மறுநாள் காலை கொடை விழா ஆரம்பமானது.அன்று முழுவதும் கார்த்திக் ராஜியிடம் சண்டை போடுவதும்,கிண்டல் செய்வது என்று ஜாலியாக சென்றது.
இதான் ராஜி அன்னைக்கு நடந்தது என்று சொல்லி கார்த்திக்
பிளாஷ் பேக்கை முடிக்க அதை கேட்டு ராஜி ப்ப்ப்பப்ப்ப்பா செம்ம என்றாள்.
பிளாஷ் பேக்கை முடிக்க அதை கேட்டு ராஜி ப்ப்ப்பப்ப்ப்பா செம்ம என்றாள்.
என்ன ராஜி கலாய்க்கிற.
இல்ல நிஜமாவே சூப்பர் பிளாஷ் பேக் சூப்பர்.எனக்கும் நியாபகம் இருக்கு.
உனக்கு நியாபகம் இருக்கா.
ஆமா.நீ குடிச்சிட்டு வந்தது அப்றம் நீ இப்போ சொன்னியே.அது எல்லாம் நல்ல நியாபகம் இருக்கு.இந்த தடவை அப்படி எதுவும் நடந்தா கொன்னுடுவேன் பாத்துக்கோ.
சரி ராஜி.கண்டிப்பா நடக்காது.நேத்து மாதிரி வீட்ல வச்சி உன் முன்னாடி மட்டும் தான்.
ம்ம்ம் சரி.கார்த்திக் சொன்னது புரியாமல் சரி என்று சொல்லிய ராஜி சில வினாடிகளில் அவன் சொன்னது புரிய
என்னது.அடி உன்னைய என்று கார்த்திக்கை அடிக்க ஓடினாள்.
ஹே ராஜி சும்மா சும்மா ப்ளீஸ் ப்ளீஸ் என்று தப்பித்து ஓட ராஜி அவனை துரத்தினாள்.
அன்று மாலை நேரம் கார்த்திக்கிடம் வந்த ராஜி
கார்த்திக் இன்னைக்கு கோவிலுக்கு போகலாமா என்றாள்.
என்ன ராஜி திடீர்னு.
போகலாம்னு தோணுச்சு.அதான் பைக்ல போய்ட்டு வரலாம்னு.
சரி ராஜி போகலாம்.என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.
ராஜி கார்த்திக்கிற்கு பிடித்த பச்சை நிற புடவையும் அதற்கு மேச்சாக ஜாக்கெட்டும் அணிந்து கார்த்திக் வாங்கி கொடுத்த செயின் வெளியே தெரியுமாறு அதை எடுத்து வெளியே போட்டு கொண்டாள்.
கார்த்திக் வேஷ்டி சட்டை அணிந்து வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஜீன்ஸில் வந்து ஏமாற்றத்தை அளித்தான் கார்த்திக்.
ராஜியிடம் வந்த கார்த்திக் போலாமா ராஜி என்றான்.
போகலாம்.பட் இப்படி இல்லை.
அப்ப எப்படி.
வெயிட்.என்று சொல்லி அன்று ராஜி கார்த்திக்கிற்கு எடுத்து கொடுத்த சட்டையையும் அதற்கு மேட்சாக ஒரு வேஷ்டியும் எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்து இதை உடுத்திட்டு வா போகலாம் என்றாள்.
ராஜி இது இப்போ வேண்டாமே.இன்னொரு நாள் உடுத்திக்கலாம்.
இப்போ இதை கட்டிட்டு வந்தா போகலாம்.இல்லனா.
இல்லனா.நான் சுடிதார் மாத்திக்கிடுவேன்.என்று ராஜி சேலையை கழட்ட போக.
ராஜி சேலைய மாத்த போறியா.ம்ம்ம்ம்ம்ன்ன.சரி ராஜி மாத்து மாத்து என்று கண்களை அகலமாக விரித்தான்.
ஆஆங் ஆசை தோசை அலையாத.அது மட்டும் நடக்காது.இது வேற என்று அவன் ஜீன்ஸில் காய் வைக்க.
ஐயோ ராஜி வேண்டாம் வேண்டாம்.அன்னைக்கு நடந்ததே போதும்.நீ வெளில இரு 5 நிமிஷத்துல மாத்திட்டு வரேன்.
அந்த பயம் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள் ராஜி.
டிரஸ் மாற்றி விட்டு வெளியே வர கார்த்திக்கை பார்த்து மெய் மறந்து நின்றாள் ராஜி.
அந்த சட்டையும் வேஷ்டியும் கார்த்திக்கிற்கு செம பிட்டாக மேன்லியாக இருந்தான் கார்த்திக்.
சூப்பரா இருக்க கார்த்திக்.
கலாய்க்காத ராஜி.
நிஜமா கார்த்திக் எனக்கே உன்ன பார்த்தா சைட் அடிக்கணும்னு தோணுது.
ப்ப்ப்ப்பா முடியலையே.போதும் ராஜி உனக்கு எதாவது வேணுமா இன்னைக்கு.ஏன் இப்படி ஐஸ் வைக்குற.
நிஜமாத்தான் கார்த்திக்.நான் எப்படி இருக்கேன் இந்த ட்ரெஸ்ல.
ராஜியை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை உற்று பார்த்தவன் கேவலமா இருக்கு ராஜி.
என்ன நல்லா இல்லையா.எனக்கு நல்லாத்தானே தெரியுது.
தெரியுதுல ராஜி.அவ்ளோ அழகா இருக்க.சத்தியமா சொல்றேன் விழுந்துட்டேன்.
ம்ம்ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டினாள் ராஜி.பின்
வேற ஒன்னும் தெரியலையா என்றாள் ராஜி.
வேற என்ன என்று மீண்டும் மேலிருந்து கீழ் வரை ராஜியை உற்று பார்த்தான் கார்த்திக்.ஆனால் அந்த செயினை அவனால் கண்டுபிடிக்க முடியலை.
அந்த மல்லிகை பூ.சந்தனம் சின்னதா ஒரு ஸ்ட்ரீக்.நெற்றி வகிட்டுல குங்குமம் பாத்துட்டே இருக்கலாம் போல இருக்க ராஜி.
மயிறு இவ்ளோ கண்டு பிடிச்ச உனக்கு இந்த செயினை கண்டு பிடிக்க முடியலையா.இல்ல பாத்தும் பாக்காத மாதிரி நடிக்கிறியா.லூசு என்று மனதிற்குள் திட்டிகொண்டே அவ்ளோதானா என்றாள் ராஜி.
அவ்ளோதான் ராஜி.
அப்ப சரி வா போகலாம்.
பின் இருவரும் பைக்கில் கோவிலுக்கு சென்றனர்.போகும் வழியில் கார்த்திக்கின் தோல் மீது கைகளை வைத்து கொண்டு பல கதைகளை பேசிக்கொண்டிருந்தாள் ராஜி.கார்த்திக்கிற்கு நடப்பது எல்லாம் கனவு போல இருந்தது.
கோவில் வந்த உடன் இருவரும் இறங்கி சாமி கும்பிட சென்றனர்.அங்கு அய்யர் அர்ச்சனைக்கு பெயர் நச்சத்திரம் கேட்க கார்த்திக் சொல்ல வாய் எடுக்க ராஜி முந்திக்கொண்டு கார்த்திக்கின் பெயர் நட்சத்திரம்,ராஜியின் பெயர் நட்சத்திரம் என்று ஒவ்வொன்றாக சொல்லி முடித்தாள்.
இதை பார்த்த கார்த்திக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது.இது தன்னுடைய ராஜிதானா இல்ல வேற யாரோவா.நம்ப முடியாமல் அவளையே பார்க்க அதை கவனித்த ராஜி என்ன என்பது போல பார்க்க ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தான் கார்த்திக்.
அப்ப கண்ணை மூடிட்டு சாமி கும்பிடு என்பது போல ராஜி சைகை காமிக்க கார்த்திக் கண்ணை மூடிக்கொண்டான்.
கண்களை மூடிய கார்த்திக் கடவுளே.உங்கிட்ட இத்தனை நாள் கேட்டுக்கிட்டதுக்கு நீ என்ன கை விடலை.என் ராஜி எனக்கு கிடைச்சிட்டா.அவ என்ன விரும்புறான்னு எனக்கு தெரியுது.ஆனால் அவகிட்ட நெருங்குறதுக்கும் பயமா இருக்கு.இன்னும் அவ ரமேஷை நினைச்சுட்டு இருக்காளோன்னு பயமா இருக்கு.இன்னும் 40 நாள் தான் இருக்கு எங்களோட சவால் முடியுரதுக்கு.நீதான் எப்படியாவது அவ மனசை திறந்து என்கிட்ட சொல்ல வைக்கணும்.எங்களை எப்படியாவது சேர்த்து வைப்பா என்று வேண்டினான்.அப்போது கோவில் மணி அடிக்க அது ஏனோ கடவுளின் ஆசி போல எண்ணிக்கொண்டான் கார்த்திக்.
ராஜியோ கடவுளே கார்த்திக் வேண்டிகிட்ட மாதிரி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்ட.இத்தனை நாளும் கார்த்திக் தான் எங்க ரெண்டு பேருக்காகவும் வேண்டிகிட்டான்.இப்போ மொத முறையை நான் வேண்டிக்கிடுறேன்.நீதான் கார்த்திக் மனசை திறந்து என்கிட்ட பழைய கார்த்திக்கா வர வைக்கணும்.எங்களுக்குள்ள சவால் ஆரம்பிச்சு இன்னும் 40 நாளில முடிய போகுது.தயவு செஞ்சி கார்த்திக் என்கிட்ட திரும்பி வரணும்.எப்படியாவது அவன் சொல்லாட்டாலும் என்னை அவன்கிட்ட சொல்ல வச்சிடு.எப்போதும் என்ன ஜெயிக்க வைக்கிற கார்த்திக் கிட்ட இந்த தடவை நான் தோத்து போகணும்.நீதான்பா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும் என்று வேண்டி கொண்டாள்.
அப்போது மணி அடிக்க ராஜி கண் விழித்தாள்.அய்யர் விபூதி கொடுத்துவிட்டு சென்று விட இருவரும் கோவிலை சுற்றி வந்தனர்.
பின் ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்து கொண்டனர்.
என்ன சார் ரொம்ப நேரமா வேண்டிக்கிட்டு இருந்திங்க போல.
ஆமா ராஜி.நீயும் தான் ரொம்ப நேரமா வேண்டிகிட்டு இருந்திங்க.என்ன வேண்டுதல்.
வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காதுப்பா.அதெல்லாம் சொல்ல கூடாது.ஆமா நீ என்ன வேண்டிகிட்ட.
அதே தான் வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காது.அதெல்லாம் சொல்ல கூடாது.
அதன் பின் இருவரும் சம்பந்தம் இல்லாமல் பேசி கொண்டிருக்க ராஜி கார்த்திக் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கார்த்திக் வாங்கி கொடுத்த செயினை வாயில் வைத்து பேசுவது போல அவன் கவனத்தை அதன் மீது திசை திருப்பினாள் ராஜி.
