சிக்கெனை வைத்து அதை ரசித்து சாப்பிட தொடங்கினான் கார்த்திக்.அவ்வபோதுத ஆஹா,அருமை,சூப்பர்டா கார்த்திக்.பின்னிட்ட போ என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான் கார்த்திக்.
அதை பார்த்த ராஜி எருமை எருமை எப்படி திங்குது பாரு.உடம்பு சரி இல்லாம ஒருத்தி இருக்கானு அக்கறை இல்லாம எப்படி பார்க்க வச்சி திங்குது பாரு. உனக்கு ஒரு நாள் இருக்கு என்று மனதில் நினைத்து கொண்டாள்.
அந்நேரம் பார்த்து கார்த்திக்கிற்கு விக்கல் வர தண்ணீர் எடுக்க அப்போது ராஜியை பார்க்க அவள் அவனை பார்ப்பதை தவிர்த்து தலை குனிந்து சாப்பிடுகிற மாதிரி நடித்தாள்.அவள் உதட்டின் ஓரம் ஒரு குறுஞ்சிறுப்பு தோன்றியதை கார்த்திக் கவனித்து விட்டான்.
யாரும் நான் சாப்பிடுறதை பார்த்து கண்ணு வைக்க வேண்டாம்.வேணும்னா எடுத்து சாப்பிடலாம்.ஆனா டாக்டர் ஹெவி புட் சாப்பிட கூடாதுன்னு சொல்லிருக்காங்க.
ஹலோ நான் ஒன்னும் கண்ணு வைக்கல.நீ கொஞ்சம் மூடிட்டு சாப்பிடுறியா.உனக்கு விக்கல் வந்துச்சுன்னா தண்ணி எடுத்து குடி.அதுக்கு ஏன் என்னைய குறை சொல்ற.
அவன் பதில் பேசாமல் சாப்பிட்டான்.அன்று ராஜிக்கு சீக்கிரமே உடல் சரி ஆகி விட அடுத்து வந்த இரண்டு நாட்கள் இருவரும் பேசாமல் இருந்து கொண்டனர்.
பின் ஒரு நாள் ராஜியிடம் உன்னை அத்தை பார்க்கணும்னு சொன்னாங்க.உடம்பு சரி இல்லனு சொன்னேன்.உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க.போயிட்டு வரலாமான்னு கேட்டான் கார்த்திக்.
லூசு உன்னை யாரு எங்க அம்மாகிட்ட சொல்ல சொன்னா.அவுங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டு இருப்பாங்க.எதுவுமே கேட்டுட்டு செய்ய மாட்டியா.
நான் என்ன பண்ண.போன் பண்ணாங்க.நீ எங்கன்னு கேட்டாங்க.உடம்பு சரி இல்லன்னு சொன்னேன்.நம்ம வீட்ல வேற ஆள் இல்லையா.அதான் உன்னை அங்க கூட்டிட்டு வர சொன்னாங்க.சரி உனக்கு இஷ்டம் இல்லனா விடு.நான் கால் பண்ணி அவளுக்கு வர விருப்பம் இல்லனு சொல்லிடுறேன்.
ஒன்னும் பண்ண வேண்டாம்.அதான் எனக்கு இப்ப.சரி ஆகிடுச்சுல்ல.ஓஹோ நான் இங்க இருக்குறது உனக்கு தொந்தரவா இருக்குன்னு சொல்லு.நான் இங்க இல்லனா தண்ணி அடிக்கலாம்.ஜாலியா இருக்கலாம்னு பிளான் பண்ற அப்படித்தான.


அப்பா செம ஷார்ப் நீ.கிளம்பலாமா.ரெண்டு நாளைக்கு தேவையான டிரஸ் எடுத்து வச்சுக்கோ.
ஹாபன் ஹவர்ல கிளம்பனும்.நான் பிரெஷ் ஆகிவிட்டு வந்துடுறேன்னு சொல்லிவிட்டு குளிக்க சென்றான் கார்த்திக்.
ஹாபன் ஹவர்ல கிளம்பனும்.நான் பிரெஷ் ஆகிவிட்டு வந்துடுறேன்னு சொல்லிவிட்டு குளிக்க சென்றான் கார்த்திக்.
பின் இருவரும் ராஜியின் அம்மா வீட்டுக்கு காரில் சென்றனர்.மாப்பிள்ளையும் பொண்ணும் வருவதை பார்த்த லட்சுமிக்கோ ரொம்ப சந்தோசம்.இருவரையும் வரவேற்று குடிக்க டீ கொடுத்தாள்.
என்ன திடீர்னு ரெண்டு பேரும் வந்துருக்கீங்க.இவள் வேறு துணி எல்லாம் கொண்டு வந்துருக்கா.என்ன ஆச்சு என்று கேட்டாள்.
