அந்த விஸ்தாரமான ஹாலின் மையத்தில் தொங்கிய இரண்டு ஊஞ்சல்களும்.. இப்போது 'சர்ர்ர்ர்.. சர்ர்ர்ர்..' என வேகவேகமாக ஆடிக்கொண்டிருந்தன.. ஒன்று ஆதிராவுடன்.. இன்னொன்று ஆளில்லாமல்..!! தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே ஊஞ்சலில் அமர்ந்து, அண்ணாந்து பார்த்து கலகலவென சிரித்தவாறே.. ஜோடியாக ஊஞ்சலாடிய நினைவு ஆதிராவுக்கு இப்போது வந்தது..!! இருதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி பரவ, அவளது விழிகளில் ஒரு சொட்டு நீர் துளிர்த்தது..!! மனதில் இருந்த வேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. வேகமாக ஊஞ்சலாடிக்கொண்டே.. பக்கவாட்டில் திரும்பி அந்த ஆளில்லா ஊஞ்சலை பார்த்து.. இறுக்கமான குரலில் கேட்டாள்..!!
"எங்கடி வச்சிருக்குற அவரை..??"
"க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"
"சொல்லுடி.. அவரை என்ன பண்ணின..??"
"க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"
"ப்ளீஸ் தாமிரா.. எங்கிட்ட அவரை குடுத்திடு..!!"
ஆதிரா கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. ஆளில்லாமல் ஆடிய அந்த ஊஞ்சல் அப்படியே ப்ரேக் போட்டமாதிரி அந்தரத்தில் நின்றது.. ஆதிரா ஆடிய ஊஞ்சல் மட்டும் இப்போது 'க்க்க்கிர்ர்ர்ர்ர்ர். க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..' என்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது..!!
ஆதிராவும் இப்போது ஊஞ்சலில் இருந்து மெல்ல இறங்கினாள்.. அந்தரத்தில் நின்ற அந்த ஊஞ்சலையே சற்று மிரட்சியாக பார்த்தாள்..!! அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஊஞ்சல் சரசரவென சுழன்றது.. அப்படியே அந்தரத்திலேயே.. இரும்பு சங்கிலிகள் ஒன்றோடொன்று பின்னி முறுக்கிக்கொள்ள.. திடீரென்று அதன் அடிப்பக்க மரப்பலகை ஆதிராவின் முகத்தை நோக்கி சரேலென சுழன்றடித்தது..!!
"ஆஆஆஆஆஆ..!!"
பதறிப்போன ஆதிரா படாரென முகத்தை திருப்பிக்கொண்டாள்.. அரைநொடி தாமதித்திருந்தால் கூட அவளது முகம் பெயர்ந்து போயிருக்கும்..!! முகத்தை திருப்பி காயமுறாமல் தப்பித்த ஆதிரா.. தஸ்புஸ்சென மூச்சிரைத்தாள்..!! அவளது உடலில் ஒருவித வெடவெடப்பு.. அதேநேரம் மனதுக்குள் தங்கையின்மீது சுள்ளென்று ஒரு எரிச்சல்..!!
"ஏய்.. என்னடி நெனைச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" என்று ஏதோ ஒரு வெற்றிடத்தை பார்த்து கத்தினாள்.
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!"
வீட்டுக்குள் மீண்டும் அதே சிரிப்பொலி.. தூரத்தில் திடீரென ஒரு வெளிச்சம்.. சிவப்புத்துணியை போர்த்திக்கொண்டு தாமிரா ஓடுவது தெரிந்தது.. 'ஜல்.. ஜல்.. ஜல்..' என்ற கால்க்கொலுசின் ஓசையோடு..!!
"நில்லுடி.. நீ எங்க போனாலும் விடமாட்டேன்..!!"
ஆதிராவும் கத்திக்கொண்டு அந்த திசையில் ஓடினாள்.. ஐந்தாறு அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தூரத்தில் ஓடிய அந்த உருவம் பட்டென மறைந்துபோனது.. ஒரு பனிப்புகை மாதிரி..!! உடனே ஆதிரா சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள்.. உருவம் மறைந்துபோன இடத்தையே, மூச்சிரைக்கிற மார்புகளுடன் திகைப்பாக பார்த்தாள்..!!
"அக்காஆஆஆஆ...!!!!!!!!!!"
ஆதிராவுக்கு பின்புறம் இருந்து அந்த அமானுஷ்ய ஓலம்.. அதை கேட்கும்போதே அவளது ரத்த நாளங்களுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!!
"ஹக்க்..!!"
மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு திரும்பி பார்த்தாள்..!! அந்த திசையில் யாரும் இல்லை.. வெண்கல சிலையில் அமர்ந்திருந்த காகம்தான், தனது அலகினால், சிறகின் அடிப்புறத்தை சுரண்டிக்கொண்டிருந்தது..!! தாமிராவின் குரல்மட்டும் இப்போது அந்த திசையில் இருந்து ஒலித்தது.. சற்றே அலறலாக.. ஒருவித ஏளன தொனியுடன்..!!
"புடிச்சுடுவியாக்கா என்னை..?? எங்க புடி பாக்கலாம்.. வா வா.. புடி புடி புடி புடி..!! ஹாஹாஹாஹாஹாஹா...!!"
பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே.. இப்போது இன்னொரு திசையில், சற்று தூரமாக அந்த சிவப்பு அங்கி உருவம் தோன்றியது, திடுதிடுவென முதுகுகாட்டி ஓடியது.. 'ஜலீர்.. ஜலீர்.. ஜலீர்..' என்று அதே கொலுசு சப்தம்..!!
ஆதிரா அந்த திசையில் அடியெடுத்து வைக்க நினைக்கையிலேயே.. உருவம் சட்டென மறைந்து போனது.. மீண்டும் அவளுக்கு பின்னால் இருந்து தாமிராவின் குரல்.. சற்றே அலறலாக..!!
"கண்ணாமூச்சி ரே ரே..!!!!!!!!!"
'ரே ரே.. ரே ரே.. ரே ரே..' என்று அந்த பிரம்மாண்ட வீட்டின் சுவர்கள் அனைத்தும், தாமிராவின் குரலை எதிரொலித்தன..!! ஆதிரா மிரண்டு போனாள்.. உடம்புக்குள் ஒரு பயசிலிர்ப்பு சொடுக்கி விடப்பட்டிருக்க.. சப்தம் எதிரொலித்த சுவர்களை எல்லாம் வெடுக் வெடுக்கென திரும்பி பார்த்தாள்..!!
"கண்டுபுடி ரே ரே..!!!!!!!!!"
"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!" தாமிராவின் சிரிப்பு.. தண்டுவடத்தில் ஐஸ் கத்தியை இறக்குவது போலிருந்தது..!!
"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!" அவள் தொடர்ந்து பாட..
"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!" வீட்டுக்குள் தொடர்ந்து எதிரொலி..!!
காதுகளுக்குள் ரீங்காரமிட்டு, மூளைக்குள் குடைச்சலை ஏற்படுத்தியது வீட்டுக்குள் ஒலித்த அந்த சப்தம்.. இடையிடையே 'ஹாஹாஹாஹா'வென்று அவளது சிரிப்பொலி.. அதைத்தொடர்ந்து ஆங்காங்கே இருளுக்குள் தோன்றி 'ஜல் ஜல் ஜல்'லென்று கொலுசொலிக்க ஓடினாள்.. ஆதிரா பயந்துபோய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே படார் படாரென காற்றில் மறைந்து போனாள்..!!
தங்கையை பிடிக்க அங்குமிங்கும் ஓடிக்களைத்த ஆதிரா.. இப்போது ஓய்ந்துபோய் ஓரிடத்தில் நிலைத்தாள்..!! விபத்தின்போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது ஒரு அதீத வலி.. வின்வின்னென்று உயிர்போனது.. வேதனையுடன் முகத்தை சுருக்கிக்கொண்டாள்..!! தங்கையுடன் போட்டியிட்டு வெல்வது கடினம் என்று அவளுக்கு புரிந்து போனது.. கண்களில் நீர்துளிர்க்க, இருட்டை பார்த்து கெஞ்சலாக கத்தினாள்..!!
"போதுண்டி.. வெளையாண்டது போதும்.. என்னால முடியல..!! ப்ளீஸ் தாமிரா.. என் முன்னாடி வா.. எனக்கு உன்கிட்ட பேசணும்..!!"
ஆதிரா கத்திமுடிக்க, இப்போது வீட்டுக்குள் மீண்டும் ஒரு அடர்த்தியான நிசப்தம் நிலவியது.. தாமிராவின் சிரிப்பொலியும், ஜ்ஜிலீரென்ற கொலுசொலியும் பட்டென நின்று போயிருந்தன..!!
