CLOSE

Monday, 15 January 2018

சுபா & ஜேப்பீ - பகுதி - 7


கீதா, ஜெயந்தி, பிரியா மற்றும் உஷா ஆகிய நால்வரின் அழகிய நீளமான தலைமுடியை மொட்டை அடித்த மனத்திருப்தியுடன் ஜேப்பீ தூங்கினான். கனவில் கனவில் சேலை கட்டி அமர்ந்திருந்த சுபாவை அவளுடைய தலைமுடியை பிரித்துவிட்டு மொட்டை அடித்து விட்டான். காலையில் கண்விழித்து பார்த்தபோது அருகில் சுபா இல்லை. கண்களை கசக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னர் எழுந்து ஹாலுக்கு சென்றான். 
சுபா காப்பி போட்டுக்கொண்டிருந்தாள். சுபா அவளுடைய ஜடையை கொண்டை போட்டிருந்தாள். ஜேப்பீ பல்துலக்கி, முகம் கழுவிவிட்டு வந்து அமர்ந்தான். அப்போது வாசிலில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. சுபாவை திரும்பி பார்த்தான். அவள் சூசகமாக அவனைப்பார்த்து சிரித்தாள். சுபா ஏதோ விளையாடுகிறாள் என புரிந்துகொண்டு என்ன என்பதுபோல பார்த்தான். அவள் சிரித்துக்கொண்டே “போய் கதவை திற..” என்றாள். ஜேப்பீ எழுந்து சென்று கதவை திறந்தான். புன்னகை பூத்த முகத்துடன் உஷாவும் பிரியாவும் நின்றிருந்தனர். 
மொட்டைத்தலை தேவதைகள் போல இருவரும் இருந்தனர். உஷா ஒரு அழகிய மஞ்சள் நிற சேலையில் இருந்தாள். அவளுடைய நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது. பிரியா ஒரு பிங்க் நிற சல்வார் அணிந்திருத்தாள். இருவரும் ஜேப்பீயை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே வந்தனர். சற்று ஆச்சர்யமாக பார்த்தாலும் அவர்களை புன்னகையுடன் உள்ளே அழைத்தாள் சுபா.
உஷா: என்ன ஜேப்பீ.. இப்போதான் எழுந்தியா?
ஜேப்பீ: ஆமா… நீங்க இப்போவே ரெடி ஆயிடீங்கபோல….
உஷா: ஆமா டா. கோவிலுக்கு போகணும். அப்பா வேற காலைல வந்துட்டார். இப்போதான் எல்லாரும் குளிச்சிட்டு ரெடி ஆனோம்.
சுபா: உங்கப்பாவுக்கு எப்போ மொட்டை போட்டிங்க?
பிரியா: இன்னும் இல்ல சுபா. அவருக்கு முதல்ல கல்யாணகட்டா போயி முடி இறக்கிட்டு அப்புறமாதான் கோவிலுக்கு போகணும். அதான் இப்போ கிளம்பிட்டோம்.
சுபா: சரி…
உஷா: சுபா… நீ எப்போ மொட்டை போட போற?
சுபா: இனிமேல்தான் அக்கா. இப்போதான் ரெண்டுபெரும் எழுந்தோம். இனிமேல் ரெடி ஆகணும். அப்பா இன்னைக்கு நைட்தான் வருவார். அதுக்கு முன்னாடி மொட்டை அடிக்கணும்.
உஷா: சரி… பிரியாவுக்கு ஒரு சின்ன ஆசை.
சுபா: என்னக்கா?
உஷா: சொல்லு பிரியா…
பிரியா: ஒண்ணும் இல்ல சுபா. உனக்கு மொட்டை அடிக்கும்போது பார்க்கணும்னு ஒரு ஆசை. அதான் நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமானு கேட்கலாம்னு நினைச்சேன்.
சுபா: தாராளமா பிரியா… ஆனா ரொம்ப நேரம் ஆகாதுல.
உஷா:  இல்ல சுபா… நாங்க எல்லாருமே முதல்ல கல்யாணகட்டா போகணும்… அப்புறம் சாமி தரிசனம். அதுக்கப்புறம் பக்கத்துல இருக்கிற இன்னும் ரெண்டு மூணு கோவிலுக்கு போகணும். ஆனா வெங்கடாஜலபதி தரிசனம் முடிஞ்சதும் ஏதாவது காரணம் சொல்லி பிரியாவை மட்டும் திருப்பி அனுப்புறேன். அவ சீக்கிரம் வந்திடுவாள்.
