CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 24


வா இங்க உக்காரு என்று சொல்லி தனது அருகே உக்காரவைத்து கார்த்திக் கையை எடுத்து தன் மடி மீது வைத்து கட்டை பிரித்து நன்றாக துடைத்து விட்டாள்.
பின் கார்த்திக் குளித்து விட்டு சாப்பாடு எல்லாம் முடிந்த பின் மீண்டும் அவனை கூப்பிட்டு தன் அருகே உக்கார வைத்து அவன் கையை தன் மடிமீது வைத்து மருந்து தடவி லாவகமாக கட்டை கட்டி கொண்டிருந்தாள்.
ராஜி கட்டி கொண்டிருக்கும் போது கார்த்திக் ராஜியின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
அவள் மடி மீது தன் கை வைத்து,ராஜியின் முகத்தை தன்னிலை மறந்து அருகாமையில் ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்.பேண்ட் எயிட் கட்டி கொண்டிருக்கும் போது நாக்கை உதட்டின் நுனியில் வைத்து கொண்டு ராஜி கொடுத்த ரியாக்சன் ஒவ்வொன்றும் தனது மனதில் படம் பிடித்து கொண்டிருந்தான்.
கட்டி முடித்த ராஜி முடிஞ்சது.அவ்ளோதான் என்றாள்.
கார்த்திக்கிடம் பதில் எதுவும் இல்லாமல் போகவே
ஹெலோ சார் முடிஞ்சுது.
ஹலோ என்று அவன் முன்னாள் கைகளை ஆட்ட கார்த்திக் அசைவுற்று இருந்தான்.
ஹலோ வேளைக்கு போறதா இல்லையா உன்கிட்டேதான் என்று அவனை உலுப்ப
ஆங் முடிஞ்சுதா.அவ்ளோதானா நான் அப்ப கிளம்புறேன்.என்று உளறினான் கார்த்திக்.
அப்பவே முடிஞ்சுது.நீதான் இன்னும் கைய எடுக்காம இருக்க.என்று தன் மடியை பார்க்க
ஓஹ் சாரி.ஏதோ சிந்தனைல.நான் கிளம்புறேன்.என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கார்த்திக்.
எஸ் என்று சொல்லிவிட்டு போனை எடுத்து ரமேஷிற்கு கால் செய்தாள் ராஜி.
போன் அட்டென்ட் செய்யப்பட சொல்லு ராஜி.எப்படி இருக்க.
நல்லா இருக்கேன் ரமேஷ்.நீ எப்படி இருக்க.
நல்லா இருக்கேன்.அப்றம் உன் பிரச்சனை எல்லாம் முடிஞ்சுதா.ரெண்டு பேறும் ராசி ஆகிட்டீங்களா.
அது விஷயமா தான் உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம்னு உனக்கு கால் பண்ணேன்.
ஹெல்ப்பா.சரி ராஜி சொல்லு என்ன பண்ணனும்.
சொல்றேன்.ஆனா அதுக்கு முன்னாடி நீ சில விஷயங்கள் தெரிஞ்சிக்கிடனும்.
சஸ்பென்ஸ் வேற வைக்குற.சரி சொல்லு கேப்போம்.
கஸ்தூரி வீட்டில் நடந்தது முதல் இன்று வரை நடந்தவற்றை ரமேஷிடம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் ராஜி.
ஆக ரெண்டு பேரும் லவ் பண்றீங்க.யாரு முதல்ல சொல்ல போறீங்கன்னு தான் இப்ப பிரச்சனை.சரி இதுல நான் எப்படி உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்.
சொல்றேன்.
சஸ்பென்ஸ்.அப்படித்தான.ஆனா கஸ்தூரி ஏன் இப்படி கலைச்சி விட்டா.நீயாச்சும் முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.
அதை விடு ரமேஷ்.அதுவும் ஒரு விதத்துல நல்லதுக்கு தான்.
சரி சொல்லு.நான் எந்த விதத்துல உனக்கு ஹெல்ப் பண்ணனும்.
ரமேஷிடம் தன்னுடைய பிளானை ஒவ்வொன்றாக விளக்கினாள் ராஜி.முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத.ப்ளீஸ்.
இது ஒர்க்அவுட் ஆகும்னு நினைக்கிறியா.
கண்டிப்பா ஆகும்.நிச்சயமா நான் சொன்ன மாதிரி நடக்கும்.
ஆனா இதனால பிரச்சனை வந்தா.
வராது ரமேஷ்.நம்பு.
சரி உனக்காக பண்றேன்.
அப்றம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.
ஓகே.
வேளைக்கு வந்த கார்த்திக் நேராக மான்வி சைட்டிற்கு மகேஷையும் கூட்டி கொண்டு வந்தான்.வீட்டை முற்றிலுமாக பார்த்து விட்டு சிறு சிறு மாறுதல்கள் மட்டும் செய்ய சொன்னான்.
அங்கிருந்து இருவரும் மூர்த்தியை சந்திக்க சென்றான்.அவர்களை கண்ட மூர்த்தி இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
வேலைய பார்த்தேன் தம்பி.வீட்ல எல்லாருக்கும் பிடிச்சிருந்தது.முக்கியமா மான்விக்கு.
ரொம்ப சந்தோசம் சார்.பால் காய்ச்ச நீங்க தேதி குறிச்சதை மகேஷ் சொன்னான்.நானும் பார்த்தேன்.நல்ல நாள் தான்.அன்னைக்கே வச்சிக்கிடலாம்.சார்.
நல்லது தம்பி.சொந்தக்காரங்களுக்கு எல்லாம் இன்னைல இருந்து சொல்ல ஆரம்பிக்கணும்.நீங்களும் உங்க வொயிப்பும் கண்டிப்பா வந்துடுங்க.
கண்டிப்பா சார்.மான்வி எங்க.
அவ காலேஜ் போய்ட்டா தம்பி.
சரிங்க சார்.கொஞ்சம் சில்லறை வேலைகள் இருக்கும்.அதை மட்டும் பங்க்சன் முடிஞ்சதுக்கு அப்றமா பண்ணிக்கலாம் சார்.
ஒன்னும் பிரச்சனை இல்லை தம்பி.
இந்த ஒரு வாரத்துல கலர் வாஷ் பண்ணிடலாம்.பங்க்சனுக்கு உங்களுக்கு எல்லாம் ரெடி ஆகிடும்.
ஓகே கார்த்திக்.நோ ப்ராப்லம்.அப்றம் உங்களுக்கு,தம்பிக்கு டிரஸ் எப்படி.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை சார்.பாத்துக்கலாம்.
இல்ல தம்பி.வேண்டாம்னு சொல்லாதீங்க.இது கண்டிப்பா நாங்க தரணும்.
அதெல்லாம் வேண்டாம் சார்.பாத்துக்கலாம்.
அப்படி சொல்லாதீங்க தம்பி.நம்ம கடைலையை உங்களுக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணுங்க.மத்ததை நான் பாத்துக்கிடுறேன்.கண்டிப்பா நீங்க வந்து செலக்ட் பண்ணனும்.சரிங்களா.
சரிங்க சார்.நான் தம்பிய அனுப்புறேன்.அப்ப நான் வரட்டுங்களா.
இருங்க தம்பி.வந்துட்டு ஒன்னும் சாப்பிடாம போறீங்க.இருங்க என்று சொல்லி விட்டு தன் மனைவியை கூப்பிட இருவருக்கும் காபியுடன் வந்தார் அவர் மனைவி.
மூர்த்தியிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினர்.
வரும் வழியில் வேலை பற்றி அனைத்தையும் மகேஷிடம் சொல்லி மீதி இருக்கும் நாட்களில் சைட்டில் நின்று அனைத்தையும் பார்த்து கொள்ளுமாறு சொன்னான் கார்த்திக்.
அவர்கள் குறித்த தேதிக்கு அடுத்த நாள் தான் ராஜியின் பிறந்த நாள்.அதற்குள் அனைத்தையும் சரி செய்தாக வேண்டும் என்று நினைத்து கொண்டான் கார்த்திக்.
