CLOSE

Tuesday, 23 January 2018

கண்மணி அன்போடு காதலன் - பகுதி - 25


ராஜியை விட்டு இந்த 5 நாட்கள் எப்படி இருப்பது என்று வருந்தி கொண்டிருந்தான் கார்த்திக்.
கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும்.வேறு வழியும் இல்லை.ஆனால் அதற்கு முன் அவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது.
முதலில் அதை செயல் படுத்த தொடங்கினான்.சரியாக 6 மணி அளவில் வீட்டிற்கு சென்றான்.
வழக்கம் போல காபி குடித்து விட்டு ரூமில் ராஜிக்காக காத்து கொண்டிருந்தான்.
அப்போது ராஜி வந்து விட
ராஜி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
கார்த்திக் இதை சொன்ன உடன் ராஜிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.இப்பவாச்சும் சொல்ல வந்தியே.சீக்கிரமா சொல்லுடா.ஐ லவ் யூ ராஜி.என்ன விட்டுட்டு போகாதன்னு சொல்லு.என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.
நாளைல இருந்து 5 நாள் எனக்கு சென்னைல கேம்ப் போட்ருக்காங்க.சோ நாளைக்கி நான் கிளம்பி ஆகணும்.
ஓஹ்.அப்படியா.(இதை சொல்லதானா).
ம்ம்ம்ம் நாளைக்கு நான் போய்டுவேன்.
(நீயும் வாரியான்னு கேளுடா).
நீ இங்க இருந்துக்கோ.நான் போயிட்டு வரேன்.அம்மா கிட்டையும் அப்பாகிட்டையும் நான் சொல்லிடுறேன்.
ம்ம்ம் சரி.நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புற.(சனியம்புடிச்சவனே நானும் உன்கூட வரேன்.கூட்டிட்டு போடா.)
காலைல 5 மணிக்கு எல்லாம் கிளம்பிடுவேன்.
சரி.
சரி வேற ஒன்னும் இல்லை.நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்.
அவ்ளோதானா.
வேற என்ன.
(என்ன கெஞ்ச வைக்காதடா.ஐ லவ் யூ சொல்லி தொலைடா.உன் காலடில வாழ்கை புல்லா விழுந்து கிடக்குறேன்)
இல்ல டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கவான்னு கேட்டேன்.
வேண்டாம் ராஜி.இன்னும் ஒரு வாரம் தான் என்கூட இருக்க போற.உனக்கு எதுக்கு சிரமம்.நானே பாத்துக்கிடுறேன்.
இதை கேட்ட ராஜிக்கு சற்றுஅதிர்ச்சியாக இருந்தது.அதை காட்டிக்கொள்ளாமல்
சரி.நீயே பாத்துக்கோ.
வரேன் ராஜி என்று சொல்லி விட்டு கார்த்திக் வெளியே சென்றான்.
ரூமில் இருந்த ராஜிக்கு கார்த்திக்கின் இந்த திடீர் மாற்றம் சற்று குழப்பத்தை தந்தது.மறுபடியும் இவன் ஏன் விலகி போறான்.இவனை புரிஞ்சிக்கவே முடியலையே.காலைல வரைக்கும் நல்லாத்தானே பேசினான்.எதுவா இருந்தாலும் நல்லதாவே நடக்கணும் இறைவா.மறுபடியும் கார்த்திக் என்ன காயப்படுத்தினா அதை தாங்குற சக்திஏ எனக்கு சுத்தமாகே கிடையாது.காப்பாத்து.மனமுருகி வேண்டி கொண்டாள் ராஜி.
மறுநாள் காலை பொழுது விடிந்தது.கார்த்திக் 5 மணிக்கு கிளம்ப ராஜி அவனை கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தாள்.
சென்னையில் முதல் நாள் கேம்பை முடித்து விட்டு ரூமில் வந்து பிரெஷப் செய்தான் கார்த்திக்.அவனுடைய உடல் தான் அங்கு இருந்ததே தவிர அவன் மனம் முழுவதும் ராஜியையே சுற்றி வந்தது.
(கார்த்திக் சொல்வது போல்).
சாரி ராஜி.நேத்து நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.நேத்து நான் உங்கிட்ட சொன்ன உடனே உன் முகம் மாறினதை நான் பார்த்தேன்.இன்னைக்கு காலைல கூட நீ அழுத.
நமக்குள்ள நடக்குற இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் எனக்கு பிடிச்சிருக்கு.இன்னும் 5 நாள் பொறுத்துக்கோ.இதுக்கே இப்படி ஆகிட்டண்ணா.அடுத்து நான் செஞ்சி வச்சிருக்க காரியத்துக்கு நீ எப்படி ரியாக்ட் பண்ண போறேன்னு தெரியல.
நீ முதல் முதல்ல இந்த பூமில பிறந்த அப்போ நீ அழுதிருப்ப.அது தான் உன்னோட முதல் அழுகை.அதே மாதிரி உன்னோட இந்த பிறந்த நாள் அன்னைக்கி தான் நீ கடைசியா அழுததா இருக்கும்.அதுக்கப்புறம் உன்ன எந்த சூழ்நிலைளையும் எதுக்காகவும் உன்ன நான் அழ விடமாட்டேன் ராஜி.சத்தியமா.
உன்ன பிரிஞ்சி இவ்ளோ தூரம் நான் இங்க இருக்கேன்.என் உடம்பு தான் இங்க இருக்குதே தவிர என் ஆன்மா உன்னைத்தான் சுத்திட்டு இருக்கு.எப்படியோ இன்னைக்கு ஒரு நாள் முடுஞ்சுது.ஆனா இந்த நைட் நான் எப்படி தூங்கபோறேனு தெரியலை ராஜி.
வெறும் 4 செவத்துக்குள்ள நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் தூங்கும் போது கூட சொர்க்கத்துல கடவுள் கூட இருக்குற மாதிரி ஒரு சந்தோசம் இருந்துச்சி.ஆனா இப்போ ஏதோ நரகத்துல இருக்குற மாதிரி இருக்கு.உன்ன ரொம்பவே மிஸ் பண்றேன் ராஜி.ஐ லவ் யூ டி.
எனக்கு கவிதை எழுதிலா பழக்கம் கிடையாது.எழுதவும் தெரியாது.ஆனா இன்னைக்கு எழுதணும்னு தோணுது.
என்ன மாயம் செய்தாய் என்று தெரியவில்லை
தாஜ் மஹாலின் பளிங்கு அறையில்
ரோஜா இதழின் மேல் படுத்திருந்தாலும்
கண்ணாடி பேழைக்குள் அடைபட்ட சடலமாய் தோன்றுகிறது
நீ இன்றி இந்த இரவுகள்.
ஏனோ என் மனம்
மீளவட்டமாய் உன்னை சுற்றி
உந்தன் அருகில்
உன் வாசம் தேடி.
ஊரே உறங்கும் இந்த கரும் இரவில்
நான் மட்டும் ஏனோ
மெழுகாய் கரைந்து கொண்டிருக்கிறேன்
உன் அருகாமை தேடி.
நீயும் அங்க இதே மாதிரி தான் தவிச்சிட்டு இருப்பன்னு எனக்கு தெரியும் ராஜி.
என்கிட்டே மட்டும் இப்போ டைம் மெஷின் இருந்துச்சுன்னா அடுத்த ஷணமே உன் முன்னாடி வந்து நிக்கனும்னு தோணுது ராஜி.
பொறுத்துக்கோ.இன்னும் 4 நாள்.நாளே நாள்.வந்துடுறேன்.
வீட்டில் ராஜிக்கோ நிலைமை அதை விட மோசமாக இருந்தது.இரவில் தூக்கம் இல்லாமல் அங்கும் இங்குமாக உருண்டு கொண்டிருந்தாள்.கார்த்திக் நேற்று அவளிடம் சொன்னது அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஏதோ ஒன்று நடக்க போகிறது என்று அவள் மனதில் ஒளித்து கொண்டிருந்தது.
அவளுக்கு கார்த்திக்கின் நியாபகமாவே இருந்தது.பெட்டை விட்டு எழுந்தவள் கப்போர்டை திறந்து கார்த்திக்கின் சட்டை ஒன்றை எடுத்து தன் மார்போடு அணைத்து கொண்டாள்.
அதை எடுத்து அணிந்து கொண்டு படுத்தாள்.ஏனோ கார்த்திக்கையே அணைத்து கொண்டு தூங்குவது போல இருந்தது.
இங்கு கார்த்திக்கோ ராஜியின் சேலை ஒன்றை அவளுக்கே தெரியாமல் எடுத்து வைத்திருந்தான்.
அதை எடுத்து மூடி படுத்து கொண்டான்.
நள்ளிரவு நேரம் ராஜிக்கு கனவு ஒன்று வந்தது.
கார்த்திக் ராஜி கையை பிடித்து அவள் வீட்டிற்கு சென்று அவள் அம்மாவிடம் அத்தை.எனக்கும் ராஜிக்கும் ஒத்து வராது.அவளை எனக்கு பிடிக்கலை.அதனால நாங்க டிவோர்ஸ் பண்ணிக்கிடுறோம்.
இனிமே அவள் உங்க வீட்லையே இருக்கட்டும்.என்னை மன்னிச்சிடுங்க அத்தை.என்றான்.
அட பாவி.என் பொண்ணு வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டியே.நீயெல்லாம் நல்லா இருப்பியா.உன்ன என் புள்ள மாதிரி நினைச்சேனடா.இப்படி வந்து சொல்ற.நீ ஆசைப்பட்டு தான கல்யாணம் பண்ணிக்கிட்ட.இப்போ என்னடா என்று அவன் சட்டையை பிடித்து அவனை அடித்தாள் லட்சுமி.
அம்மா என்று கண்ணை திறந்து எழுந்தாள் ராஜி.முகம் எல்லாம் வேர்த்து இருந்தது.எழுந்து மணியை பார்த்தவள் மணி 1ஐ நெருங்கி இருந்தது.
கடவுளே என்ன கனவு இது.ரூமில் இருந்த சாமி போட்டோ முன்பு.நின்று கொண்டு கண்ணை மூடி கடவுளே இப்போ வந்த கனவு மாதிரி எதுவும் நடந்துட கூடாது.நான் பண்ணின தப்பு என்னனு இப்போ எனக்கு புரியுது.கார்த்திக் வந்த உடனே நான் அவன்கிட்ட போய் என் காதலை சொல்லிடுறேன்.அதுவரைக்கும் எந்த தப்பும் நடந்துட கூடாது.
கார்த்திக் நேத்து பேசினது எதேச்சையா தான் இருக்கனும்.அவன் மனசு மாறாம இருக்கனும்.நீதான் என்கூட இருக்கனும்.காப்பாத்து.என்று வேண்டி கொண்டு விபூதி இட்டு கொண்டாள்.
பின் தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு மீண்டும் பெட்டில் சரிந்தாள்.
அவள் எவ்வளவு தான் கண் மூடினாலும் அந்த கனவின் தாக்கம் அவளை தூங்க விடாமல் செய்தது.
ஒருவழியாக இருவரும் தூங்கினர்.
மறுநாள் கார்த்திக்கிற்கு சீக்கிரமாக வேலை முடிந்தது.எங்காவது வெளியில் சுற்றி விட்டு வரலாம் என்று யோசித்தான்.கால் டேக்ஸி ஒன்றை புக் செய்து ராஜிக்காக எதாவது வாங்கலாம் என்று சென்றான்.
ராஜியின் பிறந்த நாளுக்காக அவளுக்கு சேலை வாங்க சென்றான்.காஞ்சிபுரம் நோக்கி வண்டியை விட சொன்னான்.
அங்கே சென்று பட்டு சேலைகளை பார்த்தான்.வழக்கமாக இருவருக்கும் பிடித்த பச்சை நிறத்தை தேர்வு செய்தான்.
அப்போது தான் அவன் கண்ணில் பட்டது அந்த கண்டாங்கி சேலை.சிகப்பு நிறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் பார்டர் வாய்த்த அந்த சேலையில் ராஜியை கற்பனை செய்து பார்த்தான்.
அதில் அவள் தேவதையாய் தெரிய எடுத்த சேலையை கொடுத்து விட்டு அந்த சேலையை செலக்ட் செய்தான்.
விலை அதிகமாக சொல்ல கண்ணை மூடி காசை கொடுத்தான்.
ராஜிக்கு பிறந்தநாள் பரிசாக அதை கொடுக்க முடிவு செய்தான்.அதை எடுத்து பத்திரமாக தனது பேக்கில் வைத்து கொண்டான்.
ராஜிக்கு அந்த கனவின் தாக்கம் 4 நாட்களாக அவளை எந்த வேளையிலும் கவனம் இல்லாமல் செய்தது.
சாப்பாட்டில் உப்பு அல்லது காரம் அதிகமாக இருக்குமாறு செய்தாள்.ராஜியின் இந்த நிலையை கவனித்த சாந்தா கார்த்திக் இல்லாமல் ராஜி தனிமையில் தவிப்பதாக எண்ணி கொண்டாள்.
ராஜிக்கும் கார்த்திக்கிடம் பேச வேண்டும் போல இருந்தது.அவனுடைய நம்பருக்கு கால் செய்வாள்.உடனே கட் செய்து விடுவாள்.ஏதோ ஒன்று அவளுக்குள் பனிதிரையாய் அவளை தடுத்து கொண்டிருந்தது.
இன்று கார்த்திக்கிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் சமையலை சாந்தாவிடம் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றாள்.
கார்த்திக்கிற்கு கால் செய்தாள் ராஜி.ஆனால் கால் அட்டென்ட் செய்யவில்லை.திரும்ப திரும்ப கால் செய்தவள் கால் அட்டென்ட் செய்யப்படாமல் போகவே வாட்ஸ்அப் ஓபன் செய்து லாஸ்ட் சீன் பார்த்தாள்.
அது சரியாக நேற்று இரவு 9 மணியை காட்டியது.ராஜிக்கு சற்று கலக்கமாகவே இருந்தது.கார்த்திக்கிற்குஏதாவது ஆகி இருக்குமோ என்று.
தனிமை,கார்த்திக் இல்லாத இந்த இடம் என எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை.
மனதிற்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு விலகும் போதும்,பேச்சு வார்த்தைகள் குறையும் போதும்,அவர்களிடத்தில் நமக்கான முன்னுரிமை பறிபோகும் போதும் இதயம் குலைந்து கதறி அழவேண்டும் போல தோன்றும்.
ராஜியும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தாள்.அவன் இல்லாத இந்த மூன்று நாட்களில் தான் ராஜி கார்த்திக்கை எவ்வளவு மிஸ் செய்தாள் என்றே அவளுக்கு புரிந்தது.
மதியம் சாப்பிடாமல் யோசித்து கொண்டே தூங்கியும் போனாள் ராஜி.
அப்போது ராஜியின் போன் ஒழிக்க ரமேஷ் கால் செய்திருந்தான்.அட்டென்ட் செய்து அவனிடம் பேசினால் ராஜி.
ராஜி இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு வழியாக மூன்று நாட்களை கழித்துவிட்டு நாலாவது நாள் வேலையை கவனித்தான் ராஜி.
ராஜியிடம் பேச வேண்டும் என்று நொடிக்கொருமுறை போனை எடுப்பான்.ஆனால் ராஜியை தவிக்க விட வேண்டும் என்று தன் மனதை கட்டு படுத்தி கொண்டான்.
மூன்று நாட்களை கழித்தவன் இன்று ஏனோ அவனால் கட்டு படுத்த முடியவில்லை.ராஜியிடம் ரூமிர்க்கு சென்று பேசிவிட வேண்டும் என்று ஒரு முடிவுடன் இருந்தான்.ஆனால் எதிர்பாராவிதமாக அவளே கார்த்திக்கிற்கு போன் செய்திருந்தாள்.
வேளையில் இருந்ததால் அவனால் எடுக்க முடியவில்லை.வேலை முடிந்து வெளியே வந்த அடுத்த நிமிடமே ராஜிக்கு திரும்ப அழைத்தான் கார்த்திக்.
