இதே வேறு யாரிடமாவது “எங்களுக்கு மொட்டை அடித்துவிட முடியுமா?” எனக்கேட்டதிற்கு கோவமாக “முடியாது… நான் என்ன பார்பரா?” எனகூறியிருக்க முடியும். ஆனால் ஜேப்பீ அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவளுக்கு நிம்மதி. அவன் ஒரு Hair Fetish…அதனால்தான் வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மொட்டை அடிக்கவேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டான் என அவளுக்கு தெரியவில்லை. கண்டிப்பாக வீட்டில் அனைவருக்கும் மொட்டை அடித்தபின் இவன் பணம் பெற்றுக்கொள்ளமாட்டான் என உஷாவிற்கு தெரியும். ஆனால் அவனுக்கு வெறும் நன்றி சொல்வது மட்டும் போதாது என அவளுக்கு தோன்றியது. ஆனால் அவனுக்கு வேற என்ன செய்யமுடியும் என்பதும் அவளுக்கு தெரியவில்லை. நேரம் கிடைத்தால் அவனிடமே கேட்கலாம் என நினைத்தாள்.
உஷா: தம்பி…. இங்க ஒரு கடை இருக்கு. மொட்டை அடிக்கிற கத்தி இருக்கானு கேட்கலாமா?
ஜேப்பீ: சரிக்கா
உஷா: நீ அக்கானு கூப்பிடுறது பிடிச்சிருக்கு. எனக்கு ஒரு தம்பி இருந்தா எப்டி இருக்குமோ அப்பிடியே இருக்கு.
ஜேப்பீ: நீங்களும் எனக்கு அக்கா மாதிரிதான.
உஷா: சரி வா போகலாம். இப்போதைக்கு என்னோட ஜடையை விடு. மறுபடி வந்ததும் பிடிச்சுக்கோ.
ஜேப்பீ: சரி.
இருவரும் இறங்கி கடைக்குள் சென்றனர். ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். சிறிய கடையாக இருந்ததால் வழியை மறைக்காமல் அங்கிருந்த Chair-ல் அமர்ந்தாள். அருகில் ஜேப்பீ நின்றிருந்தான். உஷா மொட்டை அடிக்கும் கத்தி இருக்கா எனக்கேட்டாள். அவள் தமிழில் கேட்பதை பார்த்துவிட்டு புரியவில்லை என்றான். பின்னர் ஜேப்பீ உஷாவின் தலையில் கைவைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்து என்றான். அவன் பதிலுக்கு ஏதோ தெலுங்கு கலந்த தமிழில் ஏதோ சொன்னான். இருவருக்குமே புரியவில்லை. பின்னர் ஒரு டப்பா எடுத்து திறந்து காட்டினான். அந்த டப்பா முழுவதும் சவரக்கத்திகளாக இருந்தது. இருவருக்கும் அதை பார்த்ததும் நிம்மதி. நல்ல வேளையாக இந்த கடையிலேயே கத்தி இருக்கிறது என்று. ஜேப்பீ அந்த டப்பாவை எடுத்து உஷாவின் கையில் கொடுத்தான்.
உஷா: என்ன தம்பி என்கிட்ட கொடுக்கிற?
ஜேப்பீ: நீங்களே உங்களுக்கு பிடிச்ச கத்தியை எடுங்க…
உஷா: நானா?
ஜேப்பீ: ஆமா… உங்களுக்குதான மொட்டை அடிக்கணும். நீங்களே எடுங்க…
உஷா: நீ தானே மொட்டை அடிக்கப்போற…. உனக்கு பிடிச்ச கத்தியை எடு.
ஜேப்பீ: சரி…. ஆனால் இதுல நிறைய இருக்கு. இது எது என்னோட கைக்கு சரியா இருக்கும்னு தெரியலை.
உஷா: அப்போ எப்படி எடுக்கிறது?
ஜேப்பீ: இருங்க.. எனக்கு எது சரியா வரும்னு பார்க்கிறேன்.
உஷா: சரி.
ஜேப்பீ உஷாவிடம் சொல்லிவிட்டு டப்பாவில் இருந்து ஒரு கத்தியை எடுத்தான். உஷாவின் கண் முன்னால் கத்தியை விரித்தான். கத்தியை அவன் விரல்களுக்குள் சொருகி மற்றொரு கையால் உஷாவின் தலையை பிடித்து குனிய வைத்தான். கத்தியை அவளுடைய தலையில் வைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். உஷா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அமைதியாக தலையை குனிந்து இருந்தாள். இரண்டுமுறை அவள் தலைமுடியை மழிப்பதுபோல பாவனை செய்துவிட்டு “சரியா இல்லை” எனக்கூறி கத்தியை தனியாக வைத்தான். மீண்டும் ஒரு கத்தியை எடுத்து மறுபடி உஷாவின் தலையை பிடித்து குனிய வைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். மீண்டும் “சரியா இல்லை” எனக்கூறி கத்தியை தனியாக வைத்தான். அந்த கடைக்காரன் இவர்கள் செய்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தான். இதே போல நான்குமுறை “சரியில்லை” எனக்கூறினான்.
கடைசியாக ஒரு சில்வர் கலர் கத்தியை எடுத்தான். அந்த கத்தியை உஷாவின் கண்முன் விரித்துக்காட்டினான். கத்தியின் பளபளப்பு அவள் கண்களில் மின்னியது. இந்தமுறை அவள் தலையை தானாகவே குனிந்தாள். அவளையும் அறியாமல் அவளுடைய ஜடையை எடுத்து வலதுபுறம் முன்னால் போட்டாள். உஷா மனதளவில் தயாராகிவிட்டாள் என ஜேப்பீ புரிந்துகொண்டான். அவளுடைய தலையில் கத்தியை வைத்தான். கத்தியின் குளிர்ச்சியை உஷா தலையில் உணர்ந்தாள். ஜேப்பீ அவளுடைய தலைமுடியை தடவிக்கொடுத்துவிட்டு மொட்டை அடிப்பதுபோல அழுத்தமாக மழித்தான். அந்த கத்தியில் பிளேடு இல்லை, இல்லையென்றால் இந்நேரம் உஷாவின் தலைமுடியிலிருந்து ஒரு கற்றை முடி வழிந்து விழுந்திருக்கும். உஷாவை கவனித்தான். அவள் கண்களை மூடி மொட்டை அடிக்கும் சுகத்தை அனுபவிக்க தயாராக இருந்தாள். ஜேப்பீ அவனுடைய இடதுகையால் அவளுடைய தலையிலிருந்து மெல்ல நழுவி அவளுடைய ஜடையை பிடித்தான். பின்னர்… “அக்கா” என அவன் அழைப்பதைக் கேட்டு திடுக்கென கண்ணை திறந்தால் உஷா. நிமிர்ந்து பார்த்தவளிடம் “இந்தக்கத்தி நல்லா இருக்கு” எனக்கூறினான். அவளும் அதை ஆமோதிப்பதுபோல ஆமா என தலையசைத்துவிட்டு எழுந்து நின்றாள். அவள் மனது வார்த்தைகளை கோர்க்க தடுமாறியது. பின்னர் எவ்வளவு என கடைக்காரன் எழுதிக்காட்டிய பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வெளியே போகும்போது அந்த கடைக்காரன் உஷாவின் நீளமான ஜடையை பார்த்துக்கொண்டே இருந்தான்.
இருவரும் மீண்டும் -க்கு திரும்பினர்.
ஜேப்பீ: அக்கா… என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?
உஷா: ஒண்ணும் இல்ல டா…
ஜேப்பீ: என்னை உங்க தம்பினு சொன்னீங்க… ஆனா உண்மையை சொல்ல மாற்றீங்க.
உஷா: ச்சே…ச்சே…. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.
ஜேப்பீ: இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்கப்போறோமேனு வருத்தமா இருக்கா?
உஷா: அதெல்லாம் இல்லை. திருப்பதிக்கு வரும்போதே இவ்ளோநீளமான முடியை மொட்டை அடிக்கதான வந்தேன். அதுனால இல்ல.
ஜேப்பீ: அப்புறம் என்ன?
உஷா: உன்னை ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?
ஜேப்பீ: கேளுங்க.
உஷா: எங்களுக்கு மொட்டை அடிக்கிறதுல உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே.
ஜேப்பீ: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.
உஷா: அப்போ சரி.
ஜேப்பீ: உங்க வீட்டில எல்லாருக்குமே நீளமான முடி இருக்கு. அப்புறம் ஏன் திடீர்னு எல்லாரும் மொட்டை போட்டுக்க போறீங்க?
உஷா: அதுவா…. சரி சொல்றேன் கேளு.
