CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 17


அடுத்த வந்த நாட்கள் கார்த்திக் வேளைக்கு செல்வதும் முடித்து விட்டு லேட்டாக வருவதுமாக சென்றது.
அன்று ஒரு நாள் கார்த்திக் மதியம் வந்து விட அப்போது ராஜி ரமேஷிடம் பேசி கொண்டிருந்தாள்.
கார்த்திக் எதேச்சையாக ரூமிற்கு செல்லும் போது அவனுக்கு ராஜி பேசுவது கேட்டது.
ரமேஷ் சர்ப்ரைஸா பண்ணலாம்னு இருக்கேன்.
. . . . . . . . . . . . . . . . .
இப்ப நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா.
. . . . . . . . . . . . . . . .
ஆமா ரமேஷ்.அன்னைக்கு அந்த நாளோட என் வாழ்க்கையே மாறிடும்.அந்த நாளுக்காகத்தான் நான் காத்துகிட்டு இருக்கேன்.
இதற்கு மேல் அவள் பேசுவதை கேட்பது அநாகரிகம் என்று உணர்ந்த கார்த்திக் அதற்கு மேல் காத்திருக்காமல் கதவை தட்டினான்.
சரி நான் அப்புறமா பேசுறேன் என்று சொல்லிவிட்டு ராஜி கதவை திறந்தாள்.
கதவை திறந்த ராஜி கார்த்திக்கை பார்த்த உடன்
என்ன இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டீங்க.
ஒன்னும் இல்ல ராஜி சும்மா தான். ஒர்க் இல்ல.அதான் வந்துட்டேன்.
சரி வாங்க சாப்பிடலாம்.
நீ போ நான் வரேன்.
இல்ல நீங்க வாங்க.
போன்னு சொல்றேண்ல.சும்மா நைய் நைய்ன்னு.உனக்கு தேவைன்னா நீ போய் சாப்பிடு.எனக்கு லேட் ஆகும்.
கார்த்திக் திடீரென்று இப்படி பேசியது ராஜிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.அவனுடைய இந்த பேச்சு ராஜிக்கு அழுகையாக வந்தது.தலையை குனிந்து கொண்டு அங்கிருந்து சென்றாள்.
நேராக கட்டிலில் விழுந்த கார்த்திக் அப்படியே தூக்கி போனான்.
ஆனால் ராஜிக்கு சாப்பிட தோணவில்லை.அத்தைக்கும் மாமாவிற்கு மட்டும் பரிமாறிவிட்டு அவள் சென்றாள்.
நீயும் கார்த்திக்கும் சாப்பிடலையமா என்று சாந்தா கேட்டதற்கு இல்லை அத்தை. அவுங்க தலை வலிக்குதுன்னு தூங்குறாங்க. நானும் அவுங்க கூட சாப்பிடுகிடுறேன் என்று சொல்லி சமாளித்தாள்.
ரூமிற்கு சென்றவள் அங்கு கார்த்திக் தூங்கி கொண்டிருப்பதை பார்த்தாள். சோபாவில் அமர்ந்தவள் ஊமையாக அழுதாள்.
உன்ன என்னால புரிஞ்சிக்கவே முடியலை கார்த்திக்.நீ ஏன் இப்படி பன்றேனு எனக்கு தெரியலை.திடீர்னு என்கிட்ட மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு நெருங்கி வர.திடீர்னு தள்ளி போகுற.என்ன காரணம்னு சொன்னா தான தெரியும் எனக்கு.உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்னு தான உன்கிட்ட இவ்ளோ நெருக்கம் காட்டுறேன்.அதை கூட உன்னால புரிஞ்சிக்க முடியலை.
ஒரு வேலை நான் மனசு மாறலைன்னு நினைக்கிறியா இல்ல.எனக்கு எண்ணனே புரியலை கார்த்திக்.ஆனாலும் இந்த அவஸ்தை எனக்கு பிடிச்சிருக்கு கார்த்திக்.காதலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு சுகம்னா அதுல மூழ்கி தத்தலிக்கிறதும் ஒரு சுகம் தான் கார்த்திக்.