வீட்டில் இருந்த ராஜிக்கு அவள் போட்ட பிளான் எப்படியாவது நல்ல முறையில் ஒர்க்அவுட் ஆகவேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டாள்.
நேரம் ஆக ஆக அவளுக்குள் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது.
ராஜி கையில் போனை வைத்து கொண்டு கார்த்திக் வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தாள்.
அப்போது வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கல் அப்போது ராஜி ரமேஷின் நம்பெருக்கு மிஸ் கால் கொடுத்தாள்.
சாந்தா கதவை திறந்து விட உள்ளே வந்த கார்த்திக் ஷூவை கழட்டி விட்டு ரூமிற்கு செல்ல அப்போது ராஜி
சொல்லு ரமேஷ்.
என்ன ராஜி.உன் ஆளு வந்துட்டானா.
ஆமா ரமேஷ் என்ன விஷயம் சொல்லு.
ராஜி நீதான் ஆரம்பிச்ச.நீயே பேசு.
உனக்கு எத்தனை தடவை சொல்றது.ஆல்ரெடி உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.இப்பவும் நீ என்ன நினைச்சிட்டு இருக்கன்னு சொன்னா அசிங்கமா இல்லை.
ஏய் ராஜி.அதையும் இதையும் சொல்லி என்ன கோத்துவிட்டுடாத.புள்ளகுட்டி காரன்.என் பொண்டாட்டிக்கு மட்டும் இது தெரிஞ்சுது.என்ன கொன்னே போட்டுடுவா.
இல்ல ரமேஷ் நீ எத்தனை தடவை கேட்டாலும் இது தான் என் முடிவு.
ம்ம்ம்ம்ம்.
என்ன கஸ்தூரி சொல்லிட்டாளா.சரி எனக்கும் கார்த்திக்கும் டிவோர்ஸ் ஆகுறதாவே இருக்கட்டும்.ஆமா பிடிக்காம தான் வாழுறோம்.அதுக்குன்னு இப்போ என்ன பண்ண சொல்ற.
மேல பேசு ராஜி.
உன் மேல லவ் இருந்தது உண்மை தான்.ஒரு வேலை அது நடந்துச்சுன்னா பாக்கலாம்.அது வரைக்கும் தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாத.பாய்.
அவ்ளோதானா நான் வைக்கிறேன் ராஜி.இன்னும் எத்தனை நாள் இப்டி பேச போறியோ.பாய்.
இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கார்த்திக்கு ரமேஷின் மேல் கோவமாக வந்தது.அந்த நாய சும்மா விடக்கூடாது.பிடிக்கலன்னு சொல்லியும் இப்ப திரும்ப தொந்தரவு பண்ரானா. என்று நினைத்து கொண்டு ரூமிற்கு சென்றான்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த கார்த்திக்கை பார்த்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.மவனே கோவம் வருதா உனக்கு.நேத்து என்ன இப்படி தான அழவச்ச.இன்னும் உனக்கு இறுக்கு.நான் படுத்துற பாட்டுல நீயா வந்து என்கிட்ட சொல்லல.சொல்லுவ என்று நினைத்து கொண்டு
கார்த்திக் அந்த ரமேஷ் இப்ப கால் பண்ணினான் கார்த்திக்.என்று வம்புக்கு இழுத்தாள் ராஜி.
இப்போ அதுக்கு என்ன.
இல்ல அவனால இன்னும் என்ன மறக்க முடியாலையாம்.
அதுக்கு.
இப்பவும் என்ன பழைய மாதிரி லவ் பண்ரானாம்.நம்ம பிரச்சனை எல்லாம் கஸ்தூரி மூலமா அவனுக்கு தெரிஞ்சிருக்கு.
சரி.
அதனால நீ சீக்கிரமா டிவோர்ஸ் வாங்கிடு.ராஜி.நாம ஆசைப்பட்ட மாதிரி சேர்ந்து வாழலாம்னு சொல்றான்.
நீ என்ன முடிவு பண்ணிருக்க.
நான் என்ன பண்ணட்டும் கார்த்திக்.
(ராட்சசி என் வாயால ஏதாவது பிடுங்கலாம்னு ட்ராமா பண்றியா.பாக்கலாம்.நீயா நானான்னு)
என்கிட்டே ஏன் கேக்குற ராஜி.எதுனாலும் உன் இஷ்டம்.
(ஓகோ சமாளிக்கிறியா.உன் நடிப்பு எல்லாம் என்கிட்டே பலிக்காது தம்பி.சீக்கிரம் சொல்லி தொலையேன்)நான் கொஞ்சம் யோசிக்கணும்.பாக்கலாம் இன்னும் 10 நாள் இருக்குல்ல.அதுலயும் இன்னைக்கு ஒரு நாள் போய்டுச்சு.இன்னும் நம்ம சவால் முடிய 9 நாள் தான் இருக்கு.பாக்கலாம்.
(நடிக்காதடி இந்த 9 நாள்ல நீயா வந்து சொல்லுவடி) சரி ராஜி.பசிக்குது சாப்பிடலாமா.
ம்ம்ம் போலாம்.
மறுநாள் காலை பொழுது இனிதே விடிந்தது.தூங்கி எழுந்த கார்த்திக் சோம்பல் முறித்து விட்டு எழும்ப அங்கே ராஜி அவன் முன்னாள் கார்த்திக்கை கவனிக்காதவாறு ஜாக்கெட் பாவாடை உடன் நின்று கொண்டு சேலை கட்டி கொண்டிருந்தாள்.
கார்த்திக் பார்க்கும் போது அவள் இடுப்பு,தொப்புள் அவனுக்கு விருந்தானது.
அவனால் அதை பார்க்காமலும் இருக்க முடியவில்லை.அதே சமயம் பார்த்து அதை பார்த்து விட்டாள் பிரச்சனை ஆகி விடுமோ என்கிற அச்சமும் இருந்தது.
அரை கண்ணில் அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்தான்.பின் சில நிமிடங்களில் ராஜி சேலை கட்டி சென்று விட கார்த்திக் எழுந்து வேகமாக மூச்சு வாங்கினான்.
ராஜி கொல்றியே ராஜி.நான் உன்னை கொஞ்ச நாளைக்கு இம்சை பண்ணலாம்னு பார்த்தாள் நீ என்னை பண்ணிட்டு இருக்கியே.ப்ப்ப்பா காலைலையே இப்படி பண்ணிட்டியே.என்று நினைத்து கொண்டு எழுந்து பிரெஷ்அப் ஆகிவிட்டு வந்தான்.
ராஜி காபி கொடுக்கும் போது அவனுக்கு அவள் இடுப்பு நியாபகம் தான் வந்தது.
அதே நியாபகத்தில் அவள் முகத்தில் இருந்து பார்வையை இடுப்பை நோக்கி திருப்பினான்.
அதை கவனித்த ராஜி புடவையை எடுத்து இடுப்பை மறைத்தாள்.
அதை கவனித்த கார்த்திக்கிற்கு சற்று அசிங்கமாக தோன்றியது.எங்கு ராஜி தன்னை தவறாக நினைத்திருப்பாளோ என்று பயம் கொண்டான்.அவள் முகத்தை பார்க்காமல் காபி கப்பை அவளிடம் கொடுத்து விட்டு குளிக்க சென்றான்.
ச்ச.எதாவது நினைச்சிருப்பானோ.நாமதான் அவனை சீண்டி விட்டோம்.அவன் இடுப்பை பார்க்கும் போது நான் ஏன் சட்டுனு மறைச்சேன்.இப்போ நான் தப்பா நினைச்சிருப்பேன்னு அவன் நினைச்சிட்டான்.ராஜி முட்டாள் தனம் பண்ணிட்டியேடி.ராஜி மனதிற்குள் தன்னை தானே திட்டி கொண்டாள்.
அன்று கார்த்திக் வேளைக்கு கிளம்புவதாக சொல்லி விட்டு நேராக கஸ்தூரியை பார்க்க சென்றான்.
அவள் வீட்டிற்கு சென்று அவளிடம் அன்று நடந்ததிற்கு மன்னிப்பு கேட்க சென்றான்.
சாரி கஸ்தூரி.அன்னைக்கு நீ சொன்ன உடனே கோவம் வந்துடுச்சி.அதான் அப்படி பேசிட்டேன்.நீ எதுவும் மனசுல வசிக்காத.
ஐயோ.நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்.எதுவும் தெரியாம உங்கள தப்பா புரிஞ்சிகிட்டத்துக்கு.
பரவா இல்லை.
இல்ல.நானும் கொஞ்சம் ஓவெரா பேசிட்டேன்.மன்னிச்சிடுங்க.
அத விடுங்க.
எப்படி இருக்கா.உங்க ஆசை பொண்டாட்டி.
ம்ம்ம் நல்லா இருக்கா.
எப்படியோ ரெண்டு பெரும் ஒன்னு சேர்ந்துட்டீங்க.
எங்க அது ஒரு பெரிய கதை.
ஏன் என்ன ஆச்சு.
ஒன்னும் இல்லை.ரெண்டு பேரும் லவ் பண்றோம்.ஆனா இன்னும் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கலை.
இது என்ன புது கதையா இருக்கு.முன்னாடி ராஜி ஒருக்கா சொல்லிருக்கா.உங்க ரெண்டு பேருக்கும் 6 மாசம் ஏதோ சாவல்ன்னு.
அதே தான்.அது தான் இன்னும் சொல்ல விடாம தடுத்துட்டு இருக்கு.
ஏன் கார்த்திக்.இவ்ளோ தூரம் வந்தாச்சு.இன்னும் ஏன்.
விடுங்க கஸ்தூரி இன்னும் 7 நாள்.அது வரைக்கும் ராஜிய டார்ச்சர் பண்ணலாம்.அதுக்கப்புறம் பாருங்க.
பாவம் கார்த்திக்.சரி ஆனா பிரச்சனை வராம பாத்துக்கோங்க.
ம்ம்ம்ம் ஓகே கஸ்தூரி.நான் கிளம்புறேன்.நெக்ஸ்ட் வீக் ராஜி பெர்த் டே இருக்கு.நீங்க கண்டிப்பா வரணும்.ஓகே.
ஓகே கார்த்திக்.
சரி நான் கிளம்புறேன்.பாய்.
கஸ்தூரி இடம் பேசி விட்டு கார்த்திக் ஆபிஸ் சென்றான்.
அப்போது AD அவனை அழைத்தார்.
அவருடைய ரூமிற்கு சென்று சேரில் அமர்ந்தான் கார்த்திக்.
சார் குட் மார்னிங் சார்.
வாப்பா.ஒரு 4 நாள் டூர் போட்ருக்காங்க.அதனால நம்ம மாவட்டத்துல இருந்து நிரைய பேர அட்டென்ட் பண்ண சொல்லிருக்காங்க.போயிட்டு வந்துடு.
சார் கேம்ப் போட்டுக்கங்களா.எப்போ சார்.
நாளைக்கு நைட் கிளம்பனும்.நாளை மறுநாள்.இருந்து 4 நாள்.
சார் நான் இதை அட்டென்ட் பண்ண முடியாது.ப்ளீஸ் சார்.
என்னப்பா இப்படி சொல்ற.இதை கண்டிப்பா அட்டென்ட் பண்ணித்தான் ஆகணும்.நீ எதுவும் சொல்லாத.நாளைக்கு நைட் கிளம்பி போயிட்டு வா.எ
சார் அது வந்து.
ப்ச்.கார்த்திக்.இது எவ்ளோ இம்பர்ட்டண்ட் னு உனக்கு தெரியும்ஸ்.சோ.நீ கண்டிப்பா போற.
சரி ஓகே சார்.
கார்த்திக்கிற்கு இந்த செய்தி கடுப்பாக இருந்தது.எப்படியும் இதிலே 5 நாள் சென்று விடும்.தவிர்க்கவும் முடியாது.என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment