ஒரு நாள் என்னோட நம்பருக்கு புது நம்பர்ல இருந்து மெசேஜ் வந்தது.நானும் யாரென்று கேட்டு ரீப்ளை செய்ததும் என்னை தெரியலையா என்று பதில் வந்தது.
போன்ல எப்படி முகம் தெரியும்.யாருன்னு சொல்லுங்க.
என்ன தெரியலையா.உனக்கு தெரியும்னு நினைச்சேன்.
இப்படியாக யாரென்று சொல்லாமல் இழுத்தடிக்க ஒரு கட்டத்தில் வெறுப்பாகி போனேன்.
பின் அந்த நம்பருக்கு கால் செய்ய எடுக்கபடவில்லை.இரண்டாவது முறை அழைத்தேன்.
இப்போது எடுக்கப்பட்டது.எதிர் முனையில் ஒரு பெண் குரல் கேட்க கோவத்தில் யாரு நீங்க.மெசேஜ் பண்ணிட்டு இருக்கீங்க. என்று கேட்டேன்.
இல்ல நான் பண்ணலை.நீங்க என்றது.
பின் என் பெயரை சொல்ல அப்போது கார்த்தியா.நான் அத்தை பேசுறேன்.இது பிரியா நம்பர்.அவதான் இவ்ளோ நேரம் போன் வச்சிருந்தா.உங்கிட்ட பேச கூச்சப்பட்டு என்கிட்ட கொடுத்துட்டா என்றார் அத்தை.
பின் நலம் விசாரிப்புகளுக்கு பின் அவள் நம்பரை சேவ் செய்து கொண்டேன்.அதன் பின் அவள் அடிக்கடி மெசேஜ் செய்வாள்.
பிரியா என்னை விட ஒரு வயது சிறியவள்.இப்போ இன்ஜினியரிங் படிக்கிறா ஹாஸ்டெல்ல தங்கி.வாரத்துக்கு 2 நாள் வீட்டுக்கு வந்துடுவா.
அந்த நாள் முழுவதும் எனக்கு மெசேஜ் செய்வாள்.ஏதேதோ பேசுவோம்.ஆனால் கடைசியா என்ன ஏன் இவ்ளோ மொக்கை போடுறேன்னு கேட்பாள்.
அவளுக்கும் எனக்கும் எந்த வகையிலும் செட் ஆகாது.ஆனால் எங்களுக்குள் எல்லையை தாண்டாத ஒரு நட்பு இருந்தது.
பிரியா என்னை விட சிறியவள் என்பதாள் என்னுடைய புத்தகங்களை அவளிடம் கொடுத்து விடுவேன்.
அவளும் என்னிடம் கேட்டு வாங்கி கொள்வாள்.10த் ல நானும் அவளும் ஒரே மார்க்கு தான்.ஆனா +2 ல எனக்கும் அவளுக்கும் ஏணி வச்சா கூட எட்டாது.நான் 700 அவ 1050.எனக்கு பொறாமைலா இல்லை.லைட்டா.
இதெல்லாம் அவகிட்ட சொல்ல முடியாதுள்ள.அதுவும் இல்லாம நம்மள விட கீழ உள்ள பொண்ணுங்களே நம்மள மதிக்காது.மேடம் வேற இஞ்சினீரிங்.நான் டிப்ளமோ.கேக்கவா வேணும்.
அவ அப்படி நினைக்கிறாளோ இல்லையோ எனக்கு தோணுச்சு.
ஒரு நாள் அவ வீக் டேஸ்ல மெசேஜ் பண்ணினா.நானும் இன்னைக்கு லீவா.எப்போதும் சேட்டர்டே சண்டே தான மெசேஜ் பண்ணுவேன்னு கேட்டேன்.
எப்போதும் ப்ரியாதான் பேசுவாளா.நாங்கல்லாம் பேசக்கூடாதா.நான் ராஜின்னு சொன்னாள்.
எனக்கு அப்போது சொல்ல வார்த்தைகளே இல்லை.என்னை சுற்றி எல்லாமே ஒரு நிமிடம் பிரீஸ் ஆனா மாதிரி தோணுச்சு.

நான் இயல்புக்கு வர சில நிமிடம் தேவைப்பட்டது.அப்போது அவள் மீண்டும் கேட்டாள்.ஹெலோ இருக்கியா.
இருக்கேன் சொல்லு.
ஏன் என்கிட்டலா பேசமாட்டியா.எங்க அக்கா கிட்ட மட்டும் தான் பேசுவியா.
அவளிடம் எப்படி சொல்வது உன்கிட்ட மட்டும் தான் பேசணும்னு.கடவுள் இருக்கான்டா.கடவுள் இருக்கான்.மனதில் நினைத்துக்கொண்டு
இல்ல.எப்போதும் உங்க அக்காதான் மெசேஜ் பண்ணுவா.திடீர்னு நீ பண்றியா அதான் நம்ப முடியலை.
சாத்தியமா நான் ராஜிதான்.நம்பு.
சரி நம்புறேன்.என்ன திடீர்னு பேசுற.
ஒன்னும் பெருசா இல்லை.உங்கிட்ட பேசணும்னு தோணுச்சு.அதான் பேசுனேன்.
சரி.பேசு.
என்ன பண்ற.
சும்மாதான் நேரம் போகலை.புக்ஸ் படிச்சிட்டு இருந்தேன.நீ மெசேஜ் பண்ணின.
நீ புக்ஸ்லா படிப்பியா.நமக்கு அந்த பழக்கம் கிடையாது.எப்போதுமே டிவி தான்.
இப்படியாக அவளுடனான உரையாடல் நீண்டது.அன்று முழுவதும் அவளுக்கு மெசேஜ் செய்தே என்னுடைய 100 SMS காலி ஆனது.
அப்போதெல்லாம் நாள் ஒன்றுக்கு 100 sms மட்டுமே அனுப்ப முடியும்.கடைசியாக அவளிடம் இருந்து வந்த மெசேஜிற்கு ரீப்லை செய்ய முடியவில்லை.
கடுப்பாக வந்தது.10 ரூபாய்க்கு ரிச்சார்ஜ் செய்து ஒரு வாரம் ஒப்பேற்றிய நாட்கள்.மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்று மனதை தேற்றி கொண்டேன்.
எனக்கு பிடித்த விஜய் அவளுக்கும் பிடித்தது.எனக்கு பிடித்த பச்சை நிறம் அவளுக்கும் பிடித்திருந்தது.அவளுக்கு ராசியான 3ம் நம்பர் எனக்கும் ராசியானது.அவளுக்கு பிடித்த ரோஜா மலர் எனக்கும் பிடித்திருந்தது.இப்படி மழை,ஜன்னலோர பேருந்து பயணம்,ஐஸ் க்ரீம் என பல இடங்களில் எங்களது ரசனை ஒன்றாக இருந்தது.
மறுநாள் நான் காலேஜ் சென்று வந்து போனை பார்த்த போது அவளிடம் இருந்து இரண்டு மெசேஜுகள் வந்திருந்தது.அன்றும் பேசினோம்.அன்றைய SMS முடியும் வரை.அந்த வாரம் முழுவதும் அவள் மெசேஜ் செய்தாள்.வார இறுதியில் பிரியா வந்துவிட்டால் அவள்தான் பேசுவாள்.அந்த இரண்டு நாளும் என்னோட நிலைமை அதோ கதி தான்.முன்பெல்லாம் வார இறுதியை எதிர்பார்க்கும் நான் இப்போதெல்லாம் திங்கள் கிழமையை எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.
ராஜியிடம் பேசிய இந்த நாட்களில் அவளை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.அவளோட கோவம்,குறும்பு,சந்தோசம் இப்படி எல்லாத்தையும்.எல்லா ஆண்களுக்கும் தன்னோட காதலி இப்படிதான் இருக்கணும்னு ஒரு ஆசை இருக்கும்.எனக்கும் அப்படி சில ஆசைகள் இருந்தது.ஆனால் ராஜி அது எல்லாத்துக்கும் எதிரா இருந்தாள்.
ஆனாலும் எனக்கு அவள் மீதான காதல் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
எப்போதும் எதிர் எதிர் துருவங்கள் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும்.அதை போல என்னவென்று சொல்ல தெரியாத ஒன்று என்னை ராஜியின் ஈர்த்து சென்றது.
சில சமயங்களில் ராஜி என்று நினைத்து ப்ரியாவிடம் அவளிடம் பேசுவது போல பேசுவேன்.ப்ரியாவும் ராஜி மெசேஜ் செய்வது போல என்னிடம் பேசுவாள்.கடைசியில் பிரியா என்று தெரிந்து பல்பு வாங்குனேன்.
மறுநாள் ராஜி மெசேஜ் செய்தால் ப்ரியாதான் பேசுறான்னு ராஜியிடம் மல்லுக்கு நிப்பேன்.அன்றும் அப்டித்தான்.ராஜி மெசேஜ் செய்தாள்.ஆனால் பிரியா என்று நினைத்து ப்ரியாவிடம் பேசுவது போல பேசினேன்.இறுதியில் நான் என்ன சொன்னாள் நம்புவ என்றாள்.
என்னோட உண்மையான பிறந்த நாள் ராஜிக்கு மட்டும் தான் தெரியும்.அவளிடம் பேசிய இந்த நாட்களில் அவளிடம் சொல்லி இருக்கிறேன்.என்னோட ஸ்கூல் டீசி யில் இருக்கும் பிறந்தநாள் மட்டுமே அனைவருக்கும் தெரியும்.
ஆனால் என்னோட உண்மையான பிறந்த நாள் அந்த நாளில் இருந்து மூன்று மாதம் கழித்து.ஸ்கூலில் சேர்க்கும் போது 6 வயது முடிய மூன்று மாதம் இருப்பதால் மூன்று மாதத்தை குறைத்து சேர்த்து விட்டார்கள்.
அதை இப்போது ராஜியிடம் கேட்டேன்.அதை சரியாக சொன்னாள்.அதன் பின் சாரி கேட்டுவிட்டு அவளிடம் பேசினேன்.
இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு கோட் வேர்ட் வச்சுக்கலாம்னு சொன்னேன்.
என்ன பண்ண நீயே சொல்லு என்றாள்.
நீ எப்போ எனக்கு மெசேஜ் பன்றியோ அப்ப நீ அனுப்புற பர்ஸ்ட் மெசேஜுல கடைசி வார்த்தையா ராஜிங்கிறதை சுருக்கி R னு அனுப்பு நான் புரிஞ்சிக்கிடுறேன்.
சரி இனி அப்படியே பண்ணிடலாம்.என்றாள் ராஜி.
அதன் பின் வந்த நாட்கள் எங்கள் கோட் வேர்ட் மூலம் ராஜியை அடையாளம் கொண்டேன்.
சில நேரம் பிரியா ராஜி போன்று பேசி கலாய்ப்பாள்.நான் அவளை ராஜி என்று நம்பி பேசுவது போல பேசி அவளுக்கு பல்பு கொடுத்து கொண்டிருந்தேன்.இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது.
அன்று அத்தை வீட்டில் ஒரு விஷேசம்.நானும் போயிருந்தேன்.ராஜியும் வந்திருந்தாள்.நான் அத்தையிடம் பேசி கொண்டிருக்கும் போது ராஜி என்னை பார்த்து கொண்டிருந்தாள்.நான் எதேச்சையாக அவளை பார்க்க அவள் பார்வையை திருப்பி கொண்டாள்.
மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து பார்த்தாள் உடனே பார்வையை மாற்றி முகத்தை திருப்பி கொள்கிறாள்.
இதுபோல பார்வை பரிமாற்றம் அடிக்கடி நிகழ்ந்தது.அதன் பின் பஸ்ஸில் செல்லும்போது அவள் இருந்த சீட்டின் அருகில் கம்பியை பிடித்து கொண்டு நின்று கொண்டிருந்தேன்.
அப்போது நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்.ஆனால் என்னை பார்க்காதவாறு கவனமாக இருந்தாள்.
நான் பார்வையை மாற்றவில்லை.அப்போது ஒரு நொடி என்னை பார்த்தாள்.ஒரே நொடிதான் எங்கள் கண்கள் பார்த்துக்கொண்டது.ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக எனக்கு தோன்றியது.பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டிற்கு போகும் வரை என்னிடம் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவளுடைய பார்வை எனக்கு ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது
ஒரு நாள் பிரெண்ட்ஸ் டேயாம்.அதுக்கு எனக்கு எந்த பாட்டை டெடிகேட் பண்ணுவான்னு ராஜி கேட்டாள்.
உனக்கு எந்த பாட்டு பிடிக்கும்னு கேட்டேன்.சொல்லமாட்டேன் நீ சொல்லு என்றாள்.
நானும் எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா சென்னையில புது பொண்ணு சாங் டெடிகேட் பண்ணுவேன்னு சொன்னேன்.
ஏன் அப்டின்னு கேட்டாள்.நீதான கேட்ட.அதான் நான் அனுப்பினேன்னு சொல்லுவிட்டு நானும் பதிலுக்கு அதே மெசேஜை அனுப்பி வைத்தேன்.
என்ன பாடல் சொல்கிராள்ன்னு பார்க்கலாம் என்று காத்திருந்தேன்.ஆனால் பதில் சொல்லாமல் படிக்க வேண்டியது இருக்கு.நாளைக்கு மெசேஜ் செய்கிறேன்னு சொல்லிவிட்டாள்.
ஏன் அதை சொல்லிவிட்டு படிக்க போக வேண்டியது தான.இதெல்லாம் வச்சி பாக்கும் போது அவளும் என்ன லவ் பன்றாளோன்னு நினைக்க தோணுது.மீண்டும் நாளைக்கு பேசும்போது அதே மெசேஜை அனுப்பவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
மீண்டும் அடுத்த நாள் அதே மெசேஜை அனுப்பினேன்.ஆனால் இம்முறை அதான் பிரெண்ட்ஷிப் டே முடிஞ்சுதுள்ள.இனி சொல்லக்கூடாது அடுத்த வருஷம் சொல்றேன் போதுமா என்று சொல்லி மழுப்பிவிட்டால்.
எல்லா பொண்ணுங்களும் இப்படித்தானா.மனசுல உள்ளதை சொல்லவே மாட்டாங்களா என்று நினைத்து கொண்டேன்.இந்த பொண்ணுக மனசை புரிஞ்சிக்கவே முடியலையே புருஷோத்தமா.
எல்லா பொண்ணுங்களும் இப்படித்தானா.மனசுல உள்ளதை சொல்லவே மாட்டாங்களா என்று நினைத்து கொண்டேன்.இந்த பொண்ணுக மனசை புரிஞ்சிக்கவே முடியலையே புருஷோத்தமா.
பின் ஒரு நாள் வழக்கம் போல ராஜியிடம் மெசேஜில் பேசிக்கொண்டிருக்க அப்புறம் என்று கேட்டேன்.
என்கிட்ட எதாவது கேக்கனும்னா கேளு.நான் மறைக்காம சொல்றேன்னு சொன்னாள்.
நான் எதை பற்றி கேட்க என்று அவளிடம் கேட்க,எதை பத்தி வேனும்னாலும் கேளு.நான் மறைக்காம பதில் சொல்றேன்னு சொன்னால்.
எனக்கு அப்போது மணசாட்சி சொல்லியது.அவள் உன்னிடம் ஏதோ சொல்ல வருகிறாள்.கேளுடா.நீ என்ன லவ் பண்றியான்னு கேளு.என்றது.
இதயம் படக் படக்கென்று அடிக்க கண்டிப்பாக சொல்லுவியான்னு கேட்டேன்.
நூறு சதவீதம் கண்டிப்பா சொல்லுவேன்னு சொன்னாள்.
நூறு சதவீதம் கண்டிப்பா சொல்லுவேன்னு சொன்னாள்.
நான் கேட்டுவிட்டேன். நான் உனக்கு யார் என்று.
அண்ணாதான் னு சொல்லிவிட்டாள்.
ஓஹ் மை காட் என்றது எங்கிருந்தோ ஒரு குரல்
ஒரு நிமிடம் ஒரே நிமிடம் தான்.எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவளிடம் கேட்டேன் ஏன் என்னை அண்ணா என்று சொல்கிறாய்னு.
நீயே சொல்லு என்றாள்.
பெண்கள் எப்போதும் பதிலை சொல்ல மாட்டார்கள்.ஆனால் கேள்வி மட்டும் கேட்டு கொண்டே இருப்பார்கள்.
கேள்வியை கேட்ட என்னிடம் அதே கேள்வியை திரும்ப கேட்டாள்.
அதற்கு மேல் அவளிடம் பேச தோனவில்லை.தூக்கம் வருது.நாளைக்கு பேசுவதாக சொல்லிவிட்டு சென்றேன்.
மறுநாள் முழுவதும் அதே சிந்தனையாக ஓடி கொண்டிருந்தது.எனது நண்பர்கள் எனது மனதை அறிந்தவர்களாக அதை பற்றி கேட்டார்கள்.
நானும் அவர்களிடம் சொன்னேன்.அதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகபெரிய தவறு.
பொதுவா லவ்வ பொறுத்தவரைக்கும் சுயபுத்தி மட்டும் தான் இருக்கணும்.சொல் புத்தி வேலைக்கே ஆகாது.அவளும் உன்னை லவ் பண்ரா.அவளுக்கு உன்னை பிடிக்காமலா உங்கிட்ட இவ்ளோதூரம் பேசுறா.அதுவும் அவலா பேசுறா.கண்டிப்பா இது லவ்வுதான் இப்படி சொல்லியே நம்மள உசுப்பேத்தி விட்ருவானுக.
நம்மளுக்கும் அதான் வேணும்.ஒன் சைடா லவ் பண்ற பசங்களுக்கும் நம்ம லவ் பண்ற பொண்ணு நம்மள காரியே துப்பினாலும் அதுக்கு அவளுக்கு இருமலா இருக்கும் அதான் துப்பிட்டு போறா.நம்மள பாத்து இல்லனு நம்ம மனசு பாஸிட்டிவா சொல்லும்.

அவங்களை பொறுத்தவரை நம்ம ஆளு எங்க பாத்தாலும் நம்மள பாக்குறதாகவும்,யாருகிட்ட பேசினாலும் நம்மள பத்திதான் பேசுவதாகவும்,அவளும் என்னை லவ் பண்ணுவதாகவும் மனசு சொல்லிக்கொண்டே இருக்கும்.
இவனுக உசுப்பேத்தி விட்டதுல எனக்கும் அப்படித்தான் இருந்தது.அவ என்னை கலாய்க்கிறான்னு நினைச்சேன்.
அன்று ஈவினிங் வழக்கம் போல அவளாகவே மெசேஜ் செய்தாள்.எப்போதும் நான்தான் எதாவது பேசிக்கொண்டிருப்பேன்.அவள் ம்ம்ம்,ஓஹோ,ஓகே.அப்புறம் இதை மட்டும் சொல்லுவாள்.
இன்று அவள்தான் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.நான் ம்ம்ம்,ஓஹோ,ஓகே.அப்புறம் போட்டு கொண்டிருந்தேன்.
அவளாகவே கேட்டாள்.நேத்து ஏதோ கேட்ட போல.அதற்கு பதில் தெரிந்ததா என்று.
நீதானா சொன்ன.எனக்கு எப்படி தெரியும்.
இல்ல யாருகிட்டையாவது கேட்டு தெரிஞ்சிருப்பியோன்னு நினைச்சேன்.
கேட்டேன்.ஆனால் வேறுவிதமாக சொன்னாங்க.
என்ன சொன்னாங்க.
பிரெண்ட்ஸ் கிட்ட வேற என்னப்பா சொல்லுவாங்க.எல்லாம் தெரிஞ்சது தான.
எனக்கு தெரியாது சொல்லு.
வேற என்ன சொல்லுவாங்க.தப்பா எடுத்துக்காத.நீ என்ன லவ் பண்றன்னு சொன்னாங்க.
ச்சி இப்படிலாமா சொல்லுவாங்க.பசங்களுக்கு இதை தவிர வேற எதுவுமே சொல்ல மாட்டாங்களா.
பசங்க இப்படிதான் சொல்லுவாங்க.
பின்ன என்னப்பா திடீர்னு நீ அப்படி கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.அதான் அண்ணானு சொல்லிட்டேன்.போதுமா.
எனக்கு அவள் சொன்ன சமாதானம் போதவில்லை.இருந்தாலும் அவள் வாயாலே சொல்ல வைக்க வேண்டும் என்று இல்ல.வேற என்னமோ இருக்கு சொல்லு.
அப்படிலா ஒன்னும் இல்லை.விடு.
இருந்தாலும் நீ அப்படி சொல்லிருக்க கூடாது.
சரி இனி அப்படி சொல்ல மாட்டேன்.
அப்ப ஏன் அன்னைக்கு அண்ணான்னு சொன்ன.
சும்மா உன்ன கலாய்க்க.
சரி அப்ப எதுக்கு அண்ணன்னு சொன்ன.மாமா சித்தப்பா பிரென்ட் தம்பி இப்படி எதாவது சொல்லலாம்ல.
அப்பா சாமீ தெரியாம சொல்லிட்டேன்.அத்தான்.போதுமா.
என்ன சொன்ன.மெசஜ் பாக்கலை.திரும்ப அனுப்பு.
அத்தான் தெரியாம சொல்லிட்டேன் அத்தான்.போதுமா விடு.வேற எதாவது பேசலாம்.
அது.
அதன் பின் இருவரும் தூங்க சென்றோம்.ராஜி வாயாலே என்னை அத்தான்னு சொன்னது அவள் மீதான காதலை இன்னும் அதிகமாக்கியது.
நான் முதல் முறை நான் உனக்கு யார் என்று கேட்ட போது, அவள் அத்தான் என்று சொல்லி இருந்தால் அவளும் என்னை காதலிக்கிறாள் என்று நினைத்தேன்.ஆனால் நான் என்ன கேட்கிறேன் என்று புரிந்து அவளாகவே சொல்லிவிட்டாள்.
அப்போ அவளும் என்னை காதலிக்கிறாள் தானே.
நாளை நியூ இயர்.பிரெண்ட்ஸ் உசுப்பேத்தி விட்டதுல என்னோட கொள்கை காணாமல் போயிருந்தது.அவளிடம் ப்ரொபோஸ் செய்ய என் மனம் துடித்து கொண்டிருந்தது.
இன்று அவளிடம் பேசி கொண்டிருக்கும் போது உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்றேன்.
சொல்லு.
இல்ல சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே.
மாட்டேன் சொல்லு.
வேணாம் நாளைக்கு சொல்றேன்.இப்ப வேற எதாவது பேசலாம்.
சரி.நாளைக்குநியூ இயர்.அடுத்த வருஷம் நீ ஆசைப்பட்ட எல்லாம் நீ நினைச்ச மாதிரி நடக்க என்னோட விஷஸ்.
தேங்ஸ்.உனக்கும் நீ ஆசைப்பட்ட எல்லாம் நடக்க என்னோட விஷஸ்.
கண்டிப்பா நடக்குமா.
கண்டிப்பா நடக்கும்.நம்பு.
