CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 6


 பின் இருவரும் டிரஸ் எடுக்க சென்றனர்.அங்கு சக்திக்கு சுடியும் அம்மாவுக்கு சேலையும் எடுத்துவிட்டு பில் கொடுக்க கார்டை எடுக்கும்போது ராஜி என்று ஒரு குரல் கேட்டது.குரல வந்த திசை நோக்கி இருவரும் திரும்ப அங்கு ரமேஷ் நின்று கொண்டிருந்தான்..
ரமேஷை பார்த்த ராஜிக்கு ஏனோ வார்த்தைகள் வரவில்லை.கண்ணீர் மட்டும் தான் வந்தது.முடிந்தவரை உதட்டை கடித்து கண்ணீரை அடக்கி கொண்டாள்.சூழ்நிலையை இயல்பாக்க முடிந்தவரை போராடினாள்.
ரமேஷை கண்ட சக்திக்கு எரிச்சலாக வந்தது.இந்த சனியன் எதுக்கு இப்ப என்ட்ரி ஆகுது என்று அக்காவிடம் வாய்விட்டு சொல்லிவிட்டாள்.
ரமேஷ் ராஜியிடம் வந்து எப்படி இருக்க ராஜி.கண்டிப்பா நல்லா இருப்ப என்றான்.
அதான் நீயே சொல்லிட்டியே.நல்லா இருப்பன்னு.நீ எப்படி இருக்க ரமேஷ்.
ஹ்ம்ம் ரொம்ப நல்லா இருக்கேன்.ஹாஸ்பேண்ட் எங்க ராஜி.
அவள் அருகில் இருந்த சக்தியை பார்க்க சக்தி ரௌத்திரமாக முறைத்து கொண்டிருந்தாள்.
ஓ சாரி.எப்படி இருக்க சக்தி.
நல்லா இருக்கேன் என்று வேண்டா வெறுப்பாக பதில் சொல்லிவிட்டு அக்கா டைம் ஆகிடுச்சு.அம்மா வேற கால் பண்ணிட்டு இருக்காங்க.போகலாமா
ஹே ஹே ரிலாக்ஸ்.நான் பேசினது சக்திக்கு பிடிக்கலன்னு நினைக்கிறன்.ஓகே நான் கிளம்புறேன்.ஒன் செக்.இது என்னோட கார்டு.உனக்கு எப்ப எந்த ஹெல்ப் வேணுனாலும் எனக்கு கால் பண்ணலாம்.ஒரு பிரெண்டா.பாய்.
பின் இருவரும் பில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது அக்கா நீ ஏன் அவன்கிட்ட பேசுற.அவனும் அவன் பிரெஞ்சும்.இதுல கார்டு வேற.கொடு அதை என்று அதை கிழித்து குப்பையில் எறிந்தாள்.
சக்தியின் இந்த செய்கை ராஜிக்கு சிரிப்பை வரவைத்தாலும் அவள் பேசாமல் அவலுடன் நடந்து சென்றாள்.
ராஜியை பொறுத்தவரை ரமேஷ் என்ற ஒருகதை அவளுடைய வாழ்க்கையில் முடிந்துவிட்டது.அது மீண்டும் எந்த சலனத்தையும் அவளிடம் ஏற்படுத்த போவதில்லை.
அவளின் மனதை அறிந்தவளாக அக்கா உனக்கும் அவன் மேல கோவம்தானே.அதான் நான் கார்டை கிழிச்சி எரியும் போது நீ பேசாம இருந்த.
பதிலுக்கு சிரித்துவிட்டு ஆமா என்று மட்டும் கூறினாள்.அதற்குமேல் ராஜியிடம் ரமேஷை பற்றி பேசி அக்காவை கஷ்டப்படுத்தாமல் அமைதியாக இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
[11/21, 9:00 PM] ��karthi��: வீட்டிற்கு வந்த ராஜிக்கு ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது.எந்த காரணத்தை கொண்டும் சக்தி சொன்னது போல் கார்த்திக்கிடம் நடந்துவிடக்கூடாது என்று.அவள் மனதில் கார்த்திக் நம்பவச்சி ஏமாத்திட்டான்.அதுமட்டுமே அவளுக்கு அசரீரி போல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இங்கோ கார்த்திக் தினமும் காலை சித்தி தரும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வேளைக்கு சென்றால் ஈவினிங் வரைக்கும் வேளையிலே கவனத்தை திருப்பினான்.ராஜியின்ன் நினைவுகள் வராதவாறு பார்த்துக்கொண்டான்.