ஆதிரா அந்த திடீர் அமைதியில் சற்றே குழம்பிப்போனவளாய்.. எதுவும் புரியாமல் வெற்றிடத்தை வெறிக்க வெறிக்க பார்த்தாள்..!! அவள் நின்றிருந்த இடம் கரியப்பியது போல இருட்டாயிருந்தது.. தூரத்தில்தான் மெழுகுவர்த்தியின் மசமச வெளிச்சம்..!! என்னவோ நடக்கப் போகிறது என்று படபடக்கிற இருதயத்துடன் அவள் காத்திருந்தபோதுதான்.. அடர்இருளுக்குள் இருந்து அந்த ஒற்றைக்கண் பார்வைக்கு வந்தது.. திரிதிரியாய் வழிகிற கூந்தல் மயிர்களுக்கு இடையில், ரத்தத்தில் முக்கியெடுத்தது போல செக்கச்சிவப்பாய் காட்சியளித்தது அந்தக்கண்..!!
"ஹ்ஹக்க்க்க்...!!!!"
மூச்சை இழுத்துப்பிடித்த ஆதிரா சற்றே அதிர்ந்துபோய் பின்வாங்கினாள்..!! இப்போது தாமிராவின் முகம் மெல்ல மெல்ல இருட்டுக்குள் இருந்து வெளிவந்தது.. நீண்டநாளாய் குளிர்நீருக்குள் ஊறிப்போனது போல வெள்ளைவெளேரென வெளிறிப்போயிருந்தது அந்த முகம்..!! முட்டையோட்டின் விரிசல் மாதிரி முகமும் உதடுகளும் பாளம் பாளமாய் வெடித்திருந்தன.. ஆங்காங்கே ஆழமாய் வெட்டுக்காயங்கள்.. அந்த காயங்களில் உறைந்து நிறம் வெளிறியிருந்த ரத்தச்சுவடு.. நெற்றிக்கருகில் வட்டமாய் உட்சென்ற ஒரு ஆழ்துளை..!! கண்களின் கருவிழி தவிர்த்து மிச்சமெல்லாம் அடர்சிவப்பு.. அந்தக்கண்கள் பார்த்த பார்வையிலோ அப்படியொரு கோபமும், கோரமும்..!!
தாமிராவின் உருவம் முழுத்தெளிவாக தோன்றவில்லை.. அவளைச்சுற்றி ஒரு புகைமண்டலம் சூழ்ந்தமாதிரி மங்கலாக.. கைகால்களும், கூந்தலும் காற்றில் மெலிதாக நெளிவது போல..!! ஆவியான தங்கையின் முகத்தை ஆதிரா இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறாள்.. தாமிராவின் உயிர்பிரிந்தபோது இந்தமாதிரித்தான் அவளது முகம் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றியது..!! அவளது முகத்தை பார்த்து ஆதிராவின் நெஞ்சுக்குள் பஹீரென்று ஒரு பயம் கிளம்பினாலும்.. அதையும் தாண்டி தங்கைமீது ஒரு பரிதாபமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் பிறந்தன..!!
"ம்ம்ம்ம்ம்... ஸ்ஸ்..சொல்லு..!!!"
தாமிராவின் குரலில் ஒரு கரகரப்பு.. அவளது பேச்சை தொடர்ந்து ஒரு ஆவேசமூச்சு.. 'உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்..' என்று..!! ஆதிராவுக்கு உடலும் கைவிரல்களும் வெடவெடக்க.. உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை எல்லாம் அடக்கிக்கொண்டு தைரியமான குரலில் தங்கையிடம் பேச ஆரம்பித்தாள்..!!
"எ..என் புருஷனை.. என் புருஷனை எங்கிட்ட குடுத்திடு..!!"
"ஹ்ஹ.. புருஷனா..?? நான் போட்ட பிச்சைன்னு சொல்லு..!!" தாமிரா கொக்கரித்தாள்.
"சரி.. பிச்சையாவே இருக்கட்டும்.. போட்ட பிச்சையை திரும்ப பிடுங்குறது பாவம் இல்லையா..??"
"ஹாஹாஹா.. பாவம் புண்ணியம் பத்திலாம் பேசக்கூட உனக்கு அருகதை இல்ல..!!"
"ஆமாம்.. அருகதை இல்லாதவதான்.. எனக்கே தெரியும்..!! உன்கிட்ட நான் அதிகாரமா கேட்கல.. கெஞ்சி கேக்குறேன்.. என் புருஷனை விட்டுடு.. அவர் எந்த தப்பும் செய்யல..!! உன் ஆத்திரத்தை தீத்துக்குறதுக்கு என்னை என்னவேனா செஞ்சுக்கோ.. என் உயிரை கூட எடுத்துக்கோ..!! ப்ளீஸ் தாமிரா.. அவரை மட்டும் விட்ரு..!!"
பேசப்பேசவே ஆதிராவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது.. அப்படியே தளர்ந்துபோய்.. கால்களும், உடலும் மடிந்துபோய்.. தரையில் அமர்ந்தாள்.. வாயைப் பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்..!!
ஒருசில வினாடிகள்.. தனக்குமுன் எந்த சலனமும், தங்கையிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக.. மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தாள் ஆதிரா..!! தாமிராவின் உருவம் இப்போது மறைந்து போயிருந்தது..!! ஆதிரா உடனே அதிர்ந்துபோய் விருட்டென்று எழுந்து நின்றாள்.. அவளை சூழ்ந்திருந்த அடர் இருளைப் பார்த்து கத்தினாள்..!!
"தாமிராஆஆஆ.. தாமிராஆஆஆ..!!!!"
ஆதிரா கத்திக்கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் இப்போது தாமிராவின் குரல் கணீரென்று ஒலித்தது.. ஒரு பாடலைப்போல.. ஏற்ற இறக்கத்துடன்..!!
"ஈரேழு பதினாலு இறகு மயிலாட..."
"ஆட.. ஆட.. ஆட.. ஆட.." - வீட்டுச்சுவர்கள் அவளது பாடலை அப்படியே உள்வாங்கி எதிரொலித்தன..!!
"முந்நான்கு பனிரெண்டு முத்து மயிலாட.." - ஆதிரா மிரட்சியான விழிகளுடன் சுவர்களை சுற்றி சுற்றி பார்த்தாள்.
"ஆட.. ஆட.. ஆட.. ஆட.."
"வாராத பெண்களெல்லாம் வந்து விளையாட.."
"ஆட.. ஆட.. ஆட.. ஆட.."
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" - நடுக்கம்கொள்ள வைக்கிற மாதிரி தாமிராவின் சிரிப்பொலி. அதைத்தொடர்ந்து,
"GGGGGame or SSSSShame..??" என்று அவளது கொக்கரிப்பு.
ஆட்டம் தொடங்கியாயிற்று என்று ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது.. ஆட்டத்தில் வென்றுமுடிக்க வேண்டும் என்று அவசரமாய் தன்மனதை திடப்படுத்திக் கொண்டாள்.. குரல்வந்த திசையைப் பார்த்து பதிலுக்கு அலறினாள்..!!
"Game...!!!!!!!!!"
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"
ஒருபக்கம் தாமிரா சிரித்துக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் மூளையை கசக்கிய ஆதிரா ஓரிரு வினாடிகளிலேயே தங்கையின் விடுகதைக்கு விடையை கண்டுபிடித்தாள்.. உடனே பரபரப்பானாள்.. தங்கையும் தானும் முன்பு தங்கிக்கொள்கிற அறைக்கு ஓடினாள்..!! அறைக்குள் அடுக்கியிருந்த பொருட்களை சரசரவென தரையில் இழுத்துப்போட்டாள்.. எதையோ தேடினாள்..!!
அலமாரியின் கப்போர்டை திறக்க.. 'க்க்கீச்ச்ச்..' என்று கத்தியவாறு துள்ளிக்குதித்து வெளியே ஓடியது ஒரு வெள்ளை முயல்..!!
"ஆஆஆஆஆஆஆஆ...!!"
ஆதிராவின் அந்த பயமும் பதற்றமும் ஒற்றை வினாடிதான்.. அவசரமாய் சமாளித்துக்கொண்டு அந்த முயலை கண்டுகொள்ளாமல் கப்போர்டுக்குள் தேடினாள்.. அந்த பல்லாங்குழி பலகையை வெளியே எடுத்தாள்..!! மடித்து வைக்கப்பட்ட பலகையை விரிக்க.. உள்ளே இருந்து நழுவியது அந்த மஞ்சள் காகிதம்..!! தாமிரா இறந்த அன்று, ஆதிரா காட்டுக்குள் கசக்கியெறிந்த அதே காகிதம்.. 'நீ எனக்கு வேணுண்டா' என்று தாமிரா கிறுக்கி வைத்திருந்த அந்த காகிதத்தில், இப்போது வேறேதோ கிறுக்கி வைக்கப்பட்டிருந்தது.. புதையல் வேட்டையில் அடுத்த பொருளை கண்டறிவதற்கான குறிப்பு..!!
அவசரமாய் அதை வாசித்த ஆதிரா.. நெற்றியை சுருக்கி சிறிது யோசித்து.. பிறகு சற்றே முகம் பிரகாசமாகி..
"கண்ணாடி..!!"
என்று முனுமுனுத்தாள்.. அந்த அறையில் இருந்து விர்ரென கிளம்பினாள்.. கிளம்பியவள் என்ன நினைத்தாளோ.. சட்டென நின்றாள்.. மேஜை ட்ராவை இழுத்து, அந்த டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டாள்..!! அறையை விட்டு வெளிப்பட.. தாமிராவின் குரல் வீட்டுக்குள் எங்கெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!!
