அடுத்த நாள் காலை.. நேரம் ஏழு மணியை தாண்டி இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது..!! வேணுவின் கார் குமரன் காலனி மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பி.. புழுதியை கிளப்பியவாறே பங்கஜம் ரோட்டில் நுழைந்தது..!! மேலும் ஒரு இருநூறு அடி தூரம் ஓடியதும்.. மெல்ல மெல்ல வேகம் குறைந்து.. பிறகு சரக்கென ப்ரேக் மிதிக்கப்பட.. சாலையோரமாய் க்றீச்சிட்டு நின்றது..!! கார் நின்றதுமே.. பின் சீட்டில் அமர்ந்திருந்த அசோக் அவசரமாய் கீழே இறங்கினான்.. கதவை அறைந்து சாத்தினான்..!! தலையை சற்றே உயர்த்தி அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்..!!
மூன்று அடுக்குகளுடன் பளபளப்பாக காட்சியளித்த.. அந்த கட்டிட்டத்தின் முன்பாக வந்து நின்றிருந்தது கார்..!! கட்டிடத்தின் முகப்பில்.. 'Aptech Computer Education' என்கிற ஆங்கில வார்த்தைகள் பொறிக்கப்பட்ட அலுமினிய தகடு.. அதிகாலை வெயிலுக்கு சற்று அதிகமாகவே ஜொலிஜொலித்தது..!! இரும்பு ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருக்க.. இன்ஸ்டிட்யூட் இன்னும் தனது இயக்கத்தை ஆரம்பித்திருக்கவில்லை..!! நீல நிற சீருடை அணிந்த வாட்ச்மேன்.. வந்து நின்ற இவர்களை கண்டுகொள்ளளாமல்.. வாசலை கூட்டிப்பெருக்குகிற பெண்ணின் வளைவு நெளிவுகளை.. வாட்ச் செய்து கொண்டிருந்தான்..!! அசோக்கின் நண்பர்களும் இப்போது காரில் இருந்து இறங்கிக்கொள்ள.. அவர்களை தொடர்ந்து.. 'டப்.. டப்.. டப்..' என்று கார்க்கதவுகள் சாத்தப்படுகிற சப்தம்.. அடுத்தடுத்து கேட்டன..!!
"நான்தான் சொன்னேன்ல மச்சி.. டைம் ஆகும்டா.. எட்டு மணிக்கு மேலத்தான் ஓப்பன் பண்ணுவானுக..!! கேத்தரினாவோட சித்தி பொண்ணு ஒருத்தி.. இங்கதான் மல்ட்டிமீடியா படிச்சா..!!" சொல்லிக்கொண்டே தோள் மீது கைபோட்ட சாலமனை, அசோக் சற்றே எரிச்சலாக பார்த்தான்.
"ஏய்.. போய் டீ வாங்கிட்டு வாடா..போ..!!" என்று அவனை விரட்டினான்.
முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, ஓரிரு வினாடிகள் அசோக்கையே பார்த்த சாலமன், பிறகு அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இப்போது வேணு அசோக்குக்கு அருகில் வந்து நின்று காரில் சாய்ந்துகொண்டான். சிகரெட் பாக்கெட் திறந்து ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டவன், இன்னொன்றை அசோக்கிடம் நீட்டினான். அவனே இருவருக்கும் நெருப்பு பற்றவைத்தான்.
"இந்தா.. வீட்டுக்கு கால் பண்ணி ஆன்ட்டிட்ட பேசிடு..!!" கிஷோர் அசோக்கிடம் செல்ஃபோனை நீட்டினான்.
"வையி.. அப்புறம் பேசலாம்..!!" அசோக்கின் மனமோ வேறொரு கவலையில் மூழ்கியிருந்தது.
"ப்ச்.. பேசுடா..!! அவங்க வேற என்ன ஏதுன்னு தெரியாம கவலைப்பட்டுட்டு இருக்கப் போறாங்க..!! பேசுன்றேன்ல.. இந்தா..!!"
கிஷோர் அவ்வாறு வற்புறுத்தவும், அசோக் வேண்டா வெறுப்பாக செல்ஃபோனை வாங்கி, வீட்டுக்கு நம்பருக்கு கால் செய்தான். பாரதிதான் கால் அட்டன்ட் செய்தாள். இவன் ஹலோ சொன்னதுமே..
"நைட்டு பூரா எங்கடா போய்த் தொலைஞ்ச..??" என்று பொரிய ஆரம்பித்தாள். அசோக் ஒருவித எரிச்சலுடனே அம்மாவிடம் பேசி சமாளித்தான்.
"திடீர்னு கெளம்புற மாதிரி ஆயிடுச்சு மம்மி.."
".............."
"ஆமாம் ஆமாம்.. சொல்றதுக்கு கூட நேரம் இல்ல..!!"
".............."
"என்ன பண்ண சொல்ற என்னை..?? அதான் கிஷோர் ஃபோன் பண்ணி சொன்னான்ல.. அப்புறம் என்ன..??"
".............."
"ப்ச்.. பொலம்பாத மம்மி.. ஃபோனை வையி மொதல்ல..!! நான் மத்தியானம் வீட்டுக்கு வரேன்.. அப்போ பேசிக்கலாம்..!!"
".............."
"ஆங்.. சாப்ட்டேன்.. சாப்ட்டேன்..!!"
கடுப்புடன் சொன்ன அசோக், காலை கட் செய்தான். அதற்குள் சாலமன் டீயுடன் வர, நான்கு பேரும் ஆளுக்கொரு க்ளாஸை எடுத்துக் கொண்டார்கள். தேநீர் உறிஞ்சியவாறே.. உறிஞ்சலுக்கிடையே புகை ஊதியவாறே.. கம்ப்யூட்டர் சென்டர் திறக்கும்வரைக்கும்.. காலத்தை 'கில்'ல ஆரம்பித்தார்கள்..!!
நேற்று மீரா கால் செய்து விஷயத்தை சொன்னதுமே.. அசோக்கின் நண்பர்கள் மூவரும் பதறிப் போனார்கள்..!! அவனுடைய செல்ஃபோனில் ரிங் சென்று கொண்டே இருக்க.. பயந்து போன மூவரும் வேணுவின் காரில் உடனடியாய் கிளம்பினர்..!! மீரா சொன்ன குறிப்பை உபயோகித்து.. மிக எளிதாகவே அசோக்கை கண்டுபிடிக்க முடிந்தது..!! மயக்கத்தில் இருந்தவனை.. கார் பின் சீட்டில் கிடத்தினர்..!! 'பயப்படுறதுக்கு ஒன்னுல்ல..' என்று மீரா சொல்லியிருந்தாலும்.. இவர்கள் மனம் சமாதானமாகாமல்.. அசோக்கை அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..!! அவனை பரிசோதித்த டாக்டரும்.. மீரா சொன்னதையே திரும்ப சொன்னபிறகுதான்.. நிம்மதியாக மூச்சு விட்டனர்..!! ஹாஸ்பிட்டல் படுக்கையில் வாய்பிளந்து உறங்கிய அசோக்கை சுற்றி.. கன்னத்தில் கைவைத்தவாறு மூவரும் அமர்ந்து கொண்டார்கள்..!!
அசோக் குடும்பத்தாருக்கு விஷயத்தை சொல்லி.. அவர்களை களேபரப் படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர்..!! 'அவசர வேலையா வெளியூருக்கு போயிருக்கான் ஆன்ட்டி.. நாளைக்கு காலைல வந்துடுவான்..' என்று கிஷோர் பாரதிக்கு கால் செய்து சொன்னான்..!! மயக்கத்தில் கிடக்கிற நண்பனையே.. மற்ற மூவரும் கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்தனர்..!! என்ன நடந்திருக்கும் என்பதை.. கொஞ்சம் கூட அவர்களால் யூகிக்க இயலவில்லை..!! 'இவனை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு.. எங்கே போய் தொலைந்தாள் அவள்..?? அசோக்கை மயக்கத்தில் வீழ்த்துக்கிற அளவுக்கு.. அப்படி என்ன அவசியம் அவளுக்கு..??' எதுவுமே புரியவில்லை நண்பர்களுக்கு..!!
அதிகாலை மூணு மணி வாக்கில்தான் அசோக்குக்கு விழிப்பே வந்தது..!! அவன் எழுந்ததுமே.. சப்தம் கேட்டு விழித்து.. அவனை சூழ்ந்து கொண்ட நண்பர்கள்.. 'மீரா எங்கடா..??' என்று கேட்க எத்தனித்தனர்..!! ஆனால் அவர்களை முந்திக்கொண்டு.. அசோக் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க.. மூவரும் குழம்பிப் போயினர்..!!
அப்புறம்.. நடந்த விஷயங்களை எல்லாம் அசோக்கே நண்பர்களுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்..!! அப்படி சொல்கையில் அவனுடைய குரலில் தொனித்த வேதனையை.. அவர்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!! தாங்கள் விளையாட்டுத்தனமாய் விட்ட சவால்தான்.. எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்பதை அறிய நேர்ந்ததும்.. அவர்களுக்குமே மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி..!! 'எனக்கு இப்போவே மீராவ பாக்கனும்..' என்று.. அந்த நேரத்திலேயே ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்ப முயன்ற அசோக்கை.. அதட்டி, அடக்கி, அரும்பாடு பட்டு.. 'எல்லாம் காலைல பாத்துக்கலாம்டா.. இப்போ நிம்மதியா படுத்து தூங்கு..' என்று சமாதானம் செய்து படுக்கவைத்தனர்..!!