சுபா: அப்போ சரி…..
பிரியா: தாங்க்ஸ் சுபா… நான் சீக்கிரம் வந்திடுவேன்…
சுபா: பரவாயில்லை பிரியா…. நல்லபடியா தரிசனத்தை முடிச்சுட்டு வா.
உஷா: அப்புறம்.. இன்னொரு முக்கியமான விஷயம். காலைல எங்கப்பாகூட… இன்னொரு கெஸ்ட். ஒரு பொண்ணு வந்திருக்காள். அவ இப்போ எங்ககூட கோவிலுக்கு வரலை. பிரியா வர்ற வரைக்கும் அவளை இங்க இருக்க சொல்லலாமா?
ஜேப்பீ: அய்யோ.. யார் அது….? அப்போ சுபாக்கு மொட்டை அடிக்கும்போது அவங்களும் இங்க இருப்பாங்களா?
உஷா: இப்போ எதுக்கு பயப்படுற ஜேப்பீ….
ஜேப்பீ: நான் மொட்டை அடிக்கிறது வெளில தெரியக்கூடாதுனு சொன்னேன்ல…
பிரியா: பயப்படாதடா… ஒனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு.
ஜேப்பீ: சொல்லுங்க
பிரியா: அவ இங்க வந்ததே ஒரு பொண்ணு மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும்னு பார்க்கதான்.
ஜேப்பீ: அதனால….
பிரியா: அவளுக்கும் நல்ல அடர்த்தியான நீளமான முடிதான். ஒருவேளை நான்கோவிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நீ அவகிட்ட நல்லா பேசி பழகிட்டா… நான் வந்ததும் பேசி அவளையும் மொட்டை போட வைக்கலாம்.
ஜேப்பீ: ஹாஹா… நீங்க எல்லாம் மொட்டை போடணும்னு வேண்டிகிட்டு வந்தீங்க… அதனால மொட்டை போட சரின்னு சொன்னீங்க. அதெப்படி அவங்க ஒத்துக்குவாங்க….
உஷா: நல்ல கேள்விதான். நாங்க எல்லாம் வேண்டுதல் மொட்டை. ஆனால் அவளுக்கு மொட்டைதான் ஆசை…. அப்புறம் எதுக்கு தனியா வேண்டுதல் எல்லாம்.
ஜேப்பீ: அதெப்படி நடக்கும். எனக்கு நம்பிக்கையில்லை.
பிரியா: அது நீ அவகிட்ட எப்படி பேசுறங்கிறதை பொறுத்துதான் இருக்கு.
ஜேப்பீ: (சுபாவை பார்த்து) அக்கா… இதெல்லாம் நடக்குமா…. நீயே சொல்லு.
சுபா: நாம பேசி பார்ப்போம்.. மொட்டை போட சம்மதம் சொன்னா உனக்கும் சந்தோசம்தான.
ஜேப்பீ: எனக்கு நம்பிக்கையில்லை… முயற்சி பண்ணுவோம்.
உஷா: சரி சுபா.. நேரம் ஆகுது… நாங்க கிளம்புறோம். அந்த பொண்ணை இப்போ வரச்சொல்லுறேன்…. அவளை கொஞ்சம் பார்த்துக்கோ.
சுபா: கண்டிப்பா….
உஷா: இன்னைக்கு நீ தனியா மொட்டை அடிச்சிக்கப்போறது இல்லை. (கூறிவிட்டு கண்ணடித்தாள்.சுபா பதிலுக்கு புன்னகைத்தாள்.)
ஜேப்பீ: இப்போவே அவங்களை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல….
சுபா: திடீர்னு கூட்டிட்டு வந்தா நீ ஷாக் ஆயிடுவேனு தான்
ஜேப்பீ: இப்போவே எனக்கு ஷாக் தான்.
பிரியா: இன்னும் இருக்கு….
ஜேப்பீ: ரொம்ப பில்டப் போடுறீங்க…. அவங்க பேரு என்ன….
பிரியா: இன்னும் கொஞ்சநேரத்துல இங்க வருவாள்… அவகிட்ட நீயே கேட்டுக்கோ….
ஜேப்பீ: சரி வரட்டும்… அவங்க முடி எப்படி இருக்குனு பார்க்கலாம். அதுக்கு அப்புறமா அவங்களுக்கு மொட்டை அடிக்கலாமா வேணாமானு பார்க்கலாம்.
உஷா: அவளுக்கு மொட்டை அடிக்கிறதும் வேணாம்னு சொல்றதும் உன் இஷ்டம். அதை நீ அவகூட பேசி முடிவு பண்ணிக்கோ.
ஜேப்பீ: சரி….
அவர்களிடம் சொல்லிவிட்டு உஷாவும் பிரியாவும் கிளம்பினர். ஜேப்பீ வாசலில் எட்டிப்பார்த்தான். அவர்களுடைய காட்டேஜ் வாசலில் ஜெயந்தி, கீதா, உஷாவின் அப்பா நின்றிருந்தனர். உஷாவும் பிரியாவும் அவர்களை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் சொன்ன அந்த பெண் அங்கு நிற்கிறாளா என ஜேப்பீ நோட்டமிட்டான். அவன் செய்கையை புரிந்துகொண்டதுபோல இருவரும் திரும்பி அவனை பார்த்து சிரித்தனர். 
பின்னர் மீண்டும் கதவுகளை சாத்தினான். அந்த புது பெண் யாராக இருக்கும் என யோசித்தான். அந்த பெண்ணின் தலைமுடி அழகாக நீளமாக இருக்குமா என யோசித்தான்… அவளிடம் எப்படி பேசுவது… அவளை மொட்டை போட சம்மதிக்கவைக்க முடியுமா என எண்ண ஆரம்பித்தான். அவன் கதவை சாத்திவிட்டு ஒரு ஐந்துநிமிடங்கள் கூட இருக்காது பக்கத்து காட்டேஜ்-ல் அவர்கள் அனைவரும் கிளம்பும் சத்தம் கேட்டது. 
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அனைவரும் புறப்பட்டுவிட்டனர். ஆனால் அங்கிருந்து யாரும் வருவது போல இல்லை. ஜேப்பீ ஜன்னல் அருகே காத்திருந்தான். அவள் இங்கு  வரும்முன் அவளை பார்த்து அவளுடைய தலைமுடியை ரசிக்க வேண்டும் என்று நினைத்தான். இன்னும் யாரும் வருவதுபோல இல்லை.
யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. சுபா உள்ளிருந்த அறைக்குள் இருந்து வெளியே வந்தாள். ஜேப்பீ ஜன்னல் அருகே இருப்பதை பார்த்துவிட்டு கதவை திறக்க சென்றாள். அவள் கதவின் அருகில் சென்றதும் ஜேப்பீ அவளை நிற்க சொல்லிவிட்டு அவனும் கதவின் அருகே வந்தான். கதவின் லென்ஸ் துவாரம் வழியாக யார் என்று பார்த்தான். ஒரு பெண் திரும்பி நின்றிருந்தாள். அவளுடைய அடர்த்தியான ஜடை இடுப்புக்குகீழ்வரை இருப்பதுபோல தோன்றியது. 
ஜேப்பீ சுபாவிடம்… “திரும்பி இருக்காங்க…. ஆனா நல்ல நீளமான முடியா இருக்கு” என்றான். சுபா சிரித்துக்கொண்டே “சரி.. முதல்ல கதவைத்திற… யாருன்னு பார்க்கலாம்” என்றாள். ஜேப்பீ ஆர்வத்துடன் கதவை திறந்தான். அவள் சிரித்துக்கொண்டே திரும்பினாள். புன்னகையான முகத்துடன் அவள் திரும்பியதும் ஜேப்பீ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஆனான். வந்திருந்தது சுபாவின் தோழி சுமித்ரா…. அவன் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் “சர்பிரைஸ்” என சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். உள்ளே வந்ததும் சுபாவை கட்டிப்பிடித்தாள்.
மனதில் சந்தோஷம் இருந்தாலும் இன்னும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஜேப்பீ-க்கு சுருக்கமாக நடந்ததை விளக்கினாள் சுமித்ரா. சுபாவும் ஜேப்பீயும் திருப்பதி செல்லும் விஷயத்தை சுமியிடம் சொன்னதும் அவளுக்கு சுபாவின் மொட்டையை நேரில் பார்க்க ஆசை வந்தது. அதை சுபாவிடமும் சொல்லி விட்டாள். ஆனால் ஜேப்பீக்கு சொல்லாமல் சர்பிரைசாக செய்யலாம் எனக்கூறினாள்.
 நேற்று ஜேப்பீக்கு தெரியாமல் உஷா, பிரியா, சுபா மூவரும் இணைந்து உஷாவின் அப்பா வந்த அதே பேருந்தில் டிக்கெட் புக் செய்து வந்தாள். விடியல்காலை என்பதால் உஷாவின் அப்பாவுடன் இணைந்து அவர்களுடைய காட்டேஜ்ல் இருந்துவிட்டு பின்னர் விடிந்ததும் இங்கு வந்திருக்கிறாள். இடையில் உஷாவும் பிரியாவும் வந்து சுமித்ரா வந்திருப்பதை நேரடியாக சொல்லாமல் ஜேப்பீயை கிண்டல் செய்துவிட்டு கிளம்பியிருக்கின்றனர்.
தன்னை சிறுவனாக நினைத்து அவர்கள் விளையாடுவது அவனுக்கு சற்று கோவமாக இருந்தது. ஆனால் அந்த விளையாட்டில் அவனுக்கு பிடித்த விஷயங்கள் மட்டுமே நடக்கிறது. அவன் விருப்பம்போல அவனுடைய அக்காவுக்கு மொட்டை அடிக்கப்போகிறான். எதிர்பாராத அதிர்ஷ்டமாக பக்கத்து வீட்டில் இருந்த நான்கு பெண்களின் நீளமான அழகிய தலைமுடியை விதவிதமாக மொட்டை அடித்து விட்டிருக்கிறான். இப்போது அவன் போட்டோ எடுத்து மகிழ்ந்த வசீகர கூந்தலுக்கு சொந்தக்காரியான சுமி அவனுடைய அக்காவின் மொட்டையை பார்க்க நேரில் வந்திருக்கிறாள். உண்மையில் அவன் மனம் நிறைவடைந்திருந்தது.
 சுபா காப்பியை கொண்டுவந்து கொடுக்க மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து அருந்தினர்.  காப்பி குடித்துக்கொண்டே அடுத்து என்ன செய்வது என விவாதித்தனர். சுபா சென்று தலைக்கு குளித்து விட்டு வந்து தன்னுடைய தலைமுடியை காயவைக்கவேண்டும் என்று கூறினாள். சுமி ஏற்கனவே சென்னையிலிருந்து கிளம்பும்முன் தலைக்கு குளித்து விட்டதால் மீண்டும் தலைக்கு குளிக்கப்போவது இல்லை எனக்கூறினாள். ஜேப்பீ தானும் குளித்துவிட்டு தயாராகவேண்டும் எனக்கூறினான். 
எப்படியும் பிரியா வருவதற்கு இன்னும் இரண்டு மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் மெல்ல தயாராகலாம் என முடிவெடுத்தனர். பிரியா வந்தபின் மொட்டை அடிக்கலாம் எனவும் அதுவரை சுமி எடுத்து வந்த வீடியோ காமிராவில் சுபாவின் தலைமுடியை படம் பிடிக்கலாம் எனவும் அதன் பின் ஜேப்பீ சுபாவிற்கு மொட்டை அடிக்கும்போது அதையும் ரெக்கார்ட் செய்யலாம் எனவும் சுமி கூறினாள். சுபாவிற்கு கதிர் சொன்னது நினைவிற்கு வந்தது. சுபா மொட்டை அடிப்பதை முடிந்தால் ரெகார்ட் செய்து வைக்கும்பாடி கூறியிருந்தான். அதனால் சுமி எடுக்கும் வீடியோவை அவனுக்கும் அனுப்பலாம் என முடிவு செய்தாள்.
சுபா தான் கொண்டையை அவிழ்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை தன்னுடைய ஜடையை கொண்டையாக போட்டாள். அப்போது சுமி அவளை ஒரு நிமிடம் காத்திருக்க சொல்லி விட்டு தன்னுடைய பையில் இருந்து வீடியோ காமிராவை எடுத்தாள். இப்பொழுதுமுதல் மொட்டை அடுத்து முடித்து ரெடியாகும் வரை அவளுடைய தலைமுடியின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவாக எடுக்கப்போவதாக கூறினாள்.
 ஜேப்பீயிடம் அந்த காமிராவை கொடுத்துவிட்டு தான் ஒரு மாடலாக விரும்புவதால் ஒரு தொகுப்பாழினிபோல அந்த வீடியோ வில் சுபாவுடன் இருந்து அவளுடைய தலைமுடி பற்றியும் பின்னர் அவளுக்கு மொட்டை அடிப்பதை பற்றியும் விவாதிப்பதுபோல வீடியோவை ரெக்கார்ட் செய்யும்படியும் கூறினாள்.  சற்று வேடிக்கையாக இருந்தாலும் ஜேப்பீ, சுபா இருவருக்கும் அவளுடைய யோசனை பிடித்திருந்தது. இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். சுமி இருவரிடமும் என்ன செய்யவேண்டும் விளக்கினாள்.
 சுபா தன்னுடைய அடர்த்தியான கொண்டையை காட்டியவாறு  அமர்திருக்க சொன்னாள். பின்னர் வீடியோவில் தானும் வரவேண்டும் என்பதால் தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட்டு தலைமுடியை விரித்துவிட்டாள். தன்னுடைய தலைமுடியை அள்ளி ஒரே ஒரு க்லிப் மட்டும் போட்டு ஒரு VJ போல ஸ்டைலாக மாறினாள்.
ஜேப்பீ, சுபா இருவரும் சுமி சொன்னதை கவனமாக கேட்டுக்கொண்டனர். ஜேப்பீ காமிராவை இயக்க ஆரம்பித்தான். முதலில் சுபாவின் அருகில் சென்று அவளுடைய கொண்டையை அழகாக படம்பிடிக்க ஆரம்பித்தான். மெல்ல zoom out செய்துகொண்டே வந்தான். பின்னர் சுபா தான் கைகளால் தன்னுடைய கொண்டையை மெல்ல அவிழ்த்து விட்டாள். அவளுடைய கொண்டையிலிருந்து அடர்த்தியான தலைமுடி மெல்ல விடுபட்டு சரிந்து வந்தது. அடக்கி வைத்திருந்த அவளுடைய கூந்தலின் நீளம் ஒரு கரிய ஆறுபோல விரிவடைய ஆரம்பித்தது. அனைத்தையும் ஜேப்பீ காமிராவில் அழகாக படம்பிடித்துக்கொண்டிருந்தான். 
சுபா இப்போது எழுந்து நின்றாள். அவளுதையை ஜடை அவளுடைய தொடைவரை அடர்த்தியாக இருந்தது. மெல்ல நடக்க ஆரம்பித்தாள். ஜேப்பீ அவளுடைய தலையிலிருந்து மெல்ல அவளுடைய ஜடையை காட்டிக்கொண்டே கீழிறங்கி ஜடையின் அடிவரை படம்பித்தான். பின்னர் மெல்ல zoom out செய்ய ஆரம்பித்தான். சுபா சற்று தூரமாக சென்று அங்கிருந்த மேஜையில் எதையோ எடுப்பது போல திரும்பியே நின்றிருந்தாள். ஆனால் அவளுடைய தலைமுடி மட்டும் தெளிவாக தெரிந்தது. 
அப்போது சுமி காமிராவிண் video frame-க்குள் வந்து பேச ஆரம்பித்தாள்.
“ஹைய்… நான்தான் சுமி… இப்போ நீங்க பார்க்கிறிங்களே… அது என்னோட பிரெண்ட் சுபா. எவ்ளோ அழகான தலைமுடி இல்ல….  எனக்கு நீளமான முடிதான்… ஆனாலும் இவளோட தலைமுடி ரொம்ப நீளமா, அடர்த்தியா அழகா இருக்கு. எனக்கே ரொம்ப ஆசையா இருக்கு. எனக்கு சுபாவை ஆறு வருஷமா தெரியும். அவளோட நீளமான தலைமுடி என்னோட க்ளாஸ்-ல ரொம்ப பிரபலம். நீளமான தலைமுடிதான் இன்னைக்கு வரைக்கும் இவளுக்கு அடையாளமும்கூட. கொஞ்சம் கிட்ட வாங்க அவளோட தலைமுடியை இன்னும் close up-ல பார்க்கலாம். 
(சுமி சுபாவின் அருகில் சென்று அவளுடைய ஜடையை கழுத்தின் அருகில் பிடித்தாள்) இப்படித்தான் இவள் க்ளாஸ்க்கு வந்ததும் இவளோட முடியை நான் பிடிச்சு பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அது. என்னடா திடீர்னு இவ இந்த பொண்ணோட முடியை பத்தி பேசுறா… அப்போ அடுத்து இவ்ளோ நீளமா முடியை வளர்கிறது எப்படினு சொல்லப்போறோம்னு நீங்க நினைச்சா அது தப்பு. இது கண்டிப்பா ஒரு Hair styling வீடியோவும் இல்ல…. அப்புறம் வேற என்னனு கேட்கிறீங்களா?…….சரி.. உங்களை கொளப்பிவிடாம சொல்லுறேன். இன்னைக்கு இந்த நீளமான தலைமுடிக்கு அறுவடைநாள். 
ஆமாங்க… என்னோட பிரெண்ட் சுபா இன்னைக்கு மொட்டை அடிச்சிக்கப்போறா… என்னடா ஒரு காலேஜ் பொண்ணு அதுவும் இவ்ளோ நீளமான தலைமுடியை எதுக்கு மொட்டை அடிக்கணும்னு பார்க்கிறீங்களா… நம்ம நாட்டுல பொண்ணுங்க மொட்டை அடிச்சிக்க குடும்பபிரச்சினை, வரதட்சினை கொடுமைனு நிறைய காரணங்கள் இருக்கு… ஆனா இவளுக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல…. ஒரு வேண்டுதல். 
அவ்ளோதான். பாவம் சின்ன வயசுல இருந்து நிறைவேத்தாம அவளோட முடி இவ்ளோ நீளமா (ஜடையை கையில் எடுத்து காட்டிக்கொண்டே) வளர்ந்திடுச்சு….. அதுனால வேண்டுதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இன்னைக்கு மொட்டை அடிச்சு  தலைமுடியை காணிக்கையா கொடுத்திடலாம்னு இவ முடிவு பண்ணிட்டா…. அதுனால இன்னைக்கு இவளுக்கு மொட்டை அடிக்கிறவரைக்கும் நடக்கிற எல்லாத்தையும் நான் உங்களுக்கு தொகுத்து வழங்கப்போறேன்.”
கட் என்று கைகளால் செய்கை செய்துவிட்டு வீடியோவை நிறுத்த சொன்னாள் சுமி. ஜேப்பீயும் நிறுத்தினான். மூவரும் இணைந்து ஒரு முறை அந்த வீடியோவை play செய்து பார்த்தனர். சுபாவின் தலைமுடி அழகாக வந்திருந்தது. பின்னர் சுமி பேசியபோது மூவருக்கும் சற்று சிரிப்பு வந்தது. “இதுவரைக்கும் மொட்டை அடிக்கப்போறதை யாரும் இவ்ளோ அழகா சொல்லி நான் கேட்டது இல்லடி… செம்ம.. கலக்குற..போ” என்று சுபா சுமியிடம் கூறினாள். “உன் தம்பியோட காமிராவும் நல்லா வேலை செய்யுதுடி” என்று சிரித்துக்கொண்டே சுபாவிடம் கூறினாள். 
பின்னர் சுபா தலைக்கு குளித்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். பின்னர் சுமியும் ஜேப்பீயும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஜேப்பீயிடம் சுமி ஒரு சீப்பு கேட்டாள். ஜடையை பிரித்துவிட்டதால் தலையை சீவவந்திரும் என்றாள். ஜேப்பீ அருகிலிருந்த சீப்பை எடுத்து அவளிடம் கொடுக்காமல் அவளை திரும்பி அமர சொன்னான். சுமி சிரித்துக்கொண்டே திரும்பி அமர்ந்து அவனிடம் தலைமுடியை கொடுத்தாள். அவன் முதல் முறையாக சுமியின் சம்மதத்துடன் அவன் கூந்தலை தொடுகிறான். 
சுபாவின் தலைமுடிபோல் மிருதுவாக இல்லாவிட்டாலும் தொடுவதற்கு மிகவும் பிடித்ததுபோல இருந்தது சுமியின் முடி. முதலில் கைகளால் அவள் தலைமுடியை மொத்தமாக எடுத்து நுகர்ந்து பார்த்தான். அவன் செய்கையை அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் காலையில் ஜேப்பீ மொட்டை அடித்த விஷயத்தை பிரியாவும் உஷாவும் அவனிடம் கூறியிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஜேப்பீக்கு உஷா, பிரியா இருவரின் கூந்தல் மனமும் பிடித்தது என்று கூறியிருந்தான். 
காலையில் பிரியாவும் சுமியிடம் “உன்னோட முடி நல்ல வாசனையா இருக்கு…. என்ன ஷாம்பு யூஸ் பண்ற?…. எப்படியும் நீ போனதும் ஜேப்பீ உன்னோட முடியை நல்லா வாசனை பிடிப்பான்” என்று கூறியிருந்தாள். அவள் சொன்னதுபோலவே இப்போது அவன் சுமியின் தலைமுடியை வாசனை பிடித்துக்கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment