ப்ச்ப்ச் ஒன்னும் இல்ல எனக்கும் சாப்பாடும் வேணாம்னு வீம்பா சொல்லிட்டு இப்ப ரெண்டாவதுபி பிளேட் பிரியாணியை வச்சு வெளுத்துகட்டுறியே அதான் பார்த்தான்.
ஹலோ நான் சாப்பிடுறத பார்த்து யாரும் கண்ணு வைக்க வேண்டாம்.உனக்கு பசிக்கல.சாப்பிட வேண்டியது தான.
இல்ல எனக்கு போதை ஓவெரா ஆகிடுச்சா.பசி இல்ல நீ சாப்பிடு.
பின் இருவரும் கைகழுவி கொண்டு டேபிளில் இருந்தனர்.அப்போது கார்த்திக் ஆரம்பித்தான்.
நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.
இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுற.
இல்ல சம்பந்தம் இருக்கு.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா
பிறந்த உடனே அழுத்திருப்ப.
ஐயோ.செம ஜோக்.பட் சிரிப்புதான் தான் வரல.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.
டேய் லூசு நீ முதல் முதல்ல எப்ப அழுதன்னு எனக்கு எப்படி தெரியும்.
இல்ல.அட்லீஸ்ட் எப்ப அழுதன்னு ஆச்சும் கேக்கலாம்ல.
கேக்கலைன்னா சொல்லாம விடப்போறியா.சொல்லி தொலை
நான் முதல் முதல்ல எப்ப என்று ஹ பிட்சில் கார்த்திக் கேக்கும் முன் கடுப்பான ராஜி டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்து ஏ எருமை,சனியன்,மெண்டல்,லூசு.மாடு இனிமேல் இந்த டைலாக்க சொன்ன மவனே கழுத்தை அறுத்து கண்ணு ரெண்டையும் தோண்டி எடுத்துடுவேன்.இவரு பெரிய ராஜா ராணி சந்தானம்.குடிச்சிட்டு வந்து பிளாஷ்பாக் சொல்லறாரு.மூடிட்டு போய் தூங்கு.
உஸுஷுஷ்.ஓகே ஓகே.டோன்ட் டச்.தொட கூடாது.தொட கூடாது.நான் முதல் முதல்ல...
ஒய்.
ஓஹ் சாரி.என்று வாயை பொத்திவிட்டு முதல் முதல்ல நீ ரமேஷ லவ் பன்றேன்னு சொன்னப்ப டெய்லி நைட் தூக்கம் இல்லாம எவ்ளோ நாள் அழுத்திருக்கேன் தெரியுமா.அதுவும் இல்லாம நாம மெஸேஜ் பண்ணிக்கும் போதெல்லாம் நீ கேவலமா இதோ இப்ப வச்சிருக்கியே இதே மாதிரிதான் வச்சிட்டு என் லவர் மெசேஜ் பன்றான்.நா அப்புறமா பேசுறேன்னு சொல்லுவ பாத்தியா அப்ப அழுதேன்.ம்ம்ம் என்று நெற்றியில் தன் புருவத்தில் கார்த்திக் கை வைத்து காட்ட
என்ன என்பதுபோல தன் நெற்றியை தடவ அங்கு அவள் வைத்திருந்த நெற்றி பொட்டு விலகி இருந்தது.அதை எடுத்து கரெக்டாக வைத்தாள் ராஜி.
ம்ம்ம் சரியா இருக்கா என்பதுபோல தலை ஆட்ட சூப்பர் என்பது போல கைகாட்டி அசைத்தான்.
இப்போது தான் கார்த்திக் மனசை திறந்து பேசுறான்.போதை தெளிஞ்சா கண்டிப்பா நாளைக்கு பேசமாட்டான்.அதனால அவன் என்ன பேசினாலும்,என்ன செஞ்சாலும் ஒன்னும் சொல்ல கூடாது.அவனோடு தானும் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

நம்ம ஆச்சினா எனக்கு உசுரு.அவ்ளோ பிடிக்கும்.நான் என்ன செஞ்சாலும் என்ன விட்டுகொடுக்க மாட்டாங்க.என்மேல அவ்ளோ பாசம்.நான் அவங்களுக்கு பேரன் கிடையாது.மகன் மாதிரி.அவுங்க செத்தப்ப கூட நான் அழவில்லை.கல்லு மாதிரி இருந்தேன்.
ஓஹோ பார்ட்டிக்கு ஆச்சி மேல அவ்ளோ பாசமா.ம்ம்ம் சரி அப்புறம்.
நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.
தெரியாது சொல்லு.
அதெப்படி உனக்கு தெரியும்.ஏன்னா அது எனக்கு மட்டும் தான தெரியும்.உங்கிட்ட கேட்டா உனக்கு எப்படி தெரியும்.
டேய் லூசு.சத்தியமா என்னால முடியலடா.கொள்ளாத.
நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.
டாய்.நீ இன்னைக்கு செத்தடா.என்று அவன்கிட்ட ராஜி நெருங்க
ஓஓஓஓ.சொல்ல கூடாதுல்ல.உஷ் உஷ் உஷ்.என்று வாயை பொத்திக்கொண்டு டோன்ட் டச்.டோன்ட் டச்.உட்காரு உட்காரு.
நான் ரெண்டாவது தடவ அழுதது இன்னைக்குத்தான்.நீ சொன்ன வார்த்தை.அது எந்த போதையிலும் மறக்க மாட்டேங்குதே.
ராஜிக்கு திடுக்கிறது.தான் சொன்ன அந்த ஒருவார்த்தை அவனை இந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
ஐயோ சாரி கார்த்திக்.நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் ப்ளீஸ் கார்த்திக் என்னை மன்னிச்சுடு கார்த்திக்.என்று அவன் கைகளை பிடித்துக்கொள்ள.
ஹேய் ஹேய் தொடக்கூடாது.தொட கூடாது.டோஒஒஒஒஒஒஒண்ட் டச்.எனக்கு தெரியும் ராஜி.நீ கோவத்துல தான் சொல்லிருப்பன்னு.ஆனா அதை நினைச்சாலேலேலேலேலே ன்னு சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் சாய்ந்தான்.
அவன் சுயநினைவு இல்லாத நேரத்திலும் தான் கூறிய வார்த்தை அவனுக்கு நினைவிருப்பதை எண்ணி அதன் கொடூரம் புரிந்தது.
சில நிமிடம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ராஜி கார்த்திக்கின் முகத்தில் சில மாற்றங்களை கவனித்தாள்.
எப்போதும் அழகாக ட்ரிம் செய்து காணப்படும் முகம் அடர்த்தியான தாடியுடன் காணப்பட்டது.கண்களுக்கு கீழே தூங்காமல் கருவளையம் தெரிந்தது.
தம்பி நம்மள காணாம ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கான்.தாடியும் இவனுக்கு க்யூட்டா தான் இருக்கு.இவனை எப்படி பெட்ல கொண்டு போய் படுக்க வைக்க.ம்ம்ம்ம் ஆபத்துக்கு பாவம் இல்லை.தோள்ல கைத்தாங்களா கூட்டிட்டு போய் சோபாவில் படுக்க வைக்கலாம் என்று தோன்றிய உடன் அதையே செயல் படுத்தினாள்.
அவனை சோபாவில் படுக்க வைத்துவிட்டு பெட்ஷீட்டை எடுத்து போர்த்திவிட்டு அவனுடைய போனை எடுத்து அவனுக்கு பக்கத்தில் எடுத்து வைத்துவிட்டு படுக்க சென்றாள்.
ரூமில் பெட்டில் விழுந்த ராஜிக்கு ஏனோ இன்று கார்த்திக் குடித்திருந்தது கோவத்தை தரவில்லை.மனம் இன்று சந்தோசமாக இருந்தது.
நாளைக்கு கண்டிப்பா கார்த்திக் இடம் சாரி கேட்டு அவன்கூட பிரெண்ட்ஸ் ஆக ட்ரை பண்ணனும் என்று எண்ணத்துடனே அன்று அசைபோட்ட படியே தூங்கியும் போனாள்.
மறுநாள் காலை எழுந்தபோது வழக்கம் போல் ராஜி குளித்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் பத்தி கொளுத்தி சாமிகும்பிட்டாள்.
பின் கார்த்திக்கிற்கு காலை உணவும்,மதியத்திற்கான சாப்பாடை கிச்சனில் தயார் செய்து கொண்டிருந்தாள்.
தூக்கம் கலைந்து எழுந்த கார்த்திக் கண்களை கசக்கி கொண்டு முழித்து பார்த்தான்.
அவனுக்கு நேத்து நைட் நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.எப்படி ஹால்ல சோபாவில் வந்து படுத்தோம்னு யோசித்து பார்த்தும் சுத்தமாக நினைவிற்கு வரவில்லை.
யாரோ இருவர் தலையின் இரண்டு பக்கமும் சுத்தியலால் அடிப்பது போன்று தலைவலி பயங்கரமாக இருந்தது.
என்ன கருமத்தடா குடிச்ச கார்த்தி.இப்படி தலைவலிக்குது.இவ சும்மாவே தையதக்கனு குதிப்பா.இதுல நைட் குடிச்சிட்டு வேற என்ன பன்னி தொலைச்சியோ.அப்ப்பா.என்று மைண்ட் வாய்சில் பேசினான்.
மெதுவாக எழுந்து பேஸ்ட்,பிரஷ் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று பிரெஷ்அப் ஆக சென்றான்.எல்லாம் முடித்துவிட்டு பேஸ் வாஷ் செய்ய கண்ணாடியை பார்க்கும் போது அங்கு சாரி.நேத்து நடந்ததுக்கு.ப்ளீஸ் மன்னிச்சுடு.என்றும் அதனுடன் அழுவதை போன்ற ஒரு ஸ்மைலியும் லிப்ஸ்டிக்கால் வரையபட்டிருந்தது.
நேத்து நைட் குடிச்சிட்டு அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ.அவளா சாரி கேக்குறா.ம்ம்ம்ம்ம் தெரியலையே.மறுபடியும் மைண்ட் வாய்ஸ்.
பின் துண்டை வைத்து துடைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து தயாராக வைக்கப்பட்டிருந்த டீ கப்பை எடுத்து ஒரு மடக்கு குடித்தபோது அது ஆறிபோய் இருந்தது.மறுபடியும் குடித்தபோது தான் தெரிந்தது அது தேங்காய் தண்ணீர் என்று.
இவ என்ன லூசா.நானே தலைவலின்னு சொல்லி செத்துட்டு இருக்கேன்.தேங்காய் தண்ணியை வச்சிருக்கா.என்று எண்ணிக்கொண்டு டீகப்பை கீழே வைக்கும் முன் சாசர்க்கு கீழ் ஒரு பேப்பர் இருந்தது.
ஹேங்ஓவெருுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா உடனே கேட்கும்.அதான் வச்சேன்.ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.ப்ளீஸ் நேத்து பேசினதை மனசுல வச்சுக்காத.சாரி.மறுபடியும் அழுகையுடன் கூடிய ஸ்மைலி.
நமக்கு ஹேங்ஒவெர்னு இவளுக்கு எப்படி தெரியும்.தெரிஞ்சிருக்கும்.கொஞ்சமாடா நேத்து குடிச்சிருக்க.அதுவும் இல்லாம மட்டமான சரக்கு வேற.என்ன வாடை அடிக்கும்.அதான் கண்டுபிடிச்சிட்டா.அவனுடைய மைண்ட் வாய்ஸ் சொன்னது.பின் அதை குடித்துவிட்டு அன்றைய நியூஸ் பேப்பரை படித்து முடிக்கும்போது தான் அவனுக்கு ஒரு மாற்றம் தெரிந்தது.இப்போது தலைவலி குறைந்திருந்தது.
இவளுக்கு எப்படி தெரியும்.ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா சரி ஆகும்னு.ம்ம்ம்ம்ம்ம் அப்ப நேத்து நைட் கண்டிப்பா எதோ நடந்துருக்கு.
ஒருவேளை அடங்கா பெண் ஆனாலும் ஒரு ஆண்மகனின் கை பட்டால் அடங்கித்தான் போகணும்னு வடிவேலு ஒரு படத்துல சொல்லிருப்பாரே.ஒருவேளை அப்படி எதாவது நடந்துருக்குமோ.இல்லையே அப்படினா உதட்டுக்கு கீழே அவளுக்கு ரத்தம் வந்துருக்கணும்,நமக்கும் முதுகுல,கன்னத்துல நகக்கீறல் இருக்கணும்.அப்படி எதுவும் இல்லையே.
டேய் அடச்சீ.வர வர தமிழ் சினிமா பாத்து ரொம்ப கெட்டு போயிருக்கடா நீ.உன்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.அதுவும் இல்லாம ராஜீய போய் எப்படிடா.த்தூ.மூடிட்டு ஆபிஸ்க்கு கிளம்புற வேலைய பாரு என்று அவனுடைய மனசாட்சி அவன் முன்னாள் வந்து சொல்ல
ஆமால்ல.சரி கிளம்புவோம் என்று குளிக்க சென்றான்.
ட்ரெஸ் செய்து சாப்பிட சென்றவன் அங்கு ராஜி இல்லாததை கண்டு சற்று வருத்தம் அடைந்தாலும் அவளுடைய மன்னிப்பு அவனுக்கு சற்று இதமாக இருந்தது.
பிளேட்டை கவிழ்த்து சாப்பாடை வைத்தவன் பிளேட்டுக்கு கீழே இருந்த பேப்பரை எடுத்து படித்தான்.
திரும்பவும் தொந்தரவு பண்ணறேன்னு நினைக்காத ப்ளீஸ் நீ இங்க இருந்து போறதுக்குள்ள மன்னிச்சிட்டேன்னு ஒருவார்த்தை சொல்லிடேன்.என்னால உன் முகத்தை கூட பாக்க முடியல.ப்ளீஸ்.
படித்துவிட்டு மடித்து வைத்தவன் லன்ச் பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அவன் சென்ற உடன் கீழே வந்த ராஜி கார்த்திக் மன்னிக்கவில்லை என்று தெரிந்து அழுகையாக வந்தது.மன்னிக்கிற அளவுக்கு நான் அப்படி என்ன சொல்லிட்டேன்.இல்ல நான் அதுக்கு தகுதி இல்லாதவன்னு நினைக்கிறானோ.சரி இதுவெல்லாம் நேத்தே தெரிஞ்சதுதான அவன்கிட்ட சாரி கேட்டோம்.அவன் மன்னிக்கிற வரைக்கும் அவனை விடக்கூடாதுன்னு அவளுடைய மனசாட்சி அவளுக்கு சொல்லியது.
பின் இயந்திரத்தனமாக சாப்பிட்டவள் கார்த்திக் வரும்வரை நேரம் போக்குவதற்காக மகேஷின் அம்மாவிடம் சென்று சமையலுக்கு உதவிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள்.
ஆபிசில் வேலை அதிகமாக இருந்ததால் ராஜியை மறந்து வேளையில் கவனத்தை செலுத்தினான்.
பின் லன்ச் டைம் வர டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றான்.அங்கு அவனுடைய மேலதிகாரி இருக்க
என்னப்பா புதுமாப்பிள்ளை.கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு.
ம்ம்ம்ம் சூப்பரா போகுது சார்.மனசுக்கு புடிச்ச பொண்டாட்டி,உள்ளங்கைல வச்சி தாங்குறா.