அசோக்கின் மனதில் நிம்மதி எப்போதோ செத்துப் போயிருக்க.. அவனால் உறங்க முடியவில்லை..!! மீராவின் நினைவுகளே நெஞ்சமெங்கும் நிறைந்து போயிருக்க.. மனதுக்குள்ளேயே அழுதவாறு படுத்திருந்தான்..!! ஏதோ ஒரு நப்பாசையுடன் அவளுடைய எண்ணுக்கு கால் செய்து பார்த்தான்.. ஸ்விட்ச்ட் ஆஃப் என்று பதில் வர.. மொபைலை எறிந்தான்..!! தனது மெமரி கார்டை கூட அவள் உருவி சென்றிருப்பதை உணர்ந்து.. வயிறு எரிந்தான்..!! 'ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டா.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?? உன்னை விட்ருவேன்னு நெனச்சியா..?? நாளைக்கே உன்னை தேடிக் கண்டு பிடிக்கிறனா இல்லையான்னு பாரு.. கண்டுபிடிச்சதும் உன் கன்னம் ரெண்டும் பழுக்குதா இல்லையான்னு பாரு..' என்று மனதுக்குள்ளேயே கருவிகொண்டான்..!!
'எப்போதடா பொழுது விடியும்' என்று.. மோட்டுவளையை வெறித்தவாறே காத்திருந்தான்..!! விடிந்ததுமே.. களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருந்த நண்பர்களை.. அந்த அதிகாலையிலேயே அடித்துக் கிளப்பி.. இதோ.. காரை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் சென்டருக்கும் வந்துவிட்டான்..!!
நேரம் எட்டு மணியை நெருங்க ஆரம்பிக்கையில்.. அந்த இடத்துக்கு ஆட்கள் வருகை அதிகமாக இருந்தது..!! மார்னிங் பேட்ச் தேர்வு செய்திருந்த மாணவர்கள்.. குளித்தோ, குளிக்கமாலோ சென்டருக்கு வந்து சேர்ந்து.. சலிக்காமல் டெக்னிகல் விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்..!! சரியாக 7.55 க்கு.. உதட்டோரத்தில் அழகாக மச்சம் தாங்கிய அந்தப்பெண்.. ஆக்டிவாவில் ஸ்டைலாக வந்து இறங்கினாள்.. கடையை திறந்தாள்..!!
மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று சேர்ந்து.. அந்த ஆரவாரம் எல்லாம் சற்று அடங்கும்வரைக்கும்.. அசோக்கும் நண்பர்களும் அமைதியாக காத்திருந்தனர்..!! அப்புறம் சென்டருக்குள் நுழைந்து.. அந்த மச்சக்காரியை அணுகினர்..!! அவள் சாலமனின் முகத்தை பார்த்த பிறகுமே..
"என்ன கோர்ஸ் ஜாயின் பண்ண வந்திருக்கீங்க..??" என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டாள்.
"ஹிஹி.. இல்லைங்க.. நாங்க கோர்ஸ்லாம் ஜாயின் பண்ண வரல.!!" சாலமன் இளித்தான்.
"அப்புறம்..??"
"எங்களோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தங்க.. இந்த சென்டர்லதான்.. போன மாசம் வரை அனிமேஷன் கோர்ஸ் படிச்சாங்க..!!"
"சரி..!!"
"உங்க ரெகார்ட்ஸ்லாம் எடுத்து.. அவங்க அட்ரஸ் என்னன்னு கொஞ்சம் பார்த்து சொன்னீங்கன்னா.. நாங்க வந்த வேலை முடிஞ்சிடும்..!! உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு.. நாங்க கெளம்பிட்டே இருப்போம்..!!" சற்றே எகத்தாளமாக சொன்ன சாலமனை, அந்தப்பெண் எரிச்சலாக பார்த்தாள்.
"க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க.. இங்க வந்து அட்ரஸ் கேக்குறீங்க..??"
அந்தப்பெண் லாஜிக்காக கேள்வி கேட்க, சாலமன் இப்போது தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை கண்டதும், வேணு இப்போது இடையில் புகுந்து, அவளுக்கு உளறலாக பதில் சொன்னான்.
"அ..அது.. அது வந்து.. க்ளோஸ்தாங்க.. ஆனா அட்ரஸ் சொல்லிக்கிற அளவுக்கு க்ளோஸ் இல்லன்னு வச்சுக்கங்களேன்..!! ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம்.. தண்ணி கூட அடிச்சிருக்கோம்.. ஆ..ஆனா இந்த அட்ரஸ் மட்டும் எப்படியோ ஷேர் பண்ணிக்காமலே விட்டுட்டோம்..!! இப்போ அர்ஜன்ட்டா அவங்கள மீட் பண்ற மாதிரி ஒரு சிச்சுவேஷன் ஆகிப்போச்சு.. அதான்..!! ப்ளீஸ்ங்க.. கொஞ்சம் ஹெல்ப்புங்க..!!"
வேணுவின் உளறலில் அந்தப்பெண் கன்வின்ஸ் ஆகாவிட்டாலும்.. அவனுடைய குரலில் தொனித்த அந்த கெஞ்சல்.. அவளை மனம் இரங்க செய்தது..!! தனது கம்ப்யூட்டரை இயக்கியவள்.. மானிட்டரை பார்த்துக்கொண்டே வேணுவிடம் கேட்டாள்..!!
"கோர்ஸ் எப்போ முடிச்சாங்கன்னு சொன்னீங்க..??"
"லாஸ்ட் மன்த்..!!"
"என்ன கோர்ஸ்..??"
"மாயா..!!"
"அவங்க பேரு..??"
"மீரா..!!" வேணு கூலாக சொல்ல,
"மீராவா..??" அவள் திடீரென அதிர்ந்தாள்.
"ஆமாங்க..!!" என்ற வேணு அசோக்கிடம் திரும்பி,
"அப்பா பேரு என்ன மச்சி..??" என்று கேட்டான்.
"சந்தானம்..!!" என்று அசோக் சொன்னதும், வேணு இப்போது மீண்டும் அந்தப் பெண்ணிடம் திரும்பி,
"ஆங்.. எஸ்.மீரா'ன்னு போட்டு தேடிப்பாருங்க..!!" என்றான். அவளோ வேணுவை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
"பொண்ணா..????" என இறுக்கமாக கேட்டாள்.
"ஆ..ஆமாம்..!! அப்புறம்.. மீரான்னா.. பொண்ணுதான..??" வேணு அப்பாவியாக இளிக்க, அவள் இப்போது மானிட்டரை படக்கென ஆஃப் செய்தாள்.
"இல்லைங்க.. பொண்ணுங்க அட்ரஸ்லாம் தர்றது இல்ல..!!"
"ஹலோ ஹலோ.. ப்ளீஸ்ங்க..!!" வேணுவுடன் சேர்ந்து இப்போது கிஷோரும் அந்தப்பெண்ணிடம் கெஞ்சினான்.
"ப்ச்..!! நோ.. ஐ கான்ட்..!! உங்க நாலு பேரையும் பார்த்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு.. நாளைக்கு ஏதாவது பிரச்சினைன்னா.. யார் பதில் சொல்றது..?? அட்ரஸ்லாம் தர முடியாது.. எடத்த காலி பண்ணுங்க..!!"
"அப்படிலாம் சொல்லாதிங்க மேடம்.. நீங்கதான் எங்களுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்.. ப்ளீஸ்..!! எந்தப் பிரச்சனையும் வராது மேடம்.. எங்களை பாத்தா பிரச்னை பண்றவங்க மாதிரியா தெரியுது..?? நாங்க ரொம்ப அப்பாவிங்க மேடம்..!! ப்ளீஸ்.. கொஞ்சம் மனசு வைங்க..!!"
"ஷ்ஷ்ஷ்.. நான்தான் முடியாதுன்னு சொல்றேன்ல.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம கெஞ்சிட்டு இருக்கீங்க..?? கெளம்புங்க..!!"
"ஹையோ.. ரொம்ப முக்கியமான விஷயம் மேடம்.. அவங்க அட்ரஸ் எப்படியாவது எங்களுக்கு வேணும்.. எங்க நெலமையை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்..!!"
"என் நெலமையை நீங்க மொதல்ல புரிஞ்சுக்கங்க..!!"
"ப்ளீஸ் மேடம்..!! ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! நீங்க மனசு வச்சா கண்டிப்பா எங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்..!!"
அசோக்கை தவிர மற்ற மூன்று பேருமே, இப்போது அந்தப்பெண்ணை கெஞ்சினர். வெட்கமில்லாமல் அவர்கள் கெஞ்சுவதை சகிக்க முடியாமல், அவளும் இப்போது சற்றே இறங்கி வந்து..
"சரி.. அப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றீங்களா..??"
"என்ன..??"
"எங்க மேனேஜரை பார்த்து பெர்மிஷன் கேளுங்க..!! அவர் சொன்னா.. நான் உங்களுக்கு அட்ரஸ் தர்றேன்..!!"
"ஓகே..!! அப்போ.. உங்க மேனஜரை மீட் பண்ண ஒரு அப்பாயின்ட்மன்ட் கொடுங்க..!!"
"அவர் 9'o clock-தான் வருவாரு.. அதுவரைக்கும் கொஞ்சம் அங்க வெயிட் பண்ணுங்க..!!" அவள் கேஷுவலாக சொல்லிக்கொண்டே சோபாவை கைகாட்டினாள்.
"9'o clock-ஆ..?? அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா..?? என்ன மேடம் நீங்க..?? நீங்களே அந்த கம்ப்யூட்டர்ல அடிச்சு பாத்து.."
"ஹலோ..!! என்னால அவ்வளவுதான் பண்ண முடியும்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இஷ்டம் இருந்தா, வெயிட் பண்ணி மேனேஜரை பாருங்க.. இல்லனா எடத்த காலி பண்ணுங்க..!! எனக்கு வேலை நெறைய இருக்கு.. வெட்டியா பேசிட்டு இருக்க நேரம் இல்ல..!!"
கறாராக சொன்ன அவள் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து, இவர்கள் மேலிருந்த கடுப்பை கீ போர்டிடம் காட்ட ஆரம்பித்தாள். அசோக்கும் நண்பர்களும் வேறு வழியில்லாமல், மெல்ல நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்கள். அவ்வாறு அமர்ந்ததுமே.. கிஷோர் அசோக்கை பார்த்து..
"டேய் மச்சி.. அந்த மேனேஜர் வர்றதுக்குள்ள.. நீ போய் சாப்பிட்டுட்டு வந்துடு..!!" என்றான் கரிசனமாக.
"இல்லடா.. அந்த ஆள் வரட்டும்..!! அட்ரஸ் வாங்கிட்டே கெளம்பிடலாம்..!!"
"ப்ச்..!! அறிவில்லாம பேசாத.. நாங்களாவது பரவால.. நீ நைட்டும் சாப்பிடல..!! அட்லீஸ்ட் அவளை தேடுறதுக்காவது உடம்புல தெம்பு வேணாம்..?? போ.. போய் சாப்பிட்டு வா.. போ..!! நாங்க இங்க வெயிட் பண்ணி.. அந்த ஆள் வர்றானான்னு பாக்குறோம்..!! சரியா..??" என்று கடுமையாக சொன்ன கிஷோர், வேணுவிடம் திரும்பி..
"டேய்.. கூட்டிட்டு போடா..!!" என்றான்.
"வாடா மச்சி.. போலாம்..!!"
என்றவாறு வேணுவும் அசோக்கின் புஜத்தை இறுகப் பற்றினான். அடுத்த இரண்டாவது நிமிடம்.. அசோக்கும் வேணுவும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்..!!
"நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! சும்மா.. செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டா.. நம்மட்ட இருந்து எஸ்கேப் ஆயிட முடியுமா..?? உன்கூட நூறு நாள் பழகிருக்கா மச்சி.. எவ்ளோ பேசிருப்பா.. என்னன்னலாம் சொல்லிருப்பா.. ஈஸியா புடிச்சுடலாம் மச்சி..!! நீ டென்ஷன் ஆவாத..!!"
வேணு சொன்ன ஆறுதல் அசோக்குக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் அவன் சொன்ன ஒருவிஷயம் அவனுடைய புத்தியில் தீ கொளுத்தி போட்டது. மீராவுடன் அவன் பழகிய அந்த நூறு நாட்களில், அவள் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை எல்லாம், மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே வந்தான்..!!
ஃபுட் கோர்ட் வந்து சேர்ந்தது..!! வாசலுக்கு முன்பாக வேணு காரை நிறுத்த.. அசோக் இறங்கிக்கொண்டான்..!!
"நீ உள்ள போய் வெயிட் பண்ணு மச்சி.. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்..!!"
சொன்ன வேணு, ஃபுட் கோர்ட்டின் கீழ்த்தளம் நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தான். அசோக் படியேறி ஃபுட் கோர்ட்டுக்குள் நுழைந்தான். கண்ணாடி கதவை அவன் திறந்ததுமே.. அவன் காலடியை வந்து மோதியது அந்த பலூன்..!! இரத்த நிறத்தில்.. இதய வடிவத்தில்.. அழகான, மென்மையான.. அந்த பலூன்..!! அந்த பலூனுக்கு பின்னாடியே.. நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்.. பலூனை பிடிக்கிற உத்வேகத்துடன் வேகமாக ஓடிவந்தான்..!! அவனுக்கு பின்னால்.. அவனுடைய அம்மா..
"டேய் சூர்யா.. சூர்யாஆஆஆ..!! ஓடாத.. நில்லு..!! நில்லுன்றேன்ல..?? டேய்..!!!!!"
என்று கத்தியவாறே, ஒருவித பதைபதைப்புடன் ஓடிவந்தாள். அசோக் குனிந்து அந்த பலூனை எடுத்தான். அந்த சிறுவனிடம் நீட்டினான்.
"தேங்க்ஸ் அங்கிள்..!!"
அழகுப்புன்னகையுடன் சொன்னவாறே, அதை வாங்கிக்கொண்டான் சூர்யா. அவனை வந்து தூக்கிக்கொண்ட அவனது அம்மாவும், அசோக்கை பார்த்து,
"தேங்க்ஸ்ங்க..!!" என்று புன்னகைத்தாள்.
"இட்ஸ் ஓகே..!!"
சொன்ன அசோக் சூர்யாவின் கன்னத்தை பிடித்து அன்பாக திருகிவிட்டு.. அங்கிருந்து நகர்ந்தான்..!! வேணு வரும்வரை காத்திருக்கலாம் என்று எண்ணியவன்.. டேபிள்களுக்கு இடையில் புகுந்து நடந்தான்..!! மெல்ல நடைபோட்டு.. அந்த டேபிளை வந்தடைந்தான்.. மீரா எப்போதும் அமர்கிற அதே டேபிள்..!! அந்த டேபிளை பார்த்ததுமே.. அவனுடைய மனதில் ஒரு இனம்புரியாத வெறுமை படருவதை.. அசோக்கால் உணர முடிந்தது..!! மீரா வழக்கமாக அமருகிற அந்த இருக்கையை.. ஒரு கையால் மென்மையாக வருடினான்..!! பிறகு மனதுக்குள் ஏதோ ஒரு ஆசை உருவாக.. அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான்..!!
அவனுக்கு சற்று தூரத்தில்.. சூர்யாவும், அவன் அம்மாவும் அமர்ந்திருந்தனர்..!! அவள் அசோக்கை பார்த்து ஒருமுறை புன்னகைத்துவிட்டு.. தோசையை பிய்த்து வாய்க்குள் போட்டுக் கொண்டாள்..!! சூர்யா இவனை பார்த்து 'ஹாய்' என்று கையசைத்துவிட்டு.. பலூனை தரையில் தட்டி தட்டி விளையாட ஆரம்பித்தான்..!! அசோக்கும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு.. மீராவின் நினைவில் மூழ்க ஆரம்பித்தான்..!! இதே ஃபுட்கோர்ட்டில்.. அவனுக்கும் அவளுக்கும் நேர்ந்த நிகழ்வுகள் எல்லாம்.. அவனுடைய மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டிருக்க.. நெஞ்சு பாரமாகிக் கொண்டே போனது..!!
அப்போதுதான்.. எங்கிருந்தோ பறந்து வந்த அந்த காகிதம்.. அசோக்கின் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது..!! அசோக் தனது கன்னத்தை தடவி.. அந்த காகிதத்தை கையில் எடுத்தான்..!! அது வெறும் காகிதம் அல்ல.. பிஸ்ஸாவின் மேல் தூவப்படுத்துகிற.. மிளக்காய்த்துகளை உள்ளடக்கியிருக்கும் காகித கவர்..!! இப்போது காலியாகிப்போய்.. எங்கிருந்தோ பறந்து வந்திருந்தது..!!
அசோக் முதலில் அந்த காகித கவரை கசக்கி எறியத்தான் நினைத்தான்..!! பிறகு ஒருகணம் நிதானித்தவன்.. தனது கையை பிரித்து அந்த கவரை பார்த்தான்..!! மிளக்காய்த்துகள் தயாரிக்கிற அந்த கம்பனியின் ப்ராண்ட்.. அந்த கவரில் சிகப்பு நிறத்தில் அச்சிடப் பட்டிருந்தது..!!
"Mirchi..!!!!"
அதைப்பார்த்ததுமே அசோக்குக்கு சுருக்கென்று ஒரு உணர்வு..!! அவனுடைய மூளை நரம்பில் யாரோ ஊசி ஏற்றிய மாதிரி சுரீர் என்று இருந்தது..!! அவனும் மீராவும் முதன்முதலாக பேசிக்கொண்டபோது நடந்த அந்த விஷயத்தை.. அவனுடைய நினைவடுக்கு, அவன் மனதுக்குள் படமாக ஓட்டிக் காட்டியது..!!
"உன் பேர் என்ன..??"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
அசோக்கின் கேள்விக்கு மீரா திரும்ப திரும்ப பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டே, திரும்ப திரும்ப மிளகாய்த்துகள் பாக்கெட்டை கிழித்து, தட்டின் மீதிருந்த பிஸ்ஸாவின் மேல் தூவினாள்.
அசோக்கிடம் இப்போது குப்பென்று ஒரு திகைப்பு..!! 'ஒருவேளை.. ஒருவேளை.. இப்படி இருக்குமோ..??' என்று அவனுடைய மூளை.. மிக கூர்மையாக ஒரு சந்தேகத்தை கிளப்ப.. அவனது மனதுக்குள் ஒரு மெலிதான கிலி பரவ ஆரம்பித்தது..!! சற்றே மிரண்டு போன முகத்துடன்.. தலையை மெல்ல நிமிர்த்தி பார்த்தான்..!! அவ்வாறு பார்த்ததுமே.. அவனுடைய பார்வையில் பட்ட அந்த விளம்பர போர்ட்.. அவனை ஸ்தம்பித்து போக வைத்தது..!! அதிர்ந்து போனவனாய்.. அவனையும் அறியாமல் சேரில் இருந்து எழுந்தான்..!! வெறித்த பார்வையுடன்.. கண்களுக்கு கொடுத்திருந்த குளிர்கண்ணாடியை கழட்டினான்..!!
அந்த விளம்பர போர்டின் வாசகங்கள்..
"Learn 'MAYA' at Aptech Computer Education..!!"
"இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!"
"ஓ..!! என்ன கோர்ஸ்..??"
"ம்ம்.. மாயா...!!!!"
மீரா சொன்னது நினைவு வர.. அசோக்குக்கு உடலெல்லாம் ஜிலீர் என்று ஒரு சிலிர்ப்பு..!! அவனுடைய இதயத்தை இப்போது ஒரு இனம்புரியாத பயம் வந்து இரக்கமே இல்லாமல் கவ்விக்கொண்டது..!! வியர்த்து வெளிறிப்போன முகத்துடன்.. தலையை மெல்ல மெல்ல சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மற்ற விளம்பர போர்டுகளையும்.. ஒவ்வொன்றாக கவனமாக பார்த்தான்..!!
"காரைக்குடி - செட்டிநாடு உணவகம்..!!"
"ஹைதராபாத் பிரியாணி சென்டர்..!!"
ஃபுட்கோர்ட் கவுன்ட்டர்களில் இருந்த அந்த இரண்டு போர்டுகளும் அடுத்தடுத்து அவன் கண்ணில் பட்டன..!!
"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" - மீரா அசோக்கின் மனதுக்குள் தோன்றி சிரிப்புடன் சொன்னாள்.
அசோக்குக்கு இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! உலையில் இட்ட அரிசியாக.. உதிரம் கொதிப்பது போல ஒரு உணர்வு அவனுக்கு..!! மீரா இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தன்னைப்பற்றி சொன்னாள் என்று யோசித்தான்..!!
"என் அப்பா பேரு சந்தானம்..!!"
"ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??"
"ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!!"
யெஸ்..!!!! அக்ஸார் பெயின்ட் டப்பாவை கையில் தாங்கியவாறு.. நடிகர் சந்தானம் ஒரு அட்வர்டைஸ்மன்ட் போர்டில் காட்சியளித்தார்..!! அருகிலேயே.. அரசியல்வாதி கெட்டப்பில்.. தொடையை தட்டிக்கொண்டு.. பவர்ஸ்டாரின் படப்போஸ்டர் ஒன்று..!!
"உன்னோட ஃபேவரிட் மூவி எது..??"
"ம்ம்... டைட்டானிக்..!!
அசோக் தனது மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தான். டைட்டான்..!!!
"ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??"
"ம்ம்... சோனியா..!!"
டேபிளில் இருந்த தனது மொபைலை பார்த்தான். சோனி எரிக்ஸன்..!!
அசோக்குக்கு இப்போது தலை சுற்றுவது மாதிரி இருந்தது..!! மூளை எல்லாம் சூடாகிப்போய்.. வெடித்துவிடுமோ என்றொரு உணர்வு..!! அப்படியே தளர்ந்து போய்.. தலையைப் பிடித்துக்கொண்டு.. சேரில் பொத்தென்று அமர்ந்தான்..!!
"ஹலோ ஹனிபனி..!!" என்ற வாசகங்களை தாங்கிய.. ஐடியா மொபைல் விளம்பர போர்ட் வேறு.. இப்போது புதிதாக அவனுடைய கண்ணில் பட்டது..!!
"வாட் என் ஐடியா ஸர்ஜி..!!!" என்று அபிஷேக் பச்சன் இவனை பார்த்து ஏளனமாக சிரித்தார்.
அசோக்கால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை..!! ஆயிரம் பேர் ஒன்றாக கூடி நின்று.. அதிகபட்ச டெசிபலில் வயலின் வாசிப்பது மாதிரியான ஒரு அதிர்வு அவனுக்குள்..!! பார்க்கிற திசை எல்லாமே.. மீரா தன்னைப்பற்றி சொன்ன பர்சனல் விஷயங்கள் அத்தனையும்.. பப்ளிக்காக பல்லிளித்தன..!! திரும்புகிற பக்கம் எல்லாம் மீரா தோன்றி..
"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!"
"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!" என்று இவனைப்பார்த்து கைகொட்டி சிரித்தாள்.
அசோக்குக்கு தலைக்குள் ஒவ்வொரு பாகமும் தீப்பற்றி எரிவது போல இருந்தது..!! கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. இரண்டு கைகளாலும் தலையை பிடித்தவாறு.. இடிந்து போய் அமர்ந்திருந்தான்..!! 'எப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள்..?' என்று நினைக்க நினைக்க.. அவனுடைய இதயம் குமுறியது..!!
இந்த விளம்பர போர்டுகளை எல்லாம் அசோக் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்..!! அவனும் விளம்பரத்துறையில் இருப்பதால்.. அவன் கண்ணில் படுகிற சிறு சிறு விளம்பர போர்டுகளை கூட மிக கவனமாக பார்ப்பான்..!! அட்வர்டைஸ்மன்ட் தீம்.. அவர்களது ப்ராண்ட் லோகோ.. உபயோகப்படுத்துகிற கேப்ஷன்ஸ்.. எல்லாமே அவனுடய கவனத்தை ஈர்க்கும்..!! 'அப்படி இருந்துமே இப்படி ஏமாந்திருக்கிறேனே.. கண்ணிருந்தும் குருடனாய் கவனியாது போனேனே..??' அவனுடைய உள்மனம் அழுது அரற்றியது..!! அதே நேரம்..
"டமார்..!!!"
என்று பலூன் வெடிக்கிற சப்தம் பெரிதாக கேட்டது..!! கண்ணுக்கு அழகாய் காட்சியளித்த அந்த இதய பலூன்.. கணநேரத்தில் இப்போது உடைந்து சிதறிப் போயிருந்தது..!!
"பலூனு.. என் பலூனு..!!!" கையையும் காலையும் உதறியவாறு, சூர்யா தரையில் புரண்டு கதறிக்கொண்டிருந்தான்.
"ஐயோ.. சூர்யா.. என்ன இது.. எந்திரி..!!" அவன் அம்மா பதறினாள்.
"பலூனு.. என் பலூனு..!!!"
"ப்ச்.. எந்திரின்றன்ல..?? மம்மி உனக்கு வேற பலூன் வாங்கி தரேன்..!!"
"எனக்கு அந்த பலூன்தான் வேணும்..!!"
சூர்யா 'ஓ..!!!!' என்று அழுது வீறிட்டான்..!! ஏமாந்து போன அந்த சிறு குழந்தையின் துயரத்தை பார்த்த அசோக்குக்கு.. அவனையும் அறியாமல் கண்களில் குபுக்கென்று நீர் கொப்பளித்து ஓட ஆரம்பித்தது..!! அவனுமே அந்த சூர்யாவின் நிலையில்தான் இருந்தான்.. அவனுக்குமே அதுமாதிரி அலறி அழ வேண்டும் போலிருந்தது..!!
அப்போதுதான் திடீரென அவன் மனதுக்குள் அந்த சந்தேகம்..!! நீர்த்திரையிட்ட கண்களை அவசரமாய் துடைத்துக்கொண்டு.. சரக் சரக்கென தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அந்த வளாகத்தில் மிச்சமிருக்கிற விளம்பர போர்டுகளை எல்லாம்.. ஒவ்வொன்றாக பார்த்தான்..!! அவனுடைய பார்வை பரிதாபமாக அலைபாய்ந்தது.. 'அந்த வார்த்தை மட்டும் என் கண்ணில் பட்டுவிடக்கூடாது கடவுளே..' என அவனது மனம் இரைந்து மன்றாடியது..!!
ஒரு அரை நிமிடத்திற்கு அந்த மாதிரி.. வியர்த்த முகத்துடன்.. தவிக்கிற பார்வையுடன்.. கொதிக்கிற உள்ளத்துடன்.. தேடி தேடி பார்த்தான்..!! எங்குமே அந்த வார்த்தை அவனது கண்ணில் படவில்லை..!! இப்போது அவனது மனதுக்குள் மெலிதான ஒரு நிம்மதி பரவியது..!!
"அட்லீஸ்ட்.. அவ பேராவது.. உண்மையான பேரை சொன்னாளே..!!" என்ற அற்பத்தனமான நிம்மதி.
கண்களை துடைத்துக் கொண்டான். இதயம் இன்னும் திடும் திடும் என அடித்துக் கொண்டிருக்க.. டேபிளில் கையூன்றி.. முகத்தை மூடியவாறே மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்..!!
பிறகு அவன் இமைகளை மெல்ல பிரித்தபோது.. எதேச்சையாக அவனது பார்வையில் அது பட்டது..!! ரொம்ப ஸ்பெஷல் என்று மீரா சொன்ன அந்த டேபிளின்.. பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருந்த அந்த வாசகம்..!!
"Meera Furnitures & Home Appliance..!!"
அவ்வளவுதான்..!! அந்த மாதிரி ஒரு வலியை.. ஏமாற்றத்தை.. வேதனையை.. அசோக் தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை..!! ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவனது இதயம்.. இப்போது சில்லு சில்லாக வெடித்து சிதற ஆரம்பித்தது..!!
மூன்று அடுக்குகளுடன் பளபளப்பாக காட்சியளித்த.. அந்த கட்டிட்டத்தின் முன்பாக வந்து நின்றிருந்தது கார்..!! கட்டிடத்தின் முகப்பில்.. 'Aptech Computer Education' என்கிற ஆங்கில வார்த்தைகள் பொறிக்கப்பட்ட அலுமினிய தகடு.. அதிகாலை வெயிலுக்கு சற்று அதிகமாகவே ஜொலிஜொலித்தது..!! இரும்பு ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருக்க.. இன்ஸ்டிட்யூட் இன்னும் தனது இயக்கத்தை ஆரம்பித்திருக்கவில்லை..!! நீல நிற சீருடை அணிந்த வாட்ச்மேன்.. வந்து நின்ற இவர்களை கண்டுகொள்ளளாமல்.. வாசலை கூட்டிப்பெருக்குகிற பெண்ணின் வளைவு நெளிவுகளை.. வாட்ச் செய்து கொண்டிருந்தான்..!! அசோக்கின் நண்பர்களும் இப்போது காரில் இருந்து இறங்கிக்கொள்ள.. அவர்களை தொடர்ந்து.. 'டப்.. டப்.. டப்..' என்று கார்க்கதவுகள் சாத்தப்படுகிற சப்தம்.. அடுத்தடுத்து கேட்டன..!!
"நான்தான் சொன்னேன்ல மச்சி.. டைம் ஆகும்டா.. எட்டு மணிக்கு மேலத்தான் ஓப்பன் பண்ணுவானுக..!! கேத்தரினாவோட சித்தி பொண்ணு ஒருத்தி.. இங்கதான் மல்ட்டிமீடியா படிச்சா..!!" சொல்லிக்கொண்டே தோள் மீது கைபோட்ட சாலமனை, அசோக் சற்றே எரிச்சலாக பார்த்தான்.
"ஏய்.. போய் டீ வாங்கிட்டு வாடா..போ..!!" என்று அவனை விரட்டினான்.
முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, ஓரிரு வினாடிகள் அசோக்கையே பார்த்த சாலமன், பிறகு அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இப்போது வேணு அசோக்குக்கு அருகில் வந்து நின்று காரில் சாய்ந்துகொண்டான். சிகரெட் பாக்கெட் திறந்து ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டவன், இன்னொன்றை அசோக்கிடம் நீட்டினான். அவனே இருவருக்கும் நெருப்பு பற்றவைத்தான்.
"இந்தா.. வீட்டுக்கு கால் பண்ணி ஆன்ட்டிட்ட பேசிடு..!!" கிஷோர் அசோக்கிடம் செல்ஃபோனை நீட்டினான்.
"வையி.. அப்புறம் பேசலாம்..!!" அசோக்கின் மனமோ வேறொரு கவலையில் மூழ்கியிருந்தது.
"ப்ச்.. பேசுடா..!! அவங்க வேற என்ன ஏதுன்னு தெரியாம கவலைப்பட்டுட்டு இருக்கப் போறாங்க..!! பேசுன்றேன்ல.. இந்தா..!!"
கிஷோர் அவ்வாறு வற்புறுத்தவும், அசோக் வேண்டா வெறுப்பாக செல்ஃபோனை வாங்கி, வீட்டுக்கு நம்பருக்கு கால் செய்தான். பாரதிதான் கால் அட்டன்ட் செய்தாள். இவன் ஹலோ சொன்னதுமே..
"நைட்டு பூரா எங்கடா போய்த் தொலைஞ்ச..??" என்று பொரிய ஆரம்பித்தாள். அசோக் ஒருவித எரிச்சலுடனே அம்மாவிடம் பேசி சமாளித்தான்.
"திடீர்னு கெளம்புற மாதிரி ஆயிடுச்சு மம்மி.."
".............."
"ஆமாம் ஆமாம்.. சொல்றதுக்கு கூட நேரம் இல்ல..!!"
".............."
"என்ன பண்ண சொல்ற என்னை..?? அதான் கிஷோர் ஃபோன் பண்ணி சொன்னான்ல.. அப்புறம் என்ன..??"
".............."
"ப்ச்.. பொலம்பாத மம்மி.. ஃபோனை வையி மொதல்ல..!! நான் மத்தியானம் வீட்டுக்கு வரேன்.. அப்போ பேசிக்கலாம்..!!"
".............."
"ஆங்.. சாப்ட்டேன்.. சாப்ட்டேன்..!!"
கடுப்புடன் சொன்ன அசோக், காலை கட் செய்தான். அதற்குள் சாலமன் டீயுடன் வர, நான்கு பேரும் ஆளுக்கொரு க்ளாஸை எடுத்துக் கொண்டார்கள். தேநீர் உறிஞ்சியவாறே.. உறிஞ்சலுக்கிடையே புகை ஊதியவாறே.. கம்ப்யூட்டர் சென்டர் திறக்கும்வரைக்கும்.. காலத்தை 'கில்'ல ஆரம்பித்தார்கள்..!!
நேற்று மீரா கால் செய்து விஷயத்தை சொன்னதுமே.. அசோக்கின் நண்பர்கள் மூவரும் பதறிப் போனார்கள்..!! அவனுடைய செல்ஃபோனில் ரிங் சென்று கொண்டே இருக்க.. பயந்து போன மூவரும் வேணுவின் காரில் உடனடியாய் கிளம்பினர்..!! மீரா சொன்ன குறிப்பை உபயோகித்து.. மிக எளிதாகவே அசோக்கை கண்டுபிடிக்க முடிந்தது..!! மயக்கத்தில் இருந்தவனை.. கார் பின் சீட்டில் கிடத்தினர்..!! 'பயப்படுறதுக்கு ஒன்னுல்ல..' என்று மீரா சொல்லியிருந்தாலும்.. இவர்கள் மனம் சமாதானமாகாமல்.. அசோக்கை அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..!! அவனை பரிசோதித்த டாக்டரும்.. மீரா சொன்னதையே திரும்ப சொன்னபிறகுதான்.. நிம்மதியாக மூச்சு விட்டனர்..!! ஹாஸ்பிட்டல் படுக்கையில் வாய்பிளந்து உறங்கிய அசோக்கை சுற்றி.. கன்னத்தில் கைவைத்தவாறு மூவரும் அமர்ந்து கொண்டார்கள்..!!
அசோக் குடும்பத்தாருக்கு விஷயத்தை சொல்லி.. அவர்களை களேபரப் படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர்..!! 'அவசர வேலையா வெளியூருக்கு போயிருக்கான் ஆன்ட்டி.. நாளைக்கு காலைல வந்துடுவான்..' என்று கிஷோர் பாரதிக்கு கால் செய்து சொன்னான்..!! மயக்கத்தில் கிடக்கிற நண்பனையே.. மற்ற மூவரும் கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்தனர்..!! என்ன நடந்திருக்கும் என்பதை.. கொஞ்சம் கூட அவர்களால் யூகிக்க இயலவில்லை..!! 'இவனை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு.. எங்கே போய் தொலைந்தாள் அவள்..?? அசோக்கை மயக்கத்தில் வீழ்த்துக்கிற அளவுக்கு.. அப்படி என்ன அவசியம் அவளுக்கு..??' எதுவுமே புரியவில்லை நண்பர்களுக்கு..!!
அதிகாலை மூணு மணி வாக்கில்தான் அசோக்குக்கு விழிப்பே வந்தது..!! அவன் எழுந்ததுமே.. சப்தம் கேட்டு விழித்து.. அவனை சூழ்ந்து கொண்ட நண்பர்கள்.. 'மீரா எங்கடா..??' என்று கேட்க எத்தனித்தனர்..!! ஆனால் அவர்களை முந்திக்கொண்டு.. அசோக் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க.. மூவரும் குழம்பிப் போயினர்..!!
அப்புறம்.. நடந்த விஷயங்களை எல்லாம் அசோக்கே நண்பர்களுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்..!! அப்படி சொல்கையில் அவனுடைய குரலில் தொனித்த வேதனையை.. அவர்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!! தாங்கள் விளையாட்டுத்தனமாய் விட்ட சவால்தான்.. எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்பதை அறிய நேர்ந்ததும்.. அவர்களுக்குமே மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி..!! 'எனக்கு இப்போவே மீராவ பாக்கனும்..' என்று.. அந்த நேரத்திலேயே ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்ப முயன்ற அசோக்கை.. அதட்டி, அடக்கி, அரும்பாடு பட்டு.. 'எல்லாம் காலைல பாத்துக்கலாம்டா.. இப்போ நிம்மதியா படுத்து தூங்கு..' என்று சமாதானம் செய்து படுக்கவைத்தனர்..!!