ஆனால் கார்த்திக் இருந்த சந்தோஷத்தில் அதை கவனிக்கவில்லை.
இதை பார்த்த ராஜி ரொம்பவே கடுப்பானால்.ஆனால் அதை கார்த்திக்கிடம் காட்டி கொள்ளவில்லை.
அப்போது ஒரு சிறு குழந்தை கார்த்திக் முதுகை தட்ட கார்த்திக் திரும்புவதற்குள் ஹே ராஜி என்று ராஜி எழுந்து அந்த குழந்தையை தூக்கி கொண்டாள்.
என்னது ராஜியா என்று சொல்லிவிட்டு கார்த்திக் திரும்ப போன முறை ராஜியுடன் வந்திருக்கும் போது ஒரு குழந்தையிடம் கார்த்திக் கொஞ்சி கொண்டிருந்தானே அந்த குழந்தையே வந்திருந்தது.
ஹை ராஜி என்று குழந்தையை பார்த்து கார்த்திக் கை காட்ட
ஹை பிரென்ட் என்றது குட்டி ராஜி
நீ என் பிரென்ட் இது யாரு என்று ராஜியை பார்த்து கேட்டது குழந்தை.
நீ என் பிரென்ட் இது யாரு என்று ராஜியை பார்த்து கேட்டது குழந்தை.
கார்த்திக் உன் பிரெண்ட்னா நானும் உன் பிரென்ட் தான்.
எப்படி.
நான் தான் உன் பிரெண்டோட பிரென்ட்.அதாவது வொய்ப்.சரியா.அப்போ நான் யாரு.
வொய்ப்னா என்ன.
இதை கேட்ட கார்த்திக் சிரிக்க ராஜி அவனை முறைத்தாள்.இரு இரு என்று ராஜியை பார்த்து சைகை காட்டி விட்டு
குட்டி ராஜி இப்போ டாடிக்கு மம்மி யாரு.அதே மாதிரிதான் இவுங்களும் எனக்கு சரியா.
சரி கார்த்திக்.இனிமே இவுங்களும் எனக்கு பிரென்ட்.ஆமா உன் பேரு என்ன.
என் பேரு ராஜி.
என் பேரும் ராஜி தான்.
அப்படியா சோ ஸ்வீட் என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள் ராஜி.
சரி ராஜிம்மா என்ன படிக்கிறிங்க.
நான் பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்.நீ என்ன படிக்கிற ராஜி.
நான் படிச்சி முடிச்சிட்டேன்.இப்போ நான் உன் டீச்சர் மாதிரி.
அப்ப என்ன அடிப்பியா.
இதை கேட்ட ராஜி சிரித்து விட்டாள்.அய்யயோ குட்டிம்மாவ போய் யாராவது அடிப்பாங்களா.நான் உன் பிரென்ட் இல்லையா அதனால அடிக்க மாட்டேன் சரியா.
ம்ம்ம் சரி ராஜி.
சரி ராஜிக்கு என்ன பிடிக்கும்.
எனக்கு ஐஸ் க்ரீம்.சாக்லேட் ரொம்ப பிடிக்கும்.
ராஜி கார்த்திக்கிடம் வாங்கிட்டு வருமாறு கண்ணை காட்ட கார்த்திக் சாக்லேட் வாங்க சென்றான்.
கார்த்திக் வருவதற்குள் குழந்தையின் அம்மா அப்பா வந்துவிட ராஜி அவர்களுடன் பேசி கொண்டிருந்தாள்.அதற்குள் குட்டி ராஜி, ராஜியிடம் க்ளோஸ் ஆகி விட்டாள்.
கார்த்திக் வந்து விட சாக்லெட்டை வாங்கி குழந்தையிடம் கொடுத்தாள் ராஜி.
அதை வாங்க மறுத்த குழந்தை அப்பா அம்மாவை பார்க்க அவர்களும் வாங்கிக்கோ என்று சொல்ல குழந்தை வாங்கி கொண்டது.
கார்த்திக் நீ வேஸ்ட்.ராஜி தான் என்னோட பெஸ்ட் பிரென்ட்.அவளுக்கு ஹாட்டோரி தெரியும்,மோட்டு பட்டுலு தெரியும்,பீம் தெரியும்.
அப்படியா எனக்கும் அதெல்லாம் தெரியும் குட்டி.
நீ பொய் சொல்ற.தேங்ஸ் ராஜி.
சரிடா குட்டி.ராஜி சாக்லேட் தந்தேன்ல.ராஜிக்கு ஒரு கிஸ் கொடு என்று ராஜி சொல்ல ராஜியின் கன்னத்தில் இச் என்று முத்தத்தை பதித்தாள் குட்டி ராஜி.
பின் கார்த்திகையும் முத்தமிட்டு கிளம்பி சென்றனர் அந்த குடும்பம்.
கார்த்திக்கை பார்த்து அந்த குழந்தை செம கியூட் இல்ல கார்த்திக்.
ஆமா ராஜி.நமக்கும் இல்ல எனக்கும் குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்.
முதல்ல என்ன சொன்ன.
ஒன்னும் சொல்லலையே.
இல்ல ஏதோ நமக்கும்னு சொன்ன மாதிரி இருந்துச்சு.
இல்ல எனக்கும்னு தானே சொன்னேன்.
சமாளிக்காத.சொல்ல வந்ததை சொல்லு.
ஒன்னும் இல்ல ராஜி.
நடிக்காத சொல்லு நமக்கும் இந்த மாதிரி ஒரு பொண்ணு பிறக்கணும்னு சொல்லு கார்த்திக் என்று மனதில் சொல்லி கொண்டு சரி கிளம்பலாமா என்று கேட்டால் ராஜி.
பின் இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
பின் வந்த இரண்டு நாட்களும் சந்தோசமாக சென்றது.மூன்றாவது நாள் இருவரும் தனது தாய் வீட்டிற்கு கொடை விழாவிற்கு காரில் சென்றனர்.
அங்கு சென்றதும் ராஜியின் தாய் லட்சுமி இருவரையும் வரவேற்றாள்.
ராஜி ப்ரியாவிடம் சென்று நல்லா இருக்கியா அக்கா.எப்போ வந்த.அத்தான் வரலையா என்றாள்.
நல்லா இருக்கேன்.அத்தானுக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு அதான் வர முடியலை.நானும் பையனும் மட்டும் தான் வந்தோம்.நீ நல்லா இருக்கியா.
நல்லா இருக்கேன்.
கார்த்திக் வந்துருக்கானா.எங்க இருக்கான்.
வெளில இருக்கான் அக்கா.உன் பையனோட விளையாடிட்டு இருக்கான்.
சரி நான் பாத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு கார்த்திக்கிடம் சென்றாள் பிரியா.
என்ன அத்தான் ஆளையே பாக்க முடியலை.மேரேஜ் அப்ப பாத்தது.
ஹே பிரியா நல்லா இருக்கியா.உன்னை தான் பாக்க முடியலை.
நான் நல்லா இருக்கேன்.எங்க.வீட்டை பாத்துக்கவே நேரம் சரியா இருக்கு.என்ன சொல்ரான் ஏன் பையன்.
எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.அது பர்சனல்.நீ வீட்டை பாத்துக்கிடுரிய.செம காமெடி.உன்னைய பாத்துக்கவே ரெண்டு பேரு வேணும்.பாவம் என் தம்பி.
காலையே ஆரம்பிச்சிட்டியா.உங்கிட்ட முன்ன மாதிரி சண்டை போட முடியாது.என் தங்கச்சி புருஷனா போய்ட்ட.பொழச்சி போன்னு விடுறேன்.
அக்கா என்ன சொல்றாறு உங்க அத்தான் என்று ராஜி கேட்க
வேற என்ன வழக்கம் போல வம்புக்கு இழுக்குறான்.
ஹலோ என்ன எங்க அக்காவையே கிண்டல் பண்றீங்களா.
தெய்வங்களே தெரியாம சொல்லிட்டேன் ஆள விடுங்கம்மா என்று சொல்லி விட்டு கார்த்திக் ப்ரியாவின் குழந்தையை தூக்கி கொண்டு எஸ்கேப் ஆகி விட்டான்.
ராஜியிடம் இன்னும் அப்படியே தான் இருக்கான்.அப்றம் சொல்லுடி எப்படி போகுது திருமண வாழ்க்கை என்று கேட்டாள் பிரியா.
அது ஏன் கேக்குற.அது ஒரு பெரிய கதை அக்கா.என்று தனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் முதல் இன்று நடந்தது வரை சொன்னாள் ராஜி.
அடிப்பாவி.இவ்ளோ நடந்துருக்கா.நான் கூட நீ சந்தோசமாதான் ஒத்துக்கிட்டன்னு நினைச்சேன்.இப்படி பண்ணிட்டியே.
அது ஏதோ கோவத்துல அப்படி நடந்துக்கிட்டேன் அக்கா.
தப்புடி.அவன் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க தாண்டி ட்ரை பண்ணான்.நான் தான் அவனை கொஞ்சம் கேவலமா திட்டி விட்டுட்டேன்.அதுல இருந்துதான் அவன் ஒதுங்கிட்டான்.ஆனா ரொம்ப நல்லவண்டி.தொலைச்சிடாத.
புரியுதுக்கா.இப்போ நானும் அவனை லவ் பண்றேன் அக்கா.கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன்.
சீக்கிரம் அவன்கிட்ட சொல்லி சந்தோசமா இருக்க வேலைய பாரு.அடுத்த தடவை நீ பேசும் போது நல்ல விசயத்தோட சொல்ற சரியா.
சரிக்கா.அதற்குள் சக்தி வந்துவிட அனைவரும் குடும்ப சகிதமாக கோவிலுக்கு சென்று வந்தனர்.மதிய சாப்பாட்டு வேலையின் போது ஆண்கள் சாப்பிட பெண்கள் பரிமாறினர்.
கார்த்திக் சாப்பிட்டு எழுந்து விட லட்சுமி ராஜி,பிரியா,சக்தியை சாப்பிட சொன்னாள்.
அப்போது ராஜி கார்த்திக் சாப்பிட்ட இடத்தில் அமர்ந்து அவன் சாப்பிட்ட இலையை தன்னருகில் இழுத்தாள்.
கார்த்திக் இருக்கிறானா என்று பார்த்து விட்டு அவன் இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டு அந்த இலையை விரித்தாள்.
இதை பார்த்த பிரியா என்னடி புருஷன் மேல அவ்ளோ பாசமா.அவரு சாப்பிட்ட இலைல தான் சாப்பிடணுமோ.என்றாள்.
ராஜி ஒன்றும் பேசாமல் சிரிக்க அதை பார்த்த லட்சுமி இதுல சிரிக்க என்னடி இருக்கு.இதுக்குலா கொடுத்து வச்சிருக்கணும்.இதை அருவருப்பா பாக்க கூடாது.இதெல்லாம் தான் ஒரு பொண்ணுக்கு பாக்கியம்.
அம்மா போதும்.பசிக்குது சாப்பாடு போடும்மா என்று ஷக்தி சொல்ல அனைவர்க்கும் சாப்பாடு வைத்தாள் லட்சுமி.
ராஜிக்கு அன்று தெரிந்த அருவருப்பு இன்று தெரியவில்லை.மாறாக அது ஏதோ கடவுளுக்கு படைத்ததை சாப்பிடுவதை போல உணர்ந்தாள்.
அன்று வீட்டில் நடந்தது நியாபகத்திற்கு வர அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.
அன்று இரவு கொடை விழா துவங்க ஆட்டம் பாட்டம் கச்சேரி என்று களைகட்டியது.அனைவரும் அதை நன்கு என்ஜாய் செய்தனர்.ஆனால் ராஜிக்கு மட்டும் தனிமையில் கார்த்திக்குடன் இருக்க நேரம் கிடைக்கவில்லை.
அன்று இரவு அனைவரும் உறங்க வெகு நேரம் ஆனது.மறுநாள் காலை பொழுது விடிந்தது.
காபியுடன் கார்த்திக்கை எழுப்பிய ராஜி குட் மார்னிங் என்றாள்.
குட் மார்னிங் ராஜி.
இன்னைக்கு என் பிரென்ட் கஸ்தூரி இருக்கால்ல அவளை நாம ரெண்டு பெரும் சேர்ந்து பார்த்துட்டு வரலாமா.
இல்ல ராஜி.நான் எதுக்கு.நீங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ்.பெர்சனலா நிறைய பேசுவீங்க.நான் எதுக்கு குறுக்க நந்தி மாதிரி.நீ போய்ட்டு வா.நான் வேணும்னா உன்னை ட்ராப் பண்றேன்.
இல்ல நீங்களும் வரீங்க.நீங்க வரீங்கன்னு நான் அவகிட்ட சொல்லிருக்கேன்.
இல்ல ராஜி வேண்டாம்.நான் வரலை.
அப்ப நானும் போகலை.
அடம்பிடிக்காத ராஜி.நீ போய்ட்டு வா.
சரி இப்படி பண்ணலாம்.நீங்க வந்துட்டு ஒர்க் இருக்குன்னு கிளம்பிடுங்க.நான் அவகூட பேசிட்டு இருக்கேன்.முடிஞ்சதும் வந்து பிக்கப் பண்ணிக்கோங்க.சரியா.
ம்ம்ம்ம்ம் இது ஓகே.எப்போ கிளம்பனும்.இன்னும் ஒருமணி நேரத்துல.
சரி டன்.என்று சொல்லிவிட்டு ரெப்பிரேஷ் ஆக சென்றான் கார்த்திக்.இருவரும் வீட்டில் சொல்லிவிட்டு ராஜியின் பிரென்ட் கஸ்தூரி வீட்டிற்கு இருவரும் சென்றனர்.
அங்கு பால்கனியில் நின்ற கஸ்தூரி இருவரையும் பார்த்து கை அசைக்க ராஜி அவளை பார்த்து கை அசைத்தாள்.
கீழே இறங்கி வந்த கஸ்தூரி ராஜி என்று சொல்லி அவளை கட்டி பிடித்தாள்.
எத்தனை நாள் ஆச்சு உன்னை பார்த்து.எப்படி இருக்க என்று கேட்டாள்.
நல்லா இருக்கேன்.நீ எப்படி இருக்க.
நான் நல்லா இருக்கேன்.ஆமா இதுஉஉஉஉஉஉ. என்று கார்த்திக்கை பார்க்க அங்கு கார்த்திக் கைகளை கட்டி கொண்டு இருவரையும் சிரித்து கொண்டே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
இது என் ஹாஸ்பேண்ட் கார்த்திக்.கார்த்திக் இது என் பிரென்ட்
கஸ்தூரி.
ஆமா.
சாரிங்க நான் அவகூட பேசிட்டு இருந்ததுல உங்களை கவனிக்கலை.
பரவா இல்லை.
உங்களை பத்தி ராஜி நிறைய சொல்லிருக்கா.உங்ககூட நான் பேசியிருக்க கூட செஞ்சிருக்கேன்.இப்ப தான் நேர்ல பாக்குறேன்.
ம்ம்ம்ம் எனக்கும் நியாபகம் இருக்கு.
வாங்க உள்ள போகலாம்.
வீட்டின் உள்ளே அனைவரும் சென்று விட ஜூஸ் கொடுக்கப்பட்டது.
சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கஸ்தூரி ஆரம்பித்தாள்.இருந்தாலும் நீங்க அப்படி செஞ்சிருக்க கூடாது கார்த்திக்.
என்ன.
விருப்பமே இல்லாமல் இப்படி நீங்க அவளை கல்யாணம் பண்ணிருக்க கூடாது.
என்ன சொல்றிங்க.
எல்லாம் ராஜி சொன்னா.அவ எவ்ளோ கஷ்ட படுறா தெரியுமா.
நீங்க என்ன சொல்றிங்க.
கஸ்தூரி என்ன பேசுற.அதெல்லாம் ஒன்னும் இல்லை.நீ சும்மா இரு.
இல்ல ராஜி அவங்களுக்கும் தெரியட்டுமே.ஏன் இப்படி பண்ணினீங்க.
ஹெலோ கஸ்தூரி ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லட்டுமா.இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்.சோ நீங்க கொஞ்சம் என்று வாயில் கை வைத்தான் கார்த்திக்.
கார்த்திக் ப்ளீஸ் கொஞ்சம் கோவப்படாம இரேன் ப்ளீஸ்.
ராஜி உன் ஹாஸ்பேண்ட் ரொம்ப பேசுறாரு.
யாரு பேசுனாங்க.உங்க பிரென்ட் உங்க கிட்ட சொன்னாங்கன்னா அதை உங்க பிரென்ட் கிட்ட போய் கேளுங்க.அதை ஏன் என்கிட்ட வந்து சொல்றிங்க.அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கிறதே தப்பு.இதுல பேச வந்துட்டாங்க.
கஸ்தூரி ப்ளீஸ் கொஞ்சம் பேசாம இரு.நாங்க ரெண்டு பேரும் இப்போ லவ் பண்றோம்.ப்ளீஸ் பழசை பத்தி பேசாத.கார்த்திக் நான் அவ பேசினதை தப்பா எடுத்துக்காத ப்ளீஸ்.
இல்ல ராஜி எப்படி உறுத்தல் இல்லாம பேசுறாங்க பாரேன்.
ஐயோ கஸ்தூரி கொஞ்சம் அமைதியா இரு.உங்கிட்ட இன்னும் நிறைய விஷயம் சொல்லவே இல்லை.கொஞ்சம் பொறுமையா இரு.
இட்ஸ் ஓவர் ராஜி.நான் கிளம்புறேன் நீ பேசிட்டு கால் பண்ணு.நான் பிக்கப் பண்ணிகிடுறேன்.பை.என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கார்த்திக்.
கார்த்திக் ஒரு நிமிஷம் அது எப்பவோ சொன்னதை அவ உங்கிட்ட சொல்றா.இப்ப சொல்றேன் கார்த்திக் நான் உன்னை லவ் பண்றேன்.இது உண்மை.ஐ லவ் யூ கார்த்திக்.
கார்த்திக் ராஜியை முறைத்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான்.பின் திரும்ப வந்தவன் கஸ்தூரியிடம் உங்களுக்கு ஒரு ப்ரீ அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க.எங்களுக்குள்ள எவ்ளோ பிரச்சனை வேணும்னாலும் இருக்கலாம்.ஒரு பிரெண்டா நீங்க அதுக்கு எவ்ளோ சொலுஷன் வேணும்னாலும் நீங்க அவளுக்கு சொல்லுங்க.அதுக்காக அதை தீர்த்து வைக்கிறேன்னு நீங்க உள்ள வராதீங்க.பிகாஸ் இது எங்க ரெண்டு பேரு சம்பந்தபட்ட விஷயம்.
என்னமோ சொல்றீங்க உங்க பிரெண்ட ஏமாத்திட்டேன்னு.உங்களுக்குள்ளா ஒருத்தன் சின்சியரா ஒரு பொண்ண ஒரு பையன் லவ் பண்ணினா அது ஏமாத்துறதா.
முதல்ல உங்களை அடிக்கணும்.நல்லா இருக்குற ஒரு பொண்ணை உங்களோட பிரென்ட் ப்ரொபோஸ் பண்ணினா அதுக்கு அந்த பொண்ணு அதுல இன்டெரெஸ்ட்டே இல்லாட்டாலும்.
ஹே அவன் சூப்பரா இருக்காண்டி.உன்ன எவ்ளோ லவ் பண்ரான்னு தெரியுமா.உனக்காக கையல்லா அறுத்துருக்காண்டி.அவன் மட்டும் உன்னை லவ் பண்ணாம என்ன லவ் பண்ணிருந்தான்னா உடனே ஓகே சொல்லிருப்பேண்டின்னு சொல்லி சொல்லியே அவளை உசுப்பேத்தி அவளை லவ் பண்ண வைக்க வேண்டியது.
இப்படி செய்யுற நீங்க நல்லவங்க.நாங்க கெட்டவங்கலா.அந்த ரமேஷ் உன் பிரென்ட் அப்படிங்கிறதுனால தான நீ பேசுற.அவன் அப்படி அழுதான்,விஷம் குடிச்சான்னு உங்கிட்ட சொன்னதனால அவனோட லவ் உங்களுக்கு உசந்ததா தெரியுதோ.
இதே நான் உங்கிட்ட சொல்லிருந்தா என் லவ் உனக்கு பெருசா தெரிஞ்சிருக்கும்.அப்படித்தான.
ஆமா நீ ஒரு பையன லவ் பண்ணினல்ல.அவனை ஏன் நீ கல்யாணம் பண்ணிக்கலை.பதில் சொல்ல முடியாதுல.அதே மாதிரிதான்.
என்னோட காதல் பெருசு அவனோட காதல் பெருசுன்னுளா நான் பேசலை.அவளை சின்ன வயசுல இருந்தே நினைச்சிட்டு இருந்தேன்.பச்சையா சொல்லனும்னா காலைல எந்திருச்சு பாத்ரூம் போகும்போது கூட அவ கூட எப்படிலா வாழனும்.எப்படிலா இருக்கணும்னு கனவு கண்டுருக்கேன்.என்னோட காதல் அப்படித்தான்.
தப்பா பேசிருந்தா சாரி.இனிமே என்கிட்ட பேசின மாதிரி வேற யாருகிட்டயும் இதே மாதிரி பேசாத.உனக்குத்தான் அசிங்கம்.
என்று சொல்லிவிட்டு கார்த்திக் சென்று விட்டான்.
என்று சொல்லிவிட்டு கார்த்திக் சென்று விட்டான்.
கார்த்திக் பேசியதை கேட்டு ராஜி அழுது விட்டாள்.கஸ்தூரியோ என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாள்.