அது ஒன்னும் இல்லை அத்தை அப்பா அம்மா ரெண்டு பேரும் காசி போயிருக்காங்க.நான் வேற ஆபிஸ் போய்டுவேன்.வீட்ல இவள் மட்டும் தனியா இருப்பா.ரெண்டு நாளைக்கு முன்னாடி இவளுக்கு உடம்பு சரி இல்லை.அதான் அவுங்க வரும்வரைக்கும் ராஜி இங்க இருக்கட்டும்னு தோணுச்சு.ஏன் அவள் இங்க இருக்க கூடாதா.
அப்பா அம்மா காசி போனது எனக்கு தெரியாதுப்பா.அதுவும் இல்லாம இது அவள் பொறந்த வீடு எப்ப வேணும்னாலும் அவள் இங்க வரலாம்.அவள் இல்லாம நீ சாப்பாட்டுக்கு அங்க தனியா என்ன பண்ணுவ
அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன் அத்தை.நீங்க என் பொண்டாட்டிய நல்லா பாத்துக்கோங்க.அது போதும்.
அங்கு நடந்ததெல்லாம் பார்த்து கொண்டிருந்த ராஜிக்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது.அம்மாவுக்கு எந்த விஷயமும் தெரியாது என்று.கார்த்திக் தனக்காகத்தான் எல்லாம் செய்கிறான் என்று உணர்ந்தாள்.
நானும் அதான்மா சொன்னேன்.எனக்கு ஒன்னும் பயம் இல்லை.நான் இருந்துப்பேன்னு.இவன்தான் கேக்க மாட்டேங்குறான்.
ஏய் அது என்ன இவன்,அவன்னு சொல்லிட்டு.அவனை மரியாதையா பேசுடி.சின்ன வயசுல அப்படி கூப்பிட்ட.இப்பவும் அப்படியேவா இருப்ப
அத்தை அவள் அப்படியே கூப்பிடட்டும்.இதுல என்ன இருக்கு.அதுவும் இல்லாம அவ அப்படி கூப்பிடுறதுதான் எனக்கும் பிடிச்சுருக்கு.
சரிப்பா.இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்.முன்னாடி மாதிரி வந்ததும் ஓடிடாத.சரியா என்று சொல்லி விட்டு சமயல் செய்ய துவங்கினாள் லட்சுமி.
கார்த்திக்கை பார்த்த ராஜி என்ன சீன் போட்ரியா.நான் உன்னை கேட்டேனா.எனக்கு இங்க இருக்க பிடிக்கலை எங்க அம்மா வீட்டுல கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்னு
.இப்படி எல்லாம் செஞ்சி என்கிட்டே நெருங்கலாம்னு நினைக்காத.உடம்பு சரி இல்லாம இருந்தேன்.நீ ஹெல்ப் பண்ண.அதுக்கு தேங்ஸ்.
.இப்படி எல்லாம் செஞ்சி என்கிட்டே நெருங்கலாம்னு நினைக்காத.உடம்பு சரி இல்லாம இருந்தேன்.நீ ஹெல்ப் பண்ண.அதுக்கு தேங்ஸ்.
சரி.வேற எதாவது இருக்கா.
எதாவது சொல்லு.கோவப்படு.உன்னை எவ்ளோ இன்சல்ட் பண்றேன்.உனக்கு என்மேல கோவமே வராதா.
ஏன் கோவப்படணும் ராஜி.நான் பண்ணினதுக்கு நான் அனுபவிக்கிறேன்.நீ என்கிட்டே அந்நியோன்யமா பாசமா இருந்தா கூட எனக்கு இவ்ளோ சந்தோசமா இருக்குமான்னு எனக்கு தெரியல.ஆனால் நீ இப்படி சிடு சிடுன்னு பேசுறது,கோவப்படுறது இது தான் எனக்கு சந்தோசமா இருக்கு.இன்னும் உன்கிட்ட இதே மாதிரி நிறைய எதிர் பார்க்கிறேன்.
அப்போது அவனுக்கு போன் வர அதை எடுத்து கொண்டு வெளியே சென்றான் கார்த்திக்.
ரொம்ப அழகா நடிக்கிறான்.இப்படி பேசி பேசியே கவுத்துடுவான்.விழுந்துடாத ராஜி.திரும்பவும் லவ் கிவ்வுன்னு கஷ்டப்படாத என்று அவள் மனம் எச்சரித்தது.அதன் பின்பு சாப்பிட்டுவிட்டு அவன் கிளம்ப போவதற்கு முன் கார்த்திக் தன்னுடைய கிரெடிட் கார்டை எடுத்து ராஜியிடம் கொடுத்து விட்டு சென்றான்.