அந்த சுகம் உண்ணாலதான் கார்த்திக் எனக்கு கிடைச்சிருக்கு.நாளைக்கு நமக்கு குழந்தைங்க பிறந்தா அவுங்க கிட்ட இப்படி நாம லவ் பண்ணினதை சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கும்.நீ என்ன உடனே ஏத்துகிட்டு நானும் உடனே ஏத்துகிட்டு ஈஸியா ரெண்டு பேரும் சேர்ந்துருந்தோம்னா அதுல சொல்ரதுக்கு ஒண்ணுமே இருக்காது.ஆனால் இப்போ வாழ்க்கை முழுதும் சொல்லலாம்.அந்த அளவுக்கு நான் உன்னை லவ் பண்றேன்.
நீ என்ன செஞ்சாலும் எனக்கு கோவம் வராது. ஆணா ப்ளீஸ் என்ன காயப்படுத்துற மாதிரி மட்டும் பேசாத.என்னைக்காச்சும் ஒரு நாள் நான் உன் கண்ணுல அந்த பழைய காதலை பார்ப்பேன் கார்த்திக்.அதுவரைக்கும் நீ என்ன செஞ்சாலும் நான் உன்னை விட்டு போகமாட்டேன் கார்த்திக்.
என்று நினைத்து கொண்டாள்.
சாயங்கால நேரம் கார்த்திக் எழுந்து விட ராஜி ரூமில் இல்லை.
ஹாலுக்கு சென்றவன் அங்கு ராஜியும் சாந்தவும் இருக்க
என்னடா இன்னும் சாப்பிடலையா.நீ இன்னும் சாப்பிடலைன்னு அந்த பொன்னும் சாப்பிடாம இருக்காடா.என்று கேட்டாள் சாந்தா
என்ன நீ இன்னும் சாப்பிடலையா.என்று ராஜியை பார்த்து கார்த்திக் கேட்க.
எனக்கு பசிக்களை. அதான் வேற ஒன்னும் இல்லை என்றாள் ராஜி.
என்ன நீ லூசா.வா முதல்ல சாப்பிடலாம் என்று அவள் கையை பிடித்து டைனிங் டேபிளுக்கு இழுத்து சென்றான் கார்த்திக்.
இல்ல எனக்கு.
ஷ்ஷ்ஷ்ஷ்.ஒன்னும் சொல்லக்கூடாது.உட்காரு.
பிளேட்டை எடுத்து ராஜிக்கு சாப்பாட்டை வைத்தான் கார்த்திக்.
ரெண்டு பேருமே உக்கருங்க நான் பரிமாறுறேன் என்றாள் சாந்தா.
இல்ல நீங்க உக்காருங்க.நான் போடுறேன் என்றாள் ராஜி.
எல்லாம் எனக்கு தெரியும்.நீ எழுந்திருக்க கூடாது உக்காறு. என் பொண்டாட்டிக்கு நான் பரிமாறுறேன். இதுல என்ன இருக்கு நீ சாப்பிடு என்று அவள் தோலை அமர்த்தி இருக்க வைத்தான்.
பின் கார்த்திக் ஒரு பிளேட்டில் சாப்பாடு வைத்து சாப்பிட தொடங்கினான்.
நல்லா பொண்டாட்டி தாசனா ஆகிட்டடா. கொடுத்து வச்சவ தான் என் மருமக என்று சாந்தா சொல்லி விட்டு ஹாலுக்கு சென்றாள்.
அவள் சென்றதை உறுதி படுத்திய கார்த்திக் ராஜியிடம் சாரி ராஜி.அப்போ ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்.அதுக்காக நீ இப்படி சாப்பிடலாமலா இருக்காத.
இல்ல அதெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்.எனக்கு நிஜமாவே பசிக்களை அதான்
சாப்பிடலை.
போதும் ராஜி.நடிக்காத.
ஒன்றும் சொல்லாமல் ராஜி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
ராஜி இன்னையோட நம்ம சவால் ஆரம்பிச்சு மூணு மாதம் முடிய போகுது.தெரியுமா.
கார்த்திக் சொன்னதும் தான் அவர்களுக்கு இடையிலான சவால் ராஜிக்கு நியாபகமே வந்தது.
ஆமா இல்ல.அதுக்குள்ள சீக்கிரம் இந்த நாள் எல்லாம் முடிஞ்சிடுச்சு.
நீ மறந்தே போய்ட்டியா.நான் தான் நியாபக படித்திட்டேனா.
இல்ல இல்ல நியாபகம் இருக்கு.
இன்னும் 3 மாசம் தான் என்கூட இருக்க போற.
போகதன்னு சொல்லு கார்த்திக்.ப்ளீஸ்.என்கூட இரு ராஜி.என் வாழ்க்கை முழுதும் என்கூடவே இரு ராஜின்னு சொல்லு கார்த்திக் என்று ராஜி மனதுக்குள் கெஞ்சினாள்.
ஒன்றும் சொல்லாமல் கார்த்திக்கை பார்த்து உதட்டை மட்டும் சுளித்தாள்.
கார்த்திக் கீழே குனிந்து நான் உன்னை விட்டு போகமாட்டேன்னு சொல்லு ராஜி.உன் வாழக்கை முழுதும் உன்கூடவே இருப்பேன்னு சொல்லு ராஜி.நான் உன் கண்ணுல பலதடவை என் மேல உள்ள காதலை பாத்துருக்கேன்.அன்னைக்கு ஷாப்பிங் போகும்போது கூட நீ என் தோள் மேல உன் கையை வச்ச.அப்ப கூட நான் பாத்தேன்.ப்ளீஸ் சொல்லு ராஜி.போகமாட்டேன்னு சொல்லு ராஜி.ஆனால் இந்த ரமேஷ் மேட்டர் மட்டும் தான் என்ன ரொம்ப குழப்புது.நான் உன்கிட்ட வரும்போதெல்லாம் அந்த ஒரு விஷயம் தான் என்ன தடுக்குது.
அதை உன்கிட்ட நான் கேட்டுடுவேன்.ஆனால் நான் உன்கிட்ட கேட்டு என்ன நீ சந்தேகப்படுரியான்னு கேட்டுட்டா அந்த நிமிஷமே நான் செத்துடுவேன் ராஜி.
உன்ன நான் என்னைக்குமே சந்தேக பட மாட்டேன்.இது நீ எனக்கு கிடைக்காம போய்டுவியோன்னு பயம்.அதான் என்னால ஒண்ணுமே பண்ண முடியல.என்று மனதுக்குள் ராஜியிடம் பேசினான்.
பின் இருவரும் சாப்பிட்டு விட்டு ரூமிற்கு சென்றனர்.அங்கு கார்த்திக் டிரஸ் மாற்றிவிட்டு வெளியே சென்று விட ராஜிக்கு தனிமை வாட்டியது.யாரிடமாவது பேசலாம் என்று தோன்றியது.
அப்போது சக்தி அன்று கார்த்திக் பற்றி சொல்லியது நினைவிற்கு வந்தது.உடனே போன் எடுத்து சக்திக்கு கால் செய்தாள்.
சில ரிங்குளுக்கு பிறகு கால் அட்டெண்ட் செய்யப்பட்டது.
ஹெலோ சொல்லு அக்கா.எப்படி இருக்க.என்ன என்னலா சுத்தமா மறந்துட்ட போல.
நல்லா இருக்கெண்டி.முதல்ல நான் சொல்றதை கேளு.
என்ன இன்னும் கார்த்திக்கை எனக்கு பிடிக்கலைன்னு சொல்ல போறியா.
அது இல்லடி.
இல்ல இன்னும் அந்த ரமேஷை என்னால மறக்க முடியலைன்னு சொல்ல போறியா.
ஹே நான் சொல்லரதை கேளுடி.
