CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 27


இருவரும் முத்தமிட்ட பின் இருவரும் தங்களை சிறிது நேரம் ஆசுவாச படுத்தி கொண்டனர்.
பின் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டனர்.
கார்த்திக் நான் இங்க வீட்லதான் இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்.நீ எப்போ ரமேஷ் வீட்டுக்கு போன.அங்க என்ன நடந்துச்சு.எதுக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுத்த.என்றாள் ராஜி.
இரு இரு.ஏன் இவ்ளோ கேள்வி அடுக்குற.ஒன்னு ஒண்ணா கேட்கலாமே.அதுவும் இல்லாம இப்பதானே ரெண்டு பேரும் சேர்ந்துருக்கோம்.கொஞ்சம் நேரம் ரொமென்ஸ் பண்ணிட்டு அப்றமா பேசிக்கலாமே.
இல்ல இப்ப நீ சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிடும்.சொல்லு.
ராஜிஈஈ.
ப்ளீஸ் கார்த்திக்.சொல்லு.
சரி சொல்றேன்.
என்னடா உள்ள வரது.மவனே நீ இன்னைக்கு செத்தடா.உன்னால தான் என் ராஜி முதல்ல எனக்கு கிடைக்காம போயி திரும்ப கிடைச்சா.இப்போ மறுபடியும் எங்களை பிரிக்க பாக்குறியா.
அண்ணா என்ன சொல்றிங்க.
புரியல.உனக்குத்தான் கல்யாணமும் ஆகி டிவோர்ஸ் ஆகிடுச்சுல்ல.ஊருல எத்தனை பொண்ணுங்க இருக்காளுக.அவளுக பு. . . . . , , . , . ய தேடி போக வேண்டியது தானகே.எதுக்குடா மறுபடியும் என் வாழ்க்கையில குறுக்க வர என்று சொல்லி அவன் மேல் பாய்ந்தான்.
பாய்ந்த கையோடு அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டான் கார்த்திக்.
இதில் நிலை தடுமாறிய ரமேஷ் டேபிளின் மீது இடித்து கொண்டான்.
இன்னைக்கு உன்ன பொளக்குற பொல ல நீ ராஜிங்கிற பேர்கூட சொல்ல கூடாதுடா.
அண்ணா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறமா பேசுங்க.
என்ன டா கேக்க வேண்டி இருக்குது.என்று மீண்டும் அவனை அடிக்க சென்றான் கார்த்திக்.
அப்போது என்னங்க என்ன சத்தம்.என்று ரமேஷின் மனைவி ஹாலுக்கு வந்தாள்.
அங்கு கார்த்திக் ரமேஷை அடிக்க செல்வதை பார்த்து ஏய் யாரு நீ.எதுக்கு என் புருஷனை அடிக்கிற.என்னங்க என்ன நடக்குது இங்க.யாராச்சும் வாங்களேன் என்று சத்தமிட்டாள்.
ரமேஷின் மனைவியை பார்த்த கார்த்திக் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டு ரமேஷை பார்த்து புருஷனா என்றான்.
ஆமா அண்ணா என் வொய்ப்.என்றான்.
அப்ப உனக்கு டிவோர்ஸ் ஆகல.
இல்லை.இடைல எங்களுக்குள்ள கொஞ்சம் மனஸ்தாபம் இருந்துச்சி.இப்போ எல்லாம் சரி ஆகி எங்களுக்கு குழந்தை கூட இருக்குது.
என்னங்க யாரு இவரு.எதுக்கு உங்களை அடிக்க வந்தாரு.இவருகிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க.
ஒன்னும் இல்லமா.ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.நீ உள்ள போய் காபி எடுத்துட்டு வா.நான் உனக்கு விவரமா சொல்றேன்.
என்னங்க இருந்தாலும்.
நான்தான் சொல்றேன்லமா.ஒன்னும் இல்ல.அவரு எனக்கு அன்னன் மாதிரி நீ போ.
அவன் மனைவி உள்ளே சென்ற உடன் மொதல்ல உக்காருங்க அண்ணா.எல்லாத்தையும் நான் சொல்றேன்.
என்னடா நடக்குது.தெளிவா சொல்லுடா.எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.
சொல்றேன் அண்ணா.இது எல்லாமே ராஜியோட பிளான் தான்.நான் ராஜிகிட்ட பேசினா நீங்க பொறாமைல அவகிட்ட போய் மறுபடியும் பேசுவீங்கன்னு தான் ராஜி என்கிட்ட பேசுற மாதிரி நடிச்சா.மத்தபடி எங்களுக்குள்ள எதுவும் கிடையாது.
சரி.ஆனா உனக்குத்தான் டிவோர்ஸ் வரைக்கும் போய்டுச்சுன்னு முன்னாடி ஒருநாள் என்கிட்டே தண்ணிய போட்டு பொலம்புணியே.
சொன்னேன்.அப்றம் வீட்ல சமாதானம் செஞ்சி எங்க ரெண்டு போரையும் சேர்த்து வகிச்சிட்டாங்க.இப்போ நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்.
அது தெரியாம நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு அடிக்க வந்துட்டீங்க.
சாரி ரமேஷ்.நான் ஏதோ கோவத்துல.ரொம்ப சாரி.
