CLOSE

Friday, 19 January 2018

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 9


பிறகு இருவரும் சாப்பிட்டு விட்டு உக்காந்தனர் .ஓகே விக்கி நான் ஏன் சென்னை போகணும்னு நினைக்கிறேனா உனக்காகவோ எனக்காகவோ நான் சென்னை போகணும்னு நினைக்கல.நம்ம பையனுக்காக தான் போகணும்னு நினைக்கிறேன் என்றாள் .
ஏன் நம்ம பையனுக்கு என்ன என்று சொல்லி கொண்டு தொட்டிலில் இருக்கும் தன் மகனை போயி பார்த்தான் .அவன் தரையில் உக்காந்து கொண்டு தன் மகனை ஆட்டி விட்டான் ,ஹ இங்க வா பேசுவோம் என்றாள் .
ஹ என்னன்னு தெரியல சில நேரம் அது நம்ம குழந்தைய இருந்தாலும் பயமா இருக்கு ஏன்னா அந்த குழந்தைய தூக்குர பயம் அதே சில நேரம் அத பாத்து கிட்டும் தொட்டு கிட்டும் இருக்கணும் போல இருக்குடி என்றான் ,சரி பேச்ச மாத்ததா அவன் தூங்கட்டும் இங்க வா என்றாள் .சரி சொல்லு நம்ம பிள்ளைக்கு என்னடி மும்பைல இருந்தா தான் நல்ல வசதியா வாழ்வான் என்றான் ,வசதியா வாழ்வான் ஆனா சொந்த பந்தந்தொட வாழ்வானா அதான் கேள்வி என்றாள் .
இது என்னடி கேள்வி அவனுக்கு நம்ம 2 பேர் மட்டும் போதாதா என்றான் ,போதாது என்றாள்,அப்ப வா இப்பவே இன்னொரு தங்கச்சி பாப்பாவுக்கு ட்ரை பண்ணி அவனுக்கு கொடுப்போம் என்றான் சிரித்து கொண்டே ,எப்ப பாரு இதே நினைப்பு உனக்கு என்று அவன் மாரில் செல்லமாக அடிக்க அவளை இழுத்து தன் மாரிலேஅணைத்து கொண்டான் ,
விக்கி
ம்ம்ம்
விக்கி என்றாள் ,வேணாம்டி தேவை இல்லாம பேசி ஏன் இந்த மூமெண்ட்ட மாத்தணும் என்றான் ,
நான் சொல்றத கேளுடா என்றாள் ,ம்ம் சரி சொல்லு என்றான் ,நம்ம பையனுக்கு அப்பா அம்மா மட்டும் போதாது ,அவன் கூட விளையாட அவனுக்கு தாத்தா பாட்டி வேணும் ,அவன பைக்ல கூப்பிட்டு போக அவன் சித்தப்பா வேணும் .என்னடா மருமகனே என் பொண்ண கட்டிக்கிறியான்னு கேட்டு கிண்டல் அடிக்க அவன் அத்தை வேணும் இந்த மாதிரி எல்லாமே வேணாமா என்றாள் .
நீ என்ன சொல்ல வர என்றான் ,நான் என்ன சொல்ல வரேன்னா நாம ஏன் சென்னைல உன் வீட்டுக்கு போயி உங்க அப்பா அம்மா கூட இருக்க கூடாது என்றாள் .இருக்க வேணாம் அவன் நம்ம கூட மட்டும் இருந்தா போதும் என்றான் கோபமாக ,சொன்னா புரிஞ்சுக்கோ விக்கி என்றாள் ,நீ சொன்னா புரிஞ்சுக்கோ ஒரு தடவயாச்சும் நான் சொல்றத கேளு வந்ததுல இருந்து நீ சொல்றத மட்டும் தான் கேட்டு கிட்டு இருக்கேன் ,இந்த தடவயாச்சும் நான் சொல்றத நீ கேளு என்றான் .
அப்படி இல்ல விக்கி இது வந்து என்று சுவாதி சொல்லும் முன் சரி ஒரு உதாரணத்துக்கு உங்க அப்பா கூட மறுபடி சேர் சொன்னா செருவியா என்றான் ,அவர பத்தி பேசாத என்றாள்.
ஓஹோ உனக்கு மட்டும் உங்க அப்பாவ பத்தி பேச கூட கூடாது ஆனா நான் மட்டும் என் குடும்பதையோடையோ போயி நிக்கனுமா என்றான் ,சும்மா நிறுத்து விக்கி என் அப்பாவும் உன் அப்பாவும் ஒண்ணா ,நான் 5 வயசு இருக்கும் போதே என்னைய தூக்கி எரிஞ்சுட்டாறு ,அவருக்கு தேவை எல்லாம் பணம் பணம் பணம் தான் ,
5 வயசுல இருந்து அவர் இல்லாம இருந்து இருக்கேன் ,ஏன் இப்ப வரைக்கும் கூட அவர் என்னைய கண்டுக்கல இவளவு ஏன் என்னைய இப்ப தேடி வந்தவர் இதுக்கு முன்னாடி எங்க போனாரு நான் இருக்கேனா இல்ல செத்தேன்னானு கூட பாக்க வரல ஆனா உன் அப்பா அப்படியா சொல்லு சொல்லு என்று சொல்லி கொண்டே அழுதாள் .
விக்கி உனக்குன்னு அப்பா இருக்கு அம்மா இருக்கு அவங்கள ஏங்க வைக்காதடா ப்ளிஸ் அப்பா அம்மா இருந்தும் அநாதை மாதிரி வளந்த எனக்கு தான் தெரியும் அப்பா அம்மாவோட அருமை ,நான் சென்னை போகணும்னு சொன்னது நம்ம குழந்தைக்காக இல்லடா உனக்காத்தான் என்று அவன் மார்பில் முத்தமிட்டாள் .
உண்மைய சொல்லு உங்க அப்பா அம்மாவ நீ மிஸ் பன்னேலேன்னு என்றாள் .இல்ல என்று அவளை விளக்கி விட்டு வெளியே சென்றான் வெளியே வாசலில் நின்று கொண்டு கடுப்பில் சிகரெட்டை எடுத்தான் ,ஆனால் அதை பற்ற வைக்கமால் கூட தூங்கி எரிந்து விட்டான் ,
உள்ளே வந்தான் ஓகே சுவாதி நம்ம சென்னை போறமா இல்லையான்னு முடிவு பண்ண இப்ப என் அப்பாவுக்கு போன் பண்ண போறேன் ,அவர் கிட்ட நான் உன்னைய கல்யாணம் முடிச்சுட்டாத சொல்றேன் ,ஒரு வேல அவர் சாதி மதம் மயிருன்னு பேசி உன்னைய அவாயிட் பண்ணா நான் அதுக்கு அப்புறம் செத்தாலும் கூட சென்னை போக மாட்டேன் என்றான் ,
சரி பேசிட்டு வா என்றாள் ,விக்கி போக பார்த்தன் ,இரு இரு ஸ்பிக்கர்ல போடு நானும் கேக்குறேன் என்றாள் ,இல்ல வேணாம் அவர் எதாச்சும் தப்பா பேசிட்டா என்றான் .பரவல நீ ஸ்பிக்கர்ல போடு என்றாள் ,விக்கி பின்னர் போன் செய்தான் அவன் அப்பாவுக்கு ,
ஹலோ என்றார் ,விக்கிக்கு பேச மனம் வரவில்லை முதலில் ,அவர் அப்பா பின்னர் ரெண்டு மூனு முறை ஹலோ ஹெலோ என்றதும் நான் விக்னேஷ் பேசுறேன் என்றான் .
சொல்லுப்பா எப்படி இருக்க நல்லா இருக்கியா என்றார் ,ம்ம் என்றான் ,என்ன விஷயம் அப்பா .ஒன்னும் இல்ல சும்மா தான் அம்மா எப்படி இருக்காங்க என்றான் ,நல்லா இருக்காப்பா இப்ப தான் தூங்குரா நான் வேணா எழுப்புட்டா என்றார் .இல்ல வேணாம் வேற கதிர் எப்படி இருக்கான் என்ன டிகிரி பண்றான் என்றான் ,ம்ம் அவன் இப்ப தானப்பா ப்ளஸ் டு முடிச்சான் இனி ரிசல்ட் வந்ததும் தான் யோசிக்கணும் இப்ப விளையாட போயிருக்கான் ,வந்ததும் பேச சொல்றேன் என்றார் ,அக்கா என்னப்பா பண்ணுது அக்கா குழந்தைக எல்லாம் எப்படி இருக்குதுக என்றான் ,ம்ம் நல்லா இருக்குதுகப்பா என்றார் ,
பின் விக்கி என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான் ,பின் சுவாதி மெல்ல பின்னால் அவனை தட்ட ம்ம் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்றான் ,சொல்லுப்பா என்ன விஷயம் என்றார் ,அது அது
சும்மா தயங்காம சொல்லுப்பா என்றார் ,அப்பா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்றான் ,என்னது என்றார் ஒரு சிறிய அதிர்ச்சியோடு .ஆமா ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு இத்தன நாளா உங்க கிட்ட சொல்லனும்னு தோனல ஆனா இப்ப தோனுச்சு சொல்லிட்டேன் வச்சுடுவா என்றான்.சரிப்பா என்றார் .பின் இருவரும் போனை வைக்க நான் சொல்லல இதுக எல்லாம் திருந்தவே திருந்தாதுக சுவாதி என்று சொல்லி கொண்டு இருக்கும் போது விக்கி போன் ஒலித்தது .
ம்ம் என்னது இவரு மறுபடியும் போன் பண்றாரு என்றான் ,யாருடா என கேட்டாள் சுவாதி ,அதான் எங்க அப்பா என்றான் .பேசுடா என்று அவள் போனை கொடுக்க முடியாது என்றான் .ஒழுங்கா பேசு என்று அவள் கொடுக்க விக்கி முடியாவே முடியாது என்பது போல் சைகை செய்தான் ,பின் சுவாதியை போன் ஆன் செய்து ஸ்பிக்கரில் போட்டாள் ,
ஹலோ தம்பி ஹலோ விக்னேஷ் என்று அவன் அப்பா பேச விக்கி ஒன்றும் சொல்லமால் இருக்க பேசுடா என்று அடித்தாள் சுவாதி .ம்ம் சொல்லுங்க என்றான் ,அது வந்துப்பா அது நீ என்ன குழந்தைன்னே சொல்லவே இல்லையே என்றார் .ம்ம் ஆண் குழந்தை என்றான் ,குழந்தை நல்லா இருக்காப்பா என்றார் ,ம்ம் என்று மட்டும் சொன்னான் ,எத்தன மாசம்பா ஆகுது குழந்தை பிறந்து என கேட்டார் .
ஒரு மாசம் ஆகுது என்றான் விக்கி ,ஒ என்று மட்டும் சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார் .அப்ப நான் வைக்கவா என்றான் .சரிப்பா என்றவர் தம்பி ஒரு நிமிஷம் எனக்காக இல்ல வேணாம்ப்பா நான் எனக்காகன்னு உன் கிட்ட உதவி கேக்குற தகுதிய எப்ப நீ காதலிச்சு கல்யாணம் வரைக்கு போயி அத தடுத்தனோ அப்பவே இழந்துட்டேன்பா ஆனா இத உங்க அம்மாவுக்காக கேக்குறேன்பா உன் கிட்ட உன் பிரண்டு மூர்த்தி சொல்லி இருப்பான்னு நினைச்சேன் சரி பரவல நானே சொல்றேன் அவளுக்கு இப்ப எல்லாம் ரொம்ப உடம்புக்கு முடியாம போகுதுப்ப்பா .
உன்னைய 5 வருசமா பாக்கத்தால அவ மனசளவுல நொடிஞ்சு போயி இருக்கா .அவளுக்கு அவ சாகுரதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆச ஆனா இப்ப நீயே கல்யாணம் பண்ணி கிட்டேன்னு சொல்ற பேசாம உன் பொண்டாட்டி பிள்ளையோட ஒரு 2 நாள் இங்க வந்துட்டு போனேன்னா அவ கொஞ்சம் நல்லா ஆவா அதுனால வர முடியுமாப்பா என கேட்டார் ,
இல்ல அது அது என்று விக்கி சோகமாக திணற எனக்கு தெரியும்பா என்னைய பாக்க உனக்கு பிடிக்காதுன்னு நீ என்னைக்கு வரேன்னு சொல்லு அன்னைக்கு நான் வேற ஏதாவது இடத்துக்கு போயிக்கிறேன் நீ உங்க அம்மாவ மட்டும் பாத்துட்டு போ என்றார் .
விக்கிக்கு பேச முடியவில்லை ,என்னப்பா ஆச்சு என்றார் .இல்ல என் பொண்டாட்டி ஒரு அனாதை அவளுக்குன்னு சாதி மதம்னு கிடையாது உங்களுக்கு தான் ஜாதி ரொம்ப முக்கியமாச்சே .ஏற்கனவே இந்த சாதிய வச்சு எனக்கு பிடிச்ச ஒன்ன என் கிட்ட பிரிசிங்க இப்ப இதையும் பிரிச்சுட்டா நான் என்ன பண்ணன்னு யோசிக்கிறேன் என்றான் ,
இன்னும் என்னைய நீ பழைய மாதிரியே நினைக்கிற பரவல நான் மறுபடியும் சொல்றேன் உன்னய பெத்தவளுக்காக வா தயவு செஞ்சு இல்லாட்டி மும்பைல நீ இருக்க இடத்த சொல்லுப்பா அவள கூப்பிட்டு வரேன் நீ குடும்பத்தோட இருக்கிறத அவ பாக்கட்டும் என்றார் ,
இல்ல இல்ல நானே வரேன் என்றான் ,சரிப்பா சந்தோசம் என்றார் ,அவர் போனை வைக்கும் முன் ம்ம் உங்க கிட்ட ஒன்னு கேக்கவா என்றான் ,கேளுப்பா என்றார் ,நீங்க ரொம்ப சாதி வெறியரா ஏன் அன்னைக்கு அப்படி பண்ணிங்க என்றான் .
நான் உண்மைய சொன்னா நீ நம்பவா போற என்றார் .பரவல சொல்லுங்க என்றான் ,பொண்ணோட அப்பன் என் கால்ல வந்து விழுந்து கெஞ்சுனான் .இவ இப்படி வேற சாதி காரன் கூட கல்யாணம் ஆகி போயிட்டா என்னோட மத்த பொண்ணுக வாழ்க்கை என்ன ஆகுறதுன்னு அழுதான் ,நானும் ஒரு பொண்ண பெத்தவன் எனக்கு அப்ப உன்னோட அப்பன்கிரத விட இன்னொரு பெண்ன பெத்த அப்பனோட வலிதான் பெருசா பட்டுச்சு அதான் அப்படி பண்ணேன் .
மத்த படி நான் ஒன்னும் சாதி வெறியன்லாம் இல்லப்பா நீ வெள்ளைகாரியவே கூப்பிட்டு வந்தாலும் ஏத்துக்குவேன் ,தயவு செஞ்சு உங்க அம்மாவுக்காக கூப்பிட்டு வாப்பா என்று சொல்லி அவர் போனை வைக்க 
விக்கி தன் கண்களை துடைத்து கொண்டே சோபாவில் உக்காந்தான் ,அவன் முகத்தை திருப்பி அவன் கண்ணீரை துடைத்தாள் சுவாதி .சுவாதி சென்னைக்கு போவோமாடா என்றான் அவள் மடியில் படுத்து கொண்டே .
போவோம் கண்டிப்பா போவோம் ஒரு வேல என்னைய உள்ள விடாட்டியும் நீயும் பையனும் மட்டுமாச்சும் போயிட்டு வாங்க நான் வெளிய நின்னுக்கிறேன் பாவம் உங்க அம்மா என்றாள் .போடி உன்னைய வெளிய நிக்க வச்சா நான் உள்ளவே போக மாட்டேன் என்றான் ,சரி சரி அதலாம் அப்புறம் பாத்துக்கலாம் இப்ப சென்னை எப்ப போகலாம் என்றாள் .
தெரியல என்றான் ,நாளைக்கே போறோம் நீ போயி அதுக்கு ஏற்பாடு பண்ணு என்றாள் .சரி பிளைட்டா ட்ரெயினா என கேட்டான் ,எதாச்சும் ஒன்னு போடா என்றாள் .சரி நான் போயிட்டு வரேன் என்று கிளம்பினான் ,ஹே மதியம் சாப்பிட வந்துடு என்றாள் சுவாதி ,அவன் சிரித்து கொண்டே ஓகே என்று சொல்லி விட்டு போனான் .
விக்கி சென்னைக்கு செல்ல பிளைட் டிக்கெட் எடுத்து வந்தான் ,ஓகேடா மும்பை விட்டு போ போறோம் மும்பைல என்ன என்ன மிஸ் பண்ற என்றாள் ,ஒன்னும் இல்லையே ஒன்னும் இல்லையே என்று சலிப்போடு சொன்னான் ,ஹே விக்கி சும்மா தயங்காம சொல்லுடா என்றாள் ,
நிறைய இருக்குடி எத சொல்ல வள்ளி மணி ,வருண் அப்புறம் இன்னும் நிறைய இருக்குடி என்றான் .சுவாதி தயங்கி கொண்டே விக்கி நான் உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா சரி மணி மணி
எனக்கு தெரியும் உங்க அப்பா கிட்ட நம்மள பத்தி போட்டு கொடுத்துட்டான் அதானே என்றான் .ஆமாடா என்றாள் ,இருந்துட்டு போட்டும் அதுனால என்ன இப்ப என்றான் ,என்னது இருந்துட்டு போட்டுமா உனக்கு வேணும்னா அது சாதரணமா இருக்கலாம் ஆனா உன் உடம்புல இருந்து ரத்த ரத்தமா வருறத பாத்த எனக்கு அது சாதராணம் கிடையாது என்றாள் சுவாதி ,ஹ விடுடி நம்ம தான் மும்பை விட்டே போக போறோம்ல அதுனால கடைசியா அதுகள பாத்துட்டு வந்துடுவோம் என்றான் ,
சரி நீ வேணா போயிட்டு வா நான் வரல என்றாள் ,ஓகே என்றான் ,சரி நீ யார் யார் கிட்ட சொல்லணுமோ போயி சொல்லிட்டு வா நான் இங்க எல்லாத்தையும் அரேஜ் பண்ணி வைக்கிறேன் என்றாள் ,சரிடி அந்த குழந்தைக்கு எதுவும் வாங்கனுமா என்றான் ,ஆமா டைப்பர்ஸ் வாங்கிக்கோ அப்புறம் பால் பாட்டில் வாங்கிக்கோ என்றாள் ,
ஏண்டி இதுல அப்படியே அவன் உரியட்டும்டி என்று சிரித்து கொண்டே அவள் முலையை பிடித்து விக்கி அமுக்க அவன் கையை தட்டி விட்டு முறைத்தாள் .டேய் வெளி இடத்துல எல்லாம் இப்படி ஜாக்கெட் கலட்டி பால் கொடுக்க முடியாது ,நாட்டுல உன்னைய விட பொறுக்கி பசங்க இருக்காங்கே அதான் இங்கயே பால பால் பாட்டில அடைச்சு வைக்க போறேன் என்றான் ,
ஏணி ஹெல்ப் என்று சிரித்து கொண்டே அவன் கேட்க போடா முதல என்றாள் ,விக்கி சிரித்து கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டு போக ஹே விக்கி எந்த காரனத்த கொண்டும் ஆபிஸ்க்கு போகாத எனக்கு அது பிடிக்காது என்றாள் ,ஓகே டியர் என்று சொல்லி விட்டு அவன் சென்றான் ,
பின் நேராக வள்ளி வீட்டிற்கு சென்றான் ,வள்ளி அவனை பார்த்ததும் அழுது அவனை கட்டி பிடித்து கொண்டாள் .பின்னர் அவள் விலகி அவனை கையெடுத்து கூம்பிட்டு என்னைய மன்னிச்சுடுடா விக்கி என் புருஷன் பண்ண தப்பால தானே நீ அடிபட்ட என்று அழுதாள் ,அதலாம் ஒன்னு இல்ல மணிய எங்க என்றான் ,அப்படி யாருமே தெரியாது என்றாள் ,
பின் மணி உள்ளே இருந்து வந்தான் ,மணியை பார்த்தும் வள்ளி முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டாள் ,அட கழுதைகளா இன்னும் நீங்க 2 பேரும் பேசலையா என்றான் ,யாரும் பதில் சொல்லவில்லை ,வள்ளி நீ இரு நான் எதாச்சும் சாப்பிட கொண்டு வரேன் என்று உள்ளே போனாள் .
அப்புறம் ஆபிஸ் எப்படி போகுது என்றான் மணியிடம் ,ம்ம் போகுதுடா என்றான் மணி ,பின் வள்ளி வந்து அவனுக்கு எதையோ வைத்து விட்டு உள்ளே போக பார்த்தவளை கையை பிடித்து மணியிடம் நிற்க வைத்தான் ,ஹ சிஸ் முதல மச்சான் கிட்ட உக்காரு நான் உங்க 2 பேரு கிட்டயும் ஒன்னு சொல்லணும் என்றான் ,
பரவல அப்படியே சொல்லு என்று முகத்தை திருப்பி கொண்டு நின்றாள் .அப்படியே எல்லாம் சொல்ல முடியாது போயி உக்காரு என்று அவளை அவன் பக்கத்தில் உக்கார வைத்தான் ,ஹ ஏன் இப்படி 2 பேரும் பேசாம இருக்கீங்க என கேட்டான் .இருவருமே அமைதியாக இருந்தனர் .இங்க பாருங்க நான் உங்கள சேத்து வைக்கிறேன்னு வளவளனு பேச போறது இல்ல .ஒன்நே ஒன்னு சொல்றேன் நான் எப்பயுமே சுவாதிய ஒரு குழந்தையா தான் பாக்குறேன் ,
நீயும் உன் புருசன அப்படியே பாரு ,குழந்தைகளுக்கு நல்லது கெட்டதுன்னு எதுவும் தெரியாது ,அது யார் என்ன சொன்னாலும் நம்பும் அது மாதிரி தான் நம்ம மணியும் நீ என்னைக்கும் அவன விட்டுட்டு போயிடாத பாவம் அவன்
என்றான் ,பின் மணியும் வள்ளியும் ஓரிரு வினாடிகள் பார்த்து கொண்டாலும் பேச வில்லை ,
சரி அடுத்து ஒரு முக்கியமான விசயம் நானும் சுவாதியும் சென்னை போறோம் நாளைக்கு என்றான் ,போயிட்டு எப்படா வருவ இல்ல என்றாள் வள்ளி ,இல்ல வர மாட்டேன் என்றான் ,ஏண்டா போகாதடா நாங்க வேணும்னா உன் கண்ல படல அதுக்குன்னு நீ போகாதடா என்றாள் ,ஹ லூசு இது உன் தப்பு இல்ல எனக்கு மும்பைல இருக்க பிடிக்கல டூ மேனி பேட் மேமரிஸ் அதுனால சென்னை போறேன் அது மட்டும் இல்லாம அம்மாவுக்கு ரொம்ப முடியல என்றான் ,
ஓகே சுவாதி என்ன சொன்னா என்றாள் .அவ ஒன்னும் சொல்லல கொஞ்சம் நர்வசா இருக்குன்னு சொன்னா அவளவு தான் என்றான் ,வள்ளி ஒன்றும் சொல்லமால் அழுதாள் ,ஹ லூசு எதுக்கு அழுகுர என்றான் ,எங்களால தானே மும்பை விட்டு போற நாங்க வேணா சென்னை போறோம் நீ இருக்கியா என்று அழுதாள் ,அட லூசெ இது அப்படி இல்ல நான் கொஞ்ச காலம் என் குடும்பத்தோடு இருக்க போறேன் அவளவு தான் என்றான் ,
சரி குழந்தை எங்க என்றான் ,உள்ளே என்றாள் ,குழந்தையை போயி தூக்கி கொண்டு வந்தான் ,டேய் குழந்தைய நல்லா தூக்குர என்றாள் ,எல்லாம் என் மகன தூக்கி பிராக்டிஸ் எடுத்து கிட்டது தான் என்றான் ,வள்ளி சிரித்தாள் .ம்ம் எப்படி இருக்கான் என் மருமகன் என்றாள் ,ம்ம் நல்லா இருக்கான் என்றான் ,ஓகே நல்லபடியா மும்பை போயிட்டு வா வருசத்துக்கு ஒரு தடவயாச்சும் நீயும் சுவாதியும் மும்பை வாங்க .நாங்களும் முடிஞ்சா வர பாக்குறோம் என்றாள் ,
பின் விக்கி அங்கு இருந்து கிளம்பினான் ,
அப்புறம் வருணை போன் செய்து காப்பி சாப்க்கு வர வைத்தான் ,அப்புறம் எப்படி இருக்கடா என்றான் ,ஏதோ இருக்கேன் பாஸ் என்று சொல்லி விட்டு ஏன் பாஸ் என்று அவன் கேட்கும் முன் டேய் முதல பாஸ்னு சொல்றத நிறுத்து அப்புறம் நீ என்ன கேக்க போறேன்னு தெரியும் சொல்றேன் ,சுவாதிய எனக்கு பாசொட பொண்ணுன்னு எல்லாம் தெரியாது .அவளும் சொல்லல என்றான் ,பாஸ் இதாலம் நீங்க சொல்ல வேணாம் .எனக்கு உங்கள பத்தி தெரியும் என்றான் ,
சரிடா நாங்க வேற ஊர் போறோம் என்றான் ,ஏன் பாஸ் நான் வேணா இங்கயே வேற கம்பெனில வேலை பாத்து தரவா என்றான் .இல்ல வேணாம்டா என்றான் ,சரி எங்க பாஸ் போறீங்க என்றான் .விக்கி யோசிப்பதை பார்த்து விட்டு என்ன பாஸ் என்னையும் நீங்க மணி மாதிரி நினைசுடிங்க்லா என்றான் ,இல்லடா நாங்க சென்னை போறோம் அவளவு தான் என்றான் ,ஓகே நல்லது பாஸ் நானும் சீக்கிரம் கல்யாணம் பண்ணலாம்னு பாக்குறேன் பாஸ் என்றான் ,
டேய் சீக்கிரம் பண்ணு அப்படியே சீக்கிரமே குழந்தையும் பெத்துக்கோ என்றான் ,ஆமா பாஸ் என்றான் ,எப்ப சொல்ல போற என்றான் ,தெரில பாஸ் அவ வீட்டுக்கு போயி கேக்கலாம்னு பாக்குறேன் என்றான் ,டேய் ஒரு வேல அவங்கே தராட்டி அடுத்த நிமிசமே ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிடு லவ்வ மட்டும் யாருக்காகவும் விட்டு கொடுக்காத என்றான் விக்கி ,ஓகே பாஸ் என்றான் ,
பின் வீட்டிற்கு மதியமே சென்றவன் போனதும் சுவாதி கதவை திறக்கவும் அவன் அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க சும்மா சும்மா எச்சி பண்ணாதடா என்று சுவாதி அவன் எச்சியை துடைக்க விக்கி மறுபடியும் கொடுத்தான் .மறுபடியும் அவள் சிரித்து கொண்டே துடைக்க மறுபடியும் கொடுத்தான் ,இப்படியே மாறி மாறி அவன் அவள் இரு கன்னங்களையும் எச்சி ஆக்க சுவாதி அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் உதட்டில் இறுக்கமாக முத்தம் கொடுக்க
இருவரும் நன்கு உதடுகளை சப்பிய பின் ஸ்பா என்னடி இது என்றான் ,அவள் சிரித்து கொண்டே ம்ம் என் கன்னத்த எச்சி ஆக்குன உன் உதட்ட பழி வாங்கிட்டேன் என்றாள் ,இதான் பழி வாங்குறதா அப்ப நான் மறுபடியும் கொடுக்கவா என்று அவன் வர அவள் தடுத்து போதும்டா சார் எல்லாத்தையும் பாத்தாச்சா என்றாள் ,
ம்ம் பாத்துட்டேன் மணி ,வள்ளி அப்புறம் வருண் எல்லாம் பாத்துட்டேன் என்றான் ,அட பாவி உன் ஸ்குள் பிரண்டு சிமிய பாக்கலையா என்றாள் ,ஐயோ மறந்துட்டேன்டி நாம ரெண்டு பேர் சேர முக்கிய காரணமே அவ தான் எப்படி மறந்தேன் என்றான் ,
மறப்ப உன்னைய எல்லாம் ரெண்டு போடு போடணும் என்று அவன் முதுகில் அடிக்க ஆவ் சரிடி போறேன்டி சாய்ங்காலம் என்றான் ,இப்பவே வா போவோம் என்றாள் ,நீயுமா என்றான் ,ஆமா நான் நம்ம ஜூனியர் எல்லாம் தான் என்றாள் ,வெயில் இப்படி போட்டு தள்ளுது என்றான் ,பரவல கார்ல தானே போறோம் என்றாள் ,சரி போவோம் அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும் என்றான் ,
சொல்லு என்றாள் ,சிமி ஒன்னும் ஏன் ஸ்குள் பிரண்ட் கிடையாது என்றான் .தெரியும் என்றாள் ,எப்படி என்றான் ,டேய் நீ எல்லாம் மும்பைல படிச்சேன்னு சொன்னா யாரு நம்புவா என்று சிரித்தாள் .யே 
சரி சரி அப்புறம் எப்படி பழக்கம் என்றாள் .ஒரு பார்ட்டில அவள காரெக்ட் பண்ண பாத்தேன் அப்ப அவளுக்கும் ராக்கிக்கும் சண்ட அவளும் ஒரு வேகத்துல என் கூட வர ஒத்து கிட்டா அப்புறம் நான் சொன்னேன் நான் எப்பயும் அடுத்தவன் லவ்வரையோ பொண்டாட்டியொவொ அதான் உனக்கு தெரியுமே சொன்னேன் அவ சரின்னு போயிட்டு அடுத்த நாள் வந்து நல்ல வேல நானும் நீயும் பன்னல ஒரு வேல பண்ணி இருந்தா கடைசி வரைக்கும் நான் ராக்கிக்கு தொரகம் பண்ணதா நினைச்சு வருந்தி இருப்பேன் அதுனால நீ எனக்கு இனி மேல் நல்ல பிரண்டுன்னு சொல்லி அவ பழகுனா என்றான் .
இங்க வாடா என்று அவனை இறுக்கி கட்டியணைத்து அவன் உதட்டில் இதமாக முத்தம் கொடுத்தாள் ,இப்ப எதுக்கு இது என்றான் ,ம்ம் உன்னோட அந்த குட் பாலிசிக்கு இப்ப எல்லாம் அவன் அவன் அடுத்தவன் பொண்டாட்டியவெ அப்புறம் இன்னும் நிறைய சரி வேணாம் ஆனா நீ ஒரு வோமனைசரா இருந்தும் இது வரைக்கும் அடுத்தவனுக்கு சொந்தமானவள தொடல பாத்தியா அதாண்டா எனக்கு உன்னய ரொம்ப பிடிச்சு இருக்கு என்று சொல்லி மேலும் இரண்டு செல்ல முத்தங்களை கொடுத்தாள் ,
ஆனா நானும் ஒரு வாட்டி என்று அவன் சொல்லும் முன் அவன் வாயை அடைத்து நான் என்னைக்குமே உனக்கு மட்டும் தான் சொந்தமானவ ஓகேயா என்றாள் ,அவன் அவள் கையில் முத்தம் கொடுக்க சீ என்று அதை அவன் சட்டையில் துடைத்து விட்டாள் .சரி வா போயி சிமிய பாப்போம் என்றாள் .ஓகே 
விக்கியும் சுவாதியும் சிமியை பார்க்க ராக்கி வீட்டிற்கு சென்றார்கள் ,அங்கே ராக்கியின் அம்மா மேரி கதவை திறந்தார் .அவரிடிம் தான் விக்கி முதன் முதலில் அபார்சன் பண்ண சொல்லி சண்ட போட்டோம் என்று எண்ணி கொண்டு விக்கி ஒ மை காட் இப்ப என்ன பண்ண என்றான் மெல்ல ,சுவாதி தயங்கமால் அவர் காலில் விழுந்தால் ,
பின் விக்கியையும் மெல்ல பிடித்து இழுக்க அவனும் காலில் விழுந்தான் ,ஹ என்ன இது எந்திரிங்க 2 பேரும் என்ன வேணும் உங்களுக்கு என்றார் .மேடம் நீங்க அன்னைக்கு சொன்னது தான் உண்மை எங்களால நாங்களே ஏமாத்திக்க முடியல .நாங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்துட்டோம் உண்மைலேயே என்றாள் சுவாதி சிரித்து கொண்டே ,
அது உன் முகத்த பாத்தாலே தெரியுது ஆனா சார் தான் ஒரு மாதிரியே இருக்காரே என்ன விஷயம் என்றார் ,அதலாம் ஒன்னும் இல்ல அன்னைக்கு உங்கள திட்டனத நினைச்சு பயப்படுறான் என்றாள் ,ம்ம் சரி குழந்தை என்ன குழந்தை என்று குழந்தையை வாங்கி பார்க்க ம்ம் குழந்தை பிறந்து உங்கள சேத்து வச்சு இருக்கு ஓகே உள்ள வாங்க என்றார் ,
பின் சிமியை கூப்பிட்டார் ,சிமி வந்தாள் ,ஹ என்ன அதிசியமா இந்த பக்கம் என்று சிரித்து கொண்டே வந்தாள் .சுவாதி பேசும் முன் விக்கி சொன்னான் ,சிமி நான் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல என்றான் ,எதுக்கு என்றாள் ,நீ மட்டும் அன்னைக்கு இன்டெர்வியு போறதுக்கு முன்னால அன்னைக்கு எடுத்த பிக்ஸ என் போனுக்கு அனுப்பாம இருந்து இருந்தினா இந்நேரம் நான் சுவாதி கூட இருந்து இருக்க மாட்டேன் ,கத செடா முடிஞ்சு இருக்கும் சோ வெரி வெரி தேங்க்ஸ் என்றான் ,
ஹ நான் சாதாரணமா தான் அனுப்புனேன் ஹ வெயிட் ரெண்டு பேரும் இப்ப தான் ஒன்னு செந்தின்கான்னா அப்ப எங்க கிட்ட நீங்க ரெண்டு பேரும் என்று சிமி கேட்க நடிச்சாங்க உன் கிட்ட மட்டும் இல்ல எல்லார் கிட்டயும் நடிச்சாங்க என்று டாக்டர் சொல்ல
ஒ அப்ப முழு கதைய சொல்லுங்க என்றாள் ,சுவாதி விக்கியிடம் நீ சொல்லு என்றாள் .விக்கி சுவாதியை சொல்ல சொன்னான் ,மறுபடியும் சுவாதி விக்கியை சொல்ல சொல்ல ஹ புருஷன் நான் சொல்றேன் சொல்லுடி என்றான் ,சுவாதி சிரித்தாள் ,பார்ரா என்று அவர்களை ஆச்சிரியமாக பார்க்க ஓகே சொல்றேன் என்று சுவாதி சொல்ல ஆரம்பித்தாள் ,
ம்ம் உங்களுக்குள்ள இத்தன நடந்து இருக்கா ,ஏண்டா விக்கி பக்கி உனக்கு எல்லாம் இந்த மாதிரி பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் இவங்கள பாத்த உடனே லவ் சொல்லிருக்க கூடாது என்னடா நீ என்றாள் ,ஹே அதலாம் விடு முடிஞ்சு போன கதை இப்பதைக்கு மேடம் தான் எனக்கு எல்லாம் என்று சொல்லி கொண்டே சுவாதியின் தோள்களின் கை போட்டு கொண்டு சிரித்தான் ,சுவாதியும் வெட்கப்பட்டாள் .
ம்ம் எப்படியோ ஒன்னு சேர்ந்துட்டிங்க அது போதும் அப்புறம் என்றாள் சிமி ,அப்புறம் என்ன நாங்க சென்னை போயி செட்டில் ஆக போறோம் என்றான் விக்கி ,என்னது சென்னையா ஏன் இங்க என்ன ஆச்சு என்றாள் சிமி ,ம்ம் மும்பை போதும் வந்து 8 வருஷம் ஆச்சு நான் சுவாதி கூட போயி எங்க ஊர்ல இருந்துக்கிறேன் என்றான் ,
ம்ம் சரி என்று சிமி சொல்லி கொண்டு இருக்கும் போதே ராக்கி வந்தான் ,ஹாய் கைஸ் நான் அப்பாவாக போறேன் ஹ என்றான் ராக்கி ,ஹ இத ஏன் வந்ததும் சொல்லலா என்று சுவாதி சிமியை கட்டி பிடித்து கொண்டு சந்தோசமாக கேட்க விக்கி ராக்கிக்கு கை குலுக்கி கங்க்ராட்ஸ் என்றான் ,
ம்ம் ஒரு 5 மாசம் வயிறு பெருசு ஆனதுக்கு அப்புறம் சொல்லாலாம்ன்னு நினைச்சேன் என்று சொல்லி சிமி சிரித்தாள் .ம்ம் எப்படியோ ஹானி மூனுக்கு போன உடனே உண்டாகிடுச்சே என்றான் விக்கி ,அவன் தொடையில் அடித்து என்ன விக்கி இது கொஞ்சம் கூட இது எல்லாம என்று சுவாதி அவனை கண்டிக்க 
பரவல சுவாதி விக்கி அப்படிதான் ,பட் விக்கி இந்த விசயத்துல ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு மாமியார் எங்கு இருக்கிறார் என்று சிமி பார்த்தாள் ,அவருடைய ரூமிர்கு சென்று இருந்தார் ,ஓகே என்று மெல்ல இருவரிடமும் இந்த விசயத்துல நாங்க உங்க மெத்தட் தான் பாலோ பண்ணோம் என்றாள் ,என்ன அது எங்க மெத்தட் என்று சுவாதி கேட்க அதான் மேரேஜ்க்கு முன்னாடியே நாங்க குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டோம் என்று சிமி சொன்னாள் .
சீ போங்க என்ன இப்படி என்று சுவாதி வெட்கப்பட்டாள் .ஆமாங்க உண்மைலே இது நல்ல மெதட் ஒரு லவ் பண்றவங்க எல்லாரும் இப்படி முதலே பிரக்னட் ஆகிட்டா வீட்ல ஓகே சொல்லி தானே ஆகணும் என்றாள் சிமி .ஆமால பாத்தியா சுவாதி அப்ப நம்ம சமுதாயத்துக்கு ஒரு முன்னோடியாதான் இருக்கோம் என்று விக்கி கிண்டல் அடித்தான் ,
சீ போடா என்று அவனை மீண்டும் அடித்து விட்டு ஆமா டாக்டர் ஜெனிபர் எங்கங்க என்றாள் சிமி ,ஒ ராக்கி சிஸ்டரா என்றாள் .அவங்க ஒரு சர்ஜரி பண்றதுக்கு யு எ ஸ் போயிருக்காங்க என்றாள் .ஓகே அவங்க வந்தா சொல்லிடுங்க என்று சொல்லி விட்டு எழுந்தனர் .நல்ல படியா குழந்தைய பெத்துக்கொங்க குழந்தை நமக்கு எல்லாம் என்று சுவாதி சிமியிடம் சொன்னாள் .இருவரும் அங்கு இருந்து கிளம்பினார்கள் ,
பிறகு அங்கு இருந்து சுவாதியும் விக்கியும் சுவாதியின் பழைய ஹாஸ்டலுக்கு சென்றனர் .விக்கி லேடிஸ் ஹாஸ்டல் என்பதால் வெளியே நின்றான் ,உள்ளே எல்லாரும் சுவாதியின் குழந்தையை தூக்கி தூக்கி கொஞ்சி கொண்டு இருந்தனர் ,ஹ சுவாதி அக்கா அதான் உங்க ஹாஸ்பண்டா என்று ஒருத்தி கேட்டாள் ,ஆமா என்றாள் .செம குயுட்ட்டா இருக்காருக்கா ஒரு வேல நீங்க ஏதும் டிவோர்ஸ் பண்ற மாதிரி இருந்தா முதல எனக்கு சொல்லுங்க என்றாள் ,
ஹ உதை விழுகும் போடி என்றாள் சுவாதி ,அவள விடு நீ நிஜமாவே சென்னை போறியா என்றாள் அஞ்சலி ,ஆமா அக்கா எனக்கும் மாமியார் மாமானார் நாத்தனார் கொழுந்தனார்ன்னு ஒரு நார்மால் ஹாவுஸ் வோயிப்பா இருக்கணும்னு ஆச படுறேன் என்றாள் சுவாதி ,ம்ம் நல்லதுடி ஆனா மாமியா கொடுமை ஏதும் இருந்தா என்ன பண்ணுவ என்றாள் அஞ்சலி ,மாமியா கொடுமை பண்ணனும்னு ஆச படுறேன் எந்நேரம் பாத்தாலும் திட்டி கிட்டு இருக்கணும்னு ஆச படுறேன் அக்கா என்றாள் ,
போடி இவளே சரி அத விடு உங்க ஆள் எப்படி அவன் மூடு மாறதுக்குள்ள சீக்கிரம் மேரேஜ் பண்ணு ஆமா மேரேஜ் எப்ப என்றாள் அஞ்சலி ,தெரியல விக்கி ஒரு குழந்தை அக்கா அவன் இன்னும் விளையாட்டாவே தான் இருக்கான் ,மேரேஜ் பன்னமாயே இருப்போம்னு சொல்றான் என்றாள் சுவாதி ,ஹ இதலாம் அவன் சொன்ன மாதிரி தெரியலையே ஏற்கனவே வேற எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு நீதானே அது என்றாள் அஞ்சலி ,
ஆமா அக்கா மேரேஜ் பண்ண பயமா இருக்கு என்றாள் சுவாதி .எதுக்குடி பயம் என்றாள் அஞ்சலி ,இல்ல அக்கா எங்க குடும்பத்திலே வெகு சிறப்பா நடந்த கல்யாணம் எங்க அப்பா அம்மா கல்யாணம் அது டைவர்ஸ்ல முடிஞ்சுடுச்சு .
அதுனால தான் பயப்புடுறேன் என்றாள்,போடி இவளே எதுக்கு எடுத்தாலும் மூட நம்பிக்கை தானே என்றாள் ,
அதுக்கு இல்ல அக்கா 7 வயசுல இருந்து அப்பா அம்மா இருந்தும் இல்லாம இருக்க கஷ்டம் எனக்கு தான் தெரியும் அதான் என்றாள் .சரி விடு நல்லாபடியா சென்னை போயிட்டா வா ஆனா சீக்கிரம் கல்யாணம் முடிச்சுடு சேப்டிக்காகவாச்சும் எனா உங்க ஆளா நம்ப முடியாது என்றாள் அஞ்சலி .
அவர் அப்படி எல்லாம் இப்ப இல்ல அக்கா என்றாள் ,ம்ம் அவரா மாறிட்டேடி ஹாவுஸ் வோயிப்பா என்று அவளை கிண்டல் அடித்து கொண்டே வா நான் வழக்கம் போல எதுக்கும் உன் ஆள ஒரு மிரட்டு மிரட்டிக்கிறேன் என்று வெளியே வர 
ஹலோ மிஸ்டர் பக்கி என்றாள் அஞ்சலி ,அக்கா விக்கி விக்னேஷ் என்றாள் சுவாதி ,சரிடி இவ வேற என்று அவளிடிம் சொல்லி விட்டு இங்க பாருங்க எங்க பொண்ண சென்னை கூப்பிட்டு போறது ஓகே ஆனா எங்க பொண்ணு கண்ணுல இருந்து கண்ணீர் வந்துச்சு உன் கண்ண நோன்டிருவேன் தெரியும்ல என்றார் ,
நீங்க என்னங்க எப்ப பாத்தாலும் என்னைய சந்தேகமாவே பாக்குறிங்க நான் சுவாதி மேல எவளவு பாசம் வச்சு இருக்கேன்னு இப்ப காட்டுறேன் பாருங்க என்று சொல்லி டக் என்று சுவாதியை பிடித்து அந்த இடத்தில பிரெஞ்ச் கிஸ் கொடுக்க உடனே விலகி கொண்டாள் .சுவாதி .
என்ன விக்கி இது லேடிஸ் ஹாஸ்டல் முன்னாடி போயி என்றாள் ,பின்ன என்ன எப்பயுமே அவங்க என்னைய நம்ப மாட்டிங்கிறாங்க அதான் என்றான் .அவன் நெஞ்சில் செல்லமாக இடித்தாள் .சரி சரி வீட்ல போயி மீதிய வச்சுக்கோங்க என்றாள் அஞ்சலி ,சரிக்கா ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ணதுக்கு எல்லாம் என்று சொல்லி கட்டி பிடித்தாள்,பின் சுவாதி அழுக சரி அழுகாதடி இனி மேல் ஆச்சும் நீ உனக்கு பிடிச்சவன் கூட உனக்கு பிடிச்ச வாழ்க்கையே வாழு போயிட்டு வா என்றாள் ,
நாங்க வரோம் அக்கா என்றாள் சுவாதி ,பாத்து போய்ட்டு வாங்க என்றால்/.
ம்ம் இன்னைக்கு நாள் முழுக்க் ஏதோ காலேஜ் விட்டு பிரிஞ்சு போறது மாதிரிலே இருந்துச்சு என்றாள் சுவாதி .ம்ம் ஆமா என்றான் ,பின் வீடு வர ஓகே சுவாதி நீ வீட்டுக்கு போ நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போயிட்டு வரேன் என்றான் .ஓகே எங்க போற என்றாள் .அஜய் சார் ஆபிஸ்ல லீவ் அவர பாக்க போறேன் என்றான் ,ஓகே சீக்கிரம் வந்துடு அப்புறம் எனக்கும் சுநியர்க்கும் பயமா இருக்கும் என்றான் ,
அரை மணி நேரத்துல வந்துடறேன் என் செல்லங்களா என்று இருவர் நெற்றியிலும் முத்தமிட்டு விட்டு கிளம்பினான் ,

No comments:

Post a Comment