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.நான் அம்மாகிட்ட சொல்ல போறேன்.இரு உனக்கு இருக்கு.
லூசாடி நீ.நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்கமா நீ பாட்டுக்கு உலரிட்டு இருக்க.முதல்ல என்ன பேச விடுடி சனியனே.
அக்கா என்ன அக்கா கால் பண்ணி இப்படி திட்டுற.
பின்ன என்னடி நான் என்ன சொல்றேன்னே கேக்காம நீயா ஒண்ண நினைச்சி பேசிட்டு இருக்க.
சரி விடு அக்கா சொல்லு என்ன விஷயம்.
சக்தி அது வந்து.
சொல்லுக்கா.
இல்லடி நான்.நான் வந்து.
நீ வந்து.
கார்த்திக்.
ஆமா கார்த்திக்.என்ன பன்னான்.
நான் கார்த்திக்கை லவ் பண்ணுறேண்டி.
இவ்ளோதானா.
என்னடி இவ்ளோதானேன்னு சாதாரணமா சொல்லுற.
பின்ன உன்ன கொஞ்சுவாவங்களாக்கும்.உலகத்துளையே இவ்ளோ நாள் கழிச்சு புருஷனை லவ் பன்ரென்னு சொன்ன முதல் பொண்ணு நீதான்.
என்னடி இப்படி சொல்ற.
ஆமா அக்கா.இது உனக்கு முன்னாடியே வந்துருக்கணும்.இப்பவாச்சும் வந்ததே.சரி என்ன சொன்னாரு உன் ஆளு.
அவன்கிட்ட நா இன்னும் சொல்லவே இல்லடி.
ஏன் அக்கா சொல்ல வேண்டியது தான.உனக்கு சொல்ல பயமா இருந்தா சொல்லு.நான் சொல்றேன்.
உதை வாங்குவ. அதை நானே சொல்லிக்கிடுறேன்.அவன் முகத்தை என் ரெண்டு கைளையும் ஏந்தி அவன் கண்ண பாத்து நேருக்கு நேரா அவன் கிட்ட ஐ லவ் யூ கார்த்திக்னு சொல்லணும்டி.
அக்கா இவ்ளோ லவ்வ வச்சிக்கிட்டு ஏன்க்கா இன்னும் சொல்ல மாட்டேன்கிற.
இல்லடி எங்களுக்குள்ள நடக்கிற இந்த கன்னாம்பூச்சி விளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்குடி.அது எப்போ முடியுதோ அப்போ சொல்லிடுறேன்.அதுவும் இல்லாம எங்களுக்குள்ள நிறைய விஷயம் நடந்து போச்சு.
அக்கா என்னக்கா சொல்ற.எல்லாம் முடிஞ்சிடுச்சா.அவனை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இதை மட்டும் கரெக்டா பண்ணிருக்க.
ஆமா.ஏய் என்ன சொன்ன நீ நினைக்கிற மாதிரி அந்த மேட்டர் இல்லடி.ஒரு அக்கா கிட்ட பேசுற மாதிரியா பேசுற நீ.இது வேரடி.என்று தனக்கும் கார்த்திக்கும் நடந்த சண்டை,அப்றம் சவால்,பிரெண்ட்ஸ் ஆனது,அவனுடைய டைரியை படித்தது,பைக் ரைடிங்,கார்த்திக்கின் விலகல் என்று ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள். 
அக்கா உங்களுக்குள்ள இவ்ளோ விஷயம் நடந்துருக்கா.நம்பவே முடியலை அக்கா.இருந்தாலும் நீ கார்த்திக் கிட்ட ஏன் விலகி போறேன்னு கேட்க வேண்டியது தான.
இல்லடி அவனுக்கா ஒரு நாள் சொல்லனும்ன்னு தோணும்.அப்ப அவன்கிட்ட கேட்டுகிடுறேன்.
என்னமோ சரி அக்கா.நீ சொல்லறதெல்லாம் வச்சி பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஆனால் சீக்கிரம் அவன்கிட்ட சொல்லிடு.
இல்லடி இன்னும் மூணு மாசம் இருக்குல்ல.அதுக்குள்ள அவனா வந்து என்கிட்ட சொல்லுவான்.அது வரைக்கும் விட்டு பிடிக்கலாம்.
அக்கா விளையாட்டு விபரிதமா முடிஞ்சிட போகுது.
அதெல்லாம் ஒன்னும் ஆகாது.இது லவ் பண்றவங்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய சுகம்.இந்த சுகம் எனக்கு பிடிச்சிருக்கு.
ரொம்ப பெணாத்துர அக்கா.இதான் இந்த லவ் பண்றவங்க கூட பேசவே கூடாது.
ஏய் வாலு.உனக்கு காமெடியா இருக்குதா.
ஆமா.உன்ன விட எங்க அத்தான் தான் பெஸ்ட்.உன் லவ்வ விட அவன் லவ்வு தான் பெஸ்ட்.
நான் உன் அக்காடி.
இருக்கட்டும்.நீ சொன்னல்ல அவன் டைரியை படிச்சேன்னு.அவன் எவ்ளோ தூரம் உன்னை ரசிச்சிருக்கான்னு பாத்தியா. என்னைக்காச்சும் அவனை நீ ரசிச்சிருக்கியா.அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்கதுன்னு உனக்கு தெரியுமா.லவ்வுல அது ரொம்ப முக்கியம்.
ஆமாடி அவனுக்கு என்னலா பிடிக்கும்.
உன் மண்டை.போ முதல்ல அதை தெரிஞ்சுக்கோ.அதுக்கப்புறம் அவனை லவ் பண்ணு. நீயெல்லாம் சுத்த வேஸ்ட்.
சரிடி சரிடி கோவப்படாத.என் செல்லம்ல.
அக்கா கண்டிப்பா உனக்கு என்னமோ ஆகிட்டு.என்ன கொஞ்சுரதை விட்டுட்டு போய் உன் ஆள கொஞ்சு.வைக்கிறேன்.
இருவரும் பேசி முடித்த பின் ராஜி இருந்து யோசிக்க தொடங்கினாள்.
கார்த்திக்கு என்னலா பிடிக்கும்.ம்ம்ம்ம்.ராஜியை ரொம்ப பிடிக்கும்.வேற என்ன பிடிக்கும்.என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
அப்போது அவள் மனசாட்சி வந்து பேசியது.ஹே லூசு.அவனுக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சா தெரிஞ்சுடுமா.அதுக்கு நீ அவன்கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்டி.
அவன் தான் எப்போ எந்த மைண்ட்ல இருக்கான்னே தெரியலையே.
அதுக்கு என்னடி அவன் எப்போ சந்தோசமா இருக்கானோ அப்ப போட்டு வாங்கு.
அது சரியா வராது.நானா அவனை பத்தி தெரிஞ்சி கண்டு பிடிக்கிறேன்.ஹே கண்டு பிடிச்சிட்டேன்.அவனுக்கு சரக்குனா ரொம்ப பிடிக்கும்.கரு தடவை சொல்லி இருக்கான்.
அதுக்கு பீர் வாங்கி கொடுக்க போறியா. அதெல்லாம் ராஜா ராணிலையே பண்ணிட்டாங்க.புதுசா ஏதாவது யோசிடி.
ம்ம்ம் குழந்தங்கன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
அப்ப போய் அவன்கூட குழந்தை பெத்துக்கோ.
கண்டிப்பா பெத்துகுடுவேன்.ஒன்னு இல்ல ஓராயிரம் பெத்துகுடுவேன்.ஆனா அதுக்கு நாங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரனும்.அவனை நான் ரொம்ப லவ் பண்ணனும்.அவனும் என்னை லவ் பண்ணனும்.
அதெல்லாம் அவன் உன்ன லவ் பண்ணதான் செய்யுறான். நீதான் ரொம்ப பிகு பண்ற.பேசாம இன்னைக்கு அவனை ரேப் பண்ணிடு.
போடி.நீ மூடையே மாத்திடுற. அவனுக்கு என்ன பிடிக்கும்னு கண்டுபிடிக்க ஒரு வழி சொல்லு.
ஐடியா நீ ஏன் அவன் தங்கச்சி லீலா கிட்ட கேட்க கூடாது.
கேட்கலாம்.பட்ட்டட்ட்ட்டட்.
என்ன ஆச்சு.
இல்ல வேண்டாம்.
போடி.உங்கிட்ட பேசுரதே வேஸ்டு.நான் போறேன்.
இப்போது ராஜி யோசித்தாள். பேசாம லீலா கிட்டையே கேட்டுடலாமா.சரி தெரிஞ்சிக்கணும்னு முடிவாகிடுச்சு அதை யாருக்கிட்ட கேட்டா என்ன.என்று தனக்கு தானே சொல்லி கொண்டு லீலாவுக்கு கால் செய்தாள்.
போன் அட்டெண்ட் செய்த உடன் சம்பிரதாய நலம் விசாரிப்புகள் முடிந்த உடன் ராஜி ஆரம்பித்தாள்.
லீலா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.ப்ளீஸ் சொல்லுவியா.
கண்டிப்பா சொல்றேன் மைணி. என்ன விஷயம் சொல்லு.
ஒன்னும் இல்ல.கார்த்திக்கிற்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது.சொல்லேன்.
இவ்ளோதானா.அதுவந்து எனக்கே தெரியாது.
த்தூ இதுக்குத்தான் இவ்ளோ சீன் போட்டியா.
என்ன மைணி டென்ஷன் ஆகிட்டீங்களா.சொல்றேன் கோவப்படாதிங்க.
சொல்லு.
அவனுக்கு குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும்.
அய்யோ இவளும் அதையே சொல்றலே.என்று நினைத்து கொண்டு சரி வேற என்னலா அவனுக்கு பிடிக்கும்.
அவனுக்கு சமைக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்.ரொம்ப ருசியா சமைப்பான்.முன்னாடிலா அவனே எனக்கு செஞ்சு தருவான்.அப்ப சொல்லுவான் என் பொண்டாட்டி ரொம்ப கொடுத்து வச்சவன்னு.
ம்ம்ம் சூப்பர் வேற என்ன பிடிக்கும்.
பிடிச்சவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பான்.அது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
அவனுக்குன்னு பிடிச்சது ஒன்னும் இல்லையா.அடுத்தவர்களுக்கு செய்றது தான் அவனுக்கு பிடிக்குமா.
அவன் அப்படிதான். எந்த நேரம் கோவப்படுவான் எந்த நேரம் சந்தோசமா இருப்பண்ணே தெரியாது.அவன் கோவப்படும் போது அவ்ளோ திட்டுவான். ஆனா அடுத்த நிமிஷமே அவன் அப்படி நடந்துகிட்டது மாதிரி காட்டிக்கிடவே மாட்டான். இவனா இப்படி பேசுன்னான்னு நினைக்கிற அளவுக்கு அமைதியா பேசுவான்.
சூப்பர் மேல சொல்லு.
அவனுக்கு பொண்ணுங்க சேரி கட்டுனா ரொம்ப பிடிக்கும்.என்ன நிறைய தடவை சேரி கட்ட சொல்லிருக்கான். மொக்கை பொண்ணா இருந்தாலும் சேரி கட்டின அவ்ளோ அழகா இருப்பாளுகன்னு சொல்லுவான்.
மம்ம்ம்ம்.
இளையராஜா சாங்ஸ்னா விரும்பி கேப்பான்.
சாப்பாடுல இதுதான் பிடிக்கும்னு கேக்க மாட்டான். என்ன இருக்கோ அத சாப்பிடுக்குவான்.உருளை கிழங்கு பொரியல்னா விரும்பி சாப்பிடுவான்.
வேற.
