CLOSE

Monday, 15 January 2018

சுபா & ஜேப்பீ - பகுதி - 8


கைவிரல்களை அவள் தலைமுடிக்குள் விட்டு கோதி விட்டு பின்னர் சீப்பு வைத்து அவள் தலைமுடியை சீவ ஆரம்பித்தான். சுமியின் தலையில் ஜேப்பீயின் கை படாத இடமில்லை. ஜேப்பீ தலைமுடியை வாரிவிடும் சுகத்தில் தன்னை மறந்து தன்னுடைய தலைமுடியை அவனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள். முதல் முறையாக அவன் கைகளில் முடியை கொடுத்திருக்கிறாள். அவன் அவளுடைய முடியை சீவிவிட்டுக்கொண்டே அவளிடம் “அக்கா.. உங்க முடி ரொம்ப அழகா இருக்கு….” என்றான். அவள் சிரித்துக்கொண்டே….”தாங்க்ஸ் ஜேப்பீ.” என்றாள். அவள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு சத்தம் அவள் காதருகில் கேட்டது. ஒரு கத்தரிக்கோல் வெட்டும் சத்தம் அது. 
ஒரு நிமிடம் பதறியவள் சற்று திரும்பிப்பார்த்தாள். ஜேப்பீயின் கைகளில் ஒரு கத்தரிக்கோல் இருந்தது. அவள் நிமிர்ந்து அவனை பார்த்தபோது…. அவன் மெல்ல அவளை பார்த்து சிரித்தான். பின்னர் சொன்னான்… “என்ன உங்களோட முடியை வெட்டிடேன்னு நினைச்சிங்களா…. சும்மா… இப்படி தான நீங்க எல்லாம் Suprise-னு சொல்லி என்னை Tease பண்றீங்க…” என்றான். சற்று நிம்மதி அடைந்தவளாய் சுமி…”விளையாட்டுக்குதான் ஜேப்பீ ஒரு சப்பிரைஸா பண்ணினோம். மத்தபடி ஒண்ணும் இல்ல…. இப்போ என்ன உனக்கு கோவமா…” என்றாள். “ஆமா… கொஞ்சம் கோவம் தான்…. அதுனால தான் உங்க முடியை கொஞ்சம் கட் பண்ணலாம்னு தோணுச்சு” என்றான் ஜேப்பீ. 
“உனக்கு அவ்ளோ கோவமா இருந்தா என்னோட முடியை கொஞ்சம் கட் பண்ணிக்கோ… நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்…” “உங்க முடியை கொஞ்சம் மட்டும்தான் கட் பண்ணலாமா… முழுசா தரமாட்டீங்களா?” என எதிர் கேள்வி கேட்டான். “என்ன ஜேப்பீ… உங்க அக்காவோட சேர்த்து எனக்கு மொட்டை அடிக்கலாம்னு பார்க்கிறயா?” என்றாள் சுமி. “உங்களுக்கும் மொட்டை அடிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு” என்றாள் ஜேப்பீ. “இப்போ நீ கோவமா இருக்க…. அதுனால இப்போதைக்கு என்னோட முடியை கொஞ்சமா மட்டும் கட் பண்ணு…. நீ சந்தோஷமா இருக்கும்போது சொல்லு…. நானும் என்னோட தலைமுடியை சந்தோஷமா  உன்கிட்ட தரேன்…. அப்போ என்னோட தலையை மொட்டை அடிச்சு விடு.” என்றாள் சுமி…. 
சுமியின் தலைமுடியை கொஞ்சம் வெட்டிவிட தயாரனான் ஜேப்பீ.
ஜேப்பே கையில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டே சீப்பை வைத்து அவள் முடியை சீவி விட்டான். அவ்வப்போது சுமியின் காதருகில் கத்தரிக்கோலை வெட்டுவது போல சத்தமிட்டு அவளை பதற்றப்படுத்தினான். எங்கே ஜேப்பீ தன்னுடைய தலைமுடியை மொத்தமாக வெட்டிவிடுவானோ என்ற பயம் மனத்திற்குள் சிறிது இருந்தாலும் தைரியாமாக அவனிடம் தலையை கொடுத்தாள். ஜேப்பீ சுமித்ராவின் தலைமுடியை சீவி அடியில் பிடித்தான். ஒரு மூன்று இன்ச் அளவு வைத்து கைகளில் மொத்தமாக பிடித்தான். 
அவளுடைய முடி அடர்த்தியாக இருந்ததால் சற்று சிரமத்துடன் விரல்களுக்கு இடையில் அவள் முடியை பிடித்துக்கொண்டு கத்தரிக்கோலை அவள் முடியில் வைத்தான். ஏதோ யோசித்தவன் அவள் முடியை அப்படியே எடுத்து அவள் முன்னர் காண்பித்து “இவ்ளோ முடி வெட்டினால் போதுமா?” என்று கேட்டான். அவளுக்கு அது கொஞ்சம் அதிகமாகவே தோன்றியது… ஆனால் அவன் மனத்தை புண்படுத்த விரும்பவில்லை. “போதும் ஜேப்பீ…. என்மேல கோவமா இருந்தா இன்னும் கொஞ்சம் முடியை சேர்த்து வெட்டிக்கோ.” என்றாள். 
அவன் சிரித்துக்கொண்டே “இல்ல அக்கா..இது போதும்” என்றான். அவள் மனது அவனுக்கு புரிந்தது. அவனிடம் சொல்லாமல் வந்ததை இவன் கோவத்துடன் சொன்னதும் அவள் குற்ற உணர்ச்சியில் இன்னும் கொஞ்சம் முடியை வெட்டிக்கொள்ளுமாறு கூறுகிறாள் என்று. அவன் மனது சற்று இளகியது. அவன் தான் விரல்களை மூன்று இன்ச்-ல் இருந்து இரண்டு இன்ச்க்கு இறக்கினான். பின்னர் கத்திறில் இரண்டு முறை கத்தரிக்கோலை வெட்டிப்பார்த்தான். அப்போது உள்ளிருந்து சுபா குளித்துவிட்டு தலையில் துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அவள் கண்ட காட்சி சற்று அதிர்ச்சியாக இருந்தது. தான் தோழி தலைமுடியை விரித்துப்போட்டு அமர்திருக்கிறாள், 
அவளுடைய தம்பி கையில் கத்தரிக்கோலுடன் அவள் முடியை வெட்ட  அயுத்தமாக இருக்கிறான். அவள் என்ன நடக்கிறது என கேட்கலாம் என அவர்களை நோக்கி அருகே வருவதற்கும் ஜேப்பீயின் கத்தரிக்கோல் சுமியின் முடியை வெட்டுவதற்கும் சரியாக இருந்தது. கத்தரிக்கோல் சுமியின் முடியை கத்தரித்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்த அமைதியில் மூவரின் காதுகளிலும்..”ஸ்ஸ்க்ரீரீச்ச்….ஸ்ஸ்க்ரீரீச்ச்” என்று முடியை வெட்டும் சத்தம் தனியாக ஒலித்தது. சுமி கண்களை மூடியபடியும் சுபா, ஜேப்பீ இருவரும் அவள் தலைமுடி கத்தரிக்கோலின் இடையில் மாட்டி வெட்டுப்படுவதையும் ரசித்துக்கொண்டிருந்தனர்.  
ஒரு நிமிடத்தில் சுமியின் தலைமுடியின் அடிப்பாகத்தை ஜேப்பீ கட் பண்ணியிருந்தான். திரும்பிப்பார்த்தபோது அவள் கையில் கொஞ்சமாக வெட்டப்பட்ட சுமியின் முடி இருந்தது. அவன் அதை சுமியிடம் நீட்டினான். அவள் “இல்ல ஜேப்பீ… நீதான ஆசைப்பட்ட.. இந்த முடியை நீயே வச்சிக்கோ” என்றாள்.  அங்கு என்ன நடத்திருக்கும் என சுபாவால் யூகிக்க முடிந்தது. சுமி எழுந்து நின்றாள். அவளுடைய trimming செய்யப்பட்ட முடி அவளுடனே துள்ளி எழுந்தது. திரும்பி நின்று ஜேப்பீயை பார்த்து “தம்பிக்கு இப்போ கோவம் போயிருச்சா?” என்றாள். கையிலிருந்த வெட்டப்பட்ட முடியை அருகில் வைத்து விட்டு புன்னகையுடன் அவளை பார்த்தான். 
சுமி சிரித்துக்கொண்டே அவனை பாசமாக கட்டிப்பிடித்தாள். அவனும் பதிலுக்கு அவளை அனைத்துக்கொண்டான். அவளுடன் விரிந்துகிடந்த அவளுடைய அடர்த்தியான தலைமுடியையும் சேர்த்து அனைத்துக்கொண்டான். அதைப்பார்த்துக்கொண்டிருந்த சுபா சிரிப்புடன் “போதும் உங்க அக்கா தம்பி பாசமெல்லாம்… முதல்ல ரெண்டு பேரும் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க…” என்றாள்.
சுபா காலை உணவு தாயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் சுமியும் ஜேப்பீயும் ஒருவர் பின் ஒருவராக சென்று குளித்துவிட்டு வந்தனர். ஜேப்பீ ஒரு t-shirt மற்றும் tracksuitஅணிந்துவந்தான். சுமி ஒரு jeans மற்றும் வெள்ளை நிற Kurti-ல் வந்தாள். வெள்ளைநிற Kurti-ல் தலைமுடியை விரித்துவிட்டு அழகாக இருந்தாள் சுமி. மூவரும் சாப்பிட்டுவிட்டு வெளியில் இருந்த வராந்தாவில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சுபா தலையில் இருந்த துண்டை கழத்திவிட்டு ஈரமான தலைமுடியை காயவைக்க அயுத்தமானாள். அப்போது சுமி அவளை காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று தன்னுடைய காமிராவை எடுத்து வந்தாள். 
சுபாவிடம் சொல்லிவிட்டு ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தாள். சுபா தன்னுடைய தலைமுடியில் சுற்றியிருந்த துண்டை கழத்தினாள். அடர்த்தியான அவளுடைய ஈரக்கூந்தல் சரிந்து வந்து மடியில் விழுந்தது. சுபா ஒரு nighty அணிந்து இருந்தாள். அவள் தலைமுடியில் இருந்த ஈரம் அவள் ஆடையிலும் பரவியது. இரு கைகளிலும் துண்டை பிடித்து தன்னுடைய முடியை துவட்ட ஆரம்பித்தாள். தலைமுடியை முன்னால் எடுத்துப்போட்டு கழுத்தின் அடிப்பகுதியிலிருந்து முடியின் கீழ்வரை துவட்டினாள்.  
வெயில் நன்றாக அடிக்க ஆரம்பித்தது. சுபா எழுந்து நின்று வெயிலில் தன்னுடைய முடியை கவிழ்த்து போட்டு விரித்துவிட்டாள். அவள் இன்னும் சற்று குனிந்தாள் அவளுடைய தலைமுடி தரையில் தொட்டுவிடும். சூரியக்கதிர்கள் சுபாவின் கூந்தலை அனைத்துக்கொள்ள ஆரம்பித்தது. கருகருவென நீளமாக வளர்ந்திருந்த சுபாவின் தலைமுடி இப்போது சூரிய ஒளியில் மிண்னுவது போல இருந்தது. அனைத்தையும் வீடியோவில் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள் சுமி. அவளருக்கில் அமர்ந்து சுமியின் தலைமுடியை தன்னுடைய மொபைல்-ல் சேகரித்துக்கொண்டிருந்தான் ஜேப்பீ. 
சுமி அதை கவனித்தாள் என்றாலும் அவனை தடுக்கவில்லை. சிறிது நேரத்தில் மூவரும் உள்ளே சென்றனர். சுபாவின் முடியில் இன்னும் சிறிது ஈரப்பதம் இருந்தது. அவளுடைய மிருதுவான கூந்தலை மேலும் மென்மையாக இருந்தது.
அவர்கள் உள்ளே வந்த சிறிது நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. பிரியா வந்திருந்தாள். உள்ளே வந்ததும் சுமி, சுபா இருவரும் தலைமுடியை விரித்துப்போட்டு நிற்பதை கவனித்தாள். சற்று பொறாமை இருந்தாலும் தன்னுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்தாள். அவளுக்கே சிரிப்பு வந்தது. அவள் மனதை புரிந்துகொண்டவள்போல சுபா “இன்னும் கொஞ்ச நேரத்துல நானும் உன்னைமாதிரி மொட்டை தலையோடதான் இருப்பேன்….” என்றாள். அனைவருமே சிரித்துவிட்டனர்.
சுமி: சுபா… எப்போ மொட்டை அடிக்கலாம்.
சுபா: ஆரம்பிக்கலாம்.. நான் போய் என்னோட சேலையை கட்டிட்டு வறேன்.
பிரியா: எதுக்கு சுபா சேலையெல்லாம்… இந்த Nighty-யே நல்லாதான இருக்கு.
சுபா: அது ஜெயாக்குட்டியோட விருப்பம். அதுனாலதான்.
பிரியா: ஓ… சார் விருப்பமா அது.. அப்போ கண்டிப்பா நீ சேலை கட்டிட்டு வந்து தான் மொட்டை அடிக்கணும்.
சுமி: சரி… அப்போ நீ போய் ரெடி ஆயிட்டு வா… நாங்க காத்திருக்கோம்.
ஜேப்பீ: நீங்க ரெடி ஆகலையா?
பிரியா: நீ எதுக்கு ரெடி ஆகணும் சுமி…
சுமி: ஒண்ணும் இல்ல பிரியா… சுபாவோட மொட்டையை நான் டீவீ-ல தொகுத்து வழங்குற மாதிரி வீடியோ ரெக்கார்ட் பண்றோம். அதுக்கு தான் அவன் என்னை ரெடி ஆகலையானு கேட்கிறான்.
பிரியா: சூப்பர். அப்போ எல்லாமே சரியா போய்ட்டு இருக்கு.
சுபா சேலையை மாற்றிவர உள்ளே சென்றுவிட்டாள். சுமி,ஜேப்பீ, பிரியா மூவரும் அடுத்து என்ன செய்வது என பேசிக்கொண்டிருந்தனர். சுபா வந்தவுடன் சுமி வீடியோவில் பேசுவதாகவும், ஜேப்பீ சுபாவுக்கு மொட்டை அடிப்பது என்றும், பிரியா அதனை வீடியோவில் ரெக்கார்ட் செய்வது என்றும் முடிவெடுத்தனர். சுமி காமிராவை எப்படி ரெக்கார்ட் செய்வது என பிரியாவிடம் காட்டினாள். அருகிலிருந்த ஜேப்பீ அப்போது சுமியின் முடியை அடிக்கடி தொட்டுப்பார்த்தான். சுமி எதுவும் சொல்லவில்லை 
ஆனால் பிரியா அவனை கவனித்தாள். பிரியா காமிராவை வாங்கி சுமியை தள்ளி நிற்க சொன்னாள். தள்ளி நின்ற சுமியின் தலைமுடியை ஜேப்பீ விளையாடுவதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தாள். ஜேப்பீ அவள் தலைமுடியை நுகர்ந்து பார்த்தான். பிரியா சிரித்துக்கொண்டே அனைத்தையும் ரெக்கார்ட் செய்தாள். மூவரும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர்.
உள்ளிருந்து சுபா புடவையை மாற்றிவிட்டு வெளியே வந்தாள். அங்கிருந்த அனைவரின் கண்களும் அவளையே பார்த்தன. பிங்க் நிற புடவையில் மிகவும் அழகாக காட்சியளித்தாள். அவளுடைய நீளமான தலைமுடி மயில்தோகை போல படர்ந்து விரிந்து அவளுக்கு மேலும் அழகூட்டியது. விரித்து விட்ட அவளுடைய தலைமுடி தொடைவரை நீண்டு இருந்தது. பிரியா தன்னுடைய கண்களை இமைக்காமல் சுபாவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். சுபாவின் தலைமுடி தன்னுடைய தலைமுடியைவிட அழகாக இருப்பதாக பிரியாவிற்கு தோன்றியது. ஒருவேளை உஷா இங்கிருந்தால் அவளுக்கும் அப்படியே தோன்றியிருக்கும் என ப்ரியா நினைத்தாள். சுமியின் எண்ணம் அதிகமாக இருந்தது. 
எப்பொழுதுமே சுமி தன்னுடைய முடி சுபாவின் அளவுக்கு அடர்த்தியாக இருந்தாலும் இன்னும் நீளமாக இல்லை என்ற வருத்தம் இருக்கும். இன்று ஜேப்பீ அவளுடைய முடியை கொஞ்சம் வெட்டிவிட்ட பிறகு சுபாவின் தலைமுடியைவிட இன்னும் நீளம் குறைந்ததுபோல இருந்தது. மேலும் சுமியின் முடி சற்று சுருள்சுருளாக இருப்பதால் அவள் கண்களில் சுபாவின் கூந்தல் பட்டுப்போல மின்னுவதாக இருந்தது. சுபாவின் தலைமுடியை ஆச்சரியதுடன் பார்த்த சுமி மற்றும் பிரியாவின் கண்களை பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
மூவரும் சுபாவை பார்த்துக்கொண்டிருக்க, சுபா முதலில் வந்து நின்றது ஜேப்பியின் முன்னால்தான். அவன் அருகில் வந்து நின்று அவனிடம் “அக்கா அழகா இருக்கேனா ஜெயாகுட்டி?” என்றாள். அவன் கண்கள் பெற்மையையும் தாண்டி அக்கா அவன்மீது கொண்ட பாசத்தை நினைத்து சற்று கர்வமாககூட இருந்தது. அவனால் வார்த்தைகளால் எதையும் சொல்ல முடியவில்லை. அவன் சுபாவை அனைத்துக்கொண்டான். சுபாவை மட்டுமல்ல அவளுடைய அடர்த்தியான கூந்தலையும் அனைத்துக்கொண்டான். 
சுபா ஜேப்பேயின் மன நிலையை புரிந்துகொண்டாள். எதுவும் சொல்லாமல் அவனை அனைத்துக்கொண்டாள். நெகிழ்வான இந்த தருணங்கள் அனைத்தையும் பிரியா ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள். ஜேப்பீ இயல்பு நிலைக்கு திரும்பியதும் சுபா அவனிடம் “ஜெயாகுட்டி.. அக்காவோட தலைமுடியை மொட்டை அடிக்க ரெடியா?” என்றாள். ஜேப்பீ அவள் கூந்தலை அள்ளி முன்னால் எடுத்து முத்தம் கொடுத்து ஆமோதித்தான். அங்கிருந்த ஒரு நாற்காலியை அடுத்து வைத்தாள் சுமி. தன்னுடைய நீளமான தலைமுடியை எடுத்து பின்னால் போட்டு நாற்காலியை நோக்கி நடந்தாள் சுபா. அவளுடைய அலைக்கூந்தல் அவளுடன் அசைந்துகொண்டே சென்றது.
பிரியா தன்னையும் அறியாமல் கையில் இருந்த காமிராவை பிரியாவிடம் கொடுத்தாள். பின்னால் அருகில் இருந்த ஒரு சீப்பை எடுத்து சுபாவின் தலைமுடியை வாரிவிட நினைத்தாள். சுபா அந்த நாற்காலியில் அமர்ந்ததும் பிரியா சுபாவின் பின்னால் சென்று அவளுடைய தலைமுடியை கைகளில் எடுத்தாள். சுபாவின் தலைமுடி மிகவும் அடர்த்தியாகவும் கனமாகவும் இருந்தது. சுபாவின் முடியை கையில் பிடித்திருந்தபோது பிரியா உஷாவின் தலைமுடியை பிடித்திருப்பதுபோல உணர்ந்தாள்.
 வீட்டில் சில நேரங்களில் பிரியா உஷாவிற்கு தலைவாரி ஜடை பின்னிவிடுவாள். தன்னைவிட அக்காவின் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பது அவளுக்கு பெருமையாகவும் சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். வீட்டில் அனைவரும் மொட்டை போடவேண்டும் என்று கூறியபோது தன்னுடைய தலைமுடியை இழக்கும் வருத்தத்தைவிட அக்காவும் அவளுடைய அழகான தலைமுடியை மொட்டை அடிக்கப்போகிறாள் என்ற சந்தோஷம்தான் இருந்தது. அத்த அவள் வாய்விட்டு உஷாவிடம் சொல்லியிருக்கிறாள்.
சில நேரம் உஷாவிற்கு தலைவாரும்போது அவள் காதருகில் சென்று “அக்கா… உனக்கு நானே மொட்டை அடிச்சுவிடவா?” என்று கேட்டிருக்கிறாள். உஷா சிரித்துக்கொண்டே பிரியாவின் தலையில் கொட்டுவாள்.
மீண்டும் அந்த நினைவுகள் அவள் மனதில் எழுந்தது. நேற்று பிரியாவால் உஷாவிற்கு மொட்டை அடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. இன்று சுபாவின் தலைமுடியை கையில் பிடித்து வாரிவிடும்போது மீண்டும் அந்த எண்ணம் வந்தது. துணிந்து சுபாவிடம் அவளுடைய தலையை தானே மொட்டை அடித்துவிடவா எனக்கேட்க நினைத்தாள். ஆனால் அருகில் இருந்த ஜேப்பீயை பார்த்தாள். சுபாவின் நீண்ட தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று அவன் காத்திருக்கிறான். அதிர்ஷ்டவசமாக நேற்று தன்னுடைய வீட்டில் உள்ள நான்கு பெண்களின் நீளமான தலைமுடியை அவள் கைகளால் மொட்டை அடித்து இருக்கிறான்.  
ஆனால் அவன் எதிர்பார்த்து இருப்பது சுபாவிற்கு மொட்டை அடிப்பதை மட்டுமே. மேலும் அதனை பார்ப்பதற்காக சுமி இவ்ளோதூரம் பயணித்து இருக்கிறாள். அதனால் தன்னுடைய ஆசைகளை பிரியா மனத்திற்குள் அடக்கிக்கொண்டாள். பிரியா சுபாவின் அழகான தலைமுடியை சீவிக்கொண்டிருக்க சுமி அதை அழகாக காமிராவில் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள். ரெகார்ட் செய்யும்போது தன்னுடைய வர்ணனையும் சேர்த்து சுபாவின் தலைமுடியின் அழகா தன்னுடைய வார்த்தைகளால் வீடியோவில் இணைத்துக்கொண்டிருந்தாள். 
சுமி குறிப்பிட்ட வர்ணனைகள் அனைத்தும் சுபாவின் தலைமுடியை மிகைப்படுத்துவதுபோல இல்லை. அனைத்தும் அவள் கூந்தலுக்கு பொருந்திப்போயிருந்தது. பிரியா சுபாவின் தலைமுடியை சீவி முடித்தபோது சுமியும் தன்னுடைய வர்ணனையை முடித்திருந்தாள்.
 இப்பொழுது சுபாவிற்கு மொட்டை அடிக்கும் நேரம் நெருங்கி இருந்தது. இவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டே வர்ணனை செய்துகொண்டிருந்த சுமி, சுபாவிற்கு மொட்டை அடிக்கும்போதும் அதே சிரிப்புடம் பேச முடியுமா என யோசித்துக்கொண்டிருந்தாள். அதனால், மொட்டை அடிக்கும்போது வீடியோ மட்டும் எடுக்கலாம், எதுவும் பேச வேண்டாம் என நினைத்தாள். சுபா புன்னகையுடன் நிமிர்ந்து ஜேப்பீயை பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது. அவன் நீண்டநாள் காத்திருப்பு இப்போது முடியப்போகிறது. அவள் அள்ளியெடுத்து முத்தம் கொடுத்து மகிழ்ந்த அவன் அக்காவின் தலைமுடியை மொட்டை அடிக்க நேரம் வந்துவிட்டது. 
அவன் மெல்ல நடந்து சுபாவின் அருகில் சென்றான். அவன் கைகளில் சவரக்கத்தி தயாராக இருந்தது. அவள் அவன் கண்களை பார்த்துவிட்டு தன்னுடைய தலைமுடியை அவனிடம் அர்ப்பனிப்பதுபோல குனிந்துகொண்டாள். அவளுடைய தலைமுடி சற்று சரிந்து வந்து முன்னால் விழுந்தது. அவன் கையில் இருந்த கத்தியிடம் வந்து சரணடைந்து விடுவதுபோல இருந்தது. ஜேப்பீ சுபாவின் தலைமேல் கைவைத்து அவள் தலைமுடியை தடவினான். மிகவும் மிருதுவாக இருந்தது. அவளுடைய தலைமுடியில் இன்னமும் சற்று ஈரப்பதம் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. 
அவன் அருகில் அவளுடைய தலைமுடியை ஈரமாக்குவதற்கு வைத்திருந்த பாத்திரத்தை பார்த்தான். ஆனால் அதை எடுக்க அவனுக்கு மனமில்லை. சுபா நிமிர்ந்து பார்த்தாள். ஜேப்பீ அவளுடைய தலையை இப்போது இருக்கும் ஈரப்பதத்துடனே மொட்டை அடிக்க நினைக்கிறான் என அவளுக்கு புரிந்தது. அவளுடைய விரிந்த கூந்தலை கையில் ஏந்தியபடி நின்றிருந்தான். அவன் மனதை படித்தவள்போல அவனிடம் “உனக்கு எப்படி பிடிக்குமோ அப்படியே எனக்கு மொட்டை அடிச்சு விடுடா… எனக்கு பரவாயில்லை” என்றாள். ஜேப்பீ பதிலுக்கு சிரித்தான். பிரியா நடப்பது அனைத்தையும் ரெகார்ட் செய்து கொண்டிருந்தாள்.
ஜேப்பீ சுபாவின் பின்னால் சென்று அவளுடைய தலைமுடியை வாரிவிட்டான். அவள் கூந்தலை மூன்றாக பிரித்தான். அவள் உச்சந்தலையில் இருந்து பின் பக்கமாக இருந்த முடியை அப்படியே பின்பக்கமாக வாரிவிட்டான். உச்சந்தலைக்கு முன்னால் இருந்த கூந்தலை இரண்டாக வலது, இடது புறம் பிரித்தான். சுபாவின் அடர்த்தியான முடி இப்போது மூன்று திசைகளில் இருந்தது. நேற்று நான்கு பெண்களுக்கு மொட்டை அடித்தது போல இல்லாமல் இன்று சுபா நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவள் முன்னால் நின்று மொட்டை அடித்தால், வீடியோவில் அவளுடைய முகம் தெரியாது என்பதால் மூன்றாக பிரித்து முதலில் வலது இடது புறம் மொட்டை அடித்துவிட்டு பின்னர் பின்புறம் மொட்டை அடிக்க நினைத்தான். 