அசோக்கின் மனதில் நிம்மதி எப்போதோ செத்துப் போயிருக்க.. அவனால் உறங்க முடியவில்லை..!! மீராவின் நினைவுகளே நெஞ்சமெங்கும் நிறைந்து போயிருக்க.. மனதுக்குள்ளேயே அழுதவாறு படுத்திருந்தான்..!! ஏதோ ஒரு நப்பாசையுடன் அவளுடைய எண்ணுக்கு கால் செய்து பார்த்தான்.. ஸ்விட்ச்ட் ஆஃப் என்று பதில் வர.. மொபைலை எறிந்தான்..!! தனது மெமரி கார்டை கூட அவள் உருவி சென்றிருப்பதை உணர்ந்து.. வயிறு எரிந்தான்..!! 'ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டா.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?? உன்னை விட்ருவேன்னு நெனச்சியா..?? நாளைக்கே உன்னை தேடிக் கண்டு பிடிக்கிறனா இல்லையான்னு பாரு.. கண்டுபிடிச்சதும் உன் கன்னம் ரெண்டும் பழுக்குதா இல்லையான்னு பாரு..' என்று மனதுக்குள்ளேயே கருவிகொண்டான்..!!
'எப்போதடா பொழுது விடியும்' என்று.. மோட்டுவளையை வெறித்தவாறே காத்திருந்தான்..!! விடிந்ததுமே.. களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருந்த நண்பர்களை.. அந்த அதிகாலையிலேயே அடித்துக் கிளப்பி.. இதோ.. காரை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் சென்டருக்கும் வந்துவிட்டான்..!!
நேரம் எட்டு மணியை நெருங்க ஆரம்பிக்கையில்.. அந்த இடத்துக்கு ஆட்கள் வருகை அதிகமாக இருந்தது..!! மார்னிங் பேட்ச் தேர்வு செய்திருந்த மாணவர்கள்.. குளித்தோ, குளிக்கமாலோ சென்டருக்கு வந்து சேர்ந்து.. சலிக்காமல் டெக்னிகல் விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்..!! சரியாக 7.55 க்கு.. உதட்டோரத்தில் அழகாக மச்சம் தாங்கிய அந்தப்பெண்.. ஆக்டிவாவில் ஸ்டைலாக வந்து இறங்கினாள்.. கடையை திறந்தாள்..!!
மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று சேர்ந்து.. அந்த ஆரவாரம் எல்லாம் சற்று அடங்கும்வரைக்கும்.. அசோக்கும் நண்பர்களும் அமைதியாக காத்திருந்தனர்..!! அப்புறம் சென்டருக்குள் நுழைந்து.. அந்த மச்சக்காரியை அணுகினர்..!! அவள் சாலமனின் முகத்தை பார்த்த பிறகுமே..
"என்ன கோர்ஸ் ஜாயின் பண்ண வந்திருக்கீங்க..??" என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டாள்.
"ஹிஹி.. இல்லைங்க.. நாங்க கோர்ஸ்லாம் ஜாயின் பண்ண வரல.!!" சாலமன் இளித்தான்.
"அப்புறம்..??"
"எங்களோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தங்க.. இந்த சென்டர்லதான்.. போன மாசம் வரை அனிமேஷன் கோர்ஸ் படிச்சாங்க..!!"
"சரி..!!"
"உங்க ரெகார்ட்ஸ்லாம் எடுத்து.. அவங்க அட்ரஸ் என்னன்னு கொஞ்சம் பார்த்து சொன்னீங்கன்னா.. நாங்க வந்த வேலை முடிஞ்சிடும்..!! உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு.. நாங்க கெளம்பிட்டே இருப்போம்..!!" சற்றே எகத்தாளமாக சொன்ன சாலமனை, அந்தப்பெண் எரிச்சலாக பார்த்தாள்.
"க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க.. இங்க வந்து அட்ரஸ் கேக்குறீங்க..??"
அந்தப்பெண் லாஜிக்காக கேள்வி கேட்க, சாலமன் இப்போது தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை கண்டதும், வேணு இப்போது இடையில் புகுந்து, அவளுக்கு உளறலாக பதில் சொன்னான்.
"அ..அது.. அது வந்து.. க்ளோஸ்தாங்க.. ஆனா அட்ரஸ் சொல்லிக்கிற அளவுக்கு க்ளோஸ் இல்லன்னு வச்சுக்கங்களேன்..!! ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம்.. தண்ணி கூட அடிச்சிருக்கோம்.. ஆ..ஆனா இந்த அட்ரஸ் மட்டும் எப்படியோ ஷேர் பண்ணிக்காமலே விட்டுட்டோம்..!! இப்போ அர்ஜன்ட்டா அவங்கள மீட் பண்ற மாதிரி ஒரு சிச்சுவேஷன் ஆகிப்போச்சு.. அதான்..!! ப்ளீஸ்ங்க.. கொஞ்சம் ஹெல்ப்புங்க..!!"
வேணுவின் உளறலில் அந்தப்பெண் கன்வின்ஸ் ஆகாவிட்டாலும்.. அவனுடைய குரலில் தொனித்த அந்த கெஞ்சல்.. அவளை மனம் இரங்க செய்தது..!! தனது கம்ப்யூட்டரை இயக்கியவள்.. மானிட்டரை பார்த்துக்கொண்டே வேணுவிடம் கேட்டாள்..!!
"கோர்ஸ் எப்போ முடிச்சாங்கன்னு சொன்னீங்க..??"
"லாஸ்ட் மன்த்..!!"
"என்ன கோர்ஸ்..??"
"மாயா..!!"
"அவங்க பேரு..??"
"மீரா..!!" வேணு கூலாக சொல்ல,
"மீராவா..??" அவள் திடீரென அதிர்ந்தாள்.
"ஆமாங்க..!!" என்ற வேணு அசோக்கிடம் திரும்பி,
"அப்பா பேரு என்ன மச்சி..??" என்று கேட்டான்.
"சந்தானம்..!!" என்று அசோக் சொன்னதும், வேணு இப்போது மீண்டும் அந்தப் பெண்ணிடம் திரும்பி,
"ஆங்.. எஸ்.மீரா'ன்னு போட்டு தேடிப்பாருங்க..!!" என்றான். அவளோ வேணுவை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
"பொண்ணா..????" என இறுக்கமாக கேட்டாள்.
"ஆ..ஆமாம்..!! அப்புறம்.. மீரான்னா.. பொண்ணுதான..??" வேணு அப்பாவியாக இளிக்க, அவள் இப்போது மானிட்டரை படக்கென ஆஃப் செய்தாள்.
"இல்லைங்க.. பொண்ணுங்க அட்ரஸ்லாம் தர்றது இல்ல..!!"
"ஹலோ ஹலோ.. ப்ளீஸ்ங்க..!!" வேணுவுடன் சேர்ந்து இப்போது கிஷோரும் அந்தப்பெண்ணிடம் கெஞ்சினான்.
"ப்ச்..!! நோ.. ஐ கான்ட்..!! உங்க நாலு பேரையும் பார்த்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு.. நாளைக்கு ஏதாவது பிரச்சினைன்னா.. யார் பதில் சொல்றது..?? அட்ரஸ்லாம் தர முடியாது.. எடத்த காலி பண்ணுங்க..!!"
"அப்படிலாம் சொல்லாதிங்க மேடம்.. நீங்கதான் எங்களுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்.. ப்ளீஸ்..!! எந்தப் பிரச்சனையும் வராது மேடம்.. எங்களை பாத்தா பிரச்னை பண்றவங்க மாதிரியா தெரியுது..?? நாங்க ரொம்ப அப்பாவிங்க மேடம்..!! ப்ளீஸ்.. கொஞ்சம் மனசு வைங்க..!!"
"ஷ்ஷ்ஷ்.. நான்தான் முடியாதுன்னு சொல்றேன்ல.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம கெஞ்சிட்டு இருக்கீங்க..?? கெளம்புங்க..!!"
"ஹையோ.. ரொம்ப முக்கியமான விஷயம் மேடம்.. அவங்க அட்ரஸ் எப்படியாவது எங்களுக்கு வேணும்.. எங்க நெலமையை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்..!!"
"என் நெலமையை நீங்க மொதல்ல புரிஞ்சுக்கங்க..!!"
"ப்ளீஸ் மேடம்..!! ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! நீங்க மனசு வச்சா கண்டிப்பா எங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்..!!"
அசோக்கை தவிர மற்ற மூன்று பேருமே, இப்போது அந்தப்பெண்ணை கெஞ்சினர். வெட்கமில்லாமல் அவர்கள் கெஞ்சுவதை சகிக்க முடியாமல், அவளும் இப்போது சற்றே இறங்கி வந்து..
"சரி.. அப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றீங்களா..??"
"என்ன..??"
"எங்க மேனேஜரை பார்த்து பெர்மிஷன் கேளுங்க..!! அவர் சொன்னா.. நான் உங்களுக்கு அட்ரஸ் தர்றேன்..!!"
"ஓகே..!! அப்போ.. உங்க மேனஜரை மீட் பண்ண ஒரு அப்பாயின்ட்மன்ட் கொடுங்க..!!"
"அவர் 9'o clock-தான் வருவாரு.. அதுவரைக்கும் கொஞ்சம் அங்க வெயிட் பண்ணுங்க..!!" அவள் கேஷுவலாக சொல்லிக்கொண்டே சோபாவை கைகாட்டினாள்.
"9'o clock-ஆ..?? அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா..?? என்ன மேடம் நீங்க..?? நீங்களே அந்த கம்ப்யூட்டர்ல அடிச்சு பாத்து.."