பார்மலா டிரஸ் தான் ரொம்ப விரும்பி போடுவான்.தாடி வழக்குறது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.ஒரு தடவை ரொம்ப தாடி வச்சி மீசையை முறுக்கி விட்டுட்டே இருந்தான்.எங்க அப்பா எவ்ளோ சொல்லியும் எடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான். அவனுக்கு நாய்னா கொஞ்சம் பயம்.எங்க அப்பா நிறைய இடங்களுக்கு போற.பாத்து போ.இந்த தாடியோட போன நாய் கடிச்சிட போகுதுன்னு சொன்னதுக்கு அப்புறமா தான் எடுத்தான்.
ஹாஹாஹாஹா.ஹே செம்ம காமெடியா இருகுப்பா.மேல சொல்லு.
நிறைய புக்ஸ் படிப்பான்.அவன் பேப்பர் படிக்கிறதை பாத்துருக்கியா.கடைசில இருந்து முதல் பக்கத்துக்கு வருவான்.
இன்டெரெஸ்டிங் சொல்லு.
அப்புறம் தனிமைனா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.ரூம்ல எப்போதும் தனியாவே இருப்பான்.
ம்ம்ம்ம்.அப்புறம்.
அப்புறம் நீதான்.நீ ன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.உன்னை மறந்த மாதிரி வெளில காட்டிப்பான்.ஆனா உள்ளுக்குள்ள உன்ன லவ் பண்ணுவான்.
உன் பிறந்த நாளுக்குலா என்ன விஷ் பண்ண சொல்லுவான்.அப்ப உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை.பேசாம இருந்திங்க.
அவன் உனக்கு பெர்த் டே விஷ் பண்ணலை.ஆனால் ஒவ்வொரு பிறந்த நாளுக்கு உன் பேருள கோவில்ல அர்ச்சனை கொடுத்துடுவான்.
நிஜமாவா.
நிஜமாத்தான் சொல்றேன்.
சரி அவனுக்கு பிடிக்காதது என்ன.
அவனுக்கு சொந்தமான பொருளை அவனுக்கு கேட்டுட்டு எடுத்தா கொடுத்துடுவான்.கேக்காம எடுத்தா கண்டமேனிக்கு திட்டுவான்.
வேற என்ன பிடிக்காது.
பெர்த் டே கொண்டாட மாட்டான். ஏன் விஷ் பண்ணினா கூட திட்டுவான்.அதுல இருந்து அவனுக்கு நான் விஷ் பண்ணவே மாட்டேன்.
ம்ம்ம்ம்ம்ம்.
மதியம் நல்லா தூங்குவான்.உலகமே அழிஞ்சாலும் மதியம் தூங்கிடுவான்.அந்த நேரம் எழுப்புனா அவனுக்கு பிடிக்காது.மொத்ததுல அவன் இஷ்டப்படி இருக்குறது தான் அவனுக்கு பிடிக்கும்.
எப்போதுமே சொல்லுவான் இன்னைக்கு நடக்கிற விஷயத்தை மட்டும் தான் பாக்கணும்.நாளைக்கு நடக்குறது எப்படி வேணும்னாலும் நடக்கலாம்.நாளைக்கு பத்தி புலம்பவே கூடாதுன்னு.
தேங்க்ஸ் லீலா.கார்த்திக்கை பத்தி சொன்னதுக்கு.
ஆமா இதெல்லாம் நீ ஏன் இப்ப கேக்குற.
என் புருஷன பத்தி தெரிஞ்சிக்க தான்.
நடந்துங்க நடந்துங்க.அப்புறம்
ஒன்னும் இல்ல நான் அப்புறமா பேசுறேன்.
போன் கட் செய்து விட்டு ராஜி சிரித்தாள்.உணக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா.உனக்கு பிடிச்சதுன்னா அது நான் மட்டும்தானா.சூப்பர் கார்த்திக் நீ.லவ் யூ என்று சொல்லி கொண்டே சிரித்து கொண்டாள்.

No comments:

Post a Comment