CLOSE

Friday, 19 January 2018

நெஞ்சில் வைத்த முத்தம் ! - பகுதி - 1


அன்று காலை.. விடாமல் கதவு தட்டப் பட்டுக் கொண்டிருக்க.. தூக்கம் கலைந்து சிறிது எரிச்சலுடன் எழுந்தேன். கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு போய் கதவைத் திறந்தேன்.. !!
''எருமை மாடு.. எவ்ளோ நேரண்டா கதவை தட்றது.. ?? மணி பாரு என்னாகுதுனு.. ? இவ்ளோ நேரமா தூங்குவ.. ?? அப்பவும் அம்மா சொல்லுச்சு.. அவன் இன்னும் தூங்கிட்டிருப்பானு.. சொன்னது சரியாத்தான் போச்சு.. !! ஏன்.. சாருக்கு இன்னிக்கு வேலைக்கு போற ஐடியா இல்லையாக்கும்.. ??''
என நான் ஸ்டாப்பாக தன் ஆத்திரத்தைக் கொட்டியபடி என்னை முறைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் என் அருமைத் தங்கை..!! அவளைப் பார்த்தும் கொஞ்சம் ஆறுதலடைந்த என் மனசு.. அவளது வார்த்தைகளைக் கேட்டதும் எரிச்சலடைந்தது..!!
நான் அவளுக்கு பதில் சொல்லாமல் திரும்பி உள்ளே நடந்தேன்.
'' அம்மா.. மக.. நாங்க ரெண்டு பேரும் அங்க.. ஆஸ்பத்ரில தூங்காம கெடக்கோம். நீ என்னடான்னா இங்க.. எட்டரை மணி ஆகியும் எந்திரிச்சு வேலைக்கு போற எண்ணமே இல்லாம.. நல்லா ஜம்பமா தூங்கிட்டிருக்க.. !! என்ன பண்றது.. எல்லாம் எங்க நேரம... நைட்டு புல்லா சரக்கடிச்சியாக்கும்.. ??'' என்று கேட்டாள்.
நான் அவள் பக்கம் கூட திரும்பாமல்.. மீண்டும் திரும்பி.. வெளியேறி பாத்ரூம் போனேன். சூரியனின் அக்னிப் பார்வை என் கண்களை கூசச் செய்தது. மஞ்சளாக வெளியேறிய சிறுநீரை முடித்துக் கொண்டு முகம் கழுவினேன். பேஸ்ட்டை எடுத்து பிதுக்கி.. பிரஷ்ஷில் வைத்து.. நனைத்து.. அதைக் வாயில் வைத்து தேய்த்துக் கொண்டு வந்து வெளியே நிற்க.....
தன் வீட்டுக் கதவருகே வந்து நின்ற சத்யாவைப் பார்த்து.. ஒரு நொடி அசந்து போனேன்.. !! அவசரமாக எச்சிலைத் துப்பினேன்.. !!
'' ஹேய்.. என்னது புடவைலாம்.. ??'' என்று கேட்டேன்.
அவள் முகத்தில் சட்டென ஒரு வெட்கம். புடவைத் தலைப்பைக் கையில் பிடித்து திருகியபடி மெல்லிய குரலில் கேட்டாள்.
'' நல்லாருக்கா.. ??''
'' வாவ்.. !! கலக்கற.. !! ஏதாவது விசேசமா.. ??''
என் பார்வையால் அவளை அளந்தேன். !
'' ம்ம்.. ஆமா.. !!'' பளீர் சிரிப்பு.
'' என்ன விசேசசம்.. ??''
'' பொண்ணு பாக்க வராங்க.. !!'' அவள் முகம் முழுவதும் வெட்கம் படர்ந்தது.
'' வ்வாவ்வ்.. !! சூப்பர்.. !! யாரு.. ??''
'' சொந்தம்தான்.. !!'' முனகியபடி கதவுக்கு வெளியே வந்து நின்றாள்.
அவளை எனக்கு முழுசாக காட்ட நினைத்தாள் போல.. !! இளஞ் சிவப்பில் ஃபாண்டசியான ஒரு புதுப் புடவை..!! உடம்பைக் கவ்விப் பிடித்ததை போல கச்சிதமான ப்ளவுஸ்..!! நேர்த்தியான புடவைக் கட்டு.. !! சைடில் அவள் இடுப்பு தெரிந்தது.. !!
'' அசத்தல் சத்யா.. !! நீ புடவை கட்றது இதான் பர்ஸ்ட் டைமா.. ??''
'' ம்ம்.. !!'' வெட்கம். முகத்தில் ஒருவித நாணம். ''ஆமா..!!''
'' சூப்பரா இருக்கப்பா.. !! யாரு கட்டிவிட்டா.. ??''
'' அம்மா.. !!''
நான் மேலும் கேட்கும் முன்.. என் வீட்டுக்குள் இருந்து என் தங்கை கையில் ஒரு குச்சிப்பையுடன் வெளியே வந்தாள். அதில் என் அம்மாவின் புடவை ரவிக்கை எல்லாம் இருந்தது.. !! என் தங்கையைப் பார்த்ததும் சத்யா.. அவளிடம் கேட்டாள்..!!
'' உங்கம்மாக்கு.. இப்ப எப்படி இருக்கு விஜி.. ??''
'' ம்ம்.. நல்லாருக்கு..!!'' கடனே என்பதைப் போல முனகினாள்.
'' அங்க... கூட யாரு இருக்கா.. ??''
'' நான் மட்டும்தான்..! என்ன பண்றது கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போனாலும் அங்க போயும் நிம்மதியா இருக்க முடியல. எல்லாத்தையும் நாமதான் பாக்க வேண்டியதா இருக்கு..! இனி நான் என் வீட்டுக்கு போயி குளிச்சி சாப்பிட்டு அவசர அவசரமா ஓடனும்..! என் புருஷனை கவனிக்கவே முடியறதில்ல..! அங்க அப்படித்தான் ராத்திரில.. கொசுக் கடில தூங்கவே முடியறதில்ல..! எங்கம்மாள வீடு கொண்டு வந்து சேத்தறதுக்குள்ள.. நான் காடு போய் சேந்துருவேன் போலருக்கு.. !!''
என்றாள்.
என் தங்கையின் கண்களில் கண்ணீர் வராதது ஒன்றுதான் குறை..!! எரிச்சலுடன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி நின்று பல் தேய்க்க ஆரம்பித்தேன்.. !!
நான் திரும்பி நின்று பல் தேய்க்க.. என் தங்கை என்னைக் கேட்டாள்.
'' பணம் ஏதாவது ரெடி பண்ணியாடா.. ??''
''ம்கூம்.. !!'' நான் அவளைப் பார்த்து குறுக்காக தலையை ஆட்டினேன்.
அவள் முகத்தில் அதீத எரிச்சல் படர்ந்தது. என்னை கடுமையாக முறைத்தபடி சொன்னாள்.
'' என்னடா இவ்ளோ அசால்ட்டா இருக்க..? நான் எவ்ளோ இதா சொல்லிருந்தேன்.? இப்ப நான் என் புருஷனுக்கு என்ன பதில் சொல்றது.. ??''
சத்யா முன் அவள் என்னை அவ்வளவு இளக்காரமாகப் பேசியது என்னை மிகவும் வருத்தப்பட வைத்தது. சத்யாவுக்கே என் தங்கையைப் பற்றி தெரியும்தான். ஆனால் அதற்காக.. இப்படி பேசுவது என் நிலையை தாழ்த்தும் என்று எனக்கு கோபம் வந்தது. ஆனால் நான் இப்போது கோபப் படும் நிலையில் இல்லை என்பதால்.. அமைதியாக பல்லைத் தேய்த்துக் கொண்டிருந்தேன்.. !!
'' உன்ன நம்பி.. நானும் அவருகிட்ட சொல்லிட்டேன்.. இப்ப நான் என்னடா பதில் சொல்லுவேன்.. ??'' அழுவதைப் போலக் கேட்டாள்.
நான் எச்சிலைத் துப்பி விட்டு அவளைப் பார்த்தேன்.
'' ஏய் பொலம்பி சாகாதடி..! உன் பணத்தை என்ன தூக்கிட்டா ஓடிருவேன்.. ??''
'' நேத்தே நீ இதத்தான்டா சொன்ன..! நானும் அவருகிட்ட இன்னிக்கு குடுத்துருவேனு சொல்லிட்டேன்.. !!'' அவள் குரல் சூடாகியது.
'' கேட்றுக்கேன். உன் பணத்தை குடுத்துருவேன் கவலை படாத..! விடு நானே வந்து உன் புருஷன் கிட்ட சொல்லிக்கறேன்.. !!''
'' ஆமா.. வெளங்கிரும்.. ! நானாவது நைசா பேசி சமாளிச்சிருவேன். நீ சொன்னா.. உன் முன்னாடி சரினு தலைய ஆட்டிட்டு அப்பறமா என்னை போட்டு உயிரை எடுப்பான் மனுஷன்.. ! சரி.. எப்ப தரே.. ??''
" ரெண்டு நாள்ள தரேன்.. !!"
'' இப்படி சொல்லிச் சொல்லியே என் தாலியை அறுக்கறடா...! சீக்கிரம் குடுக்க பாரு.. !!'' என்று புலம்பிக் கொண்டே பையுடன் நடையைக் கட்டினாள் என் தங்கை.. !!
ஆறு மாதம் முன்புதான் என் தங்கை திருமணத்தை முடித்து வைத்தேன். அடுத்த தெருவைச் சேர்ந்த ஒருவனை காதலித்து அவனைத்தான் கட்டிக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.. !! வேறு வழி இல்லாமல் அவனுக்கே இவளைக் கட்டி வைத்தோம்.. !!
எங்களுக்கு அப்பா இல்லை. விபரம் வந்த நாளில் இருந்து அம்மா மட்டும்தான்..! இப்போது அந்த அம்மா ஆஸ்பத்ரியில் இருக்கிறாள். பிரெஷ்ட் கேன்சர்..!! இரண்டு நாள் முன்பு என் அம்மாவின் இடது மார்பை அகற்றியாகி விட்டது.. !! இன்னும் அம்மா ஆஸ்பத்ரியில்தான் இருக்கிறாள்..!! என் அம்மாவுக்கு கேன்ஸர் ஆரம்பித்த பிறகுதான்.. என் தங்கை கல்யாணத்தை அவசரமாக முடிக்க வேண்டியிருந்தது. அதனால் மறுக்க முடியாமல் அவள் காதல் கை கூடி விட்டது.. !! ஆனால் இதில் என் அம்மா செலவு உட்பட.. கடனாளியானது நான் மட்டும்தான்..!! என் தங்கைக்கு அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லை.. !! அவள் கணவனிடம் நான் வாங்கின கடனை அடைக்க முடியவில்லை என்பதுதான் அவளது கவுரவ பிரச்சினையாக இருக்கிறது.. !!
என் தங்கை போன பின் சத்யா கேட்டாள்.
'' என்ன இது.. இப்படி பேசிட்டு போறா.. ??''
'' அதை ஏன் கேக்கற..? எங்கம்மாவை அட்மிட் பண்ணப்ப.. அவ புருஷன் ஆஸ்பத்ரிக்குனு ஒரு இருபதாயிரம் செலவு பண்ணிட்டான்.. ! அதைக் கேட்டு ஒரே நச்சரிப்பு.. ! அவன்கூட ஒண்ணும் கண்டுக்கறதில்லை.. இவளோட பொலம்பலைத்தான் கேக்க முடியறதில்ல.. !!''
'' ஓ.. !!'' வாயைக் குவித்தாள் சத்யா.
'' நான் என்ன வெச்சிட்டா அவளுக்கு குடுக்க மாட்டேங்குறேன். இவ கல்யாணத்துக்கு பண்ண செலவுலயே இன்னும் ரெண்டு லட்சத்துக்கு மேல கடன் இருக்கு. இப்ப எனக்கும் சரியா வேலை வேற இல்ல. வட்டி கட்டவே திண்டாட்டமா இருக்கு..! இதுல அம்மா ஆபரேசன் ஒரு பக்கம்.. !! நான் எதை எதைத்தான் பாக்கறது..?? ஆனா அவ பேசறதை யாராவது கேட்டாங்கனு வெய்யி.. என்னமோ நான் தண்டமா சுத்தற மாதிரியும் அவதான் எல்லாத்தையும் தாங்கறாங்கற மாதிரியும் நினைப்பாங்க.. !!''
சிரித்தாள் சத்யா.!
'' சரி விடுங்க.. உங்க தங்கச்சிதான சொல்றா.. ??''
'' ஒண்ணும் பேச முடியாது.. !!''
'' அது சரி இன்னிக்கு என்ன எழுந்துக்க இவ்வளவு நேரம்..?? விஜி சொன்ன மாதிரி.. நைட்டு புல் சரக்கோ.. ??''
'' அட.. நீ வேற சத்யா..! அவனவன் கைல நையா பைசா இல்லாம காஞ்சு போய் கெடக்கான். இதுல புல்லா எங்க போய் அடிக்கறது.. ? தனியா இருக்கற கொழப்பத்துல ரொம்ப நேரம் தூங்காம டிவி பாத்துட்டு இருந்தேன். அதான்... ''
'' ஓ.. ஹ்.. !!'' எனச் சிரித்தாள் ''ஆனா உங்கள பாத்தா.. மூஞ்சியே ஒரு மாதிரி.. சரக்கடிச்சாப்லதான் இருக்கு.. !!''
'' இதான் நேரம்ன்றது.. !!''
'' சும்மா.. கோவிச்சிக்காதிங்க.. !!''
எனக்கு வேலைக்கு நேரமாகியிருந்தது. அவளுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.
'' ஓகே சத்யா.. எனக்கு டைமாகுது.. !! பெஸ்ட் ஆப் லக்.. !! நிச்சயமா உன்ன பாக்க வர மாப்பிள்ளைக்கு உன்னை பிடிக்கும்.. !! சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு.. !!'' என்றேன்.
'' தேங்க்யூ நிரு.. !!'' என்று முகம் நிறைய வெட்கத்தை அப்பிக் கொண்டு சிரித்தாள் சத்யா.
நான் குளிக்க ஆயத்தமானேன்.. !!
நான் அவசரமாகக் குளித்து.. உடை மாற்றிக் கொண்டு.. வீட்டைப் பூட்டிக் கிளம்பியபோது.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சத்யாவின் அம்மா கேட்டாள்.
''வேலைக்காப்பா.. ??''
'' ஆமாங்க்கா.. ''
'' உன் தங்கச்சி வந்து பாட்டா பாடிட்டு போனாளாமா.. ?? அம்மாவ பாக்க போகலியா.. ??''
'' இப்ப நேரம் இல்லக்கா..! சாயந்திரம் போய் பாத்துக்கறேன்.. !!''
சத்யா மீண்டும் கதவருகே வந்து நின்று என்னைப் பார்த்தாள். கவர்ச்சியாகப் புன்னகைத்தாள்.
'' மேக்கப் கலைஞ்சிர போகுது '' என்றேன்.
''கலைஞ்சா மறுபடி பண்ணிப்பேன்..!!'' என்று சிரித்தாள்.
'' ஒகே.. பெஸ்ட் ஆப் லக்.. !!''
'' தேங்க்ஸ். !!''
சத்யாவின் அம்மா சொன்னாள்.
''என்னவோப்பா.. இந்த எடமாச்சும் நல்லா அமையட்டும் ''
'' அமையும். கவலை படாதிங்க.. !!'' என நான் சொல்ல..
'' ஆமா.. போன வாட்டியும் இதைவேதான் சொன்னீங்க ..?? '' எனக் கிண்டலாகச் சிரித்தாள் சத்யா.
'' இந்த வாட்டி அமையும் பாரு.. !!'' என்று விட்டு.. நான் புன்னகையுடன் விடை பெற்றுக் கிளம்பினேன்.. !!
இரவு.. !! அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்ரி போனேன். அம்மா கொஞ்சம் உடல்நலம் தேறி தெம்பாக இருந்தாள்..!!
'' எப்படிமா இருக்கு.. இப்ப.. ??''
'' ம்ம்.. தேவலப்பா.. ''
'' சாப்பிட்டியா.. ??''
'' இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்..! நீ என்ன பண்ண.. ??''
'' எனக்கென்ன..? போறப்ப சாப்பிட்டு போய்க்குவேன்.. !!''
என்னையே பார்த்துக் கொண்டிருந்த என் தங்கை மெல்லச் சொன்னாள்.
''நேரங் காலமா வீடு போய்ச் சேரு. வீட்ல ஆள் இல்லேன்னு கண்டபடி தண்ணியடிச்சிட்டு சுத்தாத.. !!''
'' ஏய்.. யார்ரீ சொன்னா உனக்கு.. ??'' எரிச்சலை காட்டினேன்.
'' ஹா.. நீ பண்றது தெரியாது பாரு எங்களுக்கு.. ?? இதை வேற ஒரு ஆளு வந்து சொல்லனுமாக்கும்.. ??'' என முறைத்தபடி சொன்னாள். பின் ''சரி.. சரி.. நீ என்னமோ பண்ணு..! கேட்டா இனி இல்லாத நாயம் பேசுவ..? நான் சொல்லி நீ எதை கேட்றுக்க.. ??''
'' ஏய்.. இது ஆஸ்பத்ரி. உன் வாய மூடிட்டு இருக்கியா.. ??'' எரிச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன்.
என் அம்மா இடை புகுந்து எங்களை சமாதானம் செய்தாள். பின் மெலிதான குரலில் சொன்னாள்.
'' இந்த புள்ள புருஷன் வந்துட்டு போனாப்ல.. ! அவுருதான் சாப்பாடு கொண்டு வந்து குடுத்துட்டு போனாரு.. !!''
'' ம்ம்...!!''
என் தங்கை ''சொல்லிட்டேன் அவருகிட்ட. இன்னும் ரெண்டு நாள்ள தரேனு சொல்லியிருக்கேனு. என்னை கால வாரி விட்றாத..'' என்றாள்.
அவளை முறைத்தேன்.
'' என்ன மொறைக்கிறே..??'' என்றாள் ''மொறைச்சா..? எம் புருஷனுக்கு என்ன விதியா.? நான் அங்க போய் நல்லா வாழனும்னா.. பணத்தை ரெடி பண்ணி குடுக்கற வழிய பாரு. இல்லேன்னா உங்கம்மா ஆபரேசனுக்கு கூட பணம் பெரட்ட முடியலியான்னு என்னைத்தான் கேவலமா பேசுவாங்க.. !!'' என அவள் சொன்னபோது.. அவள் சுயநலம் என்னை செருப்பால் அறைவது போலிருந்தது.. !!
''ஆமாடா.. அவ சொல்றதும் சரிதான். அந்த புள்ள மாமியா ஒரு மாதிரி பேசுவா. நீ எப்படியாச்சும் பணத்தை பெரட்டி குடுத்துரு..!!'' என்றாள் அம்மா.
'' ம்ம். கவலை படாத.. ரெண்டு நாள்ள உன் பணம் வந்துரும்.. !!'' என்று எனக்குள் எழுந்த வலியை அடக்கிக் கொண்டு சொன்னேன்.
''சொன்னா பத்தாது. அது மாதிரி நடந்துக்கனும்.'' என்றாள் தங்கை.
'' கம்பெனிலயே கேளு '' அம்மா சொன்னாள்.
'' முடிஞ்சவரை கம்பெனில எல்லாருகிட்டயும் வாங்கியாச்சும்மா..! அஙகல்லாம் கிடைக்காது. இவ கல்யாணத்துக்கு வாங்கினதுலயே இன்னும் வட்டி கட்ட முடியாம திணறிட்டிருக்கேன். இதுல உன் செலவு வேற.. வெளிலதான் வாங்கனும்.. !!''
'' வெளில.. யாருகிட்ட.. ??''
'' யாரையும் நம்பறதுக்கில்ல.. !'' என்று விட்டு மெல்லச் சொன்னேன் ''வண்டிய வித்துரலாம்னு இருக்கேன்..!!''
அம்மா முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
'' பைக்க விக்கறியா ??''
'' வேற வழி இல்ல. வாங்குன பணத்துக்கு வட்டி கட்ட வேண்டியதே நெறைய நிக்குது. வண்டிய வித்துட்டா.. பாதி பிரச்சினை முடிஞ்சிரும்.. !!''
'' பைக்க வித்துட்டு நீ எதுல போவ..??'' என் தங்கை.
'' நான் எதுல போனா உனக்கு என்ன..? உன் பிரச்சினை தீந்தா அது போதும்ல உனக்கு ??''
'' பாத்தியாம்மா உன் பையன் எப்படி பேசுறான்னு..??'' என அம்மாவிடம் ஆரம்பித்தாள்.
அம்மாவும் அதே கேள்வியைக் கேட்டாள்.
''நீ வேலைக்கு எப்படிடா போவ.. ??''
'' பஸ்ல போறேன் ''
'' சிரமமா இருக்குன்னுதான வண்டி வாங்கின.. ??''
'' என்ன பண்றது அதுக்கு..??'' எனது உள்ளக் குமுறலை எல்லாம் அடக்கிக் கொண்டு சொன்னேன்.
தங்கை ''எப்படியோ.. போ.. ! எங்களுக்கு என்ன.??''
அம்மா ''எதுக்கும் கடனா கெடைக்குமானு கேட்டுப் பாரு ''
'' அதெல்லாம் வேஸ்ட்மா.. வண்டி போனா கெடக்குது. எனக்கு பிக்கல் ஒழிஞ்சா சரி. கொஞ்சம் நிம்மிதியா இருப்பேன்..'' என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பமில்லாமல் ''சரி நான் போறேன். நாளைக்கு வந்து பாக்கறேன் '' எனச் சொல்லி விட்டு கணத்த மனதுடன் ஆஸ்பத்ரியை விட்டு வெளியே வந்தேன்.. !!
நான் வீடு போனபோது இரவு பத்தரை மணி.. !! சத்யா வீட்டில் விளக்கணைக்கப் பட்டிருந்தது. நான் பைக்கை நிறுத்தி.. வீட்டுக்குள் போய் உடை மாற்றி வந்து பாத்ரூம் போனேன். முகம் கை கால் கழுவி வெளியே வந்தபோது சத்யாவின் அம்மா வெளியே வந்தாள்.
'' இப்பதான் வரியா.. ??'' என்றாள்.
'' ஆமாங்க்கா..!!'
என் அம்மாவைப் பற்றி விசாரித்தாள். நான் சொல்லி முடித்து அவளிடம் கேட்டேன்.
'' அப்றம் சத்யாவ பொண்ணு பாக்க வந்தது என்னாச்சுங்க்கா.. ??''
'' நல்ல படியாதான் வந்து பாத்துட்டு போயிருக்காங்கப்பா..!! எல்லாம் கலந்து பேசிட்டு சொல்றேன்றுக்காங்க..! அனேகமாக இந்த எடம் அவளுக்கு அமைஞ்சிரும்னுதான் என் மனசுக்கு படுது..''
'' ஏதாவது எதிர் பாக்கறாங்களாக்கா.. ??''
'' இந்த காலத்துல யாருப்பா சும்மா கட்டுவாங்க.. ?? நம்மனால என்ன முடியும்னு சொல்லியாச்சு. அப்றம் அவங்க விருப்பம்தான். பாக்கலாம் என்ன சொல்றாங்கனு.. !!'' என்றாள்.
கொஞ்ச நேரம் பேசி விட்டு நான் உள்ளே போய் விட்டேன்.. !!
மறுநாள் காலை. நான் தூக்கம் கலைந்த போது மணி எட்டே கால்.! நான் அவசரமாக எழுந்து ஓடி.. காலைக் கடனகளை முடித்து.. குளித்து வேலைக்கு கிளம்பியபோது.. சத்யாவும் புறப்பட்டு வெளியே வந்தாள்..! இளஞ் சிவப்பு சுடிதாரில் அம்சமாக இருந்தாள்..!!
'' இன்னிக்கும் லேட்டா.. ??'' எனச் சிரித்தாள்.
'' லேட்டாதான் தூங்கினேன் ''
'' டெய்லியுமா..? ஏழரை மணிக்கு கதவை தட்டி எழுப்பி விடலாமானு பாத்தேன். அப்பறம் பாவம் தூங்கட்டும்னு விட்டுட்டேன்..!!''
'' தனியா இருந்தா நேரத்துக்கு தூக்கம் வரதில்ல..!! சரி.. நேத்து வந்தது என்னாச்சு..??''
புன்னகைத்தாள்.
'' ம்ம்... பாத்துட்டு போயிருக்காங்க..''
'' உனக்கு புடிச்சுதா.. ?''
லேசான வெட்கம் ''ம்ம்.. தேவல..''
'' பேசுனியா ?''
'' சே.. இல்ல..! இது என்ன சினிமாவா..?''
'' சினிமா இல்ல... இப்பல்லாம் நேச்சுரல்லயும் பேசிக்கறாங்க.. !!''
'' இல்லப்பா.. நான் பேசல.. ''
'' அப்ப.. உனக்கு ஓகேதான்.. ??''
'' ம்ம்.. !!'' முகத்தில் படர்ந்த மெல்லிய வெட்கத்துடன் தலையை ஆட்டினாள். துப்பட்டாவை இழுத்துப் போட்டாள். அது அவள் மார்புக்கு மேலே போயிருக்க.. அவளது விம்மிய மார்பின் திரட்சியைக் கண்டு ஒரு கணம் அசந்தேன்..!!
சத்யா உடனே.. ''ஓகே.. பை..!!'' என்று இடது கையின் மூன்று விரல்களை மட்டும் அசைத்தாள்.
நானும் கை அசைத்தேன்.
'' பை.. !!''
அவள் பின்னழகு அசைய வேகமாக நடந்து போக.. நான் பெருமூச்சுடன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.. !!
இரவு பத்து மணிக்கு நான் அந்த பாரை விட்டு வெளியே வந்த போது மழை தூரிக் கொண்டிருந்தது. அது அரை மணி நேரமாக இப்படியேதான் தூரிக் கொண்டிருக்கிறது.!! மழையை பொருட் படுத்தாமல் நான் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.. !!
என் வீடு போனபோது நன்றாகவே நனைந்திருந்தேன். சத்யா வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான் பைக்கை நிறுத்தி இறங்க.. சத்யா வந்து எட்டிப் பார்த்தாள்.. !!
''மழை பெய்து '' என்றாள்.
'' ஆமா.. சத்யா..!!'' சிரித்தேன்.
அவளும் சிரித்து விட்டாள்.
''குட்.. !! எப்படி நனையாம வந்தீங்க.. ??''
'' துளிக்கு துளி.. தப்பிச்சு வந்தேன்..!! நீ தூங்கல..??''
'' தூக்கம் வரல..! தலையை தொடைங்க மொதல்ல.. !!''
நான் சாவி எடுத்து கதவைத் திறக்க முயன்ற போது தள்ளாடினேன். என் நிதானம் தவறுவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் சத்யா முன் காட்டிக் கொள்ளக் கூடாது என என்னை நானே நிலைப் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் நான் முதலில் தள்ளாடியபோதே அவள் கவனித்து விட்டாள்.!
'' நிரு.. குடிச்சிருக்கீங்களா..?'' என சன்னமாகக் கேட்டாள்.
சட்டென..'' இல்ல..'' என்றேன்.
''அப்றம் நிக்க முடியாம தள்ளாடறீங்க..? பொய் சொல்லாதிங்க.. ? ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கீங்கதானே..?'?''
'' யாரு...நானா..? மழைல நனைஞ்சதால.. உடம்புலாம் கொஞ்சம் நடுங்குது... தட்ஸ் ஆல்..!!''
நான் பூட்டைத் திறக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.
'' தட்ஸ் ஆல்..!!'' அவள் வீட்டில் இருந்து இறங்கி ஓடி வந்தாள் ''ஆமா நீங்க குடிக்கல.!! குடுங்க இப்படி..!!'' என்னிடமிருந்து சாவியை வெடுக்கென பிடுங்கி.. பூட்டைத் திறந்து விட்டாள்.
'' தைரியமா வரே..? வீட்ல யாரும் இல்லையா ?''
'' ஹப்பா... என்ன கப்பு.. ?? ம்ம்ம்ம்..!!'' மூக்கை பொத்திக் கொண்டாள் ''காசில்லேனு மட்டமான சரக்க வாங்கி அடிச்சிங்களா.. ??''
'' விக்கறதே மட்டமான சரக்குதான்..! காசெல்லாம் இருக்கு.. எத்தனை வேணும் உனக்கு..?'' என் சட்டை பாக்கெட்டில் தேவை இல்லாமல் கை விட்டேன்.
'' குடிக்கலேனு கதை வேற...இதுல..??''
'' சும்மா சொன்னேன்...ஸாரி...!!'' சிரித்தேன் ''ஆமா.. உன் வீட்ல ஆள் இல்லையா ?''
'' இல்ல.. ''
'' ஏன்.. எங்க போனாங்க..?''
'' எங்க சொந்தத்துல ஒரு சாவு..! சாயந்திரமே போய்ட்டாங்க ரெண்டு பேரும்.. !!''
'' அப்ப நீ தனியாவா இருக்க..?''
'' ஆமா.. ''
'' ஏன் நீ போகல..?''
'' அது என்ன கல்யாண வீடா.. குடும்பத்தோட போறதுக்கு..? எழவு வீடு..!!''
'' குட்..'' என்றேன் ''பட்.. நான்தான் பேட்.. இன்னிக்குன்னு பாத்து குடிச்சிட்டு வேற வந்துருக்கேன்..!!''
'' ஏன் அதனால என்ன...?''
'' நத்திங்..''
'' சரி.. சரி உள்ள போய் துணிய மாத்துங்க மொதல்ல..! பாருங்க உங்க ட்ரெஸ்ஸெல்லாம் எப்படி நனைஞ்சிருக்குனு..??'' என்றாள் சத்யா. !!

No comments:

Post a Comment