பார்ரா.வீட்டம்மா வந்துட்டா போல. டிபன் பாக்ஸ் கொண்டுவந்துருக்க.சரி என்ன செஞ்சி கொடுத்துருக்கா இன்னைக்கு உன் பொண்டாட்டி.
எப்போதும் நான் ரெண்டுவகையான கறி இல்லாம சாப்பிடமாட்டேன்னு அவளுக்கு நல்லா தெரியும்.டிபன் பாக்ஸ் இருக்க வெயிட்டை பார்த்தா இன்னைக்கு விருந்து சாப்பாடுதான்னு நினைக்கிறன்.

சரி ஓபன் பண்ணு.நானும் கலந்துக்கிடுறேன் விருந்துல.
கண்டிப்பா சார்.உங்களுக்கு இல்லாமலா.என்று பாக்ஸை ஓபன் செய்ய முதல் பாக்சில் எம்ப்டியாக இருந்தது.
தம்பி பாக்ஸை பாத்தாலே தெரியுது உனக்கு இன்னைக்கு விருந்துதான்னு.நான் வேணும்னா என்னோட சாப்பாட்டை தரவா.
ஐயோ இல்ல வேண்டாம் சார்.அவளுக்கு எப்போதும் என்கூட விளையாடிட்டே இருக்கனும்.அதான் இப்படி பண்ணிருப்பா.இருங்க இன்னும் ரெண்டு பாக்ஸ் இருக்கு அதுல பாக்கலாம்.
நல்லா வருவ.நான் சும்மாதான் கேட்டேன்.டிரைவர் அனுப்பிருக்கேன்.சாப்பாடு வாங்க.நீ சாப்பிடு நான் அப்றமா வரேன்.உன் பொண்டாட்டி உங்கிட்ட எதோ கேக்க வரான்னு நினைக்கிறன்.சாம்பிராணி மாதிரி இருக்காத.புரிஞ்சுக்கோ.ன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அடுத்த பாக்ஸ்சும் எம்ப்டியாக இருந்தது.ஆனால் அதில் ஏதோ எழுதி இருப்பது போல் தெரிய அதை தடவினான்.ஆனால் அழியவில்லை.முந்தைய பாக்சின் கீழ் ஒரு பேப்பர் ஒட்டப்பட்டு இருந்தது.அதில்
நான் நேத்து பேசினது எல்லாம் கோவத்துல பேசினது.எதுவுமே என் மனசுல இருந்து வந்தது இல்லை.உன்ன ஹர்ட் பண்ணினதுக்கு சாரி.இல்லை மன்னிக்கிற அளவுக்கு நான் தகுதியற்றவன்னு நினைக்கிறியா.கொஞ்சம் என் நிலைமையில் இருந்து யோசிச்சி பாரேன்.சாரி சாரி சாரி.1000 டைம்ஸ் சாரி.
படித்த கார்த்திக் உதட்டோரம் லேசாக சிரிப்பு வந்தது.இப்பவாச்சும் மனசு இறங்கி வந்தாலே.ஓவெரா பிகு பண்ணாதடா.அப்பறம் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிட போகுது.மனசாட்சி சொல்லியது.
உடனே போனை எடுத்து ராஜிக்கு கால் செய்தான்.ஆனால் not reachable என்று வந்தது.
டேய் அவ சொல்ற மாதிரி நீ சரியான லூசுதாண்டா.அவ போனை நேத்து உடைச்சிட்டால்ல.அப்ப எப்படி பேசுவா.அவன் மனசாட்சி திட்டியது.
ஆமா.இதை ஏன் நான் யோசிக்காம போனேன்.சரி ஈவினிங் போகும் போது அவளுக்கு ஒரு போன் வாங்கிட்டு போகணும்.அவன் மனசாட்சியிடம் சொன்னான்.
அதை செய் முதல்ல.என்றது மனசாட்சி.
அதன் பிறகு அடுத்த பாக்ஸை எடுத்தவன் அதில் தயிர் சாதமும்,உருளைக்கிளங்கு பொரியலும் இருந்தது.சாப்பிட்டுவிட்டு சைட் விசிட் சென்றவன் வழக்கத்தைவிட சீக்கிரமாக வீட்டிற்கு கிளம்பினான்.
வரும்வழியில் பூர்விகா மொபைல் ஸ்டோர் சென்று ஆப்பிள் ஐபோன் 6 ஆர்டர் செய்தான்.
பின் சிம் போட்டு கால் செய்து பேசுவதற்கு ஏற்றார் போல் அதனை தயார் செய்ய சொன்னான்.அதற்கு ஒரு அரைமணி நேரம் ஆகும் என்று சொன்னதால் பில் போட்டு கார்டை ஸ்விப் செய்தான்.
போனை ரெடி பண்ணுமாறு சொல்லிவிட்டு கிப்ட் கவரும் ரிப்பனும் வாங்க சென்றான்.பின்ஓ ஒரு பேப்பரில் dont feel guilty.தப்பு என்னோடதுதான்.நான்தான் கொஞ்சம் carefull ஆ இருந்துருக்கணும்.சாரி எல்லாத்துக்கும்.இனி நான் உன்னை எந்த வகையிழும் தொந்தரவு பண்ண மாட்டேன்.அப்புறம் இது கிஸ் பண்ணினத்துக்கு கூலியா தரேன்னு தப்பா நினைச்சிடாத.என்னால உடைஞ்ச உன் போனுக்கு பதிலா என்னால முடிஞ்சது.என் மன்னிப்பை ஏத்துக்கிட்டன்னா இதையும் ஏத்துக்கோன்னு
எழுதினான்.
எழுதினான்.
அரைமணி நேரம் கழித்து போனை வாங்கி கொண்டு எழுதிய பேப்பரை அதனுள் வைத்து அதன் மேல் ஸ்டிக்கரை ஒட்டி ரிப்பனை சுற்றினான்.
ஸ்டிக்கரில் ப்ளீஸ் ஓபன் இட் என்று எழுதி சிரிப்பது போன்ற ஒரு ஸ்மைலி வரைந்தான்.பின் வீட்டை நோக்கி பைக்கை விரட்டினான்.
வீட்டிற்கு வந்த கார்த்திக் காலிங் பெல்லை அடித்தான்.உடனே கதவை திறந்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் ராஜி.
ரூமிற்கு சென்று பிரெஷ்அப் செய்துவிட்டு கிப்ட் பாக்ஸை எடுத்து கிட்சேன் ஸ்லாபில் வைத்துவிட்டு ஹால்லிற்கு வந்து டிவியை ஆன் செய்தான்.
காபி தயாரித்து கொண்டிருந்த ராஜி கிப்ட் பாக்ஸை எடுத்தவள் அதில் ஓபன் இட் என்று எழுதியிருக்க அதை பிரித்தவள் ஐபோனை பார்த்து அதிர்ந்து போனாள்.
கிஸ் பண்ணினதுக்கு இவ்ளோ காஸ்டலி போன்னா.அவன்கூட படுத்து எல்லாம் நடந்துருந்துதுன்னா அப்ப நிறைய காச வச்சிருப்பான்ல.என்ன பிராஸ் ரேஞ்சுக்கு நினைச்ட்டான்ல.நேத்து என்ன சொன்னான்.அந்த ஒரு முத்தம் போதும் வாழ்நாள் முழுக்கண்ணு சொன்னானே.அதை நம்பித்தான அவன்கூட பழகனும்னு முடிவு பண்ணேன்.ச்சி.அசிங்கம்.அழ வேண்டும் போல இருந்தது.அழவில்லை.கைகளால் வாயை பொத்திக்கொண்டு போன் பாக்ஸை எடுத்துக்கொண்டு பெட் ரூமிற்கு ஓடினாள்.