அவன் சுபாவின் கூந்தலை மூன்றாக பிரித்துவைத்த விதம் அவன் எவ்வாறு மொட்டை அடிக்கப்போகிறான் என சுமிக்கும், பிரியாவிற்கும் புரிந்தது. ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த பிரியா தான் கையில் இருந்த காமிராவை சுமியிடம் கொடுத்தாள்.
சிறுவயதுமுதல் இந்த நீளமான தலைமுடி அவளுடைய ஒரு அங்கமாக இருந்தது. இப்போது கணநேரத்தில் அதை இழக்கப்போகிறாள் என்ற பயம் வந்தது. சுபாவின் மனம் சற்று படபடப்பாக இருந்தாலும் அத்த காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். ஜேப்பீ கையில் இருந்த கத்தியை சுபாவின் கண்முன்னால் விரித்தான். அவன் கைகள் சற்று நடுங்கியது. நேற்று நான்கு பெண்களின் நீளமான கூந்தலை மொட்டை அடித்தபோதுகூட அவன் கைகள் நடுங்கவில்லை. 
ஆனால் இப்போது அவன் நினைவுதெரிந்ததுமுதல் தினமும் தொட்டுப்பார்த்து, முத்தம் கொடுத்து, அள்ளியெடுத்து விளையாடி மகிழ்ந்த அவன் அக்காவின் தலைமுடியை மொட்டையடித்து மொத்தமாக இழக்கப்போகிறான். அதனால் சற்று தயங்கினான். ஆனால் இப்போது வேறுவழியில்லை. மனதை வலிமையாக்கிக்கொண்டு சுபாவின் தலையில் கத்தியை வைத்தாள். அவள் நெற்றியின் வகிடில் வைத்து அவளுடைய இடதுபுறமாக மொட்டை அடிக்க ஆரம்பித்தான். அவனுடைய முதல் கீட்றில் அவள் நெற்றியில் இருந்த கூந்தல் கற்றை தனியாக எழுந்தது. ஆனால் கீழ விழவில்லை. 
அவனுடைய அடுத்தடுத்த இரண்டு மூன்று வீச்சுகளில் அவள் தலைமுடியின் கற்றைகள் மொத்தமாக வழிந்து வந்து அவள் மடியில் விழுந்து, முடியின் கனம் அதிகமாக இருந்ததால் அப்படியே கீழே விழுந்தது. சுபாவின் தலைமுடி மெல்ல வழிந்து வந்ததை அப்படியே அழகாக காமிராவில் படம்பிடித்தாள் சுமி. ஜேப்பீ மீண்டும் சுபாவின் தலையில் கத்தியை வைத்து மழிக்க துவங்கினான். சுமி சற்று அருகில் வந்து படம்பிடித்தாள். சுபாவின் புன்னகைமாறாத முகமும், அதே நேரத்தில் அவளுடைய தலைமுடி மொட்டை அடிக்கப்படுவதும் தெளிவாக இருக்குமாறு ரெக்கார்ட் செய்தாள்.
அவள் தலையில் தண்ணீர் ஊற்றாமல் இருப்பதால், ஜேப்பீ பொறுமையாக சுபாவின் தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தான். 
ஈரமில்லாத அவளுடைய விரிந்த தலைமுடி ஜேப்பீயின் கத்தியின் வீச்சுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் கற்றைகற்றையாக வழிந்து வந்து அவள் காலடியில் விழுந்து கொண்டிருந்தது. ஜேப்பீ சுபாவின் இடதுபுறம் மொட்டை அடித்து முடித்துவிட்டு அவளுடைய வலத்துபுறம் வந்தான். சுபா மெல்ல தன்னுடைய கைகளால் இடதுபுற தலையை தடவிப்பார்த்தால். மிகவும் வழுவழுப்பாக இருந்தது. தன் தலையில் கைவைக்கும் போது ஒருவித கூச்சமாக இருந்தது. ஜேப்பீ இப்போது சுபாவின் வலதுபுறம் சிரைக்க ஆரம்பித்தான். இப்போது அவன் கைகளில் நடுக்கம் இல்லாமல் சகஜமாக இருந்தது. சற்று வேகமாகவே சிரைக்கத்துவங்கினான். 
வழக்கமாக சுபாவின் அடர்த்தியான முடிக்கற்றைகளை அவள் ஜடைபின்னும்போது மட்டுமே இவ்வளவு அருகில் நின்று ரசித்திருக்கிறான். இப்போது அதே அடர்த்தியான அவளுடைய தலைமுடி கற்றைகள், கத்தியால் மழிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக கீழே வழிந்து விழுந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் அதை ரசித்துக்கொண்டிருந்தாலும் அவன் மனதில் சிறிது வலி இருந்துகொண்டிருந்தது. மீண்டும் அவளுடைய நீண்ட கூந்தலை பிடித்து விளையாட சில வருடங்கள் ஆகும். அவன் யோசனைகள் ஒருபுறமிருக்க அவன் கைகள் சுபாவின் வலதுபுற தலைமுடியை மொட்டை அடித்து முடித்திருந்தது. அவன் நகர்ந்து சுபாவின் பின்னால் சென்றான்.
சுமி காமிராவில் சுபாவின் காலடியில் இருந்த மொட்டையடிக்கப்பட்ட அவளுடைய தலைமுடியை அருகில் சென்று படம்பிடித்தாள். 
தன் கைகளால் கீழேயிருந்த முடியை தொட்டுப்பார்த்தாள். ஜேப்பீ ஒரு கையால் சுபாவின் தலையை குனியவைத்துக்கொண்டே மறு கையால் அவள் பின்னந்தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். சுமி மெல்ல நகர்ந்து வந்து ஜேப்பீயின் அருகில் நின்று ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள். ஜேப்பீ தன்னுடைய தலையை குனியாவைத்ததும், சுபா தன் காலின் கீழ் இருந்த அவளுடைய தலைமுடியை பார்த்தாள். தான் தலைசீவும்போது இருப்பதைவிட அதிகமான தலைமுடி கீழே இருப்பது போல உணர்ந்தாள். 
ஒருகனம் மனது கஷ்டப்பட்டது. தினமும் தலைவாரி ஜடை பின்னும்போது கண்ணாடியில் அவளுடைய நீளமான முடியை பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்  “கண்டிப்பா இந்த முடியை சீக்கிரம் மொட்டை அடிக்கணும்” சொல்லிக்கொள்வாள். மனதளவில் தன்னுடைய தலையை மொட்டை அடித்து இந்த அழகான தலைமுடியை இழப்பதற்கு அவள் தயாராகவே இருந்தாள். எனினும் கண்முன்னே உயிரற்று விழுந்து கிடக்கும் அவளுடைய தலைமுடி இப்போது அவளுக்கு பாரமாக இருந்தது. ஜேப்பீ அவளுடைய பின்னந்தலையை மொட்டை அடித்துக்கொண்டிருப்பது அவளுக்கு தெளிவாக இருந்தது. ஆனால் அவள் தலைமுடி எவ்வாறு விழுகிறது என அவளுக்கு தெரியவில்லை. பிரியா ஆர்வமாக சுபாவின் மொட்டையை பார்த்துக்கொண்டிருந்தாலும் அவள் மனது கூந்தலை இழக்கும் நொடிகள் எப்படி இருக்கும் என உணர்ந்தது. 
அவள் அமைதியாக சென்று சுபாவின் கைகளை பற்றிக்கொண்டாள். ஜேப்பீயின் கைகளில் இருந்த கத்தி கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக சுபாவின் கூந்தலை அறுவடை செய்து கொண்டிருந்தது. சுபாவின் தலைமுடி மொத்தமொத்தமாக கீழே விழுந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஜேப்பீ தன்னுடைய கடைசி கீற்றினால் சுபாவின் கடைசி கூந்தல் கற்றையை மழித்தான். அவளுடைய அழகிய கூந்தல் மொத்தமாக இப்போது தரையில் சரணடைந்தது.
சுபா எழுந்து நின்று தன்னுடைய தலையை தடவிப்பார்த்தாள். அருகிலிருந்த பிரியா அவளை புன்னகையுடன் பார்த்தாள். சுமி காமிராவை முன்னாள் எடுத்துவந்து சுபாவை படம்பிடித்தாள். சுபா குனித்து காலின் கீழ் இருந்த உயிரற்ற தன்னுடைய தலைமுடியை பார்த்தாள். அவள் குனிந்து அந்த தலைமுடியை தொட்டுப்பார்ப்பாள் என சுமியும் பிரியாவும் நினைத்தபோது அவள் திரும்பி ஜேப்பீயை பார்த்தாள். 
மற்ற இருவரும் அப்போதுதான் அவனை கவனித்தனர். அவன் கண்களில் நீர் வழிந்தது. சுபாவிற்கு தெரியும் அவனால் அழாமல் இருக்க முடியாதென்று. அவள் அவனை அணைத்துக்கொண்டாள். ஜேப்பீ அவளுடைய மொட்டைதலையை மீண்டும் மீண்டும் தடவிப்பார்த்தான். அவன் கண்ணீர் பீறிட்டுவந்தது. சுபா அவனை சமாதானப்படுத்தினாள். அவன் சகஜநிலைக்குவர சிறிதுநேரமானது. அவன் இன்னும் சிறுவனாகதான் இருக்கிறான் என்பதை சுமியும் பிரியாவும் புரிந்துகொண்டனர்.
சுபாவும் ஜேப்பீயும் அங்கிருந்து நகரவும் சுமி காமிராவை நிறுத்திவைத்துவிட்டு கீழிருந்த சுபாவின் தலைமுடியை அள்ளி எடுத்தாள். மிகவும் நீளமான மற்றும் கனமான தலைமுடி. சுமியின் மனமும் சற்று சங்கடப்பட்டது. தன்னுடைய நெருங்கிய தோழியின் அழகான தலைமுடி இப்போது மொட்டை அடிக்கப்பட்டுவிட்டது. அவள் அதை எடுத்து ஒரு துணியில் கட்டி வைத்தாள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பிரியா சுமியின் அருகில் வந்தாள். அங்கிருந்த மூன்று பெண்களில் இரண்டுபேர் இப்போது மொட்டை தலையுடன் இருக்கின்றனர். சுமி மட்டும்தான் இன்னும் நீளமான தலைமுடியோடு இருக்கிறாள். பிரியா சுமியின் தலைமுடியை தொட்டுப்பார்த்தாள். சுமி பிரியாவை பார்த்து சிரித்தாள்.
பிரியா: சுமி.. நீ எப்போ மொட்டை போட்டுக்கபோற?… உன்னைவிட நீளமான முடி இருந்த சுபாவே இப்போ மொட்டை போட்டாச்சு.
சுமி: உண்மைதான் பிரியா.. எனக்கு ஆசைதான்.
பிரியா: அப்புறம் என்ன மொட்டை அடிச்சுக்கலாம்ல….
சுமி: கண்டிப்பா நானும் மொட்டை அடிச்சுப்பேன். அதுவும் ஜேப்பீ கையாளதான். ஆனால் இன்னும் நான் என்னோட அம்மாகிட்ட சொல்லல…
பிரியா: நீ சரினு சொன்ன நானே உனக்கு இப்போ மொட்டை அடிச்சுவிடலாம்னு நினைச்சேன்.
சுமி: ஜேப்பீ மாதிரி உனக்கு மொட்டை அடிக்கிற ஆசை வந்திருச்சா?
பிரியா: ஜேப்பீயை பார்த்துதான் வந்திருக்கு.
சுமி: ஹாஹா…
பிரியா: சரி… இப்படி உட்காரு.
சுமி இப்போது சுபா மொட்டையடித்த அதே நாட்காலியில் அமர்ந்தாள். பிரியா அவள் முன்னால் வந்து நின்று சுமியின் தலைமுடியில் இருந்த க்லிப்பை கழத்தினாள். சுமியின் அடர்த்தியான முடி இப்போது படர்ந்து விரிந்தது. பிரியா தான் கைகளால் சுமியின் தலைமுடியை கோதிவிட்டு பிரித்துவிட்டாள். பின்னால் ஜேப்பீ வைத்துவிட்டு சென்ற கத்தியை கையில் எடுத்தாள்.   அதிலிருந்த பிளேடை எடுத்து வெளியே வைத்தாள். சுமியின் உச்சந்தையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கையி இருந்த கத்தியை அவள் தலையில் வைத்தாள். பிரியா தலையில் கத்தியை வைத்ததும் சுமி ஒரு குளிர்ச்சியை உணர்ந்தாள். ஒரு புதுவித உணர்வு வந்தது. தநினையும் அறியாமல் கண்களை மூடினாள். மெல்ல தலையை குனிந்தாள். 
பிரியா அவளுக்கு மொட்டை அடிப்பது போல கத்தியை அசைத்தாள். உண்மையில் அந்த கத்தியில் ஒரு பிளேடு இருந்திருந்தால் இந்நேரம் சுமியின் தலைமுடியிலிருந்து ஒரு கற்றை முடி தனியாக வந்திருக்கும். தலைமுடியை இழக்காமல் மொட்டை அடிக்கும் சுகத்தை சுமி அனுபவித்தாள். அவள் தலையில் வைத்த கத்தியை பிரியா எடுத்தாள். சுமியின் தலைமுடியை அள்ளி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு  அங்கிருந்து விலகினாள். சுமியின் மனதில் இப்போது மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டிவிட்டாள் பிரியா. மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வம் இப்போது அவள் மனதில் படர ஆரம்பித்தது.
அதன்பின் சிறிது நேரத்தில் உஷாவின் வீட்டிலிருந்து அனைவரும் திரும்பி வந்தனர். சுபாவின் மொட்டை தலையை பார்த்து கீதா கிண்டலடித்தாள். உஷா அவளை அதட்டிவிட்டு சுபாவை கட்டிப்பிடித்து வாழ்த்தினாள். சுபாவின் மொட்டை தலையில் ஒரு முத்தம் கொடுத்தாள். அன்று மாலை உஷாவின் குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டனர். அன்று இரவு சுபாவின் அப்பா வந்து சேர்ந்தார். எப்பொழுதும் நீளமான தலைமுடியுடன் இருக்கும் தன்னுடைய மகளை மொட்டை தலையுடன் பார்க்க அவர் மனது வருத்தப்பட்டது. கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு சமாதானம் ஆனார். 
மறுநாள் சுபா, ஜேப்பீ, அப்பா, சுமி அனைவரும் சென்று திருப்பதி எழுமலையானை தரிசனம் செய்தனர். போகும்போது சுபாவின் மொட்டையடித்த தலைமுடியை கல்யாணகட்டாவில் போட்டுவிட்டனர். அடுத்தநாள் இரவு பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். ஒரு வாரம் கழித்து சுமி சுபாவின் வீட்டிற்கு வந்தாள். அவள் கண்கள் முதலில் ஜேப்பீயை தேடியது. ஜேப்பீ அங்கு வந்ததும் சுபாவையும் அவனையும் சேர்த்து நிற்கவைத்து புன்னகையுடன் கூறினாள் 
“என்னோட அம்மா எனக்கு மொட்டை அடிச்சிக்க சம்மதம் கொடுத்துட்டாங்க….. ஜேப்பீ.. இப்போ என்னோட தலைமுடி உனக்குத்தான். நீ எப்போ வேணும்னாளும் எனக்கு மொட்டை அடிக்கலாம்” என்று கூறி தான் தலைமுடியை விரித்துவிட்டு ஜேப்பீமுன் குனிந்தாள். ஜேப்பீ அவள் கூந்தலை அள்ளி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சொன்னான் “இப்போ வேண்டாம்…. கொஞ்ச நாள் போகட்டும். சுபாவுக்கு கொஞ்சம் முடி வளரனும். அது வரைக்கும் உங்களோட தலைமுடிதான் எனக்கு பொழுதுபோக்கு… ஆனால் கண்டிப்பா உங்களோட தலைமுடியை என் கையாள தான் மொட்டை அடிப்பேன்” என்றான்.


முற்றும்.

No comments:

Post a Comment