கார்த்திக் திரும்பி ராஜியிடம் எங்க ஒருத்தரும் இல்லை ராஜி.
அலையாதிங்க வலியுது தொடைச்சுக்கோங்க.
யாரு அலையுறா. நீ சொன்னனு தான் பார்த்தேன்.
நல்லா சமாளிக்கிறீங்க.சாப்பிடுங்க.
ஹெலோ நிஜமாத்தான். எங்களுக்குள்ளாம் ஆயிரம் பேரு மடிவாழுக.
ஆமா ஆமா சொன்னங்க. என்று சிரித்தாள் ராஜி
சரி ம்ம்ம்ம் அந்த டேபிள்ளை பாரு. அந்த பொண்ணு எப்படி இருக்கு.
அவன் காட்டிய திசையில் ஓரு பெண் தனது தோழிகளுடன் இருந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
ம்ம்ம் பரவா இல்ல.அதுக்கு இப்ப என்ன.
அந்த பொண்ண என்கிட்ட பேச வச்சிட்டா என்ன பண்ணுவ.
நீங்க நம்பர் வாங்கிருங்க ஒத்துகிடுறேன்.
சரி 10 நிமிஷத்துல வாங்குறேன்.அப்ப தெரியும் நாங்க யாருன்னு.நீ இங்கையே வெயிட் பண்ணு. இதோ வரேன்.
பின் கார்த்திக் அந்த பெண் இருந்த டேபிளுக்கு அருகில் சென்று அமர்ந்தான்.பின் ஒரு ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து விட்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
பின் போனை எடுத்து யாருக்கோ பேசுவது போல கொஞ்சம் சத்தமாகவே பேசினான்.
அப்போது அந்த பெண் திரும்பி பார்க்க கார்த்திக் கண்டு கொள்ளாதது போல் திரும்பி கொண்டான்.
பின் அந்த பெண்ணை பார்த்து சிரித்து கொண்டு அவளிடம் சென்றான்.
ஹாய் என் பேரு கார்த்திக்.தயவு செஞ்சி சத்தம் போட்டுடாதிங்க ப்ளீஸ்.ப்ளீஸ் என்றான்.
ஹலோ எக்ஸ்கியூஸ் மீ.யாரு நீங்க வாட்ஸ் யுவர் ப்ராப்லம் அந்த பெண் கேட்டாள்.

இங்கு நடப்பதை ராஜி பார்த்து கொண்டிருந்தாள்.ஆனால் அவர்கள் பேசுவது எதுவும் ராஜிக்கு கேட்கவில்லை.
கார்த்திக் அந்த பெண்ணிடம் எங்க ஒரு நிமிஷம் ப்ளீஸ்ங்க.ஒரே ஒரு நிமிஷம்.ப்ளீஸ்.
சொல்லுங்க என்ன விஷயம்.
அப்பா.அந்த பர்ஸ்ட் டேபிள்ள இருக்காங்களா அவுங்கதான் என் வைப்.
இருக்கட்டும் அதுக்கு நான் என்ன செய்யணும்.
ஹலோ ஸீன் போடாதீங்க.என்ன உங்களுக்கு தெரியுதா யாருன்னு.
யாரு நீங்க.ஏன் இப்ப சம்பந்தம் இல்லாம பேசறீங்க.
ஏங்க உங்க ரிலேஷன் பிரியா மேரேஜ்ல உங்கள பாத்துருக்கேன். உங்க கிட்ட பேசனும்னு ட்ரை பண்ணேன்.பட் அப்ப எனக்கு தைரியம் இல்லை.அதான் பேசலாம்னு.
பிரியா மேரேஜ்லையா நான் உங்களை அங்க பாக்கவே இல்லையே.
அப்பாடா எந்த ஊர்ல கல்யாணம் நடந்தாலும் அந்த பொண்ணு பேரில் பிரியா இருப்பான்னு நினைச்சது நல்லதா போச்சுடா கார்த்திக் பேசுடா பேசு என்று மனசாட்சி சொல்லியது.
நீங்க என்ன பாக்களை.ஆனா நான் உங்களை பார்த்தேன்.அதுலயும் அந்த சாரில நீங்க செம்ம கியூட்டா இருந்திங்க. சான்ஸே இல்ல.
