CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 18


அன்று கார்த்திக் ராஜியிடம் வந்து தயங்கி தயங்கி கேட்டான்.
ராஜி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
என்ன சொல்லு கார்த்திக்.
இல்ல நீ கோவப்பட மாட்டல்ல.
கோவப்படமாட்டேன்.
ஒன்னும் இல்லை.நாளைக்கு மான்வி இருக்கல்ல.
ஆமா.இருக்கா.
அவ நாளைக்கு நம்ம வீட்டுக்கு வாராலாம்.
அப்ப மூர்த்தி சாரும் வாராங்களா.
இல்ல.அவ மட்டும் தனியா வாராளாம்.
ஓஹ் அப்படியா.அவ எதுக்கு இங்க வரா.
ரொம்ப நாளா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தா.நானும் பாக்கலாம்னு சொல்லிட்டு இருந்தேன்.இன்னைக்கு மறுக்க முடியலை.
இதுல என்ன இருக்கு.வரட்டும்.நல்லா கவனிச்சிக்கலாம்.
அவளை வேற உனக்கு பிடிக்காதே. அதான் உன்கிட்ட கேட்டுக்கலாம்னு.
எனக்கு அவளை பிடிக்காதுன்னு உங்க கிட்ட நான் சொன்னேனா.
இல்ல.நான் நிறைய தடவை பாத்துருக்கரேன் அவளை பத்தி பேசினாலே உன் முகம் ஒரு மாதிரி ஆகிடும்.
அதெல்லாம் ஒன்னும் இல்லை.வர சொல்லுங்க.நான் பாத்துகிடுறேன்.
சரி ராஜி.உனக்கு ஒன்னும் இல்லைல.
அய்யா சாமி எனக்கு ஒன்னும் இல்லை.வர சொல்லுங்க.
இல்ல நீ சிரிச்சிகிட்டே சொன்னாதான் நம்புவேன்.
ராஜி சிரித்துக்கொண்டே சரி வர சொல்லுங்க.
இல்லை ராஜி நீ போலியா சிரிக்கிற.அவ வர்ரது உனக்கு பிடிக்களைத்தான.
நான் நிஜமாவே சந்தோசமா சொல்றேன் வர சொல்லுங்க.
இல்ல இது நீலாம்பரி சொல்ற மாதிரி இருக்கு.இதுக்கு நீ சிரிக்காமலையே சொலிருக்கலாம்.
இப்போ உதை வாங்க போறீங்க.மொக்கை போடாம ஒழுங்கா ஓடிடுங்க.
சரி சரி கோவப்படாத.அப்புறம் நாளைக்கு என்ன டிபன் செய்ய போற.நாளைக்கு கொஞ்சம் கிராண்ட்டா பண்ணி்டேன்.
ம்ம்ம் பண்ணிடலாம்.பண்ணிடலாம்.ரொம்பத்தான்.
என்ன ரொம்பத்தான்.
இல்ல.அந்த பெண்ணுக்கு இவ்ளோ கவனிப்பு கவனிக்கிறீங்களே.அதை சொன்னேன்.
சிம்பிள் ராஜி.அவ ரொம்ப நல்ல பொண்ணு.எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவளுக்கு. . . . . . .
போதும் போதும் உங்க பிரென்ட் புராணம்.எனக்கு தூக்கம் வருது.நான் தூங்க போறேன்.நாளைக்கு பேசிக்கலாம்.
சரி.என்று கார்த்திக் சிரித்து கொண்டே குட் நைட் சொல்லிவிட்டு தூங்கிவிட்டான்.
கார்த்திக் தூங்கிய பின் ராஜி பலவிதமாக சிந்தித்து கொண்டிருந்தாள்.ஒருவேளை கார்த்திக் அவளை விரும்புறானோ.அவளை பத்தி ரொம்ப பேசுறான். அவ வேற அழகா இருக்கா.
எதுவா இருந்தாலும் சரி.நாளைக்கு அவளை ரெண்டுல ஒரு வழி பண்ணிடனும்.நாம பண்ணுறதுல அடுத்து அவ கார்த்திக் கிட்ட பேசுரதுக்கே யோசிக்கணும்.மவளே நாளைக்கு உனக்கு இருக்குடி.
என்று நினைத்து கொண்டே தூங்கிவிட்டாள்.மறு நாள் மான்வி வந்தாள்.
கார்த்திக் அவளை கூட்டி சென்று அப்பாவிடமும் அம்மாவிடமும் அரிமுகப்படுத்தினான்.
பின் ராஜியிடம் வந்து மான்வி கேட்டாள் ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க.நல்லா இருக்கீங்களா.என்று கேட்டாள்.
ம்ம்ம் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க.
அக்கா என்ன நீங்க வாங்கன்னு சொல்ல வேண்டாம்.நீ ன்னே சொல்லலாம்.
ம்ம்ம்ம் சரி என்று ஒப்புக்காக சிரித்தாள் ராஜி.
அப்போது கார்த்திக் சரி ராஜி நீயும் அம்மாவும் சமையல் வேலையை பாருங்க.நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம் என்று சொன்னான்.
ம்ம்ம் சரிங்க என்று ராஜி சென்று விட்டாள்.
பின் கார்த்திக்கும் மான்வியும் பால்கனி சென்று பேசி கொண்டிருந்தனர்.
ராஜிக்கு கோவமாக வந்தது.இவளுக்கு நான் சமையல் செய்யணுமா.இவ பெரிய மகா ராணி.அவளும் அவ ட்ரெஸ்ஸும்.அப்படி மாடில போய் என்னதான் செய்யுராங்க.இப்போ எப்படி கண்டு பிடிக்கிறது.ஐயோ.
ஐடியா என்று சொல்லிவிட்டு இரண்டு தம்ளர்களை எடுத்து அதில் ஜூஸ் ஊற்றி மாடிக்கு எடுத்து சென்றாள்.
அங்கு மான்வியும் கார்த்திக்கும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.அவ்வப்போது மான்வி கார்த்திக்கை அடித்தும் கொண்டாள்.
இதை கண்ட ராஜிக்கு வயிற்றில் நெருப்பு எரிய ஆரம்பித்தது.அந்த நேரம் மட்டும் மானவி தனியாக மாட்டி இருந்தாள் முடியை பிடித்து சண்டை போட்டு இருப்பாள்.
வராத சிரிப்பை வரவைத்து கொண்டு ஜூஸை இருவருக்கும் கொடுத்தாள்.
ராஜி இருக்கும் போதே கார்த்திக் மான்வியிடம் கேட்டான்.நீ எங்களோட கல்யாண போட்டோ பார்க்கலைல வா காட்டுறேன்.என்று சொல்லி விட்டு அதை எடுக்க சென்றான்
ஜூஸை குடித்து விட்டு தேங்க்ஸ் அக்கா.என்று கிளாஸை ராஜியிடம் கொடுத்தாள் மான்வி.
ராஜி அதை வாங்கி கொண்டு பெட் ரூமிற்கு சென்று எதையோ எடுப்பது போல நடித்தாள்.
போட்டோவை எடுத்த கார்த்திக் மான்வியிடம் கொண்டு சென்று இருவரும் ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினர்.
மான்வி கார்த்திக்கின் தோல் பட்டை மீது கை வைத்து கொண்டு கார்த்திக் சொல்வதை கேட்டு கொண்டிருந்தாள்.
இதை கவனித்த ராஜிக்கு அழுகையாகவும் மான்வி மீது கோவமாகவும் வந்தது.
அடுத்து நடந்த சில நிகழ்வுகளும் அதை போன்றே இருவரும் நெருக்கமாக இருப்பதை போன்று நடந்தது.அவ்வப்போது மான்வி ராஜியை பார்த்து சிரித்து கொள்வதை ராஜியும் கவனித்தாள்.
அது ஏளன புன்னகையாக ராஜிக்கு தெரிந்தது.ஒரு கட்டத்திள் பொறுமை இழந்த ராஜி அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
மான்வி அங்கிருந்து செல்லும் வரை ராஜி அவர்கள் கண்ணில் படாமல் பார்த்து கொண்டாள்.
இறுதியில் அவள் கிளம்பும் நேரம் வர எல்லோரிடமும் சொல்லிவிட்டு ராஜியிடம் வந்தாள்.
அக்கா உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.பேசலாமா என்றாள்.
பால்கனி.ராஜியும் மான்வியும் நின்று கொண்டிருந்தனர்.
அக்கா.உங்களுக்கும் கார்த்திக்கும் நடுவுல இருக்குற பிரச்சனை எல்லாம் எனக்கு தெரியும்.
அதனால அத யூஸ் பண்ணி நீ எங்களை பிரிச்சி கார்த்திக்கை அடைய பாக்குற அப்படித்தானே.
இல்லக்கா.நான் என்ன சொல்ல வரேன்னா.
நிறுத்துடி.நானும் வந்ததுள இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்.என் முன்னாடியே என் புருஷனை அடிக்கிற.இளிச்சி இளிச்சி பேசுற.கைய தொட்டு பேசுற.
என்ன கரெக்ட் பண்ண பாக்குரிய. அவன் என் கார்த்திடி.எனக்கு மட்டும் தான் சொந்தம்.ஆமா எங்களுக்குள்ள பிரச்சனை தான்.
ஆனால் அது எல்லாம் எப்பயோ முடிஞ்சு போச்சு.இப்ப சொல்றேன் கேட்டுக்க.எனக்கும் கார்த்திக்கும் நடுவுல நீ வந்த கொன்னுடுவேன் பாத்துக்கோ.
ஏதோ அன்னைக்கு ஸ்டேஷன்ல வச்சி ஹெல்ப் பண்ணின.அந்த அளவோடு நிறுதிக்கோ.
அப்பா.பேசி முடிச்சிட்டீங்களா.இது போதும் நீங்க அண்ணாவை லவ் பண்றிங்கன்னு.தெரிஞ்சு போச்சு.
என்ன சொன்ன அண்ணாவா.
ஆமா. எனக்கு அவரு எப்போதுமே அண்ணா தான். நீங்கதான் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.பட் அதுவும் நல்லதுக்கு தான்.
அப்ப நாந்தான் உன்கிட்ட உலறிட்டேனா.
கண்டிப்பா.ஆனால் நீங்க உலரலை. நான்தான் உங்கள பேச வச்சேன்.
என்ன சொல்ற.
எல்லா பொண்ணுங்களுக்கும் கண்டிப்பா ஒரு இம்பீரியரிட்டி கம்ப்லெக்ஸ் இருக்கும்.என்னதான் லவ் பண்ணலைன்னு சொன்னாலும் நம்மளை சுத்தி சுத்தி வர பைய்யன் ஒரு நாள் நம்ம பின்னாடி வராம வேற ஒரு பொண்ணு பின்னாடி சுத்துனா அந்த பொண்ணு மேல காரணமே இல்லாம கோவம் வரும்.அதை கொஞ்சம் தூண்டி விட்டேன்.அவ்ளோதான்.
அது படி நானும் உன்கிட்ட உலறிட்டேன்.அப்படித்தானே.
கொஞ்சம் இல்ல.ரொம்பவே.என்று சிரித்தாள் ராஜி.
பின் கார்த்திக் தன்னை பார்த்தது பின் அவருகளுக்கு இடையே நடந்த நிகழ்ச்சிகள்,ராஜியை பற்றி கார்த்திக் தன்னிடம் சொன்னது என்று ஒன்று விடாமல் ராஜியிடம் சொல்லி முடித்தாள் மான்வி.
அதை கேட்ட ராஜி சந்தோஷத்தில் மான்வியை கட்டி பிடித்து கொண்டு அழுது கொண்டே தேங்க்ஸ் மான்வி.ரொம்ப தேங்க்ஸ்.என்று அழுதாள்.
அக்கா அண்ணா உங்களை ரொம்ப லவ் பன்ராரு. நீங்களும் அவரை ரொம்ப லவ் பண்றீங்க.அப்ப ஏன் இன்னும் நீங்க சொல்லாம இப்படி சவால் விட்டு உங்க வாழ்க்கையை இப்படி குழப்பிக்கிடுறீங்க.
இல்ல மான்வி.இது எனக்கு பிடிச்சிருக்கு.கார்த்திக் அதே மாதிரி வந்து என்கிட்டே ஐ லவ் யூ ராஜின்னு சொல்லணும்.அப்ப நான் அவன் கண்ணை பார்த்து அவன் கன்னத்தை என் கைல ஏந்தி அவன் முகத்தை பார்த்து ஐ லவ் யூ கார்த்திக்னு சொல்லணும்.அது வரைக்கும் இப்படிதான்.
அக்கா நீங்க சொல்லலன்னா என்ன.நான் சொல்லிடுறேன்.இன்னைக்கே.
மான்வி நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக்கொடுக்கனும்.எந்த காரணத்தை கொண்டும் நீ கார்த்திக் கிட்ட இதை பத்தி பேசக்கூடாது.நானா அவன்கிட்ட சொல்ற வரைக்கும்.
இல்ல நான் பண்ண மாட்டேன்.
ப்ளீஸ் மான்வி புரிஞ்சிக்கோ.இத்தனை நாளா நான் கார்த்திக் கிட்ட எத்தனையோ முறை என் காதலை வெளிப்படித்திட்டேன்.ஆனா அவனை எதோ ஒரு விஷயம் அதை ஏத்துக்க விடாம தடுக்குது.அது என்னனு கண்டு பிடிக்கணும். அதுவரைக்கும் நீ அவன்கிட்ட இதை பத்தி பேசாத.சத்தியம் பண்ணு.
சரிங்க அக்கா.நான் சொல்ல மாட்டேன்.சத்தியம்.ஆனால் கூடிய சீக்கிரம் சொல்லிடுங்க.
கண்டிப்பா.ஆமா இதை பத்தி கார்த்திக் உன்கிட்ட எதாவது சொன்னான்னா.
இல்லக்கா.என்கிட்டே எதுவும் சொல்லலை.அப்படி சொன்னா உங்க கிட்ட கண்டிப்பா சொல்றேன்.
சரி மான்வி.ரொம்ப தேங்க்ஸ்.அடிக்கடி எங்க வீட்டுக்கு வரணும் நீ.சரியா.
சரி அக்கா.ஆனா அடிச்சிட மாட்டீங்களே.
ராஜி சிரித்து விட்டாள். பின் இருவரும் சிரித்த முகமாக கீழே இறங்கி வர கார்த்திக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது.மேலே அப்படி என்னதான் நடந்தது என்று.கண்டிப்பா ராஜி அதை சொல்ல மாட்டா.அப்புறமா மான்வி கிட்ட கேட்டு தெரிஞ்சிகிடலாம் என்று நினைத்து கொண்டான்.
பின் மான்வி காரில் சென்று விட கார்த்திக் வீட்டிற்குள் சென்றான்
அன்று கார்த்திக் வேலைக்கு சென்று விட ராஜி வீட்டில் இருந்தாள்.
இன்னைக்கு கார்த்திக்குக்கு பிடிச்ச மாதிரி எதாவது செய்யணும்.என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கினாள்.
ஐடியா என்று சொல்லிவிட்டு மஹேஷிற்கு போன் செய்தாள்.
பின் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.போன் எடுத்த உடன்.ஹலோ கார்த்திக் என்றாள்.
சொல்லு ராஜி.
எப்ப வீட்டுக்கு வருவீங்க.
கொஞ்சம் லேட் ஆகும் ராஜி.கொஞ்சம் ஒர்க் இருக்கு.ஏன் ராஜி எதாவது வேணுமா.
சும்மாதான்.எப்ப வருவீங்கன்னு தெரியலை.அதான் கேட்கலாம்னு கால் பண்ணேன்.
ராஜி.எதோ விஷயமா கால் பண்ணின.என்ன விஷயம்னு சொல்லு.
போர் அடிச்சிச்சு.நேரம் போகலை.அதான் உங்ககிட்ட பேசலாம்னு கால் பண்ணினேன்.போதுமா.
ம்ம்ம்.சரி பேசு.
என்ன சொல்ல.எனக்கு வரும் போது எதாவது சாப்பிட வாங்கிட்டு வாங்க.
என்ன வேணும் உனக்கு.
எனக்கு பிடிச்சது வாங்கிட்டு வாங்க.
ராஜி சொன்னதான தெரியும்.சொல்லு உனக்கு என்ன வேணும்னு.
அதெல்லாம் முடியாது.உங்களுக்குத்தான் எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியுமே.யோசிச்சு நான் என்ன விரும்பி சாப்பிடுவேனோ அதை வாங்கிட்டு வாங்க.
சரி வாங்கிட்டு வரேன்.உனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியல.
கண்டிப்பா உங்களுக்கு தெரியும்.நீங்க வாங்கிட்டு வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
அப்புறம் ராஜி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
என்ன.சொல்லுங்க
கோவப்படாத.நீ என்ன இந்த ங்க போட்டு பேச வேண்டாம்.எப்போதும் போல நீ ன்னே சொல்லாம்.அப்பா அம்மா முன்னாடி மட்டும் அப்படி கூப்பிடு.சரியா.
ம்ம்ம் சரி.நான் அப்புரமா பேசுறேன் அத்தை கூப்பிடுறாங்க.என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் ராஜி.
லூசு லூசு பெரிய இவன்.எவ்ளோ ஆசை ஆசையாய் உன்னை கூப்பிடுறேன் இதை கூட புரிஞ்சிக்கிடாம பெரிய மாயிராட்டும் அப்படி கூப்பிட வேண்டாம்னு சொல்ற.கொஞ்சம் கூட என்கிட்டே இருக்க மாற்றத்தை உன்னால கண்டு பிடிக்காம இருக்க முடியலையா.போடா என்று சொல்லி கொண்டாள்.ராஜி
பின் இரவு நேரம் நெருங்க ராஜி சாந்தாவுடன் இருந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.அவ்வப்போது கார்த்திக் வருகிறானா என்று வாசல் கதவையும் பார்த்து கொண்டிருந்தாள்.
டிங் டிங்.காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க ராஜி ஓடி சென்று கதவை திறந்தாள்.
இப்போ தான் வந்திங்களா.ஏன் இவ்ளோ நேரம்.
கொஞ்சம் வேலை இருந்துது.அதான் லேட் ஆகிடுச்சு.
சரி உள்ள வாங்க.
பின் ராஜி கிச்சன் சென்று கார்த்திக்குக்கு காபி கலந்து கொடுத்தாள்.குடித்து விட்டு கார்த்திக் ரூமிற்கு சென்று விட அவனை பின் தொடர்ந்து ராஜி சென்றாள்.ரூமிற்கு சென்ற உடன் கார்த்திக்கையே பார்த்து கொண்டிருந்தாள் ராஜி.
அதை கவனித்த கார்த்திக் என்ன அப்படி பாக்குற ராஜி என்றான்.
ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே.
நினைக்க மாட்டேன் சொல்லு.
சரக்கடிக்கலாமா.
என்ன.
சரக்கடிக்கலாமா.சரக்கு சரக்கு.
ராஜி நீ ஏதோ சொல்ற.ஆனா எனக்கு சரக்கடிக்கலாமான்னு கேக்குது.
ராஜி சிரித்து கொண்டே பயப்படாதீங்க.நானும் அதை தான் சொன்னேன்.சரக்கடிக்கலாமா.
இல்ல வேண்டாம் ராஜி.நான் குடிக்கிறதை நிறுத்திட்டேன்.
ஏன் அன்னைக்குலா குடிச்சீங்க.
அன்னைக்கு குடிச்சேன்.இப்போ விட்டுட்டேன்.
அதான் நானே கேக்குறேன்ல எனக்காக.
வேண்டாம்னு சொன்னா விடேன் ராஜி.இல்ல நான் குடிக்கிறேனா இல்லையான்னு டெஸ்ட் பண்றியா.
இதை கேட்டதும் ராஜிக்கு ஏன்டா அவனிடம் இதை கேட்டோம் என்று ஆகிவிட்டது.
ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.ராஜி சென்ற பின் கார்த்திக் கண்ணாடி முன் சென்றான்.கண்ணாடியில் தன்னை பார்த்து என்னதான் நினைச்சிட்டு இருக்கா.
உலக மகா நடிப்புடா சாமி.அன்னைக்கு என்னடான்னா தோள்ல கை வைக்குறா.ஆசையா பேசுறா.சரக்கடிக்கலாமான்னு கேக்குறா.இவளை புரிஞ்சுக்க முடியலையே.
ஒரு வேலை ராஜி என்ன விரும்புறாளோ.அவளுக்கும் லவ் வந்துடுச்சா.இல்லையே அப்ப ஏன் ரமேஷ் கூட பேசுறா.நம்மகிட்ட அதை பத்தி பேச மாட்டேங்குறா.ம்ம்ம்ம்ம்ம்ம்.வ என்று சிறிது நேரம் யோசித்தவன் நாம ஏன் கொஞ்சம் சுய நலமா யோசிக்க கூடாது.திரும்பவும் அவகிட்ட லவ் பன்றேன்னு சொல்ல கூடாது.சொல்லலாமோ.
பின் நினைத்து பார்த்தான்
ராஜி ரூமிற்குள் வர கார்த்திக் கதவு பின்னால் இருந்து கொண்டு அவளை கட்டி பிடித்து ராஜி ஐ லவ் யூ என்றான்.
ராஜி அவனை பிடித்து தள்ளிவிட்டு அவன் கன்னத்தில் பளீர் என்று ஒரு அரை விட்டாள்.
நினைவில் இருந்து திரும்பிய கார்த்திக் கன்னத்தை திருப்பி கொண்டு கன்னத்தை தடவினான்.
பின் கண்ணாடியை பார்த்து வேண்டாம் கார்த்தி.ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது.வேற எப்படி அவகிட்ட சொல்லலாம்.
பின் நினைத்து பார்த்தான்.
ராஜி ரூமிற்குள் வந்தாள்.கார்த்திக் செல்லை நோண்டி கொண்டிருந்தான்.
ராஜி போன் ஒலிக்க நேராக சென்று செல்லை எடுத்து பார்த்தாள்.அதில்
கார்த்திக் கால் செய்ய அவனை பார்த்து முறைத்து கொண்டே போனை அட்டென்ட் செய்தாள் ராஜி.

No comments:

Post a Comment