பரவா இல்லை அண்ணா.ராஜி உங்களை ரொம்ப லவ் பண்ரா.நீங்க இல்லன்னா சாக கூட துணிஞ்சிடுவா.அதை என்கிட்டே கூட சொல்லிருக்கா.
என்னடா சொல்ற.சாக போறாளா.
இல்ல அண்ணா.பயப்படாதீங்க.என்று ராஜி ரமேஷிடம் பேசியதை கார்த்திக்கிடம் சொன்னான்.
அவ்ளோதானா.அதான் இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சே.எ
எனக்கும் ரொம்ப சந்தோசம்.நீங்க புரிஞ்சிகிட்டதுல.ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணுமே.
என்னடா சொல்லு.
என் பொண்டாட்டி நான் சொன்னா நம்ப மாட்டா.அதனால நீங்க தான் அவகிட்ட எல்லாதையும் சொல்லி புரியவைக்கணும்.அதுவும் இல்லாம அடிதடி ஆகிட்டா.அதான்.
இதுல என்னடா இருக்கு.அதெல்லாம் கிளியர் பண்ணிடலாம்.கூப்பிடு.
ரமேஷின் மனைவி காபியுடன் வந்துவிட அண்ணா சொல்லுங்க என்று சைகை செய்தான்.
கார்த்திக் காபியை எடுத்து குடித்துவிட்டு உன் புருஷனை ஒழுங்கா இருக்க சொல்லுமா.தேவை இல்லாம பொண்ணுங்க கிட்ட பேசிகிட்டு இருக்கான்.உன் நல்லதுக்குதான் சொல்றேன்.எல்லாரும் என்ன மாதிரி இருக்க மாட்டானுக.நான் வரேன் என்று எழுந்தான் கார்த்திக்.
இதை கேட்ட ரமேஷுக்கு புரை ஏற இருமினான்.
என்ன சொல்றிங்க.அவரு என்ன பண்ணாரு.
என்ன பண்ணினாரா.என் வொய்ப்க்கு தேவை இல்லாம கால் பண்ணி தொந்தரவு பண்ணிட்டு இருக்கான்.கொஞ்சம் கண்டிச்சி வை.
அண்ணா
சொதப்பிட்டீங்களே.இப்படி பழிவாங்கிட்டீங்களே.தயவு செஞ்சு காப்பாத்துங்க.
உண்மையதான சொன்னேன்.எதுனாலும் உன் பொண்டாட்டிகிட்ட பேசிக்கோ.நான் வரேன்.
நீங்க போங்க.நான் கவனிச்சிக்கிடுறேன்.
கார்த்திக் வெளியே சென்ற உடன் கதவு சாத்தப்பட உள்ளே ஐயோ அம்மா என்று அடிவாங்கும் சத்தம் கேட்டது.
இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த ராஜி சிரித்தே விட்டாள்.
அடப்பாவி அவன் வீட்ல போய் எதுக்குடா ஆட்டைய கலைச்ச.
பின்ன எத்தனை நாள் என் தூக்கத்தை கெடுத்துருப்பான்.அதான் அடி வாங்கட்டும்ன்னு அப்படி சொன்னேன்.
ஆனா நீ இருக்கியே.நல்ல வேலை அவன் திரும்ப எனக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொன்னான்.அப்றம் அவன் வொய்ப் கிட்ட பேசி நான்தான் சமாதான படுத்தினேன்.
அப்றம் மகேஷ் கால் பன்னி நீ அழுதுகிட்டே போனதா சொன்னான்.டிவோர்ஸ் லெட்டர் உன் கைக்கு கிடைச்சிடுச்சுன்னு தெரிஞ்சுது.நீ வேற கனவு கண்டு அது நடந்தா செத்து போய்டுவேன்னு சொல்லிருந்தியா.அதான் உயிரை கைல பிடிச்சிக்கிட்டு உன்ன தேடி வந்தேன்.
நிஜமா கார்த்திக்.ரமேஷ் மட்டும் கால் பன்னி அங்க நடந்ததை சொல்லாம இருந்திருந்தான்னா கண்டிப்பா அதான் நடந்திருக்கும்.என்று அவன் கைகளை இறுக்கினாள் ராஜி.
புரியுது ராஜி.டிவோர்ஸ் லெட்டர் பாத்தாவாச்சும் நீ என்கிட்டே வந்து சொல்லுவன்னு நினைச்சேன்.அது இப்படி சொதப்பும்னு நான் எதிர் பார்க்கலை.
சரி கார்த்திக் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்.
கேளு ராஜி.
இல்ல நான் எழுதி கொடுத்த ஏதோ ஒரு பேப்பரை மடிப்பு கலையாம அப்படியே வச்சிருக்க.என் கர்ச்சீப்பை எடுத்து வச்சிருக்க.நான் உனக்கு கொடுத்த சாக்கோலேட் கவரை அப்படியே வச்சிருக்க.ஏன் கார்த்திக்.
ராஜி.இதெல்லாம் உனக்கு எப்படி.
படிச்சேன் கார்த்திக்.உன் டைரியை.அதுல புல்லா நான் மட்டும்தான் இருந்தேன்.அதை படிக்க படிக்க எனக்கே நான் புதுசா தெரிஞ்சேன்.
நான் னா உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு அத படிச்சதுக்கு அப்புறமா தான் எனக்கு புரிஞ்சிது.
உன்னை எவ்ளோ தூரம் கஷ்டப்படுத்திட்டேன்ள.என்று அழுதாள் ராஜி.
ஏய் அழாத.அதெல்லாம் எனக்கு இப்போ நினைச்சாலும் எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா.எல்லாம் உன்னால தாண்டி கிடைச்சுது.நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.
போ இப்பவும் என்னையதான் நல்லவளா ஆக்கிடுற.
ஆமா.எனக்கு எப்பவுமே என் ராஜி ரொம்ப ரொம்ப நல்லவதான்.பசிக்கிது ராஜி எதாவது சாப்பிடலாமா.
ஐயோ.நான் ஒரு லூசு.வா உன்னைய நான் என் உள்ளங்கையில் வச்சி தாங்குறேன் என்று அவனை டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் ரூமில் இருவரும் கைகளை பிடித்து கொண்டு பேச தொடங்கினர்.
சரி சார்.நாளைக்கு என்ன நாள் னு தெரியும்ல.என்றாள் ராஜி.
என்ன நாள்.வழக்கமா வர நாள் தான.
என்னது.வழக்கமான நாளா.
ஆமா.வேற என்ன.ஆங் நியாபகம் வந்துடுச்சு.
ம்ம்ம்ம்ம்.அது சொல்லு.
ஒரு கிஸ் கொடு.சொல்றேன்.
டேய்.கொஞ்சம் விட்டா போதுமே.அதான் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு கொடுத்துட்டல்ல.அதெல்லாம் முடியாது.போடா.
என்னடி டா போட்டு பேசுற.நான் தான கொடுத்தேன்.நீ இன்னும் கொடுக்களையே.
அதல்லாம் அவ்ளோதான்.இனி கிடையாது.அத விடு.சரி என்ன நாள் னு சொல்லு.
ம்ஹும்.முடியாது.கிஸ் கொடு சொல்றேன்.
ப்ச் போடா.நீ சொல்ல வேண்டாம்.ஒன்னும் தேவை இல்லை.
சரி போ.
என்ன போ வா.இன்னைக்கு சொல்லாம உன்ன விட மாட்டேன்.மறந்துட்டியா அப்ப.
அது எப்படி மறப்பேன் செல்லம்.நாளைக்கு திங்கள் கிழமை.
கார்த்திக்கின் மண்டையில் நறுக்கென கொட்டு வைத்தால் ராஜி.
ஆஹ் வலிக்குதுடி.ஏன் அடிச்ச.
பின்ன இப்படி மொக்கை போட்டா உன்ன அடிக்காம கொஞ்சுவாங்களா.
நான் ஏண்டி மொக்கை போடுறேன்.கொடுக்குறதை கொடுத்தா சொல்ல போறேன்.
சரியான இம்சைடா.சரி கண்ணை மூடு.
நிஜமாதான் சொல்றியா.
ஆமா.கண்ணை மூடு.
ம்ம்ம்ம் மூடிட்டேன்.
பக்கத்துல வா.
ம்ம்ம்ம் வந்துட்டேன் கொடு.என்று கார்த்திக் கன்னத்தை நீட்டினான்.
அடுத்த நிமிடம் ஆஆஆஆஆ வலிக்குதுடி.விடுடி.ஆஆஆஆ வலிக்குது என்று கார்த்திக் கத்தினான்.
கார்த்திக்கின் கன்னத்தில் ராஜி கடித்து கொண்டே.சொல்லு இப்போ சொல்லு என்று மீண்டும் கடித்தாள் ராஜி.
சொல்றேண்டி.சொல்றேன் விடு.
சொல்லு அப்பதான் சொல்லுவேன்.சொல்லு.
என்னை கடிச்சுட்டு இருக்குற ராட்சசி பிறந்த நாள்.போதுமா விடு.
இது நல்ல பிள்ளைக்கு அழகு.
ஆஆஆஆ வலிக்குதுடி.கண்ணாடியை பார்த்து பாரு எப்படி சிவந்துட்டுன்னு.
நீ ஒழுங்கா முதல்லயே சொல்லிருக்கணும்.இனி ஏதாச்சும் இப்படி பண்ணினா இப்படிதான் நடக்கும்.புரிஞ்சுதா என் தங்கம்.
போடி இது போங்காட்டம்.
சரிடா தம்பி.
கன்னத்தை தடவி கொண்டே போடி ராட்சஸி.என்றான்.
இங்க வா.
போடி வரமாட்டேன்.
கார்த்திக்.
சொல்லு.
கொஞ்சம் பக்கத்துல வாயேன்.
போ வந்தா கடிச்சி வைப்ப.நான் வரமாட்டேன்ப்பா.
பண்ண மாட்டேன்.பக்கத்துல வா.
இரு கைகளையும் கன்னத்தில் வைத்து கொண்டு அருகே சென்று சொல்லு என்றான்.
அவன் கையை விலக்கி கடித்த இடத்தில் இச் இச் என்று முத்தமிட்டாள் ராஜி.
ராஜி.
போதுமா.
பத்தாது தான்.ஒன் மோர்.
அப்ப நானும் ஒன் மோர் கடிச்சிக்கிடுறேன்.
இல்ல இல்ல இதே நைட் வரைக்கும் தாங்கும்.
ம்ம்ம்ம்ம்.சரியான ஆளுதாண்டா நீ.ஐ லவ் யூ டா.
நானும் தான் ராஜி.சரி சொல்லு உனக்கு என்ன பிடிக்கும்.உனக்கு என்ன வேணும்.நாளைக்கு புல்லா உன்னை தரைல கால் படாம பாத்துக்கிடுறேன்.சொல்லு.
எனக்கு பெருசா ஒன்னும் இல்லை கார்த்திக்.அதான் எனக்கு பிறந்த நாள் கிப்டா நீ கிடைச்சிட்டியே.அதுவே போதும்.நாளைக்கு புல்லா நீ என்கூட இருந்தாலே போதும்.
அது கண்டிப்பா உன் கூடத்தான் இருக்க போறேன்.வேற என்ன வேணும்.சொல்லு.
எனக்கு அப்படி ஒன்னும் வேணாம் கார்த்திக்.
ஹேய்.நல்லா யோசிச்சி சொல்லு.சொல்லு சொல்லு சொல்லு ப்ளீஸ்.
சரி கத்தாதே.இரு சொல்றேன்.
சொல்லு.
சொல்றேன்.ஆனா கண்டிப்பா உன்னால அதை எனக்கு தர முடியாது.உன் மனசு தான் வீனா கஷ்டப்படும்.நான் கேட்டு உன்னால தர முடியலன்னு.
எதுவா இருந்தாலும் கேளு.என்னால கண்டிப்பா தர முடியும்.உயிரை தவிர.
ஏன் எனக்காக தரமாட்டியா.
மாட்டேன்.ஏன்னா உயிரை தந்துட்டேன்னா உன்ன யாரு பாத்துக்குவா.
ஸ்ஸ்ஸ்ஸ் ப்ப்பா.புழிஞ்சிட்ட.வேற எதாவது ட்ரை பண்ணு.
சரி.உயிரை கேட்டாலும் தரேன்.ஆனா அதுக்கு நீ கோ ஆப்பரேட் பண்ணனும்.
என்ன பண்ணனும்.
கொஞ்சம் நைட் நாம கொஞ்சம் அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டா 10 மாசத்துல உனக்கு உயிரை கொடுத்துடுவேன்.
ஏய் எப்ப பாத்தாலும் இதே நினைப்புதானா.என்று அவன் கைகளில் அடித்தாள் ராஜி.
சரி சரி அடிக்காத.போதும்.நீ சொல்லு உனக்கு என்ன வேணும்னு.
பெருசா ஒன்னும் இல்லை.எனக்கு நம்மளோட கல்யாண நாள் திரும்ப வேணும்.
என்ன சொல்ற ராஜி.
.எனக்கு நம்மளோட கல்யாண நாள் திரும்ப வேணும்னு சொன்னேன்.
புரியல ராஜி.என்ன திடீர்னு.அதைஏ எப்படி திரும்ப கொண்டு வர முடியும்.
அதான் சொன்னேன் உன்னால அதை கொடுக்க முடியாதுன்னு.சரி விடு.
இல்ல ராஜி.சொல்லு.இப்போ ஏன் அதை பத்தி பேசுற.
வேண்டாம் கார்த்திக் பழசை மறந்துடுவோம்.
இல்ல ராஜி.ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு.
இல்ல கார்த்திக்.நீ என் கழுத்துல தாலி கட்டின அந்த நிமிஷம் உன் மேல எனக்கு கோவமும் வெறுப்பும் தான் இருந்துச்சு.எல்லா பொண்ணுக்கும் அந்த நிமிஷம் சந்தோசம் தான் இருக்கும்பி .எனக்கானவன் எனக்கு கிடைச்சிட்டான்னு.நம்மளோட கல்யாண ஆல்பத்துல அதை பாக்கும் போதெல்லாம் எனக்கு கஷ்டமா இருக்கு.அதான் உன்கிட்ட சொன்னேன்.
இனி அந்த நாள் கிடைக்காதுன்னும் தெரியும்.இருந்தாலும் மனசு பூரா சந்தோசமா எப்படா நீ என் கழுத்துல தாலி கட்டுவன்னு ஏங்கி,கழுத்துல தாலி ஏறின உடனே உடம்பு புல்லா சிலிர்க்குமே அதை உங்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.அதான் சொன்னேன்.கண்கள் ஓரம் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் ராஜி.
சாரி ராஜி கைகளை இறுக்கினான் கார்த்திக்.
நான் தான் உன்கிட்ட சொல்லணும்.என்னை விட்டு நீ போகாம இருந்ததுக்கு.
இருந்தாலும் என்னால நீ கேட்டதை என்னால கொடுக்க முடியாதுள்ள.
இதான் நான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.அதெல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம்.அதான் என் புருஷனே என்கூட இருக்குறப்போ எனக்கு வேற என்ன வேணும்.
போ ராஜி.
ஹேய் சென்டிமென்டலா வேண்டாம்ப்பா.பிரியா விடு.
சரி ராஜி நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்.
கண்டிப்பா போகணுமா.
போகணும்.வேண்டாம்னா வேண்டாம்.
சரி நீ போ.
அதன் பின் கார்த்திக் வெளியே சென்று விட ராஜி மற்ற வேலைகளை கவனித்தாள்.
ஒரு வழியாக இரவும் வந்தது.வெளியே சென்று விட்டு வந்த கார்த்திக்கின் முகம் சற்று இறுக்கமாகவே இருந்தது.
ராஜி அதை கவனித்தாலும் அவனிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.
ரூமில் இருவரும் படுக்கும் முன் கார்த்திக் வழக்கம் போல சோபாவில் ராஜி மெத்தையிலும் இருந்தனர்.
என்ன கார்த்திக் ஏன் ஒரு மாதிரி இருக்க என்றாள் ராஜி.
ஒன்னும் இல்லை ராஜி.சும்மாதான்.
ஏன் பகல்லலாம் நல்லாத்தானே இருந்த.இப்போ என்ன ஆச்சு.
வெளிய சுத்திட்டு வந்தேன்ல.கொஞ்சம் தலை வழி வேற ஒன்னும் இல்லை.
இல்ல.நீ பொய் சொல்ற.சொல்லு.நான் கேட்ட கிப்ட்ட உன்னால கொடுக்க முடியலைன்னு வருத்த படுறியா.
அப்டிலா இல்ல ராஜி.நிஜமாவே தலை வழிதான்.நேத்துல இருந்து அலைஞ்சிருக்கேனா.ட்ராவல் வேற.அதான்.தூங்கினா சரியா போகிடும்.
நான் வேணும்னா தைலம் தேச்சி விடவா.
இல்ல வேண்டாம் ராஜி.நான் படுக்கறேன்.
ஹலோ சார்.நீங்க இங்க பெட்லையே படுத்துக்கலாம்.நான் வேணும்னா சோபால படுத்துக்கிடுறேன்.
இல்ல நோ தேங்க்ஸ்.குட் நைட் என்று சொல்லி படுத்து கொண்டான்.
என்ன இவன் திடீர்னு மாறிட்டான்.நல்லாத்தானே பேசிட்டு இருந்தான்.இப்போ என்ன ஆச்சு.ஒரு வேலை 12 மணிக்கு நமக்கு சர்ப்ரைஸ் பன்னதுக்காக இப்படி நடந்துக்கிடுறானா.
ராஜி.அதான்.அதே தான்.உன்னை பத்தி எனக்கு தெரியாதா கார்த்திக்.பாக்கலாம் என்று யோசித்து கொண்டே ராஜியும் பெட்டில் சரிந்தாள்.
ராஜிக்கு தூக்கமே வரவில்லை.கடிகாரத்தையும் கார்திக்கையும் மாறிமாறி பார்த்து கொண்டிருந்தாள்.
மணி 11.55 ஐ நெருங்க பெட்டை விட்டு எழுந்த ராஜி கார்த்திக் எதாவது செய்கிறானா என்று பார்த்தாள்.
கார்த்திக்கிடம் எந்த அசைவும் இல்லை.
கார்த்திக்.கார்த்திக் என்று கூப்பிட்டு பார்த்தாள்.
அவன் அசைகின்ற மாதிரி இல்லை.
(என்ன ஒன்னும் காணோம்.நிஜமாவே தூங்கிட்டானா.பக்கத்துல போய் பார்ப்போம்.)
கார்த்திக்.புருஷா.டேய் புருஷா.நடிக்காத.எந்திரி என்று அவன் பக்கத்தில் சென்று அவன் தோளில் கை வைக்க அவன் மூச்சு விடும் சத்தம் கேட்டது.
(சனியன் என் பிறந்த நாளுக்கு முதல் முதலா நீ விஷ் பண்ணுவேன்னு தூங்காம இருந்தா நீ தூங்கிட்டு இருக்கியா.இரு இரு உன்னை ஒரு வாரம் காய போடுறேன்.)
அப்போது ராஜியின் போன் அடிக்க அதை எடுத்து பார்த்தாள்.கஸ்தூரி கால் செய்திருக்க ராஜி அதை எடுக்காமல் சைலென்டில் வைத்தாள்.
அவளுடைய இந்த பிறந்த நாளிற்கு முதல் வாழ்த்து கார்த்திக்கிடம் இருந்து தான் பெறவேண்டும் என்று ராஜி உறுதியாக இருந்தாள்.
பலவிதமான சிந்தனைகளில் உருண்டவள் 2 மணியளவில் தான் உறங்கி போனாள்.
மறுநாள் காலை லேட் ஆக எழுந்தவள் கண்களை சுருக்கி கார்த்திக்கை தேடியவள் சோபாவில் அவன் இல்லாததை கண்டு வேகமாக எழுந்தாள்.
கீழே சென்று அத்தையிடம் அத்தை அவரு எங்க என்றாள்.
அவன் காலையிலையே ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டானேமா.உன்கிட்ட சொல்லலை.
இல்ல அத்தை தூங்கிட்டேன்.
ஒரு நிமிஷம் மா.என்று ஒரு கவரை கொடுத்து இதை உன்கிட்ட கொடுக்க சொன்னான்.அப்றம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தேங்க்ஸ் அத்தை.
போய் குளிச்சிட்டு சாமி கும்பிடும்மா.
சரி அத்தை.
ரூமிற்கு வந்தவள் அதை பிரித்து பார்த்தாள்.அதை பிரித்து படித்தாள்.
ஹாய் பொண்டாட்டி,
ரொம்ப ரொம்ப சாரி டி.அப்றம் ஹாப்பி பர்த் டே.அப்றம் 1000 டைம்ஸ் சாரி.இன்னைக்கு என்னால உன்கூட இருக்க முடியாததுக்கு.காலைலையே முக்கியமான வேலை.அதான் உன்கிட்ட சொல்லாம கூட வந்துட்டேன்.
பை டி.
அதை கசக்கி கிழித்து எறிந்தாள்.அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்கி கொண்டு பாத்ரூம் சென்று குளித்து விட்டு வந்தாள்.
பின் சாதாரண சேலையை கட்டியவள் கிழே சென்று அத்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டாள்.
அவள் சேலையை பார்த்த சாந்தா என்னமா நீ.பிறந்த நாள் அதுவுமா சாதாரண சேலையை கட்டி இருக்க.இரு வரேன் என்று சொல்லி சிகப்பு கலரில் சேலை ஒன்றை எடுத்து கொடுத்தாள்.
இதை கட்டிட்டு வா போ என்றாள்.
அதை வாங்கிய ராஜி சேலையை கட்டி கொண்டு குளித்த தலையோடு வந்தாள்.
எப்படி இருக்கு அத்தை என்றாள்.
தேவதையாட்டும் இருக்க.இங்க வா என்று அவளுக்கு தலை பின்னி பூ வைத்து விட்டாள் சாந்தா.
இப்போ தான் மங்களகரமா இருக்க.என்று சொல்லி அவளுக்கு விபூதி இட்டாள்.
சாந்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள் ராஜி.
அப்போது அவள் போன் ஒழிக்க ரூமை நோக்கி ஓடினாள் ராஜி.
கார்த்திக் தான் போன் செய்து தன்னை சமாதானம் செய்ய அலைக்கிறான் நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
போனில் லட்சுமி அழைக்க அவள் தாய் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாள்.
பின் சக்தி சொல்ல வேண்டா வெறுப்பாக அவர்களிடம் பேசினாள்.
அவர்கள் பேசி வைத்த பின் கார்த்திக் நம்பருக்கு கால் செய்தாள்.
நம்பர்
சுவிட்ச் ஆப் என்று வந்தது.விரக்தியின் உச்சத்தில் இருந்தாள் ராஜி.
எதுக்குடா இப்படி பண்ற.என்னன்னு சொன்னதானடா தெரியும்.உன்னை புரிஞ்சிக்கவே முடியலை.அழ வைக்கிறடா நீ.மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
அரை மணி நேரம் கழித்து கார்த்திக்ர் நம்பரில் இருந்து ராஜிக்கு கால் வந்தது.
அவசரமாக அட்டென்ட் செய்தவள் ஹலோ கார்த்திக் எங்க இருக்க.என் கூடவே இருப்பன்னு சொன்ன.எங்க போன.நீ.
சொல்றேன் ராஜி.ஹாப்பி பார்த் டே.
உன் வாழ்த்து ஒன்னும் எனக்கு தேவை இல்லை.
சரி நான் சொல்றதை மட்டும் செய்.என் லேப் பக்கத்துல ஒரு பைல் இருக்கும் அதை எடுத்துட்டு என் ஆபிஸிற்கு வா.
இல்ல நான் வர.
என்று சொல்வதற்குள் கால் கட் செய்யப்பட்டு இருந்தது.
ராஜி அந்த பைலை எடுத்து கொண்டு சாந்தாவிடம் சொல்லி விட்டு பஸ்ஸில் கார்த்திக் ஆபிஸ் நோக்கி சென்றாள்.
பஸ் ஸ்டாப் விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து கார்த்திக் ஆபிஸ் நோக்கி சென்றாள்.
அங்கு சென்று கார்த்திக் பற்றி கேட்டு அவனுடைய டேபிளுக்கு சென்றாள்.
அப்போது அவள் போன் ஒழிக்க கார்த்திக் அழைத்திருந்தான்.
ஹலோ உன் ஆபிஸ் வந்துட்டேன்.நீ எங்க இருக்க.
ஐயோ சாரி ராஜி.ஒரு சார் வந்திருந்தாங்க.அவுங்க கூட அன்னைக்கு நாம ஐஸ் க்ரீம் சாப்பிட்டோமே அந்த ரெஸ்டாரெண்டுக்கு வந்துட்டேன்.நீ மறுபடியும் ஆட்டோ பிடிச்சி அங்க வந்துடுறியா.
சரி வரேன் என்று பல்லை கடித்து கொண்டு சொன்னாள்.
மீண்டும் ஆட்டோ பிடித்து ரெஸ்டாரெண்டுக்கு சென்றாள்.
அங்கு சென்று ஒரு டேபிளில் இருந்தவள் கார்த்திக்கிற்கு கால் செய்தாள்.
அட்டென்ட் செய்த உடன் ராஜி 5 மினிட்ஸ்.வந்துட்டேன்.வெயிட் பண்ணு.என்றான் கார்த்திக்.
சரி.
5 நிமிடம் 10 நிமிடங்களாக 10 நிமிடம் அரை மணி நேரத்தை தாண்டி இருந்தது.
அதற்கு மூன்று முறை பேரர் வந்து ஆர்டர் கேட்டுவிட்டு சென்றிருந்தான்.
பொறுமை இழந்த ராஜி மீண்டும் கார்த்திக்கிற்கு கால் செய்ய அதே பதில்தான் சொன்னான்.5 மினிட்ஸ் வந்துடுறேன்.
மேலும் ஒரு அரை மணி நேரங்கள் சென்றிருக்க அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கார்த்திக்கிற்கு கால் செய்தாள்.
நம்பர் ஸ்விட்ச்சுடு ஆப் என்று வந்தது.
அவளுக்கு அழுகை பொங்கி வந்தது.கர்ச்சீப்பை வைத்து கண்களை துடைத்து கொண்டிருந்தாள்.
அப்போது அவளிடம் வந்த பேரர் எனி ப்ராப்லம் மேடம் என்றார்.
இல்ல ஒன்னும் இல்லை.உங்க வேலைய பாருங்க என்றாள்.
இதற்கு மேல் கார்த்திக்கிர்காக காத்திருக்க முடியாது என்று முடிவு செய்தவள் ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாப்பிற்கு சென்றாள்.
பஸ் ஸ்டாப் சென்றவளுக்கு மறுபடியும் கார்த்திக்கிடம் இருந்து கால் வந்தது.
அதை கட் செய்து விட்டாள்.
மீண்டும் கால் வர இந்த முறையும் கட் செய்து விட்டாள்.
மீண்டும் மீண்டும் கால் வர அட்டென்ட் செய்தவள் நீ ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம்.தயவு செஞ்சு என்கூட பேசாத.
என் ஆபிஸ்க்கு வா.
போடா நாயே.நான் வரமாட்டேன்.
எனக்காக வா.ப்ளீஸ்.வைக்கிறேன்.
கால் துண்டிக்கப்பட்டது.
கடைசியாக ஒருமுறை சென்றுதான் பார்ப்போம் என்று அவள் மனம் சொல்லியது.
ஆட்டோ பிடித்து கார்த்திக்கின் ஆபிஸிற்கு சென்றாள்.
அங்கு சென்று கார்த்திக் டேபிளுக்கு சென்றாள்.
ஆனால் கார்த்திக் அங்கு இல்லை.கார்த்திக்கின் நம்பருக்கு கால் செய்து பார்த்தாள்.
நம்பர் ஸ்விட்ச்சுடு ஆப்.
இந்த முறை கார்த்திக்கின் மேல் ராஜிக்கு வெறுப்புதான் வந்தது.என்ன மனுஷன் இவன் என்று நினைத்து கொண்டாள்.
அப்போது ஆபிஸ் பாய் ஒருவர் வந்து சார் இந்த லெட்டரை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க என்று ஒரு லெட்டரை கொடுத்தான்.
இது ஒண்ணுதான் இப்போ ரொம்ப முக்கியம் என்று நினைத்து கொண்டு பிரித்து படித்தாள்.
அதில் ஒரு சர்ச்சின் பெயர் போட்டு அங்கு வருமாறு எழுதி இருந்தது.
இது.இந்த சர்ச் எங்க இருக்கு என்று ஆபிஸ் பாய் இடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
சார் அங்கதான் இருகாங்க.உங்க கிட்ட இதை கொடுத்து அங்க வர சொன்னாங்க.அங்க உங்களுக்கு முக்கியமான ஒன்னு காத்துகிட்டு இருக்கறதா சொல்ல சொன்னாங்க என்றான்.
ராஜி மீண்டும் ஆட்டோ பிடித்து அங்கே சென்றாள்.

ஆட்டோவில் செல்லும் போது கார்த்திக்கின் மீது அவளுக்கு எப்படியாவது கார்த்திக்கை பார்த்து விட வேண்டும் என்கிற ஏக்கம் மட்டும் அவள் கோவத்தை தனித்து கொண்டிருந்தது.
சர்ச்சும் வந்தாகி விட்டது.உள்ளே சென்று யாரிடம் கார்த்திக் பற்றி கேட்பது என்பது தெரியாமல் செல்லை எடுத்து கார்த்திக் நம்பருக்கு கால் செய்ய பின்னால் இருந்து அவள் கண்களை பொத்தி கொண்டான் கார்த்திக்.
விடு கார்த்திக்.தயவு செஞ்சு எதுவும் பேசாத.இதான் நீ என்மேல வச்சிருக்குற லவ்வா.காலையில இருந்து இப்போவரைக்கும் என்ன எவ்ளோ அலையவச்சிட்ட தெரியுமா.
எனக்கு அழுகை அழுகையா வருது.எப்படி கார்த்திக் உன்னால மட்டும் இப்படி கல் நெஞ்சக்காரனா இருக்க முடியுது.
