ஹை ராஜி.இத்தனை நாள் நீ பண்ணினதை பார்க்கும் போது எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரியுது.நீயும் என்னை லவ் பன்றேன்னு.ஆனா எங்க நாம விட்ட சவால்ல நீ தோத்துடுவியோன்னு பயப்படுற.அதனால நீ சொல்ல தயங்குற.சோ நானே உன்கிட்ட சொல்றேன்.ஐ லவ் யூ ராஜி என்றான் கார்த்திக்.
அவனை பார்த்து முறைத்து கொண்டே போனை கீழே போட்டு உடைத்தாள் ராஜி.
மீண்டும்
கன்னத்தை திருப்பி கொண்டு கண்ணாடியை பார்த்தவன் எப்படி யோசித்தாலும் ஸ்டேடிக்ஸ் நமக்கு எதிராவே இருக்குது.இந்த பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்கவே முடியலையே ராமா.குடிகாரன் கிட்டகூட பேசி அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிடலாம்.இந்த பொண்ணுங்க கிட்ட முடியலையே.என்ன பண்ண.எஸ் சரக்கடிக்கலாம்.போதைல பேசுற மாதிரி அவகிட்ட சொல்லிடலாம்.அப்பதான் அவ என்ன சொல்லறான்னு தெரியும்.அதையும் மீறி அவ கோவப்பட்டா போதைல சொன்னதை சொல்லி சமாளிச்சிடலாம்.என்று சொல்லி கொண்டு ராஜியின் வருகையை எதிர் பார்த்திருந்தான்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ராஜி ரூமிற்கு வந்தாள்.
இப்போது கார்த்திக் அவளையே பார்த்து கொண்டிருக்க அதை கவனித்த ராஜி அவனை கவனிக்காதது போல இருந்து கொண்டாள்.
இப்போது கார்த்திக் ஆரம்பித்தான்.
ராஜி
கார்த்திக்கை பார்த்த ராஜி என்ன என்பது போல பார்க்க
உங்கிட்ட ஒன்னு கேட்டா நீ தப்பா நினைக்க மாட்டியே என்றான்.
நினைக்க மாட்டேன் சொல்லுங்க.
சரக்கடிக்கலாமா.
என்ன.
சரக்கடிக்கலாமா.சரக்கு சரக்கு.
நீங்க ஏதோ சொல்றீங்க.ஆனா எனக்கு சரக்கடிக்கலாமான்னு கேக்குது.
அடிப்பாவி நான் சொன்னதை எனக்கே திருப்பி சொல்றாளே.என்ன பண்ண.எல்லாம் என் நேரம்.பசங்களை கெஞ்ச உடுறதே பொண்ணுங்களுக்கு வேலை.கெஞ்சி தொலைப்போம்.என்று நினைத்து கொண்டு
நானும் அதை தான் சொன்னேன்.சரக்கடிக்கலாமா.
இல்ல வேண்டாம் .நீங்க குடிக்கிறதை நிறுத்திடீங்கள்ல அதனால வேண்டாம்.

ஏன் இப்போ சரக்கடிக்கலாமான்னு கேட்ட.இப்போ வேண்டாம்னு சொல்ற.
அதான் நானே கேக்குறேன்ல எனக்காக.
அதான் நானே கேக்குறேன்ல எனக்காக.
வேண்டாம்னு சொன்னா விடுங்களேன்
ராஜி ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.
இதை கேட்ட ராஜி மனதுக்குள் சிரித்து கொண்டு அப்படி வா வழிக்கு என்று நினைத்து கொண்டு சரி பாக்கலாம் என்றாள்.
என்ன ராஜி நீ சரின்னு சொன்னா வாங்கிட்டு வரணும்.சொல்லு.
இல்ல வேண்டாம்.சரக்கடிக்கலாமான்னு கேட்டது நானும் உங்க கூட குடிக்கிறதுக்கு இல்லை.நீங்க மட்டும் அடிக்கிறதுக்குத்தான்.நான் சும்மா ஒரு பிரெண்டா கூட இருக்கலாம்னு தான்.ஆனா இப்போ டிவி ல என்ன சொன்னாங்க தெரியுமா லிக்கர் ட்ரிங்கிங் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்.சோ நோ.
பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டுட்டாலே என்று நினைத்து கொண்டு போ ராஜி.இது போங்காட்டம்.
அப்படியே இருக்கட்டும் எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு.அத்தை கூப்பிட்டாங்க என்று சொல்லிவிட்டு ராஜி சென்றுவிட்டாள்.
கார்த்திக்கிற்கு இம்சையாக இருந்தது.அப்போது அவனுக்கு போன் வந்துவிட அதை எடுத்து கொண்டு பால்கனி சென்று விட்டான்.அந்த கால் நீண்ட நேரம் நீடிக்க பேசி முடித்து விட்டு ரூம் சென்றான்.பசி வயிற்றை கிள்ள சாப்பிடலாம் என்று கதவருகே சென்றவன் அங்கு டீபாயை கவனித்தான்.
அங்கு பாரின் ஸ்காட்ச்,கண்ணாடி க்ளாஸ்,வாட்டர் பாட்டில்,ஐஸ் கியூப் இருந்தது.
ராஜி என்று குதித்தவன் அதன் அருகே செல்லும் பொது கதவை திறந்து கொண்டு கையில் ஆப் பாயில்,மற்றும் சிக்கென் 65 உடன் ராஜி வந்தாள்.
ஷாக் ஆகி நின்ற கார்த்திக்கை பார்த்து என்ன என்பது போல ராஜி பார்க்க அதை பார்த்த கார்த்திக் பாட்டிலை பார்க்க ஒன்றும் சொல்லாமல் சிரித்து கொண்டே என்ஜாய் என்பது போல் கை காட்டினாள்.
பின் கார்த்திக் பாட்டிலை எடுத்து ஓபன் செய்ய போக
ஹலோ வெயிட் வெய்ட் வெய்ட்.என்ன அவசரம்.இருங்க.என்று சொல்லி கொண்டு சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி கொண்டு சாப்பாடு எடுத்து வந்தாள்.
கார்த்திக் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்க்க ராஜி பாட்டிலை ஓபன் செய்து க்ளாசில் ஊற்றி கொண்டிருந்தாள்.
ராஜி பாட்டிலை ஓபன் செய்து க்ளாசில் ஊற்றி கொண்டிருந்தாள்.
பின் பாட்டிலில் ஸ்காட்ச்சை ஊற்றி மிக்ஸ் செய்தாள். அதை கார்த்திக்கிடம் கொடுத்து ம்ம்ம்ம் குடிங்க என்றாள்.
கார்த்திக் அதை வாங்கி கொண்டு ராஜியை பார்த்து கொண்டிருந்தான்.
என்ன ஆச்சு.குடிங்க. என்றாள் ராஜி.
கார்த்திக் அதை குடிக்காமல் மீண்டும் ராஜியை பார்த்து கொண்டிருந்தான்.
அதான் நானே பெர்மிஷன் கொடுத்துட்டேன்ல.அப்புறம் என்ன ஸ்டார்ட் பண்ணுங்க
அது இல்ல ராஜி.
அப்புறம் என்ன.இல்ல நான் இருக்கேன்னு பீல் பண்றிங்களா.
இல்ல அது வந்து.
என்னனு சொல்லுங்க.இல்ல வேண்டாமா.
வேணும்.ஆனா.அது எப்படின்னு சொல்ல தெரியல.
சும்மா கூச்சப்படாம சொல்லுங்க.
அது வந்து.
இப்போ நான் உங்களோட டீப் பிரென்ட்.அப்படின்னு மட்டும் நினைச்சுக்கோங்க.சொல்லுங்க என்ன.
வந்து.கொஞ்சம் ஊறுகாய் கிடைக்குமா.
என்னது.
ஊறுகாய்.ஊறுகாய்.பிக்கில்.
த்தூ.இவ்ளோதானா.இதுக்குத்தான் இவ்ளோ பிடிகையா. நீங்கள் எல்லாம் குடிகாரன்னு வெளிய சொல்லாதீங்க.பாரின் சரக்குக்கு ஊறுகாய் கேக்குரிங்க. இங்க சிக்கன்,ஆம்லெட்,ஆப்பாயில்னு இவ்ளோ இருக்கு.அதெல்லாம் விட்டுட்டு ஊறுகாய் தான் வேணுமா.இருங்க எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு ஊறுகாய் பாட்டிலை எடுத்து கொண்டு வந்தாள் ராஜி.