அழுத ராஜியை சமாதானப்படுத்த சென்ற கஸ்தூரி சாரி ராஜி.நான் ஏதோ அவசரப்பட்டு பேசிட்டேன்.
கண்களை துடைத்த ராஜி லூசாடி நீ.எல்லாம் சரி ஆகிட்டு வரவேண்டிய நேரத்துல ஏண்டி இப்படி பண்ணின.நான் கார்த்திக்கை லவ் பண்ண ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சுடி.
ராஜி என்னடி சொல்ற.
ஆமாடி.அதை பத்தி பேசத்தான் அவனை இங்க கூட்டிட்டு வந்தேன் இப்படி பண்ணிட்டியே.
ராஜி சாரி ராஜி.தெரியாம நடந்துட்டு.நான் வேணும்னா கார்த்திக் கிட்ட பேசுறேன்.
ஒன்னும் வேண்டாம்.அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.அவனை எப்படியாவது சமாதான படுத்தனும்.எனக்கு மட்டும் ஏண்டி இப்படி நடக்குது.
சாரி ராஜி.நீயும் ரமேஷும் எப்படி லவ் பண்ணுணிங்க.எவ்ளோ சந்தோசமா இருந்திங்க.அதை பாத்து மனசு கேக்கமதான் இப்படி பேசிட்டேன்.
யாருடி சொன்னா.நான் ரமேஷ லவ் பண்ணேன்னு.அவனை நான் லவ் பண்ணலைடி.அந்த வயசுல நான் அதை காதல்னு தப்பா புரிஞ்சிகிட்டேண்டி.அது வெறும் அட்ராக்ஷன் தாண்டி.ரமேஷ பிரிஞ்ச வழிய விட இப்போ நான் அனுபவிக்கிற வலி ரொம்ப கொடுமையானதுடி.இது தான் காதல்.
என்ன சொல்றமா நீ.
கார்த்திக்கும் தனக்கும் அன்று கஸ்தூரியை சந்தித்து பேசி விட்டு சென்றது முதல் இன்று வரை நடந்ததை கஸ்தூரியிடம் சொன்னால் ராஜி.
ஐயோ ராஜி பெரிய தப்பு பண்ணிட்டேண்டி சாரிடி சாரிடி என்று அவளை தன் மார்பில் கட்டிக்கொண்டு அழுதாள் கஸ்தூரி.
நான் கார்த்திக் கிட்ட கண்டிப்பா பேசுறேன் ராஜி.உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு.
இல்ல வேண்டாம்.நீ மறுபடியும் அவன்கிட்ட பேசி அசிங்கபடவேண்டாம்.என் காதல் நிஜம்.அதே மாதிரி கார்த்திக் காதலும் நிஜம்.கண்டிப்பா அவனே என்கிட்ட வருவான்.இல்ல நான் அவன்கிட்ட போவேன்.எனக்கு நம்பிக்கை இருக்கு.விடு.
பின் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொண்டு பிரிந்தனர்.ஆனால் ராஜிக்கு மட்டும் ஏனோ அழுகை நிற்கவில்லை.
வீட்டிற்கு வந்த பின் கார்த்திக் ராஜியை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தான்.ராஜி ஏனோ அவனை நெருங்கினாலும் அவளை விட்டு விலகியே இருந்தான்.
ராஜியின் வீட்டில் இருந்து கிளம்பும் வரை கார்த்திக் எதுவும் பேசவில்லை.ராஜி கேட்பதற்கு மட்டும் பதில் சொன்னான்.இருவரும் கார்த்திக் வீட்டிற்கு காரில் கிளம்பினர்.
காரில் போய்க்கொண்டு இருக்கும்போது அவன் எதாவது பேசுவானா என்று கார்த்திக்கின்
முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் ராஜி.
முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் ராஜி.
ஆனால் கார்த்திக் அவளை திரும்பி பார்க்கவே இல்லை.அவன் முகத்தை வைத்தே அவன் கோவமாக இருக்கிறான் என்று ராஜிக்கு தெரிந்தது.
அப்போது ராஜி காரில் மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்ய கார்த்திக் கோவத்தில் அதை ஆப் செய்தான்.
அவன் கோவத்தை பார்த்து ராஜிக்கு மிரட்சியாக இருந்தது.வீட்டிற்கு சென்று எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டாள்.அதுவரை அமைதியாகவே இருந்தனர்.இருவரும்.
வீட்டிற்கு வந்ததும் கார்த்திக் நேராக பெட் ரூம் செல்ல,ராஜி சாந்தாவுடன் பேசிவிட்டு 10 நிமிடம் கழித்து பெட் ரூம் சென்றாள்.
அங்கு கார்த்திக் சோபாவில் உட்கார்ந்து காதில் ஹெட்போன் மாட்டி கொண்டு தலையை சாய்த்து கண் மூடி இருந்தான்.
அவனருகே சென்று கார்த்திக் என்றாள் ராஜி.
அசைவு ஏதும் இன்றி போக கார்த்திக் தோலை உலுப்பினால் ராஜி.அவள் கையை வெடுக்கென தட்டி விட்ட கார்த்திக் ஹெட் போனை கழட்டி தூரமாக எறிந்தான்.
கார்த்திக் என்ன மன்னிச்சுடு கார்த்திக்.அவ எதுவுமே தெரியாம பேசிட்டா.ஆக்ச்சுவலா என்ன நடந்துதுன்னா.
நிறுத்து.ஒரு மண்ணும் எனக்கு தெரிய வேண்டாம்.அதான் உன் பிரென்ட் எல்லாத்தையும் சொன்னாலே.
இல்ல கார்த்திக் அது முன்னாடி எப்பவோ பேசினது.அதை போய் இப்ப அவ.
வேணாம் ராஜி எதுவும் தெரிய வேண்டாம்.நான் உன்ன லவ் பண்ணினதை விட நான் வேற எந்த தப்பும் பண்ணலை.நான் போய் உனக்கு துரோகம் பண்ணிட்டேனா.
போ ராஜி.நான் பண்ணினது தப்பாவே இருக்கட்டும்.இப்போ கொஞ்ச நாலா நீ என்கிட்ட நடந்துகிடதை வச்சி நான்கூட நீயும் என்ன லவ் பண்றியான்னு தான் நினைச்சேன்.ஆனா எல்லாம் தப்பு.நான் மாறமாட்டேனு சொல்லாம சொல்லிட்டல்ல ராஜி.
கொடுத்திடுறேன் ராஜி.டிவோர்ஸ் தான ராஜி உனக்கு வேணும்.உன்னோட பிறந்த நாள் பரிசா நான் கொடுத்துடுறேன்.இந்த கொஞ்ச நாள் அடஜஸ்ட் பண்ணிக்கோ.
இதை சொல்லும் போது அவன் கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது.அதை ஒருகையால் துடைத்து கொண்டே ராஜியிடம் சொன்னான் கார்த்திக்.
ராஜியும் அழுது கொண்டே இல்ல கார்த்திக்.என்ன மன்னிச்சுடு.நான் நிஜமாவே சொல்றேன்.உன்னை லவ் பண்றேன் கார்த்திக்.என்ன ஏத்துக்கோ ப்ளீஸ் என்று அழுதாள்.
வேண்டாம் ராஜி.எதுக்கு என்ன சமாளிக்கிறதுக்காக நடிக்கிற.நீ நீயாவே இரு ராஜி.அதான் என் ராஜிகிட்ட எனக்கு பிடிச்சது.
கார்த்திக் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.நானும் உன்னை விரும்புறேன்.இதை உனக்கு எப்படி புரிய வைக்கண்ணு எனக்கு தெரியலை.தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ.
அன்னைக்கு நீ என்கிட்ட சொல்லும் போது நான் எப்படி உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேனோ அதே மாதிரி தான் இப்பவும் நடந்துருக்கு.என்று
அழுக தொடங்கினாள் ராஜி.
அழுக தொடங்கினாள் ராஜி.
ஆனால் கார்த்திக் அவள் கடைசியாக சொன்னதை கேட்காமல் அங்கிருந்து சென்று இருந்தான்.ராஜி அவன் இருக்கிறான் என்று கண்களை மூடி அழுதுகொண்டே சொல்ல கண் திறந்து பார்க்கும் போது கார்த்திக் அங்கு இல்லை.வெளியே சென்றிருந்தான்.
அப்போது ராஜியின் போன் அடிக்க எடுத்து பார்த்தாள்.அதில் பிரியா என்று வர அழுகையை நிறுத்தி கொண்டு அட்டென்ட் செய்தாள்.
என்னடி வீட்டுக்கு போய்ட்டியா.கார்த்திக் கிட்ட ஏதாவது சொன்னியா என்றாள் பிரியா.
இல்லக்கா.ஒன்னும் சொல்லல என்று திக்கி திக்கி சொன்னாள் ராஜி.
ஏண்டி உன் குரலே சரி இல்லை என்ன நடந்துச்சு.
அக்கா என்று சொல்லிவிட்டு மீண்டும் உடைந்தாள் ராஜி.
ஹே ஏண்டி அழகுற.அழாதடி.என்ன நடந்துச்சுன்னு சொல்லு.
இல்லக்கா.இங்க பெரிய பிரச்சனை ஆகிட்டுக்கா.என்று நடந்ததை விலக்கினாள் ராஜி.
அடிப்பாவிஎ.உனக்கு மட்டும் ஏண்டி இப்படி நடக்குது.நீ எதுக்குடி அவ வீட்டுக்கு போற.இப்ப பாரு.எல்லாம் உன்னாலதான்.
ஆமா அக்கா எல்லாம் என்னாலதான்.
சரி சரி அழாத.நான் கார்த்திக் கிட்ட பேசுறேன்.
வேண்டாம் அக்கா.அவன்கிட்ட நீ பேச வேண்டாம்.நான் லவ் பன்றேன்னு சொல்லியும் வேண்டாம்னு சொல்லிட்டான்ல.அதனால இனி அவன்கிட்ட பேசவேண்டாம்.எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்.இனி இதை பத்தி நீ அவன்கிட்ட பேசக்கூடாது.என் உணர்வுகளை புரிஞ்சுக்கோ.
என்னமோ சொல்லுற.சரிடி முடிஞ்சா அவன்கிட்ட பேச ட்ரை பண்ணு.அவன் மனசு மாற வாய்ப்பு இருக்கு.
சரி அக்கா.வச்சிடுறேன்.
கால் கட் செய்த பின்பு ராஜி சிறிது நேரம் பாரம் குறையும் வரை அழுதாள்.பின் கண்ணாடியை பார்த்து உன் பின்னாடி எப்படிலா சுத்தினான் ராஜி.இப்போ நீயா அவனை தேடி போய் லவ் பன்றேன்னு சொன்னதனால தான இப்படி பன்றான்.நீ பண்ணினது தப்புதான்.அதுக்குன்னு நீ சொல்றதை கேக்குறதுக்கு கூடவா அவனுக்கு தோணலை.நீயா வர வரைக்கும் இந்த ராஜி உன்ன பத்தி நினைக்க கூட மாட்டா.அழாத ராஜி என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.
No comments:
Post a Comment