என்னோட அம்மா ரொம்ப பக்தி. வீட்டில எல்லாத்துக்கும் நேரம், காலம், சகுனம் எல்லாம் பார்ப்பங்க. எங்கம்மாவுக்கும் முடி தொடைவரை நீளமா இருக்கும். அதுனாலதான் எண்ணினையும் என்னோட தங்கச்சிகளையும் நீளமா முதிய வளர்க்க சொல்லுவாங்க. நாங்களும் எப்போவுமே அம்மாவை எதிர்த்து பேசியது இல்லை. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி அப்பாவுக்கு ஒரு ஆக்ஸிடண்ட். தலையிலயும் கால்-லயும் நல்ல அடி. அப்போ அப்போ அம்மா வீட்டுல எல்லாரோட ஜாதகத்தையும் எடுத்துட்டு ஒரு ஜோஷியரை பார்க்க போனாங்க. அப்பாவுக்கு ஏதோ கண்டம்னு சொல்லி ஒரு பரிகார பூஜை பண்ணிட்டு திருப்பதி எழுமலையானை தரிசிக்க சொன்னான். நாங்களும் பூஜை செய்தோம். அந்த மாசத்திலேயே திருப்பதி வரலாம்னு பேசினோம். ஆனால் ஒருநாள் அம்மா தலைக்கு குளிச்சிட்டு தலையை காயவைக்க FAN முன்னாடி நின்றிருந்தாங்க. அப்போ பக்கத்துல சுவத்துல இருந்த பெருமாள் படம் அம்மாவோட தலையில விழுந்தது. அப்போ எங்கம்மா கொஞ்சம் குனியவும் அவங்களோட தலைமுடி FAN ரெக்கைல மாட்டிக்கிச்சு. நல்ல வேலையா கீதா உடனே அந்த FAN-ஐ Off பண்ணிட்டாள். ஆனால் அம்மாவோட முடி நல்லா சிக்கிருச்சு. வேற வழியில்லாம அம்மாவோட முடியை நான்தான் Cut பண்ணி விட்டேன். அதுனாலதான் அவங்களுக்கு இப்போ இடுப்புவரைக்கும் தான் முடி இருக்கு.
ஜேப்பீ: அப்புறம் என்ன ஆச்சு?
நம்ம குடும்பத்துல வந்த பிரச்சனையை தீர்ததுவைத்த அந்த பெருமாள், என்னோட தலைமுடியை காணிக்கையா கேட்கிறான் பாருனு சொன்னாங்க. அப்புறம் நம்ம குடும்பத்துக்கு வந்த கேடு நம்மளை விட்டு போயிடுச்சுனு கோவில்ல நம்ம எல்லோருமே முடியை காணிக்கையா கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. முதல்ல நாங்க யோசிச்சோம். அதுக்கப்புறம் ஒருவழியா எல்லாருமே மொட்டை அடிக்க ஒத்துக்கிட்டோம். அதுக்குத்தான் இப்போ திருப்பதி வந்திருக்கோம்.
ஜேப்பீ: வாவ். சூப்பர்.
உஷா: நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்.
ஜேப்பீ: கேளுங்க.
உஷா: உனக்கு ஏதாவது செய்யணும்போல இருக்கு. ஆனா உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை. உனக்கு என்ன வேணும்னு கேளு. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்.
ஜேப்பீ: அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஏதாவது வாங்கிட்டு செஞ்சா அப்புறம் அது உதவியா இருக்காது.
உஷா: நான் அதுக்காக சொல்லலை… எனக்கு ஒரு தம்பி இருக்கிறமாதிரி நெருக்கமா இருக்க. உண்மையிலேயே உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது.
ஜேப்பீ: சரி.. நான் ஒண்ணு கேட்கிறேன்.
உஷா: சரி கேளு.
ஜேப்பீ: என்னை தப்பா நினைக்காதீங்க.
உஷா: நினைக்கமாட்டேன் கேளு.
ஜேப்பீ: நான் பொதுவா புதுசா ஏதாவது செய்யும்போது நான் செய்யுற விஷயங்களை வீடியோ எடுத்து வச்சிக்குவேன். இப்போ உங்களுக்கெல்லாம் மொட்டை அடிக்கிறதையும் வீடியோ எடுத்துக்கலாமா.
உஷா: வீடியோவா?
ஜேப்பீ: ஆமா.
உஷா: உங்கப்பா பார்த்தா எதுவும் சொல்லமாட்டாரா?
ஜேப்பீ: அவருக்கு தெரியாது. நான் மூணு வருஷமா இதுமாதிரி நிறைய புதுப்புது வீடியோ எடுத்திருக்கேன். ஆனால் அவர் ஒரு வீடியோகூட பார்த்தது இல்லை. அவருக்கு அதெல்லாம் பிடிக்காது.
உஷா: வேற யாராவது பார்த்த உன்னை திட்டமாட்டாங்களா?
ஜேப்பீ: தெரியாம பார்த்துக்குவேன்.
உஷா: எனக்கு பிரச்னை இல்ல. என்னோட அம்மா, தங்கச்சி எல்லாம் என்ன சொல்லுவாங்கனு தெரியலை.
ஜேப்பீ: சரி விடுங்க… கஷ்டம்னா வேணாம்.
உஷா: நீ முதல்தடவையா கேட்கிற… எப்படி வேணாம்னு சொல்றது…. சரி… நான் ஒண்ணு பண்றேன். யாருக்கும் தெரியாம அதை வீடியோ எடுக்க ரெடி பண்றேன். போதுமா?
ஜேப்பீ: யாருக்கும் தெரியாமலா?
உஷா: ஆமா…. நீயும் யார்கிட்டயும் சொல்லாத. உங்கக்காகிட்டயும்தான். அப்புறமா ஊருக்கு போய் வேணும்னா நீ சுபாகிட்ட காட்டு.
ஜேப்பீ: சூப்பர். அப்போ செம த்ரில்லிங்கா இருக்க போகுது.
உஷா: ஆமா…
இருவரும் பேசிவிட்டு வரும் வழியில் கொஞ்சம் பாலும், ஸ்நாக்ஸ்-ம் வாங்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் வரும்போது சுபா ஜெயந்தியுடனும், பிரியா & கீதாவுடனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் ஓரளவுக்கு பழகிவிட்டதாகவே தோன்றியது. பின்னர் உஷா உள்ளே சென்று கைகால்களை கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள். அனைவரும் டீ சாப்பிட்டு சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவரிலும் சிறுவனாக இருந்தாலும் அவனுடைய துருதுருப்பான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.ஜேப்பீ தனக்கும் தான் அக்காவுக்கும் நடந்த சுவாரசியமான சம்பவங்களையெல்லாம் கூறினான். அவன் கூறியதிலிருந்து அவன் சுபாமீது எவ்ளோ பாசமாக இருக்கிறான் என அனைவருக்கும் புரிந்தது. சுபா, பிரியா, கீதா மூவரும் தங்கள் கல்லூரியில் நடந்த கலகலப்பான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டனர். அந்த இடமே கலகலப்பாக மாறியிருந்தது.
கீதா: வாவ். திருப்பதி-ல இவ்ளோ ஜாலியா இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை.
சுபா: நாங்களும்தான். பொழுதுபோகலைனா சாயங்காலம் கடைத்தெருவுக்கு போலாம்னு நினைச்சோம். ஆனால் இப்போ டைம் பத்தாதுபோல.
உஷா: உண்மைதான்.
பிரியா: நான் ஜாலியா இன்னும் கொஞ்ச நேரம் ஏதாவது கேம் விளையாடலாம்-னு இருந்தேன்.
கீதா: சூப்பர். என்ன கேம் விளையாடலாம்?
ஜெயந்தி: இப்போ விளையாட எங்க நேரம் இருக்கு? அடுத்து மொட்டை அடிக்க வேணாமா?
பிரியா: ப்ளீஸ்மா… கொஞ்ச நேரம் கேம் விளையாடலாம்… அப்புறமா மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: நம்மகிட்ட நேரம் இல்லடி.
ஜேப்பீ: அப்போ மொட்டை அடிக்கிறதையே ஒரு கேம் மாதிரி பண்ணலாம்.
உஷா: மொட்டை அடிக்கிறதுல என்ன கேம்?
ஜேப்பீ: சரி.. சொல்லுறேன் கேளுங்க.
ஜேப்பீ என்ன விளையாட்டுனு சொல்ல ஆரம்பித்தான். இப்போ மொட்டை அடிக்கிற நாலு பேருடைய பேரையும் தனித்தனியா ஒரு சீட்டுல எழுதி போடணும். எல்லாரும் வட்டமா சேர்ல உட்காரனும். ஒரு நிமிடம் இருக்கிற மாதிரி ஒரு பாட்டை ப்ளே பண்ணி விட்டு அது முடியுற வரைக்கும் ஒரு தலையணையை பக்ககத்துல உட்கார்ந்து இருக்கிறவங்ககிட்ட கொடுத்திட்டே இருக்கணும். ம்யூஸிக் சேர் கேம் மாதிரி. பாட்டு முடியும்போது யார்கிட்ட தலையணை இருக்கோ அவங்க இப்போ இருக்கிற சீட்டுல ஒரு சீட்டை எடுக்கணும்.யாரோட பேர் சீட்டுல இருக்கோ அவங்களுக்குத்தான் மொட்டை அடிக்கணும். அவங்களுக்கு மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் மறுபடி கேம் தொடர்ந்து ஆடுவோம். மீதி இருக்கிறவங்களுக்கு மொட்டை அடிக்கிற வரை இது தொடரும்.
உஷா: ஐடியா நல்லா இருக்கு. கீதா… நீ ஒரு தலையணை எடுத்துட்டு வா.
கீதா: சரிக்கா… நான் எடுத்திட்டு வறேன்.
உஷா: ஜேப்பீ… உன் மொபைல்ல எதுவும் பாட்டு இருக்கா?
ஜேப்பீ: இருக்கு.. இந்தாங்க.
உஷா: என்ன ஜேப்பீ உன்னோட மொபைல்ல சார்ஜ் இல்லயா?…. உஷா உன்னோட மொபைல்ல பாட்டு இருக்கா.
சுபா: இருக்கு.
உஷா: சரி… அப்போ நீ ஒரு பாட்டு எடுத்துவை. நான் இவன் மொபைல்ல சார்ஜ் போட்டு வறேன்.
முதலில் ஜேப்பீ சற்று குழம்பினான். அவன் மொபைலில் நிறைய சார்ஜ் இருந்தது. அது எப்படியும் இன்னும் எட்டு மணிநேரமாவது தாங்கும். பின்னர் ஏன் உஷா சார்ஜ் இல்லையென சொல்லுகிறாள் எனப்புரியவில்லை. அவனுடைய மொபைலை எடுத்துக்கொண்டுபோய் அவர்கள் மொட்டை அடிக்க இருந்த இடத்திற்கு அருகில் மொபைல் காமிராவில் வீடியோ ஆன் செய்து, சார்ஜ் போட்டு வைத்துவிட்டு வந்தாள். இதை ஜேப்பீ கவனித்துக்கொண்டிருந்தான். சார்ஜ் போட்டுவிட்டு திரும்பிய உஷா அவனிடம் சைகையில் வாயில் கைவைத்து “உஷ்” என்றாள். அவன் புரிந்துகொண்டு சிரித்தபோது கண்ணாடித்தாள். கீதா தலையணையை எடுத்துவந்திருந்தாள். உஷா வந்ததும் அனைவரும் வட்டமாக அமர்ந்தனர்.
யார் முதலில் மொட்டை அடிக்கப்போவது என பரபரப்பாக அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் சுபா மொபைலில் பாடலை ஆன் செய்தாள். கீதா கையிலிருந்த தலையணையை அடுத்தவருக்கு கொடுத்தாள். வேகவேகமாக தலையணை அனைவரின் கைகளிலும் மாறியது. பாடல் முடியும்போது தலையணை பிரியாவின் கைகளில் இருந்தது. பிரியா எழுந்து ஒரு சீட்டை எடுத்தாள். அனைவரும் ஆர்வமாக அவளைப்பார்க்க அவள் சிரித்துக்கொண்டே “கீதா” என்றாள். அனைவரும் “ஓ”வென்று கத்தினர்.
பிரியா: நீதான் இன்னைக்கு முதல்ல மொட்டை போட்டுக்க போறது.
கீதா: ஐய்யோ… நான் கடைசியா மொட்டை போட்டுக்கலாம்னு நினைச்சேன்.
உஷா: அதெல்லாம் முடியாது. கேம்-னா கேம்தான். முதல்ல நீதான்.
கீதா: அம்மா… நீ சொல்லுமா.. ப்ளீஸ்.
ஜெயந்தி: நீதான வெளியபோய் மொட்டை அடிக்க முடியாது. Guest House-லயே மொட்டை அடிக்கணும்னு சொன்ன. அதான் கடவுளா பார்த்து உனக்கு முதல்ல மொட்டை அடிக்க முடிவு பண்ணி இருக்கார்.
கீதா: அப்படி பார்த்தால்… இன்னைக்கு நம்ம எல்லாருக்கும்தான் மொட்டை அடிக்க முடிவு பண்ணி இருக்கார்.
பிரியா: அப்படியெல்லாம் சொல்லி நீ தப்பிக்க முடியாது. எழுந்துபோய் அங்க உட்காரு. நேரமாச்சு.
கீதா: சரி… போறேன். மொட்டை அடிச்சுக்கிறதுல… உங்களுக்கெல்லாம் நான்தான் ரோல் மாடல்.
உஷா: ரொம்ப பேசாத கீதா. ஜேப்பீ…. நீ ரெடியா?
ஜேப்பீ: நான் எப்போவுமே ரெடிதான்.
உஷா: கீதா… உன்னோட ஜடையை அவிழ்த்துவிட்டு உட்காரு.
கீதா: சரிக்கா.
கீதா எழுந்து முதலில் தன்னுடைய துப்பாட்டாவை கழட்டினாள். பின்னர் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அப்படியே நடந்துவந்து மொட்டை அடிக்க போடப்பட்டிருந்த பலகையின் அருகில் வந்தாள். ஜேப்பீயும் அருகில் வந்தான். கீதா தன்னுடைய ஜடையில் இருந்த ரப்பர் பான்டை கழட்டி ஜேப்பீயின் கைகளில் கொடுத்தாள். அவன் சிரித்துக்கொண்டே கையில் வாங்கினான். பின்னர் மெல்ல அவள் தன்னுடைய ஜடையை அவிழ்க்க துவங்கினாள். ஜடையிலிருந்து பின்னல் அவிழ்க்கவும் அவளுடைய தலைமுடியின் அடர்த்தி வெளியே தெரிய ஆரம்பித்தது. தோள்பட்டைவரை இருந்த ஜடையை அவிழ்த்ததும் மீண்டும் தலைமுடியை தூக்கி பின்னால் போட்டாள். முழுவதுமாக தலைமுடியை அவிழ்த்ததும் தலையிலிருந்த ஹேர்பின்னை கழத்தினாள். அதையும் ஜேப்பீயின் கைகளில் கொடுத்தாள். அவன் அதைவாங்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது “கொஞ்சம் பொறு… என்னோட தலைமுடியையும் உன் கையில கொடுக்கிறேன்” என்றாள். அனைவரும் சிரித்துவிட்டனர்.
கீதா தன்னுடைய தலைமுடியை நன்றாக உதறிவிட்டு சிரிப்புடன் அந்த பலகையில் அமர்ந்தாள். அவளுடைய முடி தரையில் விழும் அளவுக்கு நீளமாக இருந்தது. ஜேப்பீ அவன் கையிலிருந்த பொருள்களை உஷா கையில் கொடுத்துவிட்டு கீதா அருகில் சென்றான். அங்கிருந்த ஒரு சின்ன ஸ்டூல் எடுத்து போட்டு அவள்முன் அமர்ந்தான். அவள் தலைமுடியை விரித்துப்போட்டதில் அவளுடைய அடர்த்தியான முடியின் நடுவில் வகிடு தெரிந்தது. அவளுடைய உச்சந்தலையில் கையை வைத்து அவள் தலைமுடியின் அடர்த்தியை உணர்ந்தான். ஒரு பஞ்சுக்குவியலில் கைவைத்தது போல இருந்தது கீதாவின் தலைமுடி. மிகவும் மிருதுவான முடி. பின்னர் அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் தலைமுடியில் ஊற்றினான். தண்ணீர் அவள் கூந்தலிழைகளிலே நுழைந்து ஓடியது. மேலும் தண்ணீர் எடுத்து அவளுடைய தலைமுடியை நனைத்தான். பின்னர் அவளுடைய முடியை மெல்ல மசாஜ் செய்ய ஆரம்பித்தான். அவன் மசாஜ் செய்துகொண்டு இருக்கையில் கீதா “வாவ்… நல்லா இருக்குடா தம்பி” என்றாள்.
அப்போது எழுந்துவந்த ஜெயந்தி கீதாவின் அருகில் நின்றாள். ஜேப்பீ தண்ணீர் ஊற்றி முடித்தபோது கீதாவின் முகமெல்லாம் நீர் வடிந்துகொண்டிருந்தது. அவளுடைய சுடிதார் பெரும்பாலும் நனைந்துவிட்டது. அவள் தலைமுடியை தூக்கிவிட்டு முகத்தில் இருந்த நீரை வழித்துவிட்டாள். ஜெயந்தி குனிந்து கீதாவின் தலைமுடியை இரண்டாக பிரித்து முன்புறம் போட்டாள். அதை அப்படியே இருபுறமும் ஒவ்வொரு கொண்டையாக போட்டு விட்டாள். ஜெயந்தி மொபைல் காமிராவை பார்த்துவிடுவாளோ என உஷா கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஜெயந்தி கீதாவின் தலைமுடியை கொண்டை போட்டுவிட்டு எழுந்துநின்றாள். கீதாவின் அடர்த்தியான முடி இரண்டுபக்கமும் கனமான கொண்டைகளாக நின்றிருந்தது.
ஜேப்பீ அந்த புதிய சவரக்கத்தியை எடுத்து கீதாவின் கண்முன்னால் விரித்தான். அதில் ஒரு பிளேடை சொருகி பின்னர் மொட்டை அடிக்க தயாரானான். அனைவரின் கண்களும் இப்போது ஜேப்பீயின் கையிலிருந்த கத்தியில் இருந்தது. சுபா முதல் முறையாக அவளுடைய தம்பி ஒரு நீளமான தலைமுடியை உள்ள பெண்ணுக்கு மொட்டை அடிக்கப்போகிறான் என்பதை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஜேப்பீ கீதாவின் தலையில் கைவைத்து குனியவைத்தான். பின்னை கத்தியை அவள் தலையில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். அவனுடைய கத்தி முதல் கற்றி முடியை மழித்தபோது ஜெயந்தி கண்களைமூடி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தாள். கெததாவில் தலையில் வெள்ளை தோல் வெளியே தெரிய ஆரம்பித்தது. கீதா தன்னுடைய தலையில் முதலில் ஒரு சிறு எரிச்சலையும் பின்னர் குளிர்ச்சியையும் உணர்ந்தாள். பின்னர் ஜேப்பீ வேகமாக அவள் தலையை சிரைக்க ஆரம்பித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கீதாவின் உச்சந்தலையிலிருந்து நெற்றிவரை இருந்த முடியை மழித்திருந்தான். கொஞ்சம்கொஞ்சமாக அவளுடைய முடியை மழித்துக்கொண்டே இருந்தான். இதை பார்த்துக்கொண்டிருந்த பிரியா அவ்வப்போது தன்னுடைய தலையை தொட்டுப்பார்த்தாள். சுபா அதை கவனித்தபோது பிரியா சிரித்தாள்.
கீதாவின் தலையிலிருந்து கற்றைகற்றையாக முடி சிரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கீதாவின் வலதுபுறத்தில் சிரைத்துமுடித்துவிட்டு பின்பக்கம் சென்றான் ஜேப்பீ. அவன் அவளுடைய தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தபோது தலையிலிருந்து கனம் குறைந்து அவளுடைய கொண்டையின் கனம் அதிகரிப்பதுபோல கீதா உணர்ந்தாள். அவன் கீதாவின் வலதுபுறத்தை மொட்டை அடித்து முடித்தபோது அவளுடைய ஒரு கொண்டை கீழே விழுந்தது. பின்னர் கீதா திரும்பி உட்கார்ந்தாள். ஜேப்பீ அவளுடைய இடதுப்புறத்தை மழிக்க ஆரம்பித்தான். ஜேப்பீ ஒருபக்கம் கீதாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். மறுபுறம் கீதா தன்னுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள். கீதா தடவுவதை உஷாவும் பிரியாவும் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.ஜேப்பீ கவனமாக கீதாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். ஜெயந்தி இடையூறு செய்யாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அனைத்தும் மொபைல் காமிராவில் ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஜேப்பீ கீதாவின் தலையை மொட்டை அடித்தான். அவளுடைய இரண்டாவது கொண்டையும் கீழே விழுந்தது. பின்னர் ஜெயந்தி இரண்டு கொண்டைகளையும் கையில் எடுத்தாள்.
கீதா மொட்டை தலையுடன் எழுந்து நின்றாள். பிரியா ஊஅடி வந்து அவளுடைய மொட்டை தலையை தடவினாள். ஜெயந்தியும் கீதாவின் மொட்டை தலையை தடவிப்பார்த்துவிட்டு அவளுடைய தலையில் முடி சுத்தமாக மழிக்கப்பட்டு இருக்கிறதா என பார்த்தாள். பின்னர் அவள் கைகளை எடுத்ததும் கீதா நடந்து உஷாவின் அருகில் நின்றாள். உஷா கீதாவின் தலையை தடவும்போது கீதா உஷாவின் ஜடையை தொட்டுப்பார்த்துக்கொண்டே “அக்கா… அடுத்து நீதான்” என்றாள். உஷா சிரித்துக்கொண்டே ஜடையை தூக்கி பின்னால் போட்டாள்.
ஜெயந்தி: உஷா… அந்த துணியை எடு… இந்த முடியை அதுல முடிஞ்சு வைச்சுறலாம்.
உஷா: இந்தாங்க.
சுபா: ஜேப்பீ….. உனக்கு எதுவும் கஷ்டமா இல்லையே.
ஜேப்பீ: இல்லக்கா…. அவங்களோட முடி ரொம்ப ஸ்மூத்தா இருந்தது.
கீதா: ஹாஹா…. என்னோட முடி மட்டும் இல்ல…. என்னோட தலையும் இப்போ ஸ்மூத்தா தான் இருக்கு.
உஷா: இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம எல்லாரோட தலையும் ஸ்மூத்தா ஆயிடும்
பிரியா: சுபாவை தவிர.
சுபா: ஹாஹா…. என்னோட தலை நாளைக்கு ஸ்மூத்தா ஆயிடும்
கீதா: சரி சீக்கிரம் வாங்க….. அடுத்து யாரோட தலையை மொட்டை அடிக்கிறதுனு பார்க்கலாம்.
பிரியா: உன்னோட தலையை மொட்டை அடிச்சதும் அடுத்து யாருக்கு மொட்டை அடிக்கிறதுனு பார்த்திட்டு இருக்கியா?
கீதா: ஆமா…. அடுத்து உனக்கு மொட்டை போட்ட நல்லா இருக்கும்.
பிரியா: நான் உன்னைமாதிரி மொட்டை போட கூச்சப்படமாட்டேன். தைரியமா உட்கார்ந்து மொட்டை போட்டுக்குவேன்.
கீதா: நீ எப்படி வேணும்னாலும் மொட்டை போட்டுக்கோ. இப்போ எனக்கு கூச்சமா இல்ல. இப்போ நானும் தைரியமா மொட்டைதலையோட வெளிய வருவேன்.
உஷா: வெரி குட். அப்படித்தான் தைரியமா இருக்கணும்.
பிரியா: சரி…. வாங்க…. அடுத்து யாரு தலையை ஜேப்பீ-கிட்ட கொடுக்கப்போறாங்கனு பார்க்கலாம். சுபா… பாட்டு ரெடியா?
சுபா: ரெடி.
உஷா: அம்மா…சீக்கிரம் வாங்க.
ஜெயந்தி: இதோ வறேன்.
பிரியா: இந்தமுறை யாருகையில இருந்து ஸ்டார்ட் பண்ணனும்.
ஜேப்பீ: கீதாதான். இப்போ அவங்களுக்குத்தான மொட்டை அடிச்சிருக்கு.
கீதா: சூப்பர்…சூப்பர்….
அனைவரும் மறுபடி வட்டமாக அமர்ந்தனர். கீதா தன் கையில் தலையணையை தயாராக வைத்திருந்தாள். சுபா பாடலை துவங்கியதும் அந்த தலையணை ஒவ்வொருவர் கையாக மாறி பயணித்தது. பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஒரு பரப்புரப்பு நிலவியது. பாடல் முடிந்தபோது தலையணை சுபாவின் கைகளில் வந்து நின்றது. சுபா சிரித்துக்கொண்டே எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். சுபா சீட்டை பிறிது பார்த்துவிட்டு உஷாவையும் பிரியாவையும் மாறி மாறி பார்த்தாள். அனைவரும் அவளோடு பார்த்துக்கொண்டிருக்க “ஜெயந்தி” என்று கூறினாள். மீண்டும் ஒருமுறை எல்லோரும் “ஓ”வென்று கத்தினர்.
No comments:
Post a Comment