இப்போது மீண்டும் ராஜி கிளாஸை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்தாள்.
கிளாஸை வாங்கிய கார்த்திக் அதை அப்படியே வாயில் கவுத்தினான்.பின் உடனே ஊறுகாயை ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்து கொண்டான்.
ஸ்பூனை வாயில் வைப்பதை பார்த்த ராஜி ஏய்.வாயில வைக்காத என்று சொல்லிக்கொண்டே அதை பிடிங்கினாள்.
அதற்குள் கார்த்திக் வைத்து விட அவன் கைகளில் அடித்து கொண்டு பட்டிக்காடு.பட்டிக்காடு.லோக்கல் மாதிரி குடிக்கிற.என்று மீண்டும் அவன் கைகளில் அடித்தாள்.
இதுல என்ன இருக்கு ராஜி.எவ்ளோ உயரத்துக்கு போனாலும் பலசை மறக்க கூடாது ராஜி.எவ்ளோ காஸ்டலியா குடிச்சாலும்.இந்த ஊறுகாய் இருந்தா தான் அடிச்ச மாதிரியே இருக்கு.ம்ம்ம்ம் ஊத்து.
என்ன.
இல்ல இல்ல வேணாம்.
ராஜி சிரித்து கொண்டே கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்பத்தான் போற.இரு என்று சொல்லி விட்டு அடுத்த ரவுண்டை ஊற்றினால்.
கார்த்திக் குடிப்பதை கன்னத்தில் இடது கையை வைத்து ஆசையாக பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் பார்ப்பதை பார்த்த கார்த்திக் வேணுமா என்பது போல கேட்க ச்சீ என்றாள் ராஜி.
மீண்டும் வற்புறுத்தி கேட்க வேண்டாம் போ என்றாள் ராஜி.
இந்த கருமத்தெல்லாம் எப்படி குடிக்கிறீங்க.வ்வுவா.
ஹலோ என்ன சொன்ன.கருமமா.இது ஆல்கஹால் இல்ல.உடைஞ்ச மனசை ஓட்ட வைக்கிற பெவிகால்.தெரியுமா.
என்ன உளறுற.போதை ஏறிடுச்சா.
என்ன ராஜி.ரெண்டு ரௌண்டுக்கே எப்படி ஏறும்.
உன்னோட லிமிட் மொத்தமே 4 ரவுண்ட் தான்.கொஞ்சம் அடக்கியே வாசி.சரியா.
ம்ம்ம்ம்ம் சரி.என்று சொல்லி விட்டு அடுத்த ரவுண்டை ஊற்றி குடித்தான்.
இப்போது கார்த்திக்கிற்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏற தொடங்கியது.
1 மணி நேரம் சென்ற பிறகு அரை பாட்டில் காலி ஆகி இருந்தது.நல்ல போதையில் கார்த்திக் இருந்தான்.ராஜி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது கார்த்திக்.
ராஜி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
என்ன.
ஐ லவ் யூ ராஜி.
என்ன சொன்ன.
ஐ லவ் யூ ராஜின்னு சொன்னேன்.என்று குளறலாக சொன்னான் கார்த்திக்.
இதை மறுபடியும் சொல்ல உனக்கு இவ்ளோ நாளா.லூசு.
என்ன ராஜி திட்டுற.
திட்டலடா.நானும் தான்.
ராஜி நீ என்ன சொல்ற.ஐ லவ் யு ராஜி.என்ன விட்டு போயிடாத ராஜி.
எனக்கும் உன்ன புடிக்கும்டா.
அப்ப நீ என்ன லவ் பன்னாளையா.
டேய் குடிகாரா.நானும் உன்ன லவ் பன்னுறேண்டா.இதை சொல்லும் போது ராஜிக்கு வெட்கத்தால் அவள் முகம் சிவந்தது.
அப்ப என்ன விட்டுட்டு நீ போகமாட்டல்ல.
என் புருஷனை விட்டுட்டு நான் எங்கையும் போக மாட்டேன் போதுமா.

அப்ப உண்மையிலயே நீ என்ன லவ் பண்றியா.
ஆமாடா செல்லம்.
அய்ய் என்று கார்த்திக் கத்தினான்.
ஷ்ஷ்ஷ்ஷ்.கத்தாதே.மணி 11 ஆகுது.
ஷ்ஷ்ஷ்ஷ்ஸ் சரி சரி.கத்தலை.என்று வாயில் விரலை வைத்து சொன்னான் கார்த்திக்.
கார்த்திக்.
ம்ம்ம் சொல்லு ராஜி என்று குளறலாக சொன்னான் கார்த்திக்.
கார்த்திக்.
ம்ம்ம்ம்ம்.
கார்த்தி.
ம்ம்ம்ம்ம்.
டேய் குடிகாரா.
ம்ம்ம்ம்ம்ம்.
டேய் புருஷா.
என்ன.
ஐ லவ் யூ .
ம்ம்ம்ம்ம்.
என்ன ம்ம்ம்ம்.நீயும் சொல்லு.
ஐ லவ் யூ ராஜி.
அவ்ளோதானா.
நானும் உன்னை காதலிக்கிறேன்.
ம்ம்ம் வேற ஒன்னும் கிடையாதா.
வேற ஒன்னு குடுக்கனும்.ஆனா குடுத்தா நீ அடிப்ப.
அடிக்க மாட்டேன் கொடு.
இங்க வா.என்று அவள் அருகில் சென்று அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தி அம்முகுட்டி இந்த உலகத்துலயே நான் அதிகமா நேசிக்கிறது உன்னை மட்டும் தான்.ஐ லவ் யூ கண்மணி என்று குளறலாக சொல்லி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
கார்த்திக்.
கார்த்திக்.
இதை கேட்ட ராஜிக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.பின் அவளை விட்டு விலகி
ராஜி கண்ணை மூடு.
எதுக்கு.
மூடு சொல்றேன்.
ம்ம்ம் சரி என்று சொல்லிவிட்டு கண்ணை மூடினாள் ராஜி.
கார்த்திக் பேக்கில் இருந்து ஒரு பார்ஸலை எடுத்து ராஜியின் முன் நீட்டினான்.
ம்ம் இப்ப கண்ணை திற.
கண்ணை திறந்த ராஜி பார்ஸலை பார்த்து என்ன என்றாள்.
பிரிச்சு பாரு.என்றான்.
பார்ஸலை பிரித்து பார்த்தாள் ராஜி.அதை பார்த்து விட்டு அய்ய் என்று கத்தினாள்.
உனக்கு இது பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியலை.நீ அப்போ கால் பண்ணும் போது கேட்ட.எனக்கு இதுதான் தோணுச்சு.பிடிக்கலைன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.
எனக்கு இது பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்.
தெரியும் பிடிச்சிருக்காஏ.ரொம்ப என்று சொல்லி விட்டு கையில் இருந்த பால்கோவா எடுத்து சாப்பிட்டு விட்டு கண்ணை மூடி ம்ம்ம்ம்ம்ம்ம்ம் செம்ம என்றால் ராஜி.
சூப்பர் கார்த்திக்.செம டேஸ்ட்டா இருக்கு.எனக்கு எப்படி இது பிடிக்கும்னு உனக்கு தெரியும்.அத நீ சொல்லவே இல்லை.
அதுவா.சின்ன வயசுல இருந்து நீ இதை விரும்பி சாப்பிடுவியா அதான் வாங்கிட்டு வந்தேன்.சாப்பிடு.
அப்போது கார்த்திக் ராஜி ஒன் மோர் ப்ளீஸ்.ப்ளீஸ் என்றான்.
நோ நோ.உன்னோட கோட்டா முடிஞ்சுது.அவ்ளோதான்.
ராஜி ப்ளீஸ் ப்ளீஸ.என் செல்லம்ல.என் புஜ்ஜுல.என் டார்லிங்க்ல.ப்லீஸ்டா குட்டி.
ம்ஹ்ம் நோ.என்று சொல்லி பாட்டிலை பிடிங்கினாள் ராஜி.
ப்ளீஸ் ராஜி ப்ளீஸ் என்று கேட்டுக்கொண்டே அவளிடம் இருந்து பாட்டிலை பிடிங்கி கொண்டு ராவாக பாட்டிலை வாயில் கவுத்தினான் கார்த்திக்.
டேய் குடிகாரா.குடிகாரா.அப்படியே குடிக்கிற.வயிறு எரிய போகுது.
அதெல்லாம் ஒன்னும் செய்யாது என்று சொல்லிவிட்டு ஊறுகாயை எடுத்து நக்கிக்கொண்டான் கார்த்திக்.
எப்படியோ போய் தொலை என்று சொல்லி விட்டு பால்கோவாவை சாப்பிட்டாள் ராஜி.
முக்கால்வாசி பாட்டில் காலி ஆகி இருக்க அதீத போதையில் இருந்தான் கார்த்திக்.
குட்டிமா.என்றான் கார்த்திக்.
என்ன.
குட்டிமா.நான் ரொம்ப பன்றேனா.
என்ன பண்ற.
டார்ச்சர் பன்றேனா.
இல்ல.சரி போதும் வா சாப்பிடலாம்.
எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு.
குடிச்சிட்டு வெறும் வயித்துல படுக்க கூடாது வா சாப்பிடலாம்.
வேண்டாம்மா.
இப்போ சாப்பிட போறியா இல்லையா.என்று முறைத்து கொண்டே ராஜி கேட்க
சரி.ஆனா நீதான் எனக்கு ஊட்டி விடணும் சரியா.
இது வேறையா.
நான் இது வரைக்கும் எங்க அம்மா கையாள கூட ஊட்டி விட்டு சாப்பிட்டது கிடையாது.எனக்கு அது பிடிக்கவும் செய்யாத.ஆனாு உன்கையாலே சாப்பிடணும்னு ஆசையா இருக்கு.
இதை கேட்ட ராஜிக்கு சந்தோசமாக இருந்தது.தனக்காக ஒருத்தன் இப்படி உருகுகிறான் என்ற நினைப்பே அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தது.
பின் அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு முடிக்க இரவு 1 மணி ஆகி இருந்தது.இப்போது முழு பாட்டிலும் காலி ஆகி இருந்தது.
கார்த்திக் முழு போதையில் தலையை தொங்க போட்டிருந்தான்.அவன் முகத்தை தட்டி கார்த்திக் கார்த்திக் என்று கூப்பிட்டாள் ராஜி.
கார்த்திக்கிடம் எந்த அசைவும் தெரியாது போக அவன் கைகளை தோல் மீது போட்டு கொண்டு பெட் அருகில் செல்ல கார்த்திக் சரிந்து பெட்டில் விழுந்தான்.

கார்த்திக் பெட்டில் படுத்ததால் ராஜி சோபாவிற்கு சென்றாள் பின் கார்த்திக்குடன் பெட்டில் படுத்து தூங்க அவள் மனம் சொல்லியது.
பின் பெட்டில் கார்த்திக் அருகில் சென்று அவன் வலது கையை எடுத்துஏ தன் மீது போட்டு கொண்டு அவன் முகத்தை பார்த்து கொண்டே குடிகாரன்.எப்படிகே குடிச்சிட்டு தூங்குது பாரு.லூசு என்று சொல்லிக்கொண்டு அவன் முகத்தை பார்த்துகொண்டே தூங்கியும் போனாள்.
காலை பொழுது விடிந்த போது ராஜியின் மேல் கார்த்திக்கின் கை இருக்க அதை எடுத்து பெட்டில் வைத்து விட்டு அவனை தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்று குளித்துவ விட்டு தலையில் துண்டை சுற்றி கொண்டு வீட்டு வேலைகளை கவனித்தாள்.
வேலைகள் முடிந்து மறுபடியும் ரூமிற்கு வரும்போது கார்த்திக் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.அவன் அருகில் பெட்டில் அமர்ந்து தூங்கும் அழகை பார்த்து கொண்டு அவன் தலைமுடியை கோதி விட்டு அவன் நெற்றியில் தன் உதடுகளை பதித்தாள்.
No comments:
Post a Comment