ம்ம்ம்ம்.நீங்க அங்க யாரோட வந்திங்க.
ம்ம்ம்ம் ஆங் ராஜா.ராஜா கூட வந்தேன்.
ராஜா தான் யூனிவெர்சல் பேர் ஆச்சே.கண்டிப்பா இருப்பான் மைண்ட் வாய்ஸ் பேசியது.
ஓஹ் ஓகே ஓகே.எனக்கு நல்லா தெரியும்.ஹி ஐஸ் ஒன் ஆப் மை பெஸ்ட் பிரென்ட்.
ஆஹா பயபுல்ல நம்பிடுச்சு.நெக்ஸ்ட் நம்பர் தான். கேட்டுரு.மைண்ட் வாய்ஸ் பேசியது .
உங்க பேரு ஆஆஆஆங்.
ஸ்வாதி.
ம்ம்ம்ம் எஸ் ஸ்வாதி.அப்புறம் இவுங்க தான் உங்க பிரெண்ட்ஸா. ஹாய்.
அவளுடைய பிரெண்ட்ஸ் எல்லாரும் பொதுவாக ஹாய் என்றார்கள்.
உங்க பேர நீங்க சொல்லவே இல்லையே.
ஓஹ் சாரி.கார்த்திக்.
ஓகே கார்த்திக்.என்ன பண்றீங்க.
இங்கதான் ஹைவேஸ்ல junior engineera இருக்கேன்.
ம்ம்ம்.சூப்பர்.கலக்குரீங்க.
அப்புறம் ஸ்வாதி நீங்க facebookல இருக்கீங்களா.
ம்ம்ம் இருக்கேனே.
உங்க Id சொல்லுங்க நான் request கொடுக்குறேன்.
அதெல்லாம் வேண்டாமே.
என்னங்க நீங்க.என்ன பார்த்தா ஏதோ பெட் கட்டி உங்க கிட்ட நம்பர் வாங்க வந்த மாதிரியா இருக்கு நம்புங்க.திஸ் இஸ் மை கார்டு.இப்பவாச்சும் நம்புங்க.
அப்படிலா இல்லைங்க.xxxxxxxxxxx இதான் என் id.
ஒரு நிமிஷம் என்று போனை நோண்டி கொண்டு.
100 பேரு அந்த நேம்ல இருக்காங்க.
உங்க id கொடுங்க.நான் பண்றேன்.
ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டீங்களே.
சொல்லுங்க.
Facebook ல சேட் பண்றது எரிச்சலா irukkum. சோ உங்க.
கொள்ளுங்க.
இல்ல நீங்க சொன்னா கோவப்படுங்க.
பரவா இல்ல சொல்லுங்க.
இல்ல வேண்டாம் விடுங்க.
சும்மா சொல்லுங்க கார்த்திக்.
உங்க வாட்சப் நம்பர் கொடுங்க.
வாட்.
ஏங்க வாட்சப் நம்பர் தானங்க கேட்டேன்.அதுக்கு ஏன் இப்படி ஷாக் ஆகுறிங்க.
வெரி ஸ்மார்ட்.என்கிட்ட நம்பர் வாங்குறதுக்கு நல்லாவே பிட்டை போடுறீங்க.ஐ அம் இம்ப்ரெஸ்ஸடு.
ஐயையோ அதெல்லாம் ஒன்னும் இல்லை.facebook ல சேட் பண்ணுறது ரொம்ப போர்.அதே வாட்சப்னா வேகமா சேட் பண்ணலாம். அதுவும் இல்லாம வாட்ஸப் நம்பர் தான் உங்களோட போன் நம்பர்.
அவள் சிரித்தே விட்டாள். தைரியமான ஆள் தாங்க நீங்க.நல்ல காமெடியாவும் பேசறீங்க.
இன்னும் நீங்க நம்பர் கொடுக்கவே இல்லையே.
நோட் பண்ணிக்கோங்க.9xxxxxxxxx.உங்க நம்பர் சொல்லுங்க.
அவள் நம்பெரை போனில் குறித்து கொண்டு அது நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணும் போது பத்துக்கோங்க. என்றான் கார்த்திக்.
அப்புறம் கார்த்திக்.
ஒன்னும் இல்லை.உங்க பில் எவ்லோங்க.
ஹே இட்ஸ் ஓகே.வி வில் மேனேஜ்.
ஐயையோ அந்த சீன்லாம் இங்க இல்ல.இது என்னோட பில் சேர்த்து கொடுத்துடுங்க.நான் வரேன்.பை பாய் கேர்ள்ஸ்.
கார்த்திக் சென்ற பின் அந்த பெண்கள் அனைவரும் ஆஆங் என்று கோரசாக வையை பிளந்தனர்.
ராஜியின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஹே ராஜி வா வா கிளம்பலாம் என்று சொல்லி இழுத்துக்கொண்டு ஷாப்பை விட்டு வெளியே கூட்டி சென்றான்.
என்ன சார் நல்ல பல்பு போல.என்று சிரித்து கொண்டே கேட்டாள் ராஜி.
யாருக்கு.இங்க பாரு என்று அவள் நம்பெரை ராஜியிடம் காட்டி கொண்டு போனை அவள் முன் ஆட்டினான்.
அவகிட்ட காலுல விழுந்து வாங்கி இருப்ப.இல்ல வேற யாரோ ஒருத்தர் நம்பரை சேவ் பண்ணிட்டு இங்க சீன் போடுரியா.
நீ நம்மள இல்லை.சரி உன் போனை கொடு.என்று ராஜியின் போனை வாங்கி ஸ்வாதியின் நம்பெரை டயல் செய்து கால் செய்தான். பேசு என்று ராஜியிடம் கொடுத்தான்.

எதிர்முனை எடுக்கப்பட ஹலோ யாருங்க என்று கேட்டது.
ஆங் ஹலோ சாரிங்க ராங் நம்பர்.தெரியாம கால் பண்ணிட்டேன்.ஸாரி என்றால் ராஜி.
ஹே கார்த்திக் வாய்ஸ் மாத்தி பேசுனா கண்டு பிடிக்க மாட்டேன்னு நினைச்சியா. சொல்லு என்ன அதுக்குள்ள.
ஹலோ நான் கார்த்திக் இல்ல.ராங் நம்பர் என்று சொல்லி கட் செய்தாள் ராஜி.
நிஜமாவே நம்பர் வாங்கிட்டியா.
யா என்று சட்டை காலரை தூக்கி விட்டான் கார்த்திக்.
இப்பவும் என்னால நம்ப முடியலை.
என்னைக்குத்தான் நீங்க நம்புனீங்க நம்பர் மட்டுமா. நம்ம பில் கூட அவ தான் செட்டில் பண்ணிருக்கா.
அடப்பாவி. இதுல்லாம் ஒரு பொழப்பு.
ஹே நீதானே சொன்ன.அதான்.
இதெல்லாம் ஓவர்.ஆமா அவகிட்ட உன் கார்டுல்லா கொடுத்திருக்க.உன் நம்பெரை அவ சேவ் பண்ணலையா.
யாரு கொடுத்தா.இதுவா பாரு.
ஹே இது எப்படி.உன்கிட்ட.
சுட்டுட்டேன்.அவளுக்கே தெரியாம.இன்னைக்கு ஒரு நாள் ஆச்சும் ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு மொய் எழுதுநதா இருக்கட்டுமே.
சரியான ஆளு தான் நீங்க.அவளுக்கு இப்ப கால் பண்ணுங்க.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.அவ நம்பர் எனக்கு தேவையும் இல்லை.டெலிட் பண்ணியாச்சு.என்று தன் போனை ராஜியிடம் காட்டினான்.
ஏன் டெலிட் பண்ணிங்க.பேசி கடலை போடா வேண்டியது தானே.
எதுக்கு டைம் வேஸ்ட்.எப்ப பேசினாலும் ம்ம்ம்.ஓஹ். ஆமா.அப்புறம் இதை தான் பேசுவிங்க. எதுக்கு மொக்கை போட்டுட்டு விடு கிளம்பலமா.
ம்ம்ம் போகலாம் .
கார்த்திக் பைக்கை எடுக்க ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்.வெயிட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு ஐஸ் கிரீம் ஷாப்பின் உள்ளே சென்றாள் ராஜி.
அங்கு ஸ்வாதியின் பிரெண்ட்ஸ் பேசி கொண்டிருந்தனர்.
ஹே செம ஸ்மார்ட் இல்லடி. நல்ல ஜாப் வேற.ஸ்வாதி உனக்கு விழுந்துட்டாண்டி. விட்டுடாத. என்று அவளுடைய பிரென்ட் சொல்லி கொண்டிருந்தாள்.
அப்போது ராஜி ஸ்வாதியிடம் சென்று ஹேய் லூசாடி நீ.யாரு நம்பர் கேட்டாலும் கொடுத்துடுவியா. பொண்ணு தான நீ.என்றாள்.
ஹெலோ யாரு நீங்க.எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க. நான் யாருக்கு வேணும்னாலும் நம்பர் கொடுப்பேன்.அது என் பெர்சனல்.நீங்க யாரு அதை கேட்க.என்றால் ஸ்வாதி.
ஹே நீ யாருடி. அவளை சொல்ரதுக்கு என்று அவள் தோழி கேட்க.
வாங்கடி என் சக்காலத்திகலா.நான் யாரா i am raji.rajalakshmi karthik. இப்ப ஒருத்தனுக்கு மொய் எழுதினிங்களே அவனோட வொயிப்.
என்னது வொயிப்பா.என்று அனைவரும் கோரசாக சொல்ல.
ஆமா என் ஹஸ்பென்ட்.அலையாதிங்கடி.நீ என்ன பண்ற செல்லம்.வேற ஒருத்தனை ட்ரை பண்ணு. நானே இப்பதான் அவனை புரிஞ்சிக்கிட்டு லவ் பண்றேன்.அதுக்குள்ள உள்ள வர.அவன் உங்கிட்ட நம்பர் வாங்கதான் உங்கிட்ட பேசினான்.மத்தபடி அவனுக்கு பிரியாவும் தெரியாது ராஜாவும் தெரியாது.சோ இனிமே இப்படி பேசுனா மர மண்டை மாதிரி பேசாம ஜாக்கிரதையா பேசு.சரியா.
அக்கா நிஜமாத்தான் சொல்றிங்களா.அவருக்கு உண்மையிலேயே மேரேஜ் ஆகிடுச்சா.
உன்கிட்ட சத்தியம் பண்ணி வேற சொல்லனுமா.செல்ல குட்டி எங்களுக்கு கல்யாணம்.முடிஞ்சிடுச்சு.லவ் மேரேஜ்.
அப்ப இப்பதான் நீங்க அவரை லவ் பண்றதா சொன்னிங்க.
இத மட்டும் வாக்கனையா கேளு.அவன் பேசும்போது எதுவும் கேக்காத. அதை உங்கிட்ட இப்ப சொன்னென்னா ஆடியன்ஸே தம் அடிக்க போயிடுவாங்க.சோ நீ என்ன பண்ற இன்னைக்கு நடந்ததை மரந்துட்டு வேற வேலைய பாரு. இந்தா அவரு கொடுத்த பில்லுக்கு காசு.அண்ட் சாரி. அவன் உங்கிட்ட நடந்துகிட்டதுக்கு.வரேன் என்று அவள் தோழிகளிடமும் சொல்லி விட்டு கார்த்திக்கிடம் வந்தாள் ராஜி.
போகலாமா கார்த்திக்.
ம்ம் போகலாம்.எங்க போன ராஜி.
ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன்.போகலாம்.
நெக்ஸ்ட் எங்க ராஜி.
ம்ம்ம் சாப்பிடலாம்.நல்ல ரெஸ்டாரண்ட்ல.
ஓகே.லெட்ஸ் கோ.
பின் இருவரும் சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.
நெக்ஸ்ட் எங்க ராஜி.
சினிமா.
எந்த படம்.
அச்சம் என்பது மடமையடா போகலாம்.
ராஜி அல்ரெடி பாத்துட்டேன் ராஜி.வேற போகலாம்.
இல்ல நான் இன்னும் பாக்களை.ப்ளீஸ் போகலாம்.
சரி ஏறு போகலாம்.
அய் ஜாலி என்று குதித்து விட்டு பைக்கில் ஏறினால் ராஜி.
அய் ஜாலி என்று குதித்து விட்டு பைக்கில் ஏறினால் ராஜி.
பின் தியேட்டர் சென்று டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே சென்றனர்.
படம் ஆரம்பிக்க ராஜி படத்தில் மூழ்கினாள்.காலையில் ராஜியை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தது,பைக்கில் உரசல்,தியேட்டர் இருட்டு எல்லாம் சேர்ந்து கார்த்திக்கை ஏதோ செய்ய அவனையும் அறியாமல் அவனுடைய கை ராஜியின் தோள்பட்டையை சுற்றி சென்றது.
அப்போது மூளையின் ஓரத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது.அவள் இன்னும் ரமேஷை தான் மனசுல நினைக்கிறா. கையை எடுடா என்று.
அந்த நொடியே அவனது கை கீழே இறங்கியது.படத்தின் மீது கவனம் இல்லாமல் உக்கார்ந்திருந்தான்.
ஒருவழியாக படம் முடிந்து இருவரும் வெளியே வந்தனர்.
செம படம் இல்ல.சான்ஸே இல்ல.என்றாள் ராஜி.
ம்ம்ம் ஆமா.வீட்டுக்கு போகலாமா.
ம்ம்ம் போகலாம்.
பின் இருவரும் பைக்கில் ஏறி பைக்கை ஸ்டார்ட் செய்ய ராஜி தனது ஒரு கையை கார்த்திக்கின் தோல் மீது வைத்தாள்.
அதை உணர்ந்த கார்த்திக் ராஜியை திரும்பி பார்க்க ராஜி ம்ம்ம்.போகலாம்.போங்க என்றாள்.
கார்த்திக் சிரித்து கொண்டே வண்டியை ஓட்டினான்.

படத்தை ரொம்ப என்ஜாய் பண்ணின ராஜி.
ஆமா.சாங்ஸ் சூப்பரா இருந்துச்சு.டோட்டலா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
பார்த்தேன்.
அப்போது ராஜி ஏதோ பாடல் ஒன்றை முணு முணுக்க
ஏதோ பாடுறன்னு தெரியுது.கொஞ்சம் சத்தமா பாடுனா நானும் கேட்டுப்பேன்ல.
நான் ஒன்னும் பாடலை நீங்க நேரா பாத்து ஓட்டுங்க.
ப்ளீஸ் ராஜி.நேயர் விருப்பம்.பாடேன்.
போங்க நான் பாட மாட்டேன்.
ப்ளீஸ் ப்ளீஸ் ராஜி.பாடு.
சரி கிண்டல் பண்ணக்கூடாது.
சரி.பண்ண மாட்டேன் பாடு.
வெயில் மழை வெட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை
ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே!
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும் படி நினைவில்லை..
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை..
மறவேனே!
வெயில் மழை வெட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை
ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே!
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும் படி நினைவில்லை..
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை..
மறவேனே!
ராசாளி..... பந்தயமா? ஆ ஆ.. பந்தயமா?
விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை
ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே!
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும் படி நினைவில்லை..
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை..
மறவேனே!
வெயில் மழை வெட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை
ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே!
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும் படி நினைவில்லை..
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை..
மறவேனே!
ராசாளி..... பந்தயமா? ஆ ஆ.. பந்தயமா?
செம்ம ராஜி சான்ஸே இல்ல.நிஜமாவே நீ ரொம்ப நல்ல பாடுற. சூப்பரா இருக்கு நீ பாடுறது.
என்ன அந்த பொண்ணுகிட்ட போட்ட சேம் பிட்டா.
இல்ல.இது நிஜமா சொல்றேன்.சூப்பரா இருக்கு.
போதும் போதும் வண்டிய ஓட்டுங்க.வீட்டுக்கு போகலாம்.
ராஜிக்கு இப்போது கார்த்திக்கை இருக்க கட்டி பிடிக்க வேண்டும் போல இருந்தது.ஆனால் ஒரு கையை அவன் தோளில் வைத்து கொண்டு மற்றொரு கையை அவன் வயிற்றில் சுற்றி கொண்டாள்.
இருவரையும் சுமந்து கொண்டு அந்த இரு சக்கர குதிரை அவர்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது. . . . . . . . . . .
No comments:
Post a Comment