு கார்த்திக் சொல்லஉ.உன் தலை.மூஞ்ச பாரு.நான் அப்படிலா பண்ணமாட்டேன்.நாங்க ரெண்டு பேரும் சின்சியராக லவ் பண்றோம்.நாங்க கண்டிப்பாக லைப்ல ஒன்னு சேருவோம்அதனால நீ மனச மாத்திக்கோ இல்லன கசஸ்ட்டபடுவன்னு சொன்னால் ராஜி.
என்னால எல்லாம் மாற முடியாது முடிஞ்சா நீ மார பாரு என்றான் கார்த்திக்.குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்றேன் நீ திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க உன்கிட்ட பேசுறதே சுத்த வேஸ்ட்.குட் பாய்.என்று சொல்லி விட்டு போனை தூக்கி எறிந்தால்.இதை எதிர்பார்க்காத கார்த்திக் மீண்டும் அவளுக்கு கால் செய்து நீ சொன்னதெல்லாம் யோசிச்சு பார்த்தேன்.ஆனாலும் நீ பன்றேதேல்லாம் பார்க்கும் போது இன்னும் உன்ன காதலிக்கனும்னு தான் தோணுதே தவிர உன்ன விட்டு விலகனும்னு தோணவே மாட்டேங்குதுப்பா ஐ லவ் யூ டி என்றான்.திருந்தாத ஜென்மம் இனிமே உன்கிட்ட பேசவே மாட்டேன்னு சொல்லி போனை கட் செய்து விட்டாள்.
ஆனால் கார்த்திக் தீர்கமாக நம்பினான் அவள் கண்டிப்பாக திரும்ப அழைப்பாள் என்று.அன்றில் இருந்து இரண்டு நாட்களாக எந்த மெசேஜும் போனும் வரவில்லை.இப்படியாக நாட்கள் ஒன்று,இரண்டு,மூன்று என்று கழிய சரியாக 5 வது நாள் அவளிடம் இருந்து ஒரு மொக்கை பார்வர்ட் மெசேஜ் ஒன்று வந்தது அதை பார்த்த கார்த்திக் சிரித்து கொண்டே அதை டெலிட் செய்தான்.அடுத்து என்ன மெசேஜ் வரும் என்று கார்த்திக் நன்றாக தெரிந்து வைத்திருந்தான்.
அதை பார்த்து சிரித்து விட்டு போனை கீழே வைத்து விட்டான் கார்த்திக்.ஒரு 5 நிமிடம் கழித்து சாரி மாத்தி மெசேஜ் அனுப்பிட்டேன்னு ராஜி மீண்டும் மெசேஜ் அனுப்பினாள்.
அதை பார்த்து சிரித்து விட்டு போனை கீழே வைத்து விட்டான் கார்த்திக்.ஒரு 5 நிமிடம் கழித்து சாரி மாத்தி மெசேஜ் அனுப்பிட்டேன்னு ராஜி மீண்டும் மெசேஜ் அனுப்பினாள்.
அதற்கும் கார்த்திக் பதில் அனுப்பவில்லை.சரியாக அரை மணி நேரம் கழித்து ராஜி கால் செய்தால்.ஏன் என்கூட பேச மாட்டேன்கிறனு கேட்டாள்.
அதற்கு நீதான் அன்னைக்கு என்கூட பேசாதனு சொன்ன என்று சொன்னான் கார்த்திக்.

ஒரு பிரெண்டா நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது கார்த்திக்.வேற ஒருத்தன லவ் பண்ணிட்டு இருக்குற ஒரு பொண்ணுட்ட நான் உன்ன லவ் பன்றேன்னு வந்து சொன்னா வேற எப்படி சொல்ல சொல்றனு கேட்டாள் ராஜி.
நான் நீயும் என்ன லவ் பண்ணுனு சொல்லல. நான் உன்னை எவ்ளோ லவ் பன்றேன்னு புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.கொஞ்சமாவது என்னோட லவ்வ பீல் பண்ணு.அதைத்தான் நான் கேக்குறேன்.அப்பறம் லவ் பன்றேன்னு சொல்லிட்டு பிரெண்டா பழகுறதுலாம் எனக்கு பிடிக்காதுனு சொன்னான் கார்த்திக்.
லவ் பன்றேன் லவ் பன்றேன்னு சொல்றியே எனக்காக அப்படி என்ன பண்ணிருக்க சொல்லு.சும்மா லவ் பன்றேன்னு சொல்லிட்டு இருக்கன்னு ராஜி கோவமாக கேட்டாள்.
உனக்காக கை அறுத்துகிடுறது, அப்பறம் பக்கம் பக்கமா கவிதை எழுதுறது,அப்பறம் பூவே உனக்காக விஜய் மாதிரி ஒரு செடி ஒரு பிளவர்னு பேசுறது,அப்பறம் உன்னை இம்ப்ரெஸ் பண்ணறதுக்காக உன் முன்னாடி நல்லவனா நடிக்கிறது இப்படிலா பண்ணினாத்தான் உனக்கு லவ் வருமா.சாரிமா.நான் அந்த மாதிரி கிடையாது.நான் விரல் சப்பிக்கிட்டு இருந்த வயசுல இருந்து உன்னை லவ் பன்றேன்.நீ பண்ணின எல்லாத்தையும் நான் ரசிச்சிருக்கேன்.உன் அழகை பாத்து நான் ஒன்னும் லவ் பண்ணலை.உன் கேரெக்ட்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.என்ன பொறுத்த வரைக்கும் லவ் இம்ப்ரெஸ் பன்னி வரது இல்லை.ஒருத்தங்களோட கேரக்டர் வச்சி வரது.எனக்கு பிடிச்சிருந்தது நான் லவ் பன்றேன்.உனக்கு பிடிக்கலைன்னா நீ அப்படியே இருந்துக்கோ.பட் என்ன லவ் பண்ணகூடாதுனு நீ சொல்லாத ஓகேன்னு சொன்னான் கார்த்திக்.
சரி பட் உன்னால எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உன்னை மாட்டி விடுவேன் பத்துக்கோன்னு சொன்னால் ராஜி.
எல்லா பொண்ணுங்களும் இதை தான பண்ணுவீங்க.சொல்லிக்கோ அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.அப்பறம்ன்னு கேட்டான் கார்த்திக்.
நீதான் சொல்லணும்.உனக்கு ஏன் என்ன புடிச்சிருக்கு கார்த்திக்ன்னு கேட்டால் ராஜி.
எப்படி சொல்ல.ம்ம்ம்ம்ம்.சின்ன வயசுல இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்பா.நம்ம சின்ன வயசுல பழகினது எல்லாம் உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல.உன்னோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ்,அப்பறம் நீ ஒரு மாதிரி அடி குரல்ல பேசுறது,அப்பறம் கேவலமா ஒரு லுக் விடுவியே.அதுக்கே நான் காலி ஆகிடுவேன்.உன் முகத்துல அப்பப்ப வர பரு,எல்லாரும் சுடி ஷால்ல கழுத்த சுத்தி தான் போடுவாங்க.ஆனா நீ க்ராஸ்ஸா போடுவ.அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனையோ தடவ நான் உன்னை வம்புக்கு இழுத்துருக்கேன்.அப்பல்லாம் நீ பதிலுக்கு மல்லுக்கு நிக்காம போ லூசுன்னு அடிக்குரல்ல சிணுங்குவ.சூப்பரா இருக்கும்.அதுக்காகவே உன்னை வம்புக்கு இழுக்கலாம்னு தோணும்.நீ என் பக்கத்துல இருந்தாலே என்னோட ஹார்ட் பீட் 1000 தடவ இருக்கும்.ஒரு தடவ நான் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன்.அப்ப பவர் கட்.இருட்டா இருந்துச்சு.கைல ஒரு கேண்டில் ஓட நீ வந்து வீட்டுல விளக்கு ஏத்தின.அப்ப அந்த கேண்டில் வெளிச்சத்துல உன் முகத்தை பாக்கணுமே.சான்சே இல்ல ராஜி.ஏஞ்செல்ஸ் எல்லாம் நான் கதைகள்ல தான் படிச்சருக்கேன்.அன்னைக்கு முதல் முறையை உன் முகத்துல பாத்தேன்.அதனால தான் சொல்றேன் ராஜி ஐ லவ் யூன்னு சொன்னான் கார்த்திக்.
அட பாவி எனக்கே தெரியாம என்ன நல்ல சைட் அடிச்சுருக்க அப்படித்தான என்றால் ராஜி.
சைட் அடிக்கல ராஜி லவ் பண்ணேன்ன்னு சொன்னான் கார்த்திக்.சரி நான்தான் உனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரியுதுல அப்ப ஏன் என்ன நினைச்சுட்டு இருக்கன்னு கேட்டாள் ராஜி.யாரு சொன்னா ராஜி எனக்கு என்னோட லவ் மேல நம்பிக்கை இருக்கு.கண்டிப்பா நீயும் என்ன லவ் பண்ணுவன்னு சொன்னான் கார்த்திக்.
ஹாஹாஹா அப்படி கண்டிப்பா நடக்காது பாக்கலாம்.நான் வைக்கிறேன் குட் நைட் சொல்லி விட்டு போனை துண்டித்தாள்.
அடி பேதை பெண்ணே கண்டிப்பா நீ தான் என்னோட கண்மணி.இப்படி பேசும்போது கூட உன்னை எனக்கு பிடிக்குதே.நான் என்ன செய்ய.என்று மனதிற்குள் சொல்லி கொண்டு உறங்கி போனான்.
மறுநாள் அவன் ஆஃபீஸ் சென்று வேலை பார்த்து கொண்டிருந்த போது அவனுடைய அப்பாவிடம் இருந்து போன் வந்தது.என்ன என்று கேட்ட போது தாத்தா இறந்து விட்டதாகவும் நீ உடனே கிளம்பி வருமாறும் சொன்னார்.
இதை கேட்ட கார்த்திக்கிற்கு சந்தோசமாகவும்,வருத்தமாகவும் இருந்தது.ஒரு பக்கம் ராஜியை பார்க்க போகிறோம்.அவளுடன் 1 வாரத்துக்கு மேல் இருக்க போகிறோம் என்று சந்தோசமாகவும்,மற்றொரு பக்கம் தாத்தா இறந்த துக்கமும் இருந்தது.உடனே ஆஃபீஸ்ல் தகவல் சொல்லிவிட்டு ட்ரெயின் ஏறி ஊருக்கு புறப்பட்டான் கார்த்திக்.அன்று இரவு முழுவதும் ராஜியின் நினைவுகளில் செல்ல மறுநாள் அவன் ஊருக்கு வந்து இறங்கியதும் அவனுடைய கண்கள் ராஜியை தேடி அலைய ஆரம்பித்தது.
அவன் வீட்டுக்குள் சென்றதும் தாத்தாவை பார்த்து மாலை போட்டுவிட்டு பாட்டிக்கு சென்று ஆறுதல் கூறினான்.பின் சென்று ட்ரெஸ் மாற்ற செல்ல அதற்கு முன் ராஜியை தேடினான்.அவள் எங்கும் இல்லை.ஒரு வேலை வரவில்லையோ என்று எண்ணிக்கொண்டு நேராக அவன் தங்கையிடம் சென்று யார் எல்லாம் வந்துருக்காங்க ஒருத்தரும் காணோம் என்றான்.
அதற்கு அவன் தங்கை எல்லாரும் வந்திருக்காங்க.ப்ரியா மட்டும் வரவில்லை.அவளுக்கு எக்ஸாம் இருக்குதாம்.அவள் மூன்று நாள் கழித்து தான் வருவாள் என்றாள்.அவளை யார் கேட்டால் அவள் வராமல் இருப்பது தான் நல்லது என்று எண்ணிக்கொண்டு எங்க இருக்காங்க எல்லாரும் என்று கேட்டான்.சித்தி வீட்ல இருக்காங்கனு சொன்னால் அவன் தங்கை.
உடனடியாக ட்ரெஸ் மாற்றி விட்டு வெளியே வரும்போது அவனுடைய மாமா எல்லோரும் வந்து ஒவ்வொரு வேலையாக செய்ய சொல்ல அதை நண்பர்களிடம் ஒப்படைத்தான்.
ஒருவழியாக வேலையை முடித்து விட்டு ராஜியை பார்த்தான்.நீண்ட நாட்கள் கழித்து ராஜியை பார்த்து விட்டான்.அவள் குடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தாள்.அவனை கடந்து செல்லும்போது அவனை பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு நகர்ந்து சென்றான்.
பின்ட அடக்கத்துக்கு தயாராக கூட்டம் சேர்ந்து விட்டது.பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் அழுது கொண்டிருந்தனர்.ராஜி அவர்களுடன் சென்று நின்று கொண்டாள்.மகன் மற்றும் பேரன்கள் தாத்தா பக்கத்தில் நின்று கொண்டிருக்க கார்த்திக் கண் இமைக்காமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்.கார்த்திக் பார்ப்பதை ராஜியும் பார்த்து விட்டாள்.ஆனால் அவளுக்கு அது ஒரு மாதிரியாக தோன்ற அவனை பார்க்காமல் இருப்பாள்.ஆனால் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் கார்த்திக் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
பின்பு தகனம் முடிந்து ஆண்கள் அனைவரும் வீடு திரும்பினர்.அன்று குடும்பத்துடன் ஒன்றாக அனைவரும் பேசி கொண்டிருக்க ராஜி ரமேஷிற்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தாள்.கார்த்திக் அவள் பிரெண்டிற்கு தான் மெசேஜ் செய்கிறாள் என்று எண்ணிக்கொண்டான்.
அவளிடம் தனிமையில் பேசுவதற்கு அவனுக்குஸ் சந்தர்ப்பம் அமையவே இல்லை.அவளுடன் எப்போதும் அவன் தங்கை ஒட்டிக்கொண்டிருந்தாள்.பொதுவாக அவளிடம் பேசுவது போல் பேசுவான்.
இருவரும் எதிரெதிரே இருக்கும் போது கூட அவளுக்கு மெசேஜ் செய்வான்.அப்போது தான் அவனிடம் கேட்டால் ராஜி ஏன் என்ன காலைல அப்படி பாத்துட்டே இருக்கனு.
அப்ப நான் பாத்தது உனக்கும் தெரிஞ்சுட்டா.உனக்கே தெரியுதுல ஒவ்வொரு மைக்ரோ செக்கண்டும் உன்னைத்தான் பாத்தேன்னு.அப்பறம் எதுக்கு கேக்குறான்னு பதில் அனுப்பினான் கார்த்திக்
நீ என்னைய பாக்குறது எனக்கு ஒரு மாதிரி இருக்குது அதான் சொன்னேன் லூசுன்னு பதில் அனுப்பினாள் ராஜி.பின் அனைவரும் தூங்க சென்றனர்.மறுநாள் அனைவரும் எழுந்த பின் குழந்தைகள் அனைவரும் விளையாடி கொண்டிருந்தனர்.பின் காலை சாப்பாடை பெண்கள் பரிமாற கார்த்திக் ராஜியை வேண்டும்ர் என்றே கூப்பிட்டு அது வேண்டும் இது வேண்டும் என்று வம்பிழுத்தான்.
சாப்பிட்டு முடித்த பின் 1 மணி நேரம் கழித்து அவனுடைய மாமா அவனை அழைத்து சரக்கடிக்க கூப்பிட்டனர்.சரி என்று அவனும் 3 பீர் அடித்தான்.வீட்டுக்கு வந்த உடன் மதியம் ஆகி இருந்த்தது.அவனது அத்தை பசங்க அவன்கிட்ட இருந்து பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் சரக்கடித்திருப்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
அவர்களிடம் சொல்லதே என்று சைகையால் சொல்லி விட்டு அமைதியாக இருந்தான் கார்த்திக்.மதியம் அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.அப்போது மீண்டும் கார்த்திக் ராஜியை வம்பிற்கு இழுத்தான்.அவனுக்கு அவளை டீஸ் செய்வது பிடித்திருந்தது.
அன்று இரவு அனைவரும் கோவிலுக்கு சென்று வந்த பிறகு கார்த்திக்கிடம் ராஜி டிரீட் கேட்டாள்.சரி என்ன வேண்டும் என்று கேட்டான் கார்த்திக்.மாமாக்கு மட்டும் தான் சரக்கு வாங்கி கொடுப்பியா எங்களுக்கும் பீர் வேண்டும் என்று கேட்டாள் ராஜி.
ஹேய் அவங்களுக்கு யாரு வாங்கி கொடுத்தா.நான் வாங்கி கொடுக்கலைன்னு சொன்னான் கார்த்திக்.
அதான் மதியம் பார்த்தோமே உங்க லட்சணத்தை.ஓவெரா பீர் அடிச்சருக்க போல இருக்குன்னு கேட்டாள் ராஜி.
அப்படிலா இல்லை மூணே பீர் தான்னு சொன்னான் கார்த்திக்.
அடப்பாவி மூணு பீரா.ஏன் இப்படி சாப்பிடற.ப்ளீஸ் இனிமே இதெல்லாம் சாப்பிடாதன்னு சொன்னால் ராஜி.
ஓகே.இனிமேல் இப்படி நடக்காதுன்னு சொன்னான் கார்த்திக்.ஹேய் பேச்சுவாக்குல ட்ரீட் மறந்துடாத.எங்க எல்லாத்துக்கும் டின் பீர் வேணும்.அதுவும் இப்பவேன்னு சொன்னால் ராஜி.
சரி என்று சூப்பர் மார்க்கெட் சென்று டின் பீர் வாங்கி வந்து கொடுத்தான்.கார்த்திக் அவன் தங்கை,ராஜி,அத்தை பசங்க எல்லாரும் சேர்ந்து மொட்டை மாடிக்கு சென்று பீர் ஓபன் செய்து ஷேக் செய்து விளையாடினார்கள்.இந்த இரண்டு நாட்களும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களாக கார்த்திக்கிற்கு அமைந்தது.

மறுநாள் கார்த்திக் சென்னை கிளம்புவதாக ஏற்பாடானது.ராஜியை விட்டு போவதற்கு அவனுக்கு மனதே இல்லை.16ம் நாள் காரியத்திற்கு வந்தால் போதும் என்று அவனுடைய அப்பா கூறி விட்டார்.இன்னும் இரண்டு வாரம் ராஜி அங்கு தான் இருப்பாள்.அதனால் அவன் அங்கு இருந்து விடலாம் என்று இருந்தான்.ஆனால் அவன் அப்பா அவனை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டார்.
அவன் சென்னை சென்ற பிறகும் அவள் நினைவாகவே இருந்தான்.தினமும் அவளுக்கு மெசேஜ் செய்வான்.அவளும் கார்த்திக்குடன் பேசுவான்.16ம் நாள் காரியம் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் ராஜிக்கு காலேஜ் அட்மிசன் இருந்ததால் செர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி அவள் மட்டும் ஊருக்கு சென்று விட்டாள்.
அவளை போகாதே.ப்ளீஸ் எனக்காக இருன்னு கார்த்திக் எவ்ளோ சொல்லியும் அவள் கேட்காது சென்று விட்டாள். பின் காரியம் நடந்த அன்று அவளை தவிர அனைவரும் இருக்க கார்த்திக்கு போன முறை இருந்த சந்தோசம் இந்த முறை இல்லை.அன்றைக்கு இரவே அனைவரும் கிளம்பி விட வீடே வெறிச்சோடி இருந்தது.
கார்த்திக்கு எப்போது இங்கு இருந்து கிளம்பலாம் என்று ஆனது.ஒருவழியாக சமாளித்து சென்னை கிளம்பி விட்டான்.இப்படியாக இரண்டு மாதங்கள் சென்றிருக்க ஒரு நாள் அவன் தங்கையிடம் தான் ராஜியை காதலிக்கும் விஷயத்தை சொன்னான்.அதற்கு அவன் தங்கை கார்த்திக் நீ ராஜியை லவ் பண்றது சந்தோசம் தான்.ஆனால் அவள் ரமேஷ்ன்னு ஒரு பையன லவ் பண்ரான்னு சொன்னால் லீலா.
ஹேய் அது அவ சும்மா சொல்றா என் மனசை மாத்துறதுக்காக.அவ யாரையும் லவ் பண்ணலன்னு சொன்னான் கார்த்திக்.
இல்ல கார்த்திக் அவ உண்மைலையே லவ் பண்ரா.என்கிட்ட கூட அவனை காமிச்சிருக்காள்.நான் அவனை நேர்ல பாத்துருக்கேன்.நீ அவளை மறக்குறது தான் நல்லது என்றுஸ் சொன்னாள்.
சரி நான் வைக்கிறேன் அப்பறமா பேசுறேன்னு போனை வைத்தான் கார்த்திக்.
லீலா சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப அவன் மண்டையை குடைய அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.1 வாரம் பைத்தியம் போல திரிந்தான்.ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தான்.
ராஜியின் வீட்டுக்கு அருகில் ஒரு எஞ்சினீர் அவனுக்கு பழக்கம்.அவர் சின்னதாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்து நடத்துகிறார்.அவரிடம் வேலைக்கு சேர்ந்து தினமும் ராஜியை பார்க்கலாம் அவளுடன் பேசலாம்,அந்த ரமேஷை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து வேலையை ரிசைன் செய்தான்.
அடுத்த ஒரு மாதத்தில் கார்த்திக் ராஜியின் ஊரில் வேலைக்கு சேர்ந்தான்.தினமும் அவளை காலேஜ் விட்டு வரும் போது அவளுக்கே தெரியாமல் அவளை பார்ப்பான். அவள் படிப்பது லேடிஸ் காலேஜ்.அவள் காலேஜ் முடிந்து வரும் போது அவளுடைய பிரெண்ட்ஸோடு பேசி கொண்டு செல்வாள்.
அங்கு உள்ள தனது பிரெண்ட்ஸ் மூலம் விசாரித்ததில் அவள் அந்த ஊரில் எவனையும் லவ் பண்ணவில்லை என்று தெரிந்து கொண்டான்.
அடுத்தகட்டமாக அவளுடைய பெரியம்மா பொண்ணு மூலமாக ராஜியின் காலேஜ் பிரண்ட்ஸிடம் விசாரித்ததில் அவள் யாரையும் லவ் பண்ணல.அவள் அடிக்கடி உங்க அண்ணனை பற்றி தான் எங்களிடம் பேசி கொண்டிருப்பாள் என்று சொன்னார்கள்.
இதை அறிந்த கார்த்திக் ரொம்ப சந்தோஷப்பட்டான்.அப்ப அவ மனசுல எங்கோ ஒரு ஓரத்துல நாம இருக்கோம்னு நினைத்துக்கொண்டான்.
No comments:
Post a Comment