வீட்டில் தனிமையில் டைரியின் உதவியுடன் ராஜியை காதலித்தான்.
இதோ சன்டே யும் வந்துவிட்டது.முந்தின நாளே அம்மாவிடம் கார்த்திக்கை விட்டுட்டு என்னால இங்க இருக்க முடியல.அதனால நாளைக்கு நான் ஊருக்கு போறேன் என்று அம்மாவிடம் சம்மதம் வாங்கினாள் ராஜி.
கார்த்திக்கை வரச்சொல்லி அவன்கூட போக சொன்னாள் தாய்.ஆனால் சஸ்பென்சாக இருக்கணும் என்று சொல்லி மறுத்துவிட்டாள்.
சக்தியிடமும் அதையே சொல்லி அவளையும் நம்ப வைத்தாள்.பின் பஸ்சில் சென்றால் புகுந்த வீட்டை நோக்கி.
வீட்டில் இருந்த கார்த்திக் சைட் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இன்று வீட்டில் சமைக்கலாம்.ரிலாக்ஸா இருக்கும்.என்று என்னி மகேஷையும்டீ துணைக்கு அழைத்தான்.
பிரியாணி செய்யலாம் என்று முடிவு செய்து அதற்கான வேளைகளில் இறங்கினர்.
சரியாக எல்லாம் செய்து முடித்து கேஸை ஆப் செய்யும் நேரம் காலிங் பெல் அடித்தது.யாரென்று பார்க்க கார்த்திக் செல்லும் முன் இருன்னே நான் பார்க்குறேன் என்று மகேஷ் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அங்கு ராஜி நிற்பதை பார்த்த மகேஷ்.மைனி நீங்களா என்றான்.
ஷ்ஷ்ஷ்ஷ் என்று உதட்டின் மேல் கைவைத்து சஸ்பென்ஸ் என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
[11/21, 9:40 PM] ��karthi��: ம்ம் சரி மைனி.நடத்துங்க.நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அண்ணா நான் கிளம்புறேன் என்றான்.
யாருடா வெளில.
ஒன்னும் இல்லனா சின்னப்பசங்க.போய்ட்டாங்க.நான் குளிச்சிட்டு வரேன்.
ம்ம்ம் சீக்கிரம் வா.பசிக்குது.என்று சொல்லிவிட்டு பேசினில் கைகழுவ சென்றான்.அப்போது உள்ளே வந்த ராஜி உள்ளே கார்த்திக்கை பார்த்ததும் சிரிப்பாக வந்தது அவளுக்கு.
வெறும் பனியன் மற்றும் பெர்முடாஸ் போட்டுகொண்டு தலையில் துண்டை கட்டிக்கொண்டு சமையல்ல உன்னை அடிச்சிக்க ஆளே இல்லடா.தெருவையே மணக்க விடுற.உன் பொண்டாட்டிக்குதான் அந்த கொடுப்பினை இல்லை.
இதை கேட்ட ராஜிக்கு நிஜமாலுமே சிரிப்பு கைகளை கட்டிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.ஆனாலும் அவள் உதடு சத்தமில்லாமல் புன்னகைத்து  கைகளை கட்டிக்கொண்டுஎ அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்த ராஜியை கார்த்திக் பார்த்துவிட்டான்.
ஆனால் கார்த்திக்குக்கு எந்தவித அதிர்ச்சியும் இல்லை.அவளை பார்த்ததும் ம்ம்ம் வந்துட்டியா.என்னடா கொஞ்ச நாலா ஆளையே காணோம்னு பார்த்தேன்.
அவனை பார்த்து கைகளில் போனை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்த ராஜி என்ன இது நம்மள பார்த்து ஷாக் ஆகாம இப்படி பேசுறான்.ஒருவேளை சக்தி உளறிட்டாலோ.இல்லையே நம்மகிட்ட சொல்லமாட்டேன்னு பிராமிஸ் பண்ணினாலே.இல்ல மெண்டல் கிண்டல் ஆகிட்டானோ.சரி என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று அதே சிரிப்பு மாறாமல் அப்படியே நின்றிருந்தாள்.