"ஹலோ..!! என்னால அவ்வளவுதான் பண்ண முடியும்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இஷ்டம் இருந்தா, வெயிட் பண்ணி மேனேஜரை பாருங்க.. இல்லனா எடத்த காலி பண்ணுங்க..!! எனக்கு வேலை நெறைய இருக்கு.. வெட்டியா பேசிட்டு இருக்க நேரம் இல்ல..!!"
கறாராக சொன்ன அவள் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து, இவர்கள் மேலிருந்த கடுப்பை கீ போர்டிடம் காட்ட ஆரம்பித்தாள். அசோக்கும் நண்பர்களும் வேறு வழியில்லாமல், மெல்ல நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்கள். அவ்வாறு அமர்ந்ததுமே.. கிஷோர் அசோக்கை பார்த்து..
"டேய் மச்சி.. அந்த மேனேஜர் வர்றதுக்குள்ள.. நீ போய் சாப்பிட்டுட்டு வந்துடு..!!" என்றான் கரிசனமாக.
"இல்லடா.. அந்த ஆள் வரட்டும்..!! அட்ரஸ் வாங்கிட்டே கெளம்பிடலாம்..!!"
"ப்ச்..!! அறிவில்லாம பேசாத.. நாங்களாவது பரவால.. நீ நைட்டும் சாப்பிடல..!! அட்லீஸ்ட் அவளை தேடுறதுக்காவது உடம்புல தெம்பு வேணாம்..?? போ.. போய் சாப்பிட்டு வா.. போ..!! நாங்க இங்க வெயிட் பண்ணி.. அந்த ஆள் வர்றானான்னு பாக்குறோம்..!! சரியா..??" என்று கடுமையாக சொன்ன கிஷோர், வேணுவிடம் திரும்பி..
"டேய்.. கூட்டிட்டு போடா..!!" என்றான்.
"வாடா மச்சி.. போலாம்..!!"
என்றவாறு வேணுவும் அசோக்கின் புஜத்தை இறுகப் பற்றினான். அடுத்த இரண்டாவது நிமிடம்.. அசோக்கும் வேணுவும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்..!!
"நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! சும்மா.. செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டா.. நம்மட்ட இருந்து எஸ்கேப் ஆயிட முடியுமா..?? உன்கூட நூறு நாள் பழகிருக்கா மச்சி.. எவ்ளோ பேசிருப்பா.. என்னன்னலாம் சொல்லிருப்பா.. ஈஸியா புடிச்சுடலாம் மச்சி..!! நீ டென்ஷன் ஆவாத..!!"
வேணு சொன்ன ஆறுதல் அசோக்குக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் அவன் சொன்ன ஒருவிஷயம் அவனுடைய புத்தியில் தீ கொளுத்தி போட்டது. மீராவுடன் அவன் பழகிய அந்த நூறு நாட்களில், அவள் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை எல்லாம், மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே வந்தான்..!!
ஃபுட் கோர்ட் வந்து சேர்ந்தது..!! வாசலுக்கு முன்பாக வேணு காரை நிறுத்த.. அசோக் இறங்கிக்கொண்டான்..!!
"நீ உள்ள போய் வெயிட் பண்ணு மச்சி.. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்..!!"
சொன்ன வேணு, ஃபுட் கோர்ட்டின் கீழ்த்தளம் நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தான். அசோக் படியேறி ஃபுட் கோர்ட்டுக்குள் நுழைந்தான். கண்ணாடி கதவை அவன் திறந்ததுமே.. அவன் காலடியை வந்து மோதியது அந்த பலூன்..!! இரத்த நிறத்தில்.. இதய வடிவத்தில்.. அழகான, மென்மையான.. அந்த பலூன்..!! அந்த பலூனுக்கு பின்னாடியே.. நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்.. பலூனை பிடிக்கிற உத்வேகத்துடன் வேகமாக ஓடிவந்தான்..!! அவனுக்கு பின்னால்.. அவனுடைய அம்மா..
"டேய் சூர்யா.. சூர்யாஆஆஆ..!! ஓடாத.. நில்லு..!! நில்லுன்றேன்ல..?? டேய்..!!!!!"
என்று கத்தியவாறே, ஒருவித பதைபதைப்புடன் ஓடிவந்தாள். அசோக் குனிந்து அந்த பலூனை எடுத்தான். அந்த சிறுவனிடம் நீட்டினான்.
"தேங்க்ஸ் அங்கிள்..!!"
அழகுப்புன்னகையுடன் சொன்னவாறே, அதை வாங்கிக்கொண்டான் சூர்யா. அவனை வந்து தூக்கிக்கொண்ட அவனது அம்மாவும், அசோக்கை பார்த்து,
"தேங்க்ஸ்ங்க..!!" என்று புன்னகைத்தாள்.
"இட்ஸ் ஓகே..!!"
சொன்ன அசோக் சூர்யாவின் கன்னத்தை பிடித்து அன்பாக திருகிவிட்டு.. அங்கிருந்து நகர்ந்தான்..!! வேணு வரும்வரை காத்திருக்கலாம் என்று எண்ணியவன்.. டேபிள்களுக்கு இடையில் புகுந்து நடந்தான்..!! மெல்ல நடைபோட்டு.. அந்த டேபிளை வந்தடைந்தான்.. மீரா எப்போதும் அமர்கிற அதே டேபிள்..!! அந்த டேபிளை பார்த்ததுமே.. அவனுடைய மனதில் ஒரு இனம்புரியாத வெறுமை படருவதை.. அசோக்கால் உணர முடிந்தது..!! மீரா வழக்கமாக அமருகிற அந்த இருக்கையை.. ஒரு கையால் மென்மையாக வருடினான்..!! பிறகு மனதுக்குள் ஏதோ ஒரு ஆசை உருவாக.. அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான்..!!
அவனுக்கு சற்று தூரத்தில்.. சூர்யாவும், அவன் அம்மாவும் அமர்ந்திருந்தனர்..!! அவள் அசோக்கை பார்த்து ஒருமுறை புன்னகைத்துவிட்டு.. தோசையை பிய்த்து வாய்க்குள் போட்டுக் கொண்டாள்..!! சூர்யா இவனை பார்த்து 'ஹாய்' என்று கையசைத்துவிட்டு.. பலூனை தரையில் தட்டி தட்டி விளையாட ஆரம்பித்தான்..!! அசோக்கும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு.. மீராவின் நினைவில் மூழ்க ஆரம்பித்தான்..!! இதே ஃபுட்கோர்ட்டில்.. அவனுக்கும் அவளுக்கும் நேர்ந்த நிகழ்வுகள் எல்லாம்.. அவனுடைய மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டிருக்க.. நெஞ்சு பாரமாகிக் கொண்டே போனது..!!
அப்போதுதான்.. எங்கிருந்தோ பறந்து வந்த அந்த காகிதம்.. அசோக்கின் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது..!! அசோக் தனது கன்னத்தை தடவி.. அந்த காகிதத்தை கையில் எடுத்தான்..!! அது வெறும் காகிதம் அல்ல.. பிஸ்ஸாவின் மேல் தூவப்படுத்துகிற.. மிளக்காய்த்துகளை உள்ளடக்கியிருக்கும் காகித கவர்..!! இப்போது காலியாகிப்போய்.. எங்கிருந்தோ பறந்து வந்திருந்தது..!!
அசோக் முதலில் அந்த காகித கவரை கசக்கி எறியத்தான் நினைத்தான்..!! பிறகு ஒருகணம் நிதானித்தவன்.. தனது கையை பிரித்து அந்த கவரை பார்த்தான்..!! மிளக்காய்த்துகள் தயாரிக்கிற அந்த கம்பனியின் ப்ராண்ட்.. அந்த கவரில் சிகப்பு நிறத்தில் அச்சிடப் பட்டிருந்தது..!!
"Mirchi..!!!!"
அதைப்பார்த்ததுமே அசோக்குக்கு சுருக்கென்று ஒரு உணர்வு..!! அவனுடைய மூளை நரம்பில் யாரோ ஊசி ஏற்றிய மாதிரி சுரீர் என்று இருந்தது..!! அவனும் மீராவும் முதன்முதலாக பேசிக்கொண்டபோது நடந்த அந்த விஷயத்தை.. அவனுடைய நினைவடுக்கு, அவன் மனதுக்குள் படமாக ஓட்டிக் காட்டியது..!!
"உன் பேர் என்ன..??"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
அசோக்கின் கேள்விக்கு மீரா திரும்ப திரும்ப பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டே, திரும்ப திரும்ப மிளகாய்த்துகள் பாக்கெட்டை கிழித்து, தட்டின் மீதிருந்த பிஸ்ஸாவின் மேல் தூவினாள்.
அசோக்கிடம் இப்போது குப்பென்று ஒரு திகைப்பு..!! 'ஒருவேளை.. ஒருவேளை.. இப்படி இருக்குமோ..??' என்று அவனுடைய மூளை.. மிக கூர்மையாக ஒரு சந்தேகத்தை கிளப்ப.. அவனது மனதுக்குள் ஒரு மெலிதான கிலி பரவ ஆரம்பித்தது..!! சற்றே மிரண்டு போன முகத்துடன்.. தலையை மெல்ல நிமிர்த்தி பார்த்தான்..!! அவ்வாறு பார்த்ததுமே.. அவனுடைய பார்வையில் பட்ட அந்த விளம்பர போர்ட்.. அவனை ஸ்தம்பித்து போக வைத்தது..!! அதிர்ந்து போனவனாய்.. அவனையும் அறியாமல் சேரில் இருந்து எழுந்தான்..!! வெறித்த பார்வையுடன்.. கண்களுக்கு கொடுத்திருந்த குளிர்கண்ணாடியை கழட்டினான்..!!
