CLOSE

Friday, 19 January 2018

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 3


அன்றைய நாள் மந்தமாகவே ஓடியது விக்கி வீட்டில் இருந்த நேரம் சுவாதி வெளியே சென்று இருந்தாள் .சுவாதி வீட்டிற்கு வரும் நேரம் விக்கி வழக்கம் போல் மாலுக்கு சென்று இருந்தான் .மாலில் எல்லாரும் ஜோடி ஜோடியாக இருப்பதை பார்த்து அவனுக்கு அவன் தனிமை மீது எரிச்சல் தான் வந்தது ,
வீட்டில் இருவரும் வழக்கம் போல் தனி தனி அறையில் உக்காந்து இருந்தனர் .சுவாதியும் விக்கியும் இரண்டு நாட்களாக கணவன் மனைவியாக நடித்தது இருவருக்குமே பிடித்து இருந்தது .குறிப்பாக சுவாதி இன்று விக்கியை உரசி கொண்டு உக்காந்தது விக்கியோடு சேர்ந்தது இருவருமே குழந்தையை பிடித்து இருந்தது .இருவர் மட்டும் தனியாக போட்டோ எடுத்து கொண்டது என்று எல்லாம் பிடித்து இருந்தது .அவளை மீறி அவள் கண்களில் இருந்து கண்ணிற் வந்தாலும் உதட்டில் ஒரு சின்ன சிரிப்பும் இருந்தது
கட்டிலில் படுத்து இருந்த குழந்தை அம்மா சோகத்தில் தான் அழுகிறாள் என்று நினைத்து அது கை கால்களை உதறி கொண்டு அழுக ஐயோ செல்லகுட்டி அம்மா அழுகலடா அம்மா சந்தோசமா தான் இருக்கேன் என்று அவள் கண்களை துடைத்து விட்டு குழந்தையை தூக்கி கொஞ்ச குழந்தை சிரித்தது .குழந்தையின் நாடியில் கொஞ்சி கொண்டு என்ன என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கீங்க என்ன விசயம்
இன்னைக்கு வெளிய போனதாலையா இல்ல சிமி சித்தி கொண்டு வந்த புது ட்ரெசா இல்ல வேற எதுக்கு சிரிக்கிறிங்க ஒ சார் எதுக்கு சார் சிரிக்கிரிங்கன்னு புரிஞ்சு போச்சு உங்க அப்பா உன்னைய தூக்குனதாளையா அதுக்கு தான் சார் சிரிக்கிரின்களா என்று கேட்க குழந்தை மேலும் சிரிக்க பாருடா 10 மாசம் சுமந்தது நானு இன்னைக்கு ஒரு நாள் லைட்டா ஒரு கை மட்டும் தான் பட்டு இருக்கு அதுக்கு இப்படி சிரிக்கிரிங்கலா என்று குழந்தையை கொஞ்சி கொண்டே இருந்தாள் .பின் ஒரு அரை மணி நேரத்தில் குழந்தை தூங்க குழந்தையின் கண்களை பார்த்தாள் .
காலையில் சிமி சொன்னது ஞாபகம் வந்தது அப்படியே அவங்க அப்பா கண்ணு மாதிரியே இருக்கு என்று சொன்னது சுவாதி என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை தூங்கிய குழந்தையின் கண்களின் இமைகளை மெல்ல முத்தமிட்டாள் .
ஆனால் அன்று இரவு அவள் தூங்கவில்லை .என்ன பண்ணலாம் பேசாம எல்லா பொண்ணுக மாதிரி வெட்கத்த விட்டு விக்கி என்னைய எத்துக்காட்டியும் பரவல என் குழந்தைய எத்துக்கொன்னு சொல்லி கெஞ்சுவொமா
ம்ம் அப்படி சொன்னா என்ன சொல்வான்
அய்யே எனக்கு குழந்தைகனாலே அலர்ஜி நீ முதல கிளம்பு உன்னால தான் மணியும் விக்கியும் பேச மாட்டிங்கிரங்கே என்று விக்கி சொல்வது போல் தோன்றியது .
சரி நான் உன்னைய விரும்புறேண்டா நீ இல்லாம என்னால இருக்க முடியாது சொன்னா
எனக்கு லவ்வுனாளும் பிடிக்காது .எத்தன காலத்துக்கு ஒரு புஸ்சிய பக் பண்றது என்று பழைய திமிர் பிடித்த விக்கி அவள் மனகண்ணில் தோன்ற
ஐயோ சுவாதி லூசு வேணாம்டி போதும் அசிங்கபட்ட்து ரிஜெக்சன் ஆனது எல்லாம் ,அவமானப்பட்டது எல்லாம் நம்மோட முடியட்டும் என் குழந்தைக்கு வேணாம் .இப்ப இருந்து அவனுக்கு அப்பா இல்லைன்னு தெரிஞ்சா ஒன்னும் இல்ல ,ஆனா என்னைய மாதிரி 7 வயசுலையோ இல்ல 4 வயசுலையோ பாதிலே அவங்க அப்பா விட்டுட்டு போயிட்டா வேணாம் என்னோட போகட்டும் அசிங்கம் இழப்புகள் எல்லாம் .கனடா போறத கடவுளே வந்தாலும் மாத்த வேண்டாம் என்று சுவாதி முடிவு எடுத்தாளும் அவளால் தூங்க முடியவில்லை .
கிட்டத்தட்ட நள்ளிரவு 1 மணி வரை அவள் தூங்கமால் இருக்க பிறகு குழந்தையை ஒரு தடவை செக் செய்து விட்டு ஹாலுக்கு போயி டிவி ஆன் செய்தாள் அதில் ரோமேடி நவ் என்ற இங்கிலீஷ் சேனலை வைத்து ஒரு இங்கிலீஷ் படத்தை பார்க்க ஆரம்பித்தாள் .அது ஒரு காதல் திரைப்படம் அதில் கதாநாயகனும் கதாநாயகியும் எதற்கு எடுத்தாலும் லிப் லாக் போட சுவாதியால் முடியவில்லை .முதல் இரண்டு மூன்று காட்சிகள் சமாளித்த அவள்
அதன் பின் அரை தூக்கத்தாலும் மன குழப்பத்தாலும் அங்கே நாயகனும் நாயகியம் முத்தமிடும் போது எல்லாம் இவளுக்கு இவளை அறியமால் விக்கி இவள் உதட்டை கவ்வுவது போல் இருக்க எரிச்சலோடு டிவியை அமர்த்தி விட்டு தூங்கினால் .
காலை 10 மணி இருக்கும் விக்கி போன் அடித்தது விக்கி எடுத்தான் .டேய் என்ன பண்ற என்றாள் வள்ளி .தூங்கி கிட்டு இருக்கேன் என்றான் .சரி அவ என்ன பண்றா என்றாள் வள்ளி ,ஏவ என்றான் ,அதாண்டா உன் ஆளு என்றாள் வள்ளி .அவளா குளிச்சு கிட்டு இருக்கா என்றான் .சரி சாயங்காலம் 5 மணிக்கு தான் பண்க்சன்ன்னு சரியா 5 மணிக்கு கிளம்பாதிங்க 4 இல்ல 3 மணிக்கே கிளம்பி வீட்டுக்கு வந்துருங்க என்றாள் .
வள்ளி நாங்க கண்டிப்பா வந்து தான் ஆகணுமா என்றான் விக்கி .ஏண்டா என்றாள் வள்ளி ,இல்ல டேவிட் இருப்பான் அதான் 2 பேருமே யோசிக்கிறோம் என்றான் விக்கி .டேய் நீ ஒன்னும் டேவிட் மகளுக்கு பேர் சூட்டு விழாவுக்கு போகல என் மகளுக்கு பேர் சூட்டு விழாவுக்கு தான் வர போற அதுனால நீங்க 2 பேரும் வராம மட்டும் இருந்த நான் உன் கூட பேசவும் மாட்டேன் ஒரு வாரம் சாப்பிடவும் மாட்டேன் என்றாள் வள்ளி கோபமாக ,
சரி சரி நான் வரேன் என்றுசொல்லி போனை வைத்து விட்டு குளித்து முடித்தான் ,குளித்ததும் பசிக்க வெளியே சென்று கிச்சனை பார்த்தான் ஒன்றும் இல்லை .பின் ஹாலை பார்த்தான் அதில் ரிமோட்டும் சுவாதி நைட் சாப்பிட்ட சில சிப்ஸ்களும் சோபாவில் இருக்க சரி ஒரு வேல நைட்டு ரொம்ப நேரம் தூங்காம இருந்து இருப்பா போல என்று விக்கி நினைத்தான் .
சரி அவள தொந்தரவு பண்ண வேணாம் என்று நினைத்து விட்டு வெளியே சென்று சாப்பிட்டான் ,
சரியாக மதியம் இரண்டு மணி போல குழந்தை அழுக இந்தா எந்திர்ச்ட்டேன்டா தங்கம் என்று குழந்தையை தூக்கி தன் மார்பில் வைத்து பால் கொடுத்தாள் .அவள் காலையில் இருந்து சாப்பிடமாலே குழந்தைஅழும் போதாலம் உறக்க களைப்போடு எழுந்து பால் கொடுத்து விட்டு தூங்கி கொண்டே இருந்தாள் .இப்போது குழந்தை பால் குடிப்பதை வைத்து புரிந்து கொண்டாள் .மணி 2.30 ஆக போகுது இப்பவே வர பால் பாத்தா அடுத்து இவன் அழுகும் போது ரத்தம் தான் வரும் அதுனால இவன் பசிய போக்கிட்டு நம்மளும் எதாச்சும் செஞ்சு சாப்பிடனும் என்று குழந்தைக்கு பசியமர்த்தி தூங்க வைத்து விட்டு கிச்சனுக்கு வந்தாள் .
அங்கு டைனிங் டேபிளில் இரண்டு பார்சல்கள் இருந்தது .எடுத்து மோந்து பார்த்தாள் பிரியாணி வாசனை வந்தது அவளுக்கு நாக்கில் எச்சி உறியது இருந்தாலும் அவளுக்கு ஒரு பயம் இது விக்கி அவனுக்காக வாங்கி வந்ததா இருக்கலாமா நான் எடுத்து சாப்பிட்டால் ஏண்டி சாப்பிட்டே அப்படின்னு திட்டுவானோ என்று நினைத்து எடுக்கமால் இருந்தாள் அதே நேரத்தில் அவளுக்கு கேட்கவும் பயமாக இருந்தது அவள் சரி எதுக்கு வம்பு என்று நம்மாலே எதாச்சும் செய்வோம் என்று பாத்திரத்தை கழுவ ஆரம்பிக்க விக்கி வெளியே வந்தான் .
ஹே சுவாதி அதுல இருக்க பிஷ் பிரியாணி உனக்கு தான் எடுத்து சாப்பிடு என்றான் .சுவாதிக்கு முதலில் fish என்ற வார்த்தையை கேட்டதும் மனம் துள்ளி குதித்தது இரண்டு அந்த பிரியாணி அவளுக்கு தான் என்ற உடன் இன்னும் சந்தோசப்பட்டாள் .இருந்தாலும் தயங்கி கொண்டே இருக்க விக்கி டிவியை ஆன் செய்து சோபாவில் திரும்பி உக்காந்து கொண்டு ஹ எதுவும் திட்டலாம் மாட்டேன் சும்மா எடுத்து சாப்பிடு என்றான் விக்கி ,உடனே அவள் உதட்டில் சின்ன புன்னகையை தவள விட்டு 2 தட்டு எடுத்தாள் .
அந்த தட்டை எடுத்து கொண்டு ஹாலுக்கு போனாள் .வா விக்கி நீயும் சாப்பிடு என்றாள் .வேணாம் நான் ஏற்கனவே சாப்பிட்டு வந்துட்டேன் அது மட்டும் இல்லாம எனக்கு பிஷ்னாலே அலர்ஜி இது வரைக்கும் பிஷ் எப்பயுமே சாப்பிட்டது இல்ல அந்த வாடையே பிடிக்காது அதுனால மட்டன் பிரியாணி சாப்பிட்டு வந்துட்டேன் என்றான் .
ஹ உனக்கு மீன் வாடை பிடிக்காட்டி நான் வேணும்னா உள்ள போயிடுவா என்றாள் .யே நீ உக்காரு நான் உள்ள போயி மணி வள்ளி குழந்தை கிளம்புறேன் நீ வரலே என கேட்டான் .ம்ம் வரேன் என்றாள் .
பின் உள்ள போக போன விக்கியை கூப்பிட்டால் .ஹ விக்கி ஒரு நிமிஷம் என்றாள் .என்ன சொல்லு என்றான் .உனக்கு பிஷ் பிடிக்காது அப்புறம் ஏன் எனக்கு பிஷ் பிரியாணி வாங்குன என்றாள் சுவாதி .ஏன்னா உனக்கு பிடிக்கும்னு தோனுச்சு அதான் வாங்குனேன் என்றான் .சுவாதி சாப்பிட்டு கொண்டே அது எப்படி எனக்கு பிடிக்கும்னு தெரியும் என்று கேட்க அதில் புரை ஏற அவள் இரும ஆரம்பிக்க விக்கி அவனை அறியமால் வேகமாக வந்து அவள் தலையை தட்டி கொடுத்து மெல்ல சாப்பிடுடி பேசாம என்றான் .பின் அவள் இருமி கொண்டே இருக்க உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் .
அதை குடித்து சரி ஆகிய பின் தேங்க்ஸ் சரி இப்ப சொல்லு எப்படி உனக்கு தெரியும் என்றாள் .அவசியம் சொல்லனுமா என்றான் விக்கி .சும்மா சொல்லுடா என்றாள் .நீ மல்லு கேர்ள் ஆச்சே அதான் உனக்கு பிஷ் பிடிக்கும்னு தோனுச்சு வாங்குனேன் என்றான் .
ம்ம் ஓகே நான் மல்லுன்னு நான் சொல்லி தெரியுமா என்றாள் சுவாதி ,விக்கி சிரித்தான் அது வந்து இதையும் சொல்லி தான் ஆகணுமா என்றான் ,ம்ம்ம் சொல்லு என்றாள் .
அது உன்னைய பாத்த உடனே கண்டு பிடிச்சுட்டேன் என்றான் .அப்படியா எப்படி தெரிஞ்சுச்சு என் கலரா என்றாள் .அதுவும் ஒரு காரணம் என்றான் ,யே மும்பைல இருக்கவலுக என்னைய விட கலரா இருக்காளுக இன்னும் சொல்ல போனா என்னைய விட நீ கலரா இருக்க அப்புறம் எப்படி கண்டுபிடிச்ச என்றாள் .ஓகே உன் தலை முடி நல்லா நீளம் அடர்த்தி அப்புறம் உன் அப்புறம் என்று அவன் இழுக்க
அப்புறம் என்னடா என்றால்
உன் புப்ஸ் கொஞ்சம் பெருசு என்று வெளிப்படையாக சொல்ல சுவாதி ஒன்றும் சொல்லமால் சிரிக்க விக்கியும் சிரிக்க ஆரம்பித்தான்
.இருவரும் சிரித்தனர் ,இருவரும் சிரித்து கொண்டே ஒரு முறை ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்து கொண்டனர் .அப்போது இருவரின் கண்களும் சந்தித்து கொள்ள இருவரின் கண்களில் இருக்கும் ஏக்கம் இருவருக்குமே தெரிந்தது ,மெல்ல சிரிப்பை இருவரும் குறைத்தனர் ,இருவரும் அமைதியாக பார்க்க விக்கி மனதில் சுவாதி சிரிக்கிற உன் உதட்ட முத்தம் கொடுக்கணும் போல இருக்குடி என்று மனம் சொல்ல சுவாதியின் மனம் சீக்கிரம் வாடா நீ லவ்வ சொல்ல கூட வேணாம் இப்ப ஒரு கிஸ் கொடு நான் உன் கால்யெ விழுந்துடுறேன் என்று நினைத்தாள் ஆனால் அவர்கள் வெளி மனம் இருவருக்குள்ளும் ஒரு தர்ம சங்கடம் வழக்கம் போல் வர 
சரி நான் போயி ரெடி ஆகிறேன் .நீயும் சாப்பிட்டு கிளம்பு என்று சொல்லி விட்டு விக்கி செல்ல சுவாதி மெல்ல சாப்பிட்டால் விளங்கும் என்று நினைத்தாள் .பின் போனவன் வெளியே வந்தான் சரி முத்தம் கொடுக்க தான் வருவான் என்று சுவாதி நினைக்க வந்தவன் டேபிளில் இருந்த செல் போனை எடுத்து உள்ளே போனான் ,
ஒரு மணி நேரம் கழித்து 
விக்கி சுவாதி ரூம் கதவை தட்டினான் சுவாதி நான் கிளம்பிட்டான் .நீ வரியா என்றான் .இந்தா கிளம்பிட்டேன் ஒரு10 நிமிஷம் என்று உள்ளே இருந்து சத்தம் வர சரி சரி டேக் யுவர் டைம் என்று சொல்லி விட்டு டிவியில் உக்காந்தான் .எதாச்சும் பாட்டு போடுங்கடா பேசிகிட்டே இருக்கீங்க என்று விக்கி சன் மியூசிக் சேனலை வைத்து திட்டி கொண்டு இருந்தான் .அப்போது உள்ளே இருந்து சுவாதி ஒரு ரோஸ் கலர் பட்டு புடவையோடு குழந்தையை தூக்கி கொண்டு வர விக்கி அவளை வைத்த கண் வாங்கமால் பார்த்தான் .
சுவாதியை இத்தனை நாள் சேலையில் பார்த்து இருந்தாலும் கடந்த 10 மாதங்களாக அவள் கர்ப்பமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை .இன்று குழந்தை பெற்ற பிறகு
இன்று தான் அவளை சேலையில் பார்க்கிறான் ,அவள் பட்டு புடவை உடுத்தி ஒற்றை சடை போட்டு வெளியே வந்து போகலாமா விக்கி என்று கேட்க டிவியில் அப்போது சரியாக டிவியில் இருந்து முத தடவ பாத்தேன் உன்ன பேஜாராகி போயி நின்னேன் நான் மிரசல் ஆகிட்டேன் என்று ஐ படத்தில் இருந்து பாடல் ஓட அது விக்கிக்கு அந்த சூல்னிலையில் சரியாக பொருந்தியது ,
போலாமா விக்கி என்று அவள் கேட்க ம்ம் போகலாம் என்று எச்சியை முழுங்கி கொண்டே சொன்னான் .பின்னால் டிவி ஓடி கொண்டே இருக்க டிவிய அமத்து போகாலாம் விக்கி என்றாள் .விக்கி சரி என்று அமத்தி விட்டு அவள் பின்னாலே நடந்தான் .வீட்டை விட்டு வெளியே ஏறி வீட்டு கதவையை சாத்தி விட்டு காருக்குள் உக்கார காரின் பின்னால் சுவாதி உக்கார விக்கி காரின் கண்ணாடியில் இருந்து சுவாதியின் கண்களை பார்க்க அதை அவளும் பார்த்து விட்டாள் .
விக்கி என்றாள் .என்ன என்ன என்று திணறினான் ,கார கொஞ்சம் மெதுவாவே ஒட்டு குழந்தை இருக்கு என்றாள் .ஓகே ஓகே என்றான் .பின் கார் சுவாதி சொன்னார் போல் மெல்ல பயணித்தது
கார் சென்று கொண்டு இருந்தது .விக்கி போகும் போது மார்க்கெட் வழியே போக அப்போது சுவாதி கூப்பிட்டால் .விக்கி ப்ளிஸ் கோபிசுக்காம ஒரு நிமிஷம் வண்டிய நிப்பாட்டுரியா என்றாள் சுவாதி .எதுக்கு என்றான் விக்கி ,அது விசேச வீட்டுக்கு போகும் போது ஒரு பொண்ணு வெறும் தலையோடு போக கூடாது அதான் கொஞ்சம் மல்லிகை பூ வாங்கிட்டு வந்துடுறேன் ப்ளிஸ் கோபிகாத என்றாள் .
அடி பாவி நானே ஏதோ உன் கிட்ட மிஸ் ஆகுதேன்னு நினைச்சேன் இதனா அது என்று நினைத்து கொண்டு நீ இரு நான் போயி வாங்கிட்டு வந்துடுறேன் என்று அவளிடிம் சொல்லி விட்டு காரை நிறுத்தினான் ,இருக்கட்டும் விக்கி நானே வாங்கிட்டு வந்துக்கிறேன் என்றாள் .குழந்தைய வச்சு கிட்டு நீ ஏன் அலையிற நானே வாங்கிட்டு வரேன் என்று சொல்லி விட்டு வேகமாக ஓடினான் ,
பூக்கடைக்கு போன பின் தான் தெரிந்தது அடடே என்ன பூவுன்னு கேக்காம வந்துட்டோமே என்று அவன் தயங்கி கொண்டு நிறக அந்த பூக்கடை காரம்மா என்னப்பா யாருக்கு பூ வாங்கணும் என்று கேட்க விக்கி எதுவும் சொல்லமால் நிற்க அட சும்மா சொல்லுப்பா பொண்டாட்டிக்கா இல்ல அக்கா தங்கசிகளுக்கா இல்ல சாமிக்கா என்று கேட்க அவன் இன்னும் சொல்லமால் இருக்க அட சொல்லுப்பா என்று அந்த அம்மா கத்த லவ்வருக்கு என்றான் விக்கி ,
இத சொல்ல என்ன வெட்கம் அவன் அவன் அயிட்டத்துக்கு பூ வாங்கிட்டு போறான் நீ உன் லவ்வருக்கு தான் வாங்குற இந்தா இந்த ரோசா பூவ கொடு என்று சொல்ல விக்கிக்கும் அந்த ரோசை பார்த்தும் ரொம்ப பிடித்து இருந்தது சுவாதி கட்டி இருக்கிற ரோஸ் கலர் புடவைக்கும் இதான் பொறுத்தமாவும் இருக்கு லவ்ளியாவும் இருக்கும் என்று அந்த பூவை வாங்கி கொண்டான் .சீக்கிரமே அந்த பொண்ண பொண்டாட்டி ஆக்கி மல்லிகை பூவ வாங்கி கொடு என்று அந்த பூக்கார அம்மா சொல்ல விக்கி சிரித்து கொண்டே அந்த அம்மாவிற்கு இன்னும் நிறைய பணம் கொடுத்து விட்டு சென்றான் ,
அந்த பூவை சுவாதிக்கு கொடுக்க ரோசா ? மல்லி இல்ல என்று கேட்க இல்ல அது எப்பயுமே காரெக்ட் பண்ணனும் நினைக்கிற பொண்ணுகளுக்கு நான் இதான் வாங்கி கொடுப்பேனா அதான் பழக்க தோசத்துல வாங்கிட்டேன் நான் வேணும்னா மாத்திட்டு வரவா என்று சமாளித்தான் ,
இல்ல இருக்கட்டும் இதுவும் நல்லா தான் இருக்கு புடவைக்கு மேட்சா என்று சொல்லி விட்டு வாங்க அந்த பூவை தலையில் வைக்கும் போது சுவாதிக்கு கனடா போறதுக்கு முன்னாடி விக்கி கையாள பூ வாங்கி வச்சாச்சு என்று சுவாதி சந்தோசப்பட்டாள் .தன் மிகவும் நேசித்த உமாவிற்கு பிறகு தன்னுடைய இப்போதைய இல்லை எப்போதும் காதலி சுவாதிக்கு பூ வாங்கி கொடுத்தது விக்கிக்கும் சந்தோசமாக இருந்தது .
விக்கி காரை ஓட்டினான் .மணி வீட்டில் நின்ற பிறகு விக்கிக்கு இரண்டு நாளுக்கு முன் மணி சொன்னது ஞாபகம் வர மேலும் டேவிட் ஞாபகமும் வர விக்கி காரில் இருந்து இறங்கமால் இருக்க என்ன விக்கி வரலையா என்றாள் சுவாதி .இல்ல சுவாதி நீ மட்டும் போயிட்டு வா நான் வரல என்றான் .விக்கி வா விக்கி நேத்து நான் அவளவு சொல்லியும் வர மாட்டினே எப்படி விக்கி என்றாள் .இல்ல அது என்னால முடியாது சுவாதி என்றான் 
விக்கி நான் நேத்து உன் பிரண்ட்ஸ் சிமிக்காக நடிக்கல நீ மட்டும் எனக்காக இங்க நடிக்க மாட்ட வா விக்கி நீ ஒன்னும் செய்ய வேணாம் என் கூட வந்தா மட்டும் போதும் என்றாள் சுவாதி .விக்கி யோசித்தான் ,சரி நான் போறேன் ஆனா வள்ளி கேட்டா நான் என்ன சொல்றது என்று சுவாதி கேட்க விக்கி ஒன்றும் சொல்லாமல் இருந்தான் ,சுவாதி சரி நமக்கு நம்ம குழந்தை மட்டும் தான் துணை என்று நினைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் ,
சுவாதி போனதை விக்கி கவனிக்கவில்லை ஆனால் விக்கிக்கு ஒன்று அப்போது தோன்றியது காலையில் வள்ளி இவன் வரவில்லை என்றால் ஓர் வாரம் சாப்பிட மாட்டேன் என்று சொன்னது ஐயோ அவ சொன்னா
சொன்ன மாதிரி நடந்துக்கிருவாலே என்று நினைத்து வேகமாக காரை விட்டு இறங்கினான் .
அதற்குள் சுவாதி வீட்டிற்கே சென்று விட்டாள் .இவ என்ன பதில் சொல்றதுக்குள்ள உள்ள போயிட்டா என்று விக்கி நினைத்து விட்டு காரை லாக் செய்தான் ,
சுவாதி குழந்தையோடு உள்ளே சென்றாள் அங்கு ஒரு மிக பெரிய கூட்டமெ நின்றது .எல்லாம் புருசனும் பொண்டட்டியுமாக குடும்பத்தோடு நிறக சுவாதி யோசித்தாள் ஐயோ அவசரப்பட்டு வந்துட்டோமோ வெறும் குழந்தையோடு மட்டும் வந்தா இந்த ஊர் என்ன பேசும்னு யோசிக்கலையே என்று அவள் யோசித்து கொண்டே நிற்க அவளுக்கு நேரதிரில் அவள் முன்னாள் காதலன் டேவிட் அவன் மனைவியோடு நிற்க சரி இப்பயும் ஒன்னும் கெட்டு போகல அவன் பாக்குறதுக்கு முன்னால நாம போயிடுவோம் என்று மெல்ல அவள் பின்னே காலை வைக்க 
வள்ளி ஓடி வந்தாள் .ஹே வாடி எப்ப வந்த வாங்க மருமகன் சார் என்று குழந்தையை கொஞ்சி விட்டு எங்க பெரிய சார என்று விக்கியை கேட்க அது வந்து அது என்று சுவாதி தயங்க சாரி கார பார்க் பண்ண லேட் ஆகிடுச்சு என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தான் ,
என்ன குடும்பமே ஒரே ரோஸ் கலர்ல வந்து இருக்கீங்க என்று வள்ளி கேட்க அப்போது தான் விக்கிக்கும் புரிந்தது அவனும் ரோஸ் கலர் பிரண்டட் ஷர்ட் போட்டு இருப்பது குழந்தையும் சிமி கொண்டு வந்து இருந்த ரோஸ் உடையை உடுத்தி இருக்க அவர்களுக்கு எப்படி எல்லாரும் ஒரே நிறத்தில் வந்தோம் என்று புரியாமல் இருந்தனர் ,
சும்மா தான் விக்கியோட பிளான் தான் இது எல்லாரும் ஒரே கலர்ல போடணும்னு என்று சுவாதி சொல்ல ம்ம் சரி சரி ஆளு வர வர ரோமேண்டிக்கா தான் மாறிட்டு வரான் உள்ள வாங்க என்று உள்ளே அழைத்து சென்றாள் வள்ளி ,சுவாதி நெருக்கமாக விக்கியோடு நடந்து உள்ளே சென்றாள் .
விக்கியும் சுவாதியும் உள்ளே போகும் போது சரியாக டேவிட்டின் மனைவி பார்த்து விட்டாள் .ஹாய் விக்கி எப்படி இருக்கீங்க எங்க கல்யாணத்துக்கு அப்ப பாத்தது அப்புறம் ஆளே காணோம் என்றாள் .
கொஞ்சம் பிசி அதான் என்று எஸ்கேப் ஆக பார்த்தவனை ஒரு நிமிஷம் பொறுங்க விக்கி இவங்க யாருன்னு அறிமுகபடுத்தி வைக்கலையே என சுவாதியை பார்த்து கேட்க
விக்கி இவங்க இவ என்று திணற சுவாதி தானாக கை கொடுத்து ஹாய் நான் சுவாதி விக்கியோட லவ்வர் என்று கை கொடுத்தாள் .
ஒ விக்கி நீங்க லவ் எல்லாம் பண்றிங்களா என்று சிமி கேட்க விக்கி ஆமாங்க என்று பதற்றத்தோடு சொன்னான் .
வாங்க உக்காருங்க உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க என்றாள் ரெஜினா ,சுவாதி உக்கார போனாள் .ஆனால் விக்கி நழுவ பார்க்க சுவாதி விக்கியின் கைகளை பிடித்து உக்கார வைத்தாள் .அவன் கைகளை நன்கு பற்றி கொண்டாள் விடவில்லை .அவர்கள் இருவரும் டேவிட் ரெஜினாவின் நேர் எதிர் சோபாவில் உக்காந்த்தன்ர் .விக்கிக்கு எழுந்து போக வேண்டும் போல இருந்தது ,ஆனால் டேவிட் இருவரையும் மாறி மாறி ஒரு கோப பார்வை பார்த்து கொண்டு இருந்தான் .
உங்க கத சொல்றதுக்கு முன்னாடி இது யாரு குழந்தை என்றாள் ரெஜினா .இது எங்க சண் என்றாள் சுவாதி .அப்ப ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிட்ட்டேன்களா என்றாள் ரெஜினா ,
இல்ல ரெண்டு பேரும் 2 வருசமா லிவிங் டு கெதரா இருக்கோம் அதுக்கு கிடைச்ச பொக்கிஷம் தான் இவன் என்று சொல்லி கொண்டு குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள் சுவாதி .
என்னது லிவிங் டு கெதரா இதலாம் நான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா இன்னைக்கு உங்க மூலமா தான் பாக்குறேன் எங்க இதலாம் நம்ம கன்ட்ரிக்கு காறேக்ட்டா வருமா என்றாள் ரெஜினா .
எனக்கு நம்ம கன்ட்ரி கல்சர் எல்லாம் தெரியாதுங்க என்னைய பொறுத்த வரைக்கும் நான் விக்கி கூட இருக்கிறதால சந்தோசமா இருக்கேன் .விக்கி என் கூட இருக்காதல சந்தோசமா இருக்கான்.அது மட்டும் இல்லாம மேரேஜ் பண்ணிட்டா ரொம்ப ரிஸ்பன்ஸ்பிளிட்டியோட இருக்க மாதிரி இருக்கணும் ஆனா இப்ப நாங்க லவ்வ்ர்சா இருக்கிறதால அதலாம் கிடையாது சந்தோசமா இருக்கோம் .
உங்க வீட்ல எதுவுமே சொல்லலையா என்றாள் ரெஜினா .
சொன்னங்க அவங்க வீட்ல சொன்னங்க ஏண்டா ஒரு அனாதை பொண்ணு எந்த சாதின்னே தெரியாத பொண்ண கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றன்னு அவங்க வீட்ல திட்டினாங்க ஆனா இவர் தான் அவங்க முன்னாடி என்னைய விட்டு கொடுக்கல இத்தனைக்கும் அவங்க அப்பா அம்மா செத்துடுவேன்னு மிரட்டியும் இவரு அத கண்டுக்கல என்னைய அவ நம்பி 8 வருசமா லவ் பண்றா அவள நான் கை விட மாட்டேன்னு சொல்லி அன்னைக்கு என்னைய ரிஜிஸ்டர் மேரேஜ் பண் ண கூப்பிட்டு போனார் .நான் தான் முதல ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தை பெத்துக்குவோம் அப்புறம் மேரேஜ் பண்ணுவோம்னு சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .
ஏங்க அப்படி சொன்னிங்க என கேட்டாள் ரெஜினா .நான் ஒரு அநாதை என் கல்யாணத்து அப்ப எனக்குன்னு ஒரு சொந்தம் வேணும்னு நினைச்சேன் இப்ப அந்த சொந்தம் கிடைச்சுடுச்சு இனி நாங்க ரெண்டு பேரும் எங்க குழந்தையோட கல்யாண போட்டோல இருப்போம் .யோசிச்சு பாருங்க இன்னும் ஒரு 20 வருஷம் கழிச்சு போட்டோ பாக்கும் போது எங்க மகனும் என் கல்யாணத்து அன்னைக்கு எங்களோட ஒரு குட்டி பையனா இருந்தான் சொல்லும் போதே எவளவு அழகா இருக்கு என்றாள் சுவாதி .
எஸ் ரொம்ப நல்லா இருக்கு என்றாள் ரெஜினா .விக்கி இவள் ஏன் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு நெளிந்து கொண்டு இருந்தான் .எந்திரித்து போகலாம் என்று நினைத்தாள் சுவாதி இறுக்கமாக கையை பிடித்து இருந்தாள் .
உண்மைலே நீங்க ஒரு வித்தியாசமான ஜோடி தாங்க என்றாள் ரெஜினா .இல்ல நாங்களும் சாதராண ஜோடி தான் ஆனா இத ஸ்பெசல் ஆக்கினதுக்கு இவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் என்ன டியர் என்று சொல்லி பட் என்று விக்கியின் கன்னத்தில் ஒரு சின்ன முத்தமிட்டாள் சுவாதி .இதை விக்கி எதிர்பார்க்கவே இல்லை .பின் என்னைய மாதிரி அனாதைய இவரு எத்துகிட்டதுக்கு இவருக்கு நான் வாழ்நாள் புராவும் அடிமை இருக்கலாம் என்று விக்கியை பார்த்து சொல்லி கொண்டே மெல்ல கண்ணீர் விட்டாள் .
அவள் கண்ணீர் விடுவதை பார்த்து வள்ளி ஏதோ பிரச்சினை போல என்று வந்தாள் .என்ன ஆச்சு எதுவும் பிரச்சினையா என்றாள் வள்ளி .இல்ல அவங்க ஆனந்த கண்ணீர் தான் விடுறாங்க ஒன்னும் பிரச்சனை இல்ல என்றால் ரெஜினா .ஓகே ஓகே பங்கசன் ஆரம்பிக்க போகுது வாங்க இத முடிசுக்கிவோம் அப்புறம் நம்ம மட்டும் இருந்து கூட விடிய விடிய பேசலாம் என்று வள்ளி சொன்னாள் .சுவாதி குழந்தையை தோளில் போட்டு கொண்டு விக்கியின் கையை பிடித்து கொண்டே எழுந்து நின்றாள் .
பின் மணி குழந்தைக்கு பேர் வைத்து விட்டு டேவிட்டை கூப்பிட்டு சொல்ல சொன்னான் ,அவனும் குழந்தை காதில் சொல்லி அதன் வாயில் சர்க்கரை தண்ணீர் விட்டான் .பின் அவன் மனைவியும் அதே போல் செய்ய வள்ளி விக்கியை கூப்பிட்டால் அவன் மணியை பார்க்க அவன் பிடிக்காதாது போல் இருக்க அதை புரிந்து கொண்ட விக்கி யே போதும் சிஸ் எல்லாரும் இப்படி பேர் சொல்லி சீனி தண்ணி உத்துனா அப்புறம் உன் குழந்தை இப்பவே சக்கரை நோய் வந்துடும் என்றான் சிரித்து கொண்டே ,அதை கேட்டு மற்றவர்களும் சிரிக்க இருந்தாலும் தம்பி சொல்றதும் சரி தான் நிறைய குழந்தைக்கு சீனி தண்ணி கொடுக்க வேணாம் மத்த படி வந்தவங்களுக்கு சாப்பாடு போடும்மா என்று வள்ளியின் அம்மா சொல்ல எல்லாரும் சாப்பிட்டு கொண்டே ஒருவருக்கு ஒருவர் சாப்பிட ஆரம்பித்தனர் .
சுவாதி சாப்பிடமால் இருப்பதை பார்த்த வள்ளி ஏண்டி இன்னும் சாப்பிடல நல்லா இல்லையா என்றாள் வள்ளி .இல்ல இன்னைக்கு கொஞ்சம் லேட்டா எந்திரிச்சேன் அதான் விக்கி எனக்குன்னு பிஸ் பிரியாணி வாங்கி கொடுத்துட்டான் அதான் சாப்பிட முடியல என்றாள் .ம்ம் என்னால நம்ம விக்கிய நம்பவே முடியலடி என்றாள் .சரி அது இருக்கட்டும் இங்க வா இவனுக்கு பால் கொடுக்கணும் ரூம் எங்க இருக்கு என்றாள் சுவாதி
ஒரு நிமிஷம் என்று அவள் சுவாதியை கூப்பிட்டு போயி அவர்கள் வீட்டின் இன்னொரு பெட் ரூமை காட்டினாள் பின் அங்கே பால் குழந்தைக்கு கொடுத்து விட்டு குழந்தையை அங்கு இருக்கும் கட்டிலில் தூங்க வைத்தாள் .எதையோ யோசித்து கொண்டே இருந்தால் .அந்த ரூமை பார்த்த போது அங்கு ஒரு சன்னல் திறந்த போது தான் தெரிந்தது அந்த சன்னலக்கு நேர் வாஸ் பேசின் இருப்பது பின் விக்கிக்கு மெசேஜ் அனுப்பினால் வா நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் என்று .
விக்கி வந்தான் ,விக்கி வந்தான் ,என்ன சுவாதி என்ன விசயம் என்று கேட்டான் ,இல்ல விக்கி நான் பண்ணதுல உனக்கு கோபம் ஒன்னும் இல்லையே என்றாள் .என்ன சொல்ல நீ வந்து என்று விக்கி சொல்லி கொண்டு இருந்த அதே நேரத்தில் சன்னலுக்கு நேரே முதலில் ரெஜினா வர இதான் சமயம் என்று விக்கியை சட்டையை பிடித்து இழுத்து ஒரே தடவையில் அவன் உதட்டை கவ்வினாள் .விக்கி முதலில் அதை எதிர்பார்க்கவில்லை அதனால் அவன் விடுபட நினைத்தான் ,
ஆனால் சுவாதி அவன் முதுகை இறுக்கமாக பிடிக்க மேலும் அவன் உதட்டை விடமால் கவ்வ அவனால் முடியவில்லை .முதலில் அவள் உதடு அப்போது சாப்பிட்ட மீன் வாடை அவனுக்கு ஒரு மாதிரி குமட்டுவது போல் இருக்க ஆனால் தொடர்ந்து அவள் விடமால் உதட்டை கவ்வ அந்த வாடை மறந்து அவள் மென்மையான உதடுகள் மட்டும் தான் தெரிந்தது .இருவரும் ஒருவருக்கு ஒருவர் விடமால் சப்பி கொண்டு இருந்தனர் .
ரேஜினாவிற்கு பின் டேவிட்ம் வர எங்க என்ன இதுக பொது இடத்துல இப்படி பன்னுதுக என்று அவள் சொல்ல டேவிட் அந்த சன்னல் வழியே பார்க்க அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது .விக்கி சுவாதி அவர்களை கடுப்பேற்ற தான் இப்படி பண்ணுகிறாள் என்று தெரியமால் அவள் உதட்டை காதலோடு சப்பி கொண்டே நினைத்தான் ,போதும்டா கிஸ் அடிச்சது அவ முகத்த பாத்து ஐ லவ் யு சொல்லுடா இன்னைக்கோட இந்த கத முடியட்டும் என்று நினைத்து கொண்டே அவன் மெல்ல அவள் உதடுகளில் இருந்து விலகி அவளை பார்க்க அவள் அவனை பார்க்கமால் உடனே வெளியே கதவை திறந்து வெளியே செல்ல அப்போது தான் பார்த்தான் விக்கி டேவிட் வாஸ் பேசினில் கை கழுவி விட்டு போவதை அடி பாவி இதான் உன் பிளானா உன் னைய என்னமோன்னு நினைச்சேன் கடைசில நீயும் மத்த பொண்ணுக மாதிரி தாங்கிறத நிருபிசுட்டியேடி இன்னைக்கு வீட்டுக்கு வாடி உன்னைய கொள்றேன் என்று நினைத்து கொண்டே ரூமை விட்டு வெளியேறினான் .
வெளியேறும் போது உதட்டில் எதுவும் ஒட்டி இருக்கிறதா என்று உதட்டை துடைத்து கொண்டே வெளியேற அதை மணி பார்த்து விட்டு ஒரு மாதிரி விக்கியை கேவலாமாக முறைத்தான் .பின்னர் விக்கி வெளியேறி சேரில் உக்கார அங்கு வந்த சிறுவர்கள் எல்லாம் ஏதாவது பாட ஆட என்று பார்பாம் பண்ண பெற்றோர்கள் எல்லாம் உக்காந்தனர் விக்கி ஒரு ஒரமாக கடைசியில் தனியாக உக்காந்து இருந்தான் .ஒரு பத்து நொடியில் சுவாதியும் கையில் குழந்தையோடு வந்து உக்காந்தாள் .
அதன் பின் எல்லாரும் குழந்தைகள் பண்ணுவதை ரசித்து ரசித்து சிரித்து கொண்டு இருந்தனர் ,விக்கி அதை கண்டு கொள்ளவில்லை அவன் மொபைல் நொண்டி கொண்டு இருந்தான் .பின் சில நொடிகளில் சுவாதி அவன் தோளில் சாய்ந்தாள் .பாருடா இப்ப தான் டேவிட் கண்ணுல படுற மாதிரி இல்லையே அப்புறம் ஏன் ஆக்டிங் கொடுக்குறா இவள என்று நினைத்து கொண்டு அவளை எழுப்பலாம் என்று பார்க்க அவள் உண்மைலே தூங்குவது தெரிய அவளை அப்படியே விட்டு விட்டான் ,
சிறிது நேரம் அமைதியாக இருந்தான் ,திரும்ப திரும்ப அவளையே பார்த்தான் .அவள் கையில் இருப்பது குழந்தையா இல்லை இவள் குழந்தையா என்று அவனுக்கு தோன்றியது ,ஆனால் அந்த தூக்கத்திலும் தன் மகனை இறுக்கமாக பிடித்து இருந்தாள் சுவாதி ,
விக்கிக்கு ஏதோ ஒரு உணர்வு அவள் தோளில் சாய்ந்து உறங்கும் போது தோன்றியது ,அந்த உணர்வு ஒரு இருபது வினாடிகளுக்கு முன்னாடி இவளே வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்த போது ஏற்ப்பட்ட உணர்வை விட நன்றாக இருந்தது ,முத்தம் அவன் உடலுக்கு மட்டும் தான் சுகத்தை தந்தது .ஆனால் இதுவோ அவன் மனதிற்கு சுகம் தந்தது ,நம் தோளில் சாயவும் ஒரு ஜீவன் இருக்கிறது என்று எண்ணி சந்தோசப்பட்டான் .
பங்கசன் எல்லாம் முடிந்து எல்லாம் ஒருவர் ஒருவராக வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்தனர் .விக்கி சுவாதியை எழுப்ப பிடிக்கமால் அப்படியே உக்காந்து மனதளவில் ரசித்து கொண்டு இருந்தான் ,எல்லாரும் இடத்தை காலி செய்து விட்டார்கள் .ஏன் இது வரை மணியோடும் வள்ளியோடும் பேசி கொண்டு இருந்த டேவிட்ம் அவன் மனைவியும் கூட கிளம்பி கொண்டு இருந்தார்கள் ,
ரெஜினா போகும் போது மெல்ல என்ன இப்படி தூங்குரங்க என்றாள் .நைட் முழுக்க பையன் அழுதான் இவ நேத்து நைட் தூங்கல அதான் இப்படி தூங்குரா என்றான் ,சரி தூங்கட்டும் அவங்கள கேட்டதா சொல்லுங்க ஒரு நாள் ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று அவள் சொல்லி விட்டு போக டேவிட்ம் மனைவி இருப்பதால் பேருக்கு விக்கியை பார்த்து நான் வரேண்டா என்று சொல்லி விட்டு சென்றான் ,
வள்ளி வந்தாள் .ஹ எளுப்பிடாத என்னோட ரெண்டு செல்லங்கலும் தூங்கட்டும் பாவம் என்றான் .பாருடா செல்லங்கலாம் ம்ம் சரி தூங்கட்டும் அதுக்குன்னு இப்படியேவா நான் வேணும்னா பெட் ரெடி பண்ணி தரேன் அதுல தூங்கிட்டு காலைல எந்திரிச்சு 2 பேரும் சாரி 3 பேரும் போங்க என்றாள் .ஒன்னும் வேணாம் இவ இப்படி தூங்குரது தான் எனக்கு பிடிச்சு இருக்கு என்று தோளில் சாய்ந்து தூங்கி கொண்டு இருந்தவள் தலையில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தான் .
உடனே அவள் எழுந்து விட்டாள் ,தூக்க கலக்கத்தோடு விக்கி மணி என்ன என்றாள் .ம்ம் மணி அடுத்த நாள் காலைல 11 மணி ஏண்டி என்ன ஆச்சு சாயங்கலாம் 6.30க்கு எல்லாம் இப்படி தூங்குர என்று வள்ளி கேட்டாள் .நைட்டு இவன் அழுது கிட்டே இருந்தான் அதான் சரியா நைட்டு தூங்கல என்றாள் .சரி இப்ப என்னடி தூங்கிட்டு காலைல எந்திருச்சு போடி என்றாள் வள்ளி ,ஐயோ வீட்ட்ல எல்லாம் அப்படியே இருக்குடி போயி பாத்திரம் விளக்கனும் இவரோட துனிகள துவைக்கணும் நிறைய வேலை இருக்கு நான் கிளம்பனும் என்றாள் .
சரிடி பாத்து போயிட்டு வா என்று சொல்லி விட்டு மருமகனே போயிட்டு வாங்க என்று குழந்தையையும் கொஞ்ச சரிடி அம்மா போனதுக்கு அப்புறம் ஒரு நாள் வரேன் நிறைய பேசணும் என்றாள் வள்ளி ,பின் விக்கியும் சொல்லி கொண்டு இருவரும் வெளியே சென்றார்கள் .
காரில் ஏறும் முன் சுவாதி ஐ அம் சாரி விக்கி வேணும்னே டேவிட் கடுப்பேத்த உன்னைய உள்ள கிஸ் அடிச்சதுக்கு நீ வேணும்னா வழக்கம் போல என்னைய திட்டிக்கோ என்று அவள் இன்னும் உறக்க கலக்கம் மாறமால் சொல்ல நீ எப்பயுமே குழந்தை தாண்டி உன்னைய ஏன் நான் திட்டனும் என்று நினைத்து கொண்டு ம்ம் நான் உன்னைய கிஸ் அடிச்சது கூட தப்புன்னு சொல்ல மாட்டேன் 
அப்புறம் என்றாள் சுவாதி ,உன் உதட்டுல மீன் வாடை அடிச்சது அதுக்கு தான் உன்னைய இப்ப திட்ட போறேன் என்று விக்கி சிரித்து கொண்டு சொல்ல சுவாதியும் சிரித்து கொண்டே உள்ளே ஏறினாள் .பின் வழக்கம் போல் காரை எடுக்கும் முன் கண்ணாடியில் சுவாதியின் கண்களை பார்த்து விட்டு ரேடியோ ஆன் செய்தான் 
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே என்று பாடல் ஓட விக்கி ஒரு முறை சுவாதியையும் கண்ணாடியில் பார்த்து கொண்டு ரசித்து கொண்டே ஓட்டினான்

No comments:

Post a Comment