CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 20


காலை 11 மணியளவில் கண்விழித்தான் கார்த்திக்.அப்போது ராஜி துவைத்து காயவைத்த துணிகளை எடுத்து மடித்து வைத்து கொண்டிருந்தாள்.
கண்களை கசக்கி கொண்டு சோம்பல் முறித்து கொண்டே பார்க்க அங்கு ராஜி அவனை கைகளை இடுப்பில் வைத்து கொண்டு பார்த்து கொண்டிருந்தாள்.அவளை பார்த்து
குட் மார்னிங் என்றான்.
சாருக்கு இப்பதான் விடிஞ்சுதா.
ஆமா ராஜி.மணி எத்தனை.
மணி 11 ஆகுது.நைட் மட்டை ஆகிட்ட போல.
இல்லையே நான் ஸ்டெடியாதான் இருந்தேன்.மட்டைளா இல்லை.
அப்படியா.
ஆமா.
ம்ம்ம்ம் சரி.
ஆமா ராஜி நேத்து என்ன நடந்துச்சு.நான் ரொம்ப மோசமா நடந்துகிட்டேனா.
சார் தான் ஸ்டெடியா இருந்தீங்களே அப்ப ஏன் என்கிட்டே கேக்குரிங்க.
இல்ல கொஞ்சம் மட்டைதான்.சரி சொல்லு.ஆமா நான் எப்படி பெட்ல படுத்தேன்.
அப்ப நேத்து நைட் என்ன நடந்துச்சுண்ணே உனக்கு நியாபகம் இல்லையா.
இருக்கு.ஆனா இல்லை.
சரி நீயே கண்டு பிடிச்சிக்கோ.
ஐயோ இவ வேற படுத்துறாளே.நைட் என்ன நடந்துச்சுண்ணே தெரியலையே.சரக்கடிச்சோம்.அப்றம் ராஜி கிட்ட பேசினோம்.லவ் பன்ரேன்னு சொன்னோம்.அப்றம் அவ என்ன சொன்னா. யோசி யோசி யோசிடா என்று மனதுக்குள் பேசினான் கார்த்திக்.
ஹலோ என்ன நியாபகம் இல்லையா.
நினைவுகளில் இருந்து மீண்ட கார்த்திக் ம்ம்ம்ம் என்று தலையை சொரிந்து கொண்டே இல்லை என்றான்.
இல்லைல.அப்ப எதுக்கு கேக்குற.கொஞ்சமா குடிச்சிட்டு அலப்பறை பண்ணின.
நீதானே வாங்கி கொடுத்த.இப்ப என்ன குறை சொல்ற.
அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்னை சும்மா விடுறேன்.சரி குளிச்சிட்டு சாப்பிட வா.நேரம் ஆகுது.
சரி ராஜி ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லு.நான் எப்படி பெட்ல படுத்தேன்.அதை மட்டும் சொல்லு.
அதெல்லாம் சொல்ல முடியாது.நீயே கண்டு பிடிச்சிக்கோ.
அப்ப நீதான் என்னை பெட்ல படுக்க வச்ச.அப்படித்தானே.
ஆமா எனக்கு இதான் வேலை பாரு. நீ யோசிக்கிறத பார்த்தா நான் தான் உன்னை என் பக்கத்துல படுக்க வச்சு உன்னை கட்டி பிடிச்சு தூங்கின மாதிரி சொல்லுவ போல.
அப்ப அதுவும் நடந்துச்சா.ஒரு நிமிஷம் என்று கண்ணை மூடி கொண்டே ம்ம்ம்ம் ஆங்.ம்ஹுக்கும்.என்று உடம்பை நெளித்தான் கார்த்திக்.
இதை பார்த்த ராஜிக்கு அவன் என்ன யோசிக்கிறான் என்பதை தெரிந்து கொண்டு அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.பின் ஏய் யோசிக்காத. ச்சீ என்று அருகில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள்.
தலையணை விழுந்த உடன் அதை எடுத்து தன் மார்போடு வைத்து கொண்டு நினைக்கவே சூப்பரா இருக்கு ராஜி என்றான்.
கொன்னுடுவேன்.அப்படிலா எதுவும் நடக்களை. நீதான் போய் பெட்ல தடுக்கி விழுந்த.உன்னால நான் சோபால படுத்து தூங்கிருக்கேன்.எந்திரிச்சு போய் குளி முதல்ல என்று தலையணையை பிடுங்கி அவனை அடித்தாள் ராஜி.
சரி சரி போறேன்.வேற எதுவும் நான் உன்கிட்ட சொன்னேனா ராஜி.
குடிச்சிட்டு நீ உலரிட்டு இருந்த நான் எங்க அதை கேட்டேன்.
ஆமா ராஜி உன்கிட்ட வேற எதாவது பார்சல் கொடுத்தேனா.
ஆமா.உன்கிட்ட சாப்பிட எதாவது வாங்கிட்டு வான்னா எதை வாங்கிட்டு வந்துருக்க.
அப்ப உனக்கு பிடிக்கலையா.
நாட் பேட்.
சரி வரேன் என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றான்.
கார்த்திக் சென்ற பின் சரியான டியூப் லைட் தான்டா நீ.நேத்து அவ்ளோ பேசிட்டு இன்னைக்கு தலையணையை கட்டி பிடிக்குற.என்னைய கட்டி பிடிக்க வேண்டியது தான.வேண்டாம்னா சொல்ல போறேன்.போதையில் இருந்தா கொஞ்சமாவதும் நடந்தது என்னனு உனக்கு நியாபகம் இருக்காது.இல்ல நடிக்கிறியா. என்ன இருந்தாலும் நீயா வந்து சொன்னாதான் நான் ஓகே சொல்லுவேன்.நான் வந்து சொல்ல மாட்டேன் போடா என்று சொல்லி கொண்டாள்.
பாத்ரூமிற்குள் சென்ற கார்த்திக் கண்ணாடி முன் சென்று தன்னை பார்த்து பேசினான்.
ஏன்டா லூசு பயலே அறிவு இருக்காடா உனக்கு.அவளா குடிக்க கூப்பிட்டான்னா கொஞ்சம் அளவா குடிச்சு தொலைக்க வேண்டியது தானே.ஓவர் மப்புல என்ன நடந்துச்சுன்னு தெரியாம இப்படி மறுபடியும் அவஸ்தை படுறல்ல.
அவ சொல்றத பார்த்தா அவ சொன்ன மாதிரி நடந்துட்டுக்கும்னு தான் தோணுது.ஆனா அதை அனுபவிக்க கொடுத்து வைக்களையே உனக்கு.ஆனால் அவ அப்படி நடக்க விட்டிருக்க மாட்டாலே.என்ன நடந்துச்சு.
மம்ஹ்ஹ்ம்ம் ஒன்னும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குதே.என்று தலையை சொரிந்து கொண்டான்.சரி அவ வாயில இருந்தே வர வைக்க பாப்போம் என்று சொல்லிக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தான்.
அவனுக்கு ஏனோ இன்று அதீத சந்தோசமாக இருந்தது.குளித்து முடித்து விட்டு டவலோடு வெளியே வந்தவன் தீப்பிடிக்க
தீப்பிடிக்க முத்தம் கொடுடி என பாடிக்கொண்டே வெளியே வந்தான்.
ரூமில் சப்தம் இல்லாமல் இருக்க டவல்லை உருவி கட்டிலில் போட்டு விட்டு கண்ண கண்ணா உருட்டி உருட்டி என்ன பாக்குறா நான் என்ன கிளி பிள்ளையை என்று பாடிக்கொண்டே கைகளை தூக்கி கொண்டே ஷார்ட்ஸை எடுக்க கதவை திறந்து கொண்டு ராஜி உள்ளே வந்தாள்.
ஆஆஆ என்று கத்தி கொண்டே கார்த்திக் டவல்லை எடுக்க ச்சீய்ய்ய் கருமம் கருமம் என்று ராஜி கண்ணை மூடி கொண்டாள்.
வெளியே போ ராஜி போஒஒஒஒஒஒஒ என்றான் கார்த்திக்.
ராஜி போகாமல் கண்ணை மட்டும் மூடி கொண்டு ச்சீ கத்தாதே.நீ என்ன பொம்பளையா வெக்க படுற.முதல்ல டவல்லை கட்டு.
இரு இரு திறந்துடாத திறந்துடாத.இதோ கட்டுறேன்.வெயிட்.என்று சொல்லிக்கொண்டே ஷார்ட்ஸை எடுத்து போட்டான்.பின் டவல் எடுத்து மார்பில் போட்டு கொண்டு
ம்ம்ம் இப்ப துற.
கைகளை எடுத்து கண்ணை திறந்த ராஜி
இதெல்லாம் பாத்ரூம்ல வச்சி செய்ய வேண்டியது தான.
அதெல்லாம் இருக்கட்டும்.நீ எதாவது பாத்த.
என்ன பாத்தேன்.
ஒன்னும் பாக்கலைல.
அதெல்லாம் ஒரு கருமத்தையும் பாக்களை.
ராஜி தயவு செஞ்சு இந்த விஷயம் நமக்குள்ளையே இருக்கட்டும்.ப்ளீஸ்.
ஆமா.இதை ஊரு பூரா சொல்லுவாங்க பாரு.ஆமா அது என்ன ஆஆஆ ன்னு கத்துற.நினைச்சா சிரிப்புதான் வருது.
பிறகு என்ன பண்ண ராஜி.எனக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும்.
சரியான காமெடி பீசு நீ.பொண்ணுங்க மாதிரி கூச்சப்படுற.இதுல கிளு கிளுப்பான பாடல்கள் வேறு.என்ன கலாய்கிறதா நினைச்சு நீயே அசிங்க பட்டியா.
ராஜி.
என்ன.
நீ ஒன்னும் பாக்கலைல.
சத்தியமா பாக்கலை.
எனக்கு என்னமோ சந்தேகமா இருக்குது.
இப்ப அதுக்கு என்ன பண்ணை.
ஒன்னும் பண்ண வேண்டாம்.இனி இதை பத்தி பேச வேண்டாம்.
இனி இந்த மாதிரி பாட்டு படிச்சி என்ன கடுப்பு அடிக்க நினைச்ச இதை எல்லாருகிட்டையும் சொல்லிடுவேன் பாத்துக்கோ.
அப்படி மட்டும் பண்ணிடாத.இனி உன் முன்னாடி பாடவே மாட்டேன் போதுமா.
அத்து.சரி வா சாப்பிடலாம்.
நீ போ நான் வரேன்.
இப்போ என்ன.
இல்ல டிஷர்ட் போட்டுட்டு வரேன்.
அப்ப போடுங்க.
நீ போ ராஜி வரேன்.
இப்போ போட போறிங்களா.இல்லையா என்று ராஜி முறைக்க
உடனே டிஷர்ட் எடுத்து மாட்டினான் கார்த்திக்.
கார்த்திக் டிஷர்ட் போடும்போது அவன் வெற்று மார்பை ராஜி ரசித்து கொண்டிருந்தாள்
பின் இருவரும் ஒன்றாக சாப்பிட சென்றனர்.
அப்போது சாந்தா
கார்த்திக்கிடம் என்னடா திடீர்னு ஆஆஆ ன்னு கத்தின.என்ன ஆச்சு என்று கேட்டாள்.
இதை கேட்ட ராஜி வாயை மூடிக்கொண்டு சிரிக்க கார்த்திக் என்ன சொல்வது என்று தெரியாமல் ராஜியை பார்க்க ராஜி சிரித்து கொண்டிருந்தாள்.
சாந்தா ராஜியை பார்க்க ராஜி சிரிப்பதை நிறுத்தி விட்டு ஒன்னும் இல்லை அத்தை .சொல்லிடவா என்று கார்த்திக்கை பார்த்து கேட்டாள்.
வேண்டாம்.ப்ளீஸ் ப்ளீஸ் என்று சைகையால் ராஜியிடம் கார்த்திக் சொன்னான்.
அது வந்து அத்த குளிச்சிட்டு பாட்டு படிச்சிட்டே வந்தாங்களா.
ராஜி வேண்டாம்.சொல்லாத என்றான் கார்த்திக்.
நீ சொல்லுமா என்றாள் சாந்தா.
.கட்டில்ல இடிச்சிகிட்டாங்க.அதான் வலில கத்திட்டாங்க என்று சொல்லி சமாளித்தாள்.
அப்பாடா தப்பிச்சோம் என்று சாப்பிட்டுவிட்டு கார்த்திக் வெளியே சென்று விட ராஜி ரூமிற்கு சென்று கண்ணாடி முன் சென்று தன்னை பார்த்து சிரிக்க தொடங்கினாள்.
பின் இன்று நடந்ததை நினைத்து பார்த்து வெக்கத்தில் ஈஈஈ என்று கைகளால் கண்களை மூடி கொண்டாள்.
கார்த்திக்கின் வெற்று மார்பு அவள் கண்முன் வந்து சென்றது.கார்த்திக் கத்தியது சிரிப்பை வரவைத்தது.
அப்போது அவளுக்கு ரமேஷிடம் இருந்து போன் வந்தது சிரித்து கொண்ட போனை எடுத்து சொல்லு ரமேஷ் என்றாள்.
ஹை ராஜி என்ன சிரிப்பு சத்தமா இருக்குது.ரொம்ப சந்தோசமா இருக்க போல.
ஆமா ரமேஷ் என்று நேற்று இரவு கார்த்திக் உடன் நடந்தவற்றை ரமேஷிடம் சொன்னால்.இன்று நடந்ததை சொல்லவில்லை.
அனைத்தையும் கேட்ட ரமேஷ் அப்புறம் என்ன ராஜி நீ அவன்கிட்ட சொல்லிட வேண்டியது தான.
இல்ல ரமேஷ்.அவனா சுய நினைவோடு பழைய கார்த்திக்கா என்கிட்டே வந்து ஒருநாள் சொல்லுவான்.அன்னைக்கு புது ராஜியா அவன்கிட்ட என் லவ்வ சொல்லி அவனை வேற ஒரு உலகத்துக்கு கூட்டிட்டு போகணும்.அதுவரைக்கும் இப்படித்தான்.பட் இதுவும் நல்லா இருக்கு.
என்னமோ ராஜி.விளையாட்டு விபரீதத்துல முடியாம இருந்தா சரி என்று சொல்லி விட்டு பின் நண்பர்கள்.ரமேஷின் வாழ்க்கை என்று பேச்சு சென்றது.
அப்போது தான் அவர்களுடைய தோழி கஸ்தூரி நியாபகமே ராஜிக்கு வந்தது.ரமேஷ் போன் பேசி முடித்த பின் ராஜிக்கு கஸ்தூரியை பார்க்க வேண்டும் போல இருந்தது.

கார்த்திக்கை லவ் பண்றதை அவகிட்ட சொல்லணும்.அவகிட்ட நிறைய பேச வேண்டும் போல இருந்தது.கார்த்திக்குடன் அவள் வீட்டிற்கு போகலாம் என்று யோசித்தாள்.ஆனால் கார்த்திக் இதற்கு சம்மதிப்பானா என்று யோசித்தாள்.சரி கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து கொண்டாள்.
ராஜியின் அம்மா லட்சுமியிடம் இருந்து ராஜிக்கு போன் வந்தது.இப்போ எதுக்கு அம்மா கால் பன்றாங்க என்று யோசித்து கொண்டு அட்டென்ட் செய்து சொல்லுமா எப்படி இருக்க என்றாள் ராஜி.
நல்லா இருக்கேன்மா.நீ எப்படி இருக்க.கார்த்திக் எப்படி இருக்கான்.
எல்லாரும் நல்லா இருக்காங்கமா.என்ன விஷயம்மா.
நம்ம
கோவில்ல ரெண்டு நாள் கழிச்சி கொடை வச்சிருக்காங்க.நீங்க குடும்பத்தோட கண்டிப்பா வரணும்.மாமா கிட்ட நான் பேசிட்டேன்மா.அதான் உன்கிட்டயும் சொல்லிடுறேன்மா.
கண்டிப்பா வரோம்மா.கார்த்திக் கிட்டையும் சொல்லிடுறேன்மா.
சரிம்மா.அவன்கிட்டயும் சொல்லு.உங்களை கண்டிப்பா எதிர் பார்ப்பேன்.
சரிம்மா.அக்கா வருவாளா.
அவகிட்டையும் சொல்லிருக்கேன்.கண்டிப்பா வரேன்னு சொல்லிருக்கா.அவ மாப்பிள்ளை கிட்டயும் சொல்லிருக்கேன்.அவுங்களால வர முடியாதாம்.அதனால அக்கா மட்டும் வரலாம்.
சரிம்மா.நாங்க கண்டிப்பா வரோம்மா.
சரிம்மா.வச்சிடுறேன்மா.
சரிம்மா.
போன் துண்டிக்கபட்ட பின் ராஜி கார்த்திக்கிட்ட எப்படி சொல்றது.சொன்னா கண்டிப்பா வருவானா இல்லையா என்று யோசித்தாள்.
கார்த்திக் வரவில்லை என்றாள் தான் மட்டும் சென்று வர வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் கார்த்திக் வந்து விட கார்த்திக் உடன் அம்மா போன் செய்த விஷயத்தை பேசினாள்.அதற்கு கார்த்திக்
ஆமா ராஜி அத்தையும் என்கிட்ட சொன்னாங்க.கண்டிப்பா நாம போறோம்.சரியா.என்றான்
கார்.த்திக் வருவானா மாட்டானா என்று பயந்த ராஜிக்கு அவனுடைய இந்த பதில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கார்த்திக் இப்படி உடனே ஓகே சொல்லிட்ட.கொஞ்சமாச்சும் பிகு பண்ணனும்பா.நான் உன்கிட்ட கெஞ்சனும்.அதுக்கப்புறம் நீ ஓகே சொல்லணும்.இப்படி சப்பையா முடிச்சிட்ட.
எதுக்கு ராஜி கெஞ்சிகிட்டு எல்லாம்.என் ராஜி யார்கிட்டயும் எதுக்காகவும் கெஞ்ச கூடாது.எனக்கும் போகணும்னு ஆசையா இருந்துச்சு.சரின்னு சொல்லிட்டேன்.அதுவும் இல்லாம இதே மாதிரி ஒரு கோவில் கொடைல உங்க வீட்ல வச்சி உன்கூட நடந்த சில விஷயங்கள் இன்னும் எனக்கு நியாபகம் இருக்கு.சோ நாம போறோம்.
அப்படியா அப்படி என்ன நடந்துச்சு.
அப்படியே கொஞ்சம் மேல பாரு.
ஏன்.
இல்ல பாரேன்.பிளாஷ்பேக்னா இப்படித்தான் மேல பாக்கணும்.
அடப்பாவி.சினிமா பாத்து ரொம்ப கெட்டு போயிருக்க நீ.ம்ம்ம்ம்ம் சொல்லு

அப்போது ராஜி காலேஜ் செகண்ட் இயர் படித்து கொண்டிருந்தாள்.ராஜியின் வீட்டில் இதே கோவில் கொடை விழா.அது மே மாதம் என்பதால் கார்த்திக் வீட்டில் அவனுடைய கடைசி இரண்டு அத்தைகளும் தனது பிள்ளைகளுடன் விடுமுறையை கழிக்க வந்திருந்தனர்.
அந்த நேரம் ராஜியின் ஊரில் கோவில் கோடை என அழைப்பு வர கார்த்திக்,அவன் தங்கை லீலா மற்றும் அவன் அத்தைகளுடன் விழாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்றனர்.
அனைவரும் ராஜியின் வீட்டிற்கு வந்தவுடன் பேச்சும் சிரிப்புமாக சென்றது.கார்த்திக் மட்டும் ராஜியை சைட் அடித்து கொண்டு ஜாலியாக இருந்தான்.அது ராஜிக்கும் தெரிந்தே இருந்தது.ஆனால் அவள் அதை கண்டு கொள்ளவில்லை.
அப்போது ராஜி கார்த்திக்கிடம் என்ன சார் வேளைக்கு போறீங்க.ட்ரீட் எங்க என்றாள்.
ஹே அதான் கொடுத்தேன்ல.அப்புறம் என்ன.
அது சும்மா.அதெல்லாம் கிக்கே இல்ல.எங்களுக்கு சரக்குதான் வேணும்.என்றாள்ர் ராஜியின் அக்கா பிரியா.
ஆமா நீங்க கேப்பிங்க.உடனே வாங்கி கொடுத்தா குடிச்சிடுவிங்க பாரு.
நீ பர்ஸ்ட் வாங்கி கொடு நாங்க குடிக்கோமா இல்லையான்னு அப்புறம் பாரு.என்றால்
ஓகே ராஜிஇந்த தடவை கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.ஆனால் நீங்க கண்டிப்பா குடிக்கணும்.இல்லனா என்ன பண்ண.
சரி குடிக்கிறோம்.அப்படி இல்லன்னா நாங்க உனக்கு ட்ரீட் வைக்கிறோம் என்றாள் பிரியா.
சரி என்ன ட்ரீட்.
ம்ம்ம்ம் அதே சரக்கு தான்.என்றாள் பிரியா.
ச்சீசீ நான் இப்போ குடிக்கிறது இல்லை.
நம்பிட்டோம் நம்பிட்டோம்.என்றாள் பிரியா.
நிஜமாதான்.என் கேர்ள் பிரெண்டுக்கு நான் குடிக்கிறது பிடிக்கலை.அதனால நிறுத்திட்டேன் என்று ராஜியை பார்த்து சொன்னான் கார்த்திக்.
இந்த டைலாக்கைதான் நீ போன நியூ இயருக்கும் சொன்ன.இப்போ சரக்கு வாங்கிட்டு வருவியா மாட்டியா என்றாள் பிரியா.
அத்தை இங்க பாருங்க உங்க பொண்ணு சரக்கு கேக்குதுங்க என்று லட்சுமியிடம் சொன்னான் கார்த்திக்.
எனக்கு தெரியாது.அது உங்க பிரச்சனை.நீ வாங்கி கொடு இல்லனா கொடுக்காத.எனக்கு தெரியாது.என்ன விட்டுடுங்க என்று லட்சுமி சொல்லி விட
அப்ப குடும்பமே ஒரு முடிவுலதான் இருக்கீங்க என்றான் கார்த்திக்.
எப்படியும் நீ வாங்கிட்டு வரமாட்டா அப்ப எதுக்கு சீன் போடுற என்றாள் ராஜி.
இதுக்காகவே நான் வாங்கிட்டு வரேன்.நீங்க மட்டும் குடிக்கலை அப்றம் இருக்கு உங்களுக்கு.
பாக்கலாம் என்று ராஜியும் ப்ரியாவும் சொல்ல கார்த்திக் பீர் வாங்க சென்றான்.
அரை மணி நேரத்தில் கார்த்திக் ஒரு பீர் வாங்கிக்கொண்டு வந்தான்.நேராக ராஜியிடம் சென்று இந்தா நீ கேட்ட சரக்கு என்று அவளிடம் நீட்டினான்.
நான் சும்மாதான் கேட்டேன்.நான்லா குடிக்க மாட்டேன்.
அதெல்லாம் எனக்கு தெரியாது நீ குடிக்கிற.எங்க அவ.அவளும் கேட்டா இல்லை.பிரியா
ம்ஹும் நானும் குடிக்க மாட்டேன்.எனக்கு தெரியாது.என்று பிரியா ஓட.
அதெல்லாம் எனக்கு தெரியாது.இப்ப ரெண்டு பேரும் குடிக்கிறிங்க.வாங்கிட்டு வர மாட்டேன்னு தான அவ்ளோ பேச்சு பேசிணீங்க.இப்ப குடிக்கிறிங்க.
எனக்கு தெரியாது என்றாள் பிரியா.
அத்தை இங்க பாருங்க ரெண்டும் அந்த பேச்சு பேசுச்சு.இப்ப ஓடுறதை.
என்ன ரெண்டுவ பேரும் அவன்கிட்ட வாயடிச்சிங்கள்ல.இப்ப என்ன பண்ண போறீங்க என்று லட்சுமி கேட்க.
டக்கென்று பாட்டிலை வாங்கி பிரியா வாயில் வைத்தாள்.
ஒரு மடக்கு மட்டும் குடித்து விட்டு வைத்து விட்டாள்.
கார்த்திக் அதை வீடியோ எடுத்து கொண்டான்.பின் ராஜியை பார்த்து ம்ம்ம்ம் குடி என்று சொல்ல.
வேண்டாம் வேண்டாம் ப்ளீஸ் தெரியாம சொல்லிட்டேன்.இனிமே உன்கிட்ட ட்ரீட்டே கேக்க மாட்டேன்.ப்ளீஸ் விட்டுடு என்று சொன்னாள் ராஜி.
அதெல்லாம் முடியாது.இப்போ நீ குடிக்கிற என்று அவள் வாய் அருகே கொண்டு சென்றான்.
கார்த்திக் வேண்டாம் கார்த்திக் என்று சொல்லிக்கொண்டே ராஜியும் ஒரு மடக்கை குடித்து விட்டு ஓடி சென்று துப்பி விட்டாள்.
இனிமே ட்ரீட் சரக்குன்னு அக்கா தங்கச்சி வந்து சொல்லுங்க அப்றம் இருக்கு உங்களுக்கு.என்று கார்த்திக் சொல்லி விட்டு அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டான்.
அவன்கிட்ட கேட்டல்ல ஏன் குடிச்சா என்ன.இதான் கொஞ்சமா கிண்டல் பண்ணனும்னு சொல்றது என்று இருவரையும் பார்த்து லட்சுமி சொல்ல ம்மா சும்மா கிண்டல் பண்ணுனோம்.அவன் சீரியஸா வாங்கிட்டு வந்துட்டான்.நீ என்ன அவனுக்கு சப்போர்ட் பண்ற என்றாள் ராஜி.
அப்படித்தான் பண்ணுவேன்.ட்ரீட் ட்ரீட்னு கேட்டல்ல.இப்போ கொடுத்துட்டான்.இப்போ திருப்த்தியா
இல்ல பீர் நாங்க சாப்பிட மாட்டோம்.ஒன்லி சரக்குதான்.
அப்படியா அப்ப வாங்கிட வேண்டியதுதான் என்று கார்த்திக் சொல்ல
அய்யயோ வேண்டாம் வேண்டாம் என்று இருவரும் தெறித்து ஓடினர்.
இப்படியாக அரட்டையும்,கிண்டலுமாக செல்ல இரவு வந்தது.
அப்போது கார்த்திக்கின் நண்பர்கள் போன் செய்ய கார்த்திக் அவர்களுடன் சென்று சிறிது நேரம் கும்பாட்டம் பார்த்து கொண்டிருந்தான்.
பின் அனைவரும் சரக்கடிக்க செல்ல கார்த்திக் மட்டும் அதில் கலந்து கொள்ளாமல் இருந்தான்.
அப்போது இருவர் சேர்ந்து கார்த்திக்கிடம் நீயும் அடிக்க வேண்டியது தானே என்றார்கள்.
இல்ல வேண்டாம்.குடிச்சிட்டு அத்தை வீட்டுக்கு போனால் கண்டிப்பா எங்க அத்தை பொண்ணுங்க கண்டுபிடிச்சிடுவாளுக.அதனால வேண்டாம்.
இது கூடின சரக்குடா ஸ்மெல் வராது கட்டிங் மட்டும் அடி என்றான் மற்றொருவன்.
ஆள விடுங்கடா சாமி.என் ஆளு வேற இருக்கா.இன்னைக்குத்தான் சரக்கு அடிக்கிறதை விட்டுட்டேன்னு வீர வசனம் பேசியிருக்கேன்.வேண்டவே வேண்டாம்.
இவன் இப்படிதான் சொல்லுவான் ஊத்துடா என்று சொல்லி க்ளாசில் ஊற்றி கார்த்திக்கிற்கு ஊற்றி விட்டனர்.
கார்த்திக் விடாப்பிடியாக மறுக்க அனைத்தையும் குடிக்க வைத்தனர்.
இப்படியாக இரண்டு கட்டிங்கோடு கார்த்திக் நிறுத்தி கொண்டான்.
போதை தெளிந்து இரவு ஒரு மணி அளவில் அத்தை வீட்டிற்கு செல்ல அங்கு சிலர் தூண்டிவிட்டனர்.ராஜியும் அவள் அம்மாவும் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தனர்.
இரண்டாவது அத்தையின் பையன்கள் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது மாடியில் எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் ஒன்றை மாட்ட ராஜி கார்த்திக்கை கூப்பிட கார்த்திக் மாட்டி கொண்டிருந்தான்.
மாட்டி முடிக்கும் வரை கார்த்திக்கை பார்த்து கொண்டிருந்த ராஜி மாட்டி முடித்த பின் கார்த்திக்கிடம் குடிச்சிருக்கியா என்றாள்.
இல்லையே பிரெண்ட்ஸ் தான் குடிச்சாங்க.நான் சும்மாதான் இருந்தேன்.
பாத்தாலே தெரியுது.நீ குடிச்சிருக்கன்னு.என்ன சரக்கா என்று சிரித்து கொண்டே கேட்டாள் ராஜி.
இல்ல ராஜி.ஜஸ்ட் ஒன் பீர் அவ்ளோதான்.அதுவும் நான் குடிக்கலை.ஊத்தி விட்டுட்டானுக என்று தலையை சொரிந்து கொண்டே சொன்னான் கார்த்திக்.
உதட்டை சுளித்து கொண்டே பீர் மட்டும்.சரி வா சாப்பிடலாம்.என்று சொல்லி சாப்பிட கூட்டி சென்றாள் ராஜி.
பின் சாப்பிட்டு முடித்துவிட்டு ராஜியிடம் எப்படி ராஜி கண்டு பிடிச்ச என்றான் கார்த்திக்.
அதெல்லாம் அப்படித்தான்.மூஞ்ச பாத்தாலே தெரியுதே.இதுல நிறுத்திட்டேன்னு வீர வசனம் வேற.
ஈ ஈஈஈ ஈஈஈஈ.
சிரிக்காத.வழியுது. தொடைச்சுக்கோ.
தேங்க்ஸ் ராஜி.
சரி தூங்கு.காலைல பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றாள் ராஜி.

No comments:

Post a Comment