அவனுடைய கிரெடிட் கார்டை ராஜியிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான் கார்த்திக்.
வரும் வழி எங்கும் அவனுக்கு ராஜியின் நினைவாகவே இருந்தது.அவள் இல்லாத இனி வரும் நாட்களை எவ்வாறு கழிக்க முடியும்.
ச்ச மடையா மடையா.ஏன்டா அவளை கொண்டு போய் விட்டுட்டு வந்த.மெண்டல் மெண்டல்.அவள் இல்லாமல் என்ன செய்ய போற.
அவகூட சண்டை போட்டுட்டு இருந்தால் கூட சந்தோசமா இருக்கும்.அவளே இல்லனா.எனக்கு வேணும்.பெரிய இவனாட்டும் கொண்டு போய் விட தெரிஞ்சுதுல.இப்ப அனுபவி என்று தன்னை தானே கடிந்து கொண்டான்.
இங்கோ ராஜியின் வீட்டில் அவள் மாடியில் உள்ள ரூமில் இருந்து தனியாக யோசித்து கொண்டிருந்தாள்.
அப்போது அவளுடைய தங்கை சக்தி அவள் முதுகில் தொட அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவளாய் திரும்பினாள் ராஜி.
என்ன மேடம் வீட்டுக்காரனை விட்டு இருக்க முடியலையோ.ஒரே சிந்தனையை இருக்கு.
ஆமாடி.அவன் நினைப்பாவே இருக்கு.அங்க தனியா இருந்து பாவம் என்ன கஷ்டப்படுவனோ.
அப்பா புருஷன் மேல எவ்ளோ அக்கறை.முடியல
ஹேய் என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது. நக்க.லா.நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆனா தெரியும் என் பீலிங்.
தான் நடிக்கிறோம்னு எந்த வகையிலும் சக்திக்கு தெரிந்துவிடக்கூடாது என்று தெளிவாக இருந்தாள் ராஜி.அதற்கேற்றார் போல் முகத்தையும் சோகமாக வைத்து கொண்டாள்.
இங்கு வீட்டிற்கு சென்ற கார்த்திக் கதவை திறந்து விட்டு லைட்டை ஆன் செய்தபோது அங்கு சோபாவில் ராஜி கோவமாக அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
வீட்ல பொண்டாட்டிய தனியா விட்டுட்டு எங்க இவ்ளோ நேரம் ஊர் சுத்திட்டு வர.நீயெல்லாம் எப்படித்தான் லவ் பண்ணினியோ.
ஹே இப்பதான் உன்ன உங்க வீட்ல விட்டுட்டு வந்தேன்.அதுக்குள்ள நீ இங்க எப்படி.
என்ன விரட்டி விடுறதுலையே குறியா இரு.போடா உனக்கெல்லாம் நான் செட்டே ஆகமாட்டேன்.போடா என்று சொல்லிவிட்டு கிட்சன் பக்கம் சென்றாள் ராஜி.
ஹேய் ராஜி நில்லு.ஐ ஆம் சாரி.ஒரு நிமிஷம் நில்லு.ப்ளீஸ் என்று ஓடிச்சென்ற கார்த்திக் அவள் கைகளை பிடிக்க அவன் கைகள் காற்றில் பறந்து விழுந்தது.
அவன் கண்களை கசக்கி கொண்டு பார்க்க அங்கு யாரும் இல்லை.டைனிங் டேபிளில் இருந்து அவன் யோசிக்க தொடங்கினான்.அது பிரம்மை என்று தெரிய சில வினாடிகளே தேவை பட்டது.
நிஜமாவே நீ கார்த்திக்கை லவ் பண்றியா அக்கா
இது என்னடி புதுசா கேக்குற.அவன் என் புருஷண்டி.அவனை லவ் பண்ணாம வேற யாரை நான் லவ் பண்ண போறேன்.
இல்லக்கா நீ இன்னும் அந்த ரமேஷ லவ் பண்றியோன்னு சின்ன சந்தேகம்.அதான் கேட்டேன்.
லூசாடி நீ.அவனுக்கு எப்போ கல்யாணம் ஆச்சோ அப்பவே நான் அவனை மறந்துட்டேன்.அப்பறம் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.இப்ப போய் நான் இன்னொருத்தன மனசுல நினைச்சுட்டு இருந்தா அது எவ்ளோ பெரிய கேவலம்.
அப்ப ஏன் நீயும் கார்த்திக்கும் வீட்டுக்கு வந்த உடனே அம்மா கிச்சன் உள்ள போனதுக்கு அப்பறம் சண்டை போட்டிங்க.
நாங்க எப்படி சண்டை போட்டோம்.சும்மா தேவை இல்லாம உலராத.
