வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே மொட்டை அடிக்க வேண்டும் என்று அந்த பெண் சொன்னபோது ஜேப்பீ குதூகலமானான். அந்த மூத்தபெண் தன்னை உஷா என அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறினாள். பின்னர் தன்னுடைய அம்மாவின் பெயர் ஜெயந்தி என்றும் தங்கைகள் பிரியா, கீதா என அறிமுகப்படுத்தினாள். அவள் அறிமுகப்படுத்திய விதம் அவளுடைய ஆளுமையை எடுத்துக்காட்டியது. உண்மையில் அவள் பேசிய விதம் சுபாவுக்கு பிடித்தது. ஜேப்பீக்கும் அவளை பிடித்து இருந்தது, காரணம் அவளுடைய ஹேர்ஸ்டைல். அவள் தலைமுடியை ஜடையாக பின்னிய விதம் அவனை கவர்ந்தது. அவளுடைய தங்கைகள் எதுவும் பேசாமல் சற்று கூச்சத்தோடு நின்றிருந்தனர். சுபா தன்னையும், தம்பி ஜெயப்பிரகாஷ் என ஜேப்பீயையும் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
உஷா: இங்க ஆக்சுவலா ஒரு பிரச்சினை. எங்களுக்கு மொட்டை போட ஒரு பார்பரை எங்கப்பா சொல்லி வச்சிருந்தார். அவன் வேற எங்கையோ வேலை இருக்குனு வேற ஒருத்தனை அனுப்பி இருக்கான்.
சுபா: சரி.
உஷா: அவனுக்கு தமிழ் தெரியல. தவிர அவன் குடிச்சிட்டு வந்திருந்தான். அதுனால அவனை வேணாம்னு சொல்லி போகசொல்லிட்டேன்.
சுபா: இப்போ என்ன பண்ண போறீங்க.
உஷா: உங்க வீட்டில நீங்க யாரும் மொட்டை போடபோறீங்களா?
சுபா: ஆமா. நான் மொட்டை போட்டுக்கபோறேன்.
உஷா: இங்க Guest house-லயேவா இல்ல கல்யாணகட்டா போறீங்களா?
சுபா: இங்க Guest house-லதான்.
உஷா: எப்போ மொட்டை போடபோறீங்க?
சுபா: நாளைக்கு எங்கப்பா வந்ததுக்கு அப்புறம்தான்.
உஷா: ஓ.. அப்படியா…… நான் இன்னைக்கு மொட்டை போட்டிங்கனா… உங்களோட பார்பரை எங்களுக்கும் மொட்டை அடிக்க சொல்லமுடியுமானு கேட்க நினைச்சேன்.
சுபா: இப்போ என்ன பண்ண போறீங்க?
உஷா: அதான் புரியலை. தெரியாத ஊரு…. உங்க தம்பிக்கிட்ட சொல்லி வேற எதுவும் இங்க பார்பர் கிடைப்பானானு பார்க்கசொல்ல முடியுமா.
சுபா: எங்களுக்கும் இந்த ஊர் புதுசுதான். இருந்தாலும் பார்க்க சொல்றேன். (தம்பியிடம் திரும்பி…) ஜெயாகுட்டி, நீ கொஞ்சம் பக்கத்துல எங்கயாவது சலூன் இருக்கானு பாரு. இல்லைனா பக்கத்துல எங்க பார்பார் இருப்பாங்கனு பாரு.
ஜேப்பீ: சரிக்கா… உனக்கு வேற எதுவும் வேணுமா?
சுபா: இல்லடா. நாம சாயங்காலம் வெளிய போகலாம். இப்போ நீ போய் பார்த்துட்டு வா.
ஜேப்பீ: சரி…
சொல்லிவிட்டு ஜேப்பீ வெளியே சென்றான். சுபா அவர்களிடம் சொல்லிவிட்டு மறுபடி அவளுடைய Guest house-க்கு கிளம்பினாள். அவள் சென்ற சிறிது நேரம் கழித்து ஜேப்பீ சுபாவுக்கு போன் செய்தான். இருவரும் ரகசியமாக ஏதோ பேசியபின் சுபா அவனிடம் ஒரு 30 நிமிடம் கழித்து வரச்சொன்னாள். அவனும் “சரி” என்றான். தம்பியிடம் பேசிவிட்டு வெளிய வந்தபோது பக்கத்து Guest house வாசலில் உஷா நின்றிருந்தது தெரிந்தது. சுபா அவளை இங்கு வருமாறு சைகை செய்தாள். உஷா அங்கிருந்து புன்னகையுடன் வந்தாள்.
உஷா: என்ன சுபா. ஏதாவது பார்பார் கிடைச்சானா?
சுபா: இல்ல. என் தம்பி இப்போதான் போன் பண்ணினான். இந்த வாரம் ரொம்ப கூட்டமா இருக்கதால யாரும் வந்து மொட்டை அடிக்க மாட்டாங்களாம். வேணும்னா அங்க வரச்சொல்றாங்களாம்.
உஷா: ஐய்யோ… இப்போ என்ன பண்றது.
சுபா: நீங்க ஏன் அங்கயே போய் மொட்டை அடிக்கல?
உஷா: என்னோட தங்கச்சி கீதா ரொம்ப வெட்கப்படுறா… நாங்க எவ்ளோவோ சொல்லிப்பார்த்தோம். ஆனால் அவ கடைசியில ஹோட்டல்-லயே மொட்டை அடிச்சுக்கிறேன்னு சொல்லிட்டாள். அதுனால அப்பா எல்லாருக்குமே Guest house-ல மொட்டை போடலாம்னு கடைசி நேரத்துல அந்த பார்பருக்கு ஏற்பாடு பண்ணினார். அவன் சொதப்பிட்டான்.
சுபா: நானும் வெளியபோய் மொட்டை போட கூச்சப்பட்டுதான் இங்கயே மொட்டைபோட முடிவு பண்ணினேன். என்னோட தம்பி தான் இங்க ஒருத்தர்கிட்ட பேசி ஏற்பாடு செய்தான்.
உஷா: ஓ…அப்படியா. எங்களுக்குவேற நாளைக்கு காலைல தரிசனத்துக்கு புக்பண்ணி இருக்கோம்.
சுபா: உண்மையை சொல்லணும்னா. எனக்கு எப்போவுமே என்னோட தம்பிதான் முடியை ட்ரிம் பண்ணி விடுவான். நான் அவனையே எனக்கு மொட்டை அடிக்க சொல்லலாம்னு நினைச்சேன்.
உஷா: நல்ல ஐடியாதான…. யார்கிட்டயோ மொட்டை அடிக்கிறதுக்கு உன்னோட தம்பிகிட்ட உட்கார்ந்து மொட்டை அடிக்கலாமே.
சுபா: ஆனா எங்கப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னேபோடுவார்.
உஷா: எப்படியும் மொட்டை அடிக்கதான் திருப்பதிக்கு வந்திருக்க. உங்கப்பா வந்தத்துக்கு அப்புறம் மொட்டை அடிக்காம அதுக்கு முன்னாடியே உன் தம்பி கையாள மொட்டை அடிச்சிக்கோ. உங்கப்பா கேட்டா, பார்பார் வேற ஒரு வேலை இருக்குனு ஒருநாள் முன்னாடியே வந்துட்டான்னு சொல்லிடு. அவளோதான.
(சுபா மனத்துக்குள் நினைத்தாள். தம்பியின் கையால் மொட்டை அடித்துவிட்டு இதே காரணத்தைதான் அப்பாவிடம் கூறலாம் என இருவரும் முடிவெடுத்து இருந்தனர்.அதனால்தான் பார்பரை ஒரு நண்பன் மூலமாக ஜேப்பீ ஏற்பாடு செய்துவிட்டதாக அப்பாவிடம் கூறியிருந்தாள். இப்போது உஷா அதையே கூறுகிறாள்.)
சுபா: ஐடியா நல்லா இருக்கு. ஆனால்… என்னோட தம்பியை சம்மதிக்க வைக்கணுமே.
உஷா: கொஞ்சம் பேசிப்பாரு…. நானும் உன்கூட இருக்கேன்.
சுபா: தாங்க்ஸ்.
உஷா: இதுக்கு எதுக்கு தாங்க்ஸ் எல்லாம். உன்னோட தம்பிதான உனக்கு மொட்டை அடிக்கபோறான்.
சுபா: நீங்க கொடுத்த ஐடியா நல்லா இருக்கு.
உஷா: உண்மையை சொல்லணும்னா… அதுல கொஞ்சம் சுயநலம் இருக்கு.
சுபா: (மனத்துக்குள் சிரித்துக்கொண்டு) என்ன?
உஷா: ஒருவேளை உன்னோட தம்பி உனக்கு மொட்டை அடிக்க சம்மதிச்சா, அப்படியே எங்களுக்கும் மொட்டை அடிக்க சொல்ல முடியுமா?
சுபா: ஓஹோ.. நீங்க அப்படி வறீங்களா?
உஷா: ஆமா. ஏன்னா இப்போ எனக்கு வேற வழியில்லை. நல்லவேளையா நீ உன்னோட தம்பி பத்தி என்கிட்ட சொன்ன. உன்னோட தம்பி எப்போ வருவான்.
சுபா: இப்போ வந்திருவான்.
உஷா: சரி… நானும் இங்க வெயிட் பண்றேன். அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்.
சுபா: சரி.
சுபாவும் உஷாவும் ஜேப்பீயின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது சுபா ரெஸ்ட்ரூம் செல்வதுபோல எழுந்து சென்று அங்கு நடந்தவற்றை சுருக்கமாக தம்பிக்கு மேசேஜ் அனுப்பினாள். வரும்போது சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல நடந்துகொள்ளுமாறு கூறினாள். அங்கு நடந்துகொண்டிருந்த நிகழ்வுகளை ஜேப்பீ புரிந்துகொண்டான். சிறிதுநேரம் கழித்து சோர்வாக இருப்பதுபோல உள்ளே நுழைந்தான். உள்ளே உஷா இருக்கிறாள் என்பதை காட்டிக்கொள்ளாமல் நுழைந்தான். உள்ளே நுழையும்போதே “அக்கா” ஆனா அழைத்துக்கொண்டே நுழைந்தான். அங்கே உஷா மட்டும் அமர்ந்திருந்தாள். சற்று வித்தியாசமாக பார்த்துவிட்டு அவளிடம் உரையாடினான்.
ஜேப்பீ: அக்கா இங்க இல்லையா….
உஷா: உங்கக்கா ரெஸ்ட்ரூம் போயிருக்காள். அதுவரைக்கும் வேணும்னா என்னை அக்கானு கூப்பிட்டுக்கோ.
ஜேப்பீ: ஹாஹா… சரிங்கக்கா….
உஷா: பார்பார் யாராவது இருந்தானா?
ஜேப்பீ: இருந்தான். ஆனால் யாரும் வரமாட்டேன்னு சொல்றான். இன்னைக்கு இங்க ரொம்ப கூட்டம் இருக்கு. நிறைய பேர் மொட்டை அடிக்க காத்திட்டு இருந்தாங்க. நாலுபேருக்கு மட்டும் மொட்டை போட வரமுடியாதுனு சொல்றாங்க.
உஷா: ஓ…அப்படியா….
ஜேப்பீ: பக்கத்துல பார்லர்-ல இருக்கிறவுங்க பிரைவேட்டா வருவாங்கலாம். ஆனால் ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவாங்கலாம். டிப்ஸ் தனி.
அப்போது சுபா உள்ளிருந்து வந்தாள்….
சுபா: என்னடா ஜெயாகுட்டி.. யாரும் பார்பர் இல்லையா?
ஜேப்பீ: இல்லக்கா…
உஷா: ஜேப்பீ…. நாளைக்கு உங்க அக்காவுக்கு மொட்டை அடிக்க ஒரு பார்பர் வரச்சொல்லியிருக்கேல.
ஜேப்பீ: ஆமா….
உஷா: ஒருவேளை அவன் நாளைக்கு வரலைனா என்ன பண்ணுவ? நீ இவளை அந்த பார்பர் ஷாப்-க்கு கூட்டிட்டுபோய் மொட்டை அடிக்க சொல்லுவீயா?
ஜேப்பீ: அது கஷ்டம். அங்க ரொம்ப கூட்டம் இருக்கு. ரொம்ப நேரம் லைன்லவேற நிற்கணும். அதோட அங்க நிறையபேர் இருக்காங்க… எங்கக்கா கூச்சப்படுவாள்.
உஷா: அப்போ என்ன செய்வ?
ஜேப்பீ: தெரியல… அக்காவைதான். கேட்கணும்.
உஷா: நான் ஒண்ணு சொல்லவா?
ஜேப்பீ: சொல்லுங்க.
உஷா: உங்கக்காவுக்கு எப்போவுமே நீதான் முடியை ட்ரிம் பண்ணிவிடுவியா?
ஜேப்பீ: ஆமா… எங்கக்காவோட முடியை வேறயாரும் கட் பண்ணவிடமாட்டேன். நான்தான் கட் பண்ணுவேன்.
உஷா: இப்போ உங்கக்காவுக்கு உன்னோட கையாலாயே மொட்டை அடிக்கணும்னு ஆசையா இருக்காம்.
ஜேப்பீ: (சுபாவிடம் திரும்பி) அக்கா… உண்மையாவா?
சுபா: ஆமாடா குட்டி. யாரோ ஒருத்தர்கிட்ட மொட்டை அடிக்கிறதைவிட உன் கையாள மொட்டை அடிச்சு விட்டா எனக்கும் சந்தோசமா இருக்கும்.
உஷா: இப்போ சொல்லு தம்பி…. சுபாவுக்கு நீயே மொட்டை அடிச்சுவிடுறியா?
ஜேப்பீ: எங்கப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.
உஷா: அதை சுபா சமாளிப்பாள். உனக்கு சம்மதமா?
ஜேப்பீ: எங்கப்பாக்கு தெரியாதவரைக்கும் எனக்கு பயமில்லை.
உஷா: சூப்பர்.
ஜேப்பீ: எங்கக்கா சந்தோசமா இருக்கா சரி… நீங்க ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க?
உஷா: வெரிகுட்… நீ நேரா விஷயத்துக்கு வந்திட்ட.புத்திசாலிதான். இப்போ உங்கக்காவுக்கு மொட்டை அடிக்கிறதுக்குனு சொன்னதும் சரினு சொல்லிட்ட. இதே மாதிரி எனக்கும் மொட்டை அடிக்க முடியுமா?
ஜேப்பீ: உங்களுக்குமா?
உஷா: எனக்கு மட்டும் இல்ல… என்னோட சேர்த்து என்னோட அம்மா அப்புறம் என்னோட தங்கச்சி ரெண்டு பேருக்கும்தான்.
ஜேப்பீ: நாலுபேருக்குமா?
உஷா: ஆமா. உனக்கே தெரியும்…. நாங்க இன்னைக்கு மொட்டை அடிச்சு இருக்கணும். இங்க பக்கத்துல எனக்கு தெரிஞ்சது இப்போதைக்கு நீ மட்டும்தான். உங்ககூட பழகின இந்த கொஞ்சநேரத்துல எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு. அதுனாலதான் கேட்கிறேன்.
ஜேப்பீ: அக்கா…. நீ என்ன சொல்ற?
சுபா: பாவம் ஜெயாகுட்டி. இன்னைக்கு நம்மளுக்கும் பக்கத்துல தெரிஞ்சவங்க யாரும் இல்லை. அவங்களுக்கும் யாரும் இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்றது தப்பில்லை.
ஜேப்பீ: சரிக்கா. பண்ணலாம். நானே உங்க எல்லாருக்கும் மொட்டை அடிக்கிறேன்.
உஷா: சூப்பர்டா தம்பி.
ஜேப்பீ: நான் மொட்டை அடிச்சுவிடுறதுனா….உங்க வீட்டில எல்லாரும் இதுக்கு சம்மதிப்பாங்களா?
உஷா: நான் போய் எல்லாருகிட்டயும் விஷயத்தை சொல்லி சம்மதிக்க வைக்கிறேன். திருப்பதிக்கு வந்தாச்சு. தலைல இருக்கிற பாரத்தை இறக்கிதான ஆகணும்.
சுபா: அப்போ சரி. நீங்க பேசிட்டு ரெடியானதும் சொல்லுங்க. அப்புறமா மொட்டை அடிக்கலாம்.
உஷா: எனக்கு ஒரு யோசனை.
சுபா: சொல்லுங்க.
உஷா: எங்க வீட்டில இன்னும் யாரும் உங்ககிட்ட இவ்ளோ பேசினது இல்ல. நான் போயிட்டு அவங்களை பேசி முதல்ல சம்மதிக்க வைக்கிறேன். அப்புறமா…. உங்களை அங்க கூப்பிடுறேன். நீங்க ரெண்டுபேரும் அங்க வாங்க. அல்லருமா சேர்ந்து டீ & ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொஞ்சநேரம் பேசுவோம். அப்போ எல்லோரும் ஒரு சகஜநிலைக்கு வந்திருவோம். அப்புறமா யாருக்குமே வித்தியாசமா தெரியாது. ஒரு நல்ல பிரெண்ட்ஷிப் கிடைச்சமாதிரியும் இருக்கும். நம்மளோட வேலையும் முடியும்.
ஜேப்பீ: கரெக்ட்…
சுபா: நல்ல யோசனைதான். உண்மையில நீங்க ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க. டக்கு டக்குனு முடிவெடுத்து பிரச்சனையை முடிக்குறீங்க.
உஷா: (சிரித்துக்கொண்டே) நம்ம எல்லாருக்கும் “முடி எடுக்கணும்”னா முடிவெடுத்துதான ஆகணும்.
ஜேப்பீ: ஹாஹா….நல்லா டைமிங் காமெடி பண்றீங்க.
உஷா: நான் காமெடி பண்றேன் சரி. ஆனால் இன்னைக்கு நீதான் ஹீரோ. எங்க எல்லார் தலையிலயும் நீதான் கையை (கத்தியை) வைக்கப்போற. உன்னை நம்பித்தான் எங்க தலையை உன்கிட்ட கொடுக்கிறோம். கவனமா மொட்டை அடிச்சுவிடு.
ஜேப்பீ: கவலைப்படாதீங்க. சுத்தமா பண்ணலாம். நாளைக்கு உங்க தலைல கைவச்சா வழுக்கிவிடும்.
உஷா: ஹாஹா…சரி நான் போயி என்னோட வீட்டுல அம்மா தங்கச்சிங்ககிட்ட விஷயத்தை சொல்லி சமாதானப்படுத்துறேன். அப்புறமா உனக்கு கூப்பிடுறேன். சுபா… உன்னோட நம்பர் சொல்லு.
சுபா: 98********
உஷா: நோட் பண்ணிட்டேன். ஜேப்பீ…. உன்னோட நம்பரும் சொல்லு.
ஜேப்பீ: 99********
உஷா:நோட் பண்ணிட்டேன். சரி. நான் இப்போ கிளம்புறேன். பேசிட்டு கூப்பிடுறேன்.
சொல்லிவிட்டு உஷா அங்கிருந்து கிளம்பினாள். உஷா சென்றதும் சுபாவும் ஜேப்பீயும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். சுபா தம்பியிடம் வந்து… ” தம்பி.. பழம் நழுவி பால்-ல விழப்போகுதுடா” என்றாள். ஜேப்பீயும் “அக்கா…. நானும் இதை எதிர்பார்க்கலை. இவ்ளோ சீக்கிரம் அவங்களே வந்து கேட்பாங்கனு” என்று கூறினான். இருவரும் நீண்டநாளாக புதைத்துவைத்திருந்த ஆசை நிறைவேறப்போகின்ற சந்தோசத்தில் இருந்தனர். இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு உஷா உள்ளே நுழைந்தாள். பார்பர் கிடைத்துவிட்டானா என்ற கேள்வியுடன் ஜெயந்தி, கீதா மற்றும் பிரியா ஆகிய மூவரும் உஷாவை பார்த்தனர். முதலில் பேசியது ஜெயந்திதான்.
ஜெயந்தி: என்ன உஷா…. பார்பர் யாரும் இருக்கானா?
உஷா: இல்ல…. கிடைக்கலை.
ஜெயந்தி: அய்யோ… அப்போ மொட்டை அடிக்க என்ன பண்ணுறது. பேசாம நாளைக்கு காலைல உங்கப்பா வந்ததும் நேரா கல்யாணகட்டா போகலாமா?
கீதா: அம்மா…. என்னால முடியாது. எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு.
ஜெயந்தி: சும்மா இருடி…. இதெல்லாம் பார்த்தா அப்புறம் எப்படி மொட்டை அடிக்கிறது.
பிரியா: அக்கா… இங்க வேற பார்லர் எதுவும் இல்லையா?
உஷா: இருக்குடி.. ஆனால் ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்கிறானாம். டிப்ஸ் தனியாம்.
ஜெயந்தி: ஆயிரம்ரூபாயா…. ரொம்ப ஜாஸ்திடி.
உஷா: தெரியும்மா…. அதான் அது வேணாம்னு சொல்லிட்டேன்.
ஜெயந்தி: நாளைக்கு உங்கப்பா வந்ததும் நல்லா திட்டுவார். என்ன செய்யப்போறோம்னு தெரியலை.
உஷா: எனக்கு ஒரு யோசனை தோணுது.
ஜெயந்தி: என்ன?
உஷா: பக்கத்து Guest house-ல இருக்க சுபா தம்பி இருக்கான்ல. அவன்தான் அவனோட அக்காவுக்கு எப்போவும் முடியை ட்ரிம் பண்ணி விடுவானாம். அவன்கிட்ட வேணும்னா நமக்கு மொட்டை அடிக்க உதவி பண்ணுவானானு கேட்கலாம்.
ஜெயந்தி: என்னடி பேசுற…. முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட எப்படி இதையெல்லாம் கேட்கிறது. அதுவுமில்லாம அவன் ரொம்ப சின்னபையன் மாதிரி இருக்கான்.
பிரியா: அமாக்கா. யாருனு தெரியாம எப்படி அவங்ககிட்ட மொட்டை அடிக்க உட்கார முடியும்.
உஷா: ஹேய்… உளறாத டி. இங்க இருக்கிற பார்பர் வந்தாமட்டும் உனக்கு தெரியுமா? உனக்கு தெரிஞ்சயாராவது தான் மொட்டை அடிக்கணும்னா இப்போதைக்கு நம்மளேதான் ஒருத்தருக்கு ஒருத்தர் மொட்டை அடிச்சுக்கணும். இல்லைனா நாளைக்கு அப்பா வந்துதான் மொட்டை அடிக்கணும். பரவாயில்லையா?
கீதா: ஆமா.. அதுவும் சரிதான்.
உஷா: கீதா.. நீ சொல்லு… உனக்கு அந்த பையன் வந்து மொட்டை அடிசுவிட்டா போதுமா?
கீதா: வெளிய போகாம இங்கயே மொட்டை அடிக்கிறதுனா எனக்கு ஒண்ணும் இல்லை. நான் இங்கயே மொட்டை அடிக்க ரெடி. ஆனால் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் தலைல ஸ்கார்ஃப் போட்டுத்தான் வெளிய வருவேன். சரியா.
உஷா: நீ மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் தலையில என்ன வேணும்னாலும் போட்டு மூடிக்கோ.
கீதா: சரி.
உஷா: அம்மா…. நீ என்ன சொல்ற?
ஜெயந்தி: சாமிக்கு முடியை கொடுக்கிறதுனு வந்தாச்சு. யார் கையாள மொட்டை போட்டா என்ன… கடவுள்மேல பாரத்தை போட்டு தலையை அவன்கிட்ட கொடுத்து உட்காரவேண்டியதுதான்.
உஷா: சந்தோசம். அவன்கிட்ட கொஞ்சநேரம் பேசினதுல அவன் நல்லபையனாதான் தெரியுறான். அதனால நானும் அவன்கிட்ட மொட்டை போடலாம்னு நினைக்குறேன். தவிர இப்போ எனக்கு வேறவழியும் தெரியலை.
ஜெயந்தி: பிரியா…. உனக்கு ஓகேவா?
பிரியா: அதான் எல்லாரும் ஒரே கட்சியா இருக்கீங்களே… அப்புறம் நான் மட்டும் என்ன… நானும் அவன்கிட்டயே மொட்டை அடிச்சுக்கிறேன். வேற வழியில்லையே.
உஷா: நல்லது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்….
ஜெயந்தி: என்ன உஷா?
உஷா: நாம இந்தமாதிரி பக்கத்து Guest house-ல இருக்கிற பையன் கையாளதான் மொட்டை அடிச்சுக்கிட்டோம்-னு அப்பாவுக்கு தெரியக்கூடாது. அவர் எதுவும் கேட்டால், வேற ஒரு பார்பர் அரேன்ஜ் பண்ணி மொட்டை அடிச்சோம்னு சொல்லணும்.
கீதா: ஏன்?
உஷா: அப்பாக்கு தெரிஞ்சா கோவப்படுவார். அதுமட்டும் இல்ல. நமக்கு உதவிசெய்யப்போய் அந்தபையன் மாட்டிக்ககூடாது.
ஜெயந்தி: அதுவும் சரிதான்டி…. இதை நமக்குள்ளயே வச்சிக்கணும்.
கீதா & பிரியா: சரிம்மா.
ஜெயந்தி: உஷா….அந்த பையன்கிட்ட பேசு…. சரின்னு சொன்ன இப்போவே மொட்டை அடிக்கலாம்.
உஷா: சரி… நான் போய் பேசிட்டு வறேன். நீ ஒண்ணு பண்ணு…. அவனையும், அவன் அக்காவையும் இங்க கூட்டிட்டு வறேன்…. எல்லாருக்கும் கொஞ்சம் டீ போடு….. எல்லாரும் கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம். உங்களுக்கும் அவங்ககூட பழகினமாதிரி இருக்கும்.
ஜெயந்தி: நல்ல யோசனை. இந்த Guest house-ல பாத்திரம் இருக்கு. கொஞ்சம் பால் மட்டும் வாங்கணுமே.
உஷா: வாங்கலாம்.
உஷா மொபைலை எடுத்து சுபா நம்பருக்கு அழைத்தாள். சுபாவிடம் எல்லோருக்கும் ஜேப்பீ மொட்டை அடிக்க சம்மதம் என்று சொன்னாள். சுபா சத்தம்போடாமல் தம்பியிடம் கைகளை உயர்த்தி வெற்றி என்றாள். ஜேப்பீ சந்தோசத்துடன் எழுத்தான். பின்னர் உஷா ஜேப்பீயிடம் போனை கொடுக்க சொன்னாள். ஜேப்பீயிடம் லைசன்ஸ் இருக்க எனக்கேட்டாள். பின்னர் அவன் இல்லை என மறுத்ததும் சரி… நான் ஐந்து நிமிடங்களில் வருகிறேன் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள். என்னவாக இருக்கும் என யோசனையுடன் ஜேப்பீ போனை வைத்தான். சிறிது நேரத்தில் ஒரு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வந்தாள்.
சுபா: என்ன ஸ்கூட்டியோட வந்திருக்கீங்க? யாரோட ஸ்கூட்டி இது?
உஷா: இந்த Guest house ஓனரோட வண்டிதான். இங்கயே சாவி இருந்தது. அதான் உதவிக்கு எடுத்துட்டு வந்தேன்.
ஜேப்பீ: உதவிக்கா? என்ன?
உஷா: நாம ஒரு விஷயத்தை மறந்துட்டோம்.
சுபா: என்ன?
உஷா: மொட்டை அடிக்க நாங்களும் ரெடி… மொட்டை அடிச்சுவிட உன் தம்பியும் ரெடி. ஆனால் நம்மகிட்ட கத்தி இல்லையே….
(ஜேப்பீ யோசித்தான். அவனிடம் ஒரு கத்தி இருக்கிறது. சுபாவுக்கு மொட்டை அடிக்க எடுத்து வந்திருந்தான். ஆனால் இப்போது அதை அவளிடம் சொல்ல முடியாது. அதனால் தெரியாததுபோல காட்டிக்கொண்டான். சுபாவும் அதையே செய்தாள்.)
ஜேப்பீ: ஆமா… நம்மகிட்ட கத்தி இல்லை. நமக்கு இது தோணவே இல்லையே.
சுபா: குட்டி… இவங்க நல்லா ப்ளான் பண்றாங்க.
ஜேப்பீ: ஆமாக்கா.
உஷா: உன்கிட்ட லைசன்ஸ் இருந்த வண்டியை எடுத்துட்டு போய் வாங்கிட்டு வரசொல்லலாம்னு நினைச்சேன்.
ஜேப்பீ: நான் இப்போதான +2 முடிக்கிறேன். அடுத்த வருஷம்தான் லைசன்ஸ் எடுக்க முடியும்.
