பாடல் முடிந்ததும் ஏப் எமில் நீங்க கேட்டுக்கிட்டு இருக்கிறது மும்பை தமிழ் ஏப் எம் இது உங்க பேவரைட் ப்ரோக்ராம் காதல் காதல் நான் உங்க பேவரைட் ஆர் ஜே ப்ரியா என்று ஓடியது .ம்ம் எல்லாம் மாறிடுச்சு என்ன என்று எங்கையோ பார்த்து கொண்டு வருத்ததோடு சொல்லி கொண்டு இருந்தால் அது கார் ஒட்டி கொண்டு இருந்த விக்கிக்கு கேட்டது
அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது அடடே இது சுவாதி முன்னாடி வேலை பார்த்த ஏப் எம் அப்புறம் இது அவளோட ப்ரோக்ராம் அதான் அவ அப்படி ஆப்செட் ஆகிருக்கா என்று புரிந்து கொண்டு அவன் ரேடியோவை அமர்த்த ஏன் விக்கி ரேடியோவ அமத்துன என்றாள் .இல்ல சும்மா தான் என்றான் விக்கி ,ஒ நான் பேசுன ப்ரோக்ராம்ல இன்னொருத்தி பேசுறா அதுனால நான் ஆப்செட் ஆயிடுவேன்னு மாத்தினியா என்றாள் சுவாதி .
சும்மா போடு விக்கி என்று சொன்னதும் அவன் மெல்ல ரேடியோ ட்யூன் பண்ணி கொண்டு இருக்க நான் வாழ வேண்டிய வாழ்க்கையே இன்னொருத்தி வாழுறா இதுல நான் பேச வேண்டிய இடத்துல இன்னொருத்தி பேசுனா என்ன ஆகிட போகுது என்று அவள் இந்த முறை மெல்ல புலம்பியது விக்கியின் காதில் விழ அது அவன் மனதில் இடி விழுந்தது போல் இருந்தது
அவளை மெல்ல கண்ணாடி வழி பார்க்க அவள் கண்களில் கண்ணீர் வருவது போல் இருந்தது .அடி பாவி அப்ப இன்னும் நீ டேவிட் மறக்கலையா நீ சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று விக்கி மனதிற்குள்ளே நினைத்து கொண்டு கடுப்போடு காரை வேகமாக ஓட்டினான் .பின் காரை வீட்டில் அடைந்ததும் அவள் இரங்கி செல்ல விக்கிக்கு என்னவோ போல் இருந்தது ,அதனால் காரிலே இருந்தான் ,நீ வரல என்றாள் .இல்ல நீ போ நான் தம் அடிச்சுட்டு வரேன் என்றான் .ஓகே என்று பாதி தூரம் வரை சென்றவள் திரும்பி வந்து ஹே விக்கி என்றாள் .
ம்ம்
தேங்க்ஸ் அந்த இடத்துல என்னைய தனியா விட்டு போகாம இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் என்றாள் .அடி போடி வீட்டுக்கு வந்ததும் நான் உன் கிட்ட ஐ லவ் யு வே சொல்லலாம்ன்னு நினைச்சேன் நீ என்னனா வர வழிளே அத புதைச்சுட்டியேடி என்று நினைத்து கொண்டு ஓகே என்றான் .அவள் போன பின்பு விக்கிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது .
ஐயோ ரொம்ப பீல் பண்ணி சொன்னாலே நான் வாழ வேண்டிய வாழ்க்கைய இன்னொருத்தி வாழுரான்ன்னு அது டேவிட் பொண்டாட்டிய தான அப்படினா இவளுக்கு என் மேல லவ் இல்ல டேவிட் மறக்க நான் ஒரு கருவி ஐயோ விக்கி இப்ப என்னடா பண்ண போற ஐயோ எல்லாம் போச்சே .சுவாதியும் அவன மறக்கல போலையே இனி அதுக ஒன்னு சேர்ந்தாலும் சேருங்க நான் ஒன்னு சேர முடியாது போல ஐயோ நேத்து கடவுள திட்டனதுக்கு இன்னைக்கும் அனுபிவிக்கேரேனே
எல்லாம் இன்னைக்கு நல்லா தானே போச்சு அப்புறம் ஏன் இப்படி கடைசி ஓவர்ல தோத்த பங்களாதேஸ் ஆகிட்ட என்னைய ஐயோ அப்ப சுவாதி என்னைய லவ் பண்ணலையா இப்ப என்ன பண்ண நான் எனக்கு எங்கயாச்சும் போயி முட்டிக்கலாம் போல இருக்கு ஐயோ
விக்கி அதன் பின் அங்கேயே நின்று பல சிகெரட்களை ஊதி தள்ளினான் .அவனுக்கு வீட்டுக்குள் போகவே என்னவோ போல் இருந்தது .
ஆனால் சுவாதி உண்மைல் அந்த நொடியில் ஏதோ ஒரு பழைய ஞாபகத்தில் சொன்னாலே தவிர அவள் அதை வீட்டிற்குள் நுழைந்த உடன் மறந்து விட்டாள் .உள்ளே சென்று தன் குழந்தையின் உடையை கழட்டும் போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது இன்னைக்கு என்ன குடும்பமே ஒரே கலர்ல வந்து இருக்கீங்க என்று வள்ளி சொன்னது
அத்தை சொன்னது சரி தான என் செல்லம் இன்னைக்கு நீயி நானு அப்புறம் அப்புறம் என்று கொஞ்சம் திணறி விட்டு அப்பா எல்லாம் ஒரே கலர்ல போயிருந்தோம்ல செல்ல குட்டி என்று குழந்தையை கொஞ்ச அது சிரித்தது ,பாருடா சிரிக்கறத என்று குழந்தையை சிறிது நேரம் கொஞ்சி விட்டு அதை தட்டி கொடுத்து கொண்டே அன்று நடந்ததை ஓட விட்டாள் .எப்படியோ டேவிட் என்னைய அசிங்கமா திட்டனதுக்கு பழி வாங்கியாச்சு
அதே நேரத்துல எனக்கு விக்கி தோள்ல இன்னும் சாஞ்சு தூங்கனும் போல இருக்கே எனக்கு முத்தம் கூட வேணாம் ஆனா விக்கி கிட்ட இந்த 2 நாளா நெருக்கமா உக்காந்து அவன் மூச்சு காத்து அவன் வாசனை அவனோட தேகம் இதலாம் பீல் பண்ற மாதிரி எப்பவும் அவன் கூடவெ இருக்கணும்
ஏண்டா என்னால முடியலடா ப்ளிஸ் ப்ளிஸ் என்னைய போக விட்டுடாதடா விக்கி எனக்கு உன் கூடவெ இருக்கணும் போல இருக்குடா என்று அவனை நினைத்து கொண்டே தூங்கி விட்டாள் .
ஆனால் விக்கியால் தூங்க முடியவில்லை மறுபடியும் காரை எடுத்து கொண்டு சுற்றினான் ,காரில் உன் குத்தமா என் குத்தமா என்று பாடல் ஒலிக்க விக்கி காரை ஒரு இடத்தில் நிப்பாட்டி கல்லை எடுத்து அந்த ரேடியோவை ஓடைத்தான் .எல்லாம் உன்னால வந்தது இப்ப பாரு என்னால நிம்மதியா தூங்க முடியல என்று அதை போட்டு ஓடைக்க முயற்சி செய்து கொண்டே அதில் தூங்கினான் ,
அது சரி உன்னால தான் அவ மனசுல இருக்கிறதும் தெரிஞ்சுச்சு சோ தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று சொல்லி கொண்டே பயங்கரமாக அழுதான் ,
பாரில் மணியும் விக்கியும்
மச்சி போதும்டா எதுக்கு இப்படி குடிக்கிற என்றான் மணி ,
எல்லாம் உன்னால தாண்டா எதுக்குடா அந்த கழுதைகள உன் பண்க்சனுக்கு கூப்பிட்ட என்று கத்தினான் டேவிட் ,
சாரிடா வள்ளி தான் கூப்பிட சொன்ன என்றான் மணி .
ஐயோ அதுக அலும்பு தாங்கலடா ஒரே கலர்ல குடும்பமே ட்ரெஸ் போட்டு வந்து இருக்கிறதும் அவ என்னமோ விக்கி தான் அவளுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரியும் ரெண்டு பேரும் கன்னத்திலையும் உதட்டுளையும் மாறி மாறி உங்க ரூம்ல கிஸ் அடிக்கிறதும் முடியலடா சாமி என்றான் டேவிட் ,
கிஸ் அடிச்சதுகளா எப்ப என்றான் மணி ,
ஆமாடா அதுக எந்நேரம் அடிச்சதுகன்னு டைம் நோட் பண்றது தான் என் வேலை பாரு என்றான் டேவிட் ,
சாரிடா என்றான் மணி ,ம்ம் .மச்சி எனக்கு ஒரு டவுட்டா என்றான் மணி ,சொல்றா என்றான் டேவிட் ,அந்த குழந்தைக்கும் உனக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா என்றான் மணி ,
எது சுவாதி குழந்தை என் குழந்தைன்னு சொல்றியா என்றான் டேவிட் ,ஆமடா ஒரு வேல 2 பேரும் இன்னும் தொடர்புல இருக்கீங்க ஆனா உனக்கு கல்யாணம் ஆனதால விக்கி கூட சேந்து நடிக்கிரிங்கலோன்னு சந்தேகம் என்றான் மணி ,
முண்டம் முண்டம் நான் தண்ணி அடிக்கிறதே அந்த குழந்தை அப்படியே அது விக்கிய உரிச்சு எடுத்து வச்சுருக்கேன்னு தான் அதுவும் அந்த கண்ணு இருக்கே அப்படியே விக்கி கண்ணு என்றான் டேவிட் ,
அப்ப அது என்று மணி இழுக்க அது என் குழந்தை இல்ல நான் சுவாதி கூட செக்ஸ் வச்சு 2 வருஷம் ஆச்சு .ஒழுங்கா அவ கூட இருந்த காலத்துலே அவளுக்கு குழந்தைய இந்த விக்கி மாதிரி கொடுத்து இருக்கணும் கொடுத்து இருந்தா இந்நேரம் என் ரேஞ்சே வேறடா என்றான் டேவிட் ,
சரி விடுடா உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அத பாரு ,விக்கியும் சுவாதியையும் விட்ரு அதுக எப்படியும் போகுதுக நமக்கு என்ன என்றான் மணி ,
அப்படி எல்லாம் விட முடியாது மச்சி அதுக சந்தொசமாவா இருக்கு இரு நான் இன்னும் 3 நாள்ல என்ன பண்ண போறேன்னு என்றான் டேவிட்
அடுத்த நாள்
ம்ம் அப்புறம் எப்படி போகுது உன் ஆள் குழந்தைய எதுவும் தூக்குனானா என்றாள் அஞ்சலி .ஹும் எட்டி கூட பாக்கல என்றாள் சுவாதி ,என்னடி சொல்ற இந்த காலத்துல இப்படியும் ஆம்பிளைக இருக்காங்களா என்றாள் அஞ்சலி ,எல்லா காலத்துலயும் இருக்காங்கே ஏன் என்னோட அப்பா இல்ல இதே மாதிரி இது ஒரு வேல பரம்பரை சாபம் போல நான் அப்பா இல்லாம இருந்தேன் இனி என் மகனும் அப்படி இருக்கணும்ன்னு இருந்தா அத யாரால மாத்த முடியும் என்றாள் சுவாதி .
நீ ஏதும் அவன்கிட்ட பேசி பாத்தியா என்றால் அஞ்சலி ,ம்ம் நல்லா பேசுனோம் ஒரு பிரண்டா ரூம் மென்ட்சா லவ்வர்சா இல்ல என்றாள் சுவாதி .நீ ஒழுங்கா பேசிருக்க மாட்டடி என்றாள் அஞ்சலி ,எனக்கு பேச தான் வரல ஆனா நான் நேத்து அவன இழுத்து பிடிச்சு லிப் கிசே அடிச்சேன் ஒரு பொண்ணு இதுக்கு மேலயும் எப்படி சொல்றதுன்னு தெரியல ஒரு வேலை இதுக்கு மேலயும் பண்ணா நான் சரியான இது எடுத்து தெரியுறேன் தான் சொல்வான் .லவ் இருக்குன்னு எல்லாம் சொல்ல மாட்டான் என்றாள் சுவாதி .
ஹ இதே நல்லா இருக்குடி பேசாம இதே பண்ணு என்றாள் அஞ்சலி ,எது அவன் முன்னாடி போயி அப்படி இப்படின்னு எல்லாததையும் காட்டி செடுய்ஸ் பண்ண சொல்றிங்களா என்றாள் சுவாதி .ம்ம் பண்ணு நல்ல ஐடியா தான் என்றாள் அஞ்சலி ,அப்படி பண்ணா 2 பேருக்குளையும் மறுபடியும் மேட்டர் நடக்கும் மறுபடியும் நான் கர்ப்ப்மாவேன் ஆனா அவன் ஒன்னும் சொல்ல மாட்டான் வழக்கம் போல நான் சனி கிழமை பாருக்கு போறேன் பாப்க்கு போறேன் சொல்லிட்டு இன்னொருத்தி கூட வந்து என்னைய திரி சம் வேணா பண்ணுவான் .
போதும் அக்கா எனக்கும் குடும்ப லைப்க்கும் செட்டே ஆகாது போல இப்பதைக்கு என்னோட மகன வளக்கிறது மட்டும் தான் என்னோட வாழ்க்கை என்றாள் சுவாதி ,என்னடி இப்படி பண்றிங்க 2 பேரும் என்று அஞ்சலி யோசித்து விட்டு ஓகே இன்னொரு சூப்பர் ஐடியா என்றாள் அஞ்சலி ,
அக்கா உங்க ஐடியாவும் வேணாம் விக்கியும் வேணாம் ஏற்கனவே நீங்க சொன்ன ஐடியால தான் இங்க வந்து இவன் மேல லவ்வுல விழுந்தேன் இல்லாட்டி நானா எதாச்சும் ஒரு வீட்ல இவன பெத்து போட்ருப்பேன் என்றாள் சுவாதி ,அட நான் சொல்றத கேளுடி பிடிச்சு இருந்தா பண்ணு இல்லாட்டி வேணாம் என்று தன் ஐடியாவை சொன்னாள் அஞ்சலி .
அக்கா இது ரொம்ப கேவலமா இருக்கு என்றாள் சுவாதி .யே சில நேரத்துல இது மாதிரி நடந்தா தான் நாம உண்மைய தெரிஞ்சுக்க முடியும் என்றாள் அஞ்சலி ,அக்கா இருந்தாலும் இத எப்படி சொல்றது என்றாள் சுவாதி .ஒன்னு இப்படி சொல்லு இல்ல லவ் பண்றேன்னு வெளிப்படையா போட்டு உடை என்றாள் அஞ்சலி ,சுவாதி என்ன பண்ணுவது என்று தெரியமால் யோசித்து கொண்டு இருந்ததால்
விக்கி வருண் ரூம்மிற்கு சென்று இருந்தான் ,
என்ன பாஸ் அமெரிக்கா போயிட்டு 4 நாள் கழிச்சு தான் என் ஞாபகம் வந்துச்சா என்றான் வருண் ,டேய் அப்படி எல்லாம் இல்லடா கொஞ்சம் டயர்ட் அதான் என்றான் விக்கி ,அப்புறம் பாஸ் அமெரிக்கால நல்லா என்ஜாய் பண்ணிங்களா என்றான் ,ம்ம் சூப்பரா என்ஜாய் பண்ணேன் என்றான் விக்கி ,போங்க பாஸ் உங்க மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீங்க என்ஜாய் பண்ண லட்சனம் என்ன பாஸ் ஆச்சு உங்களுக்கு சமிப காலமாவே ஒரு மாதிரி இருக்கீங்க பப்க்கு எல்லாம் வர மாட்டிங்கிரிங்க என்றான் வருண் ,
என்ன பாஸ் அமெரிக்கா போயிட்டு 4 நாள் கழிச்சு தான் என் ஞாபகம் வந்துச்சா என்றான் வருண் ,டேய் அப்படி எல்லாம் இல்லடா கொஞ்சம் டயர்ட் அதான் என்றான் விக்கி ,அப்புறம் பாஸ் அமெரிக்கால நல்லா என்ஜாய் பண்ணிங்களா என்றான் ,ம்ம் சூப்பரா என்ஜாய் பண்ணேன் என்றான் விக்கி ,போங்க பாஸ் உங்க மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீங்க என்ஜாய் பண்ண லட்சனம் என்ன பாஸ் ஆச்சு உங்களுக்கு சமிப காலமாவே ஒரு மாதிரி இருக்கீங்க பப்க்கு எல்லாம் வர மாட்டிங்கிரிங்க என்றான் வருண் ,
வருண் நான் ஒரு பிரச்சனைல இருக்கேண்டா அது சொல்ல முடியாத பிரச்சினை என்றான் விக்கி ,பரவல பாஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க எயிட்ஸ்ன்னா கூட சொல்லுங்க தெரிஞ்ச டாக்டர் இருக்காரு என்றான் ,விக்கிக்கு கோபம் வரவில்லை அப்படி வந்து இருந்தா கூட நிம்மதியா போயி சேந்து இருப்பேன் என்று விக்கி வருத்ததோடு சொல்ல பாஸ் எதுனாலும் சொல்லுங்க உங்கள இப்படி பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு என்றான் வருண் .
நான் சொல்றத கேக்குறியா என்றான் விக்கி ,ம்ம் சொல்லுங்க பாஸ் என்றான் வருண் ,நீ ஒரு பொண்ண லவ் பண்றேளே என கேட்டான் விக்கி ,ஆமா பாஸ் என்றான் வருண் ,அந்த பொண்ண சீக்கிரமே கல்யாணம் பண்ணி அந்த பொண்ணுக்கு மட்டும் உண்மைய இருந்து ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழு இந்த பப்பு கிளப் எல்லாம் வேணாம் சரியா என்றான் விக்கி ,
சரி பாஸ் உங்களுக்கு என்ன ஆச்சு என்றான்
நான் வேலைய விட்டுட்டு எங்க ஊருக்கு போக போறேண்டா என்றான் விக்கி ,என்ன பாஸ் சொல்றிங்க என்றான் அதிர்ச்சியோடு வருண் ,ஆமாடா என்றான் விக்கி ,ஏன் பாஸ் என்ன ஆச்சு உங்களுக்கு தானே நம்ம கம்பெனில நல்ல நேம் இருக்கே அப்புறம் ஏன் போறீங்க யாரும் எதுவும் சொன்னகளா என்றான் வருண் ,
இல்ல வருண் யாரும் எதுவும் சொல்லல நான் வேற ஒரு காரணத்துக்காக மும்பை விட்டே போக போறேன் என்றான் விக்கி ,பாஸ் எதுவா இருந்தாலும் இங்க இருந்தே சமாளிங்க என்றான் வருண் .இல்லடா நான் போறேன் அப்புறம் நான் போகும் போது மணியைதான் என் போஸ்ட்க்கு ரிகமென்ட் பண்ணுவேன் நீ அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு சரியா என்றான் விக்கி ,பாஸ் அதலாம் விடுங்க பாஸ் நீங்க இருங்க பாஸ் என்றான் வருண் .நான் வரேண்டா சீக்கிரம் உன் கல்யாணத்துக்கு கூப்பிடு வரேன் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றான் .
அன்று இரவு முழுதும் அவனுக்கு தூக்கமெ வர வில்லை .அடுத்த நாள் எழுந்தான் ஹாலில் சுவாதி டிவி பார்க்கும் சத்தம் கேட்டது .அவள் முகத்தில் முழிக்க விக்கிக்கு மனது இல்லை .இன்னும் தன் பழைய காதலனையே நினைச்சு கிட்டு இருக்கிரவலா எப்படி பாக்குறது என்று யோசித்தான் .இருந்தாலும் அவன் வெளியே சென்று ஆக வேண்டும் ஒரு அரை மணி நேரம் பொறுத்து பார்த்தான் .பசி அவன் வயிற்ரை கிள்ளியது வேற வழி இல்லை வெளியே சென்றான் .
ஹாய் விக்கி என்றாள் சாதரணமாக சுவாதி சிரித்து கொண்டே . ஹாய் என்றான் அவளை சரியாக பார்க்கமால் வேறு எங்கோ பார்த்து கொண்டே .ஹ காப்பி இருக்கு போயி சாப்பிடு என்றாள் .அவன் போயி கிச்சனில் காப்பி எடுத்து கொண்டு இருக்கும் போது சுவாதி மடியில் இருந்த குழந்தை அழுக ஒ ஒ அழுகாதடா அழுகாத என்று அவள் மெல்ல அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்துல பால் குடிக்கனுமா என்றால் மெல்ல வெளியே கேட்காத படி முனுமுனுத்தாள் .
விக்கி காப்பியை குடித்து விட்டு போகலாம் என்று நினைத்த போது சுவாதி குழந்தைக்கு பால் கொடுப்பதால் சைடில் அவள் முலை தெரிந்தது
வேணாம்டா விக்கி வேணாவே வேணாம் பாக்காத என்று மனதில் நினைத்து கொண்டு தலையை குனிந்து கொண்டே அவன் ரூமிர்கு சென்று விட்டான் ,
வேணாம்டா விக்கி வேணாவே வேணாம் பாக்காத என்று மனதில் நினைத்து கொண்டு தலையை குனிந்து கொண்டே அவன் ரூமிர்கு சென்று விட்டான் ,
என்ன இவன் இப்படி விலகி விலகி போறான் ,இத்தனைக்கும் இப்ப நான் எதுவும் வேணும்னு கூட பன்னல ஆனா இவன் இப்படி ஏதோ பாக்கவே கூடாதுங்கிற மாதிரில விலகி போறான் ,நல்ல வேல அஞ்சலி அக்கா சொன்ன மாதிரி பண்ணல அப்படி பண்ணி இருந்தா அவளவு தான் இவன் என்ன நினைப்பான் என்று நினைத்து கொண்டு தன் உடைகளை சரி செய்தாள் .
பின் விக்கி ரூம் கதவை தட்டினாள் .ஹ விக்கி டிபன் பண்ணி வச்சுட்டேன் சாப்பிடனும்னா சாப்பிடு என்றாள் .ஓகே என்று உடனே கதவை உடனடியாக சாத்தினான் ,இவனுக்கு என்ன ஆச்சு என்று நினைத்து கொண்டு சுவாதியும் உள்ளே போனாள் .
விக்கி தன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான் .முடியாது முடியாது என்னால தமிழ் நாட்டுக்கு வர முடியாது என்றான் விக்கி .டேய் உன் ஜாப் கோயம்புத்துருக்கும் பாலகாட்டுக்கும் ட்ராவல் பண்றது தான் நம்ம தமிழ் நாட்டுல ஓரளவு கூலிங்க் பிளேஸ் தான் அப்புறம் என்ன அது மட்டும் இல்லாம நல்லா கேரளா பொண்ணுகள சைட் அடிக்கலாம் முடிஞ்சா அதுவும் ம்ம்ம் என்று அவன் இழுத்தான் ,
ஆமா ஒரு கேரளாக்காரி கூட பன்னுதுக்கே லைப் இப்படி ஆகிடுச்சு இதுல இது வேறையா என்று நினைத்து கொண்டே டேய் சவுத் பக்கம் இப்ப வரதா இல்ல நீ வேற எங்கயாச்சும் பாரு எனக்கு என்று போனை வைத்து விட்டு மேலும் சில நண்பர்கள் மூலம் வேலை தேடினான் .
அடுத்த 2 நாட்கள் இப்படியே சென்றது .விக்கி அவளை பார்க்க முடியமால் திணறினான் ,சுவாதி நாம கனடால போயி செட்டில் ஆகிடுவோம் என்று நினைத்து கொண்டு அதற்குரிய வேலைகளை பார்த்தாள் .பின் அடுத்த நாள் சாய்ங்காலம் விக்கியின் கதவை தட்டினாள்.
ஹ விக்கி என்றாள் .என்ன என்றான் .நீ என்ன 3 நாளா ஆபிசே போகல என்றாள் சுவாதி ,அது ஒரு 10 நாள் எனக்கு மட்டும் லீவ் கொடுத்து இருக்காங்க என்றான் .ம்ம் விக்கி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா என்றாள் .
என்ன என்றான் .கொஞ்சம் வெளிய வரியா ஹால்ல உக்காந்து பேசுவோம் என்றாள் .வெளியே போயி சுவாதிக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை ஐயோ இந்த அஞ்சலி அக்கா சொன்னது சரியா வருமா என்ன பண்ண எப்படி இவன் கிட்ட போயி குழந்தைய விட்டுட்டு போறது ஐயோ என்று நினைத்து கொண்டு இருந்தாள் .
விக்கிக்கு அதற்கு மேல் இருந்தது எதுக்கு கூப்பிட்டா இவ ஒரு வேல நான் டேவிட்ட இன்னும் லவ் பண்றேன் சேத்து வைக்க சொல்ல போறாளா ஐயோ கொடுமையே என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான் ,
விக்கி 2 நாளா பாஸ் போர்ட் ஆபிஸ் அப்படி இப்படின்னு ரொம்ப அலைஞ்சுட்டென் ஒரு வழியா முடிஞ்சுடுச்சு நாளைக்கு டிகேட்ஸ் வந்துடும் அடுத்த வாரம் செவ்வாய் கிழமை நாங்க கிளம்புறோம் என்றாள் சுவாதி .என்ன இது உடனே கிளம்புறேன்னு சொல்றா வேணாம் போகாத டிக்கெட் கிழிச்சு போட சொல்லு விக்கி டிக்கெட் கிழிச்சு போட சொல்லு என்று ஒரு மனம் சொல்ல வேணாம் அவ உன்னையே லவ் பண்ணலங்கிரத 2 நாளைக்கு முன்னாடியே தெரிஞ்சுகிட்ட சோ ஒன்னும் சொல்லாத என்று இன்னொரு மனம் சொல்லியது ,
சரி விக்கி நான் விசயத்துக்கு வரேன் கடந்த 1 வாரமா பாஸ்போர்ட் அது இதுன்னு அலைஞ்சு ரொம்ப எரிச்சலா இருக்கு அதுனால அதுனால என்று இழுத்தாள் ,
அதுனால என்ன சுவாதி சும்மா சொல்லு என்றான் விக்கி .நான் வந்து என்னோட பழைய காலிக் சித்தார்த் கூட டேட் போறேன் வர ஒரு 5 மணி நேரம் ஆகும் அது வரைக்கும் குழந்தைய பாத்துக்கிரியா என்றாள் .என்னது என்றான் விக்கி ,
விக்கி விக்கி ப்ளீஸ் விக்கி அவன தூங்க வச்சுட்டு தான் போறேன் நீ தூக்க கூட வேணாம் தொட்டிலே தான் இருப்பான் அழுதா என்னோட பால பால் பாட்டில அடைச்சு வச்சு இருக்கேன் அத மெல்ல கொடு தொட்டிய இப்படி ஆட்டு ப்ளிஸ் விக்கி என்னால முடியல விக்கி ஒரு வருசமா எங்கயும் போகாம இருந்தது அது மட்டும் இல்லாம எனக்கு சரி விடு நான் வரேன் என்று சொல்லி விட்டு அவன் பேச்சை கேட்கமால் வேக வேகமாக பர்சை எடுத்து கொண்டு கிளம்பினான் ,
சுவாதி என்னால குழந்தைய தனியா பாத்துக்கிற முடியாது உனக்கு தான் தெரியுமே என்றான் .அவன் இப்ப தான் தூங்கி இருக்கான் இனி அவன் எந்திரிக்க 7 மணி நேரம் ஆகும் அப்படியே எந்திரிச்சு அழுதா பால் பாட்டில் அந்தா இருக்கு கொடு என்று அவசர அவசரமாக கிளம்பினாள் .
சுவாதி கதவு வரை சென்றாள் ,சுவாதி ஒரு சந்தேகம் என்றான் ,சொல்லு விக்கி என்றாள் ,
சுவாதி கதவு வரை சென்றாள் ,சுவாதி ஒரு சந்தேகம் என்றான் ,சொல்லு விக்கி என்றாள் ,
டேட்ன்னா என்ன என்றான் விக்கி ,சும்மா விளையாடத விக்கி என்று சிரித்து கொண்டே அவள் கிளம்பி விட்டாள் ,
விக்கிக்கு ஒரே குழப்பமாக இருந்தது என்னடா இது என்னமோ டேட்ங்கிறா குழந்தைய வேற என் கிட்ட விட்டு போயிட்டா இப்ப என்ன பண்ண என்று சுவாதி ரூமை எட்டி பார்த்தான் ,குழந்தை தூங்கி கொண்டு தான் இருந்தது ,நல்ல வேல என்று நினைத்து கொண்டு கதவை திறந்து வைத்து வருணுக்கு போன் செய்தான் .
சொல்லுங்க பாஸ் முடிவ மாத்திக்கிட்டேன்களா என்றான் வருண் ,
டேய் அத அப்புறம் பேசுவோம் எனக்கு ஒரு டவுட் என்றான் விக்கி ,சொல்லுங்க பாஸ் என்றான் விக்கி ,டேய் டேட்டிங் போறதான்னு என்னடா என்றான் விக்கி ,வருண் அதை கேட்டு பயங்கரமாக சிரித்தான் .டேய் என்னடா சொல்றா சொல்றா என்று அவன் கேட்க பாஸ் உங்களுக்கு தெரியுதா இல்ல தெரியாத மாதிரியே நடிக்கிறிங்களா என்று சிரித்து கொண்டே கேட்டான் வருண் ,
டேய் சத்தியமா தெரியாதுடா என்றான் விக்கி ,என்ன பாஸ் நீங்கலாம் 8 வருசமா மும்பைல இருந்ததது போன மாசம் முழுக்க அமெரிக்கா போனது எல்லாம் வெஸ்ட் பாஸ் இதுல நீங்க நான் ஒரு வோமனைசர்ன்னு வேற சொல்லிக்கிரிங்கே என்று வருண் மீண்டும் கேலியாக சிரித்தான் .
அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் என்றான் விக்கி ,அது சரி அப்புறம் எப்படி பொண்ணுகள காரெக்ட் பண்றீங்க என்றான் வருண் ,அது ஒன்னு சிக்னல் கொடுப்பேன் இல்ல கிட்ட போயி தடவி காரெக்ட் பண்ணி போவோமான்னு கேப்பேன் வந்தா கூப்பிட்டு போயிடுவேன் என்றான் விக்கி ,
நீங்க பண்றது ஹார்ட் கோர் இது சாப்ட் கோர் என்றான் வருண் ,ஒன்னும் புரியலடா புரியிற மாதிரி சொல்லு என்றான் விக்கி ,அண்ணே டேட்டிங்கிறது வழக்கம் போல வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச ஒன்னு அதாவது ஒரு பொன்னோ இல்ல பையனோ அவங்களுக்குள்ள பிடிச்சு இருந்தா 2 பேரும் ஒருத்தர் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிறதுக்கு நல்லா பேசுறதுக்கு ஊர் சுத்துவாங்க சினிமா பார்க் காப்பி டேன்னு பகல் முழுக்க பேசிட்டு இருப்பாங்க என்றான் வருண் ,
அவளவு தானே என்றான் விக்கி ,பொருங்க பாஸ் இப்ப தான் மெயின் மேட்டருக்கே வரேன் ரெண்டு பேருக்குள்ளையும் ஒத்து வந்துச்சுன்னா அந்த பொண்ணு இன்னைக்கே அவன் கூட நைட்டும் வரேன்னு சொன்னா அப்புறம் என்ன இதையம் நான் தான் சொல்லனுமா அது ம்ம் நடக்கும் என்றான் ,
என்னடா சொல்ற என்றான் விக்கி ,அட ஆமா பாஸ் இந்த டேட்ல ரெண்டும் கழிசடைகள இருந்தா மேட்டரோட முடிஞ்சுடும் நல்ல பிள்ளைகளா இருந்தா லவ்வுக்கு போகும் என்றான் வருண் .ஐயோ இதுல எது நடந்தாலும் என்னால நினைச்சு கூட பாக்க முடியலையே என்று நினைத்தான் விக்கி ,
சரி பாஸ் என்ன திடிருன்னு டேட் பத்தி எல்லாம் கேக்குறிங்க எதுவும் பொண்ணு உங்கள கூப்பிட்டு இருக்கா என்றான் வருண் ,ஆமாடா என் பழைய பிரண்டு ஒருத்தி ஆனா அவளுக்கு குழந்தை இருக்கு என்றான் விக்கி ,பாஸ் அப்ப அது ஊர் சுத்த கூப்பிடல ம்ம் அதுக்கு தான் போயி ஜமாயிங்க என்றான் வருண் ,டேய் வாய மூடுடா அந்த பொண்ணு அப்படி எல்லாம் இல்ல என்று விக்கி கோப பட்டான் ,எதுவா இருந்தாலும் நாளைக்கு காலைல தெரிஞ்சுடும் என்று வருண் மீண்டும் கிண்டல் அடிக்க நீ போன வைடா முதல என்று அவன் போனை துண்டித்து விட்டான் ,
என்ன இது இப்படி சொல்றான் .சுவாதி அப்படி போவாளா அப்படின்னா அவ மனசுல நானும் இல்ல டேவிட்ம் இல்ல வேற எவனும் இருக்கனா என்று ஒரு பக்கம் நினைக்க போனா போற எவன் கூடயும் போறா என்னமும் பண்றா எனக்கு என்ன என்று இன்னொரு மனம் சொல்ல ஐயோ அப்படி விட முடியலையே ஒரு வேலை இதான் போசசிவ்னசா அவள வேறவனுக்கு விட்டு கொடுக்க மனசு இல்லையா எனக்கு ஐயோ நான் உடனே கிளம்புறேன் என்று பாதி வரை சென்றவன்
டேய் நில்லு அவளே வெளிப்படையா நான் வேற ஒருத்தன் கூட போறேன்னு சொல்லிட்டா அப்புறம் என்னடா போடா போயி வழக்கம் போல வெட்டியா இரு இல்ல நீயும் போயி பப்ல எவளையசும் பிடிச்சு பண்ணு என்று மனம் சொல்ல இப்ப என்ன பண்ணுவது என்று தெரியமால் அவன் குழம்பி கொண்டு இருக்க குழந்தை அழுதது ,
அடடே இவன் வேற அழுகுரானே இப்ப என்ன பண்ண என்று சுவாதி ரூம் வரை மெல்ல எட்டி பார்த்து விட்டு பின்னே அடி எடுத்து வைத்தான் .சூ சூ அழுகாத என்று உள்ளே செல்லமாலெ சொல்ல அந்த குழந்தை மேலும் அழுகையை தொடர்ந்தது .மெல்ல உள்ளே சென்று மீண்டும் தொட்டியில் படுத்து இருந்த குழந்தையை பார்த்து அழுகாத அழுகாத என்றான் ,அது அவன் பேச்சை சட்டை செய்ய வில்லை ,
சுவாதி சொன்னது போல் பால் பாட்டிலை எடுத்து மெல்ல அவன் வாயில் திணிக்க குழந்தை பால் பாட்டிலை வாயில் கவ்வி கொண்டது அதே நேரத்தில் அதன் பிஞ்சு விரல்கள் மொத்தமாக சேர்ந்து விக்கியின் ஒரு விரலை மட்டும் பிடித்து கொண்டே விக்கியை பார்த்தது .
விக்கிக்கு முதலில் விரலை அவன் பிடியில் இருந்து தன் விரலை எடுக்க வேண்டும் போல இருந்தது ஆனால் அது இவன் கண்களை பார்த்து கொண்டே இருந்ததால் அவனால் முடியவில்லை .அவனுக்கு என்னவோ போல் இருந்தது அந்த கண்கள் அவனை போல் இருந்தாலும் அதன் பார்வை சுவாதியின் பார்வை போல் இருந்தது .விக்கிக்கு கிட்ட தட்ட ஒரு கால் மணி நேரம் உலகமே மறந்து இருந்தது .
பின் அவன் பாலை குடித்து முடிக்கவும் விக்கி மெல்ல குழந்தையின் விரலில் இருந்து தன் விரலை எடுக்க அவன் மீண்டும் அழுக ஆரம்பிக்க ஓகே ஓகே வச்சுக்கோ என்று மீண்டும் விரலை நீட்ட அது பிடித்து கொண்டது அதன் பிஞ்சு விரல்கள் இவனை கட்டி போட்டது .பிறகு மீண்டும் அழுக சரி சரி அழுகாத என்று சொல்லி கொண்டு இருந்தவன் தீடிரென என்ன நினைத்தானோ தெரியவில்லை உடனே குழந்தையை தூக்கி தன் தோளில் போட்டான் ,
என்ன சார் எதுக்கு அழுகுரிங்க என்று குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுக்க குழந்தை அழுகையை நிறுத்தியது .பின் எதார்த்தமாக குழந்தையின் இடுப்பில் ஒரு பிறை வடிவ மச்சத்தை பார்த்தான் விக்கி ,பின் தன் சட்டையை மெல்ல மேலே ஏத்தி தன் இடுப்பிலும் அதே மச்சத்தை பார்த்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு கண்ணாடி முன் போயி நின்றான் .
கண்ணாடி முன் குழந்தையை தன் கன்னத்தோடு கன்னம் ஒட்டி வைத்து விட்டு பார்த்து விட்டு கண் மூக்கு எல்லாம் என்னைய மாதிரியே இருக்குடா உனக்கு என்று சொன்னவன் குழந்தையின் தலையில் சின்ன முத்தத்தை கொடுத்து விட்டு உன் மேல உங்க அம்மா வாசனை அடிக்குதுடா குழந்தையை இன்னும் தோளில் தட்டி கொடுத்து தூங்க வைத்தான் .
பின் சோபாவில் உக்காந்து யோசித்தான் ,அவன் மனம் நீண்ட நாள் கழித்து மென்மையானது போன்ற உணர்வு அவனுக்கு மீண்டும் தன் குழந்தையை பார்க்க வேண்டும் போல் இருந்தது .மெல்ல எழுந்து மீண்டும் போகலாம் என்று நினைத்த போது சுவாதி வேகமாக உள்ளே வந்தாள் .
என்ன விக்கி ரொம்ப நேரம் அழுதனா என்றாள் .இல்ல ஒரு தடவ அழுதான் நான் போயி குழந்தைக்கு பால் பாட்டில் இருக்க பால கொடுத்தேன் அவன் தூங்கிட்டான் என்றான் .விக்கி பேசி கொண்டு இருக்க சுவாதி கிச்சனில் தண்ணீர் குடித்து விட்டு எதை எதையோ புரட்டி கொண்டு இருந்தாள் .
விக்கி மனதிற்குள் போயி குழந்தைய பாருடி அப்புறம் வந்து கிச்சனில் வேலைய பாக்கலாம் என்று நினைத்தான் .அப்புறம் அவள் உடையையும் கவனித்தான் எதுவும் நடந்து இருக்கிறதா என்று ,
பின் சுவாதி உள்ளே சென்றாள் .சென்று கதவை சாத்தி கொண்டாள் .விக்கி ஒரு 10 நிமிடம் அங்கும் இங்கும் நடந்தான் .பின் கதவை தட்டினான் .ஹ சுவாதி என்றான் .ம்ம் சொல்லு
உன் டேட் எப்படி இருந்துச்சு என்றான் விக்கி ,ஆஹா அஞ்சலி அக்கா பிளான் கரெக்ட்டா வொர்க் ஆகுதே சரி சரி சொதப்ப வேணாம்
ஆக்சுவலா டேட் ஒழுங்கா போகல என்றாள் .ஏன் என்ன ஆச்சு என்றான் ,ம்ம் அவனுக்கு இன்னைக்கு ஒரு ப்ரோக்ராம் இருந்துச்சாம் அதான் அவன் வரல என்றாள் சுவாதி .
ஓகே என்று சொல்லி விட்டு சில வினாடிகள் அங்கேயே நின்றவன் ஹ சுவாதி என் கூட டேட் வரியா சும்மா ஒரு லஞ்ச் மட்டும் போதும் நான் யாரோ நீ யாரோ புதுசா பழகுற மாதிரி ஒரு நாள் நாளைக்கு மட்டும் வெறும் லஞ்ச் மட்டும் போதும் நான் வேற எதுவும் ட்ரை பண்ண மாட்டேன் ஓகேவா என்றான் .
மூதெவி முண்டம் டேட் மட்டும் தைரியமா சொல்லு லவ்வா சொல்லிடாத சரி இதையாச்சும் போயி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஒரு நிமிஷம் விக்கி நான் இவன தூங்க வச்சுட்டு வந்துறேன் என்று சுவாதி குழந்தையை தூங்க வைக்க
விக்கி வெளியே சென்று காத்து இருந்தான் .அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று .ஹ விக்கி ஓகே நான் வரேன் நீயும் நானும் மட்டும் என்றாள் .விக்கிக்கு இன்னும் மனது லேசானது .மனதிற்குள்ளே சிரித்தான் .அண்ட் விக்கி இன்னொரு விஷயம் எனக்காக செய்வியா என்றாள் .ம்ம் சொல்லு என்றான் விக்கி ,நான் தியட்டர் போயி படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு சோ நாளைக்கு அப்படியே என்னைய தெறி படத்துக்கு கூப்பிட்டு போறியா என்றாள் . நீ கூட வராதா இருந்தா எனக்கு எந்த படம்னாலும் ஓகே என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் ,ம்ம் ஓகே லஞ்ச் அண்ட் மூவி ஓகே என்றான் ,
பின்னே விக்கியும் சரி சுவாதியும் சரி அவரவர் ரூமிர்குல் சென்று சத்தம் வராமல் மகிழ்ச்சியோடு குதித்தார்கள் .சுவாதியும் சிரித்து கொண்டே இருந்தாள் .விக்கியும் சிரித்து கொண்டே இருந்தான் .இன்றும் விக்கி தூங்க வில்லை ,ஆனால் அவன் தூங்கததர்கு காரணம் எப்போதும் போல் கவலை இல்லை ,மகிழ்ச்சி முதன் முறையாக ஒரு பொண்ணோடுஅதுவும் தன் விரும்பும் பொண்ணோடு டேட் போக போவதை எண்ணி எப்பதோ விடியும் எப்போது அடுத்த நாள் மதியம் ஆகும் என்று நினைத்து கொண்டு தூங்க்மால் இருந்தான் ,
சுவாதியும் அதே போல் மகிழ்ச்சியோடு தூங்கமால் தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள் .அதே நேரத்தில் குழந்தை விக்கியின் விரலை பிடித்தது போல் சுவாதியின் விரலையும் கெட்டியாக பிடித்து இருந்தது ,இன்றைய இரவு மூவருக்கும் மகிழ்ச்சியோடே சென்றது ,
மறுநாள்
எடு எடு போன எடு என்று வள்ளிக்கு போன் அடித்தாள் சுவாதி .ஹலோ வள்ளி என்றாள் சுவாதி .ஹலோ சொல்லுடி என்றால் வள்ளி ,ஹ எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா என கேட்டாள் .என்ன ஹெல்ப் என்றாள் .அது அது சரி வேணாம்டி என்றாள் சுவாதி ,என்ன புருஷன் கூட நாளைக்கு வெளிய போக போற அதுனால நாளைக்கு ஒரு நாள் மருமகன நான் பாத்துக்கிரனும் அவளுவு தானே என்றாள் வள்ளி .
ஹ உனக்கு எப்படி தெரியும் என்றாள் சுவாதி .உனக்கு முன்னாடியே உன் புருஷன் போன் பண்ணி கேட்டான் அதுனால நான் பாத்துக்கிறேன் 2 குழந்தைகளையும் நீங்க நல்லா சந்தோசமா போயிட்டு வாங்க என்றாள் வள்ளி .ஹ தப்பா ஏதும் எடுத்துக்காதடி ஒரு வருசமா ஏதோ ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி உள்ளேயே இருந்துட்டேன் அதான் இன்னைக்கு ஒரு நாளைக்கு சோ கோபிக்காத ப்ளிஸ் என்றாள் .
ஹ அக்சுவலா நான் ரொம்ப ஹாப்பி நீ கவலை படாம அடுத்த நாள் கூட வா சரியா என்றாள் வள்ளி ,தேங்க்ஸ்டி என்று சொல்லி விட்டு சுவாதி குளித்தாள் .பின் அவளுக்கு எந்த டிரஸ் போடுவது என்று குழப்பமாக இருந்தது எந்த டிரஸ் போடலாம் ம்ம் சுடிதார் வேணாம் அவனுக்கு பிடிக்காது சோ சேலைய கட்டுவோம் என்று அவள் ஒவ்வொரு உடைகளாக மாற்றி கொண்டு இருந்தாள் .
அதே போல் தான் விக்கி 2 தடவை குளித்து விட்டான் .4 முறை பல் விளக்கி விட்டான் ,அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை பிறகு ஒரு 11 மணியை போல் இருவரும் வெளியே வந்தார்கள் .விக்கி சுவாதியை ஒரு நீல நிற சேலை கட்டி இருப்பதை பார்த்தான் ,இவளுக்கு எல்லா கலருமே எடுப்பா இருக்கு என்று ஒரு முறை கீல் இருந்து மேல் வரை பார்த்தான் ,அவன் பார்ப்பதை புரிந்து கொண்ட சுவாதி ஏதும் சேலைய சரியா கட்டளையா என்று சரி செய்தால் அதை புரிந்து கொண்ட விக்கி ஹ சுவாதி யு லுக் ஹாட் என்றான் ,என்னது என்னடா எடுத்த உடனே இப்படி சொல்ற என்று தன்னை தானே கடிந்து கொண்டான் ,
தேங்க்ஸ் விக்கி உனக்கு கூட அந்த ஷர்ட் நல்லா இருக்கு என்றாள் ,ம்ம் போகலாமா என்றான் ,ம்ம் போகலாம் என்றான் ,அப்போது அவன் குழந்தையை பார்க்கலாம் என்று நினைத்த போது குழந்தையை முகம் தெரியாதது போல் அவள் தோளில் போட்டு இருந்தாள்.
இருவரும் காரில் ஏறினார்கள் ,முதல இவன போயி வள்ளி வீட்ல விட்டு அப்புறம் போவோம் என்றாள் .ஹ குழந்தையும் வேணும்னா வரட்டும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்றான் ,என்ன இவன் அதிசியமா குழந்தை வரட்டும்ன்னு சொல்றான் என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டு இல்ல விக்கி வெயில் ரொம்ப அடிக்குது இந்த ஹாட்ல இவன கூப்பிட்டு போக கூடாது அதான் என்றாள் .
சரி என்று சொல்லி விட்டு நேராக வண்டியை வள்ளி வீட்டிற்கு விட்டான் .ஹ ஓகே சீக்கிரம் மருமகன கொடுத்துட்டு நீங்க கிளம்புங்க டைம் வேஸ்ட் பண்ணாதிங்க என்றாள் வள்ளி .இருந்தாலும் சுவாதி விடவில்லை ஹ இதுல பால் இருக்கு எந்திரிச்சன்னா கொடு அப்புறம் அழுதான்னா
யே எனக்கும் தெரியும்டி நான் உனக்கு முன்னாடியே 3 மாசத்துக்கு முன்னால குழந்தை பெத்துகிட்டேன் என்றாள் வள்ளி .ஓகே யே நான் எப்படி இருக்கேன் என்றாள் மெல்ல .சூப்பரா இருக்க இன்னைக்கு விக்கி உன்னைய என்ன பண்ண போறனோ என்றாள் வள்ளி ,சீ போடி என்றாள் சுவாதி ,சரி கிளம்பு அவன் வெயிட் பண்றான் என்றாள் வள்ளி ,சரிடி நான் சீக்கிரமே வந்துறேன் என்றாள் .
ஒன்னும் அவசரம் இல்ல மெல்லவே வா என்று அணுப்பி விட்டாள் வள்ளி .இருவருமே பின்னர் கிளம்பினார்கள் .பின்னர் இருவரும் ஒரு மாலுக்கு சென்றார்கள் ,
விக்கி லஞ்ச் வேணாமே அப்புறம் டிக்கெட் கிடைக்காது .நாம படம் பாத்துட்டு வந்து இவினிங் சாப்பிடுவோமே என்றாள் .சரி ஓகே என்று விக்கியும் சுவாதியும் மாலில் உள்ள தியட்டருக்கு சென்றனர் .அங்கு பயங்கர கூட்டம் இருந்தது ,என்ன விக்கி இவளவு கூட்டம் இருக்கு என்றாள் /
இரு நான் போயி கிடைக்குதான்னு ட்ரை பண்றேன் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவன் நீண்ட நேரம் அந்த கூட்டதில் இருந்து திணறினான் ,சுவாதிக்கு அவன் கூட்டதில் தெரியவில்லை .பிறகு ஒரு வழியாக வெளியே வந்தவன் .
சாரி சுவாதி டிக்கெட் கிடைக்கல என்றான் ,சரி என்னைக்கு தான் நான் விரும்புனது கிடைச்சு இருக்கு என்று நினைத்து கொண்டு ஓகே பரவல வா போகலாம் என்றாள் .
பின் சுவாதி எகிஸ்ட் பக்கம் போக பார்க்க ஹ சுவாதி என்ன அந்த பக்கம் போற என்றான் ,இதானே எக்சிட் என்றாள் .இதான் எக்சிட் ஆனா படத்துக்கு போறது இந்த வழியாச்சே என்று அவன் டிக்கெட்டை சிரித்து கொண்டே காம்பிக்க சுவாதி உன்னைய என்று அவனை செல்லமாக அடிக்க வர அவன் அதில் இருந்து தப்பிப்பது போல் சிரித்து கொண்டே சமாளித்தான் .
பின் இருவரும் சந்தோசமாக உள்ளே சென்றனர் .சுவாதி எழுத்து போட்டதில் இருந்து படத்தையே கூர்ந்து பார்த்தாள் .ஆனால் விக்கியோ படத்தை சுத்தமாக பார்க்கவில்லை அவன் அந்த திரை வெளிச்சத்தில் சுவாதியையே பார்த்து கொண்டு இருந்தான் ,அவள் சிரிக்கும் போது இவன் மனம் மகிழ்ச்சி அடைந்தது .அவள் படத்தை ரசிக்கும் போது விக்கி அவளை ரசித்தான் ,சுவாதி ரொம்ப சந்தோசமாக படம் பார்க்க இவனுக்கு சுவாதி சந்தோசமாக இருப்பது பிடித்து இருந்தது ,
பின்னர் விக்கி இடைவேளையில் ஒரு பெரிய பவுலில் பாப்கார்ன் வாங்கி வந்தான் ,இருவர்க்கும் நடுவில் இருந்தது .ஒரு முறை இருவரும் பாப்கார்ன் எடுக்க கை விட இருவரின் கைகளும் உரசி கொண்டன ,விக்கி ஐ அம் சாரி என்றான் ,சுவாதி இட்ஸ் ஓகே என்று உதட்டில் ஒரு சின்ன புன்னகை தழுவ விட்டாள் .விக்கிக்கு சந்தோசமாக இருந்தது ,
விக்கியின் கெட்ட மனம் வழக்கம் போல் வந்து என்னடா தியட்டேருக்கு குப்பிட்டு வந்துட்டு அவள தடவாம இருக்க தடவுடா முடிஞ்சா அவள திருப்பி வச்சு ஒரு கிஸ் அடிடா என்றது ,டேய் கெட்ட மனசாட்சி எனக்கு தேவை இப்ப செக்ஸ் இல்ல லவ் தான் ,அது எப்ப அவ கிட்ட இருந்து முழுசா கிடைக்குதோ அப்ப எங்க ரெண்டு பேருக்குள்ள தானா செக்ஸ் நடக்கும் ,மத்த படி செக்ஸ் தான் வேணும்னா நான் எப்பவோ அத பண்ணி இருப்பேன் .முதல எனக்கு தேவை காதல் என்று தன் கெட்ட மனதை அடக்க
அவன் நல்ல மனசாட்சி வெளிய வந்து டேய் எங்க ஆளு முழு ரொமண்டிக் ஹீரோவ மாறிட்டாரு இனி உனக்கு இங்க இடம் இல்ல நீ போடா என்றது ,இருங்கடா நல்லவனுக்கு எப்பயும் நல்லது கிடைக்காது ,நான் திரும்ப வருவேன் என்று சொல்லி விட்டு போனது .
விக்கி மீண்டும் சுவாதியை ரசித்தான் ,படம் முடிந்தது .விக்கியும் சுவாதியும் வெளியேறினார்கள் .படம் சூப்பர் அமைசிங் விஜய் சான்சே இல்ல என்று சொல்லி கொண்டு வந்தாள் சுவாதி ,
உனக்கு படம் பிடிச்சு இருந்துச்சா என விக்கி கிட்ட கேட்டாள் .நான் எங்க படத்த பாத்தேன் உன்னைய தானே பாத்தேன் என்று நினைத்து கொண்டு ஓகே பரவல ஏதோ 1 தடவ பாக்கலாம் என்றான் ,என்னது பரவலையா அப்ப நீ அஜித் பேனா என்றாள் .ம்ம் நோ நோ என்றான் ,அப்படினா நீ யார் பேன் என்றாள் சுவாதி ,
நான் யாருக்கும் பேன் இல்ல என்றான் விக்கி ,சரி சும்மா சொல்லு என்றாள் ,ம்ம் பேன்னு சொல்ல முடியாது கமல பிடிக்கும் என்றான் ,ஏன் என்றாள் சுவாதி ,ம்ம் உண்மையான ரிசன் சொல்லவா இல்ல பொய்யா சொல்லவா என்றான் ,ஹ என்னையவே ஒட்டிரியா சரி உண்மையான ரீசனே சொல்லு என்றாள் ,
வா முதல ஒரு காப்பி குடிப்போம் என்று காப்பி சாப்க்கு கூப்பிட்டு சென்றான் ,இருவரும் நேருக்கு நேராக உக்காந்து கொண்டனர் ,சரி சொல்லு என்றாள் ,எத என்றான் ,கமல் ஏன் பிடிக்கும் என்றாள் ,ஏன்னா அவர் எப்பயுமே மன்மதன் இப்ப கூட 3 லிப் கிஸ் நச்சு நச்சுன்னு அடிக்கிறாரு ஆனா இந்த விஜயும் அஜித்தும் அப்படியா சும்மா சண்ட போட்டு கிட்டு தான் இருக்காங்கே ஹீரோயின தொடவே மாட்டிங்கிரங்கே என்றான் விக்கி ,
சீ ஹீரோ பிடிக்கிறதுக்கு இப்படி ஒரு ரிசானா என்றாள் .ம்ம் எனக்கு ஸ்கிரின்ல ஹீரோன்னா இப்படி இருந்தா தான் பிடிக்கும் என்றான் ,ஓகே என்று சுவாதி சிறிது நேரம் சிரித்தாள் .சரி நீ எதுக்கு விஜய் பேன் இருக்க என கேட்டான் .ம்ம் ஏண்டா விஜய் டான்ஸ் காமெடி எல்லாம் பிடிக்கும் அது மட்டும் இல்லாம நான் கேரளாக்காரி எங்க எரியால விஜய்க்கு பேன்ஸ் அதிகம் அதுனாலே எனக்கும் பிடிக்கும் ஓகே வேற சொல்லு என்றாள் .இல்ல நீ சொல்லு என்றான் விக்கி ,
சிறிது நேரம் இருவருக்குமே எதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை ,விக்கிக்கும் அந்த பொது இடத்தில அவளிடிம் சில விசயங்களை கேட்க தயங்கினான் ,ஓகே விக்கி மணி 6.20 ஆச்சு ஜூனியர் என்னைய காணோம்னு தேடுவான் போவோமா என்றாள் .ஹ நாம ரெண்டு பேரும் ஒரு நல்ல ரெஸ்ட்ராண்ட் போனும்னு சொன்னேன் என்றான் .
சாரி விக்கி குழந்தை பாவம் ப்ளிஸ் என்றாள் .ஆமா நான் பாவமாவே தெரியலையா இவளுக்கு என்று நினைத்து கொண்டு ஓகே போவோம் என்றான் .பிறகு வள்ளி வீட்டிற்கு சென்றனர் .
No comments:
Post a Comment