நாங்க ரெண்டு பெரும் பேசுனது இவளுக்கு எப்படி தெரியும்.சரி எதுவா இருந்தாலும் சமாளிப்போம் என்று எண்ணினாள் ராஜி.
அக்கா நான் உளறலை.நீதான் ஏதோ மறைக்கிற.நீங்க ரெண்டு பேரும் பேசினதல் நான் கேட்டேன்.மறைக்காம சொல்லு உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை.
ஏய் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது.
சரி என்கிட்ட சொல்ல வேண்டாம்.அம்மாகிட்ட சொல்லு.நான் அம்மாகிட்ட உங்க ரெண்டு பேருக்கும் எதோ பிரச்சனையாம் அதான் கார்த்திக் உன்னை இங்க விட்டுட்டு போறான்னு சொல்லிடுறேன்.நீ அம்மாகிட்ட பேசிக்கோ
ஏய் லூசு.அப்படி எதுவும் பன்னி தொலைச்சிடாதடி.எங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல.என்ன கொஞ்ச நேரம் தனியா விடுறியா.ப்ளீஸ்
அப்ப என்ன பிரச்சனைனு சொல்லு.
ஒரு தடவை சொன்னா புரியாது உனக்கு.போடி.
நீ சரிபட்டு வரமாட்ட.அம்ம்ம்ம்ம்ம்மா.
ஹேய் கூப்பிடாத.சொல்லி தொலைக்கிறேன்.என்று அவள் வாயை பொத்தினாள் ராஜி.
யாரிடமாவது மனசுவிட்டு பேசினாள் நல்லா இருக்கும்.அதை இவளிடமே இப்போதைக்கு சொல்லி விடலாம் என்று ராஜிக்கு தோன்றியது.
சொல்லு
மௌனமாக இருந்த ராஜியின் கண்களில் நீர் சுரக்க தொடங்கியது.
அக்கா.சொலுக்க்க்க்க்க் என்று அவளை திருப்பிய ஷக்தி அவள் அழுவதை கண்டு ஏன்க்கா அழகுற என்று கேட்டாள்.
அவள் மார்பில் சாய்ந்து மேலும் விசும்பி விசும்பி அழுக ஆரம்பித்தாள்.
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பிரெண்ட்ஸை பார்க்க சென்றான் கார்த்திக்.அப்படியாவது மனதுக்கு கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று.ஆனால் அங்கும் அவன் மனம் ராஜியையே சுற்றி வந்தது.
இதற்கு ஒரே வழி சரக்குதான் என்று முடிவெடுத்து கடைக்கு சென்று பீர் வாங்கிக்கொண்டான்.
பின் வீட்டிற்கு சென்று ஓபன் செய்து வாயில் வைக்கும் முன் ஆரம்பிச்சிட்டியா.ஒருநாள் வீட்டில் இல்லனா குடிக்க ஆரம்பிச்சிடுவியா.குடிகாராகுடிகாரா என்று ராஜி சொன்னாள்.
டேபிளுக்கு அருகில் கைகளை கட்டிக்கொண்டு கோவமாக அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால் ராஜி.
இல்லை இல்லை.உன்னை விட்டுட்டு வந்ததுல இருந்து உன் நியாபகமாவே இருக்குது.எங்க பாத்தாலும் நீதான் தெரியுற.அதான் லைட்டா பீர் சாப்பிடலாம்னு.நீ வந்துட்டல்ல இப்பவே கீழ ஊத்திடுறேன்.
எனக்காக ஒன்னும் ஊத்த வேணாம்.குடிக்கணும்னா குடிச்சு தொலை.
இப்ப பாரு ஒன் sec.வேகமாக சென்று அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கை கழுவிக்கொண்டு எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சிட்டேன் போதுமா.ஹாப்பியா.என்று சொல்லிக்கொண்டே வர அங்கு யாரும் இல்லை.
அஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்று தலையை பிடித்துக்கொண்டு சோபாபில் விழுந்தான் கார்த்திக்.
ராஜி அழுது முடிக்கும் வரை அவள் தலையை கோதி விட்டு அவளை சமாதானம் செய்தாள் ஷக்தி.
பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு தலையை நிமிர்த்திய ராஜியை பார்த்து அக்கா என்னக்கா ஆச்சு.ஏன் இப்படி அழகுற.
எனக்கு வாழவே பிடிக்கலடி.
அக்கா என்னக்கா சொல்ற.கார்த்திக் உன்ன சந்தோசமா தான வச்சிருக்கான்.
எனக்கு அவன்கூட இருக்கவே பிடிக்கல.ஏன் அவனையே பிடிக்கல
அக்கா என்ன சொல்ற நீ.
