வீட்டில் ராஜிக்கோ நேரம் போகாமல் எதை எதையோ செய்து கொண்டிருந்தாள்.
சாந்தாவிடம் சென்று பேசுவாள்.பின் ரூமிற்கு வருவாள்.மீண்டும் சாந்தாவிடம் பேசுவாள் என நேரத்தை கழித்தாள்.
சில சமயம் கார்த்திக் உடன் இருக்கும் போது அவன் செய்த சில்மிஷங்களை நினைத்து சிரிப்பாள்.
அவன் இருப்பது போன்று கற்பனை செய்து கொள்வாள்.அவர்களின் முதல் முத்தத்தை எண்ணி உதட்டை தடவி கொண்டாள்.
ஒரு வழியாக இரவும் வந்தது.கார்த்திக் இடம் இருந்து ராஜிக்கு போன் கால் வந்தது.
அவன் நம்பரை பார்த்ததும் ராஜிக்கு முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிந்ததை போன்று ஒரு வெளிச்சம் வந்தது.
அட்டென்ட் செய்து சொல்லு கார்த்திக் என்றாள்.
ராஜி நான் இங்கே இருந்து லேட்டா தான் ட்ரெயின் ஏறுறேன்.சோ நாளைக்கு வர லேட் ஆகும்.அதனால நீயும் மகேஷும் நாளைக்கு பங்க்ஷனுக்கு போயிட்டு வந்துடுங்க.நான் நேரா அங்க வந்துடுறேன்.
லேட் ஆகுமா.சரி நாளைக்கு வரும் போதாவது எங்க கூட வந்துடுவல்ல.
சொல்ல முடியாது ராஜி.லேட் ஆகும்.என்ன எதிர் பார்க்காமன் நீங்க ரெண்டு பேறும் போயிட்டு வந்துடுங்க.
சரி.நான் மகேஷ் கிட்ட சொல்லிடுறேன்.அப்றம் கார்த்திக்.நாளைக்கு என்று ராஜி சொல்வதற்குள்
சரி ராஜி.நாளைக்கு பேசுறேன்.பாய்.என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான் கார்த்திக்.
ராஜிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.அவளால் என்ன செய்ய முடியும்.அழ மட்டுமே முடிந்தது.இந்த 5 நாட்களாக அவள் பட்ட அவஸ்தை வாழக்கையில் அவள் இதுவரை அனுபவித்தது இல்லை.
மறுநாள் பொழுது விடிந்தது.மஹேஷிடம் கார்த்திக் போன் செய்து ஏற்கனவே சொல்லி இருந்ததால் அவன் காரை எடுத்து கொண்டு ராஜியை கூப்பிட வந்திருந்தான்.
இன்று கார்த்திக் வந்து விடுவான்.அவனை கட்டி அணைத்தும் அவனிடம் சரணடைய வேண்டும்.என்று பல கனவுகளில் வழக்கத்திற்கு மாறாக ராஜி ரொம்பவே மெனக்கெட்டு தன்னை அழகு படுத்தி கொண்டாள்.
கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து விட்டு செம அழகா இருக்கடி.இப்படியே போய் அவன்கிட்ட சொல்லிடு.ஆல் த பெஸ்ட். என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
இருவரும் சாந்தாவிடம் சொல்லி விட்டு காரில் கிளம்பினர்.
காரில் செல்லும் போது மகேஷிடம் அண்ணா எங்க இருக்கான்னு உனக்கு எதாவது தெரியுமா மகேஷ்.
இல்ல மைனி எனக்கு தெரியல.இன்னைக்கு வந்துடுவேன்னு சொன்னான்.எப்போன்னு தான் தெரியல.அப்றம் உங்க கிட்ட ஒன்னு கொடுக்க சொன்னான்.ஒரு நிமிஷம் என்று டேஷ் போர்டில் இருந்து கவர் ஒன்றை எடுத்து ராஜியிடம் கொடுத்தான் மகேஷ்.
என்னது மகேஷ் இது.
தெரியல மைனி அண்ணன் உங்க கிட்ட கொடுக்க சொன்னான்.வேற எதுவும் எனக்கு தெரியாது.
சரி என்று சொல்லிவிட்டு கவரை பிரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பிரித்து பார்த்தாள்.