பாக்கலாம்.நாளைக்கு உங்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்னு சொன்னேன்ல.அதுக்கு நீ என்ன சொல்றேன்னு.நான் நினைச்ச மாதிரி நீ சொன்னா அடுத்த வருஷம் புல்லா நான் நினைச்ச மாதிரி நடக்கும்.இல்லனா உன் விஷஸ் பலிக்காது.
கண்டிப்பா என் விஷஸ் பலிக்கும்.என்ன சொல்ல போற.
நாளைக்கு சொல்றேன்.
ரொம்ப பீடிகை போடுற.பாக்கலாம்.சரி அத்தான் நாளைக்கு பேசுறேன்.என் பிரென்ட் வந்துருக்கா.குட் நைட் அத்தான்.
அவள் கடைசியாக அத்தான் என்று சொன்னது எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தது.கண்டிப்பாக அவளும் என்னை லவ் பண்ணுகிறாள் என்று உறுதியாக நம்பினேன்.நாளைக்கு நியூ இயர்.அவளிடம் எப்படி ப்ரொபோஸ் செய்வது என்று யோசித்தேன்.
அவள் கடைசியாக அத்தான் என்று சொன்னது எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தது.கண்டிப்பாக அவளும் என்னை லவ் பண்ணுகிறாள் என்று உறுதியாக நம்பினேன்.நாளைக்கு நியூ இயர்.அவளிடம் எப்படி ப்ரொபோஸ் செய்வது என்று யோசித்தேன்.
கடைசியில் மெசேஜ் வாயிலாக சொல்லிவிடலாம் என்றே தோன்றியது.அதற்கு காரணமும் இருந்தது.கடிதத்தின் மூலம் சொல்வது போல இருக்கும்.
அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமில்லா நிமிடங்கள்.வைரமுத்து என் காதுகளில் காதலித்துப்பார் கவிதையை சொல்லிக்கொண்டிருந்தார்.எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை.
ராஜி மெசேஜ் செய்தாள்.நேத்தும் ஏதோ சொல்லணும்னு சொன்னியே சொல்லு என்றாள்.
இல்ல ராஜி சொன்னா எப்படி எடுத்துப்பியோன்னு தெரியலை.
சும்மா சொல்லு கார்த்திக்.
நான் உன்னை லவ் பண்றேன் ராஜி.ஐ லவ் யூ.இதை உங்கிட்ட சொல்ல முடியாம நான் படுற அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்.தப்பா மட்டும் நினைச்சிடாத.சின்ன வயசுல இருந்தே உன்னை எனக்கு பிடிக்கும்.உன்னோட சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்கு பிடிக்குது.நீ அத்தான்னு என்ன கூப்பிடும்போது அதோட என் காது செவிடாகிட கூடாதான்னு நினைக்க தோணுது.எனக்கு இந்த பீல் பிடிச்சிருக்கு.எல்லாம் உன்னாலதான்.ஐ லவ் யு.
நீண்ட மெசேஜை அனுப்பி விட்டு காத்திருந்தேன்.அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.ஒருவேளை அவளுக்கு என்னை பிடிக்கவில்லையோ.இல்ல நம்மளை தவிக்க விட்டு அப்புறமா சொல்லுவாளா.தெரியவில்லை.

காத்திருப்பின் வலி அப்போதுதான் எனக்கு தெரிந்தது.அந்த நேரம் 10 கோடி ரூபாய் பணத்தை என்கிட்ட கொடுத்திருந்தாலும் தூக்கி எறிஞ்சிட்டு செல்லை மட்டும் தான் பார்த்திருப்பேன்.காரணமே இல்லாமல் நெட்வொர்க்கின் மேல் கோவம் வந்தது.ஒருவேளை சிக்னல் இல்லாமல் கூட மெசேஜ் வந்தது லேட் ஆகி இருக்குமோ என்றெல்லாம் யோசிக்க தொடங்கினேன்.
10 நிமிடம் கழித்து அவளிடம் இருந்து பதில் வந்தது.10 நிமிடங்கள் 10 யுகங்களாக.
சாரி கார்த்திக்.லூசு மாதிரி பேசாத.
ஏன்.
ஏன்னு கேட்டால் எனக்கு காரணம் தெரியல.ஆனால் திரும்பவும் இதே மாதிரி என்கிட்ட பேசாத.
சரி.அப்ப உனக்கு என்ன பிடிக்கலை.லவ் பண்ணலை அப்படித்தான.
ஆமா லவ் பண்ணலை.ஆனால் உன்னை எனக்கு பிடிக்கும் ஒரு நல்ல பிரெண்டா.
ஓகே ராஜி.இனி என்கிட்ட பேசமாட்டல்ல.
பேசுவேன் கார்த்திக் எப்போதும் போல.ஆனா நீ லவ் பன்றேன்னு சுத்திட்டு இருக்காத.
சரி ராஜி.நான் ட்ரை பண்றேன்.நாளைக்கு பேசலாம் பாய்.சொல்லிவிட்டு வைத்து விட்டேன்.
மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.எதாவது குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடவேண்டும் போல இருந்தது.
ரூமில் இருந்து ஆடினேன்.என்னடா லவ் பண்ணின பொண்ணு லவ் பண்ணலன்னு சந்தோசப்படுறன்னு நினைக்கலாம்.
ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டே இருக்கறதை விட அதை அவகிட்ட சொல்லி முடிவு தெரிஞ்சுக்கிடுறதும் ஒருவகை சந்தோசம் தான்.
நம்ம லவ்வ அக்செப்ட் பண்ணிட்டான்னா அதுக்கடுத்து அவகூட எப்படி டைம் ஸ்பென்ட் பண்ணலாம்,அவகூட எங்க சுத்தலாம்,அவகூட டெய்லி பேசணும் இப்படிதான் மனசு ஆசைப்படும்.அதே அவ ஒத்துக்கொள்ளலன்னா அவளை பற்றி புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பா நினைக்கணும்.
நானும் அவளை பற்றி புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பா நினைச்சேன்.
காதலை வெளிப்படுத்துவது என்பதில்தான் காதலின் வெற்றியே.நான் காதலை வெளிப்படுத்துவதில் வேண்டுமானால் தோற்று போயிருக்கலாம்.ஆனால் காதலில் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
அவள் என்மீதுல் காதல் இல்லை என்று மட்டும் தானே சொன்னால்.வரும் காலத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கும்னு நான் நம்புறேன்.அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்பதே தெரியாதது தான் வாழ்க்கை.ராஜி மேல் இருக்கும் காதலை அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்தேன்.
இப்படியே போய்க்கொண்டிருக்க அன்று ஒரு கதை படித்தேன் ரொம்ப அருமையான கதை.
ஒரு கணவன் தன் மனைவியின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறான்அவனுக்கு பாலகுமாரன்,இந்துமதி இவங்களோட புத்தகங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.இளையராஜா இசையில் ஜானகி பாடிய பாடல்கள் எல்லாம் கொள்ளை பிரியம்.
அவனுக்கு பிடித்த எல்லாம் தன் மனைவிக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.
கல்யாணம் முடிந்து முதல் இரவு அன்று மனைவியிடம் கேட்கிறான்.உனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா என்று.
கடைசியாக +2 பாட புத்தகம் படித்தது.எனக்கு பழக்கம் இல்லை என்கிறாள்.
உனக்கு யாருடைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்று கேட்கிறான்.பொதுவாக இசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.இதிலாவது தனக்கு இணையாக இருப்பாள் என்ற எதிர்பார்ப்பில் கேட்டான்.
இப்படி திடீர்னு கேட்டாள் எப்படி சொல்வது என்கிறாள் மனைவி.
இவனுக்கு சப்பென்று ஆகிவிடுகிறது.தனது எதிர்பார்ப்பிற்கு எல்லாம் மாறாக ஒருத்தி தனக்கு மனைவியாக வந்ததில் வாழ்க்கையையே வெறுத்துவிடுகிறான்.
No comments:
Post a Comment