பாக்ஸை பார்த்து ராஜி தன்னிடம் பேச வருவாள்.என்ன சொல்லுவாளோ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த கார்த்திக்குக்கு அவள் எதுவும் பேசாமல் ரூமிற்கு சென்றது ஏமாற்றமாக இருந்தது.
அவளாகத்தானே சாரி கேட்டாள்.அவளாகத்தானே பேசணும்னு சொன்னாள்.இப்போ வாயை பொத்திக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள்.சரி எதுவா இருந்தாலும் அவள் போக்கிலே விட்டுட வேண்டியது தான் என்ற முடிவுடன் வெளியே சென்றான்.
ரூமில் தான் வைத்திருந்த பாக்ஸை மெத்தையில் வீசியவள் கண்ணாடியை பார்த்து கதறி அழுதாள்.நான் ப்ராஸ்ஸா.நான் ப்ராஸ்ஸா. என்று கேட்டுக்கொண்டே அழுதாள்.
அப்போதுதான் மெத்தையில் கிடந்த பாக்ஸ் கண்ணாடியில் தெரிந்தது.போனை தவிர மேலும் இரண்டு இருப்பது தெரிந்தது.
கண்ணீரை துடைத்துவிட்டு அதை எடுத்து பார்த்தவள் ஒன்று அவளுக்கு பிடித்த டைரி மில்க் ப்ரூட் நட்ஸ் சாக்கலேட்டும் இன்னொரு லெட்டரும் இருந்தது.
அதை எடுத்து படித்தவள் அதை தன் முகத்தில் வைத்துக்கொண்டு அழுதாள்.
அவளையும் அறியாமல் அவள் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்தது.சாரி கார்த்திக்.என்ன மன்னிச்சிடுடா.எப்போதுமே உன்னை தப்பா பார்த்த மனசு இப்பவும் அப்படி நினைச்சிட்டுடா.
போனை எடுத்து தனது சிம்மை போட்டு முதல் முதலாக கார்த்திக்கு கால் செய்தாள்.
ஒரே ரிங்கில் அட்டென்ட் செய்தவன் ஹலோ என்றான்.
இவள் பேசவில்லை.ஹ
ஹலோ இருக்கியா.என்ன விஷயம் ராஜி.ஹலோ.
அவளுக்கு பேச தைரியம் இல்லை.பெருமூச்சு விட்டு விட்டு கார்த்திக் தனியா இருக்ககே எரிச்சலா இருக்கு.கொஞ்சம் வீட்டுக்கு வரியா.ப்ளீஸ் என்றாள்.
ம்ம்ம்.இதோ வரேன்.ஒரு கப் காபி போட்டு வையென்.5 நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்.

ம்ம்ம் சரி.வைக்கிறேன்.
ம்ம்ம்.சரி.
சிட்டாக கிச்சன் சென்றவள் காபி கலந்தவள் சீனி கலக்கும் போது எல்லா விஷயத்துலையும் நம்ம மனசை கரெக்டா ரீட் பன்றானே.ஆனால் இப்ப நம்ம தப்பா நினைச்சதை அவன்கிட்ட சொன்னா வெறுத்து ஒதுக்கிடுவான்.அதனால அவன்கிட்ட இதை காட்டிக்காம சமாளிக்கணும் என்று நினைத்துக்கொண்டு எக்ஸ்ட்ரா இரண்டு ஸ்பூன் கலந்துவிட்டாள்.
வீட்டிற்கு வந்த கார்த்திக் ராஜியை தேட கிச்சனில் இருந்து ம்ம்ம்ம்க்க்கும் என்று இருமினாள்.
காபி என்று அவனிடம் நீட்டினாள்.
தாங்ஸ் என்று வாங்கிக்கொண்டு காபியை வாங்கியவன் ஒரு மிடறு குடித்தவன் இனிப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்து உடனே கப்பை எடுத்துகொண்டான்.