அந்த விளம்பர போர்டின் வாசகங்கள்..
"Learn 'MAYA' at Aptech Computer Education..!!"
"இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!"
"ஓ..!! என்ன கோர்ஸ்..??"
"ம்ம்.. மாயா...!!!!"
மீரா சொன்னது நினைவு வர.. அசோக்குக்கு உடலெல்லாம் ஜிலீர் என்று ஒரு சிலிர்ப்பு..!! அவனுடைய இதயத்தை இப்போது ஒரு இனம்புரியாத பயம் வந்து இரக்கமே இல்லாமல் கவ்விக்கொண்டது..!! வியர்த்து வெளிறிப்போன முகத்துடன்.. தலையை மெல்ல மெல்ல சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மற்ற விளம்பர போர்டுகளையும்.. ஒவ்வொன்றாக கவனமாக பார்த்தான்..!!
"காரைக்குடி - செட்டிநாடு உணவகம்..!!"
"ஹைதராபாத் பிரியாணி சென்டர்..!!"
ஃபுட்கோர்ட் கவுன்ட்டர்களில் இருந்த அந்த இரண்டு போர்டுகளும் அடுத்தடுத்து அவன் கண்ணில் பட்டன..!!
"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" - மீரா அசோக்கின் மனதுக்குள் தோன்றி சிரிப்புடன் சொன்னாள்.
அசோக்குக்கு இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! உலையில் இட்ட அரிசியாக.. உதிரம் கொதிப்பது போல ஒரு உணர்வு அவனுக்கு..!! மீரா இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தன்னைப்பற்றி சொன்னாள் என்று யோசித்தான்..!!
"என் அப்பா பேரு சந்தானம்..!!"
"ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??"
"ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!!"
யெஸ்..!!!! அக்ஸார் பெயின்ட் டப்பாவை கையில் தாங்கியவாறு.. நடிகர் சந்தானம் ஒரு அட்வர்டைஸ்மன்ட் போர்டில் காட்சியளித்தார்..!! அருகிலேயே.. அரசியல்வாதி கெட்டப்பில்.. தொடையை தட்டிக்கொண்டு.. பவர்ஸ்டாரின் படப்போஸ்டர் ஒன்று..!!
"உன்னோட ஃபேவரிட் மூவி எது..??"
"ம்ம்... டைட்டானிக்..!!
அசோக் தனது மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தான். டைட்டான்..!!!
"ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??"
"ம்ம்... சோனியா..!!"
டேபிளில் இருந்த தனது மொபைலை பார்த்தான். சோனி எரிக்ஸன்..!!
அசோக்குக்கு இப்போது தலை சுற்றுவது மாதிரி இருந்தது..!! மூளை எல்லாம் சூடாகிப்போய்.. வெடித்துவிடுமோ என்றொரு உணர்வு..!! அப்படியே தளர்ந்து போய்.. தலையைப் பிடித்துக்கொண்டு.. சேரில் பொத்தென்று அமர்ந்தான்..!!
"ஹலோ ஹனிபனி..!!" என்ற வாசகங்களை தாங்கிய.. ஐடியா மொபைல் விளம்பர போர்ட் வேறு.. இப்போது புதிதாக அவனுடைய கண்ணில் பட்டது..!!
"வாட் என் ஐடியா ஸர்ஜி..!!!" என்று அபிஷேக் பச்சன் இவனை பார்த்து ஏளனமாக சிரித்தார்.
அசோக்கால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை..!! ஆயிரம் பேர் ஒன்றாக கூடி நின்று.. அதிகபட்ச டெசிபலில் வயலின் வாசிப்பது மாதிரியான ஒரு அதிர்வு அவனுக்குள்..!! பார்க்கிற திசை எல்லாமே.. மீரா தன்னைப்பற்றி சொன்ன பர்சனல் விஷயங்கள் அத்தனையும்.. பப்ளிக்காக பல்லிளித்தன..!! திரும்புகிற பக்கம் எல்லாம் மீரா தோன்றி..
"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!"
"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!" என்று இவனைப்பார்த்து கைகொட்டி சிரித்தாள்.
அசோக்குக்கு தலைக்குள் ஒவ்வொரு பாகமும் தீப்பற்றி எரிவது போல இருந்தது..!! கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. இரண்டு கைகளாலும் தலையை பிடித்தவாறு.. இடிந்து போய் அமர்ந்திருந்தான்..!! 'எப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள்..?' என்று நினைக்க நினைக்க.. அவனுடைய இதயம் குமுறியது..!!
இந்த விளம்பர போர்டுகளை எல்லாம் அசோக் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்..!! அவனும் விளம்பரத்துறையில் இருப்பதால்.. அவன் கண்ணில் படுகிற சிறு சிறு விளம்பர போர்டுகளை கூட மிக கவனமாக பார்ப்பான்..!! அட்வர்டைஸ்மன்ட் தீம்.. அவர்களது ப்ராண்ட் லோகோ.. உபயோகப்படுத்துகிற கேப்ஷன்ஸ்.. எல்லாமே அவனுடய கவனத்தை ஈர்க்கும்..!! 'அப்படி இருந்துமே இப்படி ஏமாந்திருக்கிறேனே.. கண்ணிருந்தும் குருடனாய் கவனியாது போனேனே..??' அவனுடைய உள்மனம் அழுது அரற்றியது..!! அதே நேரம்..
"டமார்..!!!"
என்று பலூன் வெடிக்கிற சப்தம் பெரிதாக கேட்டது..!! கண்ணுக்கு அழகாய் காட்சியளித்த அந்த இதய பலூன்.. கணநேரத்தில் இப்போது உடைந்து சிதறிப் போயிருந்தது..!!
"பலூனு.. என் பலூனு..!!!" கையையும் காலையும் உதறியவாறு, சூர்யா தரையில் புரண்டு கதறிக்கொண்டிருந்தான்.
"ஐயோ.. சூர்யா.. என்ன இது.. எந்திரி..!!" அவன் அம்மா பதறினாள்.
"பலூனு.. என் பலூனு..!!!"
"ப்ச்.. எந்திரின்றன்ல..?? மம்மி உனக்கு வேற பலூன் வாங்கி தரேன்..!!"
"எனக்கு அந்த பலூன்தான் வேணும்..!!"
சூர்யா 'ஓ..!!!!' என்று அழுது வீறிட்டான்..!! ஏமாந்து போன அந்த சிறு குழந்தையின் துயரத்தை பார்த்த அசோக்குக்கு.. அவனையும் அறியாமல் கண்களில் குபுக்கென்று நீர் கொப்பளித்து ஓட ஆரம்பித்தது..!! அவனுமே அந்த சூர்யாவின் நிலையில்தான் இருந்தான்.. அவனுக்குமே அதுமாதிரி அலறி அழ வேண்டும் போலிருந்தது..!!
அப்போதுதான் திடீரென அவன் மனதுக்குள் அந்த சந்தேகம்..!! நீர்த்திரையிட்ட கண்களை அவசரமாய் துடைத்துக்கொண்டு.. சரக் சரக்கென தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அந்த வளாகத்தில் மிச்சமிருக்கிற விளம்பர போர்டுகளை எல்லாம்.. ஒவ்வொன்றாக பார்த்தான்..!! அவனுடைய பார்வை பரிதாபமாக அலைபாய்ந்தது.. 'அந்த வார்த்தை மட்டும் என் கண்ணில் பட்டுவிடக்கூடாது கடவுளே..' என அவனது மனம் இரைந்து மன்றாடியது..!!
ஒரு அரை நிமிடத்திற்கு அந்த மாதிரி.. வியர்த்த முகத்துடன்.. தவிக்கிற பார்வையுடன்.. கொதிக்கிற உள்ளத்துடன்.. தேடி தேடி பார்த்தான்..!! எங்குமே அந்த வார்த்தை அவனது கண்ணில் படவில்லை..!! இப்போது அவனது மனதுக்குள் மெலிதான ஒரு நிம்மதி பரவியது..!!
"அட்லீஸ்ட்.. அவ பேராவது.. உண்மையான பேரை சொன்னாளே..!!" என்ற அற்பத்தனமான நிம்மதி.
கண்களை துடைத்துக் கொண்டான். இதயம் இன்னும் திடும் திடும் என அடித்துக் கொண்டிருக்க.. டேபிளில் கையூன்றி.. முகத்தை மூடியவாறே மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்..!!
பிறகு அவன் இமைகளை மெல்ல பிரித்தபோது.. எதேச்சையாக அவனது பார்வையில் அது பட்டது..!! ரொம்ப ஸ்பெஷல் என்று மீரா சொன்ன அந்த டேபிளின்.. பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருந்த அந்த வாசகம்..!!
"Meera Furnitures & Home Appliance..!!"
அவ்வளவுதான்..!! அந்த மாதிரி ஒரு வலியை.. ஏமாற்றத்தை.. வேதனையை.. அசோக் தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை..!! ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவனது இதயம்.. இப்போது சில்லு சில்லாக வெடித்து சிதற ஆரம்பித்தது..!!
No comments:
Post a Comment