கல்லூரி முடிந்து பேருந்திலிருந்து இறங்கிய சுபா, சாலையை கடந்து தன்னுடைய தெருவில் நடக்கத் துவங்கினாள். அவள் பின்னால் நடந்து சென்ற இரண்டு பெண்கள் “அந்த பொண்ணோட முடியை பாரேன்… எவ்ளோ நீளமா இருக்குனு” என்று கூறியது அவள் காதுகளில் விழுந்தது. சிறிது தூரம் சென்றபின், ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சில பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வரும்போது பில் போட்ட ஒருவன் அருகிலிருந்தவனிடம், “மச்சி.. நான் சொன்னேன்-ல… ஒரு அழகான பொண்ணு நல்லா நீளமான முடியோட, அடிக்கடி கடைக்கு வரும்-னு. அது இதுதான்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் தன்னுடைய கூந்தலை கவனிப்பதை மனத்துக்குள் ரசித்துவிட்டு நடந்தாள்.
சுபா வீட்டிற்குள் வரும்பொழுது மாலை 6:30 மணி ஆகியது. தோழிகளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கல்லூரியில் இருந்து கிளம்பியதால் சற்று தாமதமாகத்தான் வந்தாள். சோபாவில் அமர்திருந்த அவள் தம்பி அவளை பார்த்து முறைத்துவிட்டு சுவர்கடிகாரத்தை பார்த்தான். தான் தாமதமாக வந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறான் என புரிந்துகொண்டு கண்களிலேயே வாஞ்சையாக மன்னிப்பு கோரினாள். ஆனால் அவன் அதை நிராகரிப்பதுபோல முகத்தை திருப்பிக்கொண்டான். சுபா தன் கையில் இருந்த புத்தகங்களையும், கைப்பையையும் கீழே வைத்துவிட்டு அவனிடம் வந்து அமர்ந்தாள். அவனுக்கு பிடிக்கும் என்பதால் தன்னுடைய ஜடையை எடுத்து அவனுடைய தொடைகளில் படும்படி முன்புறம் போட்டு உட்கார்ந்தாள். தம்பி கோவமாக இருக்கும்போதெல்லாம் அவனை சமாதானப்படுத்த அவள் உபயோகிக்கும் ஒரே ஆயுதம் அவளுடைய தலைமுடிதான். அதை கவனித்தவன் அவளுடைய ஜடையை எடுத்து மீண்டும் அவள் பின்புறம் போட்டான்.
சுபா தன்னுடைய காதுகளில் கை வைத்துக்கொண்டு “அக்கா இனிமேல் இப்படி லேட்டா வரமாட்டேன்டா. மன்னிச்சுக்கோடா ஜெயா குட்டி” என குழந்தையாக பேசினாள். அவள் தம்பியின் முகத்தில் இறுக்கம் குறைந்து உதடுகள் புன்னகை பூத்தது. உடனடியாக அவள் தம்பியை கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவனும் கட்டிப்பிடித்துக்கொண்டான். பிறந்தவுடன் தாயை இழந்ததால், ஜெயப்பிரகாஷ்-க்கு அவனுடைய அக்கா சுபா தான் எல்லாமே. மற்றவர்கள் அவனை ஜெயப்பிரகாஷ் என அழைத்தாலும், அவனுடைய அக்காவுக்கு மட்டும் எப்பவுமே “ஜெயாகுட்டி”. அவனுடைய அக்காவை தவிர வேறுயாரும் அவனை “ஜெயாகுட்டி” என அழைக்க அவன் அனுமதித்ததில்லை.பள்ளியில் அவனை யாரும் முழுப்பெயர் சொல்லி அழைப்பது இல்லை. நண்பர்கள் மத்தியில் அவன் பெயர் ஜேப்பீ. சுபாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அவளுடைய ஜடையை மெல்ல தடவிப்பார்த்தான். அப்போது அவன் பாசத்தோடு சேர்ந்து Hair Fetish-ம் எட்டிப்பார்த்தது. தம்பி தன்னுடைய ஜடையை தடவுவதை சுபா உணர்ந்தாள். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. “அக்காவோட முடி ரொம்ப பிடிச்சிருக்கா?” என்றாள். அவன் சத்தம் போடாமல் “ம்ம்” என்றான். “அக்காவோட முடியை பத்திரமா பாத்துக்கோ…” என்றாள். அவன் அதற்கும் சத்தம் போடாமல் “ம்ம்” என்றான். பின்னர் மெல்ல அவன் காதுகளில் “ஒரு பத்து நிமிஷம் பொறு… அக்கா போய் ட்ரெஸ் மாத்திட்டு, காப்பி போட்டு எடுத்துட்டு வறேன். அப்புறமா நீ என்னோட முடியை எடுத்துக்கோ. சரியா?” என்று சொன்னாள். அவன் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு “சரி” என்றான். சுபா எழுந்து உள்ளே சென்றாள். எப்பொழுதுதான் இவனுடைய முடிபைத்தியம் குறையும் என நினைத்துக்கொண்டாள்.
ஜெயப்பிரகாஷ்-க்கு சுமார் நான்கு வயதில் வீட்டில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அவனையும் அழைத்து சென்றனர். கோவிலில் எங்கு சென்றாலும் அவனுடைய அக்கா சுபாவின் கைகளை பிடித்துக்கொண்டே சென்றான். சிறிதுநேரத்தில் தூங்கிவிட்டான். அவன் எழுந்துபார்த்தபோது அவனுடைய அக்கா சுபா தலையில் முடியில்லாமல் மொட்டையாக காட்சியளித்தாள். அவளை அடையாளம்காண சிறிது நேரம் எடுத்துக்கொண்டான். சுபா அவனை பார்த்து சிரித்தபோது அவளருகில் ஓடிவந்து அவளுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்தான். பின்னர் “அக்காமுடி காணோம்” எனக்கூறி அழ ஆரம்பித்தான். அவனுடைய அப்பா, அத்தை, சித்தி என அனைவரும் எடுத்துக்கூறியும் அவனுக்கு புரியவைக்க முடியவில்லை. பின்னர் சுபா அவனிடம் “முடியை சாமிக்கு கொடுத்தாச்சு” எனக்கூறினாள். அவன் புரியாமல் முழித்தான். பின்னர் அவனை அழைத்துக்கொண்டு கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் பகுதிக்கு அழைத்து சென்றாள்.
முடி காணிக்கை கொடுக்கும் இடத்தில் சுபாவின் வாயத்தை ஒத்த ஒரு சிறுமி மொட்டை அடிப்பதற்காக நின்று கொண்டிருந்தாள். அந்த சிறுமியின் அம்மாவும் அங்குதான் இருந்தாள். சுபா அந்த சிறுமிக்கு எப்படி மொட்டை அடிக்கிறார்கள் என பார்த்துக்கொண்டே இருக்குமாறு சொன்னாள். இடுப்புவரை ஜடை பின்னியிருந்த அந்த சிறுமிக்கு அவளுடைய அம்மா ஜடையை பிரித்துவிட்டாள். அந்த சிறுமி ஒரு நாவிதன் முன் உட்கார்ந்ததும், நாவிதன் அவள் தலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக மசாஜ் செய்தான். பின்னர் இரண்டு புறமும் அவள் தலைமுடியை இறுக்கி கொண்டை போட்டுவிட்டு ஒரு சவரக்கத்தியை எடுத்து அதில் ஒரு பிளேடை சொருகினான். அந்த சிறுமியின் தலையை குனியவைத்து மொட்டை அடிக்க ஆரம்பித்தான். நாவிதன் சரசரவென்று அந்த சிறுமிக்கு மொட்டை அடித்தான். ஒரு பக்கம் மொட்டை அடித்ததும் ஒரு பக்க கொண்டை கீழே விழுந்தது. அதை பார்த்த ஜெயப்பிரகாஷ் “அக்கா முடி” என்று சொல்லிக்கொண்டே எடுக்கப்போனான். அப்போது அந்த சிறுமியின் அம்மா சிரித்துக்கொண்டே “இது சாமிக்குடா கண்ணா” என்றாள். ஜெயப்பிரகாஷ் எதுவும் சொல்லாமல் மறுபடி அந்த சிறுமியை பார்த்துக்கொண்டிருந்தான். நாவிதன் மொட்டை அடித்து முடிக்கும்போது இன்னொருபுறம் இருந்த கொண்டை கீழே விழுந்தது. தன்னையும் அறியாமல் ஜெயப்பிரகாஷ் அதை கைதட்டி கொண்டாடினான்.
அந்த சிறுமி மொட்டை அடித்து எழுந்தபின் சிறுமியின் அம்மா தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட துவங்கினாள். ஜெயப்பிரகாஷ் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். நாவிதன் அவளிடம் “உங்களுக்கு என்னமா பூமுடியா?” என்றான். அதற்கு அவள் “இல்லைங்க… முடி எடுக்கணும்” என்றாள். “மொட்டை-னா முன்னாடி திரும்பி உட்காருங்கம்மா” எனக்கூறினான். அவள் இடுப்பல்வு கூந்தலை விரித்துவிட்டு நாவிதன் முன் உட்கார்ந்தாள். அப்போது ஜெயப்பிரகாஷ் “முடி சாமிக்கு” என்றான். அவள் ஜெயப்பிரகாஷை பார்த்து சிரித்துவிட்டு நாவிதன்முன் தலையை குனிந்தாள். அவள் தலையில் தண்ணீர் தெளிப்பதில் இருந்து கத்தியை எடுத்து சிரைப்பது வரை கவனமாக பார்த்துக்கொண்டே இருந்தான். மொட்டை அடிக்கும்போது அந்த பெண்ணின் தலைமுடி கற்றை கற்றையாக வழிந்து வந்து அவள் மடியிலும், தரையிலும் விழுந்தது அவனை ஈர்த்தது. சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு சுபாவும் ஜெயப்பிரகாஷூம் கிளம்பினர். ஆனால் ஜெயப்பிரகாஷ் மீண்டும் சுபாவிடம் மொட்டை அடிக்கும் பகுதிக்கு கூட்டிசெல்ல கைகாட்டினான். மறுபடி அங்கு சென்றபோது பெண்கள் மொட்டை அடிக்கும் பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தான். ஒவ்வொரு பெண் மொட்டை அடிக்கும்போதும் அருகில் நின்று பார்ப்பான். சிறுவன் என்பதால் யாரும் எதுவும் சொல்லவில்லை. சுபாவும் அவன் அருகிலேயே இருப்பாள். அதன்பின் எப்பொழுது கோவிலுக்கு வந்தாலும் அந்த மொட்டை அடிக்கும் பகுதிக்கு சென்று வேடிக்கை பார்ப்பான். அது அவனுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறிப்போனது.
சுபாவிற்கு மீண்டும் தலைமுடி வளர ஆரம்பித்ததும் அடிக்கடி அவள் முடியை தொட்டு, தடவிப்பார்ப்பான். சுபாவின் முடி அவள் தோள்களை தாண்டி முதுகுவரை வளர்ந்திருந்தது. சுபாவின் அப்பாவுடன் பிறந்த அத்தை வீட்டிற்கு வரும்போது சுபாவுக்கு தலைவாரி விடுவாள். அப்போது ஜெயப்பிரகாஷ் அங்கு வந்தால், அவன் அத்தையை கடித்துவைத்துவிடுவான். அவனுக்கு தெரியாமல் யாராவது அவனுடைய அக்காவுக்கு மொட்டை அடித்துவிடுவார்கள் என்ற பயம் அவனுக்கு இருந்தது. அதன்பின் சுபா அவளே தலைவாரிக்கொள்வாள். அப்பொழுதெல்லாம் ஜெயப்பிரகாஷ் அவளுடனே இருப்பான். சுபா ஒவ்வொருமுறை ஜடை பின்னியதும், ஜெயப்பிரகாஷிடம் தன்னுடைய ஜடையை காட்டி “ஜெயாகுட்டி… அக்காவோட ஜடை நல்லா இருக்கா?” எனக் கேட்பாள். அவனும் சுபாவின் ஜடையை தடவிப்பார்த்துவிட்டு அவள் ஜடைக்கு முத்தம் கொடுப்பான். சுபா சிரித்துக்கொண்டே அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு பள்ளிக்கு கிளம்புவாள். அவன் ஜடையை அவன் தொட்டுப்பார்ப்பது தினமும் வாடிக்கையானது.
ஜெயப்பிரகாஷூக்கு விவரம் தெரிய ஆரம்பித்தபின், கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அந்த மொட்டை அடிக்கும்பகுதிக்கு தவறாமல் செல்வான். அவன் வேடிக்கை பார்க்க மட்டுமே அங்கு வருவான் என்பது அங்குள்ள பல நாவிதார்களுக்கு தெரியும். சிறுவயதுமுதல் வருவதால் அவனை யாரும் தவறாக நினைப்பது இல்லை. சில நேரங்களில் அவனை தேடிக்கொண்டு சுபா மொட்டை அடிக்கும் பகுதிக்கே வந்து அழைத்துச்செல்வாள். புதிதாக வந்த நாவிதார்கள் யாராவது சுபா மொட்டை அடிக்கும் பகுதிக்குள் வருவதை பார்த்தால், அவளுடைய நீளமான முடியை பார்த்துவிட்டு “என்னம்மா முடி எடுக்கணுமா இல்ல பூமுடி கொடுக்கணுமா?” எனக்கேட்பதுண்டு. ஆனால் அவள் சிரித்துக்கொண்டே “என் தம்பியை கூப்பிட வந்தேன்” என சொல்லிக்கொண்டே செல்வாள். அங்கு மொட்டை அடிக்கப்பட்டு தரையில் இருக்கும் முடியை மிதித்துக்கொண்டே செல்வாள். யாரேனும் பெண்கள் தலைமுடியை விரித்துப்போட்டு உட்கார்ந்து மொட்டை அடித்துக்கொண்டிருந்தால் ஓரக்கண்ணால் அதை பார்த்துக்கொண்டே தம்பியை அழைத்துக்கொண்டு செல்வாள். சுபாவிற்கும் முடிவெட்டுவது, மொட்டை அடிப்பதை பார்க்க பிடிக்கும். ஆனால் ஜெயப்பிரகாஷ் அளவிற்கு அதீத ஆர்வம் இல்லை. ஒரு முறை ஜெயப்பிரகாஷ் கூத்தல் மீதுள்ள இந்த அதீத ஆர்வத்தை அக்காவிடமும் கண்டான். பின்னர் சுபா இதை பற்றி இணையத்தில் தேடி இதுதான் Hair Fetish எனப்புரிந்துகொண்டாள். அதன்பின் இருவரும் அந்த உணர்ச்சிகளை தங்களுக்குள் மட்டும் வைத்துக்கொள்வது என முடிவெடுத்து இருந்தனர். யாரிடம் இதை பற்றி பகிர்ந்து கொள்வது இல்லை.
சுபா உடைகளை மாத்திவிட்டு, காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். சுபா ஜெயப்பிரகாஷ் அருகில் அமர்ந்ததும் அவள் ஜடையை முன்னால் எடுத்துப்போட்டான். அவள் பின்னலை வருடிக்கொண்டே அன்றைய பொழுது கல்லூரியில் என்ன நடந்தது எனக்கேட்டான்.
ஜேப்பீ: அக்கா… இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு….
சுபா: நல்லா போச்சுடா… என்?
ஜேப்பீ: அப்புறம் ஏன் லேட்டா வந்த?
சுபா: ஒண்ணும் இல்லடா.. என்னோட பிரெண்ட் சுமி இருக்கா-ல…. அவ நாளைக்கு நம்ம வீட்டுக்கு வறேன்-னு சொன்னா…. அவளுக்கு நம்ம வீட்டுக்கு வர வழி சொல்லிட்டு என்ன விஷயம்-னு பேசிட்டு வந்தேன்.
ஜேப்பீ: எதுக்கு இங்க வரணும்?
சுபா: நாளைக்கு அவளுக்கு கொஞ்சம் எண்ணை தாரேன்-னு சொல்லி இருக்கேன். அதான்.
ஜேப்பீ: அவங்களுக்குதான் நல்லா அடர்த்தியான முடியா இருக்குமே. அவங்களுக்கு எதுக்கு உன்னோட எண்ணை வேணுமாம்?
சுபா: அவளுக்கு நீளமா முடி வளரணுமாம். அதான் என்கிட்ட கேட்டாள். நானும் சரினு சொன்னேன்.
ஜேப்பீ: அப்போ நாளைக்கு நான் அவங்களோட முடியை நேர்ல பார்க்கபோறேன்.
சுபா: ஆமா ஜெயாகுட்டி…. உனக்காக அவளுக்கு தெரியாம நானும் எவ்ளோதான் போட்டோ எடுத்து கொடுக்கிறது? நாளைக்கு நீயே அவளோட முடியை நேர்ல பார்த்துக்கோ. வேணும்னா அவளுக்கு தெரியாம எப்படியாவது போட்டோ எடுத்துக்கோ…. அது உன்னோட சாமர்த்தியம்.
ஜேப்பீ: சூப்பர் அக்கா. இன்னைக்கே நான் நம்மளோட Study ரூம்-ல ஒரு செட்டப் பண்ணி வைக்கிறேன்.
சுபா: அடப்பாவி….. அதுக்குள்ள என்னோட முடியை மறந்துட்டு சுமியோட முடியை போட்டோ எடுக்க ரெடி ஆகிட்ட.
ஜேப்பீ: அக்கா… எனக்கு எப்பொவுமே உன்னோட முடிதான் ரொம்ப பிடிக்கும்.
சுபா: போதும்டா குட்டி… ரொம்ப ஐஸ் வைக்காத…. அக்காவோட முடியை பத்திரமா பிடிச்சுக்கோ.
ஜேப்பீ: கண்டிப்பா…. சரி அப்புறம் இன்னைக்கு வேற யாரும் உன்னோட முடியை சைட் அடிக்கலையா?
சுபா: இன்னைக்கு நிறையபேர் அக்காவோட முடியை சைட் அடிச்சாங்கடா குட்டி
ஜேப்பீ: முதல்ல இருந்து சொல்லுக்கா.
சுபா: சரி சொல்றேன். இன்னைக்கு நான் பஸ்ல வரும்போது ஒருத்தன் என்னோட பின்னாடியே நின்னு என்னை பார்த்துட்டு இருந்தான்.
ஜேப்பீ: உன்னை மட்டுமா பார்த்திருப்பான்… உன்னோட தலைமுடியை ரசிச்சுப்பார்த்திருப்பான்.
சுபா: அப்புறமா தான் கவனிச்சேன்… அவன் கையில மொபைல் வச்சி என்னோட ஜடையை போட்டோ எடுக்க ட்ரை பண்றான்-னு.
ஜேப்பீ: ஹாஹா…. அப்புறம் நீ என்ன பண்ண?
சுபா: நான் அவனை பார்த்ததும் மொபைல மறைச்சு வைச்சான். அப்புறம் மறுபடி மொபைல எடுத்தான். நான் ஒண்ணும் சொல்லல…. நல்லா போட்டோ எடுத்துக்கோனு சொல்றமாதிரி திரும்பி நின்னுக்கிட்டேன்.
ஜேப்பீ: ஹாஹா… உன்னோட ஜடை நீளமா இருக்குனு நீ நிறைய பசங்களை அலைய விடுற.
சுபா: விடுடா ஜெயாகுட்டி… எல்லாருக்கும் உன்னைமாதிரி நீளமான முடி இருக்கிற அக்கா இருப்பாங்களா? யாருக்கு தெரியும் அவனும் உன்னை மாதிரி ஹேர் ஃபெட்டீஷா இருக்கலாம்.
ஜேப்பீ: என்னை மாதிரி மட்டுமா?
சுபா: சரிடா… கொஞ்சம் என்னை மாதிரியும் தான்.
ஜேப்பீ: அப்படி சொல்லு..
சுபா: குட்டி… நம்மாளோட Facebook Fetish Account-ஐ நல்லா பார்த்துக்கிட்டே இரு. அவன் ஹேர் ஃபெட்டீஷா இருந்தா கண்டிப்பா இன்னைக்கு எடுத்த போட்டோவை ஒரு Fake ID-ல இருந்து போஸ்ட் பண்ணுவான். கண்டுபிடிச்சிரலாம்.
ஜேப்பீ: அதுவும் சரிதான். இன்னிக்கே அதை பார்க்கிறேன். என்னைவிட உன்னோட ஜடையை அவன் நல்லா போட்டோ எடுத்திருக்கிறானானு….
சுபா: குட்டி…. எப்போவும் அக்காவோட முடியை அழகா போட்டோ எடுக்கிறது நீதான்டா.
ஜேப்பீ: இப்போ நீ என்னை ஐஸ் வைக்காத….. அடுத்தது என்னனு சொல்லு.
சுபா: அப்புறம் பஸ்ல இருந்து இறங்கும்போது எனக்கு முன்னாடி ரெண்டு பொண்ணுங்க நடந்து போனாங்க. அவங்களை கடந்து போகும்போது அதுல ஒரு பொண்ணு “அந்த பொண்ணோட முடியை பாரேன்… எவ்ளோ நீளமா இருக்குனு” சொன்னாள்
ஜேப்பீ: அதுக்கு இன்னொரு பொண்ணு என்ன சொன்னாள்?
சுபா: “ரொம்ப அழகா இருக்குடி…. அவகிட்ட என்ன எண்ணை யூஸ் பண்றானு கேட்போமா?” -ன்னு கேட்டாள்.
ஜேப்பீ: அப்புறம்
சுபா: அப்புறம் அந்த பொண்ணு “வேணாம்டி…. அப்புறம் நம்ம முடி ரொம்ப குட்டையா இருக்குனு கிண்டல் பண்ண போறா” னு சொல்லிட்டு வேற ஏதோ பேச அரம்பிச்சுடாளுங்க.
ஜேப்பீ: அப்புறம்.
சுபா: வழக்கம்போல நம்ம சீதா டிபார்ட்மென்டல் ஸ்டோர்-ல அந்த சுரேஷ் ரொம்ப நேரமா என்னோட முடியை சைட் அடிச்சான்.
ஜேப்பீ: ஹாஹா… அவன் ஒரு சப்ப பீஸ்…. அவனுக்கு தைரியமே கிடையாது…. அவனை விடு
சுபா: இந்தமாதிரி அமைதியா இருக்கிற பசங்களை நம்பகூடாது குட்டி.
ஜேப்பீ: அதுவும் சரிதான்.
சுபா: சரிடா குட்டி… போதும் அக்காவோட ஜடையை விடு. நான் போய் நைட்டுக்கு சமைக்கணும்.
ஜேப்பீ: சரிக்கா…. நான் போய் என்னோட காமிராவை சார்ஜ் போடுறேன். நாளைக்கு அதுக்கு வேலை இருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம Hard disk ஃபுல் ஆயிடுச்சு. இன்னொண்ணு வாங்கணும். அப்பாகிட்ட சொல்லு.
சுபா: அடப்பாவி…. அதுக்குள்ள 1TB ஃபுல் ஆயிடுச்சா?
ஜேப்பீ: அக்கா…. நீயே பாரு அதுள்ள எவ்ளோ போட்டோ இருக்குனு. அப்புறம் போனதடவை உன்னோட காலேஜ் பிரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும்போது நான் அவங்களுக்கு தெரியாம எடுத்த போட்டோஸ் மட்டுமே ஒரு 200 இருக்கும். அப்புறம் வீடியோ வேற. இப்போலாம் காமிரா-ல எடுக்கிற போட்டோ ரொம்ப அதிகமா இருக்கு. 1TB hard disk பத்தலை. உன்னோட முடியை மட்டுமே ஸ்டோர் பண்ண தனியா ஒரு hard disk வேணும்.
சுபா: அப்பாகிட்ட கேட்டா திட்டுவாரே….
ஜேப்பீ: அப்போ இருக்கவே இருக்கார் உன்னோட அடிமை. அவர்கிட்ட கேளு.
சுபா: இல்லடா குட்டி. எனக்கு பயமா இருக்கு. அத்தைக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.
ஜேப்பீ: அக்கா… நீ கேட்டாதான் அத்தான் வாங்கி தருவார். பிளீஸ்.
சுபா: சரி… கேட்டுப்பார்க்கிறேன். ஆனா நாளைக்கு ஒருநாள் நீ எப்படியாவது உன்னோட காமிரா memory card-லயே வச்சிக்கோ. அப்புறமா அவர்கிட்ட கேட்போம்.
ஜேப்பீ: எப்படி தான் ரெண்டுபெரும் இப்படி மாத்தி மாத்தி வெட்கப்படுறீங்களோ?
சுபா: அதெல்லாம் உனக்கு புரியாதுடா.
ஜேப்பீ: எல்லாம் புரியும். கேட்டா காதல்னு சொல்லுவீங்க. நீ வெட்கப்பட்டாலும் பரவாயில்லை. அவரு எதுக்கு இப்படி வெட்கப்படுறார்னு தெரியலை.
சுபா: டேய்… அவர்கூட பிறந்த பொண்ணுங்க யாரும் இல்லடா. அதான் கொஞ்சம் கூச்சப்படுறார்.
ஜேப்பீ: ஆனாலும் உன்னோட முடியை தொட்டுப்பார்க்க இவ்ளோ பயப்படுறார்.
சுபா: உனக்கு சொன்னா புரியாது. நீ போ. நான் சமைக்க போறேன்.
ஜேப்பீ: சரி… நீயாச்சு… உன்னோட வருங்கால புருஷானாச்சு. என்னை விடுங்கப்பா
ஜேப்பீ அன்று இரவு காமிராவை தாயார்செய்து வைத்தான். அவர்களின் அப்பா வந்ததும் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கசென்றனர். மறுநாள் காலையில் வழக்கம்போல் சுபா கல்லூரிக்கும், ஜேப்பீ பள்ளிக்கும் கிளம்பினர். சுபா ஜடை பின்னிமுடிக்கும்வரை ஜேப்பீ அருகிலேயே இருந்தான். அவள் ஜடை பின்னியதும் தம்பியிடம் காட்டி “அக்கா ஜடை அழகா இருக்கா?” எனக்கேட்டுவிட்டு அவனிடம் ஜடையில் ஒரு முத்தம் வாங்கிக்கொண்டாள். பின்னர் இருவரும் பேருந்து நிறுத்தம் சென்றனர். அப்போது அவர்களுக்குமுன் அங்கு வந்து நின்றிருந்தான் கதிர். கதிரை பார்த்ததும் சுபா குனிந்துகொண்டு நடந்தாள். ஜேப்பீ-யின் பள்ளி பேருந்து வரும்வரை மூவரும் பேசாமல் அமைதியாக இருந்தனர். ஜேப்பீ-யின் பள்ளி பேருந்து வந்ததும் சுபாவின் காதில் “அக்கா… மறக்காமல் அத்தான்கிட்ட Hard disk கேளு” என சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினான். ஜேப்பீ கிளம்பியதும் கதிர் தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்தான். சுபா அவன் பைக்கில் அறி அமர்ந்ததும் தோளில் கைவைத்து பிடித்துக்கொண்டாள்.
கதிர்: சுபா… என்ன அமைதியா இருக்க?
சுபா: ஒண்ணும் இல்லை. சும்மாதான்.
கதிர்: ஜெயா எதுவும் சொன்னானா?
சுபா: என் தம்பியை வம்பிழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே?
கதிர்: ஹேய்.. நான் சும்மாதான் கேட்டேன். கோவப்படாத.
சுபா: சரி… எனக்கு ஒரு Hard disk வேணும்.
கதிர்: Hard disk-ஆ எதுக்கு?
சுபா: ஜெயா கேட்டான். ஏதோ போட்டோஸ் ஸ்டோர் பண்ணனுமாம்.
கதிர்: சரி… வாங்கலாம். அப்புறம் இன்னொரு விஷயம். என்னோட ஆபிஸ்ல என்னை Onsite போக சொல்லி இருக்காங்க. இன்னும் மூணு மாசத்துல USA போகணும்.
சுபா: நல்ல விஷயம்தான… அப்போ எனக்கும் ஜெயாவுக்கும் treat வேணும்.
கதிர்: உன் தம்பிக்குமா? எங்க போனாலும் அவனையும் கூட்டிட்டு போகணுமா?
சுபா: அவன் பாவம். எல்லா இடத்துக்குமா அவனை கூப்பிடுறேன். எனக்கு ட்ரெஸ் எடுக்க நீங்கமட்டும்தான வறீங்க. அப்புறம் கோவிலுக்கு வரும்போதும் அவனை கூப்பிடுறது இல்லை. இன்னும் சில இடங்கள் இருக்கு.. இப்போ சொல்ல விரும்பலை.
கதிர்: சரி.. சரி.. ரொம்ப கிண்டாத…..
சுபா: நீங்க இப்படி என்னை தினமும் கூட்டிட்டு போறது அத்தைக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.
கதிர்: உனக்கு ஒண்ணு சொல்லவா. இதெல்லாம் எங்கம்மாக்கு தெரியும். எப்படியும் நம்ம கல்யாணம் பண்ணிக்கபோறோம்னு அவங்க ஒண்ணும் சொல்லலை.
சுபா: எங்கப்பா-க்கு தெரியாதவரைக்கும் சரி.
கதிர்: இந்த வருஷம் உன்னோட degree முடிஞ்சதும் கல்யாணம் வைக்கலாமானு கேட்க நினைச்சேன். இப்போ கொஞ்சம் தள்ளிப்போடணும்.
சுபா: ரொம்ப அலையாதிங்க. அதுக்கு முன்னாடி எனக்கு நிறைய கடமை இருக்கு. மறந்துடிங்களா?
கதிர்: ஆமா…. சாரி… நான் திரும்பி வருவதற்கு முன்னாடி அதெல்லாம் முடிச்சிருங்க. என்னால அதெல்லாம் பார்க்க முடியாது.
சுபா: சரி… அதெல்லாம் அப்புறம் பேசலாம். நாளான்னைக்கு உங்களுக்கு லீவுதான… வீட்டுக்கு வாங்க.
கதிர்: சரி.
சுபா: சாயங்காலம் நான் என்னோட பிரெண்ட் சுமியை வீட்டுக்கு கூட்டிட்டு வறேன். நாங்க பஸ்ல வந்திருவோம்.
கதிர்: சரி.
கதிர் அவளை கல்லூரியில் இறக்கிவிட்டு அலுவலகம் சென்றான். சுபா மாலை கல்லூரி முடிந்ததும் சுமியை அழைத்துக்கொண்டு பேருந்தில் வந்தாள். வழியில் நிறையபேர் இருவரையும் சைட் அடித்தனர். சிலர் அவர்களுடைய தலைமுடியை பற்றியும் பேசினர். இருவரும் அதை ரசித்துக்கொண்டே ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக்கொண்டனர். சுபாவின் நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கி நடந்தனர். வீட்டிற்கு வந்ததும் இருவரும் கழணியை கழட்டிவைத்துவிட்டு உள்ளே நுழைந்தனர். சுமியின் கண்கள் சுபாவின் தம்பியை தேடியது. ஜேப்பீ Study ரூம்-ல் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான். இருவரும் study ரூம்க்குள் நுழைந்தனர். சுமியை பார்த்து சிரித்துவிட்டு ஜேப்பீ எழுந்தான்.
சுபா: இதான் என்னோட தம்பிடி…..
சுமி: தெரியுமே…. தினமும் ஆயிரம் தடவை சொல்லுவியே “ஜெயாகுட்டி” னு
சுபா: குட்டி.. இவதான் சுமி… சுமித்ரா.
ஜேப்பீ: நிறைய தடவை சொல்லி இருக்கா… இப்போதான் ஒருவழியா வீட்டுக்கு வந்திருக்கீங்க.
சுமி: உண்மையை சொல்லணும்னா. நான் இன்னைக்கு வந்ததே உன்னை பார்க்கதான்.
ஜேப்பீ: என்னையா? எதுக்கு?
சுமி: உன்னோட அக்கா எப்போவும் காலேஜ்ல உன்னைப்பத்திதான் ஒரே பேச்சு. அதான் உன்னை பார்க்கணும்னு நினைச்சேன்.
சுபா: அடிப்பாவி.. அப்போ நீ எண்ணை வாங்க வரலையா?
சுமி: எண்ணை வாங்க மட்டும்னா உன்னை காலாஜ்க்கு எடுத்துட்டு வர சொல்லியிருப்பேன். அப்படியே உன்னோட அருமை தம்பியை பார்க்கணும்னுதான் வந்தேன்.
சுபா: சரிடி.. நீ இரு நான் ட்ரெஸ் மாத்திட்டு வறேன். அதுவரை என் தம்பிக்கிட்ட பேசிட்டு இரு.
சுமி: சரிடி.
ஜேப்பீ: உங்களை அக்கானு கூப்பிட்டா பரவாயில்லையா?
சுமி: அவ்ளோ தேவையில்லை. நீ என்னை சுமி-னே கூப்பிடு.
ஜேப்பீ: சரி.
சுமி: அப்புறம்… இந்த வருஷம் நீ +2 முடிக்கப்போற… அடுத்து என்ன? டாக்டரா இல்ல இஞ்சினீயரா?
ஜேப்பீ: ரெண்டும் இல்ல. Visual communication படிக்கப்போறேன்.
சுமி: ஏண்டா?
ஜேப்பீ: எனக்கு Photography-னா ரொம்ப பிடிக்கும். அப்புறம் இஞ்சினீயரிங் படிச்சிட்டு வேலையெல்லாம் தேடமுடியாது. முடிச்சிட்டு Modeling,Ad films industry-க்குள்ள போகலாம்னு இருக்கேன்.
சுமி: சும்மா சொல்லக்கூடாது… உங்கக்கா சொல்றமாதிரி நீ விவரமானவன்தான். நிறைய புரிஞ்சு வச்சிருக்க.
ஜேப்பீ: நீங்க என்ன பண்ணப்போறீங்க?
சுமி: எனக்கும் modeling ஆசைதான். ஆனா அதுக்கு என்ன பண்ணணும்னு தெரியலை.
ஜேப்பீ: அது ரொம்ப சுலபம். முதல்ல கொஞ்சம் ஸ்டைலா போட்டோஸ் எடுங்க. ஏதாவது Modeling agency-ஐ contact பண்ணுங்க. அப்புறம் நிறைய சான்ஸ் வரும்.
இருவரும் பேசும்போது சுபா உள்ளே காப்பியுடன் வந்தாள். மூவரும் காப்பியை குடித்துக்கொண்டே எதிர்ரெதிதில் அமர்ந்தனர். அப்போது ஜேப்பீ எழுந்து சுபா அமர்ந்திருந்த சேர்-ன் கைப்பிடியில் அமர்ந்து சுபாவின் தோள்களில் கைபோட்டு அமர்ந்தான். பின்னர் மெதுவாக அவளுடைய ஜடையை கையில் எடுத்தான். அவளுடைய ஜடையின் பின்னலை தடவிக்கொண்டே காப்பி குடித்தான். அதை பார்த்த சுமி சற்று ஆச்சரியமாக பார்த்தாள்.
No comments:
Post a Comment