அதை பிரித்து பார்த்த உடன் அவள் தலையில் இடி இறங்கியது போன்று உணர்ந்தாள் ராஜி.
அவளையயும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
அவளுக்கு சுற்றி நடப்பது எதுவும் கேட்கவில்லை.அப்படியே சீட்டின் பின் புறம் தலையை சாய்த்து கொண்டு கண்களை மூடினாள்.
கண்களின் ஓரம் வழிந்த கண்ணீர் அவள் கன்னத்தின் வழியாக நாடியை அடைந்து கொண்டிருந்தது.
அந்த கவரில் Application for mutual divorce.என்று எழுதி இருந்தது.
சில நிமிடங்களுக்கு பின் அண்ணி அண்ணி என்று மகேஷ் கூப்பிடும் சத்தம் கேட்க கண்களை திறந்தாள் ராஜி.
அண்ணி என்னாச்சு அண்ணி.ஏன் அண்ணி அழுகிறீங்க.அப்படி அந்த கவர்ல என்னதான் இருந்துச்சு.
ஒன்னும் இல்ல.மகேஷ்.உங்க அண்ணன் எனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிருக்கான்.அத பாத்த சந்தோஷத்துல எனக்கு அழுகை வந்துடுச்சு.நீ போ.
வேற ஒன்னும் இல்லலா அண்ணி.
ஒன்னும் இல்ல மகேஷ்.நீ கொஞ்சம் பேசாம வண்டிய எடு.
அதன் பின் இருவரும் ஒன்றும் பேசாமல் மான்வி வீட்டிற்கு வந்தனர்.
அவர்களை வரவேற்க மூர்த்தியும்,மான்வியும் வாசலில் காத்திருந்தனர்.
வீட்டில் சொந்தங்கள்,தெரிந்தவர்கள் என அனைவரும் இருக்க பாலை பூஜை ஆரம்பித்து பாலை காய்ச்சினர்.
ராஜிக்கு அங்கு நடப்பது எதுவும் அவளுக்கு தெரியவில்லை.கார்த்திக்கின் இந்த முடிவு அவளை வேதனையின் உச்சத்தில் கொண்டு சென்றது.
எதற்காக வாழ வேண்டும் என்பது மட்டுமே அவளின் கேள்வியாக மனதில் ஒலித்து கொண்டிருந்தது.
ராஜியின் முகத்தில் தெரிந்த சோகத்தை கவனித்த மான்விஅவளோட அவளிடம் வந்து ஏன் அக்கா சோகமாக இருக்கீங்க.கார்த்திக் கண்டிப்பா இன்னைக்கு வந்துடுவாங்க.பீல் பண்ணாதீங்க.என்று சொன்னாள்.
ராஜிக்கு அவள் கூறியது எதுவும் காதில் விழவில்லை.சிலையாக எதையோ வெறித்து கொண்டிருந்தாள்.
அக்கா அக்கா உங்களைத்தான்.என்ன ஆச்சு.என்று அவளை உலுப்பினாள் மான்வி.
ஆங்.ஒன்னும் இல்லை.ஒன்னும் இல்லை.எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு.ஒரு மாதிரி தலை வலிக்குற மாதிரி.நான் வீட்டுக்கு போகணும் என்று திக்கி திக்கி சொன்னாள் ராஜி.
அக்கா ஏன் உளறுறீங்க.நீங்க வாங்க முதல்ல என்று அவளை அழைத்து சென்று முதல்ல இந்த தண்ணிய குடிங்க என்று ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்தாள் மான்வி.
அதை வாங்கி குடித்தவள் மான்வி நான் வீட்டுக்கு போகணும் ப்ளீஸ்.என்னால முடியல என்று அழுது கொண்டே சொன்னாள் ராஜி.
சரி ஒரு நிமிஷம் இங்க இருங்க.நான் மகேஷ கூப்பிடுறேன்.அவன் கூட நீங்க போங்க.இருங்க வரேன் என்று சொல்லி விட்டு மகேஷை கூப்பிட சென்றாள் மான்வி.
அவள் சென்று மகேஷிடம் விவரத்தை சொல்லி அவனை கூட்டி கொண்டு வந்தாள்.ஆனால் ராஜி அங்கு இல்லை.
ஊருக்கு வந்து இறங்கிய கார்த்திக் நேராக ரமேஷின் வீட்டிற்கு சென்றான்.அங்கு சென்று காலிங் பெல்லை அடித்தான்.
ஆங்ஓ.ஒரு நிமிஷம் இதோ வரேன்.என்று ரமேஷின் குரல் கேட்டது.
கதவை திறந்த ரமேஷ் கார்த்திக்கை பார்த்து அண்ணா வாங்க.உள்ள வாங்க என்றான்.
என்னடா உள்ள வரது.மவனே நீ இன்னைக்கு செத்தடா.உன்னால தான் என் ராஜி முதல்ல எனக்கு கிடைக்காம போயி திரும்ப கிடைச்சா.இப்போ மறுபடியும் எங்களை பிரிக்க பாக்குறியா.
அண்ணா என்ன சொல்றிங்க.
புரியல.உனக்குத்தான் கல்யாணமும் ஆகி டிவோர்ஸ் ஆகிடுச்சுல்ல.ஊருல எத்தனை பொண்ணுங்க இருக்காளுக.அவளுக பு. . . . . , , . , . ய தேடி போக வேண்டியது தானகே.எதுக்குடா மறுபடியும் என் வாழ்க்கையில குறுக்க வர என்று சொல்லி அவன் மேல் பாய்ந்தான்.
மகேஷ் ராஜியை வீடு முழுவதும் தேட அங்கு ராஜி இல்லாததை கண்டு பயம் தொற்றி கொள்ள ஆரம்பித்தது.ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.
மான்வி இடம் சென்று நீங்க பயப்படாதீங்க.நீங்க போய் மத்தவங்களை கவனிங்க.நான் அன்னிய பாத்துக்கிடுறேன்.நீங்க போங்க.
இல்ல எனக்கும் பயமா இருக்கு.நானும் வரேன்.
அதெல்லாம் வேண்டாம்.நீங்க போங்க.நான் பாத்துக்கிடுறேன்.அப்றம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.
சரி.அவுங்களை பாத்துட்டு எனக்கு கால் பண்ணுங்க.சீக்கிரம்.
சரிங்க நான் கிளம்புறேன்.அப்பாகிட்ட சொல்லிடுங்க.
சரி.
அதன் பின் மகேஷ் காரை எடுத்து கொண்டு ராஜியை தேடி சென்றான்.
போகும் வழியில் ராஜியின் செல்லுக்கு கால் செய்தான்.ஆனால் அவள் எடுக்கவில்லை.
ராஜியை தேடி பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றான்.அங்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று தங்கள் ஏரியாவிற்கு செல்லும் பஸ் பற்றி விசாரித்தான்.
மேலும் ராஜியை பற்றியும் விசாரித்தான்.அப்போது கடையில் இருந்த ஒருவர் இப்போதான் ஒரு பொண்ணு அழுதுகிட்டே இங்க நின்னுட்டு இருந்துச்சு.நீங்க சொன்ன ஏரியாவுக்கு போற பஸ்ஸுல ஏறி போச்சு என்றார்.
அந்த பஸ் போய் எவ்ளோ நேரம் இருக்கும் என்றான்.
ஒரு 10 நிமிஷம் இருக்கும் என்றார்.
சரிங்க ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லி விட்டு காரை எடுத்தான்.
ராஜி வீட்டிற்குத்தான் செல்கிறாள் என்று மஹேஷிற்கு தெரிந்த உடன் தான் அவனுக்கு பயம் சற்று விலகியது.
உடனே மான்விக்கு கால் செய்ய அது ரிங் சென்றும் எடுக்கப்படாமல் இருந்தது.நேராக அவளிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று அவள் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
அங்கு சென்று மான்வியை சந்தித்து அண்ணி வீட்டுக்கு தான் போயிருக்காங்க.
உனக்கு எப்படி தெரியும்.
பஸ் ஸ்டாப்ல விசாரிச்சேன்.அங்க ஒரு கடை காரர் பாத்துருக்கார்.
புரியல.பி
பஸ் ஸ்டாப்பில் நடந்தவற்றை விவரமாக சொன்னான் மகேஷ்.பின் நீங்க தேவை இல்லாம பயப்படாதீங்க.அண்ணி வீட்டுக்கு தான் போய்யிருக்காங்க.நிஜமாவே அவுங்களுக்கு முடியாமத்தான் போயிருப்பாங்க.
டேய் லூசு.முட்டாள் மாதிரி பேசாத.அதுக்கு ஏன் அவுங்க அழுதுட்டே போகணும்.அதுவும் இல்லாம என்கிட்டே ஏன் அவுங்க உளறணும்.
அதான் எனக்கும் தெரியல.
அய்யோ.சரி வீட்ல இருந்து கிளம்பும் போது எப்படி இருந்தாங்க.
நல்லாத்தான் இருந்தாங்க.நார்மலா இருக்குற மாதிரி தான் இருந்தாங்க.
சரி வீட்ல இருந்து இங்க வர வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு.
அவள் கேட்டது போல எல்லாவற்றையும் நடந்தது நடந்தது போல ஒப்புவித்தான் மகேஷ்.
அப்போ அந்த கவர்ல தான் ஏதோ இருக்கு.அது என்னனு பார்த்தியா.
இல்லையே.
சரி இப்போ அது எங்க.
கார்ல தான் இருக்கும்.
சரி வா.அது என்னனு பார்ப்போம்.
இருவரும் காரில் சென்று கவரை பார்க்க அது அங்கு இல்லை.
ஐயோ எங்க காணோம்.
எனக்கு தெரியாலங்க.
சரி இப்போ என்ன பண்ண.
நான் இப்போ உடனே வீட்டுக்கு போறேன்.இங்க இருந்து கிளம்புனா 40 மின்ஸ் தான் ஆகும்.நான் உடனே கிளம்புறேன்.
வேண்டாம் இப்போவே அரை மணி நேரம் ஆச்சு
வெய்ட் பண்ணு.முதல்ல கார்த்திக் கிட்ட போன் பண்ணி சொல்லு.அப்றம் மத்தத பாத்துக்கலாம்.
வெய்ட் பண்ணு.முதல்ல கார்த்திக் கிட்ட போன் பண்ணி சொல்லு.அப்றம் மத்தத பாத்துக்கலாம்.
சரி என்று கார்த்திக்கிற்கு போன் செய்தான் மகேஷ்.
பிரெண்டிடம் வாங்கிய டுவீலரில் மகேஷ் வீட்டில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்தான் கார்த்திக்.
போன் அடிக்க எடுத்து பார்த்துவிட்டு சொல்லுடா.எங்க இருக்க.ராஜி உன்கூடத்தான் இருக்காளா.
அண்ணா நான் இங்க மான்வி வீட்லதான் இருக்கேன்.அண்ணி இங்க இல்லன்னா.
என்னடா சொல்ற.
ஆமான்னா.அண்ணியும் நானும் தான் வந்தோம்.ஆனா அண்ணி இங்க வந்ததுக்கு அப்றம் அழுதுகிட்டே வீட்டுக்கு போய்ட்டாங்க.
என்னது வீட்டுக்கு போய்ட்டாளா.என்னடா நடந்துச்சு.தெளிவா சொல்லு.
வீட்டில் இருந்து கிளம்பியது முதல் பஸ் ஸ்டாப்பில் நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் மகேஷ்.
அதை கொடுத்திட்டியா.அய்யோ ச்ச.சரி அவ போய் எவ்ளோ நேரம் இருக்கும்.
அரை மணி நேரத்துக்கு மேல இருக்கும்.
சரி நீ அங்கையே இரு.நான் வந்துட்டே இருக்கேன்.
கார்த்திக்,மான்வி,மகேஷ் மூன்று பேருக்கும் ஒரு வித பதட்டம் ஓடி கொண்டிருந்தது.
மேலும் ஒரு கால் மணி நேரம் சென்று இருக்க மஹேஷிற்கு ராஜியின் நம்பரில் இருந்து கால் வந்தது.
அண்ணி.அண்ணி நம்பர்ல இருந்து கால் வருதுங்க.
எடுத்து பேசு.சீக்கிரம்.
ஹலோ சொல்லுங்க அண்ணி.எங்க போனீங்க அண்ணி.அழுதுட்டே இருந்திங்கலாம்.இப்போ எங்க இருக்கீங்க.
இங்க கொடு என்று போனை பிடிங்கிய மான்வி ஹலோ அக்கா எங்க இருக்கீங்க.ஏன் இப்படி சொல்லாம போயிட்டீங்க.எதுக்கு அப்படி அழுதிங்க.
ஐயோ மான்வி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.நான் இப்போ வீட்ல தான் இருக்கேன்.நான் தான் சொன்னேன்ல கொஞ்சம் உடம்புக்கு முடியலைன்னு
அதனால தான் வந்துட்டேன்.நீங்க எதுவும் பயப்படாதீங்க.அதுவும் இல்லாம கார்த்திக் இல்லாம கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அதான்.
அதனால தான் வந்துட்டேன்.நீங்க எதுவும் பயப்படாதீங்க.அதுவும் இல்லாம கார்த்திக் இல்லாம கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அதான்.
ஒன்னும் பிரச்சனை இல்லள்ள.
ஒன்னும் இல்லம்.மகேஷை கொஞ்சம் பயப்படாம இருக்க சொல்லு.பாவம் என்னால உங்களுக்கும் கஷ்டம்.நீங்க பங்கஷனை கவனிங்க.
சரி அக்கா.உடம்ப பாத்துக்கோங்க.வைக்கிறேன்.
காலை கட் செய்த உடன் முதல்ல கார்த்திக்கு கால் பண்ணி அக்கா வீட்டுக்கு தான் போயிருக்காங்கன்னு சொல்லு.பாவம் பயந்துட்டு இருப்பாங்க.
பின் கார்த்திக்கிற்கு கால் செய்து தகவலை சொன்னான் மகேஷ்.
அதை கேட்ட உடன் தான் கார்த்திக்கிற்கு உயிர் வந்தது.பைக்கை யூ டர்ன் அடித்து நேராக தனது வீட்டை நோக்கி செலுத்தினான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டை அடைந்தான் கார்த்திக்.
பைக்கை ஸ்டாண்ட் போட்டு விட்டு நேராக செருப்பை கூட கழட்டாமல் ரூமை நோக்கி ஓடினான் கார்த்திக்.
ரூமிற்கு சென்று ரூம் கதவை வேகமாக திறக்க அங்கு ராஜி சோபாவில் அமர்ந்து கைகளை தலைக்கு வைத்து கண் மூடி இருந்தாள்.
ராஜி என்று மேல்மூச்சு வாங்க கூப்பிட்டான்.ம்ஹமஹ்மஹ்மஹ் என்று மூச்சு வாங்கினான்.
ராஜியிடம் எந்த அசைவும் இல்லை.
ராஜி. உன்னைத்தான்.ராஜி
என்று சொல்லிவிட்டு அவள் அருகில் சென்றான் கார்த்திக்.
ராஜியிடம் எந்த அசைவும் இல்லாது போக ராஜி என்று அவள் தோலை தொட்டான்.
விருட்டென்று எழுந்த ராஜி கார்த்திக்கின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டாள்.
ஆஆஆஆஆஆஆ.
ரமேஷ் வீட்டுக்கு அவனை அடிக்க போனியா.
அது வந்து ராஜி நான்.
பளார்.
ஆஆஆஆஆஆஆஆ.
அவன் வந்து உன்கிட்ட சொன்னாதான் என்ன பத்தி உனக்கு புரியனும்.அப்படித்தான.
அது இல்ல ராஜி.நான் என்ன சொல்லவ வரேன்னா.
பளார்.
ஆஆஆஆஆஆ.வலிக்குதுடி.
பளார்.
ஆஆஆ.
ஷ்ஷ்ஹ்.பேசாத.பேசக்கூடாது.
ம்ம்ம்ம்ம்.என்று வாய் மேல் விறல் வைத்தான் கார்த்திக்.
சொல்லு.எதுக்காக டிவோர்ஸ் நோட்டீஸ் வச்ச.
அதுவா ராஜி.நீயா வந்து.
பளார்.
பேசதன்னு சொன்னேன்ல.
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுஉஉஉ.பேசாதன்னும்.சொல்ற.பேசினா அடிக்கிற.நான் என்னதான் பண்றதாம்.
பளார்.
ஷ்ஷ்ஷ்ஷ் அழாத.ச்சீ வாய மூடு.
ம்ம்ம்ம்ம்.என்று வாய் மேல் விரல் வைத்தான்.கார்த்திக்.
என்ன இந்த 5 நாளும் எவ்ளோ கஷ்டப்படுத்தின.கிட்டத்தட்ட ஒவ்வொரு நிமிஷமும் செத்து பிழைச்ச மாதிரி இருந்துச்சு தெரியுமா. என்று ராஜியும் அழுதாள்.
உனக்காக எத்தனை நாள் எப்படில்லாம் உன்கிட்ட நான் சொன்னேன்.ஆனா நீ பெரிய இவனாட்டும் என்ன இன்சல்ட் பண்ற.
அன்னைக்கு பைக்ல லாங் ட்ரைவ் கூட்டிட்டு போன்னு சொல்றேன்.நீ ரமேஷ் கூட போனது இல்லையான்னு கேக்குற.உனக்காக ஆசை ஆசையாய் அன்னைக்கு உன் டிரஸ் தேச்சி வைக்கிறேன்.கொஞ்ச நாளைக்கு நீ செய்வ.அப்றம் யார் செய்வாங்கன்னு கேக்குற.
லூசுக்கூ.
என்னடி கெட்ட வார்த்தைலா பேசுற.
பளார்.
பேசத்தன்னு சொல்றேன்ல.மூச்.வாயை திறந்த கொன்னுடுவேன்டா ராஸ்கல்.மூடுடா.
ம்ம்ம்ம்ம்ம்.வாயை மூடி கொண்டே மொம்மு.என்றான் கார்த்திக்.
எந்த பொண்ணுடா ஒருத்தன மனசுல நினைச்சிட்டு இன்னொருத்தனுக்கு உடம்ப காட்டுவா.அப்ப கூட உன்னால புரிஞ்சிக்க முடியலை.முட்டாள்.
இந்த 5 நாளுல என்ன எவ்ளோ பாடு படுத்தின.தெரிஞ்சே தானடா எல்லாம் செஞ்சிருக்க.
இங்க பாரு.
எங்க என்பது போல கார்த்திக் கேக்க.
இங்க பாருடா என்று கன்னத்தில் அடித்து விட்டு இது என்னனு தெரியுதா என்று கார்த்திக் அவளுக்காக வாங்கி வைத்திருந்த செயினை கழட்டி அவன் மீது வீசினால்.
அவன் மார்பில் பட்டு கீழே விழுந்த செயினை பார்த்த கார்த்திக் மூச்சு வாங்கி கொண்டே சிரித்தான்.
இதை என்னைக்காவது நீ வச்ச இடத்துல பாத்ருக்கியா.அது இல்லனு தெரிஞ்சப்பவாச்சும் என்கிட்டே கேட்ருக்கலாம்ல.
அன்னைக்கு கோவில்ல வச்சி எத்தனை தடவை நீ பாக்கணும்னு எடுத்து காமிச்சேன்.அப்ப கூட இந்த மரமண்டைக்கு புரியல.
எனக்கு எப்படிடி தெரியும்.நீயாச்சும்.
பளார்.
பேசாதடா.அடிச்சே கொன்னுடுவேன்.
உனக்கு பச்சை கலர் பிடிக்கும்னு அந்த கலர் சேலை பிடிக்கும்னு கட்டி,உனக்காக நீ ஆசைப்பட்ட மாதிரி என்ன பாக்கணும்னு மேக்அப்லா போட்டுக்கிட்டு உன் முன்னாடி வந்து எப்படி இருக்குன்னு கேட்டா ப்ளூ கலர் கட்டிருந்தா நல்லா இருக்கும்னு சொல்ற.
உனக்கு பச்சை கலர் பிடிக்கும்னு அந்த கலர் சேலை பிடிக்கும்னு கட்டி,உனக்காக நீ ஆசைப்பட்ட மாதிரி என்ன பாக்கணும்னு மேக்அப்லா போட்டுக்கிட்டு உன் முன்னாடி வந்து எப்படி இருக்குன்னு கேட்டா ப்ளூ கலர் கட்டிருந்தா நல்லா இருக்கும்னு சொல்ற.
எனக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா.என்னைக்கு உன்கிட்ட சவால் விட்டேனோ அன்னைக்கே நான் தோத்துட்டேன்டா.அது ஏன்டா உனக்கு புரியலை.அழுது
கொண்டே சொன்னாள் ராஜி.
கொண்டே சொன்னாள் ராஜி.
ராஜி நான் இப்போவாச்சும் கொஞ்சம் பேசிக்கி. . .
பளார்.
ஆஆஆஆஆஆ.என்னடி.என்ன பேசவே விட மாட்டேங்குற.இதுக்கு மேல என்ன அடிச்ச.
என்னடா பண்ணுவ.என்ன பண்ணுவ.
அடிச்ச கைய பிடிச்சிட்டு பேசுற வாயில முத்தம் கொடுத்துடுவேன்.
கிழிச்ச.என்று சொல்லி அவனை அடிக்க கையை ஓங்கினாள் ராஜி.
அவள் கையை பிடித்து பின் புறம் மடக்கி அவள் உதட்டில் தன் உதட்டை பொருத்தினான் கார்த்திக்.
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்.விடுடா எருமை மாடே
அவனிடம் இருந்து திமிறி அவனை விலக்கினாள் ராஜி.
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்.விடுடா எருமை மாடே
அவனிடம் இருந்து திமிறி அவனை விலக்கினாள் ராஜி.
அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டே அழுதாள் ராஜி.
ஹேய் சாரி ராஜி.சாரி டீ.அழாத.ப்ளீஸ்.
போடா லூசு.
சரி சரி.அழாத.
இந்த 5 நாளுல எத்தனை தடவை உனக்கு கால் பண்ணினேன்.ஒருதடவையாச்சும் எனக்கு நீ கால் பண்ணுனியா.
ஏய் நீயும் விளையாடினன்.நானும் விளையாடினேன்.ப்ளீஸ்.அழாத.
எதுடா விளையாட்டு.எது விளையாட்டு.டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுக்குறது விளையாட்டா.செத்து போயிருப்பேன்டா.அழுதாள் ராஜி.
ஹேய் சாரிடி.அப்படிலா சொல்லாத.தெரியாம பண்ணிட்டேன்.சாரி.
போடா.என்ன அழ வைக்க மாட்டேன் அழ வைக்க மாட்டேன்னு சொல்லி இப்போ என்ன இவ்ளோ தூரம் அழ வச்சிட்டல்ல.
இது தான்.கடைசி.இனிமேல் என் கண்ணம்மா எதுக்காகவும் எப்பவும் அழ விட மாட்டேன்.சத்தியம்.
போ ஒன்னும் தேவை இல்லை.
ஏய் இங்க பாரு.
போ.
இங்க பாருன்னு சொல்றேன்ல.
வேண்டாம் போ என்று மூக்கை உறிஞ்சினாள் ராஜி.
இங்க பாரு என்று அவள் முகத்தை தன் கைகளால் திருப்பி.கலைந்த அவள் முடிகளை ஒதுக்கி விட்டு அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி கொண்டு
ஐ லவ் யூ.எப்போதும்.உன்கூட நான் இருப்பேன்.உனக்கு 80 வயசு.எனக்கு 80 வயசு ஆனாலும்.அப்பவும் இதே காதலோட இருப்பேன்.நீ உங்க வீட்ல இருந்ததை விட என்கூட இருக்கும் போது நான் உன்னை சந்தோசமா வச்சிப்பேன்.என்கூட என் வாழ்க்கை முழுசும் என்கூட வர உனக்கு சம்மதமா.
இதை சொல்றதுக்கு உனக்கு இவ்ளோ நாள் தேவை பட்டுருக்கு.
அதான் இப்போ சொல்லிட்டேன்ல.சொல்லு.
கார்த்திக்கின் முகத்தை பார்த்து அதே போல அவன் கன்னத்தை தன் கைகளில் ஏந்தி
நானும் என் வாழ்க்கை முழுதும் உன்கூட இருக்கனும்.நீதான் என் உலகம்னு சொல்ற அளவுக்கு உன்னை லவ் பண்ணனும்.உனக்குள்ள புதைஞ்சி கிடைக்கிற ராஜியோட காதலை ராஜியா மொத்தத்தையும் நான் அனுபவிக்கனும்.என்னையும் உன்கூட கூட்டிட்டு போ.என்றாள் ராஜி.
இருவரும் ஒருவர் விழிகளை மற்றவர் நோக்க ராஜி கார்த்திக்கின் நெற்றி,கன்னம்,கண்கள்,மூக்கு என முத்தமிட்டாள்.
அதே போன்று கார்த்திக்கும் முத்தமிட்டு இறுதியில் ஒருவர் இதழை மற்றவர் கவ்வி கொண்டனர்.
No comments:
Post a Comment