அங்கு வெளியே பிரகாஸ் மேனன் உக்காந்து இருக்க மணி பயந்து கொண்டே உக்காந்து இருந்தான் .ம்ம் உன் பிரண்டு டேவிட் போன் நம்பர் கொடுத்துட்டு அப்படியே உன் செல்ல சுவிச் ஆப் பண்ணிட்டு போயி உன் வேலைய பாரு எதாச்சும் நீ எனக்கு முன்னாடி அவனுக்கு போன் பண்ண வேலைய விட்டு எல்லாம் தூக்க மாட்டேன் உன்னயவே தூக்கிடுவென் .போடா போயி வேலைய பாரு என்று சொல்ல அவன் உள்ளே குனிந்து கொண்டே போனான் .ஹ எதுக்கும் செல்ல கொடுத்துட்டு போ என்று சொல்ல அவனும் செல்லை கொடுத்து விட்டு சென்றான் ,
பிறகு போன் அடித்தார் ,ஹெலோ மிஸ்டர் டேவிட் உங்கள நான் அவசரமா பாக்கணுமே நீங்க என் ஆபிஸ் வரைக்கும் வர முடியுமா என்று சொல்ல அவனும் சுயர் சார் இப்பவே வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான் ,
ஒரு அரை மணி நேரம் கழித்து அவன் வர வாப்பா வா எப்படி இருக்க என்றார் .இருக்கேன் சார் ஏதோ என்றான் ,சரி வாப்பா உன் கிட்ட முக்கியமான குடும்ப விஷயம் பேசணும் என்றார் ,சொல்லுங்க சார் என்றான் ,அத கொஞ்சம் மாடில போயி பேசுவோமா என்றார் ,சரி சார் என்றான் ,இருவரும் மாடிக்கு சென்றார்கள் .
அங்கு பிரகாஸ் அமைதியாகவே நிற்க என்ன சார் சைலண்டா இருக்கீங்க என்றான் ,இல்லப்பா என் பொண்ண நீ சொன்ன மாதிரி தான் அவ 1 வருசமா அடைச்சு வச்சு இருக்கான் ,நான் நேத்து போயி அந்த நாய அடிச்சு துவைசுட்டேன் .என் பொன்னும் என் கூடவெ வந்துட்டா என்று அவர் சொல்ல
டேவிட்க்கு அந்த மாடியில் இருந்து பறப்பது போல் சந்தோசம் ஏற்ப்பட்டது .
அப்புறம் உங்க கிட்ட இன்னொன்னு கேக்கனும்னு நினைச்சேன் நீங்களும் என் பொன்னும் லவ் பண்ணின்கலாமே என்று கேட்டார் ,ஆமா சார் உயிருக்கு உயிரா காதலிச்சோம் சார் என்றான் ,அப்புறம் ஏன் பிரிஞ்சிங்க என்றார் ,
அப்புறம் உங்க கிட்ட இன்னொன்னு கேக்கனும்னு நினைச்சேன் நீங்களும் என் பொன்னும் லவ் பண்ணின்கலாமே என்று கேட்டார் ,ஆமா சார் உயிருக்கு உயிரா காதலிச்சோம் சார் என்றான் ,அப்புறம் ஏன் பிரிஞ்சிங்க என்றார் ,
அத எப்படி சார் நான் என் உங்க கிட்ட சொல்றது அது கொஞ்சம் என்று அவன் இழுக்க பரவல சொல்லுங்க என்றார் ,எல்லாம் இந்த விக்கி பையலாலதான் சார் அவன் ஒரு நாள் அவன் ரூமுக்கு சுவாதிக்கு ஏதோ மயக்க மருந்து கொடுத்து அவன் ரூமுல வச்சு சே சே அதுக்கு மேல என்னால சொல்ல முடியாது சார் நான் அப்ப கூட சுவாதிய லவ் பண்ணேன் சார் ஆனா அந்த விக்கி பையன் தான் நான் தொட்ட சரி விடுங்க சார் எதுக்கு உங்க கிட்டே தப்பா சொல்லி கிட்டு என்றான் .
சரி நடந்தது போகட்டும் என் பொண்ணு இப்பவும் உங்க நினைப்பா இருக்கா நான் இது வரைக்கும் ஒரு அப்பனா இருந்து அவளுக்கு எதுவும் பண்ணல .நீங்க சரின்னு சொன்னா இந்தியால இருக்க என் எல்லா சொத்தையும் கொடுக்குறேன் .என்ன சொல்றிங்க என்றார் ,ம்ம் அப்ப இன்னும் அவ என் நினைப்பா தான் இருக்காளா ஒரு வேல அன்னைக்கு நான் இப்ப வேற பொண்ணோட இருக்கதால தான் அப்படி நடந்து கிட்ட்டாலோ என்று நினைத்து கொண்டு
இல்ல சார் அது வந்து என்று அவன் இழுக்க ப்ளிஸ் ப்ளிஸ் முடியாதுன்னு மட்டும் சொல்லாதிங்க ப்ளிஸ் டேவிட் என்று பிரகாஸ் கெஞ்ச சரி சார் எனக்கு ஓகே சார் அதுக்குன்னு உங்க சொத்துகாகலாம் ஆச பட்டு நான் ஓகே சொன்னேன் நினைக்காதிங்க நான் உங்க பொண்ண இன்னும் காதலிக்கிறேன் எனக்கு அவ மட்டும் போதும் என்றான் ,
என்ன சொன்ன என்றார் ,எனக்கு சொத்து வேணாம் உங்க பொண்ணு காதல் மட்டும் போதும் சார் என்றான் ,பிரகாஸ் ஓங்கி அவனை அடித்தார் ,ஏண்டா நாயே காதல்ன்னா உனக்கு என்னனு தெரியுமாடா காதலன்னா எப்படி இருக்கணும்னு தெரியும்டா என்று கேட்டு கொண்டே அவனை கையை முறுக்கி அடித்து கொண்டு இருந்தார் ,
ஒரு பொண்ண லவ் பண்றவன் எந்த காரணத்துக்காகவும் அவள என்னைக்கும் கை விட்டுட கூடாது ஆனா நீ என்ன பண்ணி இருக்க என் பொண்ணு அனாதைன்னு தெரிஞ்ச உடனே பிரேக் ஆப் பண்ணி இருக்கா என்று ஒரு அடியை போட
சார் உங்க பொண்ணு பொய் சொல்லிருக்கு சார் யே யே பேச கூடாது பேசுன இந்த மாடில இருந்து உன்னைய தள்ளி விட்டுடுவேன் அது சரி எங்க விட்டேன் .
அவன் அமைதியாக இருக்க ம்ம் ஞாபகம் வந்துருச்சு ஏண்டா நீ பொய் சொல்லிட்டு என் பொண்ண நீ பொய் சொல்றான்னு சொன்னாலும் பரவல அவ காதலுக்கு தொரகம் பண்ணா யாரோ கெடுத்துட்டாங்கன்னு சொல்ற என்று ஒரு அடியை போட்டு விட்டு டேய் உண்மையிலே நீ சொன்னது உண்மையா இருந்தா கூட அவள விட்டு போயிருக்க கூடாதுடா ,உண்மையா லவ் பண்றவேன் நம்ம லவ்வர 4 பேர் சேந்து நாசம் பண்ணா கூட உன் உடம்பு தானம்மா அழுக்கு ஆச்சு நீ அழுக்கு ஆகலன்னு சொல்லி அவ கூட இருக்கணும்டா
லவ் பண்ற பொண்ணு நமக்கு கிடைக்காட்டியும் அவ மேல கோப படாம அவ எங்க இருந்தாலும் சந்தோசமா இருக்கணும் நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறவன் தான்டா உண்மையான லவ்வர் உண்மையான ஆம்பிள எல்லாம் .ஆனா நீ என் பொண்ணு உன்னைய விட்டு விலகி போன பிறகும் அவளுக்கு தொல்ல கொடுத்து இருக்க அதுவும் என் மாப்பிளைய என்னைய விட்டே அடிக்க விட்ருக்க
என்று சொல்லி அவனை போட்டு மேலும் அடித்து விட்டு அவர் போயி ஒரு ஒரமாக உக்காந்து அழுதார் .டேய் பட்டி பரதேசி உன்னால என் பொண்ணு கூட சேர கடைசி வாய்ப்பும் போச்சுடா அவளுக்கு பிறந்த குழந்தை ஆனா பொண்ணான்னு கூட தெரியல அது முகத்த கூட பாக்க முடியல ஐயோ இத்தன கோடி சொத்துக்கு நான் அதிபதிய இருந்து என்ன பிரயோசனம் என்று அவர் அழுது கொண்டே இருந்த்தார் ,பிறகு டேவிட் அடியை வாங்கி விட்டு கிளம்பினான் ,டேய் இனி மேல் என் பொண்ணு வாழ்க்கைலேயோ இல்ல என் மாப்பிள வாழ்க்கைலையோ குறுக்க வந்த நானே கொன்னுடுவேன் உன்னயே போடா என்று பிரகாஸ் அவனை அனுப்பி விட்டார் ,
ஆபிஸ் முழுக்க விக்கியை பற்றி தான் பேச்சு ,ஒரு சிலர் அவன் வேண்டும் என்றே பண்ணியாதாக பேசினார்கள் ஒரு சிலர் அவன் தான் அடுத்த பாஸ வர போவாதாக பேசினார்கள் ,
ஏன் அண்ணே இப்படி பண்ண என்றான் வருண் மணியை பார்த்து ,போயிடுடா ரொம்ப டென்சன்ல இருக்கேன் என்றான் மணி ,போறேன்னே ஆனா நிறைய விஷயம் உன் கிட்ட சொல்லிடுறேன் ,விக்கி அண்ணே ஒரு வாரத்துக்கு முன்னாடியே இந்த வேலைய ரிசைன் பண்ண போறதா சொன்னாரு அது மட்டும் இல்லாம அவர் பொசிசன்ல உன்னைய ரிக்மென்ட் பண்ணி இருக்காரு .
நீ பண்ண பல மிஸ்டேக்ஸ் அவர் பொறுப்பு எத்து கிட்டு சிங் கிட்ட பல தடவ திட்டு வாங்கி இருக்காரு ,உன் பேரெண்ட்ஸ் மும்பை வர அவர் காசு போட்டு பிளைட் டிக்கெட் எடுத்து இருக்காரு ஏன் இந்த வேலை உனக்கு கிடைச்சதுக்கு காரணமே அவர் தான் சரி நீ எப்படியும் இரு நான் போயி அவர பாத்துட்டு வரேன் என்று வருண் கிளம்பினான் ,மணி ஏதோ குற்ற உணர்ச்சி ஆட்கொண்டான் .
வருண் கிளம்பி ஆஸ்பத்திரி போக அங்கு இன்னும் விக்கி சுயநினைவு திரும்பவில்லை ,பின் வருண் டாக்டரிடம் விசாரித்து விட்டு கிளம்பினான் .மாலை 3 மணி போல விக்கி எழுந்தான் ,எழுந்த உடனே அவன் சுவாதி சுவாதி என்றான் ,ஒரு நிமிஷம் சார் என்று நர்ஸ் சொல்லி விட்டு வெளியே சென்று வர
அஞ்சலி உள்ளே வந்தாள் .என்ன மிஸ்டர் விக்னேஷ் எப்படி இருக்கீங்க என்றாள் .பரவல மேடம் சுவாதிய எங்க என்றான் ,அவள் ஒரு பெரு மூச்சை விட்டு விட்டு விக்னேஷ் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க சுவாதி அவங்க அப்பா கூட போயிட்டா என்றாள் ,என்னது என்றான் ,ஆமா போயிட்டா என்றாள் ,எங்க போனா என்றான் ,
தெரியல என்றாள் ,எதுக்கு போனா என்றான் ,அஞ்சலி அமைதியாக இருந்தாள் ,ஏன் போனா என்றாள் அப்போதும் அமைதியாக இருந்தாள் .சொல்லுங்க மேடம் ப்ளிஸ் என்றான் ,ஏன்னா அவளுக்கும் ஒரு சொந்தம் வேணும் ஒரு பாதுகாப்பு வேணும் .அத அவங்க அப்பா தரேன்னு சொல்லி கூப்பிட்டு போயிட்டார் ,
அது மட்டும் இல்லாம நீ என்ன அவளுக்கு புருசனா இல்லலே அட்லிஸ்ட் அவ லவ்வரா அப்புறம் ஏன் இத்தன கேள்வி கேக்குற அவளா இருந்த காலத்துல எல்லாம் எப்ப போவ எப்ப போவான்னு அவள தொல்லை பண்ணிட்டு இப்ப ஏன் போனான்னு கேக்குற அவ எதுக்கு போனான்னு எல்லாம் சொல்ல முடியாது உன்னைய இங்க கொண்டு வந்து சேத்துட்டு உன்னோட திங்க்ஸ் எல்லாம் கொடுத்துட்டு அவ அவங்க அப்பா கூட நேத்தே அமெரிக்கா போயிட்டா என்றாள் ,
நீங்க சொல்றத என்னால நம்ப முடியலையே சுவாதிக்கு அவ அப்பா பிடிக்காதே என்றான் ,உனக்கு கூட தான் அவள பிடிக்கலன்னு சொல்லி இத்தன காலம் கூட இருந்த அது மாதிரி தான் ,இத பாரு விக்னேஷ் அவ போயிட்டா இப்ப அவ உன் வீட்ல இல்ல சரியா என்னைய எதுக்கு உக்கார வச்சானா பழகுன தோஷத்துக்கு உன்னோட திங்க்ஸ் உன் கிட்ட கொடுத்துட்டு அப்படியே உனக்கு வேலை வாங்கி தர சொன்னா இந்தா இதுல ஒரு கார்ட் இருக்கு உனக்கு உடம்பு சரியானதுக்கு அப்புறம் பெங்களூர் போயி இந்த கம்பெனில இண்டர்வியுவ் அட்டென் பண்ணு இவளவு தான் சொல்ல சொன்னா நான் வரேன் என்னைய விடுங்க என்று சொல்லி விட்டு போனாள் ,
விக்கி தலையணையில் சாய்ந்து நிஜமாவே போயிட்டாளா இருக்காது நான் இப்பவே போயி வீட்ல பாக்கணும் என்று நினைத்து கொண்டு எழுந்தான் ,சார் நீங்க எந்திரிக்க கூடாது சார் என்று நர்ஸ் சொல்ல அவன் என் வோயிப் பாக்க போகணும் என்றான் ,சார் நாளைக்கு காலைல தான் போக முடியும் அது வரைக்கும் நீங்க ஆஸ்பத்திரள தான் இருக்கணும் ,
ஓகே அட்லிஸ்ட் போன் ஆச்சும் தரின்களா என்றான் ,ஓகே சார் ஆனா இப்ப இல்ல சாயங்கலாம் பேசுங்க என்று சொல்லி விட்டு சென்றாள் ,விக்கி சே இதுக்கு இன்னும் மயக்கத்துலே இருந்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு வருத்தப்பட்டான் .
பிறகு அன்று முழுதும் தனியாக இருந்து விட்டு யாருமே இல்லாமல் அன்று சாய்ங்காலம் அவனே சென்றான் ,பின் அவன் அட்மிட் ஆன அன்று போட்டு இருந்த உடையை அவனுக்கு கொடுத்தார்கள் ,அதை பார்த்தான் ,சட்டை முழுதும் ரத்த கரையாக இருந்தது ,ம்ம் என்ன அடி சுவாதி நான் அடி வாங்குனப்ப எதுவும் சொன்னாளா இல்ல பாத்து கிட்டு மட்டும் இருந்தாளா ஒன்னும் தெரியல முத அடி ஒரு குண்டன் அடிச்சதும் கீழ விழுந்தென் அப்புறம் ஒன்னும் ஞாபகம் இல்ல ,
அது சரி நான் என்ன படத்துல வர ஹீரோவா திரும்ப அடிக்கிறதுக்கு என்று நினைத்து கொண்டு வெளியே சென்று வேகமாக ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றான் ,போனதும் வெளியே சுவாதியின் செருப்பு இல்லை .கதவை திறந்து பார்த்தான் வீடே வெறும் வீடாக இருந்தது .தைரியத்தை வர வைத்து கொண்டு சுவாதி ரூம் கதவை தட்டி பார்த்தான் .பின் கதவை திறக்க அது தெரிந்து கொண்டது .உள்ளே சென்று பார்த்தான் .
உள்ளே சுவாதியும் இல்லை குழந்தையும் இல்லை அது மட்டும் இல்லாமல் சுவாதி சம்பந்த பட்ட எந்த பொருள்களும் இல்லை அதை பார்த்து விட்டு அப்படியே தலையில் கை வைத்து உக்காந்தான் ,பாவி ஏண்டி ஒரு சேலை கூட வைக்காம போன என்று அவன் நினைக்க அவனை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்தது ,
கண்களை துடைத்து கொண்டு நான் அழலால நான் அழ மாட்டேன் .நான் ஏன் அழனும் இத தானே நான் விரும்பெனேன் அந்த மேடம் சொன்ன மாதிரி அவ இருந்த வரைக்கும் நான் அவ கிட்ட என் அன்ப வெளிப்படுத்தவே இல்லை இவளவு ஏன் அவ பிள்ளதாச்சியா இருந்தத்ப்ப கூட எனக்கு ஒல் கிடைக்கலன்னு அழுத ஒல் மாறி தான நானு தெரு பொருக்கி நான் விளங்கா பையன்
பாவம் அந்த பச்ச குழந்தை முகத்த பாத்து ஆச்சும் நான் திருந்தி இருக்க வேண்டாம் .ஐயோ அது என் கண்ணு மூக்கு மாதிரியே அதுக்கும் இருந்துச்சே இவளவு ஏன் என் இடுப்புல இருக்க மாதிரி பெரிய மச்சம் அவன் இடுப்புளையும் இருந்துச்சே அது கூட என் விரல பிடிச்சு என்னைய விட்டு போகாதிங்க அப்பான்னு சொல்லுற மாதிரி பாத்துச்சே ஐயோ உனக்கு வேணும் என்று சொல்லி கொண்டு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கண்ணாடியில் துப்பினான் ,
நாயே நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க என்று சொல்லி கண்ணாடியை கையாலே உடைத்தான் ,ஒரு அரை மணி நேரம் அங்கேயே உக்காந்து அழுது கொண்டு இருந்தான் ,பின் களைப்பில் அதே ரூமில் தூங்கி விட்டான் ,அடுத்த நாள் எழுந்தான் ,
ஹாலுக்கு வந்தான் கிச்சனை பார்த்தன் எப்போதும் இருக்கும் சுவாதி இல்லை ,ம்ம் முடிஞ்சுடுச்சு எல்லாம் முடிஞ்சுடுச்சு நான் கூட ஹாப்பி எண்டிங்கா தான் முடியும்னு நினைச்சேன் இல்ல அதாலம் படத்துல மட்டும் தான் ஹாப்பி எண்டிங் என்று நினைத்து கொண்டு சட்டையை போட்டான் ,பார்க்கிற்கு சென்றான் ,சுவாதியுடன் ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே பஜ்ஜி சாப்பிட்டது ஞாபகம் வந்தது .
எழுந்தான் போயி அவளை நினைத்து கொண்டே மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டான் ,ம்ம் எல்லாம் மாறிடுச்சு அன்னைக்கு மழை நல்லா பெஞ்சுச்சு இப்ப வெயில் பொளக்குது இதான் வாழ்க்கை என்று நினைத்து கொண்டு மீண்டும் சுவாதி வந்து இருப்பாள் என்று நினைத்து கொண்டு வீட்டிற்கு போனான் ,
இல்லை ,சரி அட்லிஸ்ட் போன் ஆச்சும் பண்ணி பாப்போம் என்று நினைத்து கொண்டு போன் செய்தான் சுவிச் ஆப் என்று வந்தது ,ஒரு 2 மூனு தடவை பண்ணி பார்த்து விட்டு செல்லை தூக்கி எறிந்தான் ,சரி இந்நேரம் வரைக்குமா மாத்தாம இருப்பா கண்டிப்பா மாத்தி இருப்பா .
அது சரி என்னைய ஏன் யாருக்குமே பிடிக்க மாட்டிங்குது என்று நினைத்து கொண்டு இருக்கும் போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது .விக்கி வேகமாக சுவாதியாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து திறந்தான் ,அது மணி .உள்ள வரலாமா ,என்றான்
ம்ம் தாராளமா என்றான் விக்கி ,உள்ளே வந்த பின் சாரி மச்சி வீட்ல எதுவும் இல்ல என்றான் ,இட்ஸ் ஓகே என்றான் மணி ,அப்புறம் சொல்லுடா என்றான் விக்கி ,மணி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு ஐ அம் சாரிடா என்று சொல்லி அவனை கட்டி பிடித்து அழுதான் ,
எதுக்குடா சாரி என்றான் விக்கி ,உனக்கு பண்ண தொரகதுக்க்கு என்றான் மணி . நீ என்னடா பண்ண என்றான் ,ஏன் சுவாதி சொல்லலா என்றான் மணி ,இல்ல என்றான் விக்கி ,நான் தாண்டா பாஸ் கிட்ட உன்னைய பத்தி தப்பா சொன்னது நான் வேணும்னு பண்ணல மச்சான் டேவிட் கொஞ்சம் ப்ரயின் வாஸ் பண்ணிட்டான் அதான் ஐ அம் சாரிடா என்று அழுதான் ,
டேய் இருக்கட்டும்டா உன் இடத்துல நான் இருந்தாலும் இத தான் பண்ணி இருப்பேன் சரி அத விடு வள்ளியும் உன் பொன்னும் எப்படி இருக்காங்க என்றான் விக்கி ,இருக்கா இந்த சம்பவத்துக்கு அப்புறம் என் கிட்ட பேசாமையே இருக்கா என்றான் ,சரி விடு நான் சொல்றேன் என்றான் .
சுவாதி எங்கடா என்றான் மணி ,ம்ம் குழந்தய கூப்பிட்டு செக் ஆப்க்கு போயிருக்கா என்றான் ,அதுவும் நல்லது தான் என்னய பாத்தா ரொம்ப டென்சன் ஆகிடுவா என்றான் மணி ,சரி நான் வரேன் உடம்ப பாத்துக்கோ என்று சொல்லி விட்டு கிளம்பினான் ,போகும் போது ஆபிஸ் இனி மேல் வர மாட்டியா என்றான் மணி ,ஆமாடா நான் திரும்ப சென்னை போகலாம்னு பாக்குறேன் என்றான் விக்கி ,
பின் விக்கி மணியை பற்றியோ அவன் பிரகாஸ் கிட்ட சொல்லியதை பற்றியோ யோசிக்க வில்லை ,அவன் யோசனை முழுதும் சுவாதி மீதே இருந்தது ,பிறகு கார் எடுத்து கொண்டு வெளியே சென்றான் ,
சுவாதிக்கு மாங்காய் வாங்கி கொடுத்த இடத்திற்கு போனான் ,என்னடா இது படத்துல வர ஹீரோ மாதிரி அவ போன எடத்துக்கு எல்லாம் போக தோணுது என்று நினைத்து கொண்டு போனான் ,
அப்போது அன்று மாங்காய் விற்ற பாட்டி வந்து தம்பி தம்பி எப்படி இருக்கீங்க என்றார் ,நல்லா இருக்கேன் பாட்டி
குழந்தை பிறந்துருச்சா குழந்தை ஆனா பெண்ணா பொண்டாட்டியும் கூப்பிட்டு வந்து இருக்க கூடாது என்று கேள்வியை அடுக்கி கொண்டே சென்றார் ,குழந்தை ஆம்பிள பிள்ள பாட்டி என்றான் ,நான் தான் அன்னைக்கு உன் பொண்டாட்டி முகத்த பாத்தே சொன்னேள சரி ரெண்டும் நல்லா இருக்குகளா என்றார் ,ம்ம் இருக்குக இந்தாங்க பாட்டி என்று பாட்டியிடம் விக்கி 500 திணிக்க
அட காசு எல்லாம் வேணாம்ப்பா ஒரு நாள் உன் பொண்டட்டியவும் பிள்ளையும் கூப்பிட்டு வாப்பா அது போதும் என்றார் ,கூப்பிட்டு வரேன் பரவல இத வாங்கின்கொங்க என்று சொல்லி கொடுத்து விட்டு சென்றான் ,
வீட்டில் போயி உக்காந்து லேப்பில் ஓகே கண்மணி படம் போட்டு பார்த்தான் ,ம்ம் என் கதை மாதிரி தான் இருக்கு ,இந்த படம் பாத்துட்டு வந்த அன்னைக்கு தான் சுவாதி வீட்டுக்கு வந்தா
ஓகே அல்ரைட் அவ போயி 2 நாள் ஆச்சு இனி வர மாட்டா எல்லாம் கை விட்டு போச்சு இப்ப அவ அமெரிக்கால இருக்களோ எங்க இருக்களோ ஆனா நான் இப்படியே மும்பைல இருந்தா அவ நினைப்பா தான் வரும் .அப்புறம் மணி வள்ளி டேவிட் வருண் இவங்கள எல்லாம் என்னால திரும்ப திரும்ப பொய் சொல்லி சமாளிக்க முடியாது அதுனால சீக்கிரமே நம்மளும் கிளம்புவோம் .தோல்வி என்ன எனக்கு புதுசா சரி இது இன்னோர் லவ் பெயிலியர் பரவல எல்லாம் நான் பண்ண பாவம் என்று நினைத்து கொண்டு விக்கி தன் நண்பனுக்கு போன் செய்தான் ,
மச்சான் நானே கூப்பிடனும் நினைச்சேன் நல்லா வொர்க் சம்பளம் ஆனா என்ன கொச்சில என்றான் ,ம்ம் சுவாதியோட சொந்த மாநிலம் சரி போவோம் என்று நினைத்து கொண்டு சரிடா உடனே பாரு நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு வைத்தான் ,அடுத்த நாள் வெகு விரைவிலே கிளம்பி அவன் ரயில் ஏறி கேரளாவுக்கு சென்றான் ,
கொச்சி சென்று விட்டு குளித்து முடித்து இன்டெர்வியு கிளம்பினான்.ஓகே இதான் வாழ்க்கை இப்படி தான் இனி மேல் இருக்க போகுது ,நானே ராஜா நானே மந்திரி யாரும் வேணாம் என் லைப்க்கு என்று நினைத்து கொண்டு கிளம்பினான் .
பிறகு விக்கி மனதே இல்லமால் இண்டர்வியு சென்றான் ,அவன் டெர்ம் வரும் வரை வெளியே வெயிட் பண்ணி இருந்தான் ,உள்ளே போகும் முன் அவன் போனுக்கு மெசேஜ் வந்தது ,அது சிமி அனுப்பி இருந்தாள் ,அதில் அன்று அவள் இவன் வீட்டில் சுவாதியோடும் குழந்தையோடும் எடுத்த போட்டோகள் இருந்தன ,விக்கி அந்த போட்டோக்களை பார்த்து கொண்டே சுவாதியின் உருவத்தை பார்த்து கொண்டே செல்லை தொட்டு அவள் உருவத்தை தடவினான் ,பின் தன் குழந்தையையும் பார்த்தான் ,ஆத்தாளும் மகனும் கண்ணுல என்ன வச்சு இருக்கிங்கன்னு தெரியல எனக்கு உங்கள இதுக்காகவே பாத்து கிட்டு இருக்கணும் போல இருக்கு ,மறுபடியும் பார்த்தான் ,சுவாதியும் இவனும் நல்ல நெருக்கமாக தோளோடு தோளாக ஒட்டி இருக்கும் போட்டோவை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை செய்தான் ,
மிஸ்டர் விக்னேஷ் மிஸ்டர் விக்னேஷ் என்றாள் ரிச்பன்சிட் .ம்ம் எஸ் என்றான் ,
யு மே கோ என்றாள் .
யு மே கோ என்றாள் .
விக்கி உள்ளே சென்று எல்லா கேள்விகளுக்கும் தன்னுடைய திறமையால் நன்றாகவே பதில் சொன்னான் ,ஓகே மிஸ்டர் விக்னேஷ் இப்ப கொஞ்சம் நார்மாலா உங்க லைப் பத்தி கேக்குறோம் சொல்லுங்க ,
நீங்க இதுக்கு முன்னாடி மும்பைலே பெரிய கம்பெனில இருந்து இருக்கீங்க ஏன் அங்கிருந்து வெளிய வந்திங்க என்றார் ,ம்ம் சில காரனங்களால சார் என்றான் ,ஏன் உங்களுக்கு மும்பை பிடிக்கலையா என்றார் ,
இல்ல சார் எனக்கு மும்பை ரொம்ப பிடிக்கும் என்றான் ,மும்பை உங்களுக்கு எதுக்கு பிடிக்கும் என்றார் ,
இல்ல சார் எனக்கு மும்பை ரொம்ப பிடிக்கும் என்றான் ,மும்பை உங்களுக்கு எதுக்கு பிடிக்கும் என்றார் ,
விக்கிக்கு சுவாதியின் நினைவு மீண்டும் வந்து போனது அவளை முதலில் முதலில் மாலில் பார்த்தது .நிறைய குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தவளை காப்பாற்றியது அதன் பின் போதையில் இருவரும் உடலறுவு கொண்டது ,வயிற்றில் தன் குழந்தை வளருகிறது ரூமில தங்க இடம் கேட்டு மிரட்டனது மார்க்கெட் ,பார்க் ,தன் மேல் எடுத்த வாந்தி ,மணி குழந்தை பண்க்சனில் அவள் கொடுத்த முத்தம் அவளோடு சென்ற படம் மாடியில் அவளோடு பேசியது என்று எல்லாம் ஞாபகம் வந்தது .
கால் மணி நேரம் அமைதியாக இருந்தான் ,மிஸ்டர விக்னேஷ் சொல்லுங்க என்ன அப்படியே இருக்கீங்க என்று அவர்கள் சொல்ல விக்கி நார்மல் ஆகி விட்டு தன் மொபைலை பார்த்தான் ,அதில் விக்கி சுவாதி அவர்களின் குழந்தை படத்தை பார்த்து விட்டு ,
மும்பைல எனக்கு என் காதல் தான் சார் பிடிக்கும் சாரி சார் உங்க நேரத்த வினாக்கினதுக்கு என்று சொல்லி விட்டு வேக வேகமாக வெளியே சென்று ஆட்டோ பிடித்தான் .ஏர்போர்ட் போனான் ,மும்பைக்கு அப்போது பிளைட் எதுவும் இல்லை ,சரி ரயலில் போகலாம் என்று பார்த்த போது அது 2 நாட்கள் கழித்து தான் மும்பை போகும் என்று தெரிந்ததால் ஒரு காரை எடுத்து கொண்டு சென்றான் ,
மும்பையில்
அது எப்படிடி சரியா அவன் வீட்ல இல்லாத்தப்ப வந்து இருக்க என்றாள் அஞ்சலி ,டெய்லி அவனுக்கே தெரியாம இந்த தெரு முனைக்கு ஆட்டோ பிடிச்சு வந்து பாப்பேன் கார் இருக்கா இல்லையானு இன்னைக்கு இல்ல அதான் வந்து என் திங்க்ஸ் எடுத்துட்டு போகாலம்னு வந்தேன் என்றாள் சுவாதி ,எப்படியோ ஹாஸ்டலே இருந்து கிட்டு உங்க அப்பா வீட்ல இருக்கேன்னு சொல்லி அவன நோகடிசுட்ட இப்ப அவன விட்டு மட்டும் இல்லாம இந்த நாட்ட விட்டே போ போற ஏண்டி இப்படி பண்ற என்றாள் அஞ்சலி,
அக்கா இதுக்கு பதில் சொல்லி சொல்லி அலுத்து போச்சு இருந்தாலும் சொல்றேன் விக்கி இப்ப வந்து என் கிட்ட லவ் சொல்ல வேணாம் ,இந்த குழந்தை எனக்கு தாண்டி பிறந்தது எனக்கு குழந்தைய கொடுடின்னு சொன்னா போதும் அவன் கால்ல விழுந்து சந்தோசமா அவனுக்கு அடிமையா கூட இருப்பேன் ,ஆனா அவனுக்கு என்னைய பிடிக்கல ,
பிடிச்சு இருந்தா நாம சொன்னது பொய்யா இருந்தாலும் எங்க அப்பா கிட்ட போயி இந்த 4 நாள்ல என்னைய எங்கன்னு கேட்டு சண்ட போட்ருப்பான் .சரி அக்கா எல்லாம் எடுத்தாச்சு என்று அவள் ரூமில் மீதம் இருந்த அவள் பொருள்களை எடுத்து கொண்டு ஹாலுக்கு வரும் போது விக்கி ரூம் திறந்து இருப்பதை பார்த்த சுவாதி அக்கா ஒரு நிமிஷம் இந்த திங்க்ஸ் பாத்துகோங்க நான் இந்தா வரேன் ,அக்கா நீங்க உள்ள வந்துடாதிங்க என்று சொல்லி விட்டு உள்ளே குழந்தையோடு போனாள் ,குழந்தையை விக்கியின் கட்டிலில் படுக்க வைத்தாள் ,
அங்கு அங்கே அங்கே விக்கியின் உடைகள் சிதறி கிடந்தன ,அதை எல்லாம் எடுத்து பீரோவில் வைக்க பீரோவை திறந்த போது உள்ளே இருந்து துணி பை ஒன்று விழுந்தது ,அது விக்கி அமெரிக்காவில் இருந்து சுவாதிக்கு என்று எடுத்து வந்த உடைகள் ஒவ்வொன்றாக தொட்டு பார்த்தாள் ,அப்போது அந்த வெள்ளை கிறிஸ்துவ திருமண உடையை பார்த்தாள் ,அன்று வள்ளியிடம் சொன்னது ஞாபகம் வந்தது ,எனக்கு சுவாதி அந்த ட்ரெஸ்ல ஏஞ்சல் மாதிரி நடந்து வர நான் அவல பாத்து ரசிக்க அப்புறம் பாதர் யு மே கிஸ் தி ப்ரைட்ன்னு சொல்ல இப்படி தான் கல்யாணம் ஆகணும் என்று விக்கி சொன்னதும் அந்த உடையையும் பார்த்து சிரித்து கொண்டே அழுதாள் .விக்கி நீ என்னைய இவளவு தூரம் லவ் பண்றாடா என்று நினைத்தாள் .
அப்போது விக்கியின் ரத்த கரை படிந்த சட்டை அவள் கண்ணில் பட்டது அங்கு இருக்க அதை எடுத்து பார்த்து அழுதாள் அந்த சட்டைக்கு முத்தம் கொடுத்தாள் ,ஐ அம் சாரிடா நான் வேணாம் உனக்கு நான் இருந்தா இது மாதிரி தான் நடக்கும் உனக்கு நீ ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணாம பண்ணிகிரனும் என்று நினைத்து கொண்டு விக்கியின் வேறு ஒரு சட்டையை எடுத்து தன் பைக்குள் வைத்து கொண்டு குழந்தையை தூக்கினால்.
குழந்தை அது வரை அமைதியாக இருந்தது ,சரியாக அந்த ரூமை விட்டு வெளியேறிய உடனே அழுதது ,இப்ப தாண்டா பால் குடிச்ச என்று திட்டினாள் குழந்தையை ,அது பாலுக்காக அழல அதுக்கு கூட புரிஞ்சு இருக்கு உனக்கு புரியல என்றாள் அஞ்சலி ,எனக்கும் புரியுது வாங்க போகலாம் என்றாள் ,
இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள் .அப்ப நாளைக்கு எத்தன மணிக்குடி பிளைட் என கேட்டாள் அஞ்சலி ,ம்ம் 10 மணிக்கு என்றாள் சுவாதி ,ஐயோ 10 மணிக்கா என்றாள் அஞ்சலி ,ஆமா என்றாள்.ஐயோ என்னால வர முடியாதே நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கே இப்ப என்ன பண்ண என்றாள் ,
பரவல அக்கா ஹாஸ்டல தானே இருக்கோம் உங்கள பாத்துட்டு தான் போ போறேன் என்றாள் , என்னமோ போ பிடிச்ச பிடில அப்படியே இருக்க என்று சொல்லி விட்டும் இருவரும் கிளம்பினர் ,
விக்கி காரில் திருவனந்த புறம் சென்றான் ,அங்கு ரயில் நிலையம் சென்றான் ,பின் ஸ்டேசன் மாஸ்டரிடம் சேட்டா எந்த ரயில் மும்பைக்கு சீக்கிரமா போகும் ஒரு எக்ஸ் பிரஸ் ரயில் இருக்கு அது நாளைக்கு மதியம் 2 இல்லாட்டி 3 மணிக்கு மும்பை போயி சேத்துடும் என்றார் ,ஓகே என்று அதற்கு டிக்கெட் எடுத்து விட்டு ரயில் ஏறினான் ,முதல போன உடனே பிரகாஸ் மேனன ஆபிஸ்ல பாத்து என் பொண்டாட்டிய என் கூட அனுப்பி வையான்னு கேக்கணும் இல்ல அது நல்லா இருக்காது ,
முதல சுவாதிய பாத்து பேசணும் ,எப்படியாச்சும் என் மனசுல இருக்க லவ்வ சொல்லணும் அவ என்னைய பணத்துக்கும் சொத்துக்கும் ஆச பட்டு சொல்றான்னு நினைச்சாலும் பரவல அவ என் கூட வராட்டியும் பரவல என் மனசுல இருக்க லவ்வ சொல்லணும் அவளவு தான் ,
No comments:
Post a Comment