நேத்து நைட்ல இருந்து இப்போ வரைக்கும் நீ ஒரு வார்த்தை என் முன்னாடி நின்னு சொல்ல மாட்டியான்னு எவ்ளோ ஏங்கினேன் தெரியுமா.
ஆனா ஒன்னும் இல்லாத வெத்து பேப்பர்ல அங்க வா இங்க வான்னு நல்ல அலைய வச்சிட்டல்ல.
என் பிறந்த நாளைக்கு என்ன வேணும் என்ன வேணும்னு அத்தனை தடவை கேட்ட.ஆனா எனக்கு எதாவது கொடுத்தியா.ஒரு பொடவையாச்சும் வாங்கி கொடுத்தியா.
விஷ் பண்ண கூட இல்ல.நீ எங்க வாங்கி தர போற.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி சரி.அவள் கண்களை விடுவிக்காமல் சொன்னான்.
அத்தை சக்தி,கஸ்தூரி,எங்க அம்மான்னு எல்லாரும் விஷ் பண்ணாங்க.ஆனா நீதான் முதல்ல சொல்லுவன்னு உனக்காக நைட் தூங்காம கிடந்தேன் பாரு.என்ன சொல்லணும்.
ம்ம்ம்ம்ம்ம்ம்.
அந்த ரெஸ்டாரெண்ட்ல வச்சி உன் போன் சுவிட்ச் ஆப் னு வந்தது தெரியுமா.அப்போ எனக்கு அழுகையே வந்துடுச்சு.எல்லாரும் ஒரு மாதிரியா பார்த்தாங்க தெரியுமா.அசிங்கமா போச்சு.
சரி சரி.
அப்படி நான் உன்கிட்ட என்ன கேட்டேன்.உன்கூட கொண்டாட போற முதல் பிறந்த நாள்.இன்னைக்கு புல்லா உன்கூட இருக்கணும்னு நினைச்சேன்.அது தப்பா.
முடிச்சிட்டியா.இன்னும் இருக்கா.
போ.இனி என்கூட பேசாத.அழுதாள் ராஜி.
சரி நடை.
போ வரமாட்டேன்.
நான் சொல்றேன்ல.முன்ன நட.
அவன் சொல்லும் திசையில் கண்கள் மறைக்கப்பட நடந்து சென்றாள் ராஜி.
சர்ச் உள்ளே சென்று கண்களை விடுவித்தான் கார்த்திக்.
கண்களை கசக்கி கொண்டு பார்த்த ராஜிக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது.
சர்ச் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க உள்ளே மகேஷ்,சக்தி,மான்வி,கஸ்தூரி,ரமேஷ்,மற்றும் சக்தியின் பிரெண்ட்ஸ் என அனைவரும் இருந்தனர்.
சந்தோஷத்தில் மூச்சு வாங்க ஆச்சர்யத்துடன் என்ன என்பது போல கார்த்திக்கிடம் பார்வையால் கேட்க
நீதான நேத்து சொன்ன.நம்மளோட கல்யாண நாள் உனக்கு வேணும்னு.என்னால அந்த நாளை உனக்கு திருப்பி தர முடியாது.
ஆனால் அதே மாதிரியான நாளை என்னால தர முடியும்.அதுக்கு தான் இந்த செட் அப்.
புரியல.
ராஜி மனசால ஒன்னு சேராம கல்யாணம் பண்ணிக்கிட்ட ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைக்க சர்ச்ல பாதர் இருகாங்க.கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ரெடியா இருக்கான்.அவுங்களை வாழ்த்த அவங்களோட உறவுகள் இருக்கு.
கல்யாணத்துக்கு மோதிரம் கூட ரெடியா இருக்கு.மோதிரம் மாத்த நல்ல நேரம் காத்திட்டு இருக்கு.பொண்ணுக்கு மனப்பூர்வமா சம்மதமா.
ராஜிக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வராமல் கண்களில் இருந்து தாரை தாரையாக ஆனந்த கண்ணீர் தான் வந்தது.
என்ன சொல்லு ராஜி.
அவன் சட்டையை கொத்தாக பிடித்து அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் ராஜி.
அவள் தலையை தன் மார்போடு அணைத்து கொண்டான் கார்த்திக்.
சில நிமிடம் கழித்து என்ன ராஜி ஓகே தான என்றான் கார்த்திக்.
தலையை மட்டும் ஆட்டி ம்ம்ம்ம் என்றாள் ராஜி.
பாதர் முன்னிலையில் இருவரும் தங்களது மோதிரங்களை ஒருவருவருக்கொருவர் மாற்றி கொண்டனர்.
சுற்றி இருந்தவர்கள் பாப்பேர்ஸ் வெடித்து கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராஜியோ கார்த்திக்கின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.
போட்டோ கிராபர் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்ததால் மோதிரம் மாற்றுவது முதல் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டோ எடுப்பது வரை பல போட்டோக்கள் எடுத்து கொண்டனர்.
பின் கேக் ஓபன் செய்யப்பட்டு ராஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கேக்கில் விஷ் யூ ஹேப்பி மேரீட் லைப் அண்ட் பர்த் டே என்று எழதப்பட்டு இருந்தது.
ராஜிக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவே இல்லை.கார்த்திக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்.

No comments:

Post a Comment