ஆமாம்.அவனை நான் எப்போதுமே ஹாஸ்பேன்டா நினைச்சு பாத்ததே இல்லடி.அவன்கூட இருக்கும் போதெல்லாம் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் நியாபகத்துக்கு வருது.
அக்கா என்ன சொல்ற.அவன் உனக்கு துரோகம் செஞ்சானா.
நான் ரமேஷை லவ் பண்ணும்போது எங்க ரெண்டு பேரையும் பிரிச்சது அவன்தான்.அக்கா கிட்ட எங்க ரெண்டு பேரையும் போட்டு கொடுத்தான்.அப்புறம் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு நான் அவன்கிட்ட சொல்லி அவன்கிட்ட கேட்டேன்.

அந்த நேரம் உனக்கு விருப்பம் இல்லனா இந்த கல்யாணம் நடக்காது.இதை நிறுத்த வேண்டியது என் பொறுப்புன்னு சொன்னான்.ஆனால் அப்பவும் என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான்
நீ கல்யாணம் பிடிக்கலைன்னா அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே.அத விட்டுட்டு ஏன் கார்த்திக் கிட்ட சொன்ன
எப்படிடி சொல்ல முடியும்.நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நா இன்னும் ரமேஷதான் மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு அம்மா என்ன நினைக்க மாட்டாங்க.அதான் கார்த்திக் கிட்ட கேட்டேன்.
எல்லாம் இருக்கட்டும் இதெல்லாம் கார்த்திக் தான் பண்ணினானு நீ எதவச்சி சொல்ற.
அவன்தானே நான் ரமேஷ லவ் பன்றேன்னு தெரிஞ்சும் என்ன லவ் பண்ணான்.நான் அவனுக்கு கிடைக்கணும்.அவன் ஆசை பட்டது நடக்கணும்.அதுக்கு தான இதெல்லாம் செஞ்சான்.
அப்படி நீ நினைச்சா அது உன்னோட முட்டாள்தனம்.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியாம நீயா ஒன்ன கற்பனை பண்ணிக்கிட்டு அதுதான் நிஜம்னும் நினைச்சுட்டு இப்ப உன் வாழ்க்கையே நாசமாகிட்டு இருக்க.
என்னடி சொல்ற.
ஆமா.என்னைக்காவது நீ அவனை புரிஞ்சிக்கிடனும்.அவனை பத்தி தெரிஞ்சுக்கிடணும்னு ட்ரை பண்ணிருக்கியா.
இப்ப எதுக்கு நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற.
இப்பவும் நீ லூசு மாதிரி பேசுற.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா. . . . . . .
என்ன நடந்துச்சுன்னு சொன்னா உனக்கு புரியவா போகுது விடு.ஆரம்பத்துல எனக்கும் கோவமாத்தான் இருந்துச்சு.அவன் லவ் பண்ணறேன்னு சொன்னப்ப எல்லாம் பிரியவைதான் லவ் பண்ணிட்டு இருக்கான்னு நானும் அவளும் நினைச்சோம்.அப்பகூட அவன்மேல எனக்கு கோவம் இல்ல.உன்ன லவ் பண்ணறேன்னு சொன்னப்ப தான் எனக்கு பயங்கர கோவம் வந்துச்சு.அவன்கூட பேசாம கூட இருந்தேன்.ஆனா இப்ப உன்ன ரொம்ப லவ் பண்ரான்னு எனக்கு தோணுது.அவன்மேல் எனக்கு எந்த கோவமும் இல்லை.நீ புரிஞ்சிக்கோ அக்கா.
நான் யாரையும் புரிஞ்சிக்க வேண்டாம் சக்தி.நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனாவே இருக்கட்டும்.ஆனால் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம.அவ வேண்டாம்னு சொல்லியும் அவ கழுத்துல தாலி கட்டினவன என்ன செய்ய சொல்ற.
இந்த நேரடி கேள்வியில் சற்று நிலை தடுமாறித்தான் போனாள் சக்தி.ஆனால் அவளுடைய கோவத்திற்கு காரணம் வெளிப்பட்டு விட்டது.
அது மட்டும் தான் அவன் செஞ்ச பெரிய தப்பு.அதுக்கு பதில் அவனுக்கு தான் தெரியும்.அவனுக்கு மட்டும் தான் தெரியும்.அதுக்கு நீ அவன்கிட்ட மனசு விட்டு பேசினாத்தான் பதில் கிடைக்கும்.இல்லனா இந்த விஷயத்தை நான் அம்மாகிட்ட சொல்றத தவிர எனக்கு வேறு வழி தெரியல.
ஹேய் லூசு மாதிரி பண்ணாத.அம்மாக்கும்,வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது.நீ யாருகிட்டயும் இதை பத்தி சொல்லாத.எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்.
நல்ல யோசி.நீ இங்க இருந்து போறதுக்குள்ள ஒரு நல்ல பதிலா சொல்லு.இல்ல அம்மாகிட்டதான் சொல்லுவேன்
சரி.நீ இப்ப கிளம்பு.எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு.நான் கொஞ்சம் தூங்கணும்.
சரி அக்கா.நீ ரெஸ்ட் எடு அப்புறமா பேசலாம்.
ஹே ஹே ஒரு நிமிஷம் ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்ட போல.எனக்கே அட்வைஸ்லாம் பண்ற சக்தி.
ஹலோ அப்படிலாம் ஒன்னும் இல்ல.என் அத்தானுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப்.அவ்ளோதான்
அப்ப நீ அக்காவுக்காக பேசல.
அப்படில இல்ல.ரெண்டு பேருக்காகவும் தான்.தூங்குக்கா.அப்பறம் பேசலாம்.என்று ராஜியின் நெற்றியில் முத்தமிட்டு சென்றாள் சக்தி.
சக்தி சென்றவுடன் ராஜிக்கு திரும்ப திரும்ப அந்த வார்த்தை ஓளித்தது.அத்தானுக்காக அத்தானுக்காக.
பெட்டில் படுத்த ராஜிக்கு சிந்தனை மொத்தமும் கார்த்திக் பற்றியே இருந்தது.
இன்னைக்கு சக்தி பேசினதை வச்சி பார்க்கும் போது எல்லா விஷயமும் அவளுக்கு தெரிஞ்சிருக்கு.கார்த்திக் தான் எல்லாத்தையும் அவகிட்ட சொல்லி என் மனச மாத்த ட்ரை பன்றானோ என்று தப்பு கணக்கு போட்டாள்.
பொதுவாக ஒரு மனுஷனுக்கு ரெண்டு மனசு இருக்கும்.ஒன்னு எப்போதும் நல்லதையே யோசிக்கிற,பாஸிட்டிவா பேசுற மனசு.அது எப்போதும் இதயத்துக்கு பக்கத்துல இடது பக்கம் இருக்கும்.
இன்னொன்னு இதயத்துக்கு எதிர் பக்கத்துல நுரையீரல் பக்கத்துல இருக்கும்.இதயத்தை விட்டு தள்ளி இருக்குறதால என்னவோ அது எப்போதும் தப்பாவே நினைக்கும்,நெகடிவ்ஆன விஷயங்களையே சொல்லும்.
ஆனா நம்ம புத்தி அந்த நெகட்டிவ்ஆன மனசையே நம்பும்.அது சொல்ற படி தான் நடக்கும்.ஏன்னா அது சொல்றது ரொம்ப ஈஸியா இருக்கும்.சுலபமாவும் இருக்கும்.
வலது பக்கம் இருக்க மனசு சொல்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.ஆனால் அது கண்டிப்பா நல்லதுல போய்த்தான் முடியும்.
உதாரணத்துக்கு நீங்க ட்ரிங்க்ஸ் பண்றிங்கன்னு வைங்க.அது ரொம்ப ஹெல்த்தை பாதிக்கும்னு நமக்கு தெரியும்.உங்க நல்ல மனசு வேண்டாம்.இனி குடிக்க கூடாது.இதை குடிக்கிறதுக்கு பதிலா இந்த காசை வேற எதுக்காவதுஸ் செலவழிக்கலாம்னு சொல்லும்.
ஆனா அந்த கெட்ட மனசு அதுக்கான அல்டெர்னட்டா யோசிக்கும்.இந்த ஒரு தடவை மட்டும்,இந்த வருஷத்தோட நிறுத்திக்கலாம்.இப்படியான சாதகமான பதிலை சொல்லும்.
ராஜியும் இப்படிதான் இரு மனதிடமும் போராடி கொண்டிருந்தாள்.இறுதியில் இது கார்த்திக்கின் வேலை தான் என்று உறுதியாக நம்பினாள்.
அன்று நல்லவநாட்டும் பேசிட்டு இன்னைக்கு என் தங்கச்சியவே தூது அனுப்பிரியா.உன்னை கடைசி வரைக்கும் நான் நம்ப மாட்டேன் என்று மனதிடம் சொன்னாள்.
இதற்கு ஒரேஒரேய வழி இப்போதைக்கு இதை சமாளிக்க கார்த்திக்கை புரிஞ்சிக்கிட்டதாகவும் இனிமேல் ரெண்டு பேருக்கு நடுவுல எந்த பிரச்சனையும் வராதுன்னும் சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.மீதியை அங்கு சென்று பார்த்துக்கலாம் என்று முடிவெடுத்தாள்.
ஆனால் இதை உடனே சொன்னால் அவளுக்கு சந்தேகம் வரும்.அதனால ரெண்டு நாள் ஆறப்போட்டு அவளிடம் இதை சொல்லலாம்.அதுவரைக்கும் அவளாக கேட்கும் வரை இதை பற்றி அவளிடம் பேசக்கூடாது என்று எண்ணிகொண்டே தூங்கியும் போனாள்.
இங்கு ராஜியின் நினைவுகளில் தூங்கி போன கார்த்திக் முழிப்பு வந்து எழுந்த போது இரவாகி போனது.மீண்டும் ராஜியின் நினைவுகள் வந்து பாடாய்படுத்த நீண்ட நாட்களுக்கு பின் டைரி எழுத வேண்டும் போல் தோன்றியது.
உடனே மறைத்து வைத்திருந்த டைரியை எடுத்து தனது காதலை டைரியில் செதுக்க தொடங்கினான்.
எழுதி முடித்த பின் பசி வயிற்றை கிள்ள சாப்பிடலாம் என்று தம்பிக்கு போன் செய்து சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட்டான்.
மகேஷ்ஸ் சென்ற உடன் மீண்டும் தனிமை வாட்ட செல்லில் ஹெட் போனை கனெக்ட் செய்து ஹலோ எப்.ம் ஐ டியூன் செய்தான்.
டைரி ப்ரோக்ராம் அப்போது தான் ஆரம்பித்திருந்தது.ஆர்ஜே மணிகண்டனின் மயக்கும் குரலும் அதில் அவர் சொல்லும் முகம் தெரியா மனிதரின் கடிதமும் மனதை இலகுவாக்க ஒரு இளையராஜா பாடல் வந்தது.
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே…
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே….
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே…
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே….
அப்படியே அந்த பாடல் தந்த சுகத்திலையே தூங்கியும் போனான்.
வீட்டில் நன்றாகிய தூங்கிய ராஜி தங்கை வந்து எழுப்பிய போது தான் எழுந்தாள்.இரவு முழுவதும் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசிவிட்டு சாப்பிட செல்லும்போது தான் கார்த்திக் சாப்பிட்டாணா இல்லையா என்று குழம்பினாள்.
உடனே சாப்பிட்டுவிட்டு மகேஷின் அம்மாவிற்கு போன் செய்து தான் அம்மா வீட்டிற்கு வந்ததையும் இன்னும் சில நாட்களுக்கு கார்த்திக்குக்கும் சேர்த்து சாப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டாள்.
இதை பார்த்து கொண்டிருந்த சக்திக்கு அக்காவின் இந்த மாற்றம் சிறிது சந்தோசத்தை கொடுத்தது.
என்ன அக்கா.வர வர பாசம் ரொம்ப பொங்குது.போகுற போக்க பார்த்தால் இன்னும் 10 மாசத்துல என்ன சித்தி ஆகிடுவ போல.
அவள் கூறிய வார்த்தையின் அர்த்தம் புரிய சில நேரம் ஆனதும் யேய் உன்ன என்று அடிக்க கை ஒங்க சக்தி வயிறை பிடித்துக்கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.
பின் சிறிது நேரம் கழித்து சக்தி தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு தூங்க சென்றாள்.அம்மாவும் மகளும் இருந்து டிவி பார்த்து கொண்டிருக்க தாய் தன் மகளிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.
உன்னை கேக்காம கார்த்திக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைச்சதுல என்மேல வருத்தம் ஒன்னும் இல்லையேமா.நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாகதான இருக்கீங்க.
தாயின் இந்த வார்த்தை வயிற்றில் புளியை கரைக்க ஒருவேளை சக்தி அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிட்டாலோ என்று எண்ணிக்கொண்டு சரி எதுவா இருந்தாலும் நாமளா வார்த்தையை விட்டுட கூடாது என்று முடிந்த வரை முகத்தை இயல்பாக்கி கொண்டு
அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா.கார்த்தி என்ன நல்ல பார்த்துகிடுரான்மா.நாங்க நல்லாத்தான் இருக்கோம்.
இல்லடி.உங்க அத்தையும் மாமாவும் நீங்க சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருப்பிங்கனு தான் அவுங்க கோவில் குளம்னு போயிருக்காங்க.நீங்க என்னடான்னு இப்படி இருக்கீங்கலே அதான் கேட்டேன்.

அப்பாடா அம்மாக்கு எந்த விஷயமும் தெரியாது என்று அம்மாவின் பேச்சில் இருந்து புரிந்துகொண்ட ராஜி வராத வெட்கத்தை வரவழைத்துக்கொண்டு அதெல்லாம் நைட் சந்தோசமாதான்ம இருக்கோம்.
மகளின் முகத்தை பார்த்து சந்தோஷமான தாய் சரிம்மா ரொம்ப நேரமா டிவி பார்க்காம சீக்கிரம் படுத்து தூங்குமா.
அப்பறம் உனக்கு கல்யாணம் முடிஞ்சிட்டு.இனிமேல் கார்த்தியை நீங்க.போங்கன்னு மரியாதையா பேசு.இல்லனா பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க.
ம்ம்ம்ம் சரிம்மா.நீண்டதாக ஒரு பெரு மூச்சை விட்ட ராஜி இங்கு ரொம்ப நாள் இருந்தோம்னா கண்டிப்பாஎ அம்மா கண்டுபிடிச்சிடுவாங்க.அதனாலஸ் சீக்கிரமா இங்க இருந்து கிளம்பிடனும் என்று நினைத்து கொண்டாள்.
இப்படியாக சில நாட்கள் செல்ல ராஜி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.இடையில டைம் கிடைக்கும் போதெல்லாம்ர்
ராஜிக்கும்ஸ்
சக்திக்கும் போன் செய்து பேசிக்கொண்டான்.
கார்த்திக்கிற்கு ராஜி இல்லாத குறையை டைரியின் மூலம் தீர்த்து கொண்டான்.
ராஜிக்கும்ஸ்
சக்திக்கும் போன் செய்து பேசிக்கொண்டான்.
கார்த்திக்கிற்கு ராஜி இல்லாத குறையை டைரியின் மூலம் தீர்த்து கொண்டான்.
அன்று ராஜி தனது ஸ்கூல் பிரென்ட் கஸ்தூரியை பார்க்க செல்வதாக சொன்னாள்.ராஜி வந்திருப்பதை அறிந்த கஸ்தூரி அவளை தனது வீட்டிற்கு அழைத்திருந்தாள்.சரி போயிட்டு வாம்மா என்று அம்மா சொல்ல இருவரும் கஸ்தூரியின் ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார்கள்.
அங்கு சென்ற உடன் இருவரும் தங்களது பள்ளி காலத்து கதைகளை பேசிவிட்டு இருவரின் குடும்பவ விஷயங்களில் வந்து முடிந்தது.
ராஜி தனது கதையை சொல்லி அவளிடம் அழ கஸ்தூரிக்குத்தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ராஜியும் ரமேஷும் லவ் பண்ணும்போது கூட இருந்தவள் ஆச்சே.ஆனால் கார்த்திக் பற்றியும் அவளுக்கு நன்றாக தெரியும்.ஒருமுறை அவனுடன் போனில் பேசியிருக்கிறாள்.
ராஜியை சமாதான படுத்திய கஸ்தூரி அழாத ராஜிம்மா.ப்ளீஸ்.எல்லாம் நல்லதுக்குதான்.கார்த்திக்கை பார்த்தால் நல்லவராதான் தெரியுது.நீ கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு.அவர்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு நீ பேசினா எல்லாம் சரி ஆகிடும்.சரியா என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு டீ போட சென்றாள்.
பின் இருவரும் கஸ்தூரியின் குழந்தையிடம் கொஞ்சிவிட்டு ராஜி தனது வீட்டிற்கு வந்தாள்.ஏனோ இப்போது ராஜியின் மனம் தெளிவான நீரோடை போல இருந்தது.
முதல் வேலையாக சக்தியிடம் சென்று நான் கார்த்திக்கை பத்தி புரிஞ்சிக்கிட்டேன்.கண்டிப்பா நான் கார்த்திக் கிட்ட பேசி சமாதானம் ஆகிடுவேன்.நான் வர சண்டே ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.
அய்யா அக்கா ரொம்ப சந்தோஷம் அக்கா.என்று அவளைஅவளை கட்டிப்பிடித்தாள் சக்தி.
ஏய் விடுடி.கூச்சமா இருக்கு
ஆமா.சன் டே போய் புருஷன கட்டிப்பிடிப்பாங்க நாங்க கட்டிபிடிச்சா கூச்சமா இருக்குமாம்.
வர வர உனக்கு வாய் ரொம்ப நீழுதிடி.உனக்கு இருக்கு ஒருநாள்.
சரி ட்ரீட் எங்க.எனக்கு டிரஸ்வ வேணும்.
ம்ம்ம் சரி வாங்கலாம்.ஈவினிங் போகலாம் சரியா.
ஓகே.
பின் இருவரும் டிரஸ் எடுக்க சென்றனர்.அங்கு சக்திக்கு சுடியும் அம்மாவுக்கு சேலையும் எடுத்துவிட்டு பில் கொடுக்க கார்டை எடுக்கும்போது ராஜி என்று ஒரு குரல் கேட்டது.குரல வந்த திசை நோக்கி இருவரும் திரும்ப அங்கு ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.........
No comments:
Post a Comment