ப்ப்ப்ப்ப்பா அப்படி மட்டும் பார்க்காத.என்னோட ரெத்த ஓட்டம் எல்லாம் நொடிக்கு நூறுமுறை தலைக்கும் காலுக்கும் போகுது.
ராஜியிடம் எந்த மாற்றமும் இல்லை.
சரி இப்ப உன்ன எப்படி போகவைக்கிறதுனு எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டே சட்டென்று அவளது தலையை பிடித்து அவளது உதடுகளை சிறை பிடித்தான்.
இந்த திடீர் தாக்குதலில் ராஜி நிலைகுலைந்து தான் போனாள்.
கார்த்திக் தன் பலம் கொண்ட மட்டும் அவளை இழுத்து வைத்ததில் அவளால் விடுபட முடியவில்லை.
சட்டென்று தன் கையில் இருந்த போனை எடுத்து தரையில் உடைத்துவிட்டு தன் இரு கைகளாலும் அவன் மார்பை பிடித்து தள்ளினாள்.
விலகிய கார்த்திக்கிற்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது.இது கணவில்லை நிஜம்.
ஐ ம் சோ சாரி.ஐ ம் சோ சாரி.நான் வேணும்னே பண்ணல.சாத்தியமா.ஐயோ.ச்ச என்று வேகமா கையை அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் குத்தினான்.
அவனது இந்த செய்கை ராஜியை ரொம்ப மிரட்சி அடைய செய்தது.ஒரு நிமிடம் அவனை பார்த்து பயந்தே போய்விட்டாள்.
அவனது முதல் முத்தம் ஒரு மிரட்சி என்றால் இரண்டாவது செய்கை மேலும் மிரட்சி.
சட்டென்று அவன் கைகளை பற்றியவள் தன் கர்சீப்பை எடுத்து அவன் கைகைளை இழுத்து வா ஹாஸ்பிடலுக்கு போகலாம்.வா என்று அழுதாள்.
இல்ல நீ மன்னிச்சிட்டேன்னு சொல்லு.ப்ளீஸ்.நான் வேணும்னே பண்ணல.நம்பு ராஜி.சாத்தியமா.
அதை பத்தி அப்றமா பேசிக்கலாம்.ப்ளீஸ் வா என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள்.
பின் இருவரும் ஹாஸ்பிடல் சென்று கண்ணாடி சில்லுகளை அகற்றி காயத்திற்கு மருந்து போட்டு வெளியே வந்தனர்.
வீட்டிற்கு வந்த ராஜி பர்ஸை வீசி விட்டு என்னடா ஓவரா சீன் போடுறியா.நல்லா இழுத்து வச்சி கிஸ் பண்ணிட்டு.ஒன்னும் தெரியாத நல்லவநாட்டும் கண்ணாடியை உடைக்கிற.சாரி கேக்குற.என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.நீ கிஸ் பண்ணும்போது எனக்கு அப்படியே செத்திடலாம் போல இருக்கு.என்று வாயை பொத்திக்கொண்டு அழுகையை அடக்க முடியாமல் தரையில் கைகளால் அடித்தாள்.
ராஜி ப்ளீஸ் ராஜி புரிஞ்சிக்கோ.நான் எதுவும் பிளான் பண்ணி செய்யலை.நீ போனதுக்கு அப்றம் இதே மாதிரி நீ இருக்க மாதிரி கனவா வந்துச்சு.அதே மாதிரிதான் இதுவும்னு நினைச்சுத்தான் அப்படி நடந்துட்டு.சாரி ப்ளீஸ்.
ஒன்னும் பேசாத அன்னைக்கு எவலோ பேசுனா என் நிழல் கூட உன்மேல படாதுன்னு.உனக்கு உடம்பு சுகம்தான் வேணும்னா அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல.இனி உன்கூட ஒரே ரூம்ல உன்ன நம்பிஏ எப்படி என்ன படுக்க சொல்ற.
இந்த வார்த்தையை கேட்ட கார்த்திக் will u stop that nonsense. என்று கத்திவிட்டு அவன் கைகளுக்கும் ராஜியின் கன்னத்திற்கும் ஒரு இன்ச் இடைவெளியே இருந்தது.
ராஜி முகத்தை திருப்பிவிட்டு அப்படியே சிலையாக முட்டிகால் இட்டு இருந்தாள்.
அங்கு ஒரு முடி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.
இப்ப சொல்றேன் கேட்டுக்கடி.இந்த நிமிஷத்துல இருந்து உன்ன நான் லவ் பன்னலடி.சத்தியமா சொல்றேண்டி உனக்கு நான் கொடுத்த எதிர்பாராத அந்த முதல் முத்தம் போதும்டி.என் வாழ்நாள் முழுக்க.என்ன போது.இதை சொல்லும்போது அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
நான் இனி நம்ம ரூம்க்கு பக்கத்துல இருக்க ரூம்ல படுத்துகிடு்றேன்.நம்ம ரூம்ல இருக்க பாத்ரூம் கூட இனி நான் யூஸ் பண்ணமாட்டேன்.இனிமேல் நீ இருக்க திசைப்பாக்கம் கூட நா தலைவச்சி படுக்க மாட்டேன்.அப்புறம் ஏதோ சொன்னியே உடம்பு சுகம்னு.மனசுல ஒருத்திய நினைச்சுகிட்டு இன்னொருத்தி கூட படுத்துட்டு அந்த ஒருத்திய கற்பனை பண்ணிட்டு செய்றது பேருதான் தான் உடம்பு சுகம்.அப்படி உன்ன மனசுல நினைச்சிட்டு இன்னொருத்தியை தேடி போயிருந்தா நா உன்கிட்ட நின்னு இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்.இந்நேரம் அவளோட ஒருபிள்ளையே பிறந்திருக்கும்.என்காதல டீசெண்டா சொல்லணும்னு ஆசைப்பட்டேன்டி.இவ்ளோ கேவலமா சொல்ல வச்சிட்டியேடி.ச்சி.
நெருப்பை உமிழ்ந்தவன் போல் பேசிவிட்டு மாடிக்கு சென்று தனது ட்ரெஸ்,திங்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பக்கத்து ரூமிற்கு சென்றான்.சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளிறினான்.
சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளியேறிய கார்த்திக் ஆபீஸ் சாவியை மகேஷிடம் வாங்கி கொண்டு ஆஃபீசிற்கு பின் பக்கம் இருக்கும் கோடௌன்க்கு சென்றான்.
கதவை லாக் செய்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்தான்.மனம் இரும்புக்கலனை போல் கொதித்து கொண்டிருந்தது.
என்ன வார்த்தை சொல்லிட்டா.உடம்பு சுகத்துக்கு அளிர்வான
அலையிறவனா நான்.ச்ச.நினைச்சு பார்க்கவே அருவருப்பா இருக்கு.இந்த ஒரு மாசத்துல என்ன பத்தி கொஞ்சம் கூடவா புரிஞ்சிக்கல.
நேரம் ஆக ஆக அவனுக்கு கோவம் அதிகமாக ஏறியது.ஆனால் அவன் மனம் ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப சொல்லியது.அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கோவத்தில் சொல்லியது என்றும் மனதில் இருந்து வந்தது அல்ல என்று.
அதே போல அவன் காதல் செத்துப்போச்சு என்று சொன்னதும் கோவத்தில்தான் ஒழிய மனதில் ராஜியின் மீதான காதல் ஒருபோதும் அழியாது.
இவ்வாறு பலவிதமான சிந்தனைகளில் எப்படி உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது.மீண்டும் எழுந்து பார்க்கையில் மணி ஏழாகியிருந்தது.இப்போது அவனது கோவம் தணிந்திருந்தாலும் அவள் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.
இனிமேல் முடியாது சரக்குதான் இதுக்கு ஒரே வழி என்று முடிவு செய்து போனை எடுத்து மஹேஷிற்கு கால் செய்து ஆஃபீஸ் குடவ்னிற்கு வர சொன்னான்.
10 நிமிடத்தில் அவன் வந்துவிட அவனை உட்கார சொன்னான்.
உட்கார்ந்த மகேஷ் அண்ணா எதாவது பிரச்சனையா.வீட்ல கண்ணாடி உடைஞ்சிருக்கு,உன் கையில வேற காயமா இருக்கு,அண்ணி வேற ட்ரெஸ்க்கூட மாத்தாம டைனிங் டேபிள்ள உக்கார்ந்துருக்காங்க.என்ன ஆச்சு.