பிசி டோன் கேட்க கடுப்புடன் காலை கட் செய்தான்.மீண்டும் மீண்டும் அழைக்க பிசி டோன் தான் ஒலித்தது.
கார்த்திக்கிற்கு அப்போது வெறுப்பு தலைக்கு ஏறியது.யாருடன் இந்நேரம் பேசிகிட்டு இருக்கா.ச்ச என்று கடிந்து கொண்டான்.
ஒரு வேலை அந்த ரமேஷ் நாயா இருக்குமோ.
ச்ச ச்ச இருக்காது.என் ராஜி அவன்கிட்ட ஏன் பேச போறா.
ஒரு வேலை அவனா இருந்தா.செக் பண்ணிடலாமா.
பண்ணிதான் பாப்போம்.
ரமேஷின் நம்பருக்கு அடுத்து கால் செய்தான்.இப்போது பிசி டோன் ஒழிக்க கார்த்திக்கிற்கு கோவம் தலைக்கு ஏறியது.
மீண்டும் அவனுக்கு டையல் செய்ய அதே ஒலித்தது.
நாயே உன்ன சும்மா விட்டது என் தப்பு தாண்டா.இந்த கேம்ப் முடிஞ்சு ஊருக்கு வந்த அடுத்த வேலை உனக்கு சங்கு ஊதுறது தாண்டா.என் ராஜியவே என்கிட்டே பிரிக்க பாக்குற.உனக்கு இருக்குடா என்று மனதில் சொல்லி கொண்டான் கார்த்திக்.
ரமேஷிடம் இந்த 4 நாட்களாக நடந்தவற்றை எல்லாம் சொல்லிம் விட்டு அந்த கனவையும் சொன்னாள் ராஜி.
இறுதியில் அவனிடம் அந்த கனவு மட்டும் உண்மையா நடந்துச்சுன்னா என்ன அப்புறம் உயிரோடவே பார்க்க முடியாது ரமேஷ்.என் கார்த்திக் மடியிலையே செத்து போய்டுவேன்.அது மட்டும் நிஜம் என்று கூறி வெடித்தாள் ராஜி.
அப்படிலாம் ஒன்னும் நடக்காது ராஜி.நீ இந்த மாதிரி பேசுறதை முதல்ல நிறுத்து.மனச போட்டு குழப்பமா கார்த்திக் வர வரைக்கும் காத்திரு.நல்லதாவே நடக்கும்.என்று சொன்னான்.
பின் இருவரும் பேசி முடித்த பின் ராஜிக்கு தலை எல்லாம் பாரமாக இருந்தது.ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற கிச்சன் சென்று டீ கலந்து குடித்தாள்.
போனை எடுத்து பார்த்தவள் கார்த்திக் கால் செய்திருக்க திரும்ப அவனுக்கு கால் செய்தாள் ராஜி.
ஆனால் ரமேஷின் மேல் இருந்த கோவத்தில் ராஜியின் காலை கட் செய்து விட்டான் கார்த்திக்.
இது ராஜிக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.அவளும் எத்தனையோ முறை கால்செய்தும் கார்த்திக் எடுக்கவில்லை.
இரவு கார்த்திக் வாட்சப் ஓபன் செய்ய ராஜியும் ஆன்லைனில் இருந்தாள்.இருவரும் ஒருவரை ஒருவர் ஆனலைனில் இருந்ததை பார்த்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் இருவரும் டைப் செய்தனர்.இருவருக்கும்
T y p i n g . . . . . . . . . . . . . . . . .
காட்ட முதலில் யார் மெசேஜ் செய்வார்கள் என்று பின் வாங்கினர்.
இதே போல் மீண்டும் மீண்டும் நடக்க ராஜி முதலில் எப்படி இருக்க கார்த்திக்.ஏன் கால் பண்ணினா பேச மாட்டேங்குற என்று அனுப்பினாள்.
அடுத்த நிமிடம் அதை பார்த்தத்திற்கு அடையாளமாய் ப்ளு டிக் காட்டியது.
ஆனால் கார்த்திக் அதற்கு ரீபிளே செய்யவில்லை.
மீண்டும் ஏன் கார்த்திக் என்கூட பேச மாட்டேங்குற.எதாவது பதில் சொல்லு என்றாள்.