என்ன காபி நல்லா இல்லையா.
இல்ல சுகர் ஜாஸ்தியா இருக்கு.அதான்.பரவா இல்லை.அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுறேன்.
தெரியும் தம்பி.வேணும்னு தான போட்டேன்.பொண்ணுக எப்போதுமே சந்தோஷத்தையும்,துக்கத்தையும் சாப்பாட்டுலதான் காமிப்போம்.பாக்கலாம் புரிஞ்சிடுறியா இல்லையான்னு.மனதுக்குள் நினைத்து கொண்டு உதட்டை சுளித்துக்கொண்டு சிரித்தாள்.
சாரி அண்ட் தாங்ஸ் ராஜி.
எதுக்கு.
இல்ல சாரி நேத்து நடந்துகிடத்துக்கு.தாங்ஸ் வந்து
பிரெண்ட்ஸ் என்று அவள் கை நீட்ட.
புரியல.
பிரெண்ட்ஸ் என்று மீண்டும் ராஜி கை நீட்ட
ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்து தலை ஆட்டிக்கொண்டே தயக்கத்துடனே கைநீட்டி குலுக்கினான்.
கார்த்திக் ப்ளீஸ் நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் மறந்துடுவோம்.இனிமேல் நாம ரெண்டுபேரும் பிரெண்ட்ஸ்.அதுக்கு அப்றம் நடக்குறதெல்லாம் நடக்கட்டும்.
ம்ம்ம் சரி.
உனக்கு எதாவது வேலை இருக்கா.
இல்லை.அப்ப ஏன் இன்னும் கைய பிடிச்சிட்டு இருக்க.பார்மாலிட்டிக்கு கை குலுக்கினா இப்படி 10 நிமிஷமா பிடிச்சி வைக்க கூடாதுப்பா.
ஓஹ் சாரி சாரி.
ம்ம்ம் முதல்ல இந்த சாரி சொல்றத நிறுத்து.உனக்கு செட்டே ஆகலை.
ம்ம்ம் சரி.
பின் ராஜி கப்பை வாங்கிக்கொண்டு கிச்சனுக்குள் செல்ல
ராஜி ஒரு நிமிஷம்.
என்ன என்பது போல அவனை பார்க்க.
இல்ல.அதுவந்து நேத்து.நேத்து.நைட்டுடுடுடு.இல்ல ஒன்னும் இல்ல.நீ போ.நீ போ.
இல்ல.ஏதோ கேக்க வந்த.சொல்லு.வாய் வரைக்கும் வந்துடுச்சு.சும்மா கேளு.
நேத்து நைட்.எனக்கு நல்ல போதை.என்ன நடந்துச்சுன்னு தெரியல.அதான் என்ன நடந்துச்சுன்னு கேட்கலாம்னு
ஒன்னும் நடக்கல.நல்லா யோசிச்சி பாரு.புரியும்.
ஐயோ ராஜி சத்தியமா எனக்கு எதுவுமே நியாபகத்துல இல்லை.அட்லீஸ்ட் என்ன சொன்னன்னு ஆச்சும் சொல்லேன்.
உண்மைய சொன்ன என்று தலைவர் ஸ்டைலில் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள் ராஜி.
ராஜி அப்புறம்..
மறுபடியும் என்ன.
ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா சரி ஆகும்னு உனக்கு எப்படி தெரியும்.அதுவும் இல்லாம எனக்கு ஹாங்ஓவர்னு உனக்கு எப்படி தெரியும்.
அதான் முன்னாடி குடிச்சிட்டு தலைவலின்னு சொல்லுவியே.அதை வச்சுத்தான் தெரியும்.ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணிகுடிச்சா நல்லதுன்னு ரமணாமகரிஷி சொல்லிருக்காரு.அதான் கொடுத்தேன்.இப்போ எதுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி எல்லாம்.போ.எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு.டின்னெர் ரெடி பண்ணனும்.சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் ராஜி.
No comments:
Post a Comment