"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"
"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"
ஹாலுக்குள் பிரவேசித்தவள் பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. 'ஹக்க்க்' என்று திகைத்துப்போய் நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டாள்..!! வீட்டுக்குள் இப்போது ஆங்காங்கே வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும்..!! வெளியே ஓடிவந்த அந்த வெள்ளை முயல்.. அங்குமிங்கும் தவ்விக்கொண்டிருந்த சில அணில்கள்.. நாரைகள், கொக்குகள்.. கருப்புத் தோலும், சிவப்பு கண்களுமாய் பல்லிளித்த ஒரு பூனை.. சோபாவில் நின்று எச்சில் வடித்துக்கொண்டிருந்த ஒரு ஓநாய்.. உத்தரத்து சங்கிலியில் உடலை முறுக்கிக்கொண்டு, தலையை உயர்த்தி நாக்கு நீட்டிய மலைப்பாம்பு.. மேஜையில் படுத்து வாய்பிளந்து கொண்டிருந்த ஒரு காட்டுப்புலி.. இன்னும் இன்னும்..
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" - தாமிராவின் கேலிக் கெக்கலிப்பு.
மிருகங்களை பார்த்து ஒருகணம் மிரண்டுபோன ஆதிரா.. மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதும், படக்கென ஒரு தைரியம் பெற்றாள்..!!
'இவையெல்லாம் தாமிராவின் சீண்டலே தவிர பயப்பட எதுவுமில்லை.. அவளுக்கு என்னுடன் விளையாடவேண்டும்.. அத்தனை சீக்கிரமாய் என் உயிரை பறித்துவிடமாட்டாள்..!!'
தைரியமுற்ற ஆதிரா தனது தேடுதலை தீவிரப்படுத்தினாள்.. அந்த வீட்டில் இருந்த அத்தனை கண்ணாடிகளிலும் டார்ச் அடித்து பார்த்தாள்.. எந்தக்குறிப்பும் கிடைக்கவில்லை.. மாடிப்படியேறி மேலே ஓடினாள்.. அவளது தலைக்குமேல் விர்ரென்று பறந்தன இரண்டு நாரைகள்..!! பின்னணியில் தாமிராவின் கேலிக்குரல்..!!
"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"
"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"
தங்கள் அறையின் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து ஏமாந்துபோய் நின்றாள்.. பிறகு திடீரென ஒரு ஞாபகம் வர, அறையைவிட்டு வெளியே ஓடிவந்தாள்.. பரபரப்பாய் படியிறங்கினாள்.. பச்சோந்திகள் நெளிந்த ஒரு படியை தாவிக்குதித்து தரையில் விழுந்து புரண்டாள்..!!
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"
வீட்டு தரையோடு அடங்கியிருந்த இருந்த நிலவறைக்கதவை திறந்தாள்..!!
"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!!!!!"
மரஏணியில் கால்பதித்து அவள் கீழிறங்க.. பக்கவாட்டில் இறங்கி, அவளை முந்திக்கொண்டு உள்ளே ஓடியது அந்த காட்டுப்புலி..!!
யானைத் தந்தங்கள் பதிக்கப்பட்ட அந்த ஓவல் ஷேப் நிலைக்கண்ணாடியில் டார்ச் வெளிச்சத்தை தெளித்தாள்.. தனக்கு அருகே நின்று, 'க்க்கர்ர்ர்.. க்க்கர்ர்ர்..' என உறுமிக்கொண்டிருக்கிற காட்டுப்புலியை கண்டுகொள்ளாமல், தூசுபடிந்த கண்ணாடியின் பரப்பில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை வாசித்தாள்..!!
"வெள்ளையாம் வெள்.." அவள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே, அறைக்குள அலறலாக ஒலித்தது தாமிராவின் பாடல்.
"வெள்ளையாம் வெள்ளைக்கொடம்.. தரையில விழுந்தா சல்லிக்கொடம்..!!! ஹாஹாஹாஹா..!!"
விடுகதையின் விடையை சட்டென கண்டுபிடித்த ஆதிரா.. மரஏணி நோக்கி ஓடினாள்.. நிலவறையில் இருந்து வெளிப்பட்டாள்.. கதவுக்கருகே நின்று 'ஊஊஊஊஊஊஊ'வென்று ஊளையிட்ட ஓநாய்க்கு..
"ஆஆஆஆஆஆஆ..!!"
என ஒரு அலறலை மட்டும் உதிர்த்து உருண்டுவிட்டு, மீண்டும் எழுந்து ஓடினாள்..!!
அப்புறம் சிறிதுநேரம் ஆதிரா அவ்வாறுதான் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.. அவ்வப்போது வழியில் குறுக்கிடுகிற மிருகங்களை அலட்சியம் செய்தவாறு.. அலறலாய் வீட்டுக்குள் ஒலிக்கிற தாமிராவின் குரலுக்கு மிரண்டுகொண்டே.. கால்க்காயத்தில் 'சுருக் சுருக்'கென்று கிளம்பிய வலியை கண்டுகொள்ளாமல்..!!
தங்கையுடன் சிறுவயதில் சிரித்து விளையாடிய புதையல்வேட்டை விளையாட்டு.. இப்போது ஆவியான அவளுடன் அதே விளையாட்டை மீண்டும் மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்தாள்.. கணவனை கண்டுபிடித்துவிடுகிற வேகத்துடனும், வெறியுடனும்..!!
ரெஃப்ரிஜிரேட்டர் திறந்தாள்.. உள்ளே அலைஅலையாய் நெளிந்துகொண்டிருந்தன சில விஷப்பாம்புகள்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்த பாம்புகளுக்கு இடையே கையை நீட்டினாள்.. முட்டை அடுக்குகளுக்குள் செருகியிருந்த அந்த ஆட்டோஃக்ராப் புத்தகத்தை வெளியே உருவினாள்..!!
"வ்வ்வ்வ்விஷ்ஷ்ஷ்க்க்க்க்...!!"
சீறிய ஒரு கரியநிற பாம்பின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினாள்.. ஆட்டோஃக்ராப் புத்தகம் திறந்து அடுத்த குறிப்பை வாசித்தாள்.. வாசித்த அடுத்தநொடியே வீட்டுக்கு வெளியே ஓடினாள்..!!
கேட்டில் தொங்கிய தபால்பெட்டியை திறந்தாள்.. சடசடவென சிறகடித்து பறந்தது ஒரு சிட்டுக்குருவி.. உள்ளே ஜம்மென்று வீற்றிருந்தது அந்த மாத்ரியோஷ்கா பொம்மை..!! பரபரவென அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. அதனுள்ளே அடுத்த பொருளுக்கான புதிர் நிரம்பிய துண்டுச்சீட்டு..!! விடையை ஓரளவுக்கு அனுமானித்தவாறே வீட்டுக்குள் விரைந்தாள் ஆதிரா..!!
“மஞ்சத்தே படுத்துவாழ்ந்து மருவப்பார்பார்ப்பாள் தாசியல்ல.. வஞ்சியராய் மேல்புரண்டு வசியஞ்செய்வாள் வேசியல்ல..!!" - வீட்டுக்குள் தாமிராவின் குரல் எல்லா திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!!
படிக்கட்டுகளில் படபடவென ஏறி தங்கள் அறையை அடைந்தாள்.. படுக்கையில் கிடந்த தலையைணையை எடுத்து வீச.. அந்த புத்தகம் கிடைத்தது.. சிவப்பு எழுத்துக்களில் அதன் தலைப்பு..!!
"கண்ணாமூச்சி ரே ரே..!!"
அதன் பின்அட்டையில் இன்னொரு விடுகதை..!!
"வேலியில படர்ந்திருக்கும்..
வெள்ளையா பூ பூக்கும்..
கனியும் செவந்திருக்கும்..
கவிஞருக்கும் கைகொடுக்கும்..!!"
ஆதிரா சிலவினாடிகள் நெற்றியை தேய்த்தாள்.. அவளது தோள்ப்பட்டையில் வந்தமர்ந்து 'க்காஆஆ.. க்காஆஆ..'வென காதுக்குள் இரைந்த காகத்தை, வெறுப்புடன் ஒரு அறை அறைந்து விரட்டினாள்..!! அதேநேரம் விடுகதைக்கு விடையும் அவளது மூளையில் பளிச்சிட.. படியிறங்கி ஹாலுக்கு ஓடினாள்.. அவளது பாதத்தை தொடர்ந்தே நெளிநெளியாய் நெளிந்து தாங்களும் கீழிறங்கின சில பாம்புகள்..!!
"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"
"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"
ஹாலில் தாமிராவின் அகங்காரச் சிரிப்பும், அதன் எதிரொலிப்பும்..!!
"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!!!!!"
வீட்டுப் பின்புறக்கதவை திறந்தாள் ஆதிரா.. திறந்த வேகத்தில் கும்மிருட்டுக்குள் திடுதிடுவென ஓடினாள்.. வீட்டுக்குள்ளிருந்த விலங்குகளும், பறவைகளுமே இப்போது அவளை மொத்தமாய் பின்தொடர்ந்தன..!!
வீட்டின் பின்புறத்தில் உயரமாய் வளர்ந்திருந்தது அந்த நாவல்மரம்.. அதனருகே வேலியில் படர்ந்திருந்தது அந்த கோவைப்பழக்கொடி..!! மரத்தை நெருங்கிய ஆதிரா.. அந்த புதருக்குள் கைவிட்டு கிளற..
"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!"
புதருக்குள் இருந்து புற்றீசல் போல வெளிப்பட்டு, சரசரவென பறந்தோடின நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்.. பலவித வண்ணங்களுடனும், கண்ணைப்பறிக்கும் அழகுடனுமான பட்டாம்பூச்சிகள்.. ஆதிராவின் முகத்தை மோதி, இறகுகளால் வருடிக்கொடுத்து, ஜிவ்வென்று பறந்து சென்றன அத்தனை பட்டம்பூச்சிகளும்..!! ஒருகணம் திகைத்துப்போன ஆதிரா.. அப்புறம் அந்தப் புதருக்குள் இருந்து கிளம்பிய ஒரு வெளிச்சக்கீற்றை கவனித்தாள்.. கஷ்டப்பட்டு கையை நீட்டி அந்தப்பொருளை வெளியே எடுத்தாள்..!!
செல்ஃபோன்.. ஆதிராவின் பழைய செல்ஃபோன்.. தாமிராவுடன் குழலாற்றில் தவறிவிழுந்த செல்ஃபோன்..!! ஒளிர்ந்துகொண்டிருந்த அதன் திரையில் பளிச்சிட்ட வாசகம்.. ஆதிராவுக்கு தாமிரா நியமித்த அடுத்த இலக்கிற்கான குறிப்பை வழங்கியது..!! அதை வாசித்து முடித்த ஆதிரா.. ஒரிருவினாடிகள் நெற்றியை சுருக்கியவாறு அப்படியே அமர்ந்திருந்தாள்.. விடையை தீவிரமாக யோசித்த அவளது மூளைக்குள் ஒரு பொறி தட்டுப்பட..
"சி..சிங்கம்.. சிங்கம்.." என்று தடுமாற்றமாய் முனுமுனுத்தாள். உடனே தொடர்ந்து,
"சிங்கமலை..!!" என்று தைரியமும், நம்பிக்கையுமாய் உரக்க கத்தினாள்.
ஆதிராவின் தேடுதல்வேட்டை மீண்டும் தீவிரமானது.. சிங்கமலைக்கு கொண்டுசெல்கிற அந்த குறுகலான மலைப்பாதையில் விர்ரென வேகமெடுத்து கிளம்பினாள்.. சுற்றிலும் அடரிருள் சூழ்ந்திருக்க, அதற்கிடையே டார்ச்லைட் வெளிச்சத்துடன் ஓடினாள்..!! அவளுடன் சேர்ந்தே விரைந்தன விலங்குப்படையும், பறவைக்கூட்டமும்..!! அவளது உச்சந்தலைக்கு மேலே காற்றில் மிதந்து மிதந்து நெளிந்து சென்றது தாமிராவின் ஆவியுருவம்..!! மலைச்சரிவில் நிலவிய மயான அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது தாமிராவின் சிரிப்பொலி..!!
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"
செருப்பு அணியாத ஆதிராவின் பட்டுப்பாதத்தை குத்திக்கிழித்தன பாதையில் கிடந்த பாறைக்கற்கள்.. கண்ணீர் வழிந்த அவளது தளிர்முகத்தை தடவிக்கீறின வழியில் வளர்ந்திருந்த முட்செடிகள்..!! வெட்டுக்காயத்தின் சுருக் சுருக்கென்ற வலியை, பற்கள் கடித்து பொறுத்துக்கொண்டு.. வேகவேகமாய் மலைச்சாலையில் மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! மழை இப்போது நின்றிருந்தாலும்.. அது விட்டுச்சென்றிருந்த ஈரம் இன்னும் பாதையில் தேங்கியிருந்தது.. நடந்துசென்ற ஆதிராவின் கால்களை வழுக்கச் செய்தது..!!
"ஆஆஆஆஆஆ..!!" அவ்வப்போது இடறி விழுந்து ஈனஸ்வரத்தில் கத்தினாள்.
ஒருவழியாக சிங்கமலையின் உச்சியை வந்தடைந்தாள்.. அவளுடன் வந்த மிருகங்களும், பறவைகளும் ஆங்காங்கே நகர்ந்து நின்றுகொண்டன.. தாமிராவின் உருவத்தை இப்போது காணவில்லை.. விலங்குகளுக்கு மத்தியில் தனியாளாய் தவிப்புடன் நின்றிருந்தாள் ஆதிரா..!! அவளுக்கு மூச்சிரைத்து மார்புகள் ஏறியிறங்கின.. நெஞ்சுக்கூடு காற்றுக்காக ஏங்கி பதறியது..!!
'என்ன செய்வது இப்போது.. இங்கே எதற்கு என்னை அழைத்து வந்திருக்கிறாள்..??'
எதுவும் புரியாமல்.. வெண்ணிலாவின் வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்த அந்த பிரதேசத்தை வெறிக்க வெறிக்க பார்த்தவாறு நின்றிருந்தாள்.. சற்றே தைரியம் பெற்றவளாய் தங்கையின் பெயரை சொல்லி அழைத்தாள்..!!
"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!" - அவள் அவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கும்போதே,
"அக்காஆஆஆஆஆ..!!!" - இதயத்தை பிசைவது மாதிரி ஒலித்தது தாமிராவின் ஓலம்.
பதறிப்போன ஆதிரா, சப்தம் வந்த திசைப்பக்கமாக சற்றே நகர்ந்தாள்.. மலைவிளிம்பை அடைந்து கீழே வெளிச்சத்தை தெளித்தாள்..!! தாமிராவின் உருவம் இப்போது கண்ணுக்கு புலப்பட்டது.. மகிழம்பூ மரக்கிளைகளுக்குள் பின்னிக்கொண்டு கிடந்தாள் தாமிரா.. உயிர்துறக்கும் தருவாயில் உடன்பிறந்தவளை பார்த்து அழைத்தது போலவே, இப்போதும் இவளைநோக்கி கைநீட்டி பரிதாபமாக அழைத்தாள்..!!
"அக்காஆஆஆஆஆ..!!!"
தங்கையை அந்தநிலையில் பார்க்கவும், அவளது அந்த பரிதாபக்குரலை கேட்கவும்.. ஆதிராவுக்கு உடல் சில்லிட்டுப்போனது, அப்படியே அழுகை பீறிட்டு கிளம்பியது..!! கண்களில் இருந்து பொலபொலவென நீர்கொட்ட.. 'ஓ'வென்று அழுது அரற்றியவாறே.. தங்கையை பார்த்து ஏக்கமாக கைநீட்டினாள்..!!
"தாமிராஆஆஆ..!!" என்று தவிப்புடன் அழைத்தாள். ஆனால் தாமிராவோ,
"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"
என்றொரு கேலிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு காற்றில் மாயமாய் மறைந்துபோனாள்..!! கண்ணில் உறைந்துபோன கண்ணீருடன், ஆதிரா மட்டும் இப்போது அந்த மலையுச்சியில் தனித்து நின்றிருந்தாள்..!!
"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! எங்கடி இருக்குற..??"
"...................................."
"வெளையாண்டது போதுண்டி.. அவரை எங்க வச்சிருக்குற.. சொல்லு..!!"
"...................................."
ஆதிரா கெஞ்சினாள்.. தாமிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. சுற்றிலும் அடர்த்தியான நிசப்தம்..!! பனி படர்ந்த உயரமான மலைச்சிகரம்.. நிலவு வெளிச்சத்தில் நனைந்திருந்த காட்டுமரங்கள்.. வீசும் காற்றின் 'விஷ்ஷ்ஷ்ஷ்' என்ற ஓசை.. மலையடிவாரத்தில் ஓடுகிற குழலாற்றின் 'சலசலசல' சப்தம்.. அவ்வப்போது வாய்திறந்து கர்ஜித்த காட்டுப்புலி.. கையில் டார்ச்சுடன் ஒற்றையில் நிற்கிற ஆதிரா..!!
"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"
"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"
திடீரென காட்டுமரங்களுக்குள் எதிரொலித்தது தாமிராவின் குரல்.. உடனே ஆதிராவின் மூளைக்குள் ஒரு பளிச்..!! முன்பொருமுறை அவள் கண்ட கனவில்.. தங்கையுடன் கண்ணாமூச்சி விளையாடி.. இதே சிங்கமலையை வந்தடைந்தது நினைவுக்கு வந்தது..!!
'அப்போது.. இங்கே.. அவளை.. அவளை மட்டுமல்ல அவரையும்..'
மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதுமே, மறுபடியும் பரபரப்பானாள் ஆதிரா.. கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, கையில் டார்ச்சுடன் ஓடினாள்..!! சிங்கமுக சிலையின் பக்கவாட்டு மலைக்கு சென்றாள்.. மலையை குடைந்து அமைக்கப்பட்டிருந்த அந்த குகையை அடைந்தாள்..!! சற்றே குனிந்து பார்த்து, குகைக்குள் டார்ச் அடித்தாள்..!!
No comments:
Post a Comment