அதை படித்த கார்த்திக். மீண்டும் ரீபிளே செய்யவில்லை.
இப்போதும் ப்லு டிக் காட்ட ராஜிக்கு அழுகை அழுகையாய் வந்தது.அதற்கும் மேல் அவளால் பேச முடியாமல் போனை தூக்கி மெத்தையின் மேல் எரிந்து விட்டு கைகளில் முகம் புதைத்து அழ தொடங்கினாள் ராஜி.
மீண்டும் போனை எடுத்து கார்த்திக் கார்த்திக்கிற்கு கால் செய்ய காலை கட் செய்தான் கார்த்திக்.
கார்த்திக் ரமேஷ் மேல் இருந்த கோவத்தில் ராஜியிடம் பேசாமல் இருந்தான்.
அப்போது ரமேஷ் கார்த்திக்கிற்கு கால் செய்தான்.அட்டென்ட் செய்த கார்த்திக் ஹலோ என்றான்.
ஹலோ யாரு நீங்க.உங்க நம்பர்ல இருந்து எனக்கு கால் வந்திருந்துச்சு.யாரு நீங்க.
நான் கார்த்திக் பேசுறேன்.ராஜியோட ஹாஸ்பேண்ட்.
ஆங்.சொல்லுங்க அண்ணா.நீங்களா.நல்லா இருக்கீங்களா.
ம்ம்ம் ரொம்ப நல்லா இருக்கேன்.
சொல்லுங்க அண்ணா என்ன விஷயம்.
ரமேஷ் நாளை மறுநாள் நீங்க பிரீயா.உங்கள கொஞ்சம் நேர்ல மீட் பண்ணணுமே.
நான் பிரீத்தான்.சொல்லுங்க என்ன விஷயம்.
இல்ல.அது கொஞ்சம் பெர்சனல்.போன்ல பேச முடியாது.நேர்ல மீட் பண்ணும் போது சொல்றேன்.
சரிங்க அண்ணா.நீங்க வரும் போது கால் பண்ணுங்க.நான் வெயிட் பண்றேன்.
ஓகே ரமேஷ்.அப்றம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்கே.குறிப்பா ராஜிக்கு.அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும் அதான்.
ப்ளீஸ்.
ம்ம்ம்ம் ஓகே அண்ணா.கண்டிப்பா.வேற ஒன்னும் இல்லல.
வேற ஒன்னும் இல்லை.நாளை மறுநாள் மீட் பண்ணலாம்.ஓகே.
ஓகே.பாய்.
பாய்.
மவனே நாளை மறுநாளோட எங்களுக்குள்ள இருக்குற எல்லாம் பிரச்னையும் முடிஞ்சிடும் டா.உன்னையும் சேர்த்து என்று சொல்லி கொண்டான் கார்த்திக்.
ராஜிக்கோ கார்த்திக்கின் இந்த திடீர் ஒதுக்கம் மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்தியது.நரகவேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள்.
பேருக்கு ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தூக்கம் வராமல் பைத்தியம் போல ரூமில் கிடந்தாள் ராஜி.
மறு நாள் பொழுது வழக்கம் போல விடிந்தது.இன்று கார்த்திக் சென்னையில் இருந்து கிளம்பி விடுவான் என்பதால் ராஜிக்கு சற்று சந்தோசமாக இருந்தது.இன்று ஒரு நாள் மட்டும் ஒரு யுகமாக கழிய போகிறது என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்.
இரவு சற்று தூங்கியதால் ரமேஷின் மேல் இருந்த கோவம் சற்று தணிந்திருந்தது கார்த்திக்கிற்கு.இன்றே கெம்ப் முடிய கடைசி நாள்.நாளை ராஜியை காண போகிறோம் என்று கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.
மேலும் நாளை மான்வி வீட்டிற்கு பங்க்சனிற்கு வேறு செல்ல வேண்டும்.அதனால் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக எழுந்தவன் பரபரப்பாக கிளம்பினான்.இந்த 4 நாட்களை விட இன்று சுறு சுறுப்பாக வேலைகளை முடித்தான் கார்த்திக்.

No comments:

Post a Comment