உஷா: ஆமா.. நீ இப்போ எடுக்க முடியாது. எனக்கும் அது ஞாபகம் வரலை.
சுபா: இப்போ வாங்கலாம்….
உஷா: அதுக்குத்தான் வந்தேன். நான் ஜேப்பீயை என்கூட கூட்டிட்டு போகவா?
சுபா: தாராளமா… (தம்பியிடம் திரும்பி) பத்திரமா போயிட்டு வாடா குட்டி.
உஷா: நம்ம எல்லாருக்கும் மொட்டை அடிக்கப்போறதே இவன்தான். இன்னும் இவன் உனக்கு குட்டி பையனா?
சுபா: ஹாஹா…. அது எங்களுக்குள்ள பழகிருச்சு.
உஷா: சரி…. ஜேப்பீ நம்ம போலாமா?
ஜேப்பீ: சரிங்கக்கா…. போலாம்.
உஷா வண்டியை திருப்பி நிறுத்தினாள். அவளுடைய நீளமான ஜடை சீட்டின் மேல் தவழ்ந்துகொண்டு இருந்தது. ஜேப்பீ அவளுடைய ஜடையை ரசித்துக்கொண்டே ஏறி அமர்ந்தான். அவன் திரும்பி பார்த்தபோது சுபா அவனை குறும்புடன் பார்த்து சிரித்தாள். பின்னர் தன்னுடையை ஜடையை தூக்கி முன்னால் போட்டு சைகையில் உஷாவின் ஜடையை தொட்டுப்பார்க்க சொன்னாள். ஜேப்பீ புரிந்துகொண்டு சிரித்தான். உஷாவும் ஜேப்பீயும் கிளம்பினர். வழியில் ஜேப்பீ உஷாவின் ஜடையை பார்த்துக்கொண்டே வந்தான். கண்ணாடி வழியாக உஷா ஜேப்பீயை பார்த்தாள்.
உஷா: என்ன தம்பி பேசாம இருக்க?
ஜேப்பீ: ஒண்ணும் இல்லை.
உஷா: என்னோட ஜடையை பார்த்துக்கிட்டே இருக்கியே… என்ன விஷயம்?
ஜேப்பீ: உங்களோட முடி ரொம்ப அழகா இருக்கு.. அதான் பார்த்தேன்.
உஷா: ஹாஹா… நல்லா பார்த்துக்கோ. அப்புறம் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு நீயே எனக்கு மொட்டை போட்டு விடுவ. அப்புறம் என்னோட தலையில இந்த அழகான முடி இருக்காது.
ஜேப்பீ: அப்போ உங்க ஜடையை நான் கையில பிடிச்சுக்கவா.
உஷா: உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்கோ.
ஜேப்பீ: சரி
ஜேப்பீ உஷாவின் ஜடையை கையில் எடுத்தான். உஷா தன்னுடைய தலைமுடி அவன் கைகளில் தஞ்சம் புகுவதை உணர்ந்தாள். உண்மையில் வேறுஒருவர் அவளுடைய ஜடையை கையில் எடுத்து பிடிப்பது இதுவே முதல்முறை. அவளுடைய அலுவலகத்தில் நிறையபேர் அவளுடைய நீளமான தலைமுடியை புகழ்வதுண்டு. அவள் தலைமுடியை பற்றி சக ஆண் நண்பர்கள் சில சமயங்களில் பேசுவதுண்டு. அவர்களுக்கு உஷாவின் தலைமுடியை தொடவேண்டும் என்கிற ஆசை உண்டு. ஆனாலும் யாரும் அவளிடம் தைரியமாக கேட்டது இல்லை. அவளே பலமுறை யோசித்து இருக்கிறாள்…. ஏன் அவளுடைய தலைமுடியை தொட அனுமதி கேட்க தயங்கவேண்டும் என்று. ஆனால் இன்று பழகிய சிறிது நேரத்திலேயே ஜேப்பீ அவளிடம் ஜடையை தொட்டுப்பார்க்க கேட்டது ஆச்சரியமாக பட்டது. உண்மையில் அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. காலையிலிருந்து இப்போதுவரை அவள் உதவி என சுபாவை கேட்டாலும் உண்மையில் இவன்தான் உதவி வருகிறான்.
No comments:
Post a Comment