டேய் ஒரு மண்ணும் ஆகலை.ஒரு சின்ன சண்டை அவ்ளோதான்.பெரிய இவரு மாதிரி கேள்வி கேக்காம மட்டமான சரக்கா ஒரு புல் வாங்கிட்டுவா.
அண்ணா.நீதான் விட்டுட்டியே.இப்ப போய்.
டேய் மூடிட்டு போய் வாங்கிட்டு வா.தேவை இல்லாம எனக்கு அட்வைஸ் பண்ணாத.போ.
சரிண்ணே என்று மகேஷ் சென்றுவிட்டான்.மஹேஷிற்கு தெரியும் கார்த்திக்கை பற்றி.அவன் சில நேரங்களில் டென்ஷனாக இருக்கும் நேரங்களில் பயங்கர கோவமாக பேசுவான் ஆனால் அந்த கோவம் மறைந்த அடுத்த சில இவனா அப்படி கோவப்பட்டான் என்று யோசிக்கும் அளவுக்கு ஜாலியாக மாறிவிடுவான்.
அவனை பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு புரியாத புதிர்.அவன் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று மகேஷ் நம்புவான்.அதனாலயே கார்த்திக் மேல் பாசம் உண்டு.
வீட்டில் ராஜி கார்த்திக் சென்ற உடன் டைனிங் டேபிளில் இருந்து அழ ஆரம்பித்தாள்.அவன் கொடுத்த முத்தம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனால் தான் கூறிய வார்த்தைகள் எவ்வளவு கேவலமானது என்று அவளுக்கு தோன்றியது.எனக்கே அதை தாங்க முடியலையே அவணுக்கு எப்படி இருந்திருக்கும்.
முதன் முதலாக கார்த்திக் மேல் அவளுக்கு பரிவு வந்தது.நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஏதோ கோவத்தில் சொன்னது கார்த்திக்.என்ன மன்னிச்சுடு என்று அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது.மனசு இலகுவாகும் வரை அழுதாள்.
இரண்டு கட்டிங் உள்ளே சென்றவுடன் போதை அப்போது ஏற தொடங்க அடுத்த கட்டிங்கை எடுத்து குடித்தான்.
எதிரே இருந்த மஹேஷிற்கு கார்த்திக்கை எப்படி வீட்டிற்கு கொண்டு போய் சேர்ப்பது என்ற கவலையாக இருந்தது.
இப்போது கார்த்திக் பேச தொடங்கினான்.சாரிடா மகேஷ்.ஏதோ கோவம்.அதான் உன்னை அப்படி திட்டிட்டேன்.நீ எதுவும் மனசுல வச்சிக்காதடா தம்பி.
இல்லனா அப்படிலா ஒன்னும் இல்லனா.வீட்டுக்கு போகலாம்ன்னு.டைம் ஆகிடுச்சு.மைனி வேற தனியா இருக்கும்.
டேய் இருடா.அவள்ளா அழகா இருபபாடா.அப்ப எனக்கு கம்பெனி கொடுக்க மாட்டியா.என்று போதையில் குளறலாக கூறினான்.
ம்ம்ம்ம் இருக்கேன்.இருக்கேண்ணே.
ம்ம்ம்ம்.அப்ப ஊத்து.
அண்ணா போதும்ன்னா.
டேய் நீதானா எனக்கு கம்பெனி கொடுக்குறேன்னு சொன்ன.இப்ப மாத்தி பேசுறியா.குடிச்சிருக்கியா குடிச்சிருக்கியாடா.
இல்லனா.இல்லனா.இந்தா ஊத்துறேன்.ஊத்துறேன்.
ம்ம்ம் அது.இன்னொரு க்ளாஸ்ல ஊத்து.
ஐயோ வேண்டாம்ன்னு எனக்கு பழக்கம் இல்லை.வேணாம்.
டாய் என்ன அண்ணன் முன்னாடியே குடிக்க ஆசைப்படுறியா.பிச்சிபுடுவேன் ராஸ்கல்.இது எனக்கு நீ கம்பெனி கொடுக்கிறியா.கம்பெனி கொடுக்குறதுன்னா நீயும் அடிக்கணும்.ஆனால் நீதான் குடிக்கமாட்டியே.அதனால உன் க்ளாஸ்ல இருக்குறதும் எனக்குத்தான்.ஊத்து.
போதும்ன்னா.வான்னா.போகலாம்.பயமா இருக்குன்னா.
டேய் அண்ணன் இருக்கேன்டாஇருக்கேண்டய.பயப்படாத.இதோ லாஸ்ட் ரவுண்டு.முடிஞ்சுது என்று கடைசி கிளாசை வாயில் கவுத்திவிட்டு போலாமா என்று குளறலாக சொல்லிவிட்டு எழுந்த கார்த்திக்குக்கு முற்றிலும் சுய நினைவு இல்லை.கால்கள் இரண்டும் தடுமாற எழுந்தவனை மகேஷ் தோளில் கைபோட்டு சாய்த்துக்கொண்டு கதவை லாக் செய்து கொண்டான்.
ஒருவழியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு வீட்டு காலிங் பெல்லை அடிக்க போக டேய் அதெல்லாம் வேணாம்.ஐ ம் ஸ்டேடி.நான் போய்க்கிடுறேன்.நீ போ.
இல்லன்னா வீட்டுல மைனி கிட்ட சொல்லிட்டு போய்டுறேன்னா.
ப்ச்.அதெல்லாம் நான் சொல்லிக்கிடுறேன்.நீ போய் சாப்பிட்டு தூங்குதூங்குற.போ.
இப்போதைக்கு வீட்ல விட்டாச்சு.வீட்டுக்கு போய் மைனிக்கு போன் போட்டு சொல்லிக்கலாம் என்ற முடிவுடன் சாரின்னா.நா போறேன்.பாத்து போன்னே.சொல்லிவிட்டு கிளம்பினான் மகேஷ்.
வீட்டிற்குள் சென்ற கார்த்திக் தள்ளாடியபடி சென்று டைனிங் டேபிளை அடைந்தான்.
அங்கு கைகளை மடக்கிவைத்து அதன் மேல் முகத்தை வைத்து தலை கவிழ்ந்திருந்தாள் ராஜி.
இவன் தள்ளிடியபடி டேபிளில் இடித்துக்கொண்டதில் எழுந்த ராஜிக்கு அவன் குடித்திருக்கிறான் என்று அவன் முகமும்,சரக்கு வாடையும் சொன்னது.
அவன் குடித்ததற்கான காரணம் அவளுக்கு தெரிந்திருந்தாலும் எதுவும் பேசாமல் சாப்பாடை எடுத்து வைத்தாள்.
அப்போது கார்த்திக் கை கழுவ பேசின் அருகே செல்ல அப்போது கார்த்திக்கின் போன் ஒலித்தது.
போதையில் இருந்த கார்த்திக் பேசினில் இருந்த சோப்பை எடுத்து காதில் வைத்து கொண்டு ஹலோ நீங்கள் பேச நினைக்கும் சப்ஸ்கிறைபர் கை கழுவிக்கொண்டிருக்கிறார்.சிறிது நேரத்திற்கு பிறகு தொடர்பு கொள்ளவும்னு சொல்லிட்டு சோப்பில் டச் செய்து பேசினில் வைத்துவிட்டான்.
இதை பார்த்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.எருமை சோப்புக்கும்,போனுக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு குடிச்சிட்டு வந்துருக்கு பாரு என்று டேபிளில் இருந்த போனை எடுத்தாள்.
மகேஷ் கால் செய்திருக்க அட்டென்ட் செய்து சொல்லு மகேஷ் என்றாள்.
அண்ணி உங்க நம்பர் என்ன ஆச்சு.கால் பண்ணேன்.ரீச் ஆகவே இல்ல.
ஒன்னும் இல்லை.ஊருக்கு போயிருக்கும்போது கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு.
அதான் அண்ணன் நம்பருக்கு கால் பண்ணேன்.அண்ணி அண்ணன் ரொம்ப குடிச்சிட்டான்.என்ன பிரச்சனைன்னு தெரியல ரொம்ப கோவமா இருந்தான்.இப்போ குடிச்சிட்டு ரொம்ப போதைஎ ஆகிட்டான்.என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு குடிச்சிருக்கான்.கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணி.வச்சிடுறேன்.
ம்ம்ம் சரிடா.நான் பாத்துக்கிடுறேன்.என்று சொல்லிவிட்டு போனை டிவி அருகில் வைத்துவிட்டு கிட்சேன் சென்றால் ராஜி.
அங்கு கார்த்திக் தண்ணீரை குடித்து கொண்டிருந்தான்.
வா சாப்பிடலாம்.என்றாள் ராஜி.
ம்ம்ஹூம்.எனக்கு வேண்டாம்.நீ போட்டு சாப்பிட்டுக்கோ.
அப்படியா சரி எனக்கும் வேண்டாம்.போலாம்.
ம்ம்ம்ஸ் சரி.
இதை ராஜி எதிர் பார்க்கவில்லை தான்.அவளும் இன்னும் சாப்பிடவில்லை.காலையில் அம்மா வீட்டில் சாப்பிட்டது.இப்போது வரை துளி தண்ணீர் நாக்கில் படவில்லை.இப்போது கார்த்திக்கை பார்த்த பின்பு தான் அவளுக்கு பசியின் ஞாபகம் வந்தது.
பிரியாணி,சிக்கன் என அவன் மதியம் டேபிளில் வைக்கும்போது இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டணும்னு முடிவுசெய்திருந்தாள்.ஆனால் வீம்பாக பேசி வடை போச்செ கதையில் இருந்தாள்.
இருவரும் எதிரெதிர் டேபிளில் அமர்ந்திருக்க ஒவ்வொரு நிமிடமும் மௌனமாக சென்றது.
ஆனால் ராஜியோ மனதுக்குள் கார்த்திக்கை வசை பாடிக்கொண்டிருந்தால்.சீக்கிரமா சொல்லுடா.எனக்காக யாரும் பட்டினியா இருக்க வேண்டாம்.நான் சாப்பிடுறேன்னு சொல்லுனு மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தால்.
10 நிமிடத்திற்கு பிறகுர்
ராஜி இனியும்ல் லேட் பண்ணின உசுருக்கு உத்திரவாதம்இ இல்லை.நல்லா யோசி.சோரா,சொரணையா.கடைசியில் மைன்ட்வாய்ஸ் சொன்னது.சோறுதான் முக்கியம்.சனியன் எப்படியும் போகுது நீ சாப்பிட போ என்று அவள் எழும்ப அதே நேரம்
கார்த்திக் எதுவும் பேசவில்லை.திடீரென்று எனக்கு பசிக்குது நான் சாப்பிடப்போறேன் என்றான்.
அப்பாடா இப்பவாவது இதுக்கு பசிச்சுதே.சரி என்று பிளேட்டை வைத்து சாப்பாடு வைத்தாள். 
கார்த்திக்கு சாப்பாடு வைத்துவிட்டு தனக்கும் போட்டுகொண்டு இரண்டு லெக் பீஸ்களை ஆளுக்கு ஒன்றாக சாப்பிட தொடங்கினர்.
கார்த்திக்கும் இருந்த போதையில் வேகமாக சாப்பிட,ஏதோ யோசனை வந்தவனாக எதிரே பார்க்க அங்கு ராஜி வேகவேகமாக சாப்பாடை முழுங்கிக்கொண்டிருந்தால்.கார்த்திக் சாப்பிடாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்க ராஜிக்கு விக்கல் வந்தது.
உடனே தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்ட அதை வேகமாக வாங்கி மடக்மடக்கென குடித்தாள்.அப்போதும் அவளுக்கு தொடர்ந்து விக்கல் நிற்காமல் இருக்க உடனே கார்த்திக் தள்ளாடியபடி எழுந்து அவள் தலையில் தட்ட போக ராஜி அவனை பார்த்து சற்று விலகினால்.
உடனே மறுபடியும் அமர்ந்த கார்த்திக் ஓஓஓஓஓ.ஸ்ஸ்ஸ்ஸ்.தொட கூடாது.தொடகூடாது.தொடக்கூடாதுல.சாரி.சாப்பிடு.நீ சாப்பிடு.
மறுபடியும் வேகவேகமாக அள்ளி சாப்பிடகே தொடங்கினாள்.சாப்பாடும் ருசியாக இருக்க காலையில் கார்த்திக் தன்னைத்தானே மெச்சிக்கொள்ள சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது.
அவளையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் வர சாப்பாடை முழுங்கி கொண்டே கண்ணீரை துடைத்தாள்.
எதேச்சையாக திரும்பியவள் எதிரே கார்